Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 01/31/23 in all areas
-
ட்ரம்ப் விடயத்தில் ஒன்று சொல்வார்கள்: "இதோ ட்ரம்ப் அரசியல் நாகரீகத்தின் அடிமட்டத்தைத் தொட்டு விட்டார் என்று எல்லோரும் நினைக்கும் போது, அவர் இன்னொரு காரியம் செய்து, அந்த அடியும் புட்டுக் கொண்டு இன்னொரு அடிமட்டத்திற்கு இறங்கி விடுவார். இப்படி புதிய அடிமட்ட நிலைகள் உருவாகிக் கொண்டே இருக்கும்!"😂 அதே போன்ற நிலை தான் புலத் தமிழர்களுள் ஒரு பிரிவினரது கருத்துகளில் வெளிப்படும். இந்த உக்ரைன் -ரஷ்ய பிரச்சினை பற்றிய உரையாடல்களில், சில புலத் தமிழர்கள் "he ain't so bad" என்ற வரையறைக்குள் ஹிற்லரையும் கொண்டு வந்து விட்டார்கள். இதை யாழில் மட்டுமன்றி யாழிணையத்திற்கு வெளியேயும் காண்கிறேன். இது ஒரு இரவில், உணர்ச்சி மேலீட்டால் உருவான நிலை அல்ல எனக் கருதுகிறேன். காலங்காலமாக யூரியூப், மீம்ஸ், இன்ஸ்ரா, ரிக் ரொக் என்பவற்றில் குப்பனும் சுப்பனும் இட்ட திரித்த வரலாற்றுப் படையலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தமையால் உருவான ஒரு நீண்டகால மனநிலை! இப்படிப் பட்ட ஒரு மனநிலை மாற்றத்தால் பிலிப்பைன்ஸ் அடைந்த பலனை கடந்த ஆண்டுத் தேர்தலில் உலகம் கண்டது.4 points
-
ஆலமர நிழலில் இளைப்பாற இம்முறை புத்தனை முந்திவிட்ட சித்தன் சிவன்… நான் அறிய இந்த இடத்தில் எந்த சிலையும் இருந்ததில்லை. இம்முறை கண்டதால் ஒரு ஆச்சரியம்..4 points
-
புதிய ஊடக அறம் , தர்மம்.. பலம் ..பலவீனம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த எழுத்துமுறை உபயம் .......அக்கினிக்குஞ்.......சூ. 😀4 points
-
3 points
-
ஒரு பெண்டாட்டிக்கு மூன்று வைத்திருந்தவர் ஒரு பேனாவை உடைத்தால் வேறு வாங்க மாட்டாரா? இதை யோசித்து தான் சீமான் விட்டிருப்பார்.3 points
-
உள்ளூராட்சி தேர்தல் வருகின்ற படியால்…. சம்பந்தனை கொண்டு போய் ஆஸ்பத்திரியிலை சேர்த்துப் போட்டு, அனுதாப வாக்கு எடுக்கலாம் என்று திட்டம் போட்டு இருப்பார்கள். உந்தப் பாச்சா… பலிக்காது. உதைப் போல பல ஜில்மால் விளையாட்டுக்களை பாத்திட்டம். தமிழரசு கட்சி… கட்டுக்காசும் கிடைக்காமல் மண் கவ்வுவது உறுதி. அதுக்குப் பிறகுதான்…. சம்பந்தன் ஐயாவுக்கு, உண்மையான வருத்தம் வரும்.3 points
-
2 points
-
No refund No exchange. திரும்ப சேரும்போது @தமிழ் சிறி க்கு சொல்லாமல் கொள்ளாமல் சேர்ந்துட்டார்.2 points
-
கலைஞர் பேனாவை அவரது சட்டைப்பையில் இருந்து எடுத்து எழுதிவிட்டு திரும்பவும் அவரது சட்டைப்பைக்குள் வைத்துவிடுவேன் என்று முன்பு ஒருமுறை சீமான் கூறியிருந்தார். அப்படி அந்தளவுக்கு அவருடன் நெருக்கமான நண்பராக நீண்ட காலம் இருந்த போதே அந்த பேனாவை எடுத்து உடைத்திருக்கலாம். 😂2 points
-
இரண்டும் அலரிகொட்டை. எல்லோரையும் கொல்லுது.2 points
-
யோகசுவாமியின் அடியார்களால் “மகாவாக்கியங்கள்” என்று கூறப்படும் அவை வருமாறு: எப்பவோ முடிந்த காரியம் நாம் அறியோம் ஒரு பொல்லாப்பும் இல்லை முழுதும் உண்மை2 points
-
சில நேரம் யோசிக்க ஹிட்லர் வெண்டிருக்கலாம் எண்டும் தோணுது 🤣. ——— ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும், சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை? ஜெர்மனிக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதாக சொல்லி கொள்ளும் நீங்கள், நவீன ஜேர்மனியின் அடித்தளத்தையே அசைக்க வல்ல இந்த கொடிய விசத்தை எப்படி போற்றி எழுதுகிறீகள். அப்புறம் ஹிட்லர் ஒண்டும் மகான் அல்ல. அவர் கட்டு கோப்புடன் ஒன்றும் ஆட்சி செய்யவுமில்லை. குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம் முதல் பலது அங்கேயும் நடந்தது. ஹிட்லரின் ஆட்சியும் ஊழல் மலிந்தே இருந்தது.2 points
-
இறந்த உடல்களை காட்டாமல் புதைகுழிகளை காட்டுவதும் ஒரு சிறப்பு யுக்திதான். ஒம்.....அரசியல் பாடத்தில் உண்டு. உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள். இது ஒவ்வாத கருத்து இருந்தாலும் பரவாயில்லை.2 points
-
விசுகர்! ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது அந்தந்த நாடுகளுக்கேற்ப வேறுபடும். உக்ரேன் பிரச்சனை ஐரோப்பிய அரசியல் பிரச்சனை. அதை எம்மின பிரச்சனையோடு தொடர்பு படுத்தினால் தலை வெடித்து விடும். மீண்டும் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால் அழிவும் உக்ரேன் அழிவும் ஒன்றல்ல. குழுவாதத்தால் மட்டுமே என்னுடன் முரண்பட நினைக்கின்றீர்கள்.இது முன்னரும் ஒரு முறை நடந்தது. ஆனால் நான் யதார்த்தவாதி.2 points
-
வியாபார மேற்குலகு உலகில் செய்யாத அத்துமீறல்களையா ரஷ்யா செய்து விட்டது? அண்மைக்கால அரபு வசந்தத்தில் மக்கள் சிதறி ஓடி அலைந்து திரிந்த போது உங்கள் பொன்னான மனிதாபிமானம் எங்கே போனது?2 points
-
இனி வரும் காலங்களில் தனிமனித வாழ்க்கை என ஒன்று இல்லாமல் போய் விடும். ஒவ்வொரு தனிமனித செயல்களையும் எங்கோ ஒரு மூலையிலிருந்து கவனிக்கப்படுவார்கள். இதைத்தான் சாப்பிட வேண்டும்.இப்படித்தான் சாப்பிட வேண்டும் இப்படித்தான் வாழ்க்கையை நடத்த வேணும் என அறிவுறுத்தப்படுவார்கள். இதுதான் கம்யூனிச நாடுகளிலும் இருந்தது.இருக்கின்றது. இதை இப்போது ஏதோ ஒரு விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகம்,மனித உரிமை என கதறும் நாடுகளும் ஏதோ ஒரு விதத்தில் பின்பற்றுகின்றன.😎2 points
-
பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/1 point
-
🤣 ஈழத்தமிழர் 77 க்கு பின் கட்சியையும் பார்க்கவில்லை, தலைவர்களின் நதி மூலம், ரிசி மூலமும் பார்க்கவில்லை. அவர்கள் எப்போதும் தமிழ் தேசிய கொள்கையை, தமது அபிலாசைகளை யார் வென்றெடுப்பார் என நினைத்தார்களோ அவர்களையே தெரிந்தார்கள். அதனால்தான் உதய சூரியனை ஒரு காலத்தில் கொண்டாடிய போதும், அதை ஆனந்தசங்கரி தலைமையில் முன் கொணர்ந்த போது - அவமானகரமான தோல்வியை கொடுத்தார்கள். இதே காரணத்தால்தான் 1988 தேர்தலில் ஒரு நாள் அவகாசத்தில் புலிகள் ஆதரிக்க சொல்லிவிட்டார்கள் என்ற செய்தி அறிந்து, அதுவரை அறியப்படாத அரசியல்கட்சியாக இருந்த ஈரோசை பெரு வெற்றி பெற வைத்தார்கள். சும்மா, குதர்கம் பேச வேண்டும் என்பதற்காக ஈழ தமிழ் மக்களின் 75 வருட கால கொள்கை பற்றான அரசியலை, கேவலமாக எழுதுவோரை என்னவென்பது.1 point
-
ஈழத்தமிழ் மக்கள் அரசியல் குடும்பங்களின் பின்னணி வாழ்கை நிலவரம் தெரியாமல் கட்சியின் பெயரை மட்டும் வைத்து வாக்களித்ததின் விளைவுகளால் தான் நாடு சொல்லணா துயரங்களை அனுபவிக்கின்றது. கட்சியின் பெயரை வைத்து வாக்குகள் சேகரித்து கொழும்பு சென்றபின் தங்கள் வாழ்க்கையை மட்டும் கணக்கிட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் மாட மாளிகையுடன் வாழும் அரசியல்வாதிகளின் நிலைமை தெரியாமல் யாழ்களத்தில் கருத்தாளர் எனும் பெயரில் கருத்தெழுதுபவர்களை என்னவென்பது?1 point
-
வாக்குக்காக சாகடித்தாலும் சாகடிப்பார்கள். ஏனென்றால் அரசியல் உலகம் அப்படி1 point
-
நிதர்சன உண்மை தமிழ் நாட்டில் கடசியாய் நின்ர போது பாமசிக்கு போனேன் இந்த மாத்திரை இங்கு கிடைக்குமா என்று கேட்டேன் அதற்கு அவர் ஆங்கிலத்தில் பதில் சொன்னார்.............நான் உங்களிடம் தமிழில் தானே கேட்டேன் ஏன் எனக்கு ஆங்கிலத்தில் சொல்லுறீங்கள் என்று..............பிறக்கு அவர் வாயால் தமிழ் வந்தது...............ஆனால் அங்கு இருக்கும் பலருக்கு ஆங்கிலத்தில் கதைப்பதை பெருமையாய் நினைக்கினம் நான் அத அவமானமாய் பார்க்கிறேன்...............என்னை பாதுகாத்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் கற்று இருக்கிறேன் தமிழில் அழகாய் கேட்க்க ஆங்கிலத்தில் பதில் சொல்லுவது பெருமை இல்லை பெருத்த அவமானம் எழுத்து பிழை விட்டு தமிழ் எழுதினாலும் எனக்கு எல்லாமே என் தமிழ் தான் ❤️🙏🙏🙏 அதற்கு பிறக்கு தான் டெனிஸ் மற்றும் ஆங்கிலம் 😏1 point
-
பையா, தமிழக இளைஞர்களை…. திட்டமிட்டே போதையிலும், சினிமாவிலும் மினக்கெட வைத்துள்ளது திராவிடம். அதிலும்… பலருக்கு, தமிழே தெரியாதது பெரும் சோகம்.1 point
-
அடிச்சா திருப்பி அடிக்கும் பழக்கம் தமிழக மக்களிடம் இல்லை சிறி அண்ணா தமிழகம் ஒன்றும் தமிழீழம் போல் வீரம் விளைந்த மண் கிடையாது கூத்தாடிகளின் படங்களுக்கு பால் ஊத்தும் தறுதலைகள் வாழும் மானிலம் தான் தமிழ் நாடு சீமானின் பேச்சை கேட்டு பலர் திருந்தின மாதிரியும் தெரியுது அவர்கள் திருந்த இன்னும் நிறைய இருக்கு1 point
-
அவங்கள சொல்ல சொல்ல தாங்கள் ஏதோ உலகின் மூன்றாவது உலக வல்லரசு என்ற நினைப்பில் ரஷஷியா விடம் இருந்து மலிவு விலை எண்ணெய் அது இது என்று வழமைபோல் வியாபாரம் செய்து கொண்டு இருக்க மேற்குலகு பார்த்து கொண்டு இருபான்களா ? அவங்கள் அமெரிக்கா விரும்புவதே இப்படியானவர்களைத்தான் தங்களுக்கு சாதகமான அரசியல் இல்லையென்றால் பழைய விடயத்தை கிண்டி கிளறி ஆளை நாடு நாடாய் ஓடவைக்கலாம் போட்டு தள்ளுவது அந்த காலம்.கோத்தா ஓடலையா சிங்கபூரில் இருந்து உறுதி மொழி கொடுத்து இருப்பார் சைனா பக்கம் போகமாட்டேன் என்று ரணில் வந்தபின் அமைதி ராணிலும் சைனாவை நாடினால் அல்லது ரஸ்சியா பக்கம் ஆடினால் கோத்தா போல் கோமனம் கட்ட கூட நேரம் இல்லாமல் ஓடவேண்டி வரும் .1 point
-
பெருமாள் உண்மையாகவே இதைத் தான் நானும் நினைத்தேன். யாரோ பெரிய தொகையை தள்ளிப் போட்டாங்களோ?1 point
-
என்ன 101%? சும்மா அவர் வந்து உடைக்க, திராவிடர் நாம விட்டிருவமா ? கட்டுமரதாருக்கு, கட்டத்தான் போறம், ஏலுமெண்டா பண்ணிப்பார்க்கட்டும். 😜😅1 point
-
குஜராத்தில் செய்த கொடுமைகளுக்காகவே மோடியை அமெரிக்க விசா கொடுக்காமல் வைத்திருந்தார்கள். பிரதமர் ஆகிய பின்பே அனுமதி கொடுத்திருந்தனர். அதிபர் ஆகிவிட்டால் கிரிமினல்கள் ஒன்றாகிவிடுவார்களோ என்னமோ? இப்போது எமக்கு தெரியாதென்று எப்படி சொல்வது? இணைப்புக்கு நன்றி @ஏராளன்.1 point
-
நரி கேட்டிருக்கும் .அய்யா இந்தமுறை சுதந்திரநாளில் கொடிபிடித்து அசைக்கவேணும்..இதைச் செய்யாவிட்டால் கொழும்பு வீடுகாணி எல்லாம் எடுத்திடுவன்....அய்யா பயந்திட்டார்...அதுதான் மெடிக்கல் லீவு அடிச்சிட்டார்..🙃1 point
-
அண்ணா இப்ப தமிழர்கள் கையறு நிலையில் இருப்பதால் விவேகத்துடன் நடப்பதே நல்லது.1 point
-
1 point
-
அரேபியர்கள் இந்திய பொருளாதாரத்துக்குள் நுளையப் பார்க்கிறார்கள். இயலாக் கட்டத்தில் மத்திய அரசு அதானிக்குக் கடன் வழங்கும். அக் கடன் சுமை ஏழை மக்களைச் சென்றடையும். இலங்கை வடபகுதியில் அதானி பாரிய மின் உற்பத்தித் திட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாகச் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தனர். அது என்ன ஆகுமோ தெரியாது.1 point
-
தமிழரசு கட்சியில்… சுமந்திரன் என்ற ஒரு முந்திரி கொட்டைதான் இருக்கு. மற்றது…பிலாக் கொட்டை. 😁1 point
-
வாற பணத்தில் இஞ்சாலையும் கொஞ்சம் தள்ளிவிட முடியுமா என்று கேட்டாலும் கேட்பார்கள்.1 point
-
1 point
-
இந்த ஒரு பந்தி போதும் . அக்னிகுஞ்சு எல்லாவற்றையும் கொட்டை கொட்டையாக எழுதிவிட்டு முந்திரிகொட்டையை யாரென்றே எழுதவே இல்லையே? மாவையின் மகன் கட்சியை விட்டு பிரிந்து விட்டதாக அண்மையில் @தமிழ் சிறிகூறியிருந்தாரே பொய்யா கோப்பாலு?1 point
-
விமான நிலையத்தில் எங்கே திரும்பினாலும் வழமையை விட சற்று அதிகமாக இவர்களை இம்முறை காணமுடிந்தது1 point
-
மிகவும் தவறான புரிதல் அண்ணா இங்கே உங்கள் தம்பிகள் எல்லோரது பணிவான வேண்டுகோளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை. என்னை வேறு குழுவில் நீங்கள் போட்டாலும் உங்கள் தம்பிகளுடன் உங்கள் தம்பியாகத்தான் நிற்கிறேன் நிற்பேன்1 point
-
பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணம் ஆரம்பம்! இலங்கையின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால் , துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முனை பகுதியில் இருந்து தெய்வேந்திர முனை பகுதி வரையில் பயணிக்கவுள்ள குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை , பருத்தித்துறை சாக்கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பமானது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இடம்பெற்று தெய்வேந்திர முனை பகுதியை சென்றடையவுள்ளது. https://athavannews.com/2023/13225101 point
-
எழில் ஓவியம் பார்த்தேனோ'... Film :வீரகடோத்கஜன் (1959) Singer : A M ராஜா & P சுசீலா1 point
-
நன்றி. ஓம் கேள்விபட்டிருக்கிறேன். 🤣1 point
-
புரட்சியாளர் சே குவேரா சொன்னது தான் இந்த நூற்றாண்டில் நினைவில் வந்து போகுது ] நான் இதை முதலில் படித்த போது யாழ்களத்து கோஷான் சே என்று நினைத்துவிட்டேன்.1 point
-
அழிவுகள் விரும்பத்தக்கதல்ல..... உக்ரேன் தனிநாடு. அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ் கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா? பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா? இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.1 point
-
என்னப்பா இது போன நூற்றாண்டுக்கதை எல்லாம்? உண்மையில் நீங்கள் அமெரிக்காவை நம்பி இங்கே எழுதிய அளவுக்கு கூட நான் எழுதியதே இல்லை. என்னைப் பொறுத்தவரை ரசியா உலகிற்கு உதவாத மற்றும் சிறுபின்மையினருக்கு உதவாத ஒரு ராட்சத ஏகாபத்திய நாடு. அது ஒரு போதும் உலகுக்கோ எமக்கோ உதவப்போவதில்லை. நன்றி1 point
-
1 point
-
Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்? நம் டிஜிட்டல் வாழ்க்கையில் எல்லா சந்தேகங்களுக்கும் கூகுளில் தான் பதில் தேடுகிறோம். ஒரு நாளுக்கு சராசரியாக 8.5 பில்லியன் தேடல்கள் கூகுளில் நடக்கிறது. உலகம் முழுவதுமிருக்கும் மக்களுக்கு தகவல்களை வழங்கி வருகிறது கூகுள். தேடப்படும் தகவல்கள் அனைத்தும் நல்ல விஷயங்களுக்காக தான் தேடப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. ஒவ்வொரு நாளும் பல சட்டத்துக்கு புறம்பான தகவல்களும் கூகுளில் தேடப்படுகின்றன. சில விஷயங்களை கூகுளில் தேடுவது குற்றமாக கருதப்படுகிறது. அவை என்ன எனப் பார்க்கலாம். வெடி குண்டு அல்லது துப்பாக்கி தயாரிப்பது எப்படி? சுயாதீனமாக ஆயுதங்கள் தயாரிப்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. கூகுளில் சில தளங்கள் இதற்கான வழிமுறையை கொடுக்கின்றன. இதனால் பல அசம்பாவிதங்கள் அரங்கேறுகிறது. அரசாங்கம் ஆயுதங்கள் குறித்த தேடல்களை கண்காணித்து வருகிறது. இவை குறித்து தேடுபவர்கள் குற்ற நடவடிக்கைகாக சந்தேகிக்கப்படுகின்றனர். குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் கூகுளில் அதிகம் தேடப்படும் இணையத்தளங்களில் முதல் 10 இடங்கள் ஆபாசப்படங்களுக்கான வலைத்தளமாக இருக்கிறது. குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்களைத் தேடினாலோ அல்லது பகிர்ந்தாலோ சட்டப்படி தண்டனை கிடைப்பது நிச்சயம். பைரஸி புதிய படங்கள், பாடல்கள் வெளியானதும் அவற்றை சட்டத்திற்கு புறம்பாக பதிவிறக்கம் செய்வது குற்றமாக கருதப்படுகிறது. பைரஸி செய்யும் வலைத்தளங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திரைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தரவிறக்குவதும் சட்டத்துக்கு புறம்பானது தான். ஹேக்கிங் தொழில்நுட்ப உலகில் ஹேக்கிங் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்குமே இருக்கிறது. இந்த ஆர்வம் காரணமாக நீங்கள் ஹேக்கிங் தொடர்பானவற்றை கூகுளில் தேடினால் கண்காணிக்கப்படுவீர்கள். இவை தவிர பல தேடல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்ட விரோத செயல்களுக்கு துணை செல்வது போன்ற தேடல்களில் ஈடுபடுபவர்கள் சைபர் கிரைமில் தண்டனை பெறுவது நிச்சயம். https://thinakkural.lk/article/2178491 point
-
எது மக்களுக்கு தேவை இல்லை என கூகிள் நினைக்கிறதோ அவற்றை கூகிள் ஏன் பார்க்க அனுமதிக்கிறது? அல்லது வழங்கியில் இருந்து எடுத்து விட வேண்டியது தானே.1 point
-
'வெந்துதணிந்தது காடு" திரைப்படத்தில் நடித்தவர்களின், பார்த்தவர்களின் அபிப்பராயம்.👋1 point
-
அவர் சிலுவையை கண்டாற்தான் ஓடி வருவார்!1 point
-
இல்லை. வட்டார கூட்டமைப்பு, அல்லது ஏதாவது குறிச்சி கூட்டமைப்பு, அல்லது ஏதாவது மத, அல்லது சாதி கூட்டமைப்பு போதும். தேசியம் ரொம்ப பெரிய வார்த்தை.1 point