Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      76743


  2. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      8353


  3. Ahasthiyan

    Ahasthiyan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      2072


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43243


Popular Content

Showing content with the highest reputation on 10/02/22 in all areas

  1. நல்லூர்க் கந்தா... உன்னை நம்பி போட்டியில் குதிக்கின்றேன். 🥰 வெற்றி பெற்றால்... தீ மிதித்து, தூக்கு காவடி எடுக்கின்றேன்.. முருகா.... 🙏 # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI 2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE NED 3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI 4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM IRL 5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI 7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO IRL 8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI 9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI 10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM 11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI 12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM SCO முதல் சுற்று பிரிவு A: முதல் சுற்று பிரிவு A: 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NAM Select NAM NAM NED Select NED Select SRI Select SRI SRI UAE Select UAE Select 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) SRI <- Choose SRI or enter your preferred Team A1 SRI #A2 - ? (1 புள்ளிகள்) NAM <- Choose NAM or enter your preferred Team A2 NAM 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE முதல் சுற்று பிரிவு B: முதல் சுற்று பிரிவு B: 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IRL Select IRL IRL SCO Select SCO Select WI Select WI WI ZIM Select ZIM Select 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) WI <- Choose WI or enter your preferred Team B1 WI #B2 - ? (1 புள்ளிகள்) IRL <- Choose IRL or enter your preferred Team B2 IRL 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCO சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை. 19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS 20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG 21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI IRL SRI 22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAM BAN 24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA WI RSA 25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI AUS 26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG IRL ENG 27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL 28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA BAN 29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAM IND 30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK WI PAK 31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG IRL AFG 32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI SRI 34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN WI WI 35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAM PAK 36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA IND 37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS IRL AUS 38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI 39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL ENG 40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 WI NAM WI 41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND 42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA PAK 43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL IRL NZL 44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS 45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI SRI 46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAM RSA 47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK 48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND WI IND சுப்பர் 12 பிரிவு 1: சுப்பர் 12 சுற்று பிரிவு 1: 49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AFG Select AFG Select AUS Select AUS AUS ENG Select ENG Select NZL Select NZL Select SRI Select SRI SRI IRL Select IRL Select 50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி A1 - ? (3 புள்ளிகள்) SRI <- Choose AUS or enter your preferred Team A1 AUS #அணி A2 - ? (2 புள்ளிகள்) AUS <- Choose SRI or enter your preferred Team A2 SRI 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 12 பிரிவு 2: சுப்பர் 12 சுற்று பிரிவு 2: 52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) BAN Select BAN Select IND Select IND IND PAK Select PAK PAK RSA Select RSA Select WI Select WI Select NAM Select NAM Select 53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி B1 - ? (2 புள்ளிகள்) IND <- Choose IND or enter your preferred Team B1 IND #அணி B2 - ? (1 புள்ளிகள்) PAK <- Choose PAK or enter your preferred Team B2 PAK 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி, அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) SRI Semi Final 1 SRI 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட், அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) AUS Semi Final 2 AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண், அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SRI உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AUS 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UAE 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Rizwan 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Wanindu Hasaranga 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Josh Hazlewood 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Mohammad Rizwan 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Wanindu Hasaranga 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Josh Hazlewood 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Rizwan 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK வெற்றி மீது, வெற்றி வந்து என்னைச் சேரும்..... அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும். 😂
    4 points
  2. தாயே ஜக்கம்மா எனக்கும் சேர்த்து கண்ண திற.....😁
    4 points
  3. மரண வீட்டில் கூட நானா நீயான்னு சண்டை பிடிக்கிற ஒரு கீழ்த்தரமான இனம் தாம் நம் தமிழினம். இது காக்கா குருவியில் கூட இல்லாத மிகக் கீழ்த்தரம். அதிலும் ஒட்டுக்குழுக்களும் ஒற்றர்களும் எதிரிகளும் நிறைந்த மண்ணில் திலீபனை நினைவுகூற விடுவினமோ.. காந்திக்கு பூமாலை போடும் பொழுது ஒரு சண்டையும் இல்லை. ஆனால் திலீபன் நினைவிடத்தில் சண்டை. ஆக இந்தச் சண்டைகளின் பின்னால் யார் இருக்கினம்.. அவைட தேவை என்ன என்பதை இன்னும் புரியாவிட்டால்.. அவர்கள் சராசரி தமிழர்களே அல்ல. இதையும் தாண்டி திலீபன் நினைவுகூறப்பட்டான் என்பதே இப்போதைக்குப் போதுமென்றாகிறது.
    3 points
  4. உண்மை, தேசியத்தலைவரென்றவுடன் அவரது ஆயுதபோராட்டத்தை முதன்மைப்படுத்துவதிலிருந்தே ஊடகங்களாயினும், தமிழ் மக்களாயினும் எடுத்தாளுகிறார்கள். அவர் உண்ணாவிரதம் இருந்ததையோ, அசோகா விடுதியில் வைத்து அச்சுறுத்தப்பட்போதான அவரது எதிர்வினையையோ, பற்றுறுதியையோ எவரும் எடுத்தாள்வதில்லை. அவரது தொலைநோக்குச் சிந்தனைகளைக்கூட மேடைப்பேச்சுகளில் பெரியளவில் பேசுவதில்லை. யுத்துவெற்றிகளுக்கூடான அரசியல் நகர்வுகளை உரையாடல் வெளிக்குக் கொண்டுவருவதன் ஊடாகவே கருத்தியல் தளத்திலே தலைவரின் படைய மற்றும் அரசியல் பரிணாமங்களையும் அச்சமற்ற அவரது கொள்கை தவறாத பயணத்தையும் அடுத்த தலைமுறையைச் சென்றடைய வைக்க வேண்டும். நன்றி
    3 points
  5. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை: முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM எதிர் SRI 2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED எதிர் UAE 3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO எதிர் WI 4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL எதிர் ZIM 5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI எதிர் UAE 7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL எதிர் SCO 8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI எதிர் ZIM 9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED எதிர் SRI 10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM எதிர் UAE 11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL எதிர் WI 12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO எதிர் ZIM முதல் சுற்று பிரிவு A: 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) நமீபியா - NAM நெதர்லாந்து - NED சிறிலங்கா - SRI ஐக்கிய அரபு அமீரகம் - UAE 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) ned #A2 - ? (1 புள்ளிகள்) sri 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! uae முதல் சுற்று பிரிவு B: 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) அயர்லாந்து - IRL ஸ்கொட்லாந்து - SCO மேற்கிந்தியத் தீவுகள் - WI ஸிம்பாப்வே - ZIM 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) IRL #B2 - ? (1 புள்ளிகள்) sco 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! zim சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை: 19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS எதிர் NZL 20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG எதிர் ENG 21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். A1 --- ned, எதிர் B2 IRL . 22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று BAN எதிர் A2 ned 24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று RSA எதிர் B1 IRL 25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AUS எதிர் A1 sri 26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று ENG எதிர் B2 sco 27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZL 28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN எதிர் RSA 29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று IND எதிர் A2 ned 30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று PAK எதிர் B1 sco 31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AFG எதிர் B2 sri 32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று NZL எதிர் A1 sri 34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று BAN எதிர் B1 IRL 35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று PAK எதிர் A2 ned 36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND எதிர் RSA 37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AUS எதிர் B2 IRL 38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AFG எதிர் A1 sri 39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG எதிர் NZL 40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். B1 ned எதிர் A2 sco 41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN எதிர் IND 42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK எதிர் RSA 43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று NZL எதிர் B2 44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS எதிர் AFG 45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று ENG எதிர் A1 46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று RSA எதிர் A2 sri 47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN எதிர் PAK 48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று IND எதிர் B1 IRL சுப்பர் 12 பிரிவு 1: 49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ஆப்கானிஸ்தான் - AFG அவுஸ்திரேலியா - AUS இங்கிலாந்து - ENG நியூஸிலாந்து - NZL A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி ned B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி sco 50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி A1 - ? (3 புள்ளிகள்) ned #அணி A2 - ? (2 புள்ளிகள்)eng 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! zim சுப்பர் 12 பிரிவு 2: 52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) பங்களாதேஷ் - BAN இந்தியா - IND பாகிஸ்தான் - PAK தென்னாபிரிக்கா - RSA A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி sri B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி sco 53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி B1 - ? (2 புள்ளிகள்) ind #அணி B2 - ? (1 புள்ளிகள்) sri 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! wi அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ned அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி, அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) eng அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட், அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) இறுதிப் போட்டி: ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண், அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி ned உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ind 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) zim 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) virat kohli . 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ind 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) r. ashwin 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ind 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Quinton de kock. 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RSA 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) r. ashwin. 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ind 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) jos buttler . 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) eng போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி சனி 15 அக்டோபர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.
    3 points
  6. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
    2 points
  7. @பையன்26 இன் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வெற்றிபெற வாழ்த்துக்கள்! @முதல்வன் இன் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! @suvy ஐயாவின் பதில்களில் பல இடங்களில் பதில்கள் பொருந்திவரவில்லை.😕 எனினும் சிலவற்றில் திருத்தம் கட்டாயம் வேண்டும். அவற்றை மட்டும் இன்று இரவு தரவுள்ளேன்.
    2 points
  8. உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பதற்கு, தமிழர்களில் ஒரு பிரதான பிரிவினரை இன்னொரு சட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தன்பக்கம் இழுத்துக்கொண்டார். அதுதான் இந்திய - பாக்கிஸ்த்தான் பிரஜைகளுக்கான பிரஜாவுரிமைச் சட்டம். இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொள்வதற்கான தகமைகள் குறித்து இச்சட்டம் விவரித்திருந்தது. ஜி ஜி பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுக்கு தொழிற்துரை மற்றும் மீன்வள அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் அவரும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார். அவருடன் சேர்ந்து இன்னும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைந்துகொண்டனர். அரசுடன் இணைந்து புதிதாகக் கொண்டுவரப்பட்ட இந்திய - பாக்கிஸ்த்தானிய பிரஜைகளும், இலங்கையில் வதிபவர்களுக்குமான இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் வக்களித்ததோடு, இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின்மூலம் தாம் இழந்த பிரஜாவுரிமையினை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இவர்கள் வாதாடினர். ஆனால், புதிய சட்டம் மிகக் கடுமையான நிபந்தனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திருமணம் முடித்த ஒரு விண்ணப்பதாரி 1939 தை 1 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத விண்ணப்பதாரியொருவர் 1936, தை 1 ஆம் திகதியிலிருந்து 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறியது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில் வசிப்பதற்கு இவர்கள் தேவையானளவு பணத்தையோ வளங்களையோ கொண்டிருத்தல் அவசியம் என்றும் இது கூறியது. தொடர்ச்சியாக இலங்கையில் வதிதல் எனும் சொற்பதத்தின் மூலம், தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நாட்களுக்கு பயணம் செய்த இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின் மூலம் பிரஜாவுரிமையினை பெறமுடியாதவர்களாக ஆக்கப்பட்டனர். இச்சட்டத்தினையடுத்து மொத்த இந்தியத் தமிழச் சமூகமுமே, கிட்டத்தட்ட 975,000 தமிழர்கள் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்கள் அனைவரையும் இந்தியா மீள அழைத்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை பிடிவாதம் பிடித்தது. ஆனால், இந்தியா இந்த வேண்டுகோளினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துகொண்டு வந்தது. பின்னர் இலங்கையின் பிரதமராக வந்த சிறிமா இந்தியாவின் பிரதமர்களான சாஸ்த்திரியுடன் 1964 இலும், இந்திரா காந்தியுடன் 1974 இலும் இரு வேறு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டதன் மூலம் 525,000 இந்தியத் தமிழர்களை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். மீதமாக இருந்தவர்களில் சுமார் 300,000 இந்தியத் தமிழர்களுக்கு வேண்டாவெறுப்பாக இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கியது. இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மீதமாகவிருந்த 150,000 தமிழர்களை சரிசமமாக இலங்கையும் இந்தியாவும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் முடிவிற்கு நாடுகளும் இணங்கிக்கொண்டன. இந்தியா சுமார் 600,000 இந்தியத் தமிழர்கள் மீளவும் இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பிக்க முடியும் என்று அழைத்தபோதும்கூட, 504,000 இந்தியத் தமிழர்கள் மட்டுமே இந்த அழைப்பினை ஏற்று மீள இந்தியா திரும்ப விண்ணப்பித்தனர். ஆனால், 1983 ஆண்டு யூலைக் கலவரத்தினால் இந்தியா திரும்பும் நோக்கத்துடன் இருந்த 84,000 தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கையிலேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ள முடியாமலும், இந்தியாவுக்கு மீளத் திரும்ப முடியாமலும் இலங்கையில் வசித்துவந்த இந்தியத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொடுப்பதில் தொண்டைமான் வெற்றிகண்டார். இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. இதன்மூலம் பிரஜாவுரிமைப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டதோடு, இந்தியத் தமிழர்களில் கிட்டத்தட்ட பாதியளவுக்கும் சற்று அதிமானவர்கள் இலங்கையின் பிரஜைகளாகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் இன்று முக்கிய சக்தியாக மலையகத்தில் உருவெடுத்திருப்பதோடு தமது அடையாளத்தினைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான அரசியல்க் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நிலைக்கும் உயரும் வாய்ப்பிருக்கின்றது.
    2 points
  9. யாரும்... பெற்றோலை, படுக்கை அறையில் சேமித்து வைப்பார்களா? பெற்றோல்... சாதாரணமாகவே ஆவியாகக் கூடிய திரவம். அதுகும் வெக்கை நாட்டில், சிறிய அறையில்.... அது ஆவியாகி, அறை எங்கும் பரந்திருக்கும்.... பக்கென்று நெருப்பு பிடிக்க ஒரு சிறிய பொறி போதும். எமது மக்களுக்கு, விழிப்புணர்வு... மிகக் குறைவு.
    2 points
  10. கால்பந்து விளையாட்டு வரலாற்றிலேயே… மிக அதிகமாக 130 மக்கள் இந்த விளையாட்டில் தான் இறந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். விளையாட்டு என்பதற்க்கே… அர்த்தம், இல்லாமல் செய்து விட்டார்கள்.
    2 points
  11. எழுதிக்கொண்டிருக்கிறன். இன்டைக்கு ராவைக்கு அல்லது நாளைக்கு முடிச்சிடுவன்.
    2 points
  12. போறதுகள் தமிழ் தெரியாத தமிழர்களாய் இருக்கும்....... நான் பார்த்த அளவில் இங்கிலாந்தில் அகதியாக வந்த தமிழர்கள் தான் அதிகமாக தமிழ் கதைக்கிறார்கள். உயர் படிப்பிற்காக வந்த தமிழர்களும் அவர்கள் குடும்பங்களும் ஒரே ஆங்கில மயம்தான். சில வேளை எனது கணிப்பு தவறாக இருக்கலாம். 🤣
    1 point
  13. அதனை இணைக்க வேண்டாம் என்று கூறவில்லைய. BBC யை மட்டும் இணைப்பதோடு நிற்க வேண்டாம் என்றுதான் கூறினேன். 😉
    1 point
  14. நீண்ட காலமாக யாழில் பிபிசி இன் இணைப்புகள் எதையும் காணமுடிவதில்லை. ஏராளன் மாத்திரமே எந்த நாளும் இணைத்து உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
    1 point
  15. அஹஸ்தியனின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. யாழ்களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் 😄
    1 point
  16. 5G க்கும் நரேந்திர மோடிக்கும் என்ன தொடர்? BBC தமிழ் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாகி வெகு நாட்களாகிறது. ஏராளன் BBC க்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல வேறு ஊடகங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கலாமே?
    1 point
  17. தியாக தீபம் திலீபத்தின் நினைவுகளின் தொகுப்பை இந்தத் திரிக்கப் பொருத்தமாக இருப்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
    1 point
  18. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. வாழ்த்தியர்களுக்கும் நன்றி. 50. இற்கு மாற்றி விடுகிறேன் #1. SRI #2. ENG
    1 point
  19. என‌து போட்டி ப‌திவுக்குள் சென்று ச‌ரி செய்து இருக்கிறேன் மூன்று பிழைக‌ளுக்கும் எத‌ற்க்கும் ஒருக்கா எட்டி பாருங்க..............
    1 point
  20. உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அஜினோமோட்டோ எனப்படும் மசாலாவில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பல்வேறு மோசமான பக்கவிளைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்றை ஆதரிக்கக்கூடிய ஆதாரம் உள்ளதா? சீன உணவைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் தலைவலி, குமட்டல், விசித்திரமான உணர்விழத்தல் போன்ற 'சிலருக்கு ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பு', 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்பட்டது. எம்எஸ்ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் என்றழைக்கப்படும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் தான் அதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. அது தான் இன்று உலகம் முழுக்க 'அஜினோமோட்டோ' என்று அழைக்கப்படுகிறது. 1968ஆம் ஆண்டில், டாக்டர் ராபர்ட் ஹோ மான் குவாக் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் என்ற ஆய்விதழுக்கு ஒரு கடிதம் எழுதினார். அமெரிக்காவில் உள்ள சீன உணவகங்களில் சாப்பிடும் போதெல்லாம் அவர் அனுபவித்த அறிகுறிகளுக்கு சாத்தியமான காரணங்களைப் பற்றி அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய பிறகு மோனோசோடியம் குளுட்டமேட் புகழ் பெற்றது. குறிப்பாக, அவர் தனது கழுத்தின் பின்புறத்தில் ஏற்பட்ட உணர்விழத்தல் குறித்து விவரித்தார். அந்த உணர்விழத்தல் அவரது கைகள், முதுகு ஆகிய பகுதிகளுக்குப் பரவியதோடு, உடலில் பலவீனம், இதயத்துடிப்பு அதிகரித்த்ல் ஆகியவற்றையும் அனுபவித்துள்ளார். இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிறந்த கதை தெரியுமா? மீன், பாதாம், காரட் சாப்பிடுவது நமது உடலுக்கு ஆரோக்கியமானதா? சிக்கனை தோலுடன் சாப்பிட்டால் என்னவாகும்? குவாக், 'சோயா சாஸ்' அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஊகித்தார். ஆனால், அதை வீட்டு சமையலில் இத்தகைய பாதிப்புகள் இன்றிப் பயன்படுத்தியதால் நிராகரித்தார். வணிகரீதியிலான உணவகங்களில் சீன சமையல் ஒயின் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு, சீன உணவகங்களில் பொதுவான சுவையூட்டலுக்காகப் பயன்படுத்தப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் கொண்ட கிளாங்கர் வந்தது. அவரது கூற்று வைரலாகப் பரவியது. ஏராளமான அறிவியல் ஆய்வுகள், எம்எஸ்ஜி பற்றிய 'உண்மையை' அம்பலப்படுத்தும் நூல்கள், எம்எஸ்ஜி எதிர்ப்பு சமையல் நூல்கள், சீன உணவகங்கள் எம்எஸ்ஜி பயன்படுத்தவில்லை என்று விளம்பரப்படுத்தும்ன் அளவுக்கு அவரது கூற்று வைரலானது. மோனோசோடியம் குளுட்டமேட் என்பது குளுடாமிக் அமிலத்தின் சோடியம் உப்பு. டோக்கியோ பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் கிகுனே இகேடா 1908இல் கண்டுபிடித்ததைப் போல், எம்எஸ்ஜி குளுடாமிக் அமிலத்தின் மிக நிலையான உப்பு. மேலும் இது பலரால் விரும்பப்படும் உமாமி சுவையை வழங்குகிறது. 'உமாமி' - சுவை என்று மொழிபெயர்க்கப்படும் இது மாமிச சுவையுடன் தொடர்புடையது. இகேடா தன் கண்டுபிடிப்பின் மூலம், நான்கு அடிப்படை சுவைகளான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவற்றை விட சுவையில் அதிகமாக விஷயங்கள் உள்ளதாக நம்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES குளுட்டமேட் என்பது எம்எஸ்ஜியில் உள்ள மந்திரப் பொருளைப் போன்றது. இதுவொரு பொதுவான அமினோ அமிலம் தான். இது தக்காளி, பார்மேசன் சீஸ், உலர்ந்த காளான், சோயா சாஸ், பல பழங்கள், காய்கறிகள், தாய்ப்பால் ஆகிய உணவுகளில் இயற்கையாகவே நிகழ்கிறது. குவாக்கின் கடிதத்திற்குப் பிறகு, பல்வேறு உயிரினங்களில் அதிகளவு மோனோசோடியம் குளுட்டமேட் செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்வது தொடர்ந்து நடந்தன. ஜப்பானிய உணவுகளில் காணப்படும் 'டாஷி ஸ்டாக்' என்ற டேபிள் சாஸை தயாரிக்க இகேடாவும் அவரது மனைவியும், மற்ற ஜப்பானிய சமையல்காரர்கள் பயன்படுத்தும் உலர்ந்த கொம்பு கடற்பாசியில் இருந்து அதைத் தனியாகப் பிரித்தெடுத்தனர். சமையல் உப்பில் உள்ள இரண்டு தனிமங்களில் ஒன்றான சோடியத்தைச் சேர்ப்பதன் மூலம், குளுட்டமேட்டை பொடியாக்கி உணவில் சேர்க்கலாம். இதனால் நமக்கு மோனோசோடியம் குளுட்டமேட் கிடைக்கிறது. இது கிகுனே இகேடாவை மிகுந்த பணக்காரர் ஆக்கியது. அவரது எம்எஸ்ஜி அடிப்படையில் உருவான அஜினோமோட்டோ இப்போது உலகம் முழுவதுமுள்ள பல உணவுகளில் காணப்படுகிறது. குவாக்கின் கடிதத்திற்குப் பிறகு, விலங்குகள் மட்டுமின்றி மனிதர்கள் இடையிலேயும் அதிகளவு மோனோசோடியம் குளுட்டமேட் வாய்வழியாகவும் நரம்பு வழியாகவும் கொடுக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில், இந்த விஷயத்தில் குவாக் கூறிய கூற்றில் உண்மை இருக்கலாம் என்பது போலத் தோன்றியது. ஆனால், வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் டபிள்யூ ஒல்னே புதிதாகப் பிறந்த எலிகளின் தோலுக்குக் கீழே அதிகளவு மோனோசோடியம் குளுட்டமேட்டை செலுத்துவது மூளையில் இறந்த திசுக்களை மீட்டுருவாக்க வழிவகுத்ததைக் கண்டறிந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த எலிகள் வயது முதிர்ந்தபோது அவை வளர்ச்சி குன்றியதாகவும் பருமனாகவும் சிலநேரங்களில் மலட்டுத்தன்மையுடனும் இருந்தன. ஒல்னே ரீசஸ் குரங்கு குட்டிகளில் தனது ஆய்வை மீண்டும் மீண்டும் செய்து, அவற்றுக்கு எம்எஸ்ஜியை வாய்வழியாகக் கொடுத்து ஆய்வு செய்தபோதும் அதே முடிவுகள் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், மற்ற ஆய்வாளர்கள் குரங்குகள் மீது மேற்கொண்ட மற்ற 19 ஆய்வுகளில் இதே முடிவுகள் கிடைக்கவில்லை. மனித ஆய்வுகளிலும் இதே நிலை நீடித்தது. ஓர் ஆய்வில், 71 ஆரோக்கியமான நபர்களுக்கு காப்ஸ்யூல் வடிவில் எம்எஸ்ஜியும் அதைப் போல் தெரியக்கூடிய ஆனால் எந்த எதிர்வினையும் அளிக்காத போலி ஒன்றையும் அளித்து சிகிச்சை அளித்தன. ஆனால், உண்மையான எம்எஸ்ஜியை எடுத்தவர்கள், போலியை எடுத்தவர்கள் என்று வேறுபாடின்றி ஏறக்குறைய இரண்டு தரப்பிலும் ஒரே விகிதத்தில் 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' அறிகுறிகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். சிக்கலை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில், 1995ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக்கான அமைப்பு, அமெரிக்கன் சொசைட்டிஸ் ஃபார் ஃபெடரேஷன் ஆஃப் எக்ஸ்பெரிமென்டல் பயாலஜியிடம், அதற்குக் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து, எம்எஸ்ஜி சொல்லப்படுவதைப் போல் உண்மையில் உணவுக்கு ஆபத்தானதா என்பதைக் கண்டறியப் பணித்தது. காஃபி, மிளகாய் மூலம் பசி உணர்வைத் தடுக்க முடியுமா? இந்த 5 உணவுப்பொருட்கள் உயிரைக் கொல்லவும் செய்யும் துளசி செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா? அப்படி இருந்தாலும் அது நல்லதா? முதலில் வல்லுநர் குழு, 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' என்ற பதத்தை "இழிவானது, அறிகுறிகளின் அளவு மற்றும் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை" என்று கூறி நிராகரித்தது. அதற்குப் பதிலாக 'எம்எஸ்ஜி நோய்க்குறி பிரச்னை' என்ற பதத்தை இதன் நுகர்வுடன் தொடர்புடைய பல மாறுபட்ட அறிகுறிகுகளை விவரிக்கத் தேர்ந்தெடுத்தது. ஆனால், பொது மக்களில் ஆரோக்கியமான நபர்களில் ஒரு சிறு கூட்டம் அதிகளவு எம்எஸ்ஜியை எடுத்துக் கொள்வதாப் பாதிக்கப்படுவதற்கான அறிவியல் சான்றுகள் இருப்பதாக அவர்கல் முடிவுக்கு வந்தனர். ஆனால், இந்த எதிர்வினைகள், 3 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு எம்எஸ்ஜி உணவில்லாமல் தண்ணீர் கொடுக்கப்பட்ட ஆய்வுகளில் காணப்பட்டன. உணவு மற்றும் மருந்து அமைப்பின்படி, பெரும்பாலான மக்கள் தங்கள் உணவில் ஒரு நாளைக்கு 0.55 கிராம் எம்எஸ்ஜியை சேர்த்துக் கொள்கிறார்கள். ஆகவே, 3 கிராம் அல்லது அதற்கும் மேல் சேர்த்துக் கொள்வது நடைமுறையில் சாத்தியமில்லை. 2000ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, எம்எஸ்ஜி குறித்து மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள ஆரோக்கியமான 130 பேரிடம் ஆய்வு செய்ய முயன்றது. இந்த மக்களுக்கு முதலில் உணவில்லாமல் எம்எஸ்ஜி மட்டும் ஒருதரப்புக்கும் மற்றொரு தரப்புக்கு அதன் போலித் தோற்றம் கொண்ட பாதிப்பற்ற பொருளும் கொடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES பத்து அறிகுறிகளின் பட்டியலில் எவருக்கேனும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அறிகுறிகளின் அளவு ஏற்பட்டால், அவர்களின் எதிர்வினை சீரானதா என்பதைப் பார்க்க அதே அளவு டோஸ் மூலம் மீண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றொரு சுற்று பரிசோதனைகளுக்குப் பிறகு, 130 பேரில் இரண்டு பேருக்கு மட்டுமே எம்எஸ்ஜியின் எதிர்வினைகள் தெரிந்தன. ஆனால், அவர்களுக்கு உணவில் எம்எஸ்ஜி கலந்து வழங்கி பரிசோதிக்கப்பட்டபோது, அவர்களின் எதிர்வினைகள் வேறுபட்டன. எம்எஸ்ஜி மீதான சர்ச்சை மீது இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. குளுட்டமேட்டில் நச்சுத்தன்மையின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் குறைவாக உள்ளது. ஓர் எலி குளுட்டமேட் நச்சுத்தன்மையால் உயிரிழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்படுவதற்கு, அது அதன் ஒரு கிலோ உடல் எடைக்கு 15-18 கிராம் அளவில் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அறிவியலின் முன்பாக இந்த விஷயத்தில் இதுதான் முற்றிலும் உண்மை என்று எதுவும் வைக்கப்படவில்லை என்றாலும், டாக்டர் ஜான் ஓல்னே தனது ஆரம்பக்காலத்தில் உயிரினங்கள் மீது நடத்திய பரிசோதனைகளுக்குப் பிறகு எம்எஸ்ஜி பயன்பாட்டை இறுக்கமான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த பிரசாரம் செய்வதில் தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார். இப்போது உணவு மற்றும் மருந்துகளுக்கான அமைப்பு, எம்எஸ்ஜியை உணவுகளில் சேர்ப்பது 'பொதுவாகப் பாதுகாப்பானதாக அங்கீகரிக்கப்பட்டது; என்ற வகைப்பாட்டில் சேர்த்துள்ளது. சீன உணவு வகைகளின் அதீத விருப்பம் கொண்ட உணவுப் பிரியர்களுக்கு, தங்கள் வார இறுதி நாட்களில் சோயா சாஸ் கலந்த சீன உணவுகளை ஆசையோடு தேடிச் சாப்பிடுவோருக்கு இது உறுதியளிக்கிறது. https://www.bbc.com/tamil/india-62972047
    1 point
  21. இளவாலையில் தனித்திருந்த பெண்ணை போதை வஸ்து பாவித்துவிட்டு களவெடுக்கப்போன இடத்தில் அவளைக் கண்டதும் உணர்ச்சி பொங்கிவிட்டது அதுதான் கெடுத்துட்டன் என்று சொன்ன ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஒருத்தன் இப்பவும் வெளியில திரிகிறான் அவன் இன்னமும் துருந்தியபாடில்லை கஞ்சா கடத்தல் கசிப்புக்காய்ச்சுதல் வீடு புகுந்து கொள்ளை அடித்தல் என அவனது கதை தொடருகுது அவனையும் இப்படி குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகளையும் மல்லாகத்தில இருக்கிற ஒரு பெண் வக்கீல் அவரது பெயர் கீர்த்தனா என்பவர்தான் பிணை எடுத்துவிடுகிறா இப்போ அவருக்கு ஜூனியராக ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஒரு பெட்ட சேர்ந்திருக்கிறா **** ******
    1 point
  22. இது ஜாலியான திரிதானே இதுக்கெல்லாம் மன்னிப்பு ரொம்ப ஓவர் சிறியர்.....! 😢
    1 point
  23. மூன்டு நாலு பிள்ளைகள் பெற்ற குடும்பத்தை கீழ்த்தனமாக பார்ப்பதை முதலில் எங்கடையாக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மட்டுமன்றி, அதை ஊக்கப்படுத்த வேண்டும். அப்பதான் எமது சனத் தொகை உயரும்.
    1 point
  24. சுவி அண்ணா போட்டி ப‌தில‌ அளித்து விட்டார் குசா தாத்தா க‌டின‌மாய் யோசிக்கிறார் எந்த‌ அணிய‌ தெரிவு செய்வ‌தென்று நான் சொன்னேன் ஏதும் ட‌வுட் இருந்தா என்னை கேட்க்க‌ சொல்லி லொல் 😂😄🤣 ச‌ரி ச‌ரி விடுங்கோ அவ‌ர் க‌ண்ணில் உங்க‌ளின் ப‌திவு ப‌ட‌ வில்லை 😄😂🤣
    1 point
  25. சென்ற முறை கலந்து கொண்டவர்களில்… இன்னும் கலந்து கொள்ளாமல் இருப்போர்… @suvy, @குமாரசாமி, @சுவைப்பிரியன், @nunavilan, @Eppothum Thamizhan, @வாத்தியார், @வாதவூரான், @கிருபன், @நந்தன், @கறுப்பி, @கல்யாணி ஆகியோரை… அழைக்கின்றோம்.
    1 point
  26. @Maruthankerny ம‌ருத‌ங்கேனி அண்ணாவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ அன்போடு அழைக்கிறேன் க‌ல‌ந்து கொள்ளுங்கோ அண்ணா , என்ரைய கொப்பி அடிச்சு போடாதைங்கோ பிற‌க்கு ஒட்டி பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் மாதிரி கீழ‌ இருந்து தொங்கிட்டு இருக்க‌னும் இர‌ண்டு பேரும் லொல் 😄😂🤣
    1 point
  27. பையா…. அது, பச்சை இல்லை. பட்சி. 😂 பெரியப்பா… காலை 7 மணிக்கே, வந்திட்டு போயிட்டார். 😁
    1 point
  28. தமிழ் ஈழம் கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம்....முக்கியமாக சனத்தொகையை வளர்ப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் போராடமாலேயே. தமிழ் ஈழம் கிடைக்கலாம் 😂
    1 point
  29. தமிழ் சிறி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    1 point
  30. அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் எனது இரண்டாவது சரிதை சமஷ்ட்டிக் கட்சியின் ஸ்த்தாபகரும், தலைவருமான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தினுடையது. அவரது நூறாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு தினகரன் வாரமஞ்சரியில் தொடராக இதனை எழுதிவந்தேன். இலங்கைத் தமிழரின் மிக முக்கியமான அரசியல்த் தலைவராகவிருந்த செல்வாவின் நூறாவது பிறந்தநாள் நினைவினை அவருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையுடன் அனுட்டிக்க அவரது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி முயலவில்லை என்பது வேதனை. நான் எழுதிவந்த இத்தொடரில் தமிழர்களின் அவலங்களான அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள், அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளமை, தமிழ் மொழியினை திட்டமிட்டு புறக்கணித்தமை ஆகியவை தொடர்பாகவும் எழுதி வந்தேன். அத்துடன், தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற ஜனநாயக வழிப் போராட்டங்கள் பற்றியும், அவை சிங்களத் தலைவர்களாலும், சிங்களக் குண்டர்களாலும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டு நசுக்கப்பட்டன என்பது குறித்தும் விலாவாரியாகத் தேடி எழுதிவந்தேன். மேலும் தந்தை செல்வாவின் விட்டுக்கொடுக்கா மனோநிலைபற்றியும், இரு சிங்களப் பிரதமர்களோடு அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகள் பற்றியும், அவ்வுடன்படிக்கைககளின் தோல்விபற்றியும், சிங்கள அரசுகளுடனான அவரது ஒத்துப்போதல்கள் பற்றியும் எழுதினேன். 1957 இலிருந்து 1968 வரையான 11 வருட காலப்பகுதியில் இலங்கை அரசுகளுடன் ஒத்துப்போதல் எனும் தந்தை செல்வாவின் பரீட்சாத்த நடவடிக்கையின் தோல்வி அவரை மிகக் கடுமையான அதிருப்திக்கும், விரக்திக்கும் உள்ளாகியதுடன், தமிழர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழ் ஈழம் எனும் தனியான நாட்டினை இலங்கையிலிருந்து பிரித்தெடுப்பதற்கான நடவடிக்கையின் முதற்படியான 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை செய்யுமளவிற்கு தள்ளிச் சென்றது.
    1 point
  31. பிரஜாவுரிமைப் பிரச்சினை தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்கில் சிங்களத் தலைவர்களால் செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான வஞ்சனை இதுவென்றால் அது மிகையில்லை. தமிழர்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரே வஞ்சனையுடனேயே இந்தச் சட்டத்தினைச் சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களான டி எஸ் சேனநாயக்காவும், ஒலிவர் குணத்திலக்கவும் சோல்பரி கமிஷனை சூட்சுமத்துடன் வழிநடத்தியதன் மூலம், பிரஜாவுரிமை பற்றிய விவாதங்களை நடத்தவும், அதுதொடர்பான முடிவினை எடுக்கவும் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றமே சிறந்தது எனும் வாதத்தினை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டனர். சுதந்திரம் கிடைத்து சரியாக 6 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் உதவியுடன் புதிய சட்டமான இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினைக் கொண்டுவந்து சுமார் பத்து லட்சம் தமிழர்களின் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்தனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மற்றும் இலங்கையின் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் என்கிற அடிப்படைகளில் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமது கைங்கரியத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஆகியவற்றில் பூர்வீகமாக பிரஜாவுரிமைக்குத் தகுதியானவர்கள் யாரென்று விபரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளான 1948, கார்த்திகை 15 இற்கு முன்னர் இலங்கையில் பிறந்த ஒருவரின் தந்தையோ, அல்லது பாட்டனாரோ அல்லது பாட்டனாரின் தந்தையோ இலங்கையில் பிறந்திருப்பின் அந்த நபர் இலங்கையின் பிரஜை ஆவார் என்று கூறுகிறது. அதேவேளை பிரிவு 5 இன்படி, ஒருவர் 1948, கார்த்திகை 15 இற்குப் பின்னர் இலங்கையில் பிறந்திருப்பின், அவரது தந்தையார் இலங்கைன் பிரஜையாக இருந்தால் மாத்திரமே அந்த நபர் இலங்கையின் பிரஜையாகக் கருதப்படுவார் என்று கூறியது. இதன்படி, பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜாவுரிமையின்படி சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும் இலங்கையின் பிரஜைகளாக வரையறுக்கப்பட இந்தியத் தமிழர்களும், இந்திய முஸ்லீம்களும் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம் சுமார் 90 வீதமான மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், நாடற்றவர்கள் எனும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இச்சட்டத்தின் பிரிவு 11 இலிருந்து 17 வரையானவற்றில், பிரஜைகளாகப் பதியப்பட்டவர்களின் பிரஜாவுரிமை என்பது ஒருவர் பூரண வயதினை அடைந்தவராகவும், புத்தி சாதுரியமானவராகவும், இலங்கையில் வதிபவராகவும், தொடர்ந்தும் இலங்கையிலேயே வதியும் விருப்பினைக் கொண்டவராகவும், அவரது தாயார் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்யும் தகுதியினைப் பெற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றது. இதுகூட, ஒருவரின் தாயார் தனது பிள்ளை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் திகதியிலிருந்து குறைந்தது 7 வருடங்களுக்கு முன்னான காலத்தில் இலங்கையில் வசித்திருப்பது அவசியம் என்றும் கூறுகின்றது. இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கையின் பிரஜைகளாக பதிவுசெய்வதை முற்றாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டங்களை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இனவாதச் சட்டத்தினை எதிர்த்துச் செயற்பட்ட இணைந்த தமிழர்களின் அமைப்பான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உப தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் இச்சட்டம் நிச்சயமாக இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கவே பாவிக்கப்படுகிறது என்று கூறினார். "இந்தவகையான தமிழர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிப்பதிலோ அல்லது பாக்கிஸ்த்தான் போன்றதொரு தமிழர்க்கான தனியான நாட்டினை இலங்கையில் ஏற்படுத்துவிதிலோதான் சென்று முடியும்" என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அன்றைய பிரத மந்திரி டி எஸ் சேனநாயக்க, இந்தியத் தமிழர்கள் இலங்கையின் தற்காலிக வதிவாளர்கள் என்றும், பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகவே பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதோடு, அடிக்கடி தமிழ்நாட்டிலிருக்கும் தமது கிராமங்களுக்கு அவர்கள் சென்றுவருவது அவர்கள் கூட இலங்கையினைத் தமது சொந்த நாடாகக் கருதவில்லை என்பதனையே காட்டுகிறது என்றும் பதிலளித்திருந்தார். மேலும் இந்தியத் தமிழர்கள் இந்தியாவையே தமது காவலனாகப் பார்ப்பதாகவும், அவர்கள்மேல் இந்தியா எப்போதும் ஒரு கரிசணையான பார்வையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு, அவர்கள் உண்மையாகவே இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள், ஆகவே அவர்களை இந்தியா மீள அழைத்துக்கொள்வதுதான் சரியானது என்றும் வாதாடினார். ஆனால், இந்தியாகூட அவர்களை அன்று மீள அழைத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்டது.
    1 point
  32. அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் அடிப்படையே நான் இதுவரை எழுதிய மூன்று வாழ்க்கை வரலாறுகளினதும் கருப்பொருளாக இருந்தது. அதுவே நான் இன்று எழுதும் பிரபாகரன் எனும் ஆளுமையின் வாழ்க்கைச் சரித்திரனதும் மூலமாக இருக்கிறது. அத்துடன் தமிழர்கள் தமது தாயகத்தைக் காக்கத் தவறுவதும், தமது சனத்தொகையினை வளர்ப்பதில் தவறுவதும், தமது மொழியின் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறுவதும், இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறுவதும் அவர்களின் இருப்பையே முற்றான ஆபத்தில் தள்ளிவிடும் என்பதையே இவ் வாழ்க்கைச் சரித்திரங்களின் மூலம் பதிவிட்டு வருகிறேன். மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, நேர்த்தியாகச் செயற்படுத்தப்பட்டுவரும் முற்றான இனவழிப்பிற்குள் தமிழினம் இன்று உட்பட்டு வருகிறது. அரச ஆதரவுடன் நடந்துவரும் திட்டமிட்ட நிலக்கொள்ளைகள் மூலம் தமிழினம் தனக்குரிய தாயகத்தினை சிறிது சிறிதாக இழந்துவருகிறது. மலையகத் தமிழரின் வாக்குரிமைகளை மறுத்துவிட்டதன் மூலம் அவர்களின் சனத்தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் தனிச் சிங்களச் சட்டம் மூலம் அவர்களை கற்பதிலிருந்தும் தடுத்துவிட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டினை தாரக மந்திரமாக வரைந்துகொண்டதன் மூலம் சிங்கள அரசுகள் அவர்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இறுதியாக, திட்டமிட்ட ரீதியில் அரசின் பின்புலத்துடன் அவர்கள் மேல் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் வன்முறைகளின் மூலம் அவர்கள் உயிர்வாழ்தலுக்கான அடிப்படை உரிமையினைக் கூட இழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள இனவாதத்தின் கோட்டையென்று கருதப்படும் லேக்ஹவுஸ் பத்திரிக்கையில் நான் செய்தியாளராகக் கடைமையாற்றிய காலத்தில் இக்கதைபற்றி எழுத விரும்பியிருந்தேன். 1957 இல் நான் சாதாரண பத்திரிகையாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பதிப்பான தினகரனில் இணைந்துகொண்டதிலிருந்து 1997 இல் அந்நிறுவனத்தில் ஆங்கிலப் பதிப்பிற்கான மூத்த உப ஆசிரியராக பதவியிலிருந்து ஓய்வுபெறும்வரை எமது இனப்பிரச்சினை குறித்த பல முக்கிய நிகழ்வுகளை நான் பதிவுசெய்து வந்ததோடு, தமிழருக்கெதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பல முக்கிய சிங்களத் தலைவர்களுடனும் எனக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. செளமியமூர்த்தி தொண்டைமான் முதலாவது வாழ்க்கைச் சரித்திரம், நட்பிற்காக தொண்டைமானுக்காக எழுதப்பட்டது. மலையகத் தமிழர்களின் தலைவரான அவருக்கும் எனக்கும் சுமார் 41 வருடங்களாக நெருங்கிய நட்பு இருந்துவந்தது. 1988 கார்த்திகை மாதத்தில் தனது சரிதை பற்றி எழுதுமாறு அவர் என்னை அழைத்திருந்தார். அவர் விரும்பியவாறே அவரின் சரிதையும் என்னால் எழுதப்பட்டு அடுத்தவருடமே பிரசுரிக்கவும் பட்டது. சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் என்னை மீளவும் அழைத்த அவர், தனது சரிதைபற்றிய தகவல்களை மேலும் விரிவாக்கும்படி என்னிடம் கேட்டுக்கொள்ளவே, அவருக்காக அதனையும் நான் செய்தேன். அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே மேம்படுத்தலின் பிரதி வெளிவந்தது. பின்னர் இணையப் பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் இச்சரித்திரம் ஒரு தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. தொண்டைமான் அவர்களின் சரிதையினை நான் எழுதியபோது, வேண்டுமென்றே இரு முக்கிய விடயங்களை எழுதுவதை நான் தவிர்த்திருந்தேன். தமிழர்களின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த அக்கறை தொடர்பாகவும், சிங்களவர்களால் தனது அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சி எடுத்திருந்த சில நடவடிக்கைகள் தொடர்பாகவும் நான் எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன். முதலாவது சம்பவம் 1986 ஆம் ஆண்டு மார்கழி முதலாம் திகதி நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த டொலர் மற்றுன் கென்ட் பாம் எனப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். தாக்குதல் நடந்த அன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அலுவலக உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் நான் நுழைந்தேன். "நீங்கள் செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைப்பார்து கேட்டார் தொண்டைமான். அவரது கேள்வியை நான் அவ்வளவாகச் சட்டை செய்யாதது போலக் காட்டிக்கொண்டிருக்க, அவரோ, "சிங்கள அரசு எல்லாவற்றிற்கு மேலானது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களை விடப் பலமானவர்களும் இருக்கிறார்கள். பிரபாகரன் அவர்களுக்கொரு பாடத்தினைப் புகட்டியிருக்கிறார்" என்று அவர் முடித்தார். இரு சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, பல சிங்களவர்கள் கொல்லப்பட்டிருந்தபோதும்கூட, இத்தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் தொண்டைமானுக்கு இருந்தன. 1979 ஆம் ஆண்டு, தொண்டைமான் அவர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் மீது அரசும் குண்டர்களும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களில் அடித்து விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களைக் குடியேற்றி மீள்வாழ்வளிப்பதற்காகவே கென்ட் மற்றும் டொலர் பாம் எனப்படும் விவசாயப் பண்ணைகளை தமிழ்த் தன்னார்வ அமைப்புக்கள் ஆரம்பித்து நடத்தி வந்தன. ஆனால், 1986 ஆம் ஆண்டு ராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடவடிக்கைகள் மூலம் அப்பகுதியில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அடித்து விரட்டிவிட்டு அப்பகுதிகளை தெற்கில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக அந்நாட்களில் காணி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமிணி திசாநாயக்கா மாற்றியிருந்தார். தனது மக்கள் தமது வாழிடங்களிலுருந்து விரட்டப்பட்டதற்கும், அவ்விடங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டதற்கும் தனது கடுமையான கண்டனத்தினை தொண்டைமான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும்கூட, அவை எதுவுமே சிங்கள் அரசினால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆகவே, தன்னால் செய்ய முடியாது போனதை பிரபாகரன் செய்தது அவருக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருந்தது.
    1 point
  33. ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒருவர் இருப்பார்.......ஆனால் என்னுடைய வெற்றிக்குப்பின்னால் இருவர் இருக்கப்போவது உறுதியாகின்றது........! 😂 ஜக்கம்மா கண்ணைத்திறக்க தினமும் மூன்றுமுறை குளித்துவிட்டு "அபிராமிஅந்தாதி" பாராயணம் செய்யவும்.......! 🤣
    1 point
  34. ரெண்டும் அஹிம்சை வழி போராட்டம், ஒன்றை குழப்புகிறார்கள் மற்றதை சிறப்பாக நடத்துகிறார்கள்.
    1 point
  35. இளம் தம்பதியினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஊரில் இப்போது பெற்றோல் திருடர்கள் அதிகம். கிழமைக்கு கொஞ்சமாக கிடைக்கும் எரிபொருளை தங்கத்தை விட பாதுகாப்பாக வைத்திருக்க முயல்கிறார்கள்.
    1 point
  36. எனக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் மேல்... கொஞ்ச நல்ல அபிப்பிராயம் இருந்தது. இதோடை... எல்லாத்தையும் பாழாக்கி விட்டார். ஒருவன் சேருகின்ற கூட்டத்தை வைத்து, அவனை காலம் காட்டிக் கொடுத்து விடும். நல்ல காலத்துக்கு... இந்தக் காணொளிகள், சில ஒளிப்பதிவுகள் கிடைத்தது. இல்லா விட்டால், முழுப் பழியும் கஜேந்திரகுமார் கட்சி மேல் விழுந்திருக்கும். வேலன் சுவாமியின் முகத்திரையும்.. ஆரம்பத்திலேயே.. கிழிந்தது நல்லதாய் போச்சு. இதற்காகத் தன்னும்... திலீபன் அண்ணாவுக்கு நன்றி. 🙏
    1 point
  37. அது சரி ....!. கதைக்கும்போது ஏன் மணிவண்ணனின் நா குறழுது? அவர் இல்லை இவர், இவரில்லை அவர், எவராக இருந்தாலும் தமிழரின் தியாகத்தினை கொச்சைப்படுத்தி அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், எப்படி தமிழரின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு சேவை செய்வார்கள்? எங்கும் தமக்கே முன்னுரிமை தேடுகிறார்கள், அதற்காக வீரர்களின் தியாகங்களை பயன்படுத்துகிறார்கள். மணிவண்ணனுக்கு எதிராக குமார் பொன்னம்பலம் முதலில் வைத்த குற்றச்சாட்டு, கூட்டத்துக்கு கலகக்காரரை அழைத்து வந்தது என்பதே! குமார் பொன்னம்பலத்தை பழிவாங்க, சாதாரண மக்களையும், அவர்களின் கொள்கைகளையும், துயரங்களையும், இழப்புகளையும் அடகு வைக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது? அவர் சேர்ந்த இடம் அவருக்கு தோதானதே.
    1 point
  38. கிருபன்,இதோ எனது பதில்கள் ஏதும் பிழை விட்டு இருந்தா தெரிய‌ படுத்தவும் நன்றி
    1 point
  39. அப்போ ஈரானில் நடப்பது என்ன போராட்டம்? தலைப்பைத் திருத்தி விடுங்கள் நுணா !
    1 point
  40. வாழ்த்துக்க்கள் புத்தன் அண்ண
    1 point
  41. அழகான அர்த்தமுள்ள கவிதை வாழ்த்துக்கள் உதயன்
    1 point
  42. 30 ஆண்டுகால போர் ஒரு சமூகத்தினை தரம் தாழ்த்தியுள்ளது போல இருக்கின்றது, ஒரு தாய் தனது 11 வயது குழந்தையினை போதைவஸ்து விற்பதற்கு பயன்படுத்துகின்ற நிலை மனதை உடைக்கின்ற செயல். இந்த நிலையிலிருந்து மீழ முடியாதவகையில் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் சட்ட ஒழுங்கையோ அல்லது மக்கள் அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்தாமல் ஊழல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளாமல் செல்லும் நாம் அனைவரும் குற்றவாளிகளே.
    1 point
  43. முன்னாள் ஒட்டுக்குழு ஆக்கள்.. அல்லது இயக்கத்தை விட்டிட்டு ஓடியந்தாக்கள்.. இல்லது இயக்கம் தண்டிச்ச ஆக்கள்.. அல்லது இயக்கம் தொல்லை தாங்களேலாமல்.. கலைச்சு விட்ட ஆக்கள் சொன்னா.. கேப்பினம். இயக்கம் ஆக்கிய படைப்புக்களிலேயே குறை சொன்னவை.. இதை விட்டு வைப்பினமோ. இயக்கத்தை விட வெளில இருக்கிற சில பேருக்கு ரெம்பத் தெரியும் என்ற கற்பனை. தலைவருக்கே இயக்கம் பற்றி வகுப்பெடுத்தவையும் இருக்கினம்.. யாழில. நீங்க என்னடான்னா. அதாவது இவைல பலர் இயக்கம் மறக்கப்படனும் என்பதில் எதிரியோடு இணைஞ்சு நிற்கினமே தவிர.. இயக்கம் நினைவு கூறப்பட்டுக் கொண்டே இருக்கனும்.. தமிழர்களின் தார்மீகத் தாகம் தீரவில்லை என்பதைக் காட்டிக்கொண்டே இருக்கனும் என்பது இவர்களுக்கு மிகக் கடுப்பான விசயம். அதில் சிங்கள பேரினவாதிகளை விட தமிழ் பாசிஸ்சிட்டுக்கள் மோசம்.
    1 point
  44. உங்களுக்காகத் தானே கூகிள் சீற் தயாரித்து வைத்திருக்கிறார். சின்னனில் வடலிக்குள் இருந்து கூகிள் தட்டின ஞாபகம் இல்லையோ?
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.