Jump to content

Our Picks

Top content from across the community, hand-picked by us.

மனவலி யாத்திரை.....!

(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
  • 1 reply

பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


Friday, 16 February 2007

காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
  • 19 replies

எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
  • 3 replies

களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
  • 31 replies

சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
  • 5 replies

பிரபாகரன்


தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். 
    • Thanks
    • Like
  • 524 replies

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
ஆதவன்



பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன?
    • Thanks
    • Like
  • 12 replies

வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன்
    • Haha
    • Like
  • 18 replies

எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன்  காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . 
    • Thanks
    • Like
  • 16 replies

அம்மன் கோவில் மணி அடிக்கத் தொடங்கீட்டுது. பின்னேரப் பூசை இப்ப. விதவிதமா சீலை உடுத்திக்கொண்டு பெண்கள் போவினம். எனக்கும் கோவிலுக்குப் போக ஆசைதான். ஆனால் உந்த விடுப்புக் கேட்கிற ஆட்களுக்குப் பதில் சொல்ல எரிசல் தான் வரும். ஏதோ உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்தமாதிரி கூடிக் கூடிக் குசுகுசுப்பினம்.  மூன்று பிள்ளைகளுடன் நான் அம்மா வீட்டுக்கு வந்து பதினொரு மாதங்களாகின்றன.
    • Like
  • 39 replies

இங்கே நிம்மதி!

- மாதா அமிர்தானந்தமயிதேவி

அடர்ந்த காட்டுக்குள் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்தத் துறவி. மாலை நேரம். அடிவானத்தில் சூரியன் மறையப் போவதால், இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்போது கிராமத்து ஆசாமி ஒருவர் பரபரப்பாக, காட்டுக்குள் அந்த மரத்தை ஒட்டிய பாதையில், "மகனே... செல்வமே... எங்கேடா இருக்கே?" என்று உரக்கக் குரல் எழுப்பியபடி ஓடி வந்தார்.

காய்ந்த சருகுகள் மீது அவர் வேகமாக ஓடியதால் எழுந்த சத்தமும், அவரது கர்ணகடூரமான குரலும் துறவியின் தியானத்தைக் கலைத்தது. கோபத்துடன் எழுந்தார். அந்த ஆசாமி அதைக் கவனிக்கவில்லை. காட்டின் உள் பக்கமாகப் பார்வையை வீசியபடி துறவியைத் தாண்டிப் போய்விட்டார். துறவியின் கோபம் எரிமலை மாதிரி பொங்கி வழிந்தது. எப்படியும் இந்த வழியாகத்தானே வந்தாக வேண்டும்... பார்த்துக் கொள்ளலாம்! எனக் காத் திருந்தார் துறவி.
  • 1 reply

** கார்த்திகேசு சிவத்தம்பி**

நினைவின் சுவடுகள்

நிறைவேறும் ஓர் ஆசை

1997 இல், இக்கட்டுரையை எழுதியபொழுது நான் இலங்கைக் கிழக்கப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தநிலைப் பேராசிரியராகக் கடமையாற்றினேன். 1998 செப்டம்பர் வரை அது நீடித்தது.

யாழ்ப்பாணத்துக்குத் திரும்பமுடியாத உடல் நிலை. பல்கலைக்கழகச் சேவையின் இறுதி வருடங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற் செலவிடுதலில் ஒரு தார்மீக நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு சுவாரசியமான இடம்.

நான் அங்கு தங்கிய காலத்தில் எனது போக்குவரத்துக்கான ஒழுங்கு, பல்கலைக்கழக ஊழியர் வாகனத்திற் செய்யப்பட்டிருந்தது. காலை போய் மாலை திரும்புவோம்.
  • 3 replies

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” -சித்தர் சிவவாக்கியம்
நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். அவர்தான் சிவவாக்கிய சித்தர்.
 
நட்டு வைத்த கற்சிலைகளையே தெய்வம் என்று சொல்லி பூக்களைச் சூடி அலங்கரித்து கோயிலைச் சுற்றி வந்து வாய்க்குள் முணுமுணுத்து மந்திரங்களைச் சொல்லி வணங்குகிறீர்கள். அந்த நட்ட கல்லும் பேசுமா? நாதன் இருப்பதைக் காட்டுமா? சட்டியில் வைத்து சுட்டு சமைத்த கறியின் சுவையை அந்தச் சட்டி, சட்டுவம் அறிய முடியுமா? அது போல இல்லாமல் நாதனாகிய ஈசன் நம்முள் நடுவாக நட்டகல்லாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதையே தெய்வம் என்று அறிந்து மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற நான்கு மலர்களை சாற்றி அதையே நினைவால் சுற்றிவந்து மௌனம் என்ற மந்திரத்தையே தியானம் செய்யுங்கள். நம் உள்ளிருக்கும் குருநாதன் பேசுவார். உடலில் உள்ளே உள்ள இந்த உண்மையை உணர்ந்து ஊணுருக உயிர் உருக தவம் இருந்து அறிந்து கொள்ளுங்கள்.
 
 
https://www.facebook.com/
 
  • 0 replies

'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு திருநீற்றுக் குறி ! தேங்காய் எண்ணெய் தடவி, எவ்வளவுக்குத் தலைமயிரை இழுக்கமுடியுமோ, அவ்வளவுக்கு இழுத்து முடிக்கப்பட்டதால்,பளிச்சென்று தெரியும் நெற்றி ! இவ்வளவு தான், காமாட்சியின் வெளித்தோற்றம்! அவளது முகத்தில், ஒரு சோகம் கலந்த ஏக்கம், எப்போதும் இழையோடிய படியிருக்கும். காமாட்சிக்கு ஒரு பத்துவயது மகள். மகளுக்குப் பெயர் கமலம். இவ்வளவும் தான் அவளது குடும்பம். அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்.
    • Like
  • 26 replies

மலர்ந்தும் மலராத……………………
 
                                            
 
அதிகாலைவேளை இருளும் வெளிச்சமும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. பனிப்புகாரும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. அந்த விசாலமான வீட்டில் அமைதியின் ஆட்சி அட்டகாசமாக இருந்தது .அந்த விசாலமான படுக்கையிலே நிவேதிதா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் . அவளது உருள்கின்ற கண்கள அவள் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதைத் தெளிவாகவே காட்டியது . அவளது அறையின் பரந்த ஜன்னல்களின் அருகே நான்கைந்து சிட்டுக்குருவிகளின் கிலுகிலுப்பு அவளை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தது . கண்ணை மூடிக்கொண்டு அவளையறியாது அவளது கைகள் நரேனைத் தேடிப் படுக்கையில் துளாவியது. நித்திரையில் இருந்தவளை எழுப்பாது இதமான முத்தத்தை கொடுத்து விட்டு அதிகாலை வேளையிலேயே நரேன் வேலைக்குப்போனது நினைவு வரவே விலுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்தாள் நிவேதிதா . ஆனாலும் அவளை ஓர் இனம்புரியாத அசதி ஆட்டிப்படைத்தது . தன்னால் நரேனுக்கு ஒரு கோப்பி போட்டுக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அவளை வருத்தியது .
    • Like
  • 31 replies

அழகான அலங்காரத்துடன், உதட்டோரம் புன்னகை மாறாமல், அமைதியாக  தூங்கும் தேவதையாக அவள். அவனைப் பார்க்கின்றாள். அவளையே பார்த்தபடி நின்றவனின் இறுகிய முகத்தில்  ஏதோ தேடுகிறாள். 
    • Like
  • 15 replies

அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். முதல் வாங்கில் இருக்கும் கூட்டத்தில் நானும் அடக்கம். வாத்தியார்மார் முன்னுக்கு இருகிற படிக்கிற பிள்ளையள் என்று ஒரு நல்லெண்ணத்தில இருக்க, நாங்கள் நசுக்கிடாமல் நல்லாச்சுத்து மாத்து விடுவம்.
    • Like
  • 14 replies

முகத்தார் வீடு நாடகம் வாசித்ததில் இருந்து நானும் ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணினேன். அதுதான்...........
 
 

சாத்தர் : முனியம்மா, முனியம்மா 
முனியம்மா : என்ன இழவுக்கு இப்பிடிக் கத்திறியள். எத்தின தரம் சொல்லிப் போட்டன் முனியம்மா எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு. நான் மினி எண்டு என்ர பேரை மாத்தி எவ்வளவு நாளாச்சு. 
சாத்தர் : நீ என்ன தான் மாத்தினாலும் எனக்கு நீ முனிதான். இன்னும் நீ வெளிக்கிடேல்லையே ?
 
முனியம்மா  : பொறுங்கோ வாறன் கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு வரவேண்டாமே.
சாத்தர் : அதுசரி. என்ன கலியாணத்துக்கே போறம். கார் வாங்கப் போறமப்பா.
முனியம்மா : கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுப் போனால் என்னைப் பாத்திட்டாவது காசைக் கொஞ்சம் குறைச்சுசொல்லுவான்.
சாத்தர்: நீ அடிச்சிருக்கிற லிப்ச்டிக்கைப் பாத்திட்டு அவன் கூடச் சொல்லப்போறன். 
முனியம்மா  : உங்களுக்கு எப்பவும் பகிடிதான். 
சாத்தர்: மனதுக்குள் ( உண்மையச் சொன்னாலும் பகிடியா நினைக்கிறியே ) நான் உன்னோட பகிடி விடாம ஆரோட விடுறது.
முனியம்மா  : சரி அப்பா முதல்ல எந்தக் கடைக்குப் போவம்.
சாத்தர்: என்ன நீ எதோ உடுப்புக் கடைக்குப் போற மாதிரிக் கேட்கிறாய். இது காரப்பா கார்.
    • Like
  • 44 replies

அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன்.

“அண்ணை நான் இங்கு பீட்டர்”

“பீட்டர் “

“அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “

“டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?”

“ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில்
வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில்
இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம்  கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான்
.பிள்ளைகள் இருக்கா அண்ணை?”

“ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு”

“போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை
கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்கடை கதையும் வந்தது
,அவன்தான் போன் நம்பரும் தந்தவன்”
    • Like
  • 43 replies

சாயங்காலம் சாயும் நேரம்

மின் விளக்குகளின் மிதமான வெளிச்சத்தில் குளித்தபடி மௌனமாய் தவமிருக்கும் தவசிபோல அமைதியும் அழகும் மிகுந்த தூய்மையுடன் தூங்கிக்கொண்டிருந்தது அந்த முதியோர் இல்லம்.
ஆடி ஓடி ஓய்ந்து தம் இறுதிக்காலத்தை அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் கழிக்கும் அம் முதியவர்களின் முகங்களில் மிளிரும் புன்னகையையும் தாண்டி அவர்கள் மனங்களில ;;புதைந்து கிடக்கும் ஏக்கம் ஏமாற்றம், தனிமை, கழிந்த காலங்களின் நினைவுத் தடங்கள், என பல்வேறுபட்ட பரிமாணங்களையும் தாங்கி அங்கு பல இன, மத, மொழி, சார்ந்த பல குண இயல்புகள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கங்கள், உடை வேறுபாடுகள், என்று பலதரப்பட்ட முதியவர்களும் அங்கு தங்கி இருந்தனர்.
    • Like
  • 14 replies

அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே 
இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை.
    • Like
  • 39 replies

குறிப்பு.
 
பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன.
    • Like
  • 60 replies

வணக்கம் நீண்ட இடைவெளியின் பின்பு சமாதான தேசத்தில் இருந்து யாழ் உறவுகளுடன் இணைகின்றேன்.

படித்த சில ஆக்கங்களில் மனதை கவர்ந்த சில.....உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

1) நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கல்லைக் கட்டிப் போட்டிருக்கின்றார்கள். - கவிஞர் சுரதா

2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல - கவிப்பேரரசு வைரமுத்து (என் மானசீக துரோணாச்சிரியார்)
3) கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு

4) சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல் உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேன் - கவிஞர் சுரதா
மின்னல் கண்டு மலரும் ஓர் மலர் உண்டென்று இதை வாசித்த பின்புதான் நான் அறிந்தேன்.
5) குஞ்சாகப் பொரிக்கப்பட்ட பின்பும் அடிக்கடி முட்டைக்குள் போக ஆசைப்பட்டவன் - கவிப்பேரரசு
6) சூரியன் தன்னை நேசிக்கின்றதா என்பது தாமரைக்கு முக்கியமல்ல ஆனாலும் சூரியனை நேசிப்பது தாமரையின் தர்மம் - கவிப்பேரரசு
7) சகாராவில் பறந்துகொண்டிருக்கும் போது உன்னிடமிருந்து சில மழைத்துளிகளை பரிசாகப் பெற்றேன் - கவிப்பேரரசு
ஓரு காதல் கவிதையில் இருந்து வைர வசனம்)

விரைவில் கவிதைகளுடன். . . .
    • Like
  • 9 replies

பல நாடுகள் என்பதா சரியான புணர்ச்சி. களத்தில் யாராவது உதவமுடியுமா?
அல்லிகா :?:
  • 25 replies

ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி!

கலாநிதி செ.யோகராசா

ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன.

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (ஐஐ) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூகஇ யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (ஐஐஐ) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.
  • 2 replies

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.