Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      76583


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43054


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      28966


  4. விசுகு

    விசுகு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      32968


Popular Content

Showing content with the highest reputation on 08/05/22 in all areas

  1. சிறு ஓட்டையால் கப்பலும் கவிழும்! ************************* போன் அடித்தது.. என்னைக்கேட்டால் இல்லையென்று சொல்லென்றார் அப்பா.. அம்மாவையும் அப்பாவையும் படித்துக்கொண்டிருந்த ஆறு வயது மகன் பார்த்து முளித்தான். மறுநாள்.. அம்மாவின் கைபேசி அலறியது.. நாங்கள் வீட்டில் இல்லை வெளியில் நிற்கிறோம் என்றாள் அம்மா வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிள்ளை பார்த்து வெருண்டான். பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில்.. கறுப்பு புள்ளிகள். காலங்கள் உருண்டன அவனின் கைபேசியும் இப்போது பொய்பேசியாகவே மாறிவிட்டது. பொய்யென்ற விதைதன்னை பூப்போன்ற பிள்ளைகள் மனதில் நாட்டினால்-அது கஞ்சா,களவு, சூது போதை என்ற விளைச்சலே தரும். பெற்றோரே எச்சரிக்கை! அன்புடன் -பசுவூர்க்கோபி.
    3 points
  2. ரெண்டு இடத்தில் தொடுப்பு வைத்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது. 🤓 இவர்களுக்கு வெளிநாட்டு சகல வசதிகளும் வேணும், அதே நேரம் பிறந்த நாட்டில் சகல உரிமைகளும் வேணுமென்டால், இந்தியாவில் இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழ்பவர்கள் எல்லாம் பேயன்களா? 😡 'போனமா.. செல்வத்தை.. கல்வியை ஈட்டினோமா.. திரும்பி வந்தோமா..' என இருக்கோணும், அப்படி வாழ விருப்பமில்லை என்றால், வாய்ப்பிருந்தால் வசதிகளை தேடிப்போன இடத்திலேயே எஞ்சிய வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்ளுங்கள், யாரும் குறை சொல்லப்போவதில்லை, ஏனெனில் இங்கே திறமையான மனிதவளம் மிக அதிகம், பிறந்த பூமிக்கும் அவர்களின் சேவை தேவையுமில்லை.🤩
    2 points
  3. ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.
    2 points
  4. இல்லை, இது சிகிரியா மாதிரியே இல்லை........! 😂
    2 points
  5. கொடிகாமம் வந்தடைந்த "யாழ் ராணி" வடமராட்சியை நோக்கி பயணித்த போது....😁
    2 points
  6. சமரசம் மலர்ஸ் by நெற்கொழு தாசன் July 31, 2022 என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை. குரல் கொட்டாவியோடு கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய புன்னகையோடு திருப்திப்பட்டுக்கொண்டார். இருந்தபடியே தோளில் கொழுவியிருந்த பைக்குள் கையைவிட்டு யாருக்கும் தெரியாமல் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தார். திரும்பி எங்கோ பராக்கு பார்ப்பவர் போலப் பாவனை செய்தபடி மீண்டும் ஒருமுறை மனதால் கணக்கிட்டார். மெதுவாகத் தலையாட்டி இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆள் வந்தவுடன் காசைக் கொடுத்துவிட்டு உள்ளுக்குள் போய்விட்டால் சரியெனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். அமர்ந்திருந்த இடத்திலிருந்து பார்க்கையில் டிஸ்னிலாண்ட் வரவேற்புப் பலகையும், அதனோடு இணைந்திருந்த அறிவிப்புப் பலகையும் தெரிந்தது. நான்கு மொழிகளில் அறிவுறுத்தல்கள் எழுதப்பட்டிருந்தன. தமிழ் இருக்கிறதா எனத்தேடினார். இல்லை. என்ன எழுதியிருக்கிறதென அறியும் ஆவலில் மனைவியின் முகத்தைப் பார்த்தார். போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மலர்க்கொடியாள் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். அவளது அசைவுகள், நீ அதை அறிஞ்சு என்ன கிழிக்கப்போறாய் என்று கேட்பதுபோல இருந்தது. பேசாமல் பார்வையை வேறுபக்கம் திருப்பினார். அலவாங்கை விழுங்கிவிட்டு அருந்தண்ணி குடிச்சென்ன பலனென எண்ணிக்கொண்டார். உலகளந்தபிள்ளையின் பயத்திலும், பவ்வியத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சாணேற முழம் சறுக்கிவிடும் அல்லது சறுக்கவிடுவார். அப்படித்தான் போனதடவை ஈபிள்ரவர் சுற்றுலாவுக்கு தாங்களும் வருவதாகச் சொல்லியிருந்த இருவர், கடைசி நேரத்தில் காலைவாரிவிட, அவர்களின் நுழைவுச் சிட்டைகளுக்கான பணத்தினை தானே பொறுப்பேற்றிருந்தார். அன்றுமுதல்தான் அவரை வெங்காயம் என்று திட்டும் வழக்கம் ஆரம்பித்தது. எப்பொழுதெல்லாம் மலர்க்கொடியாள் ஈபிள்ரவரை காணுறாவோ அப்போதெல்லாம், “வெறும் வெங்காயம்” என்று திட்டுவதை மறக்காதிருந்தார். ஒருமுறை தொலைக்காட்சியில் ஈபிள்ரவருக்கு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்திருக்கிறது என்ற செய்தி காணொளியாக வந்தபோதுகூட திட்டு வாங்கியிருந்தார். இந்தச் சுற்றுலாப் பயண ஒழுங்குகளை மேற்கொள்வது பற்றிய உரையாடலின் போதும் “வெறும் வெங்காயம்” என்று மலர்க்கொடியாள் திட்டியிருந்தார். உலகளந்தபிள்ளையும் சளைத்தவரல்ல. மனைவி வெங்காயம் என்று பேசும் போதெல்லாம் தன்னைத் தானே திட்டிக்கொள்வார். அவர் தன்னைத்தானே திட்டிக்கொள்வதைப் பார்த்தவுடன், மலர்க்கொடியாள் ஏசுவதை நிறுத்திவிடுவார். மனைவி அப்படி உருமாறி நிற்கும் வேளைகளில் மறந்தும் கூட சிரித்துவிடுவதில்லை. ஒருதடவை திட்டும்போது “ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்” என்ற பாடலை கேட்டுக்கொண்டிருந்தார். அதன்பின் என்றுமே எந்தவொரு பாடலைத் தன்னும் கேட்டதில்லை. கடந்தமுறை நிகழ்ந்த தவறு இந்தமுறை நடந்துவிடக்கூடாது என்பதற்காக முழுப் பொறுப்பையும் மனைவியிடம் விட்டுவிட்டார். அப்படியாக அவராக நினைத்துக்கொண்டார். உண்மையில் அவரிடம் இருந்து எல்லாப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டிருந்தன. அது அவருக்கும் புரிந்திருந்தது. நிம்மதியாக இருந்தால் காணும். பொறுப்புக்கள் யாருக்கு முக்கியம். கணவர்களே, உங்கள் மனைவியரை நேசியுங்கள். அவர்களுக்கு எதிராகவும் கொடுமையாகவும் இருக்கவேண்டாம் என்று புதிய ஏற்பாட்டிலேயே சொல்லியிருக்கிறது எனச் சொல்லிக்கொள்வார். மலர்க்கொடியாள் யார் யாரை ரூர்போக அழைப்பதென ஒரு பட்டியல் தயாரித்தார். அவர்களில், தங்களோடு வரக்கூடியவர்களாகவும், முக்கியமாகச் செலவு குறைவாகச் செய்பவர்களாகப் பார்த்துத் தெரிவு செய்தார். அதிலிருந்தும் துல்லியமாக அலசியாராய்ந்து, எட்டுப்பேர்களைத் தெரிவு செய்து, அவர்களைத் தொலைப்பேசியில் அழைத்து உறுதிப்படுத்தினார். இந்தமுறை உலகளந்தபிள்ளையை ஒருவருடனும் கதைக்க விடவில்லை மலர்க்கொடியாள். அவரும், அதுதான் வாய்ப்பு என்று பேசாமல் இருந்துவிட்டார். இரட்டைநாடி உடம்பு கொண்ட மலர்க்கொடியாளை, கொடியாள் என அழைத்துக் குத்திக் காட்டுவதில் ஒருவித இன்பத்தை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, எல்லோரும் மலர் என்று அழைக்க, அவர் மட்டும் கொடியாள் என்றுதான் அழைப்பார். ஆளுயரக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கும் போதெல்லாம் மலர்க்கொடியாள், ஊரில எப்படியொரு அழகாக இருந்தனான். உந்த மனுசனால இஞ்சை வந்து கொழுத்துப் போனதுதான் மிச்சம் எனக் கேட்கும்படி வாய்விட்டுச் சொல்வார். பாரிஸிலிருந்து நாற்பது கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் புறநகர் செவ்ரோன். அங்கு இருபது வருடங்களாக வசித்து வருகிறார் உலகளந்தபிள்ளை. பதினொரு அடுக்குகள் கொண்ட மாடி வீட்டுத்தொகுதியில் ஆறாவது வீடு அவருடையது. உலகின் எல்லாப் பாகங்களிலும் வறுமையால் போரால் இன்னபிற உயிரச்சத்தால் உழன்ற மக்கள், அங்கங்கிருந்து உயிரை மட்டும் சுமந்துவந்து குடியேறிய நகர் அது. தமிழர்களால் நிறைந்துபோன அந்த நகரத்திற்கு, தமிழர்கள் “சமரசம்” எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். “சமரசத்திற்கு எப்படி போறது” என்று கேட்டால் நேற்றுப் பிறந்த தமிழ்ப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு போய்விடும். கஞ்சா முதல் மொரோக்கன் வீட்டு வடிசாராயம்வரை கிடைக்கும். பகலில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமுமாக இருக்கும் கிராமம் அது. இரவுகளில் பொலீஸ் அந்த கிராமத்துக்குள் வருவதேயில்லை. பொலீஸ் அலுவலகத்தில் அந்த கிராமத்தின் வரைபடத்தைச் சிகப்பு வட்டத்தால் குறித்து வைத்திருக்கிறார்கள். பிரஞ்சுப்பொலீசை மாதிரி ஒரு கேடுகெட்ட தொழில் இல்லையென்பது அங்கு வசிப்பவர்களின் கருத்து. சோளம் விற்ற பெண்ணொருவரை கைது செய்து கொண்டு சென்றதற்காக பெண்கள் கூடிச் சென்று தூமைத்துணிகளால் பொலிஸ்நிலைய வாசலை மூடியிருந்தார்கள். மூர்க்கமாக எதிர்ப்பைக் காட்டும் மக்கள் சொல்வதெல்லாம் ஒன்றுதான். அதிகாரத்தோடு வராதே. நண்பனாக வா. பழகு. நீயும் நானும் ஒன்று அவ்வளவுதான். அந்த கிராமத்தை அழித்துவிட வேண்டுமென்பது பிரஞ்சுக்காரர்களின் கருத்து. போனமாதம் நடந்த நகரசபை தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளர் அந்த நகரத்தை அகற்றுவதாகக் கூறி வாக்கு கேட்டுப் படுதோல்வி அடைந்திருந்தார். இருபது வருடங்களாக அங்கு வசிப்பதால் நகரின் மூலை முடுக்குகளெல்லாம் உலகளந்தபிள்ளைக்கு தண்ணி பட்டபாடு. நீண்டகால வாடிக்கையாளர் என்பதால் கஃபே பார்கள், கடைகள் என எல்லாவற்றிலும் அவருக்குத் தனி மரியாதையுண்டு. இரண்டு பிள்ளைகள். எதோ பெரிய படிப்பு படிப்பதாக மட்டும் தெரியும். ஆனால் அது டொக்ரரோ இஞ்சினியரோ இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதுவுமெங்கோ தூர இடத்தில் தங்கியிருந்து படிக்கிறார்கள். அங்கால சுவிஸும் இஞ்சால ஜெர்மனியும் என்று ஒரு தடவை வந்திருந்தபோது சொல்லியிருந்தார்கள். டொக்ரர் இஞ்சினியர் இல்லாத படிப்பு என்ன பெரிய படிப்பு. அதுவும் யாழ்ப்பாணத்தானுக்கு என்றுவிட்டு அதோடு விட்டுவிட்டார். அதற்குமேல் என்ன விளக்கம் கேட்டாலும் கிடைக்காது என்பதும் அவருக்குத் தெரியும். அவர்களே உழைத்து செலவுசெய்து படிக்கிறார்கள். அவர்களது எல்லாக் கதைகளும் தாயோடுதான். எப்பவாவது வருவார்கள். மறக்காமல் தந்தையர் தினத்திற்கு வாழ்த்து அனுப்புவார்கள். அவரும் அதற்கு மேல் எதிர்பார்ப்பதில்லை. “ரூர் போவமோ” என்று கேட்டபோது பதிலேதும் சொல்லாமல் அண்ணார்ந்து யன்னலால் வெளியில் பார்த்தார் உலகளந்தபிள்ளை. கடந்தமுறை பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் அப்படி. இருவரும் வேலைக்குச் செல்வதால் சந்திக்கும் நேரத்தில் அவசரஅவசரமாக உரையாடிக் கொள்வார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற தொனியில் தான் உரையாடல் இருக்கும். கல்யாணமான முதல் இரண்டு, மூன்று வருடங்கள் “அப்பா, இஞ்சையுங்கோ” என்றெல்லாம் குழைந்த மலர்க்கொடியாள் முதல் பிள்ளை பிறந்ததும் பெயரைச்சொல்லி அழைத்தார். பின் காலப்போக்கில் அதுவும் மறைந்துபோனது. இப்ப சமீபகாலமாக ரிக்ரொக் இல் பிரபலமான பின்னர், இரண்டே இரண்டுவகை உரையாடல்தான். ஒன்று கேள்வி. மற்றது செய்யவேண்டிய வேலை. தவிர வேறெந்த உறவுமில்லை. மனைவியும், பாயும் வந்த புதிதில் சிறப்பாய் இருப்பவை என்றுகூட வேலை செய்யும் பிரெஞ்சுக் கிழவன் சொல்வதை நினைத்துக்கொள்வார். மேலதிகமாக ஏதும் தேவையென்றால் பொறுமையாகக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்வார். கேட்டும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றால், எளிய தட்டுவாணி பறதியில போவாள் சந்திரிக்கா சரியென்றால் எனக்கு ஏன் இப்படி நடக்குது என சந்திரிக்காவை திட்டுவார். சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பித்த சூரியகதிர் இராணுவ நடவெடிக்கையோடுதான் ஊரிலிருந்து கிளம்பி அகதியாகப் பாரிசிற்கு வந்தவர். “ரூர்” என்றதும் என்ன சொல்வதென புரியவில்லை உலகளந்தபிள்ளைக்கு. ஏன் என்று எப்படித் திருப்ப கேட்பதென யோசித்தார். கடந்தகிழமை மலர்க்கொடியாள் ரிக்ரொக்கிலை பதிவேற்றிய வீடியோவில் யாரோ ஒருவர், உங்களூரில் தானே டிஸ்னிலாண்ட் இருக்கிறது. போறதில்லையா. அங்கு போய் வீடியோ போடுங்களென எழுதியிருந்தார். அதற்கு, அடிக்கடி போவதால் வீடியோ எடுக்க தோணியதில்லை. உங்களுக்காக அடுத்த தடவை எடுத்துப் போடுகிறேன் எனப்பதில் எழுதியிருந்ததையும் வாசித்திருந்தார். “சமரசம் மலர்ஸ்” என்ற பெயரில் மலர்க்கொடியாள் வீடியோ போடுவதைக் கண்டுபிடித்தவர் தானும் ஒரு கள்ள ஐடி திறந்து “சமரசம் மலர்ஸ்”-ஐ பின்தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது முகத்தைப் பார்த்ததும் புரிந்துகொண்ட மலர்க்கொடியாள், வீடெல்லாம் ஒரே பூச்சி. மருந்து வைக்கவேண்டும். மருந்து வைத்தால் அன்றையநாள் முழுவதும் வீட்டுக்குள் இருக்கமுடியாது. அதுதான் எங்காவது போய் நின்று, இரவு திரும்பலாம். நாளைக்கு பூச்சி மருந்தை வாங்கி வாங்கோ. அதற்குப் பிறகு எப்ப போறது. எங்க போறதென யோசிப்போம் என்றபடியே புறப்பட்டவர் திரும்பி, பூச்சி மருந்துக்கு காசு மேசையில் வைத்துக்கிடக்கு. பில் முக்கியம் என்று சொல்லிவிட்டுப் போனார். பில் முக்கியம் என்றதும் தேகமெல்லாம் பற்றிக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டார். எவ்வளவு காசை இவளுக்கு கொட்டி இருப்பன். இப்ப காசை தந்திட்டு பில் பத்திரமாம். தனக்குள்ளேயே புறுபுறுத்துக் கொண்டார். தான் வீடியோ போடுறதுக்கு எப்படியொரு சாட்டு. தும்பிக்கு பயந்து சிவபெருமான் சாரைப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டாராம் என்கிற மாதிரியல்லவா இருக்கிறது. இத்தனை வருடமாக இல்லாத பூச்சியா இப்ப வந்திருக்கு. ஒவ்வொரு தடவையும் மைக்ரோஒவனை திறந்து உணவைச் சூடாக்கும்போது பத்துப்பூச்சி என்றாலும் ஓடும். இவ்வளவு காலமுமில்லாமல் இப்ப பூச்சி மருந்து வைக்கப்போறாவாம். ரூர்போய் வீடியோபோட பூச்சி சாட்டு. மனதிற்குள் திட்டிக்கொண்டார். சரி அப்படியாவது வீட்டில் பூச்சி அழிஞ்சுதென்றால் நல்லம்தான் என எண்ணிக் கொண்டார். அன்றே பூச்சி மருந்தினை வாங்கி பில்லோடு சேர்த்து மேசையில் வைத்துவிட்டார். பூச்சி மருந்தைக் கண்டதும் மலர்க்கொடியாள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். எந்த நாளில் ரூர் போவது என்று முடிவு செய்வதற்காக கலண்டரை எடுத்தார். அந்த மாதத்தின் கடைசி சனி, ஞாயிறு தினங்களை வட்டம் போட்டுக் குறித்தார். கணவரை அழைத்தார். ஈபிள்ரவர், வைற் சேர்ச், டிஸ்னிலாண்ட் இந்த மூன்று இடத்தில் எதற்கு போவம் என்று கேட்டார். உலகளந்தபிள்ளைக்குத் தெளிவாகத் தெரியும் எல்லாம் தீர்மானிக்கப் பட்டுவிட்டதென்று. இருந்தும், எதுவும் சொல்லாமல் இருந்தால் அதற்கொரு கேள்வி வரும். அதைவிட ஏதாவதொரு இடத்தை சொல்லிவிடுவது நல்லம் என்று முடிவு செய்தவர், பாரிசில் அவருக்குத்தெரிந்த ஒரேயொரு இடமான நெப்போலியன் நடந்த தெருவுக்குப் போகலாம். செலவும் குறைவு என்றார். அதற்கு மலர்க்கொடியாள் “ம்ம்ம்” என இழுத்துவிட்டு, தெருத் தெருவாக அலையமுடியாது. அதுவும் உங்களையும் இழுத்துக்கொண்டு. வீட்டுக்கு பூச்சிக்கு மருந்து வைத்தால் நாள் முழுக்க வீட்டிற்கு வரவுமேலாது. பேசாமல் டிஸ்னிலாண்டுக்கு போவம் என்று முடித்தார். தொடர்ந்து, டிஸ்னிக்கு போறதென்றால் ரிக்கெட் சரியான விலையாக இருக்கும். யாராவது அங்கு வேலைசெய்கிறவர்களைப் பிடித்தால் மலிவாக எடுக்கலாம். தெரிந்தவர்கள் இருந்தால் விசாரித்துப்பாருங்கள் என்று கூறினார். பொறுமையாகக் கவனித்துச் சொன்னதை உள்வாங்கிய உலகளந்தபிள்ளை, “எப்ப போறது” எனக் கேட்டார். சனி அல்லது ஞாயிறு தான் போகணும். சனி என்றால் நல்லம். வெள்ளிக்கிழமை அரைநாள்தான் வேலை. சமைத்து சோறும் எடுத்துக்கொண்டு போகலாம். சனி மருந்தை வைத்தால் ஞாயிறு வீடு கழுவித் துடைக்கவும் வசதி. சனிக்கிழமை போவம். ரிக்கெட் விசாரியுங்கோ என்று முடித்துவிட்டார். ரிக்கெட் விசாரியுங்கோ என்று சுலபமாகச் சொல்லிவிட்டாள், இனி அதற்கு என்னபாடு பாடுறதோ எனப் புறுபுறுத்தபடி போனை எடுத்தார். ஒவ்வொரு பெயராகத் தட்டி, அவர்கள் என்ன வேலை செய்கிறார்களென நினைவுக்குக் கொண்டுவந்தார். ஒருவரும் தட்டுப்படவில்லை. போனை மூடிவைத்துவிட்டு யோசித்தார். முக்கூடல் தமிழ்க்கடைப்பொடியன் நினைவுக்கு வந்தான். நாடுகடந்த தமிழீழ அரசில் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் அவன்தான் இதற்குச் சரியான ஆள் என்று முடிவு செய்தார். எவர் என்ன பிரச்சனை என்றாலும் அவனிடம் போய் சொன்னால், அதற்கு அவனிடம் தீர்வு இருக்கும். நாலுபத்து விடயம் தெரிந்தவன். நாலுபத்துப்பேரோடு பிளங்குகிறவன். அமைச்சர் ஆகுவதென்றால் சும்மாவே. நின்ட இடத்திலேயே என்ன பிரச்சனையென்றாலும் முடித்துவிடுகிற வல்லமை கொண்டவன். நாரை அறியாத குளமில்லை என்பார்கள் இவனும் அதுபோலத்தான். வேறுவழியில்லை போய்க்கேட்பம் என்று கிளம்பினார். கடையில் அவனைப் பிடித்து, தம்பி எனக்கொரு உதவி என்று ஆரம்பித்து மலிவாக ரிக்கெட் எடுக்கும் விடயத்தைச் சொல்லி முடித்தார் உலகளந்தபிள்ளை. உதுக்கே யோசித்தனியள், எனக் கேட்டுவிட்டு தொலைப்பேசியை எடுத்து நம்பர் ஒன்றைக் கொடுத்தான். நாலுமணிக்குப் பிறகு அடிச்சு கதையுங்கோ. ஆளுக்கு நாலுமணிக்குத்தான் வேலை முடியும். என்னை சொன்னதாக சொல்லுங்கள். அவன் அங்கதான் வேலை செய்கிறான். எப்படியும் எடுத்துத்தருவான். மற்றது அண்ணை, வாறகிழமை சூமில் ஒரு கூட்டம் இருக்கு. இப்ப நாட்டு நிலைமை தெரியும்தானே. கோத்தாவை கிளப்பியாச்சு. அங்க நின்ட பொடியளுக்கு நாங்கள் தான் எல்லாம் செய்தது. மறக்காமல் வாங்கோ கூட்டத்திற்கு. சூமில் நீங்கள் எல்லோரும் வந்து சைன் போட்டால்தான் “ஐநா”க்கு எங்கட பிரச்னையைக் கொடுக்கலாம் என்றான். ஓம் தம்பி கட்டாயம் வருவன் என்றபடி நேரத்தைப் பார்த்தார். நேரம் கிடக்கு. இண்டைக்கு எப்படியும் இந்த அலுவலை முடிச்சுப் போடவேண்டும். கொடியாளிடம் விலையை அதிகமாகச் சொல்லி ஒருபத்து யூரோவை தட்டி எடுத்தால் இரண்டு மூன்று நாளைக்கு என்ர விருப்பத்திற்கு ஏதும் தின்னலாமெனத் திட்டமிட்டார். அமைச்சரான தமிழ்க்கடைப் பொடியனின் கையைப் பிடித்து நன்றி சொல்லிவிட்டு வேகவேகமாக வீட்டுக்குத் திரும்பினார். சரியாக நாலுமணிக்கு அலாரம் வைத்தார். மணிக்கூட்டுக்கு எதிரே அமர்ந்துகொண்டார். டிஸ்னி பெரு நகரமாக விரிந்தது. போட்டோக்களிலும், விளம்பரங்களிலும் மட்டும் பார்த்த இடம் அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. எங்கு திரும்பினாலும் சனக்கூட்டம். இதென்ன வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போனமாதிரி சனக்கூட்டம். உந்த சனத்துக்குள்ளால் எங்க போறது. எப்படி போறது. எதற்கும் கொடியாளின் கையை பிடித்துக் கொள்ளுவமென்று கையை வீசியபோதுதான், சோபாசெற்றியிலேயே அசந்துபோயிருந்தது புரிந்தது. மணிக்கூட்டைப் பார்த்தார். நாலுமணி ஆகிவிடும்போல இருந்தது. எழுந்து சென்று முகத்தைக் கழுவினார். அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது. முகத்தைத் துடைத்தபடி தொலைப்பேசியை எடுத்து தமிழ்க்கடைப் பொடியன் கொடுத்த நம்பரை அழுத்தி அழைப்பை ஏற்படுத்தினார். பதிலில்லை. தொலைப்பேசியை வைத்துவிட்டு முகத்தை அழுத்தித் துடைத்தார். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்தார். கலோ எனப்பதில் கிடைத்ததும், வணக்கம் தம்பி, இங்கை செவ்ரோனில் முக்கூடல்கடை அமைச்சர் தம்பி உங்கட நம்பர் தந்தவர். நீங்கள் டிஸ்னிலாண்டுக்கு ரிக்கெட் எடுத்துக் கொடுக்கிறனீங்களென்று சொன்னவர். என்றதும், மறுபக்கத்திலிருந்து இடைமறித்து, ஒமண்ணை. போனில் இந்த விடையம் கதைக்க வேண்டாம். பின்னேரம் எட்டுமணிபோல அமைச்சரிட்ட வருவன். நேர வாங்கோ கதைப்பம் என்றதும், உலகளந்தபிள்ளைக்கு மகிழ்ச்சி பொங்கியது. ஓம் தம்பி. வாறன், மறக்காமல் வாங்கோ என்றபடி அழைப்பை துண்டித்தார். கொடியாள் வந்தவுடன், விளக்கமாகக் கதைத்துவிட்டு, பின்னேரம் போய் ரிக்கெட்டை மறிச்சுப்போட வேண்டுமென நினைத்துக்கொண்டார். எட்டுமணிக்கு முக்கூடல்தமிழ்க் கடையடிக்கு போனவரை, நீங்கள்தானே டிஸ்னிக்கு போக ரிக்கெட் கேட்டது என விசாரித்தபடி வரவேற்ற பொடியனை மேலும் கீழுமாகப் பார்த்தார். தோற்றத்தைப் பார்த்து ஆளை எடை போட்டார். மனதுக்குள் திருப்திப்பட்டுக்கொண்டார். வேலை முடிந்துவந்த கொடியாள் சொன்ன எல்லாவற்றையும் திரும்ப ஒருமுறை நினைவுக்குக் கொண்டுவந்தார். முக்கியமா ஆளைப்பாருங்கோ. உந்த குரூப்பொடியள் மாதிரி நிண்டால் ரிக்கெட் வேண்டாம். கதைபேச்சு நல்லமாதிரி பண்பாடாக இருந்தால் கதையுங்கோ. சும்மா கண்ட நிண்டவங்களிட்ட உதவிக்குப்போய் கரைச்சல் படக்கூடாது. பிறகு குருட்டு ஆந்தையைக் கூப்பிட்டு அடுப்பங்கரையில் விட்டமாதிரிப்போடும். சோர்ந்துபோய் நின்றவனை மீண்டும் ஒருமுறை முழுதாகப் பார்த்தார். வேலைசெய்த களையோடு, நெஞ்சுக்கூடுதள்ள, வாடிப்போய் நோஞ்சானாக நின்ற அவனின் தோற்றத்தைப் பார்த்ததும் தடுமாறிப் போனார். தம்பி ஏதும் குடிக்கிறீங்களா என்று உடனேயே கேட்டார். இல்லை வேண்டாம். அதெல்லாம் பிறகு பார்க்கலாம். நீங்கள் எப்ப டிஸ்னிக்கு போகப் போறிங்க. எத்தனை பேர் போக இருக்கிறீங்கள் என்று கேட்டான். தம்பி வாற சனிக்கிழமை. நாங்கள் எட்டுப்பேர். உங்களுக்கு ஓகே என்றால் இண்டைக்கு காசைத் தல்லாம். எத்தனை யூரோ என்று சொல்லுங்கள் என்றார் உலகளந்தபிள்ளை. காசு பிரச்சனையில்லை அண்ணை. சனிக்கிழமை அங்கை வைச்சு தாங்கோ. எட்டுப் பேர் என்றால் மூன்று “சொட்” அடிக்கவேண்டும். ஒரு ஆள் குறையுது அதுதான் யோசிக்கிறன் என்றவனிடம், என்ன தம்பி சொல்லுறியள் ஒன்றும் விளங்குதில்லை. விளக்கமாக சொல்லுங்கோ. சொட் அடிக்கிறது என்றால் என்ன. ஏன் மூன்று சொட். காசு ஏதும் குறைவோ. அப்படி சொட் அடிச்சுப் போனால், எங்களுக்கொரு பிரச்சனையும் வராதுதானேயென்று பதட்டத்துடன் கேட்டார் உலகளந்தபிள்ளை. அதெல்லாம் பிரச்சனை இல்லையண்ணை. “சொட்” என்றால் எங்களுக்கு வேலைசெய்யுற இடத்தில் தருகின்ற ரிக்கெட்டில் ஒருதடவையில் மூன்று பேரை உள்ளுக்குள்ள விடலாம். அதுதான் மூன்று சொட் என்றால் ஒன்பதுபேர் உள்ளுக்கு போகலாம். நீங்கள் எட்டுப் பேர் என்று சொல்லுறீங்கள், ஒரு ஆளுந்த காசு வீண்தானே. நீங்கள் யாரையாச்சும் ஒருத்தரகூட கூட்டிவாங்கோவன். ஒரு சொட்-க்கு எண்பது யூரோ படி “மூன்று சொட்”க்கும் தந்தீங்களென்றால் சரி. ஒரு கணம் யோசித்தார். மூன்றுபேருக்கு எண்பது யூரோ. பயங்கர லாபம். இல்லாட்டி ஆளுக்கு எண்பது யூரோ வேண்டும். கையூண்டாமலேயே கரணம் போடலாம்போல இது. வேற கதை இனிக் கதைக்கக் கூடாதென முடிவு செய்தவர் சரி தம்பி. சனிக்கிழமை அங்க சந்திப்பம். வெள்ளிக்கிழமை பின்னேரம் உங்களுக்கு கோல் பண்ணுறன். இப்ப அட்வான்ஸ் ஏதும் தரவோ என்று கேட்டார். இல்லையண்ணை. இப்ப வேண்டாம். சனிக்கிழமை எட்டுமணிக்கு டிஸ்னியில் நிப்பன். அதில வைச்சுத்தாங்கோ. வரமாட்டியளென்றால் புதன்கிழமைக்கு முதல் அடிச்சு சொல்லுங்கோ. எங்கட ஆக்கள் கனபேர் ரிக்கெட் கேட்டவை. எங்கட அமைச்சர் சொன்னதால் உங்களுக்கு ஓகே பண்ணியிருக்கிறேன். சரி அண்ணை சந்திப்பம் என்றபடி கிளம்பியவன் கண்ணிலிருந்து மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டு நின்றார். நல்ல பொறுமையான பிள்ளை. என்ன கேட்டாலும் ஆறுதலாக, விளக்கமாக சொல்லுறான். பிள்ளையென்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும். எனக்கும் இருக்குதுகள் இரண்டு. நாளைக்கு எந்த அனாதை இல்லத்தில் தள்ளிவிடுதுகளோ தெரியாது. கைகால் ஆடிக்கொண்டிருக்கும் போதே போய்ச் சேர்ந்திடனும் என நினைத்தபடி வீடு திரும்பினார். நடந்ததை மனைவியிடம் விபரித்தார். ஒன்பதுபேருக்கும் ஒரேகாசு என்றால் இன்னொருவரை அழைக்கலாம் என்றவரை, என்ன ஏது என்பதுபோலப் பார்த்தார் கொடியாள். பின்பு குரலையடக்கி, இனி ஆள் சேர்க்கிற வேலையை விட்டுட்டு எட்டுப்பேருக்கும் அந்தக்காசை பிரிச்சு எடுப்பம். மற்றவைக்கு சொல்லாமல் விட்டால் சரி என்றார் மலர்க்கொடியாள். தலையை குனிந்தபடி, சனிக்கிழமை எட்டுமணிக்கு அங்கு நிற்கவேண்டும் என்றபடி நகர்ந்தார் உலகளந்தபிள்ளை. வெள்ளிக்கிழமை இரவே பூச்சி மருந்துகளை வைக்கவேண்டிய இடங்களைக் குறித்து வைத்துவிட்டார். குசினிக்குள் மட்டும் இரண்டு மருந்து குப்பிகளை உடைக்கவேண்டுமென்று நினைத்திருந்தார். பெரும்தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகுவதுபோல தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டார். உடுப்புக்களை அள்ளி அலமாரிகளுக்குள் வைத்துப் பூட்டியபின் மீண்டும் வீட்டினை நோட்டமிட்டார். குசினிக்குள் பீடா கிடக்கு எடுக்க மறந்துபோனேன். முதல்ல அதை எடுத்து வாங்கோ என வாசலில் கொடியாளின் குரல் கேட்டது. வேகமாகக் குசினிக்குள் நுழைந்தார். இரவிரவாக எட்டுப் பேருக்குமாக புரியாணி செய்திருந்தார் கொடியாள். அதை புரியாணி என்றும் சொல்லாம் கோழிப்புக்கை என்றும் சொல்லாம். இரண்டுக்கும் நடுவிலொரு வகையான உணவாக ஆகியிருந்தது. எட்டுப் பார்சல்கள், வெங்காயச்சாம்பல், யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூளில் உறைப்பான கோழிக்குழம்பு, தேநீர்ப்போத்தல், தண்ணீர்ப்போத்தல்கள் என பைக்குள் அடக்கியிருந்தார் மலர்க்கொடியாள். ரெஸ்மச்சுக்கு போகிறவர்கள் கொண்டு செல்வதுபோல அந்தப்பை வீங்கிப்போயிருந்தது. மேலதிகமாக, போறவழியில் லாசெப்பலில் ரோலும், வடையும், வாய்ப்பானும் வாங்க வேண்டுமென்றும் திட்டமிருந்தது. இன்னொருவர் மாலை உணவுக்கு புட்டும் ஆட்டிறைச்சிக்கறியும் கொண்டுவருவதாக சொல்லியிருந்தார். பொதுவாகக் காலை உணவினை இங்கு தமிழர்கள் உண்பதில்லை என்பதால் இரண்டுவேளை உணவினையும் இரண்டுபேர்கள் செய்துவருவதாக முடிவு செய்திருந்தார்கள். பீடாப்பார்சலை எடுத்துக் கொடுத்துவிட்டு, உள்ளேசென்று மூன்று அறைகளின் யன்னல்களும் நன்றாகப் பூட்டியிருக்கிறதாவென்று பார்த்துவிட்டு சமையலறைக்குச் சென்றார். இரண்டு பூச்சிமருந்துக் குப்பிகளை உடைத்தார். சமையலறைக் கதவினை இறுகப் பூட்டினார். அவ்வாறே அறைகளுக்குள்ளும் குப்பிகளை உடைத்துவிட்டு வெளியேறி பிரதான வாசல் கதவினைப் பூட்டிவிட்டு மனைவியை பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தார். பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட மலர்க்கொடியாள் வாயால் ஒரு சுழிப்பு சுழித்துவிட்டு, எதோ பெரிய வேலைசெய்து புடுங்கிக்கொட்டிவிட்டதுபோல நினைப்பு வேறு என்று கேட்கக்கூடியதாகவே சொன்னார். கேட்டும் கேளாததுபோல பெரிய பையைச் சுமந்தபடி ரெயின் ஸ்ரேசன் நோக்கி நடக்கத்தொடங்கினார் உலகளந்தபிள்ளை. லாசெப்பலில் ரோல், வடை, கடலை, சுண்டலெல்லாம் பார்சல் செய்துகொண்டு கிளம்பியவர்கள் சரியாக ஏழரை மணிக்கு டிஸ்னிலாண்ட்க்கு போய்ச்சேர்ந்தார்கள். ரெயினால் இறங்கியதும், போனில் அழைப்பெடுத்து தங்கள் வந்திருப்பதை உறுதிப்படுத்தினார். அருகில் பார்வையாளர்கள் இருப்பதற்கென அமைக்கப்பட்ட சீமெந்து கதிரையில் அமர்ந்துகொண்டார். இதோ வாறன் என்றவன் ஒரு மணிநேரம் கடந்தும் வரவில்லை. கொடியாள் முறைத்த முறைப்பில் எல்லாம் மறந்து இருந்த இடத்திலிருந்து எழுந்து, ரெயின் ஸ்ரேசன் வாசலை நோக்கிப் போனார் உலகளந்தபிள்ளை. அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நிற்க, அண்ணை மன்னியுங்கோ என்றபடி ரிக்கெட்டுடன் ஒட்டமும் நடையுமாக அவரை நெருங்கினான். வாங்கோ தம்பி என்றபடி அவனை அழைத்துக்கொண்டு கொடியாளிடம் ஓடினார். அண்ணை பொறுங்கோ ஒரு சின்ன சிக்கல் என்றவனை நின்று திரும்பிப்பார்த்தார். நீங்கள் எட்டுப்பேர்தானே. உங்களோடு ஒரு ஆளை சேர்த்து அனுப்பிவிடுறன். குறை நினைக்கதையுங்கோ என்றான். தம்பி பொறும் எதற்கும் மனைவியை கூப்பிடுறேன் கதையும் என்றுவிட்டு மலர்க்கொடியாளை அழைத்து அவனோடு கதைக்க விட்டுவிட்டு மெதுவாக விலகினார். “அக்கா, உங்களுடன் ஒரு ஆளை சேர்த்து அனுப்புறன். உங்களுக்கு பிரச்சினை இல்லைதானே. பாவம் அவர்கள். புதிதாகத் திருமணம் செய்து இங்கு வந்த பிள்ளையும் புருசனும். உங்களுடன் அந்தப் பெண்பிள்ளை வருவார். பொடியனை அடுத்த சொட்டில சேர்த்து அனுப்புகிறேன். குறைநினைக்காமல் கூட்டிக்கொண்டு போங்க அக்கா” என அழுவாரைப்போல கெஞ்சினான். மலர்க்கொடியாள் திரும்பி உலகளந்தபிள்ளையை பார்த்தாள். வெறும் வெங்காயம் என்று சொல்லிவிட்டு சரி என்றார். உடனேயே போனில் அவர்களை அழைத்தான். அவர்களும் வந்தவுடன், அக்காவுடன் நீங்கள் போங்கோ. இவரை அடுத்த ஆட்களுடன் அனுப்பிவிடுறன் என்று கூறினான். வந்தவர்களை ஏறிட்டுப்பார்த்தாள் மலர்க்கொடியாள். கழுத்தில் தாலிக்கொடி மடங்காமல் திமிறிக்கொண்டு நின்றது. நெற்றியில், உச்சந்தலையில், கழுத்தில் என குங்குமப்பொட்டு. டெனிம் ஜீன்ஸ். தலையை வாரி இழுத்து அழகாய் தானிருக்கிறாள். என்ன நிறம்தான் என்னைவிடக் கொஞ்சம் குறைவு. நல்ல பிள்ளை போலத்தான் கிடக்கு. வந்த புதிதில் நானும் இப்படித்தானே இருந்தேன் என நினைத்தபடி, நேரம் போகிறது வாங்கோ போவமென அழைத்தார். நான் தனியாக போகல. நீங்களும் வாங்கோ என கணவனின் கையைப் பிடித்து சிணுங்கினாள் அந்தப்பெண். அவன், அவளைச் சமாதானப்படுத்தும் நோக்கில் சொல்லுறதை கேளும். நீங்கள் இவையோடு போங்கோ பின்னால் நான் வந்திடுவன் என்றபடி, அவளின் தலையைத் தடவி கையை இறக்கி காது மடலை வருடினான். பின் நாடியை நிமித்தி அவளது கண்களைப் பார்த்தான். அதைப் பார்த்த கொடியாளுக்கு உடல் புல்லரித்து அடங்கியது. சட்டெனப் பார்வையைத் திருப்பினார். இருவரும் ஒன்றாய் போறதென்றால் உள்ளுக்குள் போவம் இல்லாட்டி திரும்பி வீட்ட போவம் வாங்கோ என்ற அவளது குரல் கொஞ்சம் சிணுங்கலாகவும் அழுகையாகவும் கேட்டது. ரிக்கெட் பொடியனைப் பார்த்தார் மலர்க்கொடியாள். அவன் ஏதாவதுசெய்து அவர்களில் ஒருவரை அனுப்பிவிடும் முயற்சியில் இருந்தான். புதுக் குடும்பம். அதைவிட அந்தப் பெண் ஊரிலிருந்து இப்பதான் பிரான்சுக்கு வந்திருக்கிறா. அதுதான் பயப்படுறா என இடையில் விளக்கம்வேறு கொடியாளுக்கு சொன்னான். அவர்கள் விலகி நின்று மாறி மாறி ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்திக்கொண்டு நின்றனர். நேரத்தைப் பார்த்தார் மலர்க்கொடியாள். ஒன்பதுமணி. உலகளந்தபிள்ளையை அழைத்தார். நீங்கள் நில்லுங்கோ. நாங்கள் இவையளோட உள்ளபோறம். அடுத்துவாற ஆட்களோடு நீங்கள் வாங்கோ. என்றுவிட்டு ரிக்கெட்கார பொடியனிடம், தம்பி அவை இரண்டுபேரையும் சேர்த்து எங்களோடு அனுப்புங்கள். இவர் வெளியாலை நிப்பார். உங்கட மற்ற ஆக்கள் வந்தவுடன் சேர்த்து உள்ளுக்கு அனுப்பி விடுங்கோ என்று கூறிவிட்டு மளமளவென டிஸ்னிலாண்ட் வாசலை நோக்கி நடக்கத்தொடங்கினார். ரொம்ப நன்றி அண்ணன் என்று ரிக்கெட்காரப்பொடியன் சொல்லியும், புதிதாக வந்த ஜோடிகள் இருவரும் சேர்ந்து “மெர்சிபுக்கு” என்று சொல்லியும், அவர்கள் எல்லோரும் டிஸ்னி வாசலை நோக்கிப் போவதையும் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றார் உலகளந்தபிள்ளை. என்ன நடக்கிறதென எதுவுமே பிடிபடவில்லை. இரண்டு கைகளையும் இறுக மூடிக்கொண்டார். அண்ணை, உந்த மரத்தடியில் இருங்கோ. மற்ற ஆட்கள் வந்தவுடன் கூட்டிக்கொண்டு வாறன் என்ற, குரல் கேட்டுத்தான் சுயநினைவுக்கு வந்தார். ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனை ஒன்றும் பேசாமல் பின் தொடர்ந்தார். அவன் மிகவேகமாகச் சென்று மறைந்ததும், அவன் சுட்டிக்காட்டிய பெரிய மரத்தின்கீழ் அமைதியாக நின்றுகொண்டார். இப்ப என்ன செய்வது. வீட்டுக்கும் திரும்பிப் போக முடியாது. எந்த ரெயின் எடுப்பது. எங்கே இறங்கி மற்ற ரெயின் எடுப்பதென ஞாபகம் வருவதில்லை. அதைவிட வீட்டுக்குள் நுழைய முடியாது மருந்து வைச்சிருக்கு. ஆட்களை அழைத்துவருவதாகப் போனவன் எப்ப வருவானோ. வந்தாலும் உள்ளுக்குள்போய் எப்படித்தான் கொடியாளை கண்டுபிடிப்பது. தந்தையார், வல்லிபுரக்கோவில் திருவிழாவில் இதில் நில்லுங்கோ மகன். கூட்டத்துக்குள்ள நீங்கள் வந்தால் நெரிச்சுப் போடுவாங்களென்று சொல்லி, பிடித்திருந்த கையை விலக்கிவிட்டுவிட்டு ஐஸ்கிரீம் வாங்கப்போனபோது எழுந்த அழுகை தொண்டைக்குள் முட்டிக்கொண்டு நின்றது. எதோ நினைத்தவராக, பெருத்துக் கிளம்பிய மரவேர்களில் ஒரு காலையும், மறுகாலை பாரிஸ்நகர வரைபடம் பொருத்தப்பட்ட தூண்மீதும் வைத்தார். பின் மூன்றாவது காலலென போனை எடுத்து, ரிக் ரொக்கில் சமரசம் மலர்ஸை பொறுமையாகத் தேடிப்பார்க்கத் தொடங்கினார் உலகளந்தபிள்ளை. https://kanali.in/samarasam-malars/
    1 point
  7. தாய்வான் சீனாவின் ஆட்சியில் 5000 ஆண்டுகள்.மேல் இருந்தது...என நாங்கள் சொல்லுவோமல்ல எங்கன்ட சிவப்பு சிந்தனை சொல்ல வைக்குமல்ல
    1 point
  8. ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன். ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் - தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/132844
    1 point
  9. நாஙகள் மண்ணின் மைந்தர்கள் கேட்போமல்ல... அமேரிக்காரன்,இந்தியாக்காரன்,சீனாக்காரன் ,ஐ.நா எல்லாம் அக்கறைப்படு பொழுது நாங்கள் மண்ணின் மைந்தர்கள் அக்கறை படுவதில் தப்பே இல்லை....🤣
    1 point
  10. இவர் கடந்த இரண்டு மாதத்தில் கூறிய அத்தனை கருத்துக்களும்… ஜனாதிபதி ஆகியவுடன், நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இவரைப் பற்றி நன்கு தெரிந்த, “முதுகு எலும்பு இல்லாத, கூட்டமைப்பும்”… மீண்டும் மீண்டும்…. இவர் விரித்த வலையில் போய் விழுகுது.
    1 point
  11. அடடா....வாங்க வாங்க சேர்ந்தே போவம்.😁 சிறித்தம்பி கள்ளு அடிக்கிறதெண்டால் இப்பிடியான ஏரியாவில இருந்து அடிச்சால் தான் அதிலை ஒரு கிக் இருக்கும் 🤣
    1 point
  12. அதே.....🤣 கனவு காண்பதற்கும் அளவிருக்கல்லே...........😜 வடகொரியா என்று நினைப்பு உலகமே ஓடிவந்து செய்யாது செய்யாதே என்று தடுக்கும் என்று... செய்யுமன் என்பார்கள் வாலைச்சுறுட்டிக்கொண்டு படுக்கவேண்டியது தான்..
    1 point
  13. சரியான சிந்தனைப்போக்கு. எட்டாவது பாஸ் கோத்தா, பொன்னர் பத்தாவது தாண்டா, மி்கிந்த, பசில் காக்கா விலும் பரவாயில்லை. எதிர்காலம் எண்ணெயில் இல்லை. மின்சாரத்தில் தான். அந்த மின்சாரம் தயாரிக்க எண்ணைக்கு போவது முட்டாள் தனமானது. மேற்கில், அணுசக்திக்கு மாற்றான வேறு சிந்தனை வருகிறது. கிழக்கே... இப்போதைக்கு வேறு வழியில்லை. சோலர், காற்டாடி, காணாது என்றே நிணைக்கிறேன்.
    1 point
  14. அது வேற வாய். இது நாறல் வாய்.. சிறையில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிப்பேன் என்பதும் இதே போல் ஒரு சுத்துமாத்து தான்.
    1 point
  15. மூஞ்சூறு தான் போக வழி காணேல்லையாம்...இதோடை விளக்குமாற்றையும் இழுத்துக்கொண்டு.... நரி யின் அபூர்வ சிந்தனை..
    1 point
  16. ஏனப்பா.. வெள்ளிக்கிழமை சண்டைக்கு போறீங்கள். சும்மா... ஓம் எண்டு சொல்லுங்கோ. 🤣
    1 point
  17. ம் நம்ம தரவழி யாரோ!
    1 point
  18. 👉 https://www.facebook.com/100000022618193/videos/528278919047908 👈 என்ன இது...? எவ்வளவு எடுத்தாலும்... நிறை குறையுதில்லையே... 🤣
    1 point
  19. இல்லை....வைரவர் கோவில் பக்கம் வீதியை கடந்து மைதான மதிலுக்கு முன்பாக......பேக்கரிக்கும் தமிழ் பள்ளிக்கூடத்துக்கும் நடுவில்.....! 😂
    1 point
  20. இவர்களது முகனூல் பக்கம் இதுதான் என நினைக்கின்றேன். https://www.facebook.com/people/தமிழ்-தேசிய-பண்பாட்டுப்-பேரவை/100005787407140/ யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சிறு பகுதியினரது அமைப்பு போல உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக நிஷாந்தன் இருக்கின்றார். இவர் மீது அண்மையில் வாள் வெட்டும் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் சொல்கின்றன.
    1 point
  21. திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும் மனுராஜ் சண்முகசுந்தரம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆற்றிய உரையில், "ஆரியர் - திராவிடர் வேறுபாடு என்பது புவியியல் அடிப்படையிலானதே, இன அடிப்படையிலானது அல்ல!" என்றார். இது தற்போதைய அரசியல் போக்கு குறித்து சில முக்கியமான பார்வைகளை நமக்குத் தருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நேரெதிராக ஆர்.என்.ரவி, சித்தாந்தக் காட்டுக்குள் காலடி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கும் திராவிட அரசியல் சித்தாந்தத்துக்கும் இடையிலான தொடர்புகள் பிரிக்க முடியாதவை. ஆகவே, ஆர்.என்.ரவியின் கூற்றுகளை நாம் கவனத்துடன் அணுக வேண்டும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாகிய ஆளுநர்கள் இப்படிக் குறுக்கீடு செய்வது வழக்கமாகிவிட்டிருக்கும் சூழலில் ஆர்.என்.ரவி முன்வைத்திருக்கும் கருத்துகளின் நிறைகுறைகளையும் உண்மைத்தன்மையையும் கவனமாக சீர்தூக்கிப் பார்ப்பது அவசியமாகும். ஏனெனில், இந்தக் கூற்றுகள் இந்தியா குறித்து நன்கு நிறுவப்பட்ட கருத்தாக்கத்தையே மாற்றியமைக்கக் கூடியவை. மொழி அடிப்படையும் இன அடிப்படையும் வேலூர் சிப்பாய் எழுச்சி நாள் விழாவிலும் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழா ஒன்றிலும் ஆளுநர் முன்வைத்த இந்தக் கருத்துகளை வரலாறு மறுப்புவாதம் என்றுதான் கூற வேண்டும். ஆரியர்கள் குடியேற்றம் என்ற கோட்பாட்டைக் கடந்த காலத்தில் பல்வேறு தலைவர்கள் கடுமையாக மறுத்திருக்கிறார்கள்; ஆரிய - திராவிடப் பிரிவினை என்பதற்கு ஆங்கிலேயர்களையே குற்றம் சாட்டினார்கள். கடுமையாகச் சர்ச்சிக்கப்படும் இந்த சித்தாந்தக் களத்தில் காலடி எடுத்து வைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் விவாதங்களை ஆளுநர் உசுப்பிவிட முயன்றிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது போன்ற கூற்றுகளை முன்வைத்த முதல் நபர் ஆளுநர் ஆர்.என்.ரவி அல்ல. ஆரிய-திராவிடப் பிரிவினை என்பது இடம் சார்ந்த வரையறை என்று 'சிந்தனைக் கொத்து' என்ற தனது புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் குறிப்பிடுகிறார். அப்படிக் குறிப்பிடுவதன் மூலம், ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகள் என்று நிறுவ கோல்வால்கர் முயன்றார். இதற்கு, ‘இந்தியப் பூர்வகுடிக் கோட்பாடு’ (Out of India theory) என்று பெயர். இந்தக் கோட்பாட்டைப் பெரும்பாலான அறிஞர்கள் புறந்தள்ளிவிட்டனர். ஆயினும், அப்போது கோல்வால்கரும் தற்போது ஆர்.என்.ரவியும் முன்வைத்த கருத்துகளை நாம் உரிய கவனத்துடன் அணுக வேண்டும். இப்படிச் சொல்வதன் மூலம் அந்தக் கருத்துகளுக்கு வலுவான அறிவுலக ஆதரவு இருக்கிறது என்று அர்த்தம் அல்ல; அவை இந்தியா என்ற கருத்தாக்கத்தையே கேள்விக்குள்ளாக்கக் கூடியவை என்பதால்தான் அவற்றை நாம் உரிய கவனத்துடன் அணுக வேண்டும். இந்தியத் துணைக் கண்டமானது பல்வேறு பூர்வகுடிகளின் செழுமையான, பன்மையான வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. இந்த வரலாறானது மொழியியல், தொன்மவியல், நாட்டாரியல், மானுடவியல், தொல்லியல், மண்ணியல், பிரபஞ்ச வரலாறு, மரபணுவியல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வுகளால் நிறுவப்பட்டிருக்கிறது. மேற்கண்ட கல்வித் துறை ஆய்வுகளின் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் (தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்டவை) தனித்தன்மையை மொழியியல் ஆய்வுகள் நிறுவியிருக்கின்றன. ராபர்ட் கால்டுவெல், ‘திராவிட ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages - 1856) என்ற தனது மிக முக்கியமான நூலில் திராவிட மொழிகள் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை அல்ல என்பதற்கு ஆதாரங்களை வழங்கியிருக்கிறார். மொழியியல் தொடர்பான இந்தக் கண்டறிதல் ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. இதன் தொடர்ச்சியாக தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் பிறந்தது. அது, சமூகநீதியால் உந்தப்பட்ட பகுத்தறிவுவாதத்தின் அடிப்படையிலான அரசியல் விழிப்புணர்வுக் கலாச்சாரத்துக்கு வழிவகுத்தது. அயோத்திதாச பண்டிதர், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை போன்றவர்களும் பிற்காலத்தில் ‘நீதிக் கட்சி’ தலைவர்களான டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் போன்றவர்களும் பிராமணர் அல்லாதோருக்கான விடுதலைக்காக சமூக-அரசியல் அறைகூவலை விடுத்தனர். ஒட்டுமொத்தமாக இந்தச் சூழல்தான் பிற்பாடு, 1916 நவம்பர் 20 அன்று மெட்ராஸ் நகரத்தின் விக்டோரியா அரங்கில் நடந்த கூட்டத்தில் முறைப்படி உருவெடுத்த திராவிட இயக்கத்துக்கான விதைகளை விதைத்தது. ‘ஆரியர்களுக்கு முந்தைய தமிழ் கலாச்சாரம்’ (Pre-Aryan Tamil Culture - 1985) என்ற தனது புத்தகத்தில் பி.டி.சீனிவாச ஐயங்கர் சங்க இலக்கியத்தைக் கொண்டு திராவிடக் கலாச்சாரத்தின் இருப்பை தெளிவாக நிறுவுகிறார். தொல்லியல் சான்றுகள் ஆரியர்களுக்கு முன்பே தங்களுக்கென்றொரு பண்பாட்டு மரபையும் தனித்தன்மை கொண்ட செம்மையான இலக்கிய மரபையும் கொண்டிருந்த தனித்த இனம் இருந்தது என்பது 1920களின் தொடக்கத்தில் ஹரப்பா - மொஹஞ்சதாரோவில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளால் வலுவாக நிறுவப்பட்டிருக்கிறது. இதைத் தமிழ்நாட்டில், கீழடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. அகழாய்வுகளில் கிடைக்கும் உயிர்மப்பொருட்கள் பலவும் எளிதில் அழிந்துபடக் கூடியவை. அவற்றைக் கையாள்வதில் நவீன வழிமுறைகள் பெரிதும் முன்னேறியிருக்கின்றன. கூடவே, அதிக அளவிலான மரபணு வரிசைப்படுத்தல் தொழில்நுட்பம். இந்தியத் துணைக் கண்டத்தில் அலையலையான குடியேற்றங்கள் எப்படி ஏற்பட்டன என்பதை இவற்றைக் கொண்டு நாம் தற்போது புரிந்துகொள்கிறோம். நூறாண்டு கால திராவிட இயக்க வரலாற்றின் போக்கில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்திருக்கும் வரலாற்றுத் தகவல்களை மேற்கண்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 2018இல் வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 92 அறிவியலர்கள் சேர்ந்து எழுதிய ‘தெற்காசியாவிலும் மத்திய ஆசியாவிலும் காணப்படும் மரபணுத் தொகுப்பமைப்பு’ (The Genomic Formation of South and Central Asia) என்ற ஆய்வுக் கட்டுரை வெளியானது. இந்தியத் துணைக் கண்டத்தில் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதை மேற்கண்ட கட்டுரையும் உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளும் சிந்து வெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஹரப்பா மக்கள் வேளாண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று உறுதிப்படுத்தியதோடு ஆரியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்ட காலத்தில் என்று கால அளவையும் குறுக்கின. பொய்யென்று நிரூபிக்கப்பட்ட கோட்பாடு திராவிடர்களும் ஆரியர்களும் ஒரே இனத்தவர்கள்தான், ஆனால் புவியியல்ரீதியில் வேறுபட்டவர்கள் என்று கூறுமொரு பரந்த கதையாடலின் ஒரு பகுதியாக இருக்கும் ‘இந்தியப் பூர்வகுடிக் கோட்பா’ட்டை சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் முற்றிலும் பொய்யென்று தூக்கியெறிந்திருக்கின்றன. ஹரப்பா மக்களின் மொழி திராவிட மொழியாகவோ / பூர்வ-திராவிட மொழியாகவோ இருந்திருக்கக்கூடும் என்று கூறும் ஆய்வுகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் சிந்து வெளி நாகரிகத்துக்கு ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பெயரிடுதல், புராணங்களில் வரும் சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்க முயலுதல் போன்ற காரியங்களில் சமீபத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கும் கோல்வால்கரின் தொண்டர்களுக்கு மேற்கண்ட ஆய்வு முடிவுகள் தீவிர சவால்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆகவேதான், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான அண்ணா இதுபோன்ற அடிப்படையற்ற கருத்துகள் குறித்து தனது ‘ஆரிய மாயை’ என்ற புத்தகத்தில் அப்போதே எழுதியிருப்பார். மூடநம்பிக்கைகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் போலி வரலாறுகளுக்கும் எதிரான ஒரு சமூக - அரசியல் சொல்லாடலைப் பெரியாரின் சிந்தனைகளைப் பின்பற்றி அண்ணா கட்டமைத்தார். கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தங்களின் சமூகக் கோட்பாடுகளுடன் அறிவுப் புலத்துக்கே உரிய தீவிரம், அறிவியல் மனப்போக்கு, பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றைச் சேர்த்து வலுப்படுத்தினார்கள். இவையெல்லாம்தான் திராவிட இயக்க அரசியலின் அளவுகோல்களாயின. திமுகவுக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையில் அரசியல்ரீதியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும்போதுகூட அவற்றின் தலைவர்கள் திராவிட இயக்கத்தின் அடிப்படை விழுமியங்கள் மீதான தங்களின் உறுதியான நம்பிக்கையிலிருந்தும் சாதியச் சமூகத்தின் மீதான எதிர்ப்பிலிருந்தும் விலகிவிடவில்லை. திராவிட மாதிரி ஆகவேதான், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை வேரோடு களைவதிலும் எல்லோரும் செழிப்போடு வாழ்வதற்கு ஏற்ற வகையிலான நியாயமான சூழலை உருவாக்குவதிலும் மாநில அரசின் பங்களிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார்; அதற்கு ‘திராவிட மாதிரி’ என்று பெயரிட்டிருக்கிறார். ‘டிரவிடியன் மாடல்’ (Dravidian Model) என்ற தலைப்பிலான புத்தகத்தை ஆளுநருக்குத் தமிழ்நாடு முதல்வர் பரிசளித்தார் என்பதும் உண்மையே. பொருளியலர்கள் ஏ.கலையரசனும் எம்.விஜயபாஸ்கரும் இணைந்து எழுதிய அந்தப் புத்தகம் தமிழ்நாட்டின் நவீன அரசியல் பொருளாதாரம் குறித்த விரிவான, கண்டறிந்த ஆதாரங்கள் அடிப்படையிலான விளக்கத்தைத் தருகிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களைப் போல இன்னும் இந்தியாவின் மொழிகள் அலையலையான குடியேற்றங்களால் எப்படி மாற்றமடைந்திருக்கின்றன என்பதைப் பற்றியும், இந்தியாவைப் பல்வேறு தோற்றுவாய்களைக் கொண்ட நாகரிகச் சமுதாயமாக மாற்றும் வகையில் பல்வேறு சமூக இயக்கங்கள் தோன்றி, வெவ்வேறு மொழிகளில் சமூக விடுதலை சித்தாந்தங்களை எப்படிப் பேசின என்பதைப் பற்றியும் துல்லியமான ஆதாரங்களுடன் பதிவுசெய்யும் வெவ்வேறு புத்தகங்களை தமிழ்நாட்டில் தன் பதவிக்காலத்தின் மிச்சமுள்ள நாட்களில் ஆர்.என்.ரவி எதிர்கொள்ள நேரலாம். இவற்றைத் தவிர ஆளுநர் எதிர்கொள்ள நேரிடும் எந்தக் கோட்பாடும் சந்தேகத்துடனே பார்க்கப்பட வேண்டும். அதற்கு, ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட இந்தோ - ஐரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் இந்தியாவுக்குக் கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார்கள் என்பதற்காகக் கிடைக்கும் ஏராளமான சான்றுகள் துணை நிற்கும். https://www.arunchol.com/manuraj-shanmugasundaram-on-dravidian-movement
    1 point
  22. கை தட்டும் போது கொஞ்சம் சத்தமாகத் தட்டினால் தானே கேட்கும்.... 😀
    1 point
  23. இங்கே பலரதும் வாதாட்டம்? அவர் செய்யலாம் மற்றவர்கள் செய்யக்கூடாதா? என்பதே? நான் யாருமே செய்யக்கூடாது என்கிறேன்
    1 point
  24. ரசிய எல்லை நாடுகளை யாரும் அதட்டி அல்லது அடாத்தாக பிடித்தார்களா? அந்தந்த நாட்டு மக்களின் சுதந்திர மற்றும் ஐனநாயக தெரிவுகளை எல்லை நாடு என்பதற்காக வல்லரசு என்பதால் சிறிய நாடுகளை அதட்டுவதும் படைகளை அனுப்பி அட்டூழியம் செய்வதும் தவறான முன்னுதாரணமே?
    1 point
  25. 👉 https://www.facebook.com/100002733151513/videos/444779250897235 👈 மனிதன், கொடூரமானவன் என்பதை... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நிரூபித்துக் கொண்டே இருக்கிறான். 😢 அந்த மரத்தில், கூடு கட்டியிருந்த.. எத்தனை பறவைகளை பறக்கின்றன பாருங்கள்.
    1 point
  26. நேரம் போகா விட்டால், இதை கேளுங்கள். சிரிப்பு நிச்சயம்.
    1 point
  27. ஒரு வரியில், காதல் கதை. 😂
    1 point
  28. இது பற்றி எழுதுவதென்றால் பல நாட்கள் வேண்டுமண்ணா ( யாரில் சரி யாரில் பிழை என ஆரம்பித்தால் முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா என்பதற்கே விடை வந்தாச்சு) சரி பிழைகளுக்கப்பால் ரசியாவின் பலத்தை மதிப்பிட ரசியாவே காரணமாகிவிட்டது
    1 point
  29. இப்ப அதுக்கும் லாயக்கில்லை. கொரோனா பின்னியெடுத்துட்டுது
    1 point
  30. இதை விட... கேவலமாக வேறு நாட்டுக்காரன், ஐ.நா. வை சொல்லியிருக்க மாட்டான். 😂 அப்படியிருந்தும், சுரணை வரவில்லையே... 🤣
    1 point
  31. நம்ம கதிர்காமர் திருவாய் மலர்ந்தருளியது அது. ஐ. நா. நுளம்புக்கு மருந்தடிப்பதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் என்றால் பாருங்கோவேன் நம்மட ஆளின்ர திமிரை! மற்றவர்களுக்காக கவலைப்படுவதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சபை.
    1 point
  32. நான் வீட்டுக்கு பின் பக்கம் நிண்டு புல்லு வெட்டுறதும் தெரியுதா?
    1 point
  33. நீதிமன்றங்கள்… கொள்ளை அடித்தவனை பாராளுமன்றத்தில் வைத்திருந்து கொண்டு, நீதி கேட்டு… போராடியவனை கைது பண்ணுகிறார்கள்.
    1 point
  34. சிகிரியா மாதிரி உள்ளது.
    1 point
  35. ஆள் மீளமுடியா தண்ணிசாமி ஆகி விட்டார் போல் உள்ளது போல் உள்ளது நம்மவரின் பழக்கம் களின் உதவாக்கரை பழக்கம் இதுதான் .
    1 point
  36. 🤣 உடான்ஸ் சாமியார் ஒரு கொள்கை குன்று, மலை, சிகரம் என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும்…அவர் ஒரு கொள்கை குப்பைமேடு என்று சொல்லும் அளவுக்காவது இருக்க வேண்டும் என்று நினைப்பவர். உக்ரேன் விடயத்தில் அவர் எடுத்தது, அமெரிக்க ஆதரவு நிலையோ, ரஸ்ய எதிர் நிலையோ அல்ல - நலிந்த பலகாலமாக அடக்கபட்ட ஒரு தேசிய இனத்தின் ஆதரவு நிலை. தய்வான் சிக்கலில் இரு பக்கமும் இருப்பது சீனர்களே. ஒரு காலத்தில் சீனாவை ஆண்டு பின் மாவோவா துரத்தி விட்ட பின் தய்வானில் தஞ்சம் அடைந்த முன்னாள் சீன அரசின் வாரிசே தய்வான். ஆகவே இதில் உடான்ஸ் சாமியார் 🥤🍿
    1 point
  37. சேச்சே...... ஒரேயொரு பலம்தான் தேவை ...... அது "பணம்" மட்டும்தான்......அதுதான் "பணம் பத்தும் செய்யும்" என்று அன்றே சொன்னார்கள்.....ஆரோக்கியம், நோயற்ற வாழ்வு எல்லாம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும் ஆனால் சுத்த வேஸ்ட் ......! நம்ம அரசியலையே பாருங்கள் கதவால வெளியே போய் ஜன்னலால உள்ளே குதித்து வருகிறார்கள்......காரணம் மிதமிஞ்சிய பணம்........! 🤔
    1 point
  38. 1990 களின் ஆரம்பம், நான் போய்வரும் வாசிகசாலையின் விளையாட்டு மைதானத்தைத் திருத்துவதற்கு நிதி சேகரிக்கும் பல நிகழ்வுகளை நடாத்தியிருந்தோம். அதில் இறுதி நிகழ்வாக நாட்டுக்கூத்து நிகழ்வொன்றை நடத்துவதென்ற தீர்மானம். அதற்கான ஏற்பாடுகள் செய்தாயிற்று. அந்த நிகழ்வு முடிந்தவுடன் நன்றியுரை கூறும் பொறுப்பு என்னிடம். இறுதி நிகழ்வுக்கான நாளும் வந்தது. எல்லா நிகழ்வுகளும் இனிதே நிறைவுபெற்று இறுதி நிகழ்வாக நாட்டுக்கூத்து அம்பமாயிற்று. நிகழ்வின் முத்தாய்ப்பாய் இருந்தது நாட்டுக்கூத்துத்தான். ஏனென்றால் அதைக் காட்டித்தான் நுழைவுச் சீட்டை விற்றிருந்தோம். பணமும் ஓரளவு சேர்த்தாயிற்று. இப்போது நாடகம் முடிவுபெறும் நிலை. அப்போதுதான் நாட்டுக்கூத்து அண்ணாவியாருக்கு நன்றி சொல்லவேண்டும் என்பது நினைவிற்கு வந்தது. தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்துக்கொண்டு, எங்கள் சனசமூக நிலையத்தின் முக்கியஸ்தர்கள்களிடம் "இந்த அண்ணாவியாரால்தான் இந்த அளவில் காசு சேர்க்க முடிந்தது. அவருக்கு வெறுமனே நன்றி கூறினால் அது நன்றாக இராது. வேறு ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்" என்று கேட்டேன். ஆனால் நிகழ்வு நிறைவுபெற இன்னும் சில நிமிடங்களே இருந்தது. எல்லோருக்கும் சிறிய குழப்பம். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. அப்போதுதான் அங்கே அறையில் வைக்கப்பட்டிருந்த, விளையாட்டு போட்டிகளில் கிடைத்த கேடயம் எனது கண்ணில் பட்டது. "அண்ணர், இந்தக் கேடயத்தையும் கொடுத்து ஒரு பட்டமும் கொடுப்போமா ? இப்போதைக்கு வேறு வழி எதுவும் இல்லை என்றேன்." பிறகென்ன அந்த அண்ணாவியார் தற்போதும் அந்தப் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டு கொண்டு திரிகிறார். (அவர் செய்த, செய்கின்ற கலைச் சேவைக்காக அவருக்கு இலங்கை அரசும் பட்டமளித்துக் கெளரவித்தது) பாவம் சுபாஸ்கரன்..என்னைப்போல யாராவது கம்பன் கழகத்தில் இருந்திருப்பினம்...🤣
    1 point
  39. நீங்கள் சொல்வது சரி, ஆனால் நாயை கொடூரமாகக் கொன்றவர்களை இதனைக் கூறி நியாயப்படுத்த முடியாது. கண்டிப்பாக தண்டனை கொடுத்து ஆக வேண்டும்.
    1 point
  40. அமெரிக்கன் ஸ்பீக்கர், சும்மா, ஒரு டீயை குடிச்சு போவம் எண்டு தானே தைவான் போனா. அதில சீனாவுக்கு என்ன பிரச்சனையோ, அதே தான் இந்தியாவுக்கும் இருந்திருக்க வேணும், உளவுக் கப்பல் வரேக்க...
    1 point
  41. ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢
    1 point
  42. தமிழ்த் தேசியம் என்பது கிள்ளுக் கீரையா வாறவன் போறவன் எல்லாம் கிள்ளி வாயில் போட்டு முடிப்பதற்கு? தேசிய உணர்வை ஓரிரு தனி நபர்களால் நீர்த்துப்போகச் செய்ய முடியுமென்று எவ்வளவு இலகுவாக எடைபோடுகிறீர்கள்? அப்படி ஒருவர் இருவரால் நீர்த்துப்போகச் செய்ய முடியுமென்றால் அது உண்மையான தமிழ்த் தேசிய உணர்வே அல்ல. ## எங்கள் அறிவின்மைதான் தமிழ்த் தேசியத்தின் எதிரி ## 😏
    1 point
  43. நீலன் கொல்லப்பட்டதற்கு இன்றுவரை யாருக்கும் காரணம் தெரியாது ☹️ தற்போது நமது நிலைமைக்கும், அப்போதைய நிலையில் நீலன் திருச்செல்வம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. இதே நேரம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும்... சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுவதில்லை.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.