Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since 12/14/09 in Status Updates
-
சனிக்கிழமை காலை வணங்களோடு.இன்றிலிருந்து ரொறன்டோவில் கால நிலை கொஞ்சம் பறவாயில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது..எனக்கும் குளிர் காலத்திற்கும் ரொம்ப தூரம் என்று சொல்லலாம் முக்கியமாக பனி கொட்டினால் என்னுடைய நாளாந்த வெளி வேலைகள் தடைபட்டு விடுவது உண்டு.இந்த ஆண்டு நமக்கு கொஞ்சம் கால நிலை விட்டுத் தந்திருக்கிறது..✍️2 points
-
“I can never read all the books I want; I can never be all the people I want and live all the lives I want. I can never train myself in all the skills I want. unknown2 points
-
வணக்கம், நான் ஒரு புதிய உறுப்பினர், எனக்கு சமூக ஊடகங்களில் எழுதிப் பழக்கமில்லை. ஆனால் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன், உங்கள் இணைப்பைப் பார்த்தேன். இதைத் தேடி இந்த தளத்தைக் கண்டேன். இது நீங்கள் பேசிக் கொண்டிருந்த கவிதைதானா என்று எனக்குத் தெரியவில்லை. வேறு - காசி ஆனந்தன் கவிதை (eluthu.com)2 points
-
A man faced supreme being ... salute goes to prestigious's extrvagantness...! · தன்னுடைய குடும்ப விடுமுறையை கூட இரத்து செய்து தாய்லாந்து குகைக்குள் சென்று 13 பேரையும் வெளியில் அனுப்பிவிட்டு கடைசி ஆளாக வெளியேறிய ஆஸ்திரேலியாவின் ஹீரோ மருத்துவர் dr richard harris, cave diving expert ...... இவர்வெளியே வந்து சில மணித்தியாலங்களில் இவருடைய தந்தை இறந்தது மிகப்பெரிய சோகம். இவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதானAustralian of the year விருது கொடுக்க பட வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்கின்றன இங்கு இவர்கள் இந்த உலகின் உண்மையான ஹீரோக்கள் வாழட்டும் மனிதாபிமானம் Chiang Rai governor Narongsak Osottanakorn also praised Dr Harris’ efforts overnight. “(The Australians) have been a big help, especially the doctor,” Mr Osotanakorn told9 News. “Very good. The best — not good — the very best.”2 points
-
ரொறண்ரோ வாழ் கனேடிய மக்களுக்கு குடும்ப தின நல் வாழ்த்துக்கள்.🖐️அனைவரும் நன்றாக சமைத்து சாப்பிட்டு இன்றைய நாளை இன்பமாக நகர்த்துங்கள்.உணவு, உடை, உறையுள் இவற்றுக்காகத் தானே நாளாந்தம் ஓடிக் கொண்டு இருக்கிறோம்..✍️ -1 point
-
ஆயுள் குறைந்த மாதத்தையும், நாளையும் கொண்டாடித் தீர்க்கும் அனைவருக்கு இனிய நல் வாழ்த்துக்கள்!Ice flowers .14.02.2024.1 point
-
*MGR is Really a Blessed Soul !!!* காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. காரிலிருந்து இறங்குபவர் அன்றைய *முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.* எந்தவித முன் அறிவிப்பும் இல்லை.? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை..?? மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்.? அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை.! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்.? மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்., "ஏன் இந்தப் பரபரப்பு.?" அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது. மஹா பெரியவர் மூன்று கி.மீ. தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார். *"இவ்வளவு தானே.? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்",* பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம். *மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் நடந்து செல்கிறார் குடிலை நோக்கி.* முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி., *"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."* *"அதனால் என்ன.? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்.!"* என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி. இங்கே ஒரு விஷயம் பலர் அறிந்திருக்க நியாயம் இல்லை., *தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்.! அந்த ஒரு சிலரில் எம்.ஜி.ஆரும் ஒருவர்.!* ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி.! "நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள் ~ பழனி — திருச்செந்தூர் — திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போக வேண்டியிருக்கு.! அதுக்கு தேக சிரமம்., கால விரயம்., பணச் செலவுன்னு ஆகிறது. *ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும் படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்"* இவ்வளவுதானே., இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க.? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதும்.? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க., *"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.* "நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா., அதனாலதான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்.! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு"., என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி. *இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்..!!* *எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது., யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்.ஜி.ஆர். ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!*... ( Bala shares......))1 point
-
வணக்கம் கிருபர் ஜீ நாளைக்கு இரண்டு விளையாட்டுக்கள் இருக்கின்றது பஞ்சாப்பிற்கு முதல் LSG சென்னையுடன் விளையாடுகின்றது சரி செய்து விடுங்கள்1 point
-
ரஞ்சித் அவர்களே வணக்கம், நீங்கள் இவற்றை பதிவுசெய்து வைப்பதோடு, ஒரு நூலுருவில் வெளிக்கொணர வேண்டிய தேவையும் உள்ளது என்பது எனது கருத்தாகும். அப்படியொரு முயற்சிக்கு எனது பங்களிப்பும் இருக்கும். அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
1 point
-
Luxury chocolatier Godiva closing all its Canadian stores .பெரும் பாலும் வருட இறுதியில் யாருக்காவது கிவப்ற் கொடுக்க வேண்டும் என்றால் இந்த சொக்லேட்டும் லின்ட்டும் தான் வாங்குவது வழமை..பண்டமிக்கால் நஷ்டத்தில் போய் விட்டார்கள் போலும்..மூடு விழா நடக்கப் போகிறது1 point
-
பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா 1 ஜனவரி 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, Wiradjuri woman Olivia Fox sang the national anthem in indigenous language Dharug in December இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன். தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த ஆச்சரியமளிக்கும் அறிவிப்பு, பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான ஊக்கத்தை இந்த மாற்றம் உருவாக்கும் என்று நம்புவதாக மாரிசன் கூறினார். வெள்ளையின ஆங்கிலேயர்கள் 18-ம் நூற்றாண்டில் குடியேறுவதற்கு முன்பே பல பத்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் தீவு ஆஸ்திரேலியா. அட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர் என அழைக்கப்படும் தேசிய கீதத்தில் இருந்து 'நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்' என பொருள் தரும் "ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ' என்ற வரி நீக்கப்பட்டு, 'ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ' என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது. நாம் இளமையானவர்கள் என்று பொருள் தந்த இடம், தற்போது நாம் ஒன்றே என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிளாடிஸ் பெரஜிக்லியன் இந்த மாற்றத்தைப் பரிந்துரைத்தார். இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன். ஆஸ்திரேலிய தொல்குடிகள் வசித்த 46 ஆயிரம் ஆண்டு பழமையான குகைகள் தகர்ப்பு 46,000 ஆண்டுஆஸ்திரேலிய பூர்வகுடி குகை: சீரமைத்து தர சுரங்க நிறுவனத்துக்கு ஆணை "இந்த மாற்றம், நாடாக நாம் கடந்து வந்த தூரத்தை அங்கீகரிக்கிறது. 300க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையரிடம் இருந்தும், மொழிக் குழுக்களிடம் இருந்தும் பெறப்பட்டதே நம் தேசத்தின் கதை என்பதை, புவியில் மிக வெற்றிகரமாக இயங்கும் பன்முக பண்பாடுகள் கொண்ட நாடு நாம் என்பதை இது அங்கீகரிக்கிறது" என்று அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் உலகத் தொற்றின்போது ஆஸ்திரேலியா ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் இந்த மாற்றம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். "பூர்வகுடிகள் மூலமாக மிகப் பழமையான தொடர்ச்சியான பண்பாடு நம்மிடம் இருக்கிறது என்பது குறித்து நாம் பெருமைப்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பேனீஸ். சமீப ஆண்டுகளில் பண்பாட்டு, அரசியல் நிகழ்வுகளில் தங்கள் நாட்டின் பழமையான பூர்வகுடி வரலாற்றை அங்கீகரிக்க ஆஸ்திரேலியா பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் தேசிய ரக்பி அணி வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை ஒரு பூர்வகுடி மொழியில் முதல் முதலாகப் பாடியது குறிப்பிடத்தக்கது. சிட்னி பகுதியை சேர்ந்த இயோரா நேஷன் என்ற மக்கள் குழுவின் மொழியில் தேசிய கீதத்தைப் பாடிய பிறகு அவர்கள், ஆங்கிலத்தில் பாடினார்கள். www.bbc.com1 point
-
மடைச் சாம்பிராணிக்கு எங்கே போவது? இன்இதழ்.கொம் சாம்பிராணிப் பூ பனியாலும் மழையாலும் காற்றாலும் குளிரால் வாடிய பண்டைய மனிதனை இயற்கையில் கிடைத்த காய்ந்த மரங்களே காத்தன. மரங்களை எரித்து அது கொடுத்த வெப்பத்தின் கதகதப்பில் குளிரைப் போக்கிய மனிதன் மரங்களுக்கு மரம் அவை கொடுக்கும் வெப்பமும் மணமும் வேறுபடுவதைக் கண்டான். எந்தெந்த மரங்களின் புகை கண்ணில் கண்ணீரைப் பெருக்கவில்லை என்பதையும் பார்த்து அறிந்தான். அத்துடன் எரியும் புகையின் மணத்தை நுகர்ந்த போது நறுமணப் புகை அவனைக் கவர்ந்தது. கண்ணீரை வரவழைக்காத நறுமணத்தைக் கொடுத்த மரங்களின் புகை ஏன் மரத்துக்கு மரம் வேறுபடுகிறது என்பதை ஆராய்ந்தான். அந்த ஆய்வின் விளைவாகப் பல அரிய விடயங்களைக் கண்டறிந்தான். ஒருசில மரத்தின் புகை கொடிய விலங்குகளை, நச்சுப் பாம்புகளை, பூச்சி புழுக்களை தம்மிடம் நெருங்க விடாததைக் கண்டான். வேறு சில மரங்களின் புகை தமக்கு வந்த நோய்களைப் போக்குவதையும் காயங்களை மாற்றுவதையும் பார்த்தறிந்தான். சில மரங்களில் இயற்கையாக வடிந்த மரப்பால் காற்றின் வெம்மையில் காய்ந்து கெட்டியாகிக் கட்டியாய் மரத்தோடு ஒட்டிக் கிடப்பதையும் கண்டறிந்தான். [வேப்பமரப்பிசின், முதிரமரப்பிசின் போன்று ஒட்டிக்கிடந்தன]. மரத்திலிருந்து வடிந்த சாம்பிராணி மரங்களை எரித்துப் புகையை உண்டாக்குவதை விட மரங்களில் இருந்து வடிந்த பாற்கட்டிகளை சேகரித்து வைத்து தனக்குத் தேவையான போது நெருப்புத் தணலின் மேல் தூவி புகையை உண்டாக்குவது இலகுவாக இருந்ததை அறிந்தான். அந்த மரப்பாற் கட்டிகளில் எவை நறுமணத்தையும் அதிக புகையையும் கொடுத்து தமக்கு வந்த நோய்களையும் நீக்கினவோ அம்மரங்களை நட்டு வளர்த்தான். அப்பாற்கட்டிகளை சேகரித்து செல்லும் வழியிலும் தங்கும் இடங்களிலும் வேண்டிய போது அவற்றைப் பயன்படுத்தினான். இவ்வாறு மரப்புகையின் தன்மையைக் கண்டறிந்த பண்டைய மனித இனங்களில் தமிழினமும் ஒன்று. சங்கத்தமிழரின் வாழ்வியல் அதனை நன்கு எடுத்துக் காட்டுகிறது. சங்கத் தமிழர் போரினால் ஏற்பட்ட விழுப்புண்ணை மாற்றும் மருந்தாக நறுமணப் புகையைப் பயன்படுத்தியதை புறநானூற்றில் அரிசில்கிழார் எனும் சங்ககாலப் புலவர் “நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ காக்கம் வம்மோ காதலம் தோழி! வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகைப் புண்ணே” - (புறநானூறு: 281) எனப் பாடியிருப்பதால் அறியலாம். அதாவது ‘அன்புடைய [காதலம்] தோழியே[தோழி]! வேந்தனுக்காக [வேந்துறு] விழுப்புண்பட்ட [விழுமம்தாங்கிய], பூக்கள் பொறித்த [பூம்பொறிக்] கழலை அணிந்த காலுடைய [கழற்கால்] நெடுந்தகையின் புண்ணை; மாளிகையில் [நெடு நகர் வரைப்பில்] நறுமணம் கமழ்கின்ற [கடி நறை] புகையை புகைத்து [புகைஇ] காக்க [காக்கம்] வருக [வம்மோ]’ எனத் தலைவி ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள். வீரத்தினை எடுத்துக்காட்ட மாவீரர்கள் காலில் அணியும் அணிகலனைக் கழல் என்பர். புகையிட்டு புண்களை நோய்களைக் குணமாக்கும் வழக்கம் தமிழரிடையே பண்டைக்காலம் தொடக்கம் இன்றுவரை இருந்து வருகிறது என நினைக்கிறேன். ஏனெனில் நான் சிறியவளாக இருந்த பொழுது எனக்கு வந்த ஒவ்வாமையைப் போக்க என் தந்தை புகையூட்டினார். சிறியவளாக இருந்த காலத்தில் இயற்கையைப் பெரிதும் காதலித்தேன். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அம்மா தரும் சிற்றுண்டியை உண்பேன். விளையாடுவதற்குப் பதிலாக வெள்ளைத் தாள்களை எடுத்துச் சென்று மரஞ் செடி, கொடிகளின் இலை, பூ, காய், பழம் மட்டும் அல்லாமல் கண்ணில் படும் பூச்சி, புழு, பறவைகள், விலங்குகள் யாவற்றையும் கீறுவதும் ஆடிப்பாடித் திரிவதும் எனது பொழுது போக்கு. சில வேளைகளில் இலை, பூ, காய், பழங்களை அவற்றின் சுவை அறியக் கடித்துப் பார்ப்பதும் உண்டு. ஒரு நாள் மாலை வீட்டுக்கு வந்தும் வழமைபோல அம்மா என்னைக் குளிப்பாட்டி துடைத்தார். அவவின் கண் முன்பே என் உடலெங்கும் திட்டுத் திட்டாகத் தடித்துக் கடிக்கத் தொடங்கியது. ‘என்ன சாப்பிட்டிங்க?’ என்று கேட்டார். நான் கீறி வைத்திருந்த படங்களைக் காட்டினேன். அவவுக்கே சில காய்களின் பெயர் தெரியாது. எது நஞ்சு! எது நஞ்சில்லை! என்பதும் தெரியாது. என்னை டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்காக உடைமாற்றினார். அப்போது வெளியே சென்றிருந்த என் தந்தை வந்தார். ‘மகளைப் பாருங்க, உடம்பெல்லாம் தடிக்கிறது டாக்டரிடம் கூட்டிப்போவோம்’ என்றார். எனது பொழுது போக்கு என்ன என்பது என் தந்தைக்குத் தெரியும். ‘மகள்! நீங்க கடித்துப் பார்தீங்களா? சாப்பிட்டீங்களா?’ எனக் கேட்டபடியே நான் கீறிய படங்களைப் பார்த்தார். [படங்களின் அருகே அது புளிக்குமா? கசக்குமா? இனிக்குமா? நாக்கில் ஒட்டுமா என எழுதிவைத்திருப்பேன்]. இது ஒவ்வாமை என்றார். இதற்கு டாக்டரிடம் போகவேண்டிய தேவையில்லை. போனாலும் அவர்கள் இதனை மாற்றுவார்களே ஒழிய முற்றிலும் குணமாக்க மாட்டார்கள் என்றார். எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. ‘மாற்றுவார்கள் ஆனால் முற்றிலும் குணமாக்க மாட்டார்கள் என்றால் என்ன என்றேன்? ஆங்கில மருத்துவம் ஒரு நோயை இன்னொரு நோயாக மாற்றும். தமிழ் மருத்துவம் நோயை முற்றாகக் குணமாக்கும் என்றார். எங்கள் வீட்டில் நின்றவரிடம் தென்னை மரத்தின் இளங்குருத்தோலையை வெட்டிக் கொண்டுவரும்படி கூறினார். முற்றத்தில் நெருப்பிட்டு தணலின் மேல் தென்னங்குருத்தை பரவி, அதிலிருந்து புகை வரத்தொடங்க, இடமும் வலமுமாக இரண்டுமுறை புகையை சுற்றி வரும்படி கூறி ஒரு முறை கடக்கவைத்தார். அவ்வளவே! சிறிது நேரத்தில் உடலெங்கும் உண்டான தடிப்புகளும் மறைந்து கடியும் நின்றது. அதன் பின்னர் உணவால் எந்த ஒரு ஒவ்வாமையும் எனக்கு வரவில்லை. பாருங்கள் எதுவித மருந்தும் பத்தியமும் இன்றி சில நிமிட நேரத்தில் தென்னங்குருத்தின் புகை ஒவ்வாமையை நீக்கியதே. இது நம் முன்னோர் கண்டறிந்திருந்த அநுபவ உண்மை அல்லவா? வாடிய கற்றாழை மடல் தென்னங்குருத்து மட்டுமல்ல பனங்குருத்து, வாழைக் குருத்து, வேப்பந்தளிர், ஆடாதோடைச் சருகு, வாடிச்சருகான கற்றாழை மடல் போன்ற பலவகை இலைகளின் புகையையும் வெள்ளெருக்கம்பூ, மாம்பூ போன்ற பல பூக்களின் புகையையும் குங்கிலியம், சாம்பிராணி போன்றவற்றின் புகையையும் நம்முன்னோர் பயன்படுத்தி நோய்களை நீக்கியதை வாகடங்கள் [வைத்திய ஏடுகள்] கூறுவதால் அறியலாம். இவற்றின் புகை ஈ, நுளம்பு, சிலந்தி, தேள் போன்றனவற்றின் தொல்லைகளில் இருந்து காத்ததோடு, கிருமி கொல்லியாக தொற்று நோய்களையும் தடுத்தது. குங்கிலிய மரம் குங்கிலியம் என்று சொன்னதும் சைவசமயத்தவர் மனக்கண்ணில் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாரே வருவார். பல்லாயிர வருடங்களாக குங்கிலியத்தை மனிதர் பயன்படுத்தி வருவதை வரலாறு காட்டுகிறது. குங்கிலிய மரத்திலிருந்து[shorea robusta] வடிந்த பாற்கட்டியே குங்கிலியமாகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட குங்கிலிய மரத்தை சால் மரம் என்றும் கூறுவர். இவை மிக உயரமாக வளரக்கூடியவை. ஜலரி என்று அழைக்கப்படும் மரம் மூன்று மீட்டர் உயரம் வரை வளரும். குங்கிலியம் மருத்துவ வாகடங்கள், நிகண்டுகள் குங்கிலியத்தை குங்கிலிகம், குங்குலியம், குக்குலு என்றும் குறிக்கின்றன. குங்குதல் என்றால் நிலைகெடல் அல்லது குறைதல் என்ற கருத்தைத் தரும். தணலில் தூவப்படும் குங்கிலியம் உருகித் தன் நிலைகெட்டுப் போவதால் குங்கிலியம் என அழைத்தனர். குங்குலிய மரத்தில் பல இனங்கள் உண்டு. இனத்துக்கு இனம் குங்கிலியத்தின் நிறமும் மணமும் மாறுபடுவதோடு நோய் நீக்கும் தன்மையும் வேறுபடுகிறது. செங்குங்குலியம், பச்சைக் குங்குலியம், வெண்குங்குலியம், மஞ்சள் நிறக்குங்கிலியம், கருங்குங்குலியம், எருமைக்கண் குங்குலியம், பறங்கிக் குங்குலியம் எனக் குங்கிலியம் பலவகைப்படும். இலங்கையில் கிடைத்த ஒருவகைக் குங்கிலியத்தை இங்கிலாந்தில் ஒரு அந்தர் £14.50 என்ற விலைக்கு 1883ம் ஆண்டில் விற்றிருக்கிறார்கள். நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும் சாம்பிராணியும்[Frankincense - C20H32O4] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. குங்குலியப்பூ நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும். ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மவர்கள் முழுகியதும் தலைமயிருக்கு சாம்பிராணிப் புகை இட்டார்கள். சாம்பிராணியின் புகை மூளையில் கட்டி [Brain Tumour] உண்டாகாது தடுத்ததுடன் தலைமயிர் நரைக்காதும் காத்தது. மேலை நாட்டு மோகத்தில் நாம் அதைக் கைவிட்டு hairdryer போடுகிறோம். பண்டை நாளில் இருந்து இன்றுவரை உலகில் உள்ள எல்லாமதப் பூசைகளிலும் கோயில்களிலும் தூபமாக குங்குலியமும் சாம்பிராணியும் போடுகிறார்கள். அவை கலப்படம் இல்லாது இருக்கும்வரை அவற்றால் மனிதருக்கு நன்மையே கிடைக்கின்றன. இன்றைய உலகம் செய்துவரும் நகரமயமாக்கல் என்னும் நாகரீகத்தால் காடுகளை அழிக்கிறோம். உயர்ந்த கோபுரங்களோடு கோயில்களைக் கட்டி அழகு பார்க்கிறோம். கோயிலைப் புனிதமாக்கும் எண்ணத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மரங்களை வெட்டி, புல் பூண்டுகளைச் செருக்கி பளிங்குக் கற்களைப் பதித்து நமது செல்வச் செழிப்பைப் பறை அடிக்கிறோம். ஆனால் கோயில்களில் தூபமாகப் போடும் சாம்பிராணி மரத்தையோ குங்குலிய மரத்தையோ எந்த சமயத்தைச் சேர்ந்தோராவது நட்டு வளர்க்கிறார்களா? இம்மரங்களை எந்தக் கோயிலின் அருகிலாவது பார்த்ததுண்டா? சாம்பிராணிமரம் ஒருமரத்திலிருந்து ஒருவருடத்திற்கு ஒரு கிலோ சாம்பிராணியோ ஒருகிலோ குங்குலியமோ பெறமுடியுமென்பதே மிகவும் வேதனையான விடையமாகும். அந்நாளில் இயற்கையாக மரப்பட்டையில் உண்டாகும் வெடிப்பில் இருந்து வடிந்த சாம்பிராணியைப் பெற்ற நாம் இப்போது மரத்தைக் கீறி சாம்பிராணி பெறுகிறோம். உலகம் 85% சாம்பிராணியை சோமாலியாவில் இருந்தே பெற்றுவந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அங்கும் காடுகள் அழிக்கப்படுவதாலும் மரம் நடுவார் இன்மையாலும் சாம்பிராணி உற்பத்தி வீழ்ச்சி அடைகிறது. மேலே படத்தில் பாருங்கள் அந்த வெளியில் எத்தனை மரங்கள் நிற்கின்றன. அத்துடன் இம்மரங்கள் மிக மிக மெதுவாக வளர்வன. இன்றைய விஞ்ஞான உலகமும் சாம்பிராணியில் உள்ள இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை நீக்குவதைக் கண்டு கொண்டன. சாம்பிராணி கிருமிகளைக் கொல்வதால் உணவு சமைக்கும் இடத்தில் சாம்பிராணிப்புகை இட்டனர். அப்புகை சமைத்த உணவுகள் கெட்டுப் போகாது காத்தது. உணவு சமைக்கும் சமையலறை - அகடுக்களை, மடைப்பள்ளி எனவும் அழைக்கப்படும். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே இலங்கையின் மாந்தையில் வாழ்ந்தோர் வீமன் எழுதிய மடைநூல் சொல்லியபடி சமையல் செய்ததை “பனிவரை மார்பன்[வீமன்] பயந்த நுண்பொருள் பனுவலின்[நூல்] வழாஅப்[வழுவாது] பல்வேறு அடிசில்[உணவு]” - (சிறுபாணாற்றுப்படை: 240 - 241) என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. இவ்வரிகளுக்கு உரைஎழுதிய நச்சினார்க்கினியார் ‘பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள் பனுவலை’ - வீமன் எழுதிய மடைநூல் என்கிறார். எனவே மடையில் இட்ட சாம்பிராணியே மடைச் சாம்பிராணி. பேச்சு வழக்கில் அது மடச்சாம்பிராணியாக மருவிவிட்டது. புத்தி குறைந்தோரைப் பார்த்து மடச்சாம்பிராணி என்று தமிழர் திட்டுவது உண்டல்லவா? ‘மடைச்சாம்பிராணிக்கு/மடச்சாம்பிராணிக்கு எங்கே போவது?’ என்று நம்மை நாமே கேட்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நம் நாட்டில் வளரக்கூடிய இனத்தைச் சேர்ந்த சாம்பிராணி, குங்கிலிய மரங்களை நாம் வளர்க்கலாம். இல்லையேல் மாமன்னன் அலெக்சாண்டரைப் போல் சாம்பிராணிக்காக நாடுகளைப் கைப்பற்ற வேண்டிய நிலை வரும். அலெக்சாண்டர் சிறுவனாக இருந்த பொழுது லியோனிடாஸ்[Lionidas] என்பவரிடம் கல்வி கற்றார். ஒரு நாள் அலெக்சாண்டர் கைநிறைய சாம்பிராணியை அள்ளி நெருப்பில் தூவுவதைக் கண்ட லியோனிடாஸ், “இப்படி நெருப்பில் இட்டு சாம்பிராணியை வீணாக்க இது விளையும் நாடுகளைக் கைப்பற்ற வேண்டும்” என்று கண்டித்தார். அது நடந்து இருபது ஆண்டுகளின் பின் அலெக்சாண்டர் கி மு 332ல் காஷா[Gaza]வைக் கைப்பற்றினார். அப்போது தனது ஆசிரியருக்கு கப்பல் நிறைய சாம்பிராணியை அனுப்பிவைத்ததோடு ‘கஞ்சத்தனம் இல்லாது தாராளமாகச் சாம்பிராணியைப் பாவியுங்கள்’ எனத் துண்டெழுதி அனுப்பினான். அலெக்சாண்டரைப் போல் நாடுகளைக் கைப்பற்ற முடிந்தாலும் சாம்பிராணி மரங்களுக்கு எங்கே போவது? இனிதே, தமிஇன்இதழ்.கொம்ழரசி.1 point
-
1 point
-
நன்றி தெரிவித்தல் நாள் - தேங்ஸ் கிவ்விங் டே அமெரிக்கர்களுக்கு அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட தமிழகத்தில் கொண்டாடப்படும் "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழ மையிலும் நடைபெறும். இந்த வருடம்(2009)நவம்பர் 26 ஆம் தேதி இங்கு நடைபெறுகிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள். http://bhrindavanam.blogspot.com/search/label/கொண்டாட்டம்1 point
-
1 point
-
வணக்கம் ஈழப்பிரியன் கொஞ்சம் வேலைப்பழுகாரணமாக இப்போது தளத்துக்கு வருவதை தவிர்த்திருந்தேன் இப்போது மாவீரர் வாரம் என்பதால் வந்து பதிவு இடுகின்றேன். மேலும் என்னை இவ்வளவு அன்பாக வரவேற்றதற்கு தலை வணங்குகின்றேன்.... நன்றி அன்புடன் தமிழரசு.1 point
-
10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்... அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன். தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன். படத்தலைப்பு - சொர்க்கத்தின் இருள் நாட்கள் (Dark days of heaven) கதைச் சுருக்கம் - இறுதி யுத்த காலத்தில் ஒரு காணிக்குள் மாட்டுப்பட்டுள்ள ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டம் படத்துக்குரிய செலவு - 28 இலட்சத்து 50 ஆயிரமாகும். ஒரு பங்கின் பெறுமதி 1000 இலங்கை ரூபாயாகும். (மிக மிக குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பணம் மீளளிப்பிற்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படுகிறது) இம்முயற்சிக்கு தற்போது உங்களால் இணைய முடியாவிட்டாலும் உங்கள் நண்பர்களுக்காவது இத்தகவலை அறிமுகப்படுத்தி விடும்படி அன்போடு வேண்டி நிற்கிறேன். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் மதிசுதா ஒப்பந்த விபரம் இத் தொடுப்பில் உள்ளது https://drive.google.com/open?id=1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1 இதுவரை நான் செய்த குறும்படங்கள் சில.... 1) பாதுகை 2) தாத்தா1 point
-
தமது விருப்பங்களாக (Interests) தமிழ், காதல், வீரம் என ஆதித்த இளம்பிறையன் அவர்கள் அடுக்கியது ஒரு மூன்று சொற்கவிதை. தம் வாழிடம் (Location) தமிழ் தேசம் என்றது தனிக் கவிதை. அவர்தம் வாழ்வு 'ரசனை' என்று நாம் சேர்ப்போமே !1 point
-
இன்று சர்வ தேச பெண் குழந்தைகள் தினம்?அனைத்து பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!?1 point
-
தமிழரசு உங்களது... "புரோஃபில்" பக்கம் மிக அழகாக உள்ளது.?1 point
-
இசையால் வசமாக இதயமுண்டோ…! இசைத்துறையில் வளர்ந்துவரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசை கேட்டால் புவி அசைந்தாடும்….! இசையால் வசமாக இதயமுண்டோ….! அந்தவகையில், இசை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள்…! v பியானோ இசைக்கருவியில் மொத்தமாக 88 விசைக்கருவிகள் உண்டு. இதில் 52 வெள்ளைவிசைக்கருவிகளும், 36 கறுப்பு விசைக்கருவிகளும்அடங்கும். v உலகில் மிகப்பழமையான இசைக்கருவியாககருதப்படுகின்ற கழுகின் எலும்பினால்தயாரிக்கப்பட்ட புல்லாங்குழல் தென்மேற்குஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும். இது 35,000 ஆண்டுகள்பழமைவாய்ந்தது என ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர். v இசை மீதான பயம் மெலோபோபியா (Melophobia) எனப்படுகின்றது. v அயர்லாந்து நாட்டு குற்றி நாணயத்தில் உள்ளஇசைக்கருவி யாழ் (Harp) ஆகும். v 1877ம் ஆண்டு ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்தஇசையமைப்பாளர் ஜொகன்னஸ் பிராம்ஸ்அவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கெளரவபட்டமளிக்க முன்வந்தது, ஆனால் படகு பயணபயத்தின் காரணமாக தனக்கானகெளரவமளிப்பினை அவர் நிராகரித்தார். v முதன்முதலாக தொலைபேசி இணைப்பினூடாகஇசையானது 1876ம் ஆண்டுஅனுப்பப்பட்டது. 1876ம்ஆண்டு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும். v உலகில் அதிகளவில் விற்பனையாகும் இசைக்கருவிஹார்மோனிகா ஆகும். vஅண்மைய நாட்களில் DJ (Disc Jockey)என்கின்றவார்த்தை மிகப்பிரபலமானதொன்றாகவிளங்குகின்றது. இவ்வார்த்தை முதன்முதலில் 1937ம்ஆண்டு பயன்படுத்தப்பட்டது.1 point
-
அளவுக்கு அதிகமாக நல்லவனா வாழப்பழகிகொண்டதால் என்னவோ எனக்கே எனை பிடிக்கல1 point
-
வணக்கம் சுவி அண்ணருக்கு ...............உங்களுக்கும் சோதனை மேல் சோதனை .. தொடர் எழுத் விருப்பத்தால் எனக்கு எழுத் நேரம் இல்லை என் எண்ணுகிறேன் களவு கார் விபத்து என் உங்களுக்கும் பிரச்சனை உங்களுக்கு எழுதியதால் எனக்கு ஒருமணப் பாரம் குறைந்த மாதிரி .. எல்லாம் காலப் போக்கில் நடக்கும் எதோ வழி இருக்கும் என் எண்ணி மனதை த்தேற்றி உள்ளேன். . நானும் வ ஆவணி ,...............13.....20 லண்டனிலும் 20......30 பிரிஸிலும் நின்றேன். தற்போது யாழில் பேசுவது உங்களிடம் மட்டும் தான் .. வர வர உங்கள் எழுத்து நல்ல முன்னேற்றம் . இடை இடை நகைச்சுவை வேறு .... அந்தக் கணவான்களுக்கு ஆண்டவன் ஒரு நல்ல தண்டணை ...........கொடுக்க வேண்டும். தொடருங்கள் நான் தற்போது யாழ் கள வாசகி வாசி மட்டுமே................. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் மகள் கட்டிவிடடார் மகன் ......கடைசி மகனும் உள்ளார்களாக ....நிலா மதி1 point
-
நான் காண்பிப்பேன்..ஆனால் நீ பார்க்கக் கூடாது என்பதுதான் இன்றைய பெண்ணிய வாதம்.1 point
-
முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு,பொருள்கொடு,உணவு கொடு,உடை கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே.1 point
-
தருணங்களில் வாழுங்கள் இந்த நிமிடம், இந்த வினாடி எவ்வளவு அழகானது எவ்வளவு அர்த்தமானது எவ்வளவு அரியது இது இந்த தருணம் இந்த வினாடி எமக்கு இன்னொருக்கா வரும் என்பது என்ன நிச்சயம் வாழுங்கள்...ஒவ்வொரு தருணங்களிலும்... முதுகு நோகும் தனி மனித கொள்கைகள் வேண்டாம் எவருடனும் ஆத்திரம் வேண்டாம் ஒரு அன்பு மிக்க சொல்லுக்காக பல இலட்சம் மானுடர்கள் காத்திருக்கின்றனர் என்று புரிந்து கொள்ளுங்கள் உங்களை எவர் புறக்கணிப்பினும் அன்புக்காக தவமிருக்கும் இதயங்களை நினைத்துக் கொள்ளுங்கள் ஒரு அன்புச் சொல்லுக்காக காத்தி...1 point
-
ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம்1 point