Jump to content

Leaderboard

  1. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      28966


  2. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      8269


  3. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      13647


  4. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      14505


Popular Content

Showing content with the highest reputation on 08/22/22 in all areas

  1. இப்பிடித்தான் சர்வாதிகாரிகள் எல்லோர் மீதும் பெரும் படம் இருக்கும். சதாம் ஹுசேன் அப்பிடி தாக்குவார் இப்பிடித்தாக்குவார் என்று மேற்குக்கு எதிரான ஜனநாயகக் காவலர்கள் நம்பினார்கள். உள்ள இறங்கி இரண்டு சாத்துச் சாத்தினால் சதாமைப் போல புட்டினும் கோவணத்தோடு சரணடைவார். ரஸ்யா ஒரு வெற்று வேட்டு. ரஸ்யாவிடம் உள்தெல்லாம் பழைய பெருமை 😂 அதில் கனரக மற்றும் அணு ஆயுதங்களும் உள்ளடக்கம். எல்லாம் உழுத்துப் போனவை. நேட்டோ இறங்கி ஒரு ரெண்டு அடி போட எல்லாம் சரிவரும். இதை இப்படித்தான் அணுகலாம்!🤪
    3 points
  2. இது நைஜீரியன் டச் உலகளாவிய ரீதியில் மோசடி வேலைகளுக்கு பெயர் போனவர்கள் நைஜீரியர்கள். தினுசு, தினுசா யோசித்து, புதிய தொழில் நுட்பங்களை பாவித்து மோசடி செய்து சுத்துவார்கள். 1990 களில், லண்டன் டைம்ஸ் பேப்பரில், நைஜிரியாவில் பாலம் கட்ட அரசு எந்த டெண்டரும் கோரவில்லை, பணத்தினை கொடுத்து ஏமாறாதீர்கள். டெண்டர்களின் உண்மைத்தன்மையை அறிய எம்முடன் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று நைஜீரிய தூதரகம் முழுப்பக்க விளம்பரம் செய்தது. வேறு ஒன்றும் இல்லை.நைஜீரிய மத்திய வங்கியின் காலியாக இருந்த மாடி ஒன்றினை வாடகைக்கு எடுத்து, மத்திய வங்கியின் முகவரியினை பாவித்து, அரசு, ஒரு நீர் மின்னுட்பத்தி அணை கட்ட $10,000 கட்டி டெண்டர் படிவங்களை பெறுமாறு கோரியது. பலர் விண்ணப்பித்தார்கள். நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள். $100,000 கட்டி, அரச அமைச்சரை சந்திக்க தயாராகுங்கள் என்று பணத்தினை வாங்கிக் கொண்டு, இடத்தினை காலி செய்து விட்டனர். இந்த நைஜரிய மோசடிக் கும்பல் தமிழக போலீசாரை, அதன் தலைமை நிர்வாகியான சைலேந்திரபாபு போல நடித்து, சுத்தி உள்ளனர். இது, போலீசார் மத்தியில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கி உள்ளது. பிடிக்கிறோம் பாருங்கள் என்று மீசையினை முறுக்கினாலும், அவர்கள், உலகளாவிய ரீதியில் எமகாதகர்கள் என்பதை தமிழக போலீசாருக்கு சொல்லி வைப்போம். https://tamil.oneindia.com/news/thirunelveli/online-fraud-of-rs-7-5-lakh-on-police-officer-claiming-to-be-dgp-472092.html
    2 points
  3. புலிகளுடனான பேச்சுவார்த்தையின்போது நாட்டு நிலவரங்கள் ஓரளவு சுமுகமான நிலைக்கு திரும்பியபோது புலிகளின் இயக்கத்தின் பலமட்டங்களில் சிங்கள நாசகார சக்திகள் ஊடுருவியதுடன் கருணா உட்பட ஒரு சில போராளிகள் எதிரிகள் பக்கம் தாவினார்கள். அதுபோன்ற ஒன்றை ரணிலின் நரிப்புத்தி வியூகம் இந்த புலம்பெயர் அலுவலகம் என்ற போர்வையில் புலம்பெயர் தமிழர் மட்டத்திலும் செய்யப் பயன்படலாம். முதற்கட்டமாக வெளிநாடுகளில் வசிக்கும் உயர்மட்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பொறிக்குள் விழுத்தப்படும் அபாயம் உள்ளது.
    2 points
  4. சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை, இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி, நீண்ட காலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே, இப்போதைய பிரச்சினை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பும் கேள்வி அதுவே! சர்வதேச நாணய நிதியத்திடம் இதற்கு முன்னர் 16 தடவைகள் இலங்கை கடன் வாங்கியதே, அக்கடனினால் இலங்கையால் அந்நியக் கடனை அடைக்க முடிந்ததா அல்லது, இலங்கை மேலும் கடனாளியாகியதா என்ற வினாவை எழுப்புவோர் யாருமில்லை. கடந்த காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கப்பட்ட கடனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பது பற்றிப் பேசுவாரில்லை. ஆனால், எப்படியாவது இன்னொருமுறை கடனை வாங்கிவிட வேண்டும் என்று, எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார்கள். இலங்கையின் அந்நியக் கடன் பற்றியும் பொருளாதார நெருக்கடி பற்றியும், பேசுவோர் பேசாமல் தவிர்க்கின்ற சில விடயங்கள் உண்டு. அவை, முக்கியமானவை. இந்த நாட்டின் இன்றைய நெருக்கடிக்கான காரணங்களை, கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளில் மட்டும் விசாரித்தறிய இயலாது. எனினும், எதிர்க்கட்சிகளும் ஆய்வாளர்களும், அனைத்து பொருளாதாரப் பிரச்சினைகளையும், 2020இல் தெரிவான அரசாங்கத்தின் தலையில் சுமத்த முற்படுகின்றனர். இந்நெருக்கடியில், அவ்வரசாங்கத்துக்கு முக்கிய பங்குண்டு என்பதில் மறுப்பில்லை. ஆனால், அடிப்படையான சில கோளாறுகள், இந்த நாட்டை நுகர்வுப் பொருளாதாரத்தினுள் தள்ளி, தேசிய உற்பத்திகளுக்கு குழி பறித்து, அந்நியக் கடன்களுக்கு உட்படுத்திய அனைத்து அரசாங்கங்களுக்கும் உரியன; இது வசதியாக மறக்கப்படுகிறது. இன்றைய நெருக்கடிக்கு, உடனடிக் காரணியாக உள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியை எடுத்து நோக்கினால், இந்த நாட்டின் உழைப்பாளர்களில் ஐந்தில் ஒருவர், நேரடியாக அல்லது மறைமுகமாக ஓர் அந்திய நாட்டுக்காக உழைக்கின்றார். இது இரண்டு அடிப்படையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒருபுறம், உள்நாட்டுத் தொழில் விருத்தி தடைப்படுகிறது. மறுபுறம், அயல் உழைப்பு வருமானத்தில் முற்றாக தங்கியிருக்கும், பலரைக் கொண்ட ஒரு சமூகமாக நம்மை உருமாற்றியுள்ளது. இத்தோடு, தொடர்புடையதாக அந்நியச் செலாவணிக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. அது நீண்ட போரின் விளைவால் தோற்றம்பெற்ற ஒரு புலம்பெயர் சமூகம். இப்பின்னணியிலும் எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறு பல்முனைப்பட்ட அந்நியச் செலாவணி வருமானம், நாட்டுக்கு இருந்தபோதும் இந்தப் பங்களிப்பில், எவ்வளவு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவியுள்ளது? இந்த அந்நியச் செலாவணி, எங்கு செலவிடப்படுகிறது? எமது அந்நியச்செலாவணியில் பெரும்பகுதி, இறக்குமதியில் செலவாகிறது. இதற்கு அடிப்படையான காரணம், எம்மிடம் உட்பொதிந்துள்ள நுகர்வுப் பண்பாடு. திறந்த பொருளாதாரத்தின் அறிமுகத்தோடு உடன்பிறந்த உலகமயமாக்கல், இந்நுகர்வை புதிய தளத்துக்கு நகர்த்தியுள்ளது. இன்று நாம், அர்த்தமற்ற ஒரு நுகர்வுப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டுள்ளோம். அதன் துணை விளைவுகளாகவே உணவு இறக்குமதியின் பெருக்கமும் தனியார் கல்வியும் தனியார் மருத்துவமும் கட்டுபாடின்றி பெருகும் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வும் அமைகின்றன. இவையனைத்துக்கும் அந்நியச்செலாவணியே பயன்படுகிறது. இவ்வாறு அந்நியச் செலாவணி வீணாகின்றபோது, தொடர்ச்சியான அந்நியக் கடன்கள் மூலம் நுகர்வு குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. எமது அடிப்படையான பொருளாதார நிலைப்பாடுகளில் மாற்றம் தேவை. இந்த அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்காமல், எந்தவொரு கடனும் பயன் தராது. ஆனால், இந்த மாற்றத்துக்கு அரசியல்வாதிகளோ, அரசாங்கமோ தயாராக இல்லை. எல்லோருக்கும் இருக்கின்ற ‘ஆபத்பாண்டவன்’ சர்வதேச நாணய நிதியம். இதனிடம் கடன் வாங்கச் சொல்லிப் விதந்துரைக்கின்றவர்கள், இதுவரை உலகில் எந்த நாட்டை, சர்வதேச நாணய நிதியம் கடனில் இருந்து மீட்டது என்ற தகவலைச் சொல்வார்களா? சர்வதேச நாணய நிதியத்தால் மீட்கப்பட்ட நாடென்று, எதுவுமில்லை. இரண்டு நாடுகளை உதாரணமாகக் காட்ட முடியும். முதலாவது நாடு உக்ரேன். 2014இல், சர்வதேச நாணய நிதியத்திடம் உக்ரைன், 17 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வாங்கியது. இதற்காக விதிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களில், இரண்டு பிரதானமானவை. முதலாவது, அரசுக்குச் சொந்தமான விளைநிலங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதும், தனியாரின் நிலக் கொள்வனவு தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவதும் ஆகும். இரண்டாவது, உக்கிரேன் உயிரியல் தொழில்நுட்ப விவசாயம், மரபணு மாற்றப்பட்ட பயிர்ச்செய்கை, மான்சாண்டோவின் நச்சு பயிர்கள், இரசாயனங்கள் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதியளித்தல் ஆகியனவாகும். இதன்மூலம், பல்தேசியக் கம்பெனிகளுக்கான வாயில்கள் திறக்கப்பட்டன; ஐரோப்பா முழுவதிலும் மிகவும் பழைமையான ஒரு விவசாய நிலம் அழிக்கப்பட்டது. இதற்கு, உக்ரேனிய அரசாங்கம் உடன்பட்டது. அந்த அரசாங்கமும், ஓர் அமெரிக்கச் சதியின் விளைவால் ஆட்சிக்கு வந்தது என்பதும் கவனிப்புக்குரியது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் தொடர்ந்து, உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களின் விளைவால், மான்சாண்டோ, பிளாக்ராக், வான்கார்ட் ஆகியவை 20 மில்லியன் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. சுருக்கமாகச் சொல்வதாயின் இந்நிறுவனங்கள், உக்ரேன் விளைநிலங்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டதை வாங்கியுள்ளன. ஐரோப்பாவில் மிகவும் வளமான மண், இப்போது பல்தேசியக் கம்பெனிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்னும் கடன்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் உடன்பட்டது. அதற்கு மாற்றாக, உக்ரேன் ஓய்வூதியம், எரிபொருள் மானியங்களைக் குறைக்க வேண்டும். ஆனால், சர்வதேச நாணய நிதியம் வழங்க உடன்பட்ட கடன்தொகையை, எதுவித முன்நிபந்தனைகளின்றி வழங்க முன்வந்தது ரஷ்யா. இதைத் தொடர்ந்து நடந்தவைக்கும், இப்போதைய போருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இரண்டாவது உதாரணம், ஆர்ஜென்ரீனா. சர்வதேச நாணய நிதியக் கடன் ஆர்ஜென்ரீனாவில் தோற்றுள்ளதாக, இவ்வாண்டு தொடக்கத்தில் அந்த நிறுவனமே ஏற்றுள்ளது. ஆர்ஜென்ரீனாவின் கதை, தனியே அதற்கு மட்டும் உரியதல்ல. இது முழு மூன்றாமுலகுக்கும் உரியது. குறிப்பாக, கடந்த நூற்றாண்டில் தென்அமெரிக்காவில், கடன் என்ற போர்வையில் சர்வதேச நாணய நிதியம் இழைத்த கொடுமைகள் ஏராளம். குறிப்பாக, 1990களில் தென்அமெரிக்காவில் உலகமயமாதலும் திறந்த பொருளாதாரமும் தீவிரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ‘கட்டமைப்புச் சீராக்கம்’ எனப்படும் அரச நிர்வாகத் துறையைக் கட்டுப்படுத்தலும், அரசதுறைகளைத் தனியார் மயமாக்கலும் தொடர்ந்தன. பலநாடுகளில், சர்வதேச நாணய நிதியம் பொருளாதாரக் கொள்கைகளை ஒழுங்குபடுத்திக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டது. இவ்வாறு, சர்வதேச நாணய நிதியத்தால் வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டதொரு நாடு ஆர்ஜென்ரீனா. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆர்ஜென்ரீனா, கடும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டது. சர்வதேச நாணய நிதியக் கடன் உட்பட, பல கடன்களையும் தீர்க்க இயலாது மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றிய ஒரு நிலையில், அங்கு ஆட்சிமாற்றமொன்று நடைபெற்றது. இடதுசாரிப் போக்கான புதிய அரசாங்கம், எந்தக் கடனையும் வட்டியையும் மீளச் செலுத்துவதில்லை என்ற முடிவை மிகத் தெளிவாக எடுத்தது. இதன் விளைவால், ஆர்ஜென்ரீனா மீது கடுமையான சர்வதேச அழுத்தங்கள் ஏவப்பட்டன. ஆனால், பலவாறான சர்வதேச அழுத்தங்கையும் மீறி, ஆர்ஜென்ரீனாவின் பொருளாதாரம் சிறிது சிறிதாக நெருக்கடியில் இருந்து மீண்டது. அதன் பின்னர், நெருங்கிய நட்பு நாடான வெனிசுவேலாவின் உதவியுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை முழுமையாக அடைத்ததோடு, சர்வதேச நாணய நிதியத்திடம் இனிமேல் கடன் வாங்குவதில்லை என்ற முடிவையும் எடுத்தது. ஆனால், இது நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஒரு சதியின் விளைவால், தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவிக்கு வந்தது. புதிய ஜனாதிபதியின் முதல் காரியங்களில் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தியமை ஆகும். ஆர்ஜென்ரீனா நாட்டுக்குள் மீண்டும் சர்வதேச நாணய நிதியம் நுழைந்தது. மிகக்குறுகிய காலத்தில், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று, இலங்கை போன்று வங்குரோத்து நிலையில் ஆர்ஜென்ரீனா உள்ளது. இப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துகிறார்கள். இதன் பின்னணியிலேயே, சர்வதேச நாணய நிதியம், ஆர்ஜென்ரீனாவில் தோல்வியடைந்ததை தொடர்ந்து வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை நோக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம், ‘ஆபத்பாண்டவனோ’, ‘இரட்சகனோ’ இல்லை. இந்த உண்மை விளங்காவிடின், இன்னலில் தொடர்ந்தும் உழல்வதற்கு நாம் கடமைப்பட்டவர்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வதேச-நாணய-நிதியம்-தரித்திரத்தின்-சரித்திரம்/91-302775
    2 points
  5. இந்தியோ, மந்தியோ அது இந்தியாவின் தேசிய மொழி அல்ல.. இந்தியாவுக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை..! அதுவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆங்கிலமும், இந்தியும் அலுவல் மொழி, அவ்வளவே..! PERIOD. அலுவல் மொழி வேறு, தேசிய மொழி என்ற அந்தஸ்தும், அங்கீகாரமும் வேறு.
    2 points
  6. 🙏 பார்ப்போம்.... விசாரித்து முடிந்த தகவல் பெற்று பகிர்ந்து கொள்வோம். IVF treatment, Surrogate குறித்தும் பலர் தகவல் தேடுகிறார்கள்.
    1 point
  7. விமான போக்குவரத்து அவசியம்தான். அதற்காக விவசாய நிலங்களையும்,ஊர்மனைகளையும் அழிப்பது அக்கிரமம்.
    1 point
  8. நீண்ட நோக்கில் காலம் எல்லாத்துக்கும் எதிரிதான். பிரபஞ்சம் ஒரு நாள் ஒளியற்று போகும் போது காலமும், காலமாகும். ஆனால் குறுகிய கால நோக்கில் காலம் தனி மனிதர்களுக்கு எதிரி ஆனால் அமைப்புக்களுக்கு (system) அல்ல. ஆகவேதான் தனிமனித முயற்சி அமைப்பாகும் போது அது காலத்தை வெல்கிறது (யேசுவை காலம் வென்றது ஆனால் கிறிஸ்தவம் நிலைத்தது - குறுகியகால அட்டவணையில்). புட்டினுக்கு பின் ரஸ்யாவில் இதே அணுகுமுறையுள்ள ஒருவர் வருவாரா என்றால் சாத்தியம் மிககுறைவு. ஆனால் டிரம்ப் வென்றாலும் கூட மேற்கின் அணுகுமுறை மாற சாத்தியம் குறைவு. பதில் மேலே.
    1 point
  9. எதுக்கும்… கோத்தா, இரவு மேய்ச்சலுக்குப் போகும் போது… அண்ணியை… ஓட்டல்ல விட்டுட்டு போகச் சொல்லுங்க. 😂 தாய்லாந்து பக்கிரிகள்… ஆட்டையை, போட்டுடுவாங்க. 🤣
    1 point
  10. தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு, படக்கு எண்டுமாம்🤣. பிந்திய செய்தி : தாக்குதலுக்கு உக்ரேன் காரணம் என ரஸ்யா அறிவிப்பு. உளுத்து போனது என்றாலும், தவறி கசிந்தாலே அணு ஆயுதம் பெரிய விளைவை தரவல்லது. ஆகவே இறங்கி அடிப்பது பெரும் ஆபத்தில் முடியலாம். புட்டின் சாகாவரம் பெற்றவர் அல்லவே. காலம் புட்டினின் மிக பெரிய எதிரி.
    1 point
  11. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். உக்ரேனிய அதிகாரிகளும் கடும் எதிர் வினையை எதிர்பார்ப்பதாக நம்பபடுகிறது. இந்த போரில் ரஸ்யாவின் முதலாவது சிவிலியன் இழப்பு இது. ஆனால் உக்ரேன் பலதை கண்டு விட்டது. ஆனாலும் ரஸ்யா இன்னமும் நேரடியாக கியவ்வை குற்றம் சொல்லவில்லை. தடவியல் அறிக்கைக்கு பின் குற்றம் சாட்ட கூடும். அதே வேளை இதை ரஸ்யாவில் உள் இருந்து ஆட்சி மாற்றத்துக்காக போராடும் அமைப்பு என தம்மை அறிவித்து கொண்டுள்ள ஓர் அமைப்பும் உரிமை கோரியுள்ளது. நிச்சயமாக இதை தன் அருகில் இருக்கும் ஒருவரின் சதி என்ற கோணத்திலும் புட்டின் யோசிப்பார். எது எப்படியோ - யாரால் என்று சொல்லாமல், புட்டினுக்கு மிக நெருக்கமானவர்களை கூட இலக்கு வைக்க முடியும் என்ற செய்தி புட்டினுக்கு சொல்லப்பட்டுள்ளது. அவரின் எதிர்வினை எப்படி இருக்கும்? பொதுவான எதிர்பார்ப்பு - உக்ரேனில் எங்காவது பதிலடி கிடைக்கும் என்பது. ஆனால் எப்போதும் பொது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லை. புட்டின் வேறு விதமாக இதை அணுகலாம்.
    1 point
  12. 🤣 வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டு🤣. ஊழலை, களவை “மாமூல்” (ஹிந்தியில் இயல்பு நிலை) என்றாக்கி, ஊழல் என்பதன் இன்னொரு பெயராக மாமூல் என்றாக்கியவர்கள் இந்திய பொலிசார். அவர்களுக்கே ஆப்பா🤣.
    1 point
  13. ஆகா காகம் பறந்திடிச்சா? கீழே இருந்த நரிகளும் ஓடிடிச்சா?
    1 point
  14. இதற்காகவே உக்ரேன் பெரிதாக இழக்க வேண்டியிருக்கும்.
    1 point
  15. அழகு தமிழ் இக்காலத்திலும் என , இப்படி ஒரு பையன் என எண்ணி வியந்து போனேன். அவினாஷ் க்கு பாராட்டுக்கள்.
    1 point
  16. தொட வரவோ..? விமான தரைவிறக்கம், ஏற்றம் முதலியன எப்பவுமே மிகக் கவனமாக கையாளப்படவேண்டியது.. ஆனால் மயிரிழையில் ஓடுபாதையின் வேலியை வேலியை தொடுமளவிற்கு இறங்கும் இக்காணொளியை பலரும் பார்த்து ரசித்துள்ளனர்.. துபாய் ஏர் ஷோ வில் விமான சாகசங்களை பலமுறை பார்த்திருந்தாலும், கிரீஸிலுள்ள ஸ்கியதோஸ் உள்ளூர் விமான நிலையத்தில் இறங்கும் இந்தக் காணொளி மயிர்கூச்சரிய வைக்கிறது.. Just missed..!
    1 point
  17. எஸ் சி சந்திரஹாசன் 2012 இல் நாமினி விஜேடாச எனும் சிங்களப் பத்திரிக்கையாளருக்கு இவன் வழங்கிய செவ்வியில் இப்படிக் கூறுகிறான், "புலிப்பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்களாலேயே எமக்குப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. புலிகளின் காலத்தை மக்கள் முற்றாக மறந்து கைகழுவிவிடவேண்டும். இந்தப் புலி யுகத்தினை நினைவுகூர்வதை நாம் முற்றாக அழித்து விடவேண்டும்" என்று அவன் கூறுகிறான். சந்திரஹாசன் மகிந்தவை ஒரு நிகழ்வில் சந்தித்தான், "நீங்கள் மிகவும் ஒரு நல்ல விடயத்தைச் செய்திருக்கிறீர்கள். புலிகளை அழித்ததற்காக நீங்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். சரித்திரத்தில் இடம்பெற்ற இந்த முக்கிய நிகழ்வில் உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று அவன் மகிந்தவிடம் கூறினான். அவனது புகழ் மழையில் இருந்து வெளியே வர மகிந்தவுக்கு சில நிமிடங்களாவது எடுத்திருக்கும் என்பது திண்ணம். தமிழர் சரித்திரத்தில் ஒப்பற்ற ஜனநாயக அரசியல்வாதியாகத் திகழ்ந்த தந்தை செல்வாவுக்கு மகனாகப் பிறந்த இவன், எவ்வளவு தூரத்திற்கு தமிழரின் எதிரிகளோடு சேர்ந்து துரோகமிழைத்தான் என்பதற்கு இது சாட்சி. https://www.colombotelegraph.com/index.php/the-ltte-era-must-be-forgotten-chandrahasan-sjv-chelvanayakams-son/
    1 point
  18. "இந்தப் பழம் புளிக்கும்" புகழ் ஆனந்தசங்கரி ஒரு ஆண்டுக்கு முன்னர்வரைக்கும், மிகவும் முட்டாள்த்தனமாகவும், அசாத்திய துணிச்சலோடும் இவன் ராஜபக்ஷே குடும்பத்தினைப் புகழ்ந்து பண்ணிசைத்து மகிழ்ந்ததை நாம் எப்படி அவ்வளவு இலகுவில் மறக்கமுடியும்? "இப்போதிருக்கும் ராஜபக்ஷே அரசுதான் முன்னெப்போதைக் காட்டிலும் தமிழர் பிரச்சினையினைத் தீர்க்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்கிறது" என்று இவன் அக்குடும்பத்தை வானளவாகப் புகழ்ந்ததை எப்படி மறப்பது? https://island.lk/current-rajapaksa-govt-best-suited-to-settle-tamil-issue-asangaree/
    1 point
  19. பீபீசீயும் ஏதோ புதிதாக் கண்டுபிடித்தமாதிரிப் பலாக்காய் விடயத்தை எழுதியிருக்குது. தமிழர் உணவில் பலாக்காய் பல்வகையான உணவுகளாக இருந்த காலமொன்று உண்டு. பலாக்காய்க் கறி, பலாக்காய்ப் பிட்டு, பலாக்காயினது இளம்பருவத்தில்(முட்டுக்காயென்றும் கூறுவார்கள்) தேங்காயப் பால்விட்டு அவியல் என்று பல்வகையான முறையில் உண்டகாலம் இருந்தது. உங்கட எசமானர்கள் பாணையும், கோதுமை மாவையும் விற்றுக் காசு பார்க்க வெளிக்கிட்டு எல்லாம் தொலைந்ததோடு, எங்களவர்களின் சோம்பேறித்தனமும் சேர்ந்ததாலை மறைந்துவிட்டது. நான்கு வாரத்துக்கு முன் எனது மாமியாரவர்கள் மகளுக்கு கூறுகின்றா நேற்றும் மூன்று பலாப்பழத்தை எறிந்தனான் பிள்ளையென்று. இங்கு அதே மகள் கிலோ 6:50 யூரோவில் இருந்து 7:50 யூரோவரை கொடுத்து வாங்குகின்றார். அப்ப கொட்டையையாவது எடுக்கலாமேயென்றால், அதுக்கு ஆளப்பிடிக்கிற சம்பளத்துக்கு காணாதாம். இங்கு நாம் ஒரு அவிழ் விழுந்தாலே எவளவு கவலைப்படுகின்றோம் என்பது எல்லோரும் அறிந்ததே. நன்றி தொடக்கியவர் நிறுத்துவதுதானே முதலில் நடைபெறவேண்டும் அல்லது ஒரு சமன்பாட்டிற்கு வரவேண்டும். இங்கே சமன்பாடென்பது ரஸ்யா - உக்ரேன் சமன்பாடல்ல என்பதையும் கவனிக்க வேண்டுகின்றேன்.
    1 point
  20. அழகான இந்த கையெழுத்தில்... இவ்வளவு பிழைகளா?
    1 point
  21. ....."கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் சில சிறிய அரசியல் கட்சிகளும், குழுக்களும் இனவாதத்தைக் கக்குவதன் மூலம் புலிகளுக்கு தமிழ்நாட்டில் மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவை யாவுமே இதுவரை தோல்வியில்த்தான் முடிந்திருக்கின்றன. அத்துடன் சுமார் 95 வீதத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் மிகவும் அமைதியான தமது மாநிலத்தில் மிலேச்சத்தனமான புலிப்பயங்கரவாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதை விரும்பவில்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அத்துடன் பல முன்னணி அரசியல்க் கட்சிகள் கூட தமது முன்னைய புலிச் சார்புக் கொள்கையிலிருந்து விலகி, புலிகளுக்கெதிரான தீர்க்கமான கொள்கையினை வகுத்துக்கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது. அண்மையில் தமிழ்நாட்டில் முதல்வர் கருனாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் குழு நிறைவேற்றியுள்ள ஆறு அம்சத் தீர்மானத்தில் இனக்கொலை பற்றிப் பேசியுள்ளதுடன், போரில் அகப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கவேண்டும் என்றும் காலக்கெடு விதித்திருந்தனர். அத்துடன் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், இரு வாரகாலத்தினுள் யுத்த நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அப்படி இந்தியா செய்யாதவிடத்து, மத்திய அரசுக்கான தமது ஆதரவினை விலக்கிக்கொள்ள நேரிடும் என்றும் அச்சுருத்தல் விடுத்திருக்கின்றனர். ஆனால், இந்தியா இவர்களின் நெருக்குதல்கள் குறித்து தீர்க்கமான முடிவொன்றினை எடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்திய அரசு, தமிழ்நாட்டு இனவாதிகளின் உளவியல் ரீதியான அச்சுருத்தல்களுக்கு அடிபணிந்த்து போகாது, மிலேச்சத்தனமான புலிப்பயங்கரவாதிகளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கையினையும், இலங்கையில் தமிழ்மக்களுக்கு இருக்கும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம். தமிழ்நாட்டு அரசியல்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் தற்போது செய்யவேண்டியது வன்னியில் யுத்தத்தால் அல்லற்படும் சுமார் 230,000 தமிழர்களுக்கான நிவாரணங்களை ஒழுங்குபடுத்துவதாகத்தான் இருக்க முடியும். அத்துடன் இலங்கை தொடர்பான இந்தியாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடிய சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு ஆதரவு தருவதும் அவர்கள் செய்யக்கூடிய இன்னொரு சாதகமான நடவடிக்கையாகும். வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் 230,000 தமிழர்களுக்கான நிவாரணங்களையும் உணவுப் பொருட்களையும் தொடர்ச்சியாக வழங்குவதென்பது மிகவும் சவாலான விடயமாகும். வன்னியில் அல்லற்படும் மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் மருந்துப்பொருட்களை எப்படி விநியோகிக்கிறீர்கள் என்று இந்து உடபட சர்வதேச ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மகிந்த "புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பிடிக்கப்பட்டு, சொல்லொணாத் துயரத்தினை அனுபவித்துவரும் வடக்கினைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளை விரைவில் நான் மீட்டெடுப்பேன், அவர்களுக்கான அனைத்தையும் நான் வழங்குவேன்" என்று இந்துவுடனான நேர்காணலில் அவர் உறுதியளித்திருந்தார். புரட்டாதி முதலாம் திகதியன்று, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான மனிதாபிமான வழியொன்றினை இலங்கை அரசாங்கம் பிரேரித்திருந்தது. போரினால் ஏற்படுத்தப்பட்ட மிகக் கடுமையான மனிதாபிமான அவலத்தினை எதிர்கொள்ளும் வகையில் பல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் ஐநா அமைப்பும் உள்ளே அகப்பட்டிருக்கும் மக்களுக்கான சுமார் 750 மெற்றிக் தொன் ப்ரொட்களை அனுப்பிவைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளை, கடுமையான யுத்த நிலை காரணமாக அம்முயற்சியும் கைவிடப்பட்டது. ஆனால், போரிடும் இரு தரப்புக்களிடமிருந்தும் தமது உணவு வண்டி ஊர்திகள் தாக்கப்படாது என்கிற உத்தரவாதத்தினைப் பெற்றுக்கொண்டு, மீளவும் தமது முயற்சியினை இந்த அமைக்கள் எடுக்கக் காத்திருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலைகளைல் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான சிறந்த விநியோக முறைகளை நாம் இங்கும் பாவிக்க முடியும். 2004 சுநாமிப் பேரிடர் காலத்தில் இலங்கையில் இந்தியாவின் இந்த செயல்முறை பெருமளவில் உதவியிருந்தது என்பது மறுக்கமுடியாதது. ஆகவே தமிழ்நாட்டு மக்களின் உதவிகளும் இந்த இடர்காலத்தில் யுத்தத்தில் அகப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவியாக இருக்கும். அதேவேளை தமிழ்நாட்டிலிருந்து வரும் எந்த உதவியும் இலங்கை அரசாங்கத்திற்கூடாகவே செய்யப்படவேண்டும் என்பதனையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் புரிந்துகொள்ளுதல் அவசியமானது".
    1 point
  22. முதலிருவரும், தமிழ் தெரிந்த பார்ப்பனர்கள். ஆகவே.... ஆச்சரியப்பட முடியவில்லை. இவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டிய இன்னும் ஒருபார்ப்பனர், சோ ராமசாமி (துக்ளக்) 🙄
    1 point
  23. புலிகளையும், தலைமையினையும் மிகக் கீழ்த்தரமாக விழித்து ராம் எழுதிய ஒரு கட்டுரையின் பகுதி கீழே..... இலங்கை : இனிமேல் செய்யப்படவேண்டியது என்ன? சர்வதேசத்திலும், தமிழ்நாட்டிலும் புலிகள் இன்றிருக்கும் மிகவும் இக்கட்டான நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவது போலத் தெரிகிறது. புலிகள் எனப்படும் அரசியல் மிருகத்தின் இயல்பு எத்தகையது? பதில் மிகவும் இலகுவானது, உலகில் இருக்கும் மிகவும் கொடூரமான, மிலேச்சத்தனமான பயங்கரவாத இயக்கங்களில் புலிகள் இயக்கம் முதன்மையானது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று கூறிக்கொண்டு விடாப்பிடியாக அது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதனது இன்றைய நிலை என்ன? உலகில் போராடிவரும் இன்னும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு புலிகளின் வளர்ச்சியும், கட்டுமாணங்களும் உதாரணமாகத் தெரிந்தாலும், அவை எல்லாமே இன்று படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. புலிகள் அமைப்பு இன்று கண்டிருக்கும் அழிவென்பது அதன் சரித்திரத்திலேயே இதுவரை அது கண்டிராதது. நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களின்படி அதனது போரிடும் வலு வெகுவாக அழிக்கப்பட்டிருக்கிறது. அதன் படைக் கட்டுமானங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. போர்வலுவும், மனோநிலையும் மிகவும் அடிமட்டத்திற்கு இழுத்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன. சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுவரும் அவ்வியக்கத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி நகர்களுக்கிடையே அதன் பலம் சுருங்கி விட்டது. பிரபாகரன் வளர்த்துவந்த இந்தப் பயங்கரவாத இயக்கத்தின் மிலேச்சத்தனமும், அட்டூழியங்களும் எனது பத்திரிக்கையில் பலதடவை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை எனும் நாட்டில் ஒருமைப்பாட்டினுள் தமிழர்களுக்குக் கிடைக்கவிருந்த அனைத்துத் தீர்வுகளையும் இப்பயங்கரவாத இயக்கம் முன்னின்று அழித்துப் போட்டிருக்கிறது. 1991 இல் இந்திய மண்ணில் எமது தலைவர் ராஜீவைக் கொன்றதன் பின்னர், உலகில் இப்பயங்கரவாத இயக்கத்தை முதன் முதலில் தடைசெய்த நாடு இந்தியா. அத்துடன், இக்கொலையின் பிரதான சூத்திரதாரி பிரபாகரனே என்றும் எமது நாடு அறிவித்து விட்டது. இந்தியாவைப் பின்பற்றி மேலும் 30 நாடுகள் இப்பயங்கரவாத இயக்கத்தை சரியான முறையில் தடைசெய்திருக்கின்றன.
    1 point
  24. நரசிம்மன் ராம் இவன் பற்றி தமிழ் சங்கம் இணையத்தில் பலதடவை எழுதியாயிற்று. இவனது செயற்பாடுகள் பற்றிய சில தகவல்களைக் கீழே பகிர்கிறேன். மார்கழி 2005 இல் அகம்பாவமும் மதியீனமும் கொண்ட ராம் கூறும் சில கருத்துக்கள்..... ராமை தலைமை ஆசிரியராகக் கொண்ட இந்து பத்திரிக்கையில் 2005 ஆம் ஆண்டு குறைந்தது 22 தடவைகளாவது புலிகள் பற்றியும், தமிழர்களின் போராட்டம் பற்றியும் மிகவும் மோசமான ஆசிரியர் தலையங்கங்களை இவனும் இவனது பரிவாரங்களும் வரைந்திருக்கின்றன. புலிகளை பயங்கரவாதிகளாக மீண்டும் மீண்டும் சித்தரிப்பதன் மூலம், ராஜபக்ஷேக்களை ஆதரித்தும், தமிழர்களை விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைமையினையும் நிராகரிக்க வேண்டும் என்றும் ராம் தொடர்ச்சியாக இக்காலத்தில் எழுதிவந்தான். அவனது ஆசிரியர் தலையங்கங்கள் பின்வருமாறு, 1. சிறிலங்காவும் சுனாமியும் - தை 5 2. நிவாரணங்கள் - தை 10 3. பிரபாகரன் எங்கே? தை 11 4. சுநாமியின் பிள்ளைகள் - தை 14 5. போர்ச்சூழலும் சுநாமி அழிவுகளும் - தை 25 6. தர்மசங்கடமான மூன்றாம் வருட நிறைவு - மாசி 24 7. புலிப்பயங்கரவாதிகளும் சிறுவர் போராளிகளும் - பங்குனி 4 8. அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் இருப்பும், புலிகளின் இருப்பும் - பங்குனி 23 9. சுநாமியும் புலிகளின் இருப்புப் பற்றிய சந்தேகமும் - ஆனி 17 10. இலங்கையும் சுநாமிக்குப் பின்னரான கட்டுமானமும் - ஆனி 25 11. இலங்கையில் பலச்சமநிலையினைப் பேணும் நகர்வு - ஆடி 19 12. ஒரு பிரதான ராதந்திரியின் மறைவு - ஆவணி 15 13. தேர்தல்களும், ஸ்த்திரமற்ற தன்மையும் - ஆவணி 29 14. பயங்கரவாதம் குறித்து எவரும் அனுதாபம் காட்டத்தேவையில்லை - ஆவணி 31 15. கலங்கிய குட்டையில் இலங்கை - புரட்டாதி 13 16. ஐரோப்பிய ஒன்றியமும், புலிகள் இயக்கமும் - புரட்டாதி 29 17. விரும்பத்தகாத தெரிவினை நோக்கிச் செல்லும் இலங்கை - ஐப்பசி 17 18. புலிகளின் தந்திர விளையாட்டுக்கள் - கார்த்திகை 11 19. மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷெ - கார்த்திகை 19 20. புலிகளின் "இறுதி எச்சரிக்கை" எனும் அபத்தத்தினைப் புரிந்துகொள்ளுதல் - கார்த்திகை 30 21. தமது சக்திக்கு அப்பாற்பட்ட வெளிகளில் அலைக்கழிக்கப்படும் புலிகள் - மார்கழி 8 22. புலிகளின் பலம்பற்றிய யதார்த்தத்தினை அவர்களே உணர்ந்துகொள்ளுதல் - மார்கழி 26 புலிகளையும், போராட்டத்தையும் கீழ்த்தரமாக வசைபாடி எழுதப்பட்ட இந்த தலையங்கங்கள் எவற்றிலுமே சுநாமியால் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலியோ அல்லது அவற்றிற்கான நிவாரணம் பற்றியோ ராம் பேச விரும்பவில்லை. கருணா பிரிந்துசென்றதால் புலிகள் பலவீனமாக்கப்பட்டுள்ளார்கள், சுநாமியின்போது தலைவரும் ஆயிரக்கணக்கான போராளிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள், கிழக்கில் புலிகள் அழிந்துவிட்டார்கள், இலங்கையரசு பலம்பெற்று வருகிறது, மகிந்த மேன்மையானவர் எனும் தமிழர் விரோத செய்திகளைக் காவிவந்ததைத்தவிர ராம் தமிழர்களுக்காகச் செய்தது என்று எதுவுமில்லை. 1989 இல் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று கூவிய அதே ஆர்ப்பரிப்புடன் 2005 இலும் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று ராம் எனும் குருட்டு ஆடு அலறிக்கொண்டிருக்கிறது.
    1 point
  25. இந்தப் பட்டியலில்... தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலரையும் சேர்க்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டவர்கள் முகத்துக்கு நேரே துரோகம் செய்தார்கள். கூட்டமைப்பில் உள்ள சிலரோ... எப்பவும், ஆளும் அரசுகளுடன் பின்கதவால் தொடர்புகளை பேணி... தமிழர்களுக்கு முதுகில் குத்திக் கொண்டே இருப்பார்கள்.
    1 point
  26. வணக்கம் வாத்தியார்........! ஆண் : கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால ஆண் : கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா ஆண் : ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஆண் : அந்தி நடுச்சாமம் எழுப்பி அந்த நட்சத்திரம் உலுப்பி ஒன் மூக்குல காதுல தோட மாட்டி தொங்க விடப்போறேன்…. ஆண் : அந்த ராத்திரியே கிள்ளி கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி ஒன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன் ஆண் : மாடுக்குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேன்டி ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேன்டி ஆண் : சூரிக்கத்தி வீசுனாலும் நிமிந்து நிப்பேன்டி ஒன் சுண்டு விரல் பட்டு போன சுணங்கி போவேன்டி ஆண் : நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி......! --- கஞ்சா பூவு கண்ணால ---
    1 point
  27. வணக்கம் வாத்தியார்.........! நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! . கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் . . தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்.........! --- கண்னன் வந்தான்---
    1 point
  28. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் ஆண் : அது போல் எந்த நாள் வரும் உயிா் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திாி வெடிக்கும் ஆண் : ஒரு நிமிஷம் கூட என்னைப் பிாியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே.....! ---வெண்மதி வெண்மதி---
    1 point
  29. வணக்கம் வாத்தியார்......! காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே நீ நடந்து செல்லும் பாதையில் என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே நீ பேசும் அழகை கேட்கையில் கொஞ்சி பேசும் மழலையின் அழகும் தோற்று போனதே எங்கேயும் நீயடி போகுதே உயிரடி வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ......! ---காற்று வீசும்---
    1 point
  30. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே ஆண் : பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன் நீ மட்டும் தான் மோசம் நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா வாடி எனக்கோசம் ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன்......! --- அடியே அடியே இவளே.....!
    1 point
  31. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா….. ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா ஆண் : ஆங்…..பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்சா குழு : புளிக்கும் திராட்சை பழமே இன்னிக்கு செவ்வாய் கிழமை இனிக்கும் கொய்யா பழமே…. ஆண் : பஞ்சாங்கம் பாத்திருக்கேன் கண்ணே கங்காம்மா நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன் ஹான் ஹான் கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன் பெண் : அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு ஆண் : அடி சக்க குழு : சூடான ஆப்பம் இருக்கு இத தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா --- லாலாக்கு டோல் டப்பிம்மா---
    1 point
  32. வணக்கம் வாத்தியார்........! ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம் ஆண் : காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள் மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள் திங்களில் சாமந்தி வைத்திருப்பாள் வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள் ஆண் : கட்டித் தங்கம் இனி மேல் அங்கே என்ன பூவை அணிவாளோ கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ தினந்தோறும் திருநாளோ ஆண் : மலர் என்ற உறவு பறிக்கும் வரை மகள் என்ற உறவு கொடுக்கும் வரை உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன் உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன் ஆண் : எந்தன் வீட்டு கன்று இன்று எட்டி எட்டிப் போகின்றது கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறது இமைகள் அதை மறைக்கிறது......! --- மரகதவல்லிக்கு---
    1 point
  33. வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஆண் : ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி.......! --- ஊரத் தெரிஞ்சிகிட்டேன்---
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.