Jump to content

Leaderboard

  1. போக்குவரத்து

    போக்குவரத்து

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      14

    • Posts

      533


  2. நன்னிச் சோழன்

    நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+


    • Points

      4

    • Posts

      30339


  3. கறுப்பி

    கறுப்பி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      33082


  4. வல்வை சகாறா

    வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      5810


Popular Content

Showing content with the highest reputation since 12/14/09 in Blog Entries

  1. கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது? (வட அமெரிக்கா) ---------------------------------------- பதற்றம் அடையாதீர்கள். ---------------------------------------- 1. வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள்: Emergency Signalஐ போடுங்கள். விரைவாகவும், பாதுகாப்பாகவும், அவதானத்துடனும் பழுதடைந்த வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள். இயலுமானவரை நேர்மட்டமான பாதையில் நிறுத்துங்கள். நீங்கள் இடதுபக்கமாக வாகனத்தை நகர்த்தவேண்டி ஏற்பட்டால் மற்றைய வாகனங்கள் உங்கள் வாகனத்துடன் மோதமுடியாதபடி போதியளவு இடம் தெருஓரம் உள்ளதை இயலுமானவரை உறுதிப்படுத்துங்கள். 2. நீங்கள் நிற்கின்ற இடத்தை குறித்துக்கொள்ளுங்கள்: உங்கள் வாகனத்திற்கு மிக அண்மையாகவுள்ள பிரதான Exit - வெளியேற்று பாதை எது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அருகில் கடைகள், விடுதிகள், எரிபொருள் நிரப்பு நிலையம், வீதி குறியீட்டு இலக்கங்கள், வேறு ஏதாவது குறிப்பிட்டு இனம்காட்டக்கூடிய அடையாளங்கள் தென்படின் அவற்றை குறித்துக்கொள்ளுங்கள். 3. வாகனத்தின் பிரச்சனையை கண்டறியுங்கள்: அ. ஏதாவது வித்தியாசமான சத்தங்கள் கேட்பின், வழமையில் இல்லாதபடி வித்தியாசமாக வாகனத்தின் ஏதாவது பகுதி தோன்றினால்/ ஏதாவது பகுதியை வித்தியாசமாக நீங்கள் உணர்ந்தால், அத்துடன் புகை, தீ இவை ஏதாவது தோன்றினால், வாகனத்தின் முன்பக்க மூடியின் கீழாக ஏதாவது தோன்றினால் அவற்றை அறிந்துகொள்ளுங்கள். ஆ. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், உதாரணமாக தீ காரணமாக வாகனத்தை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டால் உங்களை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பற்றி அதி உயர் எச்சரிக்கையாக இருங்கள். அத்துடன் இருள்/இரவு, மற்றும் காலநிலை - மழை, கடுங்குளிர், சுழல்காற்று, சீரற்ற தரை மட்டங்கள் - பள்ளம், இடுக்கு, குழிகள், வழுக்குதல் இவை பற்றியும் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். இ. வாகனத்தைவிட்டு வெளியேறும்போது மற்றைய வாகனங்கள் வருகின்ற பக்கமாக வெளியேறாமால் உங்களை நோக்கி வரும் வாகனங்களுக்கு எதிர்ப்புறமாக உள்ள கதவை திறந்து வெளியேறுங்கள். ஈ. ஒருபோதும் உங்கள் வாகனத்திற்கு நேரே முன்னாலோ அல்லது பின்னாலோ நிற்காதீர்கள். நீங்கள் மறைப்பதால் அல்லது உங்களை காணாதபடியால் மற்றைய வாகனங்கள் உங்கள் மீது மோதக்கூடும். உங்களால் வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்த முடியாவிட்டால்... அ. Emergency Signal, ஆபத்து கால வெளிச்சங்களை உடனடியாக போடுவதற்கு மறவாதீர்கள். ஆ. பிரயத்தனப்பட்டு தெரு ஓரமாக வாகனத்தை நகர்த்த முற்பட்டு விபத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இ. உங்களுக்கு வாகனத்தின் பாதுகாப்பு பற்றி குழப்பமாக காணப்பட்டால், அதாவது உங்கள் வாகனத்துடன் பின்னால் வரும் வாகனங்கள் ஏதும் மோதும் எனக்கருதினால் ஒருபோதும் வாகனத்தினுள் இருக்காதீர்கள். மிகவும் அவதானத்துடன், பாதுகாப்பாக வாகனத்தைவிட்டு வெளியேறி தெருவில் இருந்து விலகிச்சென்று பாதுக்காப்பான ஓர் இடத்திற்கு செல்லுங்கள். 4. மற்றைய வாகனங்களின் பார்வையில் உங்கள் வாகனம் தென்படுவதை உறுதி செய்யுங்கள்: Emergency Signalஐ போடுவதோடு, உங்களிடம் ஏதாவது துணிகள், கைக்குட்டை, உடற்போர்வை, ஜாக்கெட் போன்றவை இருந்தால் அவற்றை மற்றைய வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வாகனத்தின் சாளரத்தில், கதவு கைப்பிடியில் அல்லது Anrtennaஇல் கட்டி/செருகி விடுங்கள். 5. தேவையேற்படின் அவசர கால சேவை 911ஐ அழையுங்கள் : வாகனத்தின் பிரயாணிகள் எல்லோரும் தெருவிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும் அவசரகால சேவையை - காவல்துறையை அழையுங்கள். அவர்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு தேவையான மேலதிக அறிவுத்தல்களை வழங்குவார்கள். 6. வாகனத்தை விட்டு வெளியேறுதல் : நீங்கள் வானகத்தை விட்டு வெளியேற எண்ணினால்... அ. சுற்றுப்புறங்கள் பற்றி எச்சரிக்கை அடையுங்கள். ஆ. முக்கியமாக இரவில் பாதுகாப்பிற்காக ஒளி விளக்கை/Flashing Light வாகனத்தினுள் கொண்டு செல்லுங்கள். இ. எவராது தெருவில் செல்லும் வாகனத்தின் சாரதிகள் தாமாக உதவி செய்வதற்கு முன்வந்தால் அவர்களின் பெயர், தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி என்பனவற்றை முதலில் கேட்டுத்தெரிந்து குறித்து வைத்த பின்னரே உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அறிமுகம் பெறாது முன்பின் தெரியாமல் உதவியை பெறுவது ஆபத்தானது. நீங்கள் பிரயாணிகளை விட்டு முன்பின் தெரியாதவர்களுடன் உதவியை பெறுவதற்காக எங்காவது சென்றால் (உதாரணமாக அயலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லுதல்) உதவி செய்பவரின் விபரத்தை வாகனத்தின் பிரயாணிகளிடம் கொடுத்து, நீங்கள் ஏன் அவருடன் செல்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தையும் சொல்லிச் செல்லுங்கள். ஈ. வாகனத்தைவிட்டு வெளியேறும்போது எப்போதும் உங்களை நோக்கி மற்றைய வாகனங்கள் வருகின்ற பக்கமாக அல்லாது எதிர்ப்புறமாக உள்ள கதவு வழியாகவே நீங்கள் வெளியேற வேண்டும். 7. வாகனத்தினுள்ளேயே தங்குதல் : அ. நீங்கள் வாகனத்தினுள்ளேயே வெளி உதவி கிடைக்கும் வரை தங்குவதற்கு தீர்மானித்தால் உங்கள் வாகனத்தின் கண்ணாடி, கதவு ஆகியவறை பூட்டிவிடுங்கள். ஆ. சாரளத்தின் கண்ணாடியையோ அல்லது கதவையோ அறிமுகம் இல்லாதவர்களுக்கு திறக்காதீர்கள். உங்களுக்கு உதவுவதற்கு அவர்கள் வந்தால், உங்களிடம் தொலைபேசி காணப்படாவிட்டால் அவர்களிடம் 911இற்கு அல்லது அவசரகால வீதி உதவி சேவைக்கு (Emergency Road Service) அழைக்குமாறு கேளுங்கள். இ. எவர் மூலமாவது உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 911ஐ அழையுங்கள். உங்கள் வாகனத்தின் Horn ஐ தொடர்ச்சியாக சத்தமாக போடுங்கள். எச்சரிக்கை ஒலியை எழுப்புவதற்காக வாகனத்தின் சாவியில் உள்ள Panic Button ஐயும் சொடுக்கலாம். ஈ. வெப்பத்தை அல்லது குளிரை பெறுவதற்காக வாகனத்தின் இயந்திரத்தை நீங்கள் தொடர்ச்சியாக இயக்காமல் இடையிடையே இயந்திரத்தை நிறுத்துங்கள். வாகனத்தின் இயந்திரம் தொடர்ச்சியாக இயங்கும்போது COவாயு காரணமாக வாகனத்தில் உள்ளவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம். 8. அவசரகால வீதிச்சேவை பிரிவினருடன் / வாகன திருத்தகத்தில் உரையாடுதல் : அ. உங்கள் அங்கத்துவ அடையாள இலக்கத்தை கொடுங்கள். உதாரணம் - CAA membership no. ஆ. உங்கள் தொலைபேசி இலக்கம், வாகனம் தற்போதுள்ள இடம் இவற்றை கூறுங்கள். இ. வாகனத்தின் பழுது பற்றிய விபரம், பிரச்சனையின் தன்மை என்பனவற்றை சொல்லுங்கள். ஈ. வாகனம் இழுத்துச்செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால், அதிகளவு பிரயாணிகள் காணப்பட்டால், குழந்தைகள், சிசுக்கள் காணப்பட்டால், மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், வாகனத்திற்கு விசேடமான எரிபொருள் ஏதாவது தேவைப்பட்டால் இவை பற்றிய விபரங்களை தயங்காது கூறுங்கள். உ. நீங்கள் 911ஐ அழைப்பின் அதுபற்றியும் அறிவியுங்கள் 9. உங்கள் உரிமைகளும் பொறுப்புக்களும் : காப்புறுதி நிறுவனம் அல்லது Emergency Road Service மூலம் எப்படியான உதவிகள் கிடைக்கும், பெறப்படவேண்டும் என்பவை உங்கள் பொறுப்பாகும். ஆபத்து காலங்களில் இவை மூலம் எப்படியான உதவிகள் கிடைக்கும், எவ்வாறான சேவைகள் உங்களுக்கு உள்ளக்கப்பட்டுள்ளன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக காலம், சூழ்நிலைக்கு ஏற்றபடி புத்திசாதூர்யமாக / சமயோசிதமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் பொது அறிவை, common senseஐ பயன்படுத்துங்கள். உங்களினதும், வாகனத்தில் உள்ள பிரயாணிகளினதும், தெருவை பயன்படுத்தும் ஏனையோரினதும் பாதுக்காப்பே முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கின்ற தவறான முடிவுகள் உயிர் ஆபத்தினையும், அழிவையும் ஏற்படுத்தலாம் என்பதை மறவாதீர்கள். ஆக்கம் : போக்குவரத்து http://www.cardriving.ca உசாத்துணை : caasco.com
    5 points
  2. பழம் பெரும் மொழி எனச் செருக்கு 'மட்டும்' கொள்வார் சிலர் பழசு தானே எனப் பழித்துச் செல்வார் இன்னும் சிலர் மொழியின் அழகும், வளமும் உணர்ந்து அழியாமல் காத்திடவே அயராது உழைப்பார் எவர்? பயன்பாடில் அருகி, வழக்கொழியும் மொழியின் 'பழம் பெருமை மட்டும்' பேசி என்ன பயன்? அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ்? - மென் மேலும் அழகுபடுத்தி ரசிக்க வேண்டிய அழகன்றோ தமிழ்!
    2 points
  3. வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த சாரதிகளும், நீண்டகாலமாக வாகனத்தில் பயணம் செய்பவர்களும் இவ்வாறு நினைக்கிறார்கள். வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணிய தேவையில்லை என்று நினைப்பது சரியானதா? இல்லை, மிக தவறானது. வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணிய வேண்டும் என்பதே சரியானது. இருக்கை பட்டியின் முக்கியத்துவம் எவை? ஒரு விபத்து ஏற்படும்போது அல்லது வாகனம் விரைவாக நிறுத்தம் செய்யப்படும் போது விபத்தின் அல்லது உடனடி நிறுத்தத்தின் தாக்கம் காரணமாக (Impact) வாகனத்தின் உட்பகுதியுடன் உங்கள் உடல் விரைவாக சென்று எதிர்பாராமல் மோதல் அடைவதை இருக்கை பட்டி தடுக்கிறது. உதாரணமாக, ஓடும் வாகனத்தில் திடீரென விரைவாக பிரேக் பிடிக்கப்படும் போது பின் இருக்கையில் உள்ள நீங்கள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி உதறி எறியப்படக்கூடும். இதன்போது உங்கள் தலை, கை, நெஞ்சுப்பகுதி போன்றவை அடிபட்டு காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணிந்தால் அது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் உட்பகுதிகளுடன் மோதுவதை தடுக்கிறது. இவ்வாறே, இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் போது உங்கள் தலை மிக வேகமாக வாகனத்தின் யன்னல் கண்ணாடியுடன் அடிபட்டு மோசமான காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் பகுதிகளுடன் முட்டி மோதுவது தடுக்கப்படுகிறது. அதிகளவு விபத்துக்களில் வாகனத்தின் கதவு திறபடுகிறது. நீங்கள் இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் தாக்கம் காரணமாக தானாக திறபடும் கதவூடாக நீங்கள் தெருவில் தூக்கி எறியப்பட்டு மோசமான காயங்கள் ஏற்படலாம். பல வீதி விபத்துக்களில் பயணிகள் வாகனத்தின் கதவூடாக வீதியில் தூக்கி வீசப்பட்டு உடல் உருண்டு பலத்த காயங்களினால் உடனடியாகவே மரணம் அடைவதை அன்றாடம் செய்திகளில் காண்கிறோம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது இருக்கை பட்டி வாகனத்தின் கதவு விபத்தின்போது திறபட்டாலும் நீங்கள் வெளியே உதறி எறியப்படாதவாறு உங்கள் உடலை இருக்கிப்பிடித்து உங்களை காப்பாற்றுகிறது. இருக்கை பட்டி அணிவது காவல்துறையை திருப்திப்படுத்துவதற்காக அல்ல, ஆனால், உங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக என்பதை நினைவில் வையுங்கள். சரியான முறையில் இருக்கை பட்டி அணிவது உங்கள் உயிரை காப்பாற்றும். நீங்கள் எவ்வளவோ திறமைசாலியான சாரதியாக காணப்படலாம். ஆனால், விபத்திலிருந்து திறமைசாலிகளும் 100% தப்பிக்க முடியாது. உங்கள் வாழ்க்கை, உங்களை நம்பி வாகனத்தில் ஏறுகின்ற பயணிகளின் வாழ்க்கை சோம்பேறித்தனம் காரணமாக அல்லது உதாசீனம் காரணமாக இருக்கை பட்டி அணியாமல் விபத்தில் மோசமாக பாதிக்கப்படுவதற்கு அல்லது உயிரிழப்பு ஏற்படுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்காதீர்கள். ஓடும் வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டியை முறையாக அணிந்துள்ளதை உறுதி செய்யுங்கள். கீழுள்ள வீடியோக்களை பாருங்கள். இருக்கை பட்டி அணியும் போதும் இருக்கை பட்டி அணியாதபோதும் விபத்து ஏற்பட்டால் எப்படியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை காண்பிக்கின்றன: ஆக்கம்: போக்குவரத்து http://www.CarDriving.CA
    2 points
  4. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் 'ஜோன்சன் மோட்டார் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி மற்றும் பசீலன் மோட்டார் பிரிவு' ஆகியவற்றின் கணையெக்கிகளின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
    1 point
  5. இதனுள் தமிழீழக் குறிசூட்டுநர்கள்(Snipers) & குறிசாடுநர்களின்(Marksmen) படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
    1 point
  6. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான வானூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
    1 point
  7. இதனுள் ஓகத்து 11, 2008 - சனவரி 6, 2009 வரை தமிழீழத்தின் வன்னி பெருநிலப்பரப்பில் நடந்தேறிய இடப்பெயர்வு தொடர்பான படிமங்கள் உள்ளன. இவை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் நேரடியாக களப்படப்பிடிப்பு செய்யப்பட்டவையாகும்.
    1 point
  8. Source: அனைத்து கோப்புறைகளும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பதற்கு...
    1 point
  9. இறுதி யுத்த நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மூத்த போராளிகளை வடிகட்டுவதினில் கருணாவே முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் பங்கெடுத்த படை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல்கள் பிரகாரம் சரணடைந்தவர்களது பெயர்பட்டியல்கள் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையினில் தடுத்து வைத்திருக்கப்படவேண்டியவர்கள் மற்றும் தீர்த்துக்கட்டப்பட வேண்டியவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் தடுத்து வைக்கப்படவேண்டியவர்கள் தொடர்பான பட்டியலில் நூற்றுக்கும் குறைவானவர்களது பெயர்களே இருந்ததை தான் கண்டிருந்ததாக அப்படை அதிகாரி மேலும் தெரிவித்தார். ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் அகப்பட்டுக்கொண்ட பாலச்சந்திரன் சரண் அடைந்திருக்கவில்லையென தெரிவித்த அப்படை அதிகாரி நிராயுதபாணியாக அகப்பட்டுக்கொண்டதாகவே தெரிவித்தார்.எனினும் பாலச்சந்திரன் படுகொலைக்கான ஆலோசனையினை கருணாவே வழங்கியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட அவ்வதிகாரி அப்போது பெரும்பாலும் கோத்தா அனைத்திற்கும் கருணாவின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட வேண்டியவர்கள் தவிர்த்து ஏனையவர்கள் வேறு பிரிவு படை அதிகாரிகளிடம் கையளித்ததாக தெரிவித்த குறித்த படை அதிகாரி அவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் பற்றி கூறமுடியாதிருப்பதாகவும் கூறினார். எனினும் சரணடைந்தவர்களுள் பலர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் ஊடாக படையினரால் கூட்டிச்செல்லப்பட்டு தேவையான தகவல்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறாக இருப்பினும் சரண் அடைந்தவர்களது நிலையினை அறிந்தவர்களுள் கருணாவும் ஒருத்தரென சுட்டிக்காட்டிய அவர் மகிந்த கும்பல் ஓரு வேளை போர்குற்றவாளிகளென அறிவிக்கப்படுமிடத்து அவர்களது பலியாடாக கருணாவே நிச்சயமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். http://www.vivasaayi.com/2013/04/blog-post_692.html
    1 point
  10. மௌனித்துக் கொண்டவர்களே! இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள். பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும். எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து, இந்த இனஅழிப்பிற்கு, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள். இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது. வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்... நாங்கள்தான் முட்டாள்கள் போலும். எங்கள் ஒப்பாரிகள்... உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி, ஏமாந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்... பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம் தன்கையே தனக்குதவி எனும் இனம் பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி? காலங்காலமாக வாழ்ந்த மண்ணில், எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு, இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம். எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா? இல்லையே.... உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;. இப்போது நாளாந்தம் எம்மண்ணில், துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை, ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும் பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல், துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர, அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி, நாளாந்தச் சாவுகளையும், கைகால் இழப்புகளையும், மனநலம் குன்றுவதையும்.... உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள். அப்படியாயின், எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா? அனைத்துலகமே! போதும்.. உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள் ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும். எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான், எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள். அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை. உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள். மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள். எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம். சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது வழங்காமல் விடலாம் அல்லவா. ஐயோ..!! நாற்காலி மனிதர்களே! நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும் எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது. எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை. நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை. தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கென்றால் தெரியும் அதன் வேதனை. உலகே! ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும் உன் போக்கு மாறும் காலம் வரும். எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும். எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும். வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம். சர்வதேசம் கண்ணிழந்த கதையை, ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும். இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின் கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள் முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும். யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ... வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.
    1 point
  11. பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே! அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா? அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்? கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே! வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே! இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா? குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா? உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள் நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள். சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே! சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே! வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும், இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும், கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும், எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே! வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார். நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள் எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர். எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்? எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்? கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா? எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்? ஈழத் தமிழினமே! உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய் மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க! எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும். பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும். விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம் அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா? குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன? பொங்கு தமிழ் குலமே! சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்? முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும் பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்? அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம் நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ? எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே! கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக.
    1 point
  12. சரியான வழிகாட்டுதல், முறையான போதியளவு பயிற்சி, தன்னம்பிக்கை இவை உங்களிடம் காணப்பட்டால் எமது மாணவர்கள் போல் உங்களினாலும் முதல் தடவையிலேயே சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வீதி பரீட்சையில் சித்தி அடைய முடியும். தகவல்: போக்குவரத்து Htttp://CarDriving.CA
    1 point
  13. அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்சி பயிற்றுனர்கள் வழங்கும் சேவை மருத்துவர்கள் செய்யும் சேவைக்கு ஒப்பானது. வாகனம் ஓடுபவர்கள் எதிர்காலத்தில் தமக்கு உடல், உயிர் பொருட்சேதங்கள் ஏற்படாமல் தப்புவதற்கு முறையாக வாகனம் ஓடுவதற்கு கற்றுக்கொள்வதோடு, அதை சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி செய்து, தமது அனுபவங்கள் மூலமும், ஆர்வம் மூலமும் வாகனம் ஓடுதலில் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். எதிர்பாராது நடைபெறும் சம்பவங்கள் நீங்கலாய் ஏனைய எல்லா சந்தர்ப்பத்திலும் சவாரியின் செளகரியமும், பாதுகாப்பும் வாகனத்தை ஓடுகிற சாரதியின் கைகளிலேயே தங்கி இருக்கிறது. சாரதி பயிற்சி நெறியை பெற்று கொள்வது தொடர்பாய் எமது நிறுவனத்திற்கு தினமும் ஏராளம் தொலைபேசி அழைப்புக்கள் வரும். அதில் பெருன்பான்மையின "விலை விசாரிப்பதாய்" அமையும். சாரதி பயிற்சி நெறி என்பது சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் கிலோ எவ்வளவு என்று கேட்டு வாங்கி கூடையில் போடுகிற கொடுக்கல் வாங்கல் போன்றது அல்ல என்று பலருக்கும் தெரிவது இல்லை. சாரதி பயிற்சி நெறி வாகனம் ஓடுபவர்களினதும், பாதசாரிகள், தெருவை பாவிக்கிற அனைவரினதும் உடல், உயிர், வாழ்க்கை, எதிர்காலம் சம்மந்தப்பட்டது. இங்கு போனில் (தொலைபேசி) எம்மிடம் கேட்கக்கூடாத அல்லது தவிர்க்கப்படவேண்டிய சில வினாக்களை தருகிறோம். "கேட்ககூடாததன்" என்பதன் அர்த்தம் என்ன என்றால் தவறான அணுகு முறையை குறிக்கிறது. கேள்வி 01: நான் எவ்வளவு காலத்தில் லைசன்ஸ் எடுக்கலாம்? குறிப்பிட்ட ஒரு மாணவனை நேரில் கண்டு அவர் வாகனம் ஓடுவதை மதிப்பீடு செய்யாதவரை ஒருவரது ஆற்றலை போன் ஊடாக எதிர்வு கூற முடியாது. சிலர் உடனடியாக விடயங்களை பிடித்து கற்று கொள்வார்கள், சிலர் அதிகளவு பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னரே வாகனத்தை முறையாக ஓடும் நிலைக்கு முன்னேறுவார்கள். சிலருக்கு வாகனம் ஓட தெரிந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து அதற்கேற்ப வாகனம் ஓடுவதற்கு தெரியாமல் இருக்கும். வீதி பரீட்சையில் உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்று பரீட்சிப்பது இல்லை. பரீட்சை விதி முறைகளுக்கு அமைய போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்றே பரீட்சிக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு திறமையான சாரதியாக காணப்பட்டாலும், எத்தனை வருடங்கள் அனுபவம் இருந்தாலும் வீதி பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் வாகனத்தை சரியாக ஓடி காண்பிக்க தெரியாவிட்டால் உங்களால் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொள்ள முடியாது, சோதனையில் தோல்வியே கிடைக்கும். எவ்வளவு காலத்தில் ஒருவர் லைசன்ஸ் எடுக்கலாம் என்பது அவரவர் தனி தன்மைகளுக்கு ஏற்ப வேறுபடும். தொடரும்............. தகவல்: போக்குவரத்து http://CarDriving.CA
    1 point
  14. தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது மதுபோதையில் வாகனம் ஓடுவது போல் அதிகளவு ஆபத்தானது. போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனம் ஓடினால் மதுபோதையில் வாகனம் ஓடும்போது உள்ளதுபோல வீதி விபத்தில் நீங்கள் சிக்குவதற்கு அதிகளவு சாத்தியம் உள்ளது. நீண்ட பயணங்களின் போது வாகனம் ஓடும் முன்னர் போதியளவு தூக்கம் கிடைக்காது என நீங்கள் கருதினால் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு பயண வழிமுறைகளை கையாளுங்கள். குறுகிய தூர பயணங்களாயினும் போதியளவு தூக்கம் கிடைக்கவில்லையாயின் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு போக்குவரத்து முறைகளை பயன்படுத்துங்கள், உதாரணமாக பொது பேருந்து சேவை, டாக்சி போன்றவை. வாகனம் ஒரு இயந்திரம் என்பதை நினைவில் வையுங்கள். இயந்திரத்தை நீங்கள் இயக்கும் போது உங்கள் கவனம் அங்கு குவிக்கப்படாவிட்டால் அது மோசமான வீதி விபத்துக்களில் முடியலாம். அவ்விபத்துக்களில் உங்களுக்கு உடலியல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டாலும் ஏனைய வீதி பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கவன குறைவுடன் வாகனம் ஓட்டியதற்காக உங்களுக்கு சிறை தண்டனையும் கிடைக்கலாம். உங்கள் வாகனத்தினுள் உள்ள யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு மன அழுத்தத்திற்கு காரணமாக அமையலாம். அண்மைய ஆய்வு தகவல்களின்படி போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனத்தை ஓடுவதனால் மோசமான பல வீதி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சில மருந்து வகைகள் தூக்கம், சோம்பலை ஏற்படுத்தக்கூடியன. நீங்கள் மருந்துகளை உட்கொள்ள முன்னர் வைத்தியரிடம் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகளை முழுமையாக கேட்டு அறியுங்கள். தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்து எதையாவது உள்ளெடுத்தால் அந்த மருந்தின் தாக்கம் நீங்கும் வரை வாகனம் ஓடுவதை கண்டிப்பாக நிறுத்தி வையுங்கள். தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது உங்கள் இனிமையான பயணத்தையும் கெடுத்துவிடும் என்பதை மறவாதீர்கள். வாகனம் வீதியில் நகர்கின்ற ஒரு இயந்திரம். அதற்கு தன்னை இயக்குபவர் தூங்குகின்றாரா அல்லது விழித்துள்ளாரா என்று எல்லாம் தெரியாது. தூக்க கலக்கத்தினால் ஒரு சில நொடிகள் உங்கள் கவனம் சிதறுவது உங்கள் வாழ்க்கையையே மோசமான முறையில் தலைகீழாக மாற்றக்கூடும். ஆக்கம்: போக்குவரத்து http://cardriving.ca
    1 point
  15. Toronto மாநகரில் பாதசாரிகள் பயன்படுத்துவதற்கு மிக ஆபத்தான சந்திகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? Toroonto இல் ஏறத்தாள 1,337 சந்திகள் உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றையும் தினமும் ஏறக்குறைய 500 பாதசாரிகள் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகின்றது. கடந்த பத்து வருடங்களில் பாதசாரிகள் சம்மந்தப்பட்ட விபத்துக்களின் புள்ளிவிபர தகவல் அடிப்படையில் Toronto மாநகரில் மோசமான பத்து சந்திகள்: Markham Road & Tuxedo Court Albion Road & Finch Ave. W. Milliken Blvd. & Finch Ave. E. Neilson Rd. & Mclevin Ave. Alton Towers & McCowan Rd. Finch Ave. W. & Tobermory Dr. McCowan Rd & Eglinton Ave. E. Don Mills Rd. & Gateway Blvd. Finch Ave. E. & Sandhurst Circle Finch Ave. E. & Bridletowne Circle மேலுள்ள பத்து சந்திகளில் Markham Road & Tuxedo Court சந்தியே முதல் இடத்தை பெற்றுள்ளது. தினமும் ஏறக்குறைய 700 பாதசாரிகள் இந்த சந்தியை பயன்படுத்துவதாகவும், வருடத்திற்கு இரண்டு பாதசாரிகள் இந்த சந்தியில் மோசமான விபத்துக்கு உள்ளாவதாகவும் புள்ளிவிபர தகவல் சொல்கின்றது. விரிவான தகவல்களை அறிய: கனடா குளோபல் செய்திகள் வழங்கல்: போக்குவரத்து http://cardriving.ca
    1 point
  16. 1-ஹைவேயை நோக்கிய வளைவினுள் நுழையும் போது வளைவுக்குரிய அதன் வேகத்தை பார்த்து ஓடுங்கள். 2-ஆர்முடுகும் ஒழுங்கையின் (acceleration lane) நீளத்தை (length of the lane) கவனியுங்கள். 3-நுழைய வேண்டிய ஒழுங்கையினுள் போதுமான அளவு இடைவெளியை (adequate gap) பாருங்கள். 4-எந்த இடைவெளியினுள் (இரண்டு வாகனங்களுக்கு இடையிலான) நீங்கள் நுழைய போகின்றீர்கள் என்பதை தீர்மானியுங்கள். 5-நேரே பாருங்கள், கண்ணாடியை பாருங்கள், நுழையும் பக்கத்திற்குரிய சிக்னலை போடுங்கள், blind spotஐ பாருங்கள், குறிப்பிட்ட இடைவெளியினுள் பாதுகாப்பாக நுழைந்து ஹைவே போக்குவரத்துடன் இணையுங்கள். 6-ஹைவேயின் ஆர்முடுகும் ஒழுங்கையில் காரணம் இல்லாமல் வேகத்தை குறைக்காதீர்கள். 7-ஹைவேயுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் (பொதுவாக 100km/h) வாகனத்தை ஓடுங்கள். ஆக்கம்: போக்குவரத்து http://CarDriving.CA
    1 point
  17. 1-முழுமையான நிறுத்தம் செய்யவேண்டிய இடத்தில் (Stop Sign) வாகனத்தை முழுமையாக நிறுத்தம் செய்யவில்லை. 2-மற்றைய வாகனத்திற்கு முன்னுரிமை Right-of-Way கொடுக்கவில்லை. 3-சற்று பெரிய அளவிலான வாகனம் (15பேரை காவிச்செல்லக்கூடிய van) ஓடுவதற்கு கனடாவில் முறையாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று இருக்கவில்லை. விளைவு? பதினொரு பேர் நேற்று முன்தினம் தென்மேற்கு Ontarioஇல் பரிதாபகரமாக மரணம் அடைந்தார்கள். மூவர் படுகாயம் அடைந்துள்ளார்கள். மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். அதில் சிலர் மிக அண்மையிலேயே கனடாவுக்கு வந்தார்கள். சரியான முறையில் வாகனம் ஓட்டிய மோதுப்பட்ட மற்றைய வாகனமான பார ஊர்தியின் சாரதி தனது பதினொராவது வருட திருமண நினைவுநாள் அன்று உயிர் இழந்துள்ளார். மேலுள்ள விடயங்களுடன் மோதிய குறிப்பிட்ட வகை பயணிகள் வாகனம் இலகுவில் குடைசாயக்கூடியது என்பதால் அமெரிக்காவிலும், கனடாவின் சில மாகாணங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. விபத்தின் தாக்கம் காரணமாக (impact) மோதுப்பட்ட பயணிகள் வாகனம் நாற்பது மீற்றர் தூரத்திற்கு இழுத்து எறியப்பட்டு நொருங்கியதாக சொல்லப்படுகின்றது. முறையாக கற்று சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று வாகனத்தை அவதானத்துடன் ஓடுவது உங்கள் உயிரை மட்டும் அல்ல மற்றவர்களினதும் உயிரையும் பாதுகாக்கும் என்பதை நினைவில் வையுங்கள். ஆக்கம் : போக்குவரத்து தகவல் : கனடா செய்திகள் http://CarDriving.Ca
    1 point
  18. பல நுட்பங்கள் உள்ளன. ஒரு வழி சுருக்கமாக: 1-மற்றைய வாகனத்திற்கு மிக அருகாக உங்கள் வாகனத்தை சமாந்தரமாக கொண்டு வந்த பின்னர் உங்கள் வாகனத்தின் முன் சில்லுகளை நேராக்குங்கள். 2-உங்கள் வலப்பக்கமாக பாருங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக பார்க்க வேண்டும்). ரிவர்ஸ் கியருக்கு மாற்றிவிட்டு மெதுவாக உங்கள் வாகனத்தின் முன் சில்லுகள் மற்றைய வாகனத்தின் பின் சில்லுகளுக்கு சமாந்தரமாக வரும் வரை ரிவர்ஸ் செய்யுங்கள். 3-இப்போது steering ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக சுற்ற வேண்டும்). இனி தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யுங்கள். 4-உங்கள் வாகனத்தின் முன் கதவு மற்றைய வாகனத்தின் bumper க்கு அருகாக வரும்போது steering ஐ இடது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் வலது பக்கமாக சுற்ற வேண்டும்). தொடர்ந்து ரிவர்ஸ் செய்யுங்கள். 5-மற்றைய வாகனத்திற்கு பின்னால் முழுவதுமாக வந்த பின்னர் முன் சில்லுகளை மீண்டும் நேராக்குங்கள். 6- தவறு நிகழ்ந்தால் மீண்டும் படி ஒன்றில் தொடங்கி தொடருங்கள். வாகனத்தை நகர்த்தும் போது பாதசாரிகள், வேறு வாகனங்கள் வருகிறார்களா என்பதை அவதானியுங்கள். வந்தால் உங்கள் வாகனத்தை நிறுத்தி, கவனம் எடுத்து செயல்படுங்கள். 7-முன்னே செல்ல வேண்டுமானால் மீண்டும் கியரை மாற்றுவதற்கு மறவாதீர்கள். கீழே வேறு ஒரு வகையில் மாணவர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கிறார்: ஆக்கம்-போக்குவரத்து http://cardriving.ca
    1 point
  19. கார்த்திகைப் பூ - Flame lilly தமிழீழத்தின் தேசியப்பூ. இது கார்த்திகை மாதத்தில் பூப்பதன் காரணத்தால் இந்த பெயர் பயன் பாட்டில் உள்ளது. சங்க இலக்கியங்களில் இது காந்தள் எனக்குறிப்பிடப்படுகின்றுது. ஆங்கிலத்தில் இது Flame lilly என அழைக்கப்படுகின்றது. இதன் பூர்விகம் ஆசியா, ஆபிரிக்க கண்டங்களின் உலர் பிரதேசம். தாவரவியலில் நமது கார்த்திகைப்பூ குளோரியேஸா சுப்பேபா (gloriosa superba) எனப்படுகின்றது. கார்த்திகைப்பூவில் gloriosa superba, carsonii, simplex verschuuriஆகிய 4 வகைகள் உள்ளன. எம் தேசியப்பூ gloriosa superbaஎன்ற இனமாகும். கார்த்திகைப்பூ கொடியில் பூக்கும் மலர். ஆங்கிலத்தில் இதன் பெயர் gloriosa என வருவதற்கு gloriosu, என்ற சொல் அடிப்படையாகும். இதன் பொருள் மிக அழகானது என்பதாகும். Superba என்பது மிகவும் அழகான என்ற மேன்மையைக் குறிக்கவாக வைக்கப்பட்டது. கிழங்கில் இருந்து குறித்த காலத்தில் மட்டும் முளைத்துப் பூத்து பின் மடிந்து நிலத்தின் கீழ் கிழங்கில் மட்டும் உயிர்வாழும் செடியும் பூவும்தான் கார்த்திகைப்பூ. அதன் உயிர்வாழ்வு விழவிழ எழுதல் என்ற பொருளையும் கொள்கிறதல்லவா. இதன் வாழ்வுக்காலம் நவம்பர் முதல் மார்ச் வரையாகும் செப்டம்பரில் நிலத்தின் கீழ் உள்ள கிழங்கு முளைக்கத் தொடங்கும். நவம்பர் பூக்கும். நேரடியாக சூரியனை எதிர்கொண்டதாக இல்லாமல் பற்றைகளின் நிழலில் படரும் கொடி இது. இதற்கு சதுப்பு நிலம் தேவை. தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கைத்தீவு, இந்தியா, ஆபிரிக்க நாடுகளான Cape coast, Natal, Swaziland, Northern Province, Botswana, Nambia and Zimbabweஆகிய வற்றில் இந்த வகை கார்த்திகைப்பூச்செடி வாழ்கின்றது. உலகளவில் கார்த்திகைப்பூச் செடி மருத்துவ இரசாயனத் தேவைகளுக்காக பண்ணையாக வளர்க்கப்படுகின்றது. பழங்குடிகள் பாரம்பரிய மருத்துவத்தில் தோல் வியாதி, புளுவியாதி போன்றவற்றுக்கு கார்த்திகைச்செடியைப் பயன்படுத்துகின்றனர். இரசாயனப்பகுப்பில் கார்த்திகைச்செடியின் சகல பகுதிகளிலும் நச்சுத்தன்மை இருக்கின்றது. கார்த்திகைச்செடி உடலுக்குள் சென்றால் மயக்கம் ஏற்படும். உயிராபத்தும் ஏற்படும். ஆனால் மருத்துவத்தில் இது பயன்படுகின்றது. கார்த்திகைச்செடி 1.8 மீற்றர் தொடக்கம் 2.4 மீற்றர் வரை வளரும். இதன் வாழ்வுக்கு 15 பாகை செல்சியஸ் முதல் 30 பாகை செல்சியஸ் வரை சூழல் வெப்பம் இருக்க வேண்டும். பூக்கள் செழுமையாக இருக்க வளிமண்டல ஈரப்பதன் அதிகமாக இருக்க வேண்டும். சராசரி அமிலத்தன்மையுடைய ஈரமான மண் இதன் வாழ்வுக்குத் தேவை. செடி இறந்ததும் இதன் கிழங்கு மண்ணின் கீழ் வாழ்வதற்கு 20-25 பாகை செல்சியஸ் வெப்பம் தேவை. இதிலிருக்கும் நச்சுப்பொருள் alkaloid colchicineஆகும். gloriosine என்ற நச்சுப்பொருளும் இதில் உள்ளது .
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.