Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 05/22/22 in Posts
-
2 points
-
அண்மையில் யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றை sponsor செய்திருந்தேன். செலவு தோராயமாக 6 இலட்சங்கள் முடிந்தது. கொலம்பியாவில் நடைபெறும் போட்டிக்குச் செல்வதற்கான செலவு 15 லட்சங்கள் மட்டும்தானா ? செய்தியில் ஏதோ தவறிருக்கிறது போல தென்படுகிறது.2 points
-
1 point
-
தம்பரும், சுப்பரும்! **************** தம்பர்.. மக்கள் விரும்பியே மன்னனைத் தெரிந்தும்-பின் மாபெரும் போருக்கேன் வந்தனர். சுப்பர்.. மக்களை மறந்துமே மந்திரி சபைக்குத்தான் மாபெரும் சலுகைகள் செய்ததால். தம்பர்.. சிங்கள மக்களே சீறும் சிங்கமாய் சினம் கொண்டு வீதிக்கேன் வந்தனர். சுப்பர்.. பங்களா கட்டியே வாழும் தலைவர்கள் வறுமைக்குள் மக்களை விட்டதால். தம்பர்.. போரை வெண்றவர் புதுமைகள் செய்தவர் போற்றிய மக்களேன் வெறுத்தனர். சுப்பர்.. போரை சொல்லியே இனத்தை பிரிக்கின்ற பொய்கள் அவர்கட்கு தெரிந்ததால். தம்பர்.. விமானத்தளம், வீதிகள்,விளக்குகள் விரும்பி தந்தோரை ஏன் வெறுத்தனர். சுப்பர்.. துண்டு துண்டாக்கி நாட்டை விற்றுமே- எம்மை சோறுக்கு அலைய விட்டதால். பிச்சையெடுத்து எம் நாடு வாழ்வதா இது பெரும் துன்பமில்லையா தம்பர். வேலியே பயிரை மேய்வதென்பது இங்கு வேடிக்கையில்லையா சுப்பர். மக்கள் நலனையே தன்னலமாக்கும்-அரச மந்திரி சபை அமைக்கனும் தம்பர். இல்லையேல் இந்துமா கடலில் இலங்கையின் பெயர்மாற்றி எவனோ ஆழுவான் சுப்பர். அன்புடன் -பசுவூர்க்கோபி.1 point
-
அந்த இலங்கை மக்களுக்கு உதவ ‘டீ’ மொய்விருந்து..! புதுக்கோட்டை இளைஞரின் முயற்சி-இளைஞருக்கு பாராட்டு புதுக்கோட்டை : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் டீ மொய்விருந்து வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் கலாச்சாரம் சார்ந்த விழாவாக கருதப்படும் கோடிகள் குவியும் மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் மொய் விருந்து விழாக்கள். அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும் பரவி, தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது. புதுக்கோட்டை மொய்விருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் முதன்முதலாக தொடங்கும் மொய் விருந்து விழா, அதனை சுற்றிய பகுதிகளான அணவயல், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு சேந்தன்குடி குளமங்கலம் என தொடர்ந்து அடுத்தடுத்த ஊர்களில் வரும் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் வரை நடைபெறும். மொய் விருந்து விழாவிற்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் அன்போடு மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டு கறி விருந்தும் பரிமாறப்படுகிறது. டீ மொய் விருந்து மேலும் மொய்விருந்துக்கு பெயர் போன புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினி மூலம் பணம் வசூலிக்கும் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக டீக்கடை உரிமையாளர் ஒருவர் டீ மொய் விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கைக்கு உதவி .அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் அவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அடங்கிய முதல் கப்பல் இலங்கை சென்றுள்ளது. மேலும் நல்லுள்ளம் படைத்த ஒரு உதவி வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்ததை அடுத்து பல்வேறு தரப்பிலும் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர். கடையில் உண்டியல் மேலும் நல்லுள்ளம் படைத்தவர்கள் இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்ததை அடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பகவான் டீக்கடை என்ற பெயரில் டீக்கடை நடத்திவரும் சிவக்குமார், டி மொய் விருந்து நடத்தி உள்ளார். அவரது கடையில் டீ குடித்து விட்டு அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெரிய உண்டியலில் தங்களால் இயன்ற அளவு நிதி அளித்தால் அதனை இலங்கை மக்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார். இளைஞருக்கு பாராட்டு இவரது செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது அதேபோல கோரோணா காலத்தில் கடையின் உரிமையாளராக சிவக்குமார் தன்னால் முடிந்த உதவியாக தனது கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டீ கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டும் போதும் என இதே போல மொய் விருந்து நடத்தி ஒரு காலத்தில் உதவியது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/pudukottai/tea-shop-owner-from-pudukottai-to-help-the-people-of-sri-lanka-459245.html1 point
-
1 point
-
முள்ளிவாய்க்கால் முடிவில் வெடி கொழுத்தி கொண்டாடியவர்களுக்கும் இந்த வெடிக்கும் என்ன வித்தியாசம்? சிறிலங்கா பேரின வாத அரசுக்கு உதவியபோது உக்கிரேனில் ரஷ்ய சார்பு அரசாங்கம் இருந்தது. இப்போதுள்ள அதிபருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கூடவா தெரியாது.1 point
-
கிருபன் யாழ்களத்து ஒரு சொச்ச கருத்தாளர்களின் அரசியல் தெளிவில்லாத, சல்லித்தனத்தை இதை விட மேலதிகமாக விமர்சிக்க முடியாது. நன்றி .1 point
-
கிருபன் அண்ணர்.. இன்னும் முழுமையா இந்த யுத்தம் பற்றி விளங்கிக்கொள்ளவில்லை அல்லது விளங்கினதா காட்ட விரும்பவில்லை போலும். பெரும்பான்மை.. ரஷ்சிய மொழி பேசும் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை உக்ரைன் பறித்து.. ரஷ்சியாவோடு.. நேரடியாக முரண்பட்டு.. நேட்டோ சார்பு.. ஐரோப்பிய ஒன்றிய சார்பு நிலையை வலுப்படுத்த.. நேட்டோ நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யமுற்பட்டதன் விளைவே இந்த யுத்தம். டான்பாஸ் பிராந்தியத்தில்.. தற்போது உக்ரைனில் கொல்லப்பட்டதை விட அதிகம் மக்கள் உக்ரேனியப் படைகளால் கொல்லப்பட்டிருப்பதோடு.. பள்ளிக்கூடங்கள்.. வைத்தியசாலைகள் என்று எதுவுமே மிஞ்சாது இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டு வந்தது. இது 2014 இல் இருந்து நடந்து வருகிறது.. அந்தப் பிராந்திய மக்கள் உக்ரைனில் இருந்து தாம் பிரிந்து செல்ல விரும்பியதாக இனங்காட்டிய பின்னரும்.. உக்ரைன் வலிந்து ரஷ்சியாவை வேறு நாடுகளின் தேவைக்காகப் பகைத்துக் கொள்ளும் வகையில்.. இந்த மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்கள் மீது இராணுவ அடக்குமுறைகளையும் இராணுவ ஆக்கிரமிப்பையும் வலுப்படுத்தியது. இதன் ஒரு கட்டத்தில்.. டான்பாஸ் ரஷ்சிய ஆதரவுப் போராளிகள்.. டான்பாஸ் பிராந்தியத்தின் கனிசமான அளவை கைப்பற்றி தம் வசப்படுத்திக் கொண்டனர். தமது நிலைகளை அங்கு வலுப்படுத்தி.. முகமாலை போன்று ஒரு முன்னரங்க அரணை அமைத்துக் கொண்டனர்.. தமது கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பிராந்தியத்தில். இந்த பிராந்தியத்தை மீளக் கைப்பற்றும் நோக்கில்.. உக்ரைன் முன்னெடுத்த பல இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்த நிலையில்.. உக்ரைன் நேரடியாகவே நேட்டோ நாடுகளிடம் இருந்து ஆயுத.. இராணுவ தளபாட உதவிகளையும் இராணுவ தந்திரோபாய உதவிகளையும்.. நேரடிப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டு.. இந்தப் போராளிகள் மீது பாரிய அளவில் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்த நிலையிலும்.. நேட்டோவின் நேரடி ஆதிக்கம்.. உக்ரைனில் அதிகரிக்க ஆரம்பித்ததன் அடிப்படையிலும்.. ரஷ்சியா மீது மேற்குலகு தமது தேவைக்காக பொருண்மிய தடைகளை கொண்டு வந்ததன் விளைவாகவுமே ரஷ்சியா இந்த யுத்தத்திற்குள் முழுமையாக இழுத்துவிடப்பட்டது. சிரியாவில்.. ரஷ்சியாவிடம் தாம் ராஜதந்திர ரீதியில் தோற்க வேண்டி வந்ததற்கு பழிவாங்கும் வகையிலும் ரஷ்சியாவின் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னான மீள் எழுச்சி கண்டும்.. நேட்டோ மற்றும் அமெரிக்க சார்ப்பு மேற்கு நாடுகளின் பகைமைத் தன்மை காரணமாக கொழுந்துவிட்டு எரிவதே இந்த யுத்தம். இதில்.. ரஷ்சிய மொழி பேசும்.. டான்பாஸ் பிராந்திய மக்களை தான் ஈழத்தமிழருக்கு ஒப்பிட முடியுமே தவிர.. மேற்குலக.. நேட்டோ ஆதரவும் ஆயுதமும் பெறும்.. உக்ரைன் ஈழத்தமிழர்களின் நிலையை எப்பவுமே எட்ட முடியாது. ஏனெனில் உக்ரைன் சுதந்திரம் வேண்டிப் போராடவில்லை.. மாறாக ஆக்கிரமிப்பை நோக்கி போர் செய்கிறது. டான்பாஸ் பிராந்தியம் விடுதலை வேண்டிப் போராடுகிறது.. ரஷ்சியா அதற்கு ஆதரவளிக்கிறது. ஈழத்தில் ஹிந்தியா செய்தது போல் அன்றி தன்னை நம்பி வந்த டான்பாஸ் மக்களை என்ன விலை கொடுத்தாலும் பாதுகாப்பதை கொண்டியங்கும் ரஷ்சியாவா.. சொந்த பிராந்தியத்தில் வாழ்ந்த ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்று குவித்து நேட்டோ.. ஐரோப்பிய ஒன்றிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்.. உக்ரைனா சிறந்தது.. என்றால்.. ரஷ்சியா என்பது வெளிப்படை ஆகும்.1 point
-
ஒரு அரசுக்கு…. விளையாட்டுத் துறைக்கு செலவழிக்க 15 லட்ச ரூபாய்க்கு வழியில்லை. ஆனால் இன்னும் தமிழர் பகுதியில்… விகாரை கட்டுவதிலும், இராணுவத்துக்கு…. பொது மக்கள் காணியை அபகரிப்பதிலும், முழு மூச்சாக இருக்கிறார்கள்.1 point
-
கிருபனின் கோபம் சரியானது.....நியாயமானது....வரவேற்கப்படவேண்டியது...இலங்கை தமிழரின் போரட்டத்துக்கு....ஆதரவை அதிகரிப்பு செய்யக்கூடியது.....இலங்கை அரசை யார் ஆண்டபோதும். ..இன்றைய நிலையிலும்...ஓர் ஆக்கிரமிப்புயாளனென்று ...பறைசாற்றுகின்றது.இலங்கை தமிழர் ஆகிய எமக்கு தமிழ்ஈழம் அல்லது மிகவும் உறுதியான சுயாட்சி கிடைக்கவேண்டுமானால்....எங்கு எல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அவற்றை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் அப்படி செய்யாமல் ஆதரிப்போமாகில். எங்கள் விடுதலைக்கு பின்னடைவை எற்ப்படுத்தும்1 point
-
1 point
-
உந்த இரட்டைகுடியுரிமையை வைச்சுக்கொண்டு போட்ட ஆட்டம் போதும், அடங்குங்கோ ஓரிடத்தில. மூஞ்சூறு மாதிரி இங்கு சுரண்டிக்கொண்டு போய் அங்கு பதுக்குவது, பிறகு கையை வீசிக்கொண்டு வந்து அதிகாரம் செலுத்துவது எல்லாம் அடங்கிச்சு.1 point
-
1 point
-
1 point
-
கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம் May 18, 2022 — வேதநாயகம் தபேந்திரன் — கொழும்பு லொட்ஜ்களுக்கும் (லாட்ஜ்?) எமக்கும் போர்க் காலத்தில் நகமும் சதையுமான வாழ்க்கை முறையொன்று இருந்தது. போரின் வெம்மை தாளாமல் வடக்கு கிழக்கை விட்டுத் தப்பியோடிய பலருக்கு அடைக்கலம் கொடுத்தவை இவை. நெல்லியடிக்காரரைச் சந்திக்க வேண்டுமா? பம்பலப்பிட்டி காசில் லொட்ஜ்க்குப் போங்கோ. இணுவில் ஆக்களைக் காண வேண்டுமா? ஆட்டுப்பட்டித்தெரு பி.ஜி.லொட்ஜ்க்குப் போங்கோ. இப்படியே ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்கள் இருந்தன. லொட்ஜ் உரிமையாளர்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தமது ஊரவரை உறவினரை அரவணைத்தபோது அது அந்த ஊரவரின் அடையாளமாக இருந்து. ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்களும் இருந்தன. பணவசதி படைத்த டீசன்ரான கிறவுட் என்றால் வெள்ளவத்தை. பணவசதி குறைந்த பாமர மக்களாயின் கொட்டஹேன (கொட்டாஞ்சேனை), புறக்கோட்டை போன்ற இடங்கள்தான் கைகொடுக்கும். ஆகவும் பணவசதி குறைந்தோராயின் நீர்கொழும்பு. 1980களின் இறுதி, 1990களில் வத்தளை, சீதுவ, ஜாஎல போன்ற இடங்களை தமிழர்கள் எட்டியும் பார்க்க முடியாது. லொட்ஜ்ஜில் தங்குவதானால் பொலிஸ் றிப்போட் கட்டாயமென்ற நடைமுறை பிற்காலததில் வநதது. கொழும்பு சென்றால் லொட்ஜில் தங்காமல் வடபகுதிக்குத் திரும்பிவரும் வாழ்க்கை ஒன்றிற்குள் வந்துவிட்டோம். போரின் நிறைவு தடையற்ற வாழ்க்கையைத் தந்தமையை வரவேற்கத்தான் வேண்டும். ஆனாலும் லொட்ஜ் வாழ்க்கையின் ஞாபகங்கள் அடிக்கடி தாலாட்டவே செய்கின்றன. யாழ்ப்பாணத்தான் ஆளுக்குச் சாதி பார்ப்பதுபோல லொட்ஜ்சுக்கும் சதிபார்த்தன். ஐலண்ட் லொட்ஜ் என்றால் அதுக்கு ஒரு பெயர். பி.ஜி.லொட்ஜ் என்றால் அதுக்கு ஒரு ஸ்ராண்ட்டட். லொட்ஜ்களைச் சுற்றி ஒரு ஆட்டோக்காரக் கூட்டம் இருக்கும். தமிழிலும் சிங்களத்திலும் வெளுத்து வாங்குவார்கள். பாஸ்போட் எடுக்க வேண்டுமா? ஐசி எடுக்க வேண்டுமா? பிறப்புச் சான்றிதழ், விவாகப்பதிவுச் சான்றிதழ் எடுக்க வேண்டுமா?தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களுக்குச் செல்லவேண்டுமா? எல்லாமே ஆட்டோக்காரருக்கு அத்துப்படி. அதுபோல சிங்களத்தில் கதைத்துக் காரியமாற்றத் தெரிந்தவர்களுக்கும் படிவங்களை ஆங்கிலத்தில் சரியாக நிரப்பத் தெரிந்தவர்களுக்கும் தனிமதிப்பு. அப்போதெல்லாம் ஒன்லைன் சிஸ்ரங்கள் இல்லை. அதனால் வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களின் படிவங்களைச் சரியாக நிரப்பத் தெரிந்தோருக்கு உயர்மதிப்புச் சுளையன வருமானம். ஏன் இப்போது கூட ஒன்லைனில் சரியாக நிரப்பத் தெரிந்தோருக்கு மாத வருமானம் இலட்சங்களைத் தாண்டும். அன்றைய நாள் லொட்ஜ்சுகளில் வெளிநாட்டுக் கனவுடன் இளைஞர்களும், யுவதிகளும் வந்திருந்தார்கள். விடுதலைப் புலிகளைப் பிடிப்பதற்கென்று நடக்கும் சுற்றிவளைப்பில் அப்பாவிகளானோர் தப்பவேண்டும். பகல் முழுவதும் அலுத்துக் களைத்துத் திரிந்தபின் இரவு நல்லதொரு மெய் உறக்கத்தில் இருப்போம். புலிவேட்டைக்கென பொலிஸ், ஆமிப்படையொன்று வரும். சந்தேகப்பட்டு பொலிஸ் பிடித்தால் உடுத்த உடுப்புடன் அரைகுறை நித்திரையால் கண்ணெரிய கண்ணெரியப் பயந்த பயந்த பொலிஸ் ஸ்ரேசன் போகவேண்டும். பொலிஸ் பிடித்துப்போனால் லொட்ஜ் மனேச்சரோ, முதலாளியோ போய்த்தான் மீட்கமுடியுமென்ற நிலையும் பலருக்கு இருந்தது. பொலிஸ் அணைவு இல்லை. சிங்களம் தெரியாது போன்ற காரணங்களே இதற்குக் காரணம். பிணை எடுத்துவிடுவோருக்கு வெளிநாட்டுப் பணத்திலோ, கொண்டுவந்த காசிலோ கவனிப்பு இருக்கும். பயணம் சரிப்பட்டால் லொட்ஜ்காரனே பொலிசுக்குத் தகவல்கொடுத்துப் பிடிக்கச்செய்து ஆயிரங்களோ ஓரிரு இலட்சங்களோ கறந்துவிட்டுப் பிணை எடுத்த சம்பவங்களும் உண்டு. யாழ்ப்பாணத்து வேலிக்குள் கட்டுக்கோப்பாக இருந்த சில குமருகள கட்டுப்பாடன்றி கட்டாக்காலயாக இருந்த கோலங்களம் உண்டு. வெளிநாட்டு மாப்பிளையை மறந்து ஆட்டோக்காரனோடையோ, மினி சினிமாக்காரனோடையோ அல்லது பயணம் போகவந்த இளைஞனோடையோ புதுக்குடித்தனம் நடத்திய விடலைப் பெண்களும் உண்டு. ஊரில் சகோதரிகள் குமராக இருக்க வெளிநாடுபோய் உழைத்துக் கரைசேற்றுவேன் எனவந்த சிலபெடியள் வெளியூர்க்காரிகளிடம் கொண்டாட்டம் வைத்து மடியில் இருந்தவற்றையெல்லாம் கொடுத்து ஒட்டாண்டியான சங்கதிகளும் உண்டு. வெளிநாட்டுக் கனவைக் கைவிட்டு, வெள்ளை சொள்ளையாக ஒருத்தியைப் பார்த்து குடும்பமாகியரும் உண்டு. போரின் வெம்மையால் கொழும்புக்கு ஓடிவந்து பயணம் போகவும் வழியின்றிச் சாப்பிடவும் வழியுமன்றி அல்லாடியரும் உண்டு. அரைப்பாசல் சோற்றையெடுத்து அதையே அரை அரைவாசியாக உண்டு வறுமை மறைத்து வாழ்ந்தோரும் உண்டு. லொட்ஜ்களில் தொலைபேசி வசதிகள் இருக்கும். கண்ணாடியால் சுற்றிவர அடித்த சிற்றறை ஒன்றில்தான் பெரும்பாலும் தொலைபேசி கதைக்கவேண்டும். வெளிச்செல்லும் அழைப்புக்கு ஒரு கட்டணம். உள்வந்த அழைப்புக்கு இன்னுமொரு கட்டணம். 15 நிமிடங்கள் கதைத்தால் 20 நிமிடங்களெனப் பொய்க் கணக்குவிட்டு ஏற்கனவே உள்ள கொள்ளைக் கட்டணத்தைவிட இன்னுமொரு கொள்ளையடிக்கும் சில வித்துவான்களும் உண்டு. இன்றி சிறிதேவிரெயின் அதிகாலையில் சீறிக்கொண்டு ஓடுகிறது. அதன் பின்னால் அடுத்தடுத்து ரெயின்கள் ஓடுகிறது. அதிகாலையில் வெளிக்கிட்டால் அடுத்தநாள் அதிகாலையில் வீடு. அதுபோல ஏசி பஸ்ஸா காசு குறைந்த தூசி பஸ்ஸா ஒன்றல்ல இரண்டல்ல ஒரு நூறு ஓடுகிறது. இரவு ஏறினால் விடிகாலை கொழும்பு. உடனேயே அலுவல் முடித்தால் மதியம் பஸ் எடுத்தால் முதல் சாமம் வரமுன்பே வீடு. எம்மவரின் புலம்பெயர்வுக்கும் ஏஜென்சித் தொழிலுக்குமான தொடர்புக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. இடைத்தங்கல் நாடுகளில் இருந்த ஏஜென்சிகளின் கதைகள் எனச் சொல்லப்போனால் அவை அதிகம் அதிகம். போர் முடிந்து 13 வருடங்களைக் கடந்து வந்துவிட்டோம். ஆதனால் ஏஜென்சித் தொழிலில் பெரும் தேய்வு ஏற்பட்டுவிட்டது. https://arangamnews.com/?p=77131 point
-
ஓம்.... உங்களுக்கு வேற வேலை இல்லை, ஒருத்தர் உடன், ஒருத்தர் அடிபடுவியல்..... உள்ள எல்லா வசதியான ஆட்களை விடமாடியல்... ஒண்டு கடத்தி கப்பம் பறிப்பியல் அல்லது அவர்களின் ஆதனங்களை எரிப்பியல்.... படிச்ச நாடு எண்டு தப்பட்டம் அடிக்கிறது..... படிச்ச ஆட்களை நாட்டிலிருந்து அடித்து திரத்திப்போட்டு, படிக்காத கொலை பாதக அடி முட்டாளுக்கு நாட்டை ஆள விடுவியல். அந்த வலு கெட்டிக்காரன் விவசாயத்திலை, சேதன பசலை பாவிக்கப்பட்டது எண்டு, ஒரு நாளிரவு பே மப்பில ஆர்டர் போடுவாராம்.. உதெல்லாம் செய்து போட்டு, அந்த முட்டாளை வைத்துக்கொண்டே.... பக்கத்து வீட்டுக்காரன் கைவிடான்... பசிக்கு சோறு தருவான் எண்டால் என்ன நியாயம் அய்யா..1 point
-
அன்னைக்கு ஒரு தினம் தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு ஈடு இணை இல்லா இல்லத்து அரசிக்கு அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர் தினமாம் இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம் பரபரப்பான உலகில் அவளை வாழ்த்த ஒரு தினம். இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால் கண்விழித்து தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள். குடும்ப நிர்வாகி, அன்பால் அதிகாரம் செய்தவள் இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் ஈன்ற பொழுதிலும் தன் மகவைச் சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள். தந்தைக்கு தோளோடு துணை நின்றவள் ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். அழகானவள் ,அன்பானவள் அப்பாவை அடையாளம் காட்டியவள். மறக்க முடியாதவள் , மன்னிக்க தெரிந்தவள். மனம் கோணாத மகாலடசுமித் தாயே மண்ணுலகில் எனக்கு தினமும் அன்னையர் தினம் யாழ் கள அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.1 point
-
தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்) திரி கள நிபந்தனைகளுக்கு முரணான விடயங்களைக் கொண்டிருந்ததால் நீக்கப்படுகின்றது1 point
-
https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர் அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம் பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால் ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக் காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம் போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை. ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில் ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும் ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில் போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர் தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.1 point
-
நீதிமன்றில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிள்ளையானையே விடுதலை செய்த கோத்தா கோஸ்டிக்கு தன்னுடைய உறவுகளை விடுதலை செய்வது பெரிய விடயமல்ல1 point
-
1 point
-
யார் பெரியவர் ? மரத்தின் மேலிருந்து தொங்கும் கூட்டைக் கட்டி, எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள, அதற்கு கீழாக வாசலை வைத்து... தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் அமரவும் இடத்தை ஒதுக்கிக் கட்டியுள்ள தூக்கணாங் குருவி எறும்பினும் சிறிய தொட்டால் நசியக்கூடியது, ஆயினும்.. ஆளுயுர புற்றுக் கட்டி, அதனுள் அடுக்கடுக்காக தங்களுக்கான வீட்டைக் கட்டும் கரையான், தன் உணவான... திரவத்தை கீழே சிந்தாமல் அந்தரத்திலே நிற்கச் செய்யும் தேனி, தன் உணவு தன்னைத் தேடி வந்து, தன் வலைக்குள்ளே விழச் செய்யும் சிலந்தி.. என ஒவ்வொன்றுக்கும், ஒரு திறனை இயற்கை வழங்கியிருக்க... பெரியவர் என யாரும் செருக்கு கொள்ளத் தேவையில்லை. வெண்பா வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. ஔவை படித்ததில் பிடித்தது.1 point