Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      76585


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43059


  3. vasee

    vasee

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      1760


  4. nunavilan

    nunavilan

    கருத்துக்கள நிர்வாகம்


    • Points

      4

    • Posts

      51086


Popular Content

Showing content with the highest reputation on 09/27/22 in all areas

  1. இது ஒரு ஆரோக்கியமான சுயாதீனமான உலக ஒழுங்கு ஒன்றிற்கான தருணம் உருவாகி வருகின்றது என்பதற்கு எடுத்துகாட்டு. இதுவரை காலமும் சாதாரண தனிமனித உரிமைகளூக்காக போராடும் சாமானியர்களை ஆதிக்க கரங்கள் கொண்டு அடக்கப்படும் நிலையில், இந்த புதிய உலக ஒழுங்கு அனைத்து விடயங்களையும் சமநிலைபடுத்தும். ஜூலியன் அசாஞ்ச் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். பல நியாயமான போராட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு காலில் போட்டு நசிக்கிய நிலமை இனி மாறும், பல தேசிய இனங்களின் உரிமைகள் பெறப்படுவதற்கு ஏற்ற கீரைக்கடைக்கு எதிர்கடை வேணும் என்ற நிலை உருவாவது மிகவும் சந்தோசமான விடயம். இனி எமது பிரச்சினைக்கும் பன்முகம் கொண்ட தீர்வு அணுகுமுறை உருவாக உள்ளது.
    4 points
  2. இம்முறை நடந்த தியாகி திலிபனின் நினைவுநாளன்று நடந்த சில விரும்பத்தக்கதகாத நிகழ்வுகளை தமிழ்த்தேசிய முன்னனி என்னும் அரசியல்கட்சியின் மீது குற்றஞ்சுமத்தி நாளேடுகளிலும் ஏனைய ஊடாகங்களிலும் செய்திகள் வந்தவண்ணமிருக்கிக்கின்றன.அனைத்து ஊடகங்களிலும் ஒரேமாதிரியான ஒருவரால் எழுதப்பட்ட செய்தயையே அசு;சுப்பிசகாமல் பிரசுரித்திருப்பதைப்பார்த்தால் இதன் பின்னனியில் இந்தியாவின் அரூபக்கரற்கள் இரப்பது புலனாகிறது. கடந்த பாலங்களில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திலிபனின் நினைவஞ்சலியை தமிழ்த்தேசிய முன்னணி ஏனயை கட்சிகளின் ஒத்துழைப்புடன் நல்லபடியாகவே செய்திருந்தது.இம்முறை அதற்காகான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பில் இது வரை நினைவேந்தல்களில் பங்கெடுக்காத வேலன் சுவாமிகள் ,மற்றும் இந்தியாவின் ஆர்எஸ்எஸசின் கைப் பொம்மையான சிவசேனாவின் உறுப்பினர்கள். மற்றும் இந்தியாவின் நலனகளைப் பேணுகின்ற அதன் தமிழர் விரோதப் போக்கினைக் கண்டும் காணாமல் விடுகின்ற இந்ரிய சார்பு நிலையெடுப்பவர்களை மையமாகக் கொண்டு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தலிபன் நினைவேந்தல் அரசியல் மயப்படுத்தக்கூடாது என்ற கருத்துருவாக்கமும் தோற்றுவிக்கப்பட்டது. திலிபனே ஒரு அரசில் போராளி தமிழ்களின் அரசியல் விடுதலைக்காக தன் உயிரையே ஆகுதியாக்கியவன். திலிபனின் சாவுக்கு இந்தியாவே பொறுப்பு. அதன் துரோகத்தனத்தை மக்கள் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் திலிபனின் நினைவஞ்சலி ஞாபகப்படுத்தும். சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மீண்டும் தமிழர்களைக் கருவியாக்க இந்தியா மீண்டும் முனைகிறது. அதற்கு இடையுறாக இருக்கும் திலிபனின் நினைவஞ்சலிகளில் குழபங்களை ஏற்படுத்த பல்வேறு குழுக்களை களத்தில் இறக்கி விட்டு தனது ஆதரவு ஊடகங்கள மூலம் தனது பக்கம் இழுக்க முடியாமல் இருக்கின்ற தமிழத்தேசிய மக்கள் முன்னணி மீது சேறடிக்கும் விசமப்பிரசாரத்தை முன்கெடுத்து வருகிறது. முன்னாள் போராளிகள் சிலரையும் இதற்குள் சேரத்து குழப்பியடித்து வருகிறது. நாளை கருணா பிள்ளையான் போன்றவர்களும் முன்னாள் போராளிகள் எங்களுக்கே திலிபனை நினைவு நாள் நடத்தும் உரிமை இருக்கிறது என்று கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.திலிபன் அனைவருக்கும் பொதுவானவன் அவனை எல்லோரும் நினைவு கூரலாம். ஆனால் எந்த இந்தியா திலிபனை முதுகில் குத்திக் கொன்றதோ அந்த இந்தியாவின் அடிவருடிகள் திலிபனை நினைவு கூருவதை தமிழ்மக்கள் ஏற்க மாட்டார்கள் .எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.
    3 points
  3. நீங்களே சொல்லுங்கோ ப்ரோ? ராசா நாள் முழுக்க ஊர் மேய்ஞ்சிட்டு நேரகாலத்துக்கு கொட்ட வந்துட்டார் எண்டு உங்களுக்கு சொன்னால் கோவம் வருமோ வராதோ? 😃 அதுதான் வேற லெவெல்ல சம்பவம் செய்து காட்டுவம் எண்டு பாத்தால் கோதாரி விழ எடுபடேல்லை 😂
    3 points
  4. நான் ஏறி இருந்தால் அதே பூவரச மர தடி புடுங்கி பூசை நடந்து இருக்கும். ஒருக்கா கோவில் திருவிழாக்கு என்று சொல்லி கோயிலுக்கு போய் வெளிவழிய ஓடி திரிய எதோ கடிச்சு போட்டுது. நாலு ஐந்து பேர் வீட்டை கூடி வர, வேப்பம் குருத்து சப்பினா விஷம் ஏறின கசக்காது என்று வெப்பம் குருத்தை தர... அது படு கசப்பு. துப்பின உடனை அதே வேப்பம் தடியால் நடந்த பூசைக்கு பிறகு கோயிலுக்கு போன வெளிய பத்தை வழிய ஓடி தெரியிறதில்லை
    2 points
  5. அப்போ..... சாமியார் தான் பச்சைத்தண்ணி .... இல்லை.... பகிர்ந்துண்பவர், அதுவும் கந்தையரில். பாவம் பச்சைத்தண்ணி கந்தையர்! பழியை தன்ர தலையில போட்டுக்கொண்டார். உண்மையிலேயே கந்தையர் மனசுல பச்சைத்தண்ணி தான்.
    2 points
  6. அமெரிக்காவில்... உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள, எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு... ரஷ்ய குடியுரிமை! முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 72 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டு வெளியிட்ட ஆணையில் எட்வர்ட் ஸ்னோவ்டனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஸ்னோவ்டனின் மனைவி, குழந்தை இருவரும் தற்போது நிரந்தர விசா பெற்றுள்ளனர். அவர்களுக்கும் விரைவில் ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஸ்னோவ்டனின் வழக்கறிஞர் அனடோலி குச்செரெனா, ஸ்னோவ்டனின் மனைவியும் ரஷ்ய குடியுரிமைக்கு விரைவில் விண்ணபிப்பார் என தெரிவித்தார். இந்த தம்பதியருக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதேவேளை, ஸ்னோவ்டன் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றவில்லை எனவும், ஆகவே கடந்த வாரம் ஜனாதிபதி புடின் அறிவித்த ஒரு பகுதி அணிதிரட்டலின் ஒரு பகுதியாக அவர் அழைக்கப்பட மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில், ரஷ்ய குடியுரிமை வழங்கப்படுவது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் முன்னாள் ஒப்பந்ததாரரான ஸ்னோவ்டன், அரசாங்க கண்காணிப்பு திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்களை கசியவிட்டதால், அமெரிக்காவில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார். அவருக்கு 2020ஆம் ஆண்டு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடாமல் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அப்போது கூறினார். பிற நாடுகளின் அரசு செயற்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து இரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தியதால், அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்னோவ்டனை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா, ரஷ்யாவிடம் பலமுறை கோரியது. ஆனாலும் அது மறுக்கப்பட்டது. ரஷ்யாவில் குறைந்த சுயவிபரத்தை வைத்து, சமூக ஊடகங்களில் ரஷ்ய அரசாங்கத்தின் கொள்கைகளை அவ்வப்போது விமர்சித்த எட்வர்ட் ஸ்னோவ்டன், நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளித்தால், அமெரிக்காவிற்குத் திரும்பத் தயாராக இருப்பதாக 2019ஆம் ஆண்டு கூறினார். https://athavannews.com/2022/1301509
    2 points
  7. . ஒரு கொத்துரொட்டிய நாலு பேர் புறிச்சு தின்பம் எண்டவரை பச்சதண்ணி எண்டு சொல்லாமல் பாரிவள்ளல் எண்டே சொல்லேலும்? 🤣
    2 points
  8. கொழும்பு 6, மயூராபதி ஆலயத்தில் இடம்பெற்ற இராணுவத்தின் 73ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு பூஜைகள் இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் இராணுவ தினத்தை (ஒக்டோபர் 10) முன்னிட்டு இந்து மத பாரம்பரியத்துக்கமைவான ஆசீர்வாத சிறப்பு பூஜைகள் கொழும்பு 6 இல் அமைந்துள்ள மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் இடம்பெற்ற போது… https://thinakkural.lk/article/211365
    2 points
  9. இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவிற்கு, சிங்களவனே... சும்மா, இருக்கிறான். சோனகன்.... அவனை முந்திக் கொண்டு, ஆசி வேண்டுகிறானாம். இதுகள் எல்லாம்... எங்கை லாபம் கிடைக்குதோ... அங்கே முதல் ஆட்களாக நிற்பார்கள். தமிழனுக்கு... சர்வதேசத்தின் மூலம் ஏதாவது நலன் கிடைக்கின்ற சாத்தியம் இருந்தால்... அங்கேயும்... பங்கு பிரிக்க நிற்பார்கள். ஆனால்... போராட மாட்டார்கள். தாம் தமிழர் இல்லை, முஸ்லீம் என்பார்கள். என்ன இனமோ...? இப்படி பிழைப்பதெல்லாம், ஒரு பிழைப்பா?
    2 points
  10. விசயபிரியா - ஐ.நா விற்கான தூதராக கைலாச நாட்டு அதிபரால் நியமனம். பல்வேறு நாட்டு தூதர்களுடன் கலந்துரையாடல்..👍..👌
    2 points
  11. கந்தையர் மாறி நடக்கும்..! பயணச் சீட்டுக்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் பெறப்படும் ரூபாய்கள் குறையும். அதனால் இவர்கள் ஊர் போய்ப் படம் காட்டுவதும் குறையும். ஏனெனில் அவர்களின் சேமிப்புக் குறையும்…!
    1 point
  12. உலகம் ஒரு பொருளாதார சரிவை எதிர்கொள்ள போகிறதோ என கருதுகிறேன். பெரும்பான்மையான மூலப்பொருள்கள் அமெரிக்க நாணயத்திலேயே விற்பனை செய்யப்படுவதால், அமெரிக்காவில் உள்ள பணவீக்கம் அனைத்து நாடுகளிலும் ஒரு புற்று நோய்போல பரவும். அமெரிக்கா தனது reserve currency எனும் நிலையிலிருந்து இறங்க விரும்பாது, ஏனென்றால் அமெரிக்காவின் மொத்த உற்பத்தியின் அளவை விட அதன் கடன் அளவு அதிகம். உதாரணமாக 1000 ரூபா வருமானம் வருபவர் 1100 செலவு செய்தால் (தொடர்ந்து) என்ன ஆகும்? அமெரிக்க செலவு அதிகமாக இருக்க காரணம் தொடர்ந்தும் தானே உலக சண்டியனாக இருக்க வேண்டும் என்பதற்கான செலவு, அதன் மூலம் ஏற்படும் பொருளாதார ஆதாயம் வருமானம் ஆகும் இவை ஒரு வட்ட பாதையில் பயணிக்கிறது. அமெரிக்காவில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வு பெரும்பான்மையான மக்களை வறுமைக்கோட்டினை நோக்கி தள்ளும் அதே நேரம் ஏற்படுகின்ற பணவீக்கம் பொது மக்களின் செலவினை மட்டுப்படுத்த பொருளாதார மந்தம் ஏற்படும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் நிலமை கட்டுக்கடங்காமல் செல்லும் போது பொருளாதார சரிவு ஏற்படும்.
    1 point
  13. பனிப்போர் நிலவிய காலம் போல 2009 இல் இருந்திருந்தால் எமது நியாயமான போராட்டம் நசுக்கப்பட்டிருக்காது, அந்த கால கட்டத்தில் ஒரு பலச்சமநிலை நிலவியது. நீங்கள் கூறுவது போல புலிகள் அற்ற சூழ்நிலையில் எமக்கு இந்தியாவினை தவிர்த்து தீர்வு கிடைக்குமா? என்பது சிந்திக்க்க வைக்கும் கேள்விதான்? திரும்பவும் எமது மக்கள் போராட முடியாத நிலையில், உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றம் இந்தியாவின் இந்த புதிய உலக ஒழுங்கில், நடுவுநிலை எனும் பம்மாத்து கொள்கையிலிருந்து ஏற்படும் மாற்றமே எமக்கான தீர்வினை கொண்டுவரும். இந்தியாவினை பொறுத்தவரை எமது உரிமை பிரச்சினை அவர்களது துருப்பு சீட்டு, இலங்கையில் தொடர்ச்சியாக பிரச்சினை ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கொள்கை. எரிகின்ற இலங்கையில்தான் இந்தியாவினது பாதுகாப்பு தங்கியுள்ளதாக இந்தியா கருதுகிறது. இலங்கை பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதற்கு இலங்கை போதுமான உதாரண மாதிரிகளை இந்தியாவிற்கு வரலாற்றில் காட்டியுள்ளது, இனியும் தாராளமாக காட்டும் அது இந்தியாவிற்கும் தெரியும். ஆனால் இலங்கையின் நிலை மோசமாக உள்ளதால் அடக்கி வாசிக்கின்றது. இலங்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை இல்லாவிட்டால் இலங்கை பொருளாதார மற்றும் ஒரு அரசியல் உறுதித்தன்மை உருவாகி விடும் அதனை தடுப்பதற்கு இலங்கையிலுள்ள அனைத்து சிறுபான்மையினரின் பிரச்சினையை உபயோகித்து கொள்கிறது. இந்தியாவின் கொள்கை வகுப்பில் மாற்றம் ஏற்படுமா? இல்லை இந்தியாவின் துருப்பிடித்த கொள்கை வகுப்பில் மாற்றம் ஏற்படாது. அப்படியானால் எப்படி எமக்கு தீர்வு கிடைக்கும்? நடுவுநிலைமை வகிப்பதாக கூறிக்கொண்டுள்ள இந்தியா; இரஸ்சிய, சீன சார்புநிலை எடுத்தாலோ அல்லது முழுக்க அமெரிக்க சார்பு நிலை எடுத்தால்தான் ஏதாவது மாற்றம் நிகழும் என கருதுகிறேன். கவலைப்பட வேண்டாம் இந்தியா தானாகப்போய் விரைவில் மாட்டிக்கொள்ளும், நீண்ட காலத்திற்கு இரட்டை தோணியில் பயணம் செய்யமுடியாது என கருதுகிறேன்.
    1 point
  14. இந்தியாவின் முதல் 'ஆன்டி வைரல்' புடவை - அசத்தும் தமிழ் நெசவாளர் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த இயற்கை நெசவாளர் சேகர் என்பவர் இந்தியாவின் முதல் ஆன்டி வைரல் புடவையை இயற்கை முறையில் நெய்து சாதனை படைத்திருக்கிறார். பிபிசி தமிழுக்காக சேகர் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இயற்கை பொருட்களை கொண்டு புடவைகள் மற்றும் துணிகளை நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வாழைநார், கற்றாலை நார், அன்னாசி நார், சணல், கோரைப்புல், வெட்டிவேர் போன்றவற்றில் இவர் நெய்யும் புடவைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இப்போது நாட்டிலேயே முதன்முறையாக உடலுக்கு குளிர்ச்சி கொடுப்பதோடு நோய் தொற்று ஏற்படா வண்ணம் ஆன்டி வைரல் புடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் சேகர். பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எப்படி உள்ளது? உடல் வெட்கத்திலிருந்து விடுதலை பற்றி பேசியதா நிகண்ட் புடவை? " Green Silver nano particle" கொண்டு முழுவதும் இயற்கை முறையில் நெய்யப்பட்ட ஆன்டி வைரல் புடவைகளை கடந்த மாதம் கோவா மாநில கவர்னர் அறிமுகப்படுத்தினார். இந்த புடவைகள் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. வேப்பிலை, மஞ்சள், துளசி போன்றவற்றை இதில் மூலப்பபொருட்களாக பயன்படுத்தி இருக்கிறோம். இது சரும பிரச்சனைகளையும் தடுக்கிறது. பெண்கள் பல பேர் இப்போதே இந்த புடவைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார் சேகர். கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை நெசவுத்தொழில் ஈடுபட்டு வருகிறார் சேகர். சுற்று சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் இயற்கை பொருட்களை கொண்டு புடவைகள் தயாரிப்பதால் இந்த புடவைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இவர் உற்பத்தி செய்த ஆடைகள் டெல்லியில் உள்ள ஐஐடிக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் வாழை நார், கற்றாலை நார், மூங்கில் என இயற்கை பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு தோல் வியாதிகளையும் கட்டுப்படுத்துகிறது என்று சோதனை முடிவுகள் வந்திருக்கிறன. இதற் காரணமாக மேலும் பல்வேறு புதுமைகளை புகுத்தி தேசிய அளவிலும் லிம்கா ரெக்கார்ட் சாதனை படைத்திருக்கிறார் சேகர். புடவைகள் மட்டுமல்லாது இந்தியாவிலேயே முதள்முறையாக வாழைநாரில் ஜீன்ஸ் பேண்ட் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார் சேகர். "இந்தியாவிலேயே முதன்முறையாக நாங்கள் வாழைநாரில் ஜீன்ஸ் பேண்ட் தயாரித்து சாதனை படைத்துளோம். இன்றைய நவநாகரீக பெண்களுக்கு சாதாரண ஜீன்ஸ் பேண்ட் அணிவது உடலில் சூட்டை அதிகப்படுத்துகிறது. அதனால் நாங்கள் இயற்கை முறையில் வாழை நாரில் ஜீன்ஸ தயாரித்திருக்கிறோம். இதை அணிவதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுகிறது. மேலும் கையாள்வதற்கும் இது எளிதாக இருக்கிறது," என்கிறார் சேகர். புடவைகள் , ஜீன்ஸ மட்டுமல்லாமல் வாழை நார் மற்றும் பனை நார்களை கொண்டு கைவினை பொருட்களையும் தயாரித்து வருகின்றனர் . இவரது தலைமையில் உள்ள குழுவினர் புடவைகளுக்கு மேட்சாக வளையல், கம்மல், செயின் போன்றவற்றை புடவையின் நிறத்திற்கு ஏற்ப தயாரித்து வருகின்றனர். "எங்களிடம் 50 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். வாழை நார், கற்றாலை நார்,மூங்கில் நார், அன்னாலி பழ நார் போன்றவற்றை பதப்படுத்தி அவற்றை தனித்தனியாக நார் போன்று எடுத்து அவற்றை முறையாக சேமித்து காயவைத்து, இயற்கை பொருட்களை கொண்டு சாயத்தை உருவாக்கி, அதை கைநெசவு செய்து புடவை தயாரித்து முடிக்கும் பணிகளில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்," என்கிறார் சேகர். மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் துறை, சணல் வாரியம் சார்பில், நாடு முழுவதும் நடந்த கண்காட்சியில் சேகர் பங்கேற்று இயற்கை முறை நெசவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். அசாமில் நடந்த வட கிழக்கு பிராந்திய கூட்டமைப்பு கண்காட்சியில் பங்கேற்றதோடு அசாம் நெசவாளர்களுக்கு ஒரு மாதம் இயற்கை நெசவு குறித்த பயிற்சியையும் வழங்கி உள்ளார் சேகர். https://www.bbc.com/tamil/india-63046150
    1 point
  15. இலங்கை மின் தடை: தரமற்ற கச்சா எண்ணெயால் தத்தளிக்கும் நாடு - மின்சார உற்பத்தி பாதிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PUBLIC UTILITIES COMMISSION படக்குறிப்பு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றதினால், மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின் தடை நீடிக்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். ''கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, பெற்றுக்கொள்ளப்படும் ஃபேர்னஸ் எண்ணெய்யை, வெஸ்கொஸ்ட் மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணெயிலுள்ள கந்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றமையினால், அதனூடாக கிடைக்கின்ற ஃபேர்னஸ் எண்ணெய்யை மின் உற்பத்திக்காக பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக நினைக்கின்றேன்" என ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் குற்றச்சாட்டிற்கு, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்துள்ளார். டிவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் பதிலளித்திருந்தார். விண்வெளியில் சிறுகோள் மீது நேருக்கு நேர் மோதிய நாசா விண்கலம் சூப்பர் கண்டம்: 25 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமி எப்படி இருக்கும்? பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எப்படி உள்ளது? இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் சட்ட ரீதியில் பதில் வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் செயலிழந்தமை மற்றும் எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான நிதி இல்லாமை ஆகிய காரணங்களினால் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் வசம் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டு நேரம் இன்று முதல் மேலும் அதிகரிப்பு பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கோப்புப்படம் இலங்கையின் மின்சார உற்பத்தியின் பிரதான மின் உற்பத்தி நிலையமாக கருதப்படும் நுரைசோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி இன்று செயலிழந்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது. மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்பிறப்பாக்கிகள் காணப்படுகின்ற நிலையில், இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக இலங்கையின் மின்சார தேவைக்கு 900 மெகாவோர்ட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது. எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி ஏற்கனவே செயலிழந்திருந்தது. உலக அளவில் நடக்கும் ஆபாச சாட் மோசடி: பின்னணியில் யார்? இரும்பை கையில் கொடுத்தால் வலிப்பு நின்று விடுமா? உலகின் மிக ரகசியமான அமெரிக்க உளவுத் துறை அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது? இவ்வாறான பின்னணியில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியும் இன்று செயலிழந்துள்ளது. இதன்படி, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி மாத்திரமே செயற்பட்டு வரக்கூடிய நிலையில், இலங்கையின் மின்சார தேவைக்கான 300 மெகா வோல்ட் மின்சாரத்தை மாத்திரமே நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக தற்போது வழங்க முடிகின்றது. இதனால், இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புதிய மின்வெட்டு நேர அட்டவணையை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இலங்கை பொருளாதார நெருக்கடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை பொருளாதார நெருக்கடி நாட்டில் போராட்டங்களைத் தூண்டியது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மின்வெட்டு, பொருட்களின் விலை உயர்வு, எரிபொருளுக்கான தட்டுப்பாடு என இலங்கை பல்வேறு பிரச்னைகளை கடந்த காலங்களில் எதிர்நோக்கியிருந்தது. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து, அவரை பதவி விலக கோரி, கடந்த மார்ச் மாதம் முதல் ஜுலை மாதம் வரையான மார் 4 மாத காலம் பாரிய போராட்டங்கள் இடம்பெற்றன. இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கையில் தொடர்ந்தும் இலத்திரனியல் முறையான க்யூ.ஆர் முறைப்படி எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், இந்த நிதித் தொகையானது இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாட்டை எட்டும் பட்சத்தில், இந்த நிதித் தொகை விரைவில் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இலங்கைக்கு சுமார் 50 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடன் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-63044089
    1 point
  16. எலிசபெத் கிழவியும்… ரணில் ஜனாதிபதி ஆகிறதை பார்த்த பிறகுதான், கண்ணை மூடுவேன் என்று, காத்திருந்து கண்ணை மூடியிருக்கு போலை…. 🤣
    1 point
  17. ரணில் ஐனாதிபதியாகி வருமட்டும் காத்திருந்திருப்பார்கள்???😂
    1 point
  18. அண்ணா இங்க நான் ஒரு உண்மையை சொல்லாவிட்டால் என் தலையே வெடித்து விடும் போலுள்ளது🤣 கொத்து ரொட்டி சாப்பிட அவர் உங்களைத்தான் கூப்பிட்டவர் நீங்க தான் 4 பேரை சேர்த்தனீங்க?😂
    1 point
  19. புலவர் அப்படியாகில் தமிழ்தேசிய முண்ணணியுடன் நேரடியாக யாராவது கதைத்து செய்தியை வெளிவிடுங்கோவன்.
    1 point
  20. எதிர்க் கட்சிக்காரர்…. கொடுப்புக்குள் சிரிப்பார்கள் என்ற, அச்சம்தான் காரணம். 😂
    1 point
  21. இல்லை அண்ணா அதை விட மிக அதிகம். மக்கள் கடனை நினைத்து தலையில் கைவைத்தது நியாபகத்தில் உண்டு. 🙂
    1 point
  22. IMF இன் அறிவுறுத்தலாக தான் இருக்க நிறைய வாய்ப்புண்டு. தங்கள் அறிவுறுத்தலை தொடரா விட்டால் கடன் இல்லை என சொல்லி இருப்பார்கள்.
    1 point
  23. மேட்டுக்குடி எப்போதும் சார்புநிலையையே எடுக்கும். அண்டங்காக்கைகள் அடிக்கட கரையாது, சாதா காக்கைகள்தான் எப்போதும் கரைந்தபடியே இருக்கும். 😀
    1 point
  24. கைலாச நாட்டு அதிபர்.... பயங்கர வேலை பார்க்கிறார். 🤣
    1 point
  25. என்னப்பா... எங்கடை ஆட்களும், ஆசி குடுத்து இருக்கினம். 😮 காலையில்.... சோனியை, அவசரப் பட்டு திட்டிப் போட்டமோ..... 🤣
    1 point
  26. சரியாக சொன்னீர்கள். 👍 ரஷ்யா ஒரு நிலை எடுக்கும் போது... அமெரிக்கா எதிர் நிலை எடுக்கும். அப்போ.... எமக்கான தீர்வுக்கும், சாத்தியம் உள்ளதை மறுப்பதற்கில்லை. 🙂 ஆனால்... எமது அரைகுறை அரசியல்வாதிகள், இந்தியாவை நம்பி... 13 என்று தொங்கிக் கொண்டு இருந்தால், எல்லாம் நாசமாய் போயிடும். 😎
    1 point
  27. இவர்களது வேலையே தமிழர் என்றயெரில் தமிழினவிடியலுக்கு எதிரான விசமப் பரப்புரைகள் செய்வதே. குகநாதனுக்கு இன்னும் நோ மாறவில்லை. அதனாலவர் மாறமாட்டார் என்று நினைக்கின்றேன்.
    1 point
  28. உண்மை. தமிழ்ச்சிறியவர்களது கூற்று நடைபெறப்போகிறது. அப்படி அவர்கள் யாருமே நினைக்கவில்லை. நினைத்திருந்தால் இப்படி இழுபறிப்பட்டிருக்கமாட்டார்கள்!
    1 point
  29. இல்லை உண்மையான நிலை வேறு இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பணம் இந்த பணமதிப்பு இழப்பின் போது கறுப்பு பணமாய் வேகமாக வந்து நிரப்பும் அதே போல் அரபிகளின் முதலீடுகள் பாதி விழுங்கப்படும் எப்படி என்றால் வங்கி வட்டி வீதம் கூடும்போது கட்டிடங்களின் விலை பாதியாகும் இங்கும் ஆங்கிலயேன் வெல்கிறான் .
    1 point
  30. துலைஞ்சுது போ என்று விட்டுவிட்டினம் போல கிடக்கு.. 😀 போட்டியும், பழிவாங்கும் உணர்வும்தான் இங்கே வெளிவந்தது.
    1 point
  31. உக்ரேன் யுத்தத்திற்கு பில்லியனில் உதவி, ஊரில் பிள்ளை பட்டினி. ஆங்கிலேய மனோபாவத்தின் கோரமுகம் இதுதான். ☹️
    1 point
  32. சரியாக சொன்னீர்கள். நானும் சின்னவயதிலை வெருட்டலுக்கு பொலிடோல் குடிச்சு சாகப்போறன் எண்டுட்டு பூவரசம் மரத்திலை ஏறி ஒளிச்சு மூண்டு மணித்தியால கணக்கிலை இருந்தனான். ஒருத்தரும் தேடவுமில்லை.....சத்தம் போடவுமில்லை 🙃
    1 point
  33. அப்படிப்பட்டவர்களை சம்பந்தன் ஐயா கேள்வி கேக்காமல் இணைத்துக்கொள்வார் அதிகாரமும் கொடுப்பார் முதன்மைப்படுத்துவார் கட்சியில் இப்படி வந்து தம்மை நிலைநாட்டிக்கொண்டு வெளியேறியோர் பலர். தமிழரை அழிக்கக்கூடிய கோடரிக்காம்புகளை சிங்களம் தேடிக்கண்டு பிடித்து களமிறக்கிவிடும் எங்கள்குள்ளேயே, அதன் கைக்கூலி சம்பந்தர்!
    1 point
  34. நீங்கள் கோழி பண்ணை...நவீன விவசாயம.....விதைகள் இயக்கம்.....நவீன உழவன். .....விவசாய வணிகம். .......பசுமை விவசாயம்.....உங்கள் கணணியில். தமிழில் எழுதி...கோழி பண்ணை அமைப்பது எப்படி என்று அறிய முடியும் இந்தியாவில் 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் பெற முடியும் அதற்கு மேலும் உண்டு நம்ம ராஐவன்னியனை கேட்டு அறியலாம் 😂 மேச்சல். முறையில் கோழி வளர்த்தால். செலவு குறைவு அல்லது செலவு இல்லை ஓரு வளவில்/காணியில். சுற்றி வர மதில். மேலே வலை அடிக்கவேண்டும். அல்லது வேலிசுற்றிவரவும். மேலே வலை அடிக்கலாம் கோழிகளை திறந்து மேய விட வேண்டும் காணியில் கீரைகள் விதைத்து விடலாம் சோழன்” உற்பத்தி செய்யலாம் இடைக்கிடை. தண்ணீர் குட்டைகள் அமைத்தால் இடம் குளிரமையாகயிருக்கும் மற்றும் அமோசாவும் கிடைக்கும் பழைய மரபட்டைகள ஐந்து ஆறு ஒன்றாக அடுக்கி விட்டால் நாலு ஐந்து நாளில் கரையன். உற்பத்தி ஆகும். கிடைக்கும் முட்டை நல்ல தரமானதாக இருக்கும் காணொளிகளை பார்த்து கருத்துகளை முன் வையுங்கள் 😂😛 அது குமாரசாமி அண்ணை சும்மா பகிடிக்கு எழுதினார் நீங்கள் பார்த்து சிரித்து சந்தோசமாக பொழுதுபோக்கினீர்கள். இல்லையா?.
    1 point
  35. கண்ணால் காண்பதெல்லாம், மெய்யல்ல. இந்தப் படத்தில், கருப்பாக் காணப்படுவதெல்லாம் உண்மையான ஒட்டகங்கள் அல்ல. அவைகள் ஒட்டகங்களின் நிழல்களே. படத்தை நன்றாக விரிவுபடுத்தி கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும். இந்த கருப்பு ஒட்டகங்களனைத்தும்... சிறிதாக வெள்ளை நிறத்தில் தோன்றும் உண்மையான ஒட்டகங்களின் நிழல்கள். இந்தப் படம் பாலைவனத்தில் சூரியன் மறையும் பொழுதில் ஒட்கங்களுக்கு நேர் மேலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, இந்தப் படம் அந்த ஆண்டின் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக நேசனல் ஜியோகிராபியால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Joseph Anthony Raj
    1 point
  36. இவைகள் அடிப்பட... சனம் வெறுத்து, டக்ளசுக்கு வாக்குகளை அள்ளிப் போட்டு விடுவார்கள். தங்களுடைய தலையிலேயே.. மண் அள்ளிப் போடுகிறார்கள்.
    1 point
  37. வண்டில், மாறி... ஏறிய, இயேசுநாதர். 😜 😁 😂 🤣
    1 point
  38. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நேரம் செய்யிற வேலையா இது?!
    1 point
  39. உப்பிடியான நட்டு களண்ட மரமண்டையளிட்டை பிள்ளையளை படிக்க விடக்கூடாது.😡
    1 point
  40. துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி August 16, 2022 தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது. அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார். அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார். அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் மற்றுமொரு பல்கலை கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது. https://globaltamilnews.net/2022/179750/
    0 points
  41. இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள் By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 10:26 AM இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (26) இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியன பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை சபையின் உறுப்பினர்கள் , இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடியர் அஷ்கர் முத்தலிப் ஆகியோரால் வரவேற்கப்பட்டார். பின்னர் இஸ்லாமிய மத மரபுகளுக்கமைய அலங்கரிக்கப்பட்ட புனித பகுதியில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. நாட்டின் நலன்களுக்காக இராணுவத்தின் சேவைகளைப் பாராட்டி இஸ்லாமிய மத பிரசங்கமான 'பயான்' மௌலவி இர்ஷாட் ஹில்மினால் நிகழ்த்தப்பட்டதுடன் இராணுவக் கொடிக்கு துவா பிரார்த்தனை செய்தல், மௌலவி ஏ.பி.எம். ரிஸ்வான கிராத் ஓதல் என்பன இடம்பெற்றன. அதே சந்தர்ப்பத்தில், கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபைத் தலைவர் இராணுவத் தளபதிக்கு சிறப்பு நினைவு பரிசை வழங்கினார். இதேபோல், பள்ளி வாசல் நிர்வாக சபை உறுப்பினர் புனித அல் குர்ஆனை இராணுவத் தளபதிக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக வழங்கினார். வழிபாடுகளின் நிறைவம்சமாக இராணுவத்தின் சகல உறுப்பினர்கள் சார்பிலும் பள்ளிவாசல் மேம்பாட்டுக்காக இராணுவத்தின் நன்கொடையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். https://www.virakesari.lk/article/136502
    0 points
  42. நொங்கு எடுப்பவை எல்லோரும்..நல்லா வெட்டி குட்டித்தூக்கமும்..போடுவினம்....அரசியல்,அரசியல் சம்பந்தமாகக் கதைத்தால் மட்டும்...புலம்பெயர் சமூகம்...என்று வேறுபாடுகாட்டி..ஒதுக்கிவைப்பினம்...அதுவும் தீட்டுபட்ட இனமாகவே எடுப்பினம்....புலம் பெயர் காசு இல்லாவிட்டால் ...கோயில் திருவிழாவும் இல்லை... மோட்டச்சயிக்கிளுமில்லை...அங்கிருந்துவரும் சிலரின் கருத்தை கேட்கும்போது விசர்தான் வரும்..அவையின் எண்ணம் இங்கு கக்கூசு எடுத்துத்தான் பிழைப்பு நடத்துகினம் என்று...அது ஒரு காலம்தான்...ஆனால் இனி வரும்காலம் ..மிகப்படி௹த ஒரு புலம் பெயர் தமிழர் பரம் பரை உலகிற்கே முன்னோடியகத் திகழும் என்பதை ...விரைவில் இலங்கைத் தமிழினம்..உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை....நெஞ்சில் உள்ள பொறமைத்தீயை கொட்டவென்றே..ஒருசில எழுத்து வெருளிகள் உள்ளார்கள்... இவையில் ..சிலர் ஒட்டு அரசியல் விரும்பிகளே...
    0 points
  43. எங்களின் படித்த சமூகம் ஏன் இப்படியான கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ?சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அல்லவா!!!
    0 points
  44. யாழ்.பல்கலை பேராசிரியர் பதவிக்காக... தீக்குளித்து, உயிர் மாய்க்க முயற்சி! யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது. அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார். அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார். அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் மற்றுமொரு பல்கலை கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது. https://athavannews.com/2022/1295003
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.