Our Picks
Top content from across the community, hand-picked by us.
இரை .......!
suvy posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
தினையளவு இரைதேடி
சிற்றெறும்புக் கூட்டம்
புற்றுவிட்டு நீங்கி
பொழுதெல்லாம் அலையும்.
குடைபோல் வலைபின்னி
வலைக்குள் காத்திருக்கும்
பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய்
எட்டுக்கால் சிலந்தியும்.
அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த
மலர்தேடி மதுவுண்டு செல்ல
மணம் முகர்ந்து அலையும்
மாமரத்துத் தேனீக்கள்.
உடும்பொடு பாம்பும்
இரைபார்த்து ஊர்ந்து வரும்
பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும்
உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும்.
வானில் உலவும் பருந்து
வீட்டு முற்றம் சேர்ந்து
தாயை விட்டு விலகிய குஞ்சை
கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும்.
தன்னுயிர் காக்க வெறித்தோடும் கலைமானை
தன்பசி தீர்க்க விரட்டிப் பிடிக்கும் வேங்கை
கூட்டமாய் வரும் செந்நாய்கள் சேர்ந்தே
வேங்கையை விரட்டி இரையை எடுக்கும்.
கிலோக்கணக்காய் இலையுண்ணும் யானைகளும்
கிலோமீட்டர்கள் நடந்து அலைந்து திரியும்
அவை சென்ற பாதையெல்லாம்
மரங்கள் முறிந்திருக்க பறவைகள் ஓலமிடும்.
பறவைக்கும் இரையாகும் விலங்குக்கும் இரையாகும்
மனிதர்க்கும் இரையாகும் தமக்கும் தாமே இரையாகும்
மீன்கள், எல்லாமே பசியால் புசிக்கும் இரைகளன்றோ
அதனால் கொல்லுகின்றன ஒன்றையொன்று.
பசித்தாலும் பசிக்கும் ஆனாலும்
புசிக்கவும் போவதில்லை அதனாலென்ன
வெட்டிக் கொல்லுகின்றார் சுட்டுக் கொல்லுகின்றார்
குண்டுகளும் கொட்டுகின்றார் கேடுகெட்ட மாந்தர் இவரே......!
யாழ் 24 அகவைக்காக,
ஆக்கம் சுவி......!
-
-
- 5 replies
Picked By
மோகன்,சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஈழப்பிரியன் posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன்.
அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை.
ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை.
ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன்.
வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும்.
இதுதான் நாங்கள் போனபாதை
மிகுதி தொடரும்.
-
-
- 59 replies
Picked By
மோகன்,அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
-
-
- 18 replies
Picked By
மோகன்,ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே
நிலாமதி posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
உன் நிலைகண்டு வருந்துகிறேன் கொடிய
நோய் கொடுத்த துயர் மறையும் முன்னே
கொடும் பசி வாட்டுகிறதே
பொருட்களின் விலையேற்றத்தால்
மக்கள் துயர் கூடுகிறதே.
கோல் உயர்ந்தால் குடி உயரும் கோலேந்திய
ராஜ பக்சேக்களின் சுயநலமும் சொத்து சேர்ப்பும்
தமிழ் ஈழத்தின் மீதான கொடும் போரும்
உலகை துணைக்கழைத்து சாம்பல் மேடாக்கிய
ஈழ விளைநிலமும் மக்களின் சாபமும் கண்ணீரும்
அளவுக்கு மீறிய கடனும் கடனுக்கு
வட்டி கட்டிட மேலும் கடனும்
சீனனுக்கு கொடுத்த தாரை வார்ப்பும்
என் நில மக்களை வாட்டி வதைக்கிறதே
தலைநகரில், கடையில் வாங்கி உலையில் போடும் மக்கள்
பேப்பர் கட்டுக்களாய் பணத்தை வாரி வீசினாலும்
அரைவயிறு நனைகிறதா ? பதுக்கி வைத்த
சொத்துக்களையெல்லாம் உனது கூட்டுக குழுவுடன்
சற்று தானம் செய்தல் ஓரளவு உயர்வாய்.
மனசு வருமா ? நாட்டை நடத்த தெரியாமல் வீண் வீம்பும் ,
ராணுவத்துக்கு செலவிடட பணமும்
அளவுக்கு மிஞ்சிய ராணுவ படையும் பலமும் (?) ..
உன் சொந்த மக்களை இந்நிலைக்கு கொண்டு சென்றது
உன்னை தேர்வு செய்த சிங்க( ள)இனமே உன்னை
வெறுக்கையில் உன் ஆடசியின் நீட்ச்சி தேவையா ?
வரலாற்றில் இல்லாத வறுமையும் துயரமும் ஏன்?
உன் அடக்குமுறை போரில் அடிமைபட்டுக் கிடந்த
என் ஈழத்தமிழினம் எப்படியாவது வாழ்க் கற்று விட்ட்து .
மண்ணை கிண்டி வலையை வீசி விறகடுப்பில் வெந்து
வாழ்க்கையை ஓட்டும் ஆனால் தற்பெருமைத்
தலைநகரில் கட்டிடக் கூடுகளில் சஞ்சரிக்கும்
புறாக்களாக வாழும் கொலோம்போ மக்கள் தான் பாவம்.
கிராமத்தான் ஓரளவு வாழ்ந்து விடுவான் ஏனையவ்ர்
நீண்ட கியூ வரிசையில் விரக்தியின் விளிம்பில்
ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசையில் நிற்கும்
மனிதனின் மனதில் உதிக்கும் ஒரு வெறுப்பு
அது ராஜபக்சேக்களின்கொடுங்கோல் சுயநல
ஆடசியை மன்னிக்காது. வரலாறாய் வரிப்படுத்தப்படும்.
நான் புலம்பெயர்ந்து ஆண்டுகள் முப்பது ஆனாலும் என் நாட்டு மக்களை எண்ணும்போது ஏற்படட துக்கம்
என்னை மேலுள்ளவாறு கிறுக்க வைத்துவிட்ட்து. .
-
-
- 5 replies
Picked By
மோகன்,பார்வை ஒன்றே போதுமே.......!
suvy posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே.
இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று.
-
-
- 61 replies
Picked By
மோகன்,அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
மெசொபொத்தேமியா சுமேரியர் posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
2019 ஒக்டோபர் மாதம் நானும் மகளும் கம்போடியா போயிருந்தோம். அங்கே விலை மலிவு என்பதால் பத்து நாட்களும் ஐந்து நட்சத்திர தங்குவிடுதியை முற்பதிவு செய்திருந்தாள் மகள். இரண்டு கட்டில்கள் கொண்ட பெரிய அறை அனைத்து வசதிகளுடனும் இருந்தது. முதல் நாள் மாலை வரை சுற்றிப் பார்த்துவிட்டுக் களைப்புடன் வந்து கட்டிலில் படுத்தால் ஒரு அரை மணிநேரம்தான் நின்மதியாகப் படுக்க முடிந்தது. முதுகு கால் கை எங்கும் ஒரே கடி. எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தால் கன்னத்திலும் கடிக்க மின்விளக்கைப் போட்டுவிட்டு எழும்ப, “என்ன அம்மா நித்திரை வரேல்லையா” என்று மகளும் தூக்கம் கலைந்து கேட்கிறாள்.
-
-
- 44 replies
Picked By
மோகன்,,எஸ்கியூஸ் மீ மூருகா
putthan posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம்
-
-
- 26 replies
Picked By
மோகன்,யாழ் எனும் திமிர்.
valavan posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல.
போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன?
தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம்.
-
-
- 6 replies
Picked By
மோகன்,ஒமிக்றோன்: உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?
Justin posted a topic in நலமோடு நாம் வாழ,
தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்:
-
-
- 53 replies
Picked By
மோகன்,அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫
குமாரசாமி posted a topic in நலமோடு நாம் வாழ,
கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு.
நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது.
பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
அரசர்களின் அரிசி
சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து மக்களும் பயன்படுத்தத் தொடங்க, அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த அரிசியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று வரை சீனாவில் தடைசெய்யப்பட்ட அரிசி என்றே இதை அழைக்கிறார்கள்.
கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கறுப்பு நிறம்தான். கறுப்பு நிறத்துக்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி. திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைகோஸ், மாதுளை, கறுப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்’ நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.
இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.
-
-
- 156 replies
Picked By
மோகன்,திருமணத்திற்கு பிறகு பெண்களின் காதல் தற்கொலைகள்
shanthy posted a topic in பேசாப் பொருள்,
-
-
- 34 replies
Picked By
மோகன்,பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
goshan_che posted a topic in வாணிப உலகம்,
இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள்.
நோக்கம்
யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம்.
-
-
- 550 replies
Picked By
மோகன்,யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021
கிருபன் posted a topic in யாழ் ஆடுகளம்,
வணக்கம்,
கடந்த ஆண்டு நடக்கவிருந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கோவிட்-19 பெருந்தொற்றால் பிற்போடப்பட்டு இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் நடைபெற உள்ளது.
போட்டிகள் 17 அக்டோபர் 2021 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 14 நவம்பர் 2021 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது.
-
-
- 1203 replies
Picked By
மோகன்,கறிச்சட்டி/கரிச்சட்டி ஆய்வு!
Justin posted a topic in நலமோடு நாம் வாழ,
-
-
- 2 replies
Picked By
மோகன்,ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ரஞ்சித் posted a topic in அரசியல் அலசல்,
தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது.
எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. எமது வீர வரலாற்றின் ஒவ்வொரு எழுச்சியின்போதும் அல்லது அவ்வரலாற்றின் வீழ்ச்சிகளின்பொழுதும் இந்தச் சாபம் விடாது எம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது.
-
-
- 581 replies
Picked By
மோகன்,8 வீட்டிற்கு கம கமக்கும் யாழ்ப்பாண கயல் மீன் குழம்பு | Jaffna style grey mullet| Kayal meen kulambu
sivarathan1 posted a topic in நாவூற வாயூற,
-
- 6 replies
Picked By
மோகன்,சிந்து சமவெளியில் பேசப்பட்டது தொல் திராவிட மொழி: ஆய்வுக் கட்டுரை தரும் தகவல்
கிருபன் posted a topic in பொங்கு தமிழ்,
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பட மூலாதாரம், GETTY IMAGES
சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் தொல் திராவிட மொழியை பேசியிருக்கலாம் என நேச்சர் ஆய்விதழில் வெளியான கட்டுரை குறிப்பிடுகிறது. சில அடிப்படை சொற்களை வைத்துச் செய்த ஆய்வுகளின்படி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் என்ன மொழியைப் பேசியிருப்பார்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அகழாய்வு, மொழி ஆய்வு, மரபணு ஆய்வு, வரலாற்று ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசிய மொழி எந்த மொழியாக இருக்கலாம் என்ற ஆய்வைச் செய்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பஹதா அன்சுமாலி முகோபாத்யாய. இவர் ஒரு மென்பொறியாளராகப் பணியாற்றிவந்தாலும், இந்தத் துறையின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக, சிந்துச் சமவெளி குறித்த ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார்.
-
- 4 replies
Picked By
மோகன்,
செல்வச்சந்திரன் மரணமும் நினைவுகளும்
shanthy posted a topic in நிகழ்வும் அகழ்வும்,
ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எங்கட செல்வச்சந்திரன் இறந்துவிட்டான்.
அவன் இன்று மதியம் குளிக்க கிணத்தடிக்கு போன நேரம் மயங்கி விழுந்து இறந்து போனான்.
அவனுக்கு ஆதரவு தேவைப்பட்ட காலம் நீங்கள் செய்த மருத்துவ உதவிகள் ஆதரவு பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
நம் ஒவ்வொருவரின் வாழ்வும் இப்படித்தான் முடியப் போகிறது. நாங்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளின் தாக்கம் அதனால் எம் உடல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எங்களை இப்படித்தான் கொல்லப் போகிறது.
சிறையில் நடந்த சித்திரவதைகள் பற்றி என்னால் விளங்கப்படுத்த முடியாது. நாளை இதுபோலவே நானும் இறந்து போகலாம்.
இரவு 12.25 வீட்டுக்குள் போனதும் தொலைபேசியில் வந்திருந்த
குரல் வழியான குறுஞ்செய்தியில் செல்வச்சந்திரனின் மரணச் செய்தியை சிறையில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு விடுதலையான நண்பர் ஒருவர் குரல் பதிவிட்டிருந்தார்.
செல்வச்சந்திரன்...,
-
-
- 19 replies
Picked By
மோகன்,
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Land Tigers Images
நன்னிச் சோழன் posted a topic in எங்கள் மண்,
நாமே எழுதுவோம்'
------------------------
எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!
என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
மட்டு-அம்பாறை படையணிகள் மூன்று | 3 Mattu-Amparai Regiments
கீழே மூன்று விதமான சீருடை அணிந்தோர் நிற்கின்றனர்(பச்சை, வரி, ஒருவித Olive/sap பச்சை)
'Two different colours of uniform'
'Two different colours of uniform'
-
-
- 844 replies
Picked By
மோகன்,‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’
கிருபன் posted a topic in அரசியல் அலசல்,
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார்.
அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையை, அந்த உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலில் அந்த மாணவி முன்வைத்த கருத்துகளும் தந்தன.
-
-
- 254 replies
Picked By
மோகன்,Post in வான்புலிகளின் வானூர்திகள்: ஒரு ஆவணம்
நன்னிச் சோழன் posted a post in a topic,
-----------------------------------------------
மன்னாரில் வான்புலிகளின் குண்டுவீச்சில் சிங்கள வான்படையின் 'ஒரு எம்.ஐ.-24 & ஒரு பெல் என இரண்டு உலங்கு வானூர்திகள்' சேதம் 💪😍

Picked By
நன்னிச் சோழன்,பாம்பெண்ணை மருத்துவம்!
Justin posted a topic in நலமோடு நாம் வாழ,
18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களில் ஒரு புது வகையான தொழில் துறை கொடி கட்டிப் பறந்தது. குதிரை வண்டியில் ஊரூராகத் திரிந்து சகல வகையான நோய்களையும் தீர்க்கும் "பாம்பு எண்ணை" என்று பெற்றோலியத்தின் ஒரு பகுதியான கனிம எண்ணையை விற்பதே அந்தத் தொழில். இது ஏன் பாம்பு எண்ணை (snake oil) என அழைக்கப் பட்டது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால், இன்று ஆங்கிலத்தில் "பாம்பு எண்ணை" என்பது எந்தப் பலனுமற்ற போலி மருந்துகளைச் சுட்டப் பயன் படும் ஒரு சொல்லாகி விட்டது. போலி மருந்துகளை விற்கும் வியாபாரி "பாம்பெண்ணை விற்பவர் (snake oil salesman)" எனப் படுகிறார்.
-
-
- 15 replies
Picked By
மோகன்,இந்தியாவின் மாற்றமடைந்த கொரனா வைரஸ்: கேள்விகளும் பதில்களும்
Justin posted a topic in நலமோடு நாம் வாழ,
முன்கதை
விகாரமடைந்த நவீன கொரனா வைரசுகள் பற்றி ஒரு கட்டுரையை முதலில் எழுதிய போது உலகில் மூன்று பிரதான நவீன கொரனா வைரஸ் விகாரிகள் காணப்பட்டன. பிரிட்டன் விகாரி (B.1.1.7), பிரேசில் விகாரி (P1), தென்னாபிரிக்க விகாரி (B1.351) ஆகிய அந்த ஒவ்வொரு வைரசு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு இருந்தது. பிரேசில், பிரிட்டன் வைரசுகள் ஆரம்பத்தில் பரவிய கொரனா வைரசை விட வேகமாகத் தொற்றுதலை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன நேரடியாக இது நோய்த்தீவிரத்தை அதிகரிக்கா விட்டாலும், மருத்துவ சேவைகள் மீது அதிக சுமைகளை ஏற்படுத்துவதன் மூலம் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருந்தன. தென்னாபிரிக்க விகாரிக்கு, தடுப்பூசிகளினால் உருவாகும் நோய்ப்பாதுகாப்பில் இருந்து தப்பும் இயலுமை இருப்பதால் "தப்பும் வைரஸ்" (escape mutant) என்று அழைத்தார்கள். ஆனாலும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயன்படுத்தப் படும் தடுப்பூசிகள், இந்த வைரசுகள் எல்லாவற்றிலும் இருந்து தீவிர நோயோ, மரணமோ ஏற்படாமல் தடுக்கக் கூடியவை எனச் சில ஆய்வுகள் சுட்டிக் காட்டின.
இந்தியாவின் விகாரி வைரஸ்
இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய அலையோடு கண்டறியப் பட்ட B 1.617 என்பது தான் இந்தியாவின் விகாரி வைரஸ். தற்போது இந்த விகாரியில் மூன்று வகையான உப வகைகள் - B1.617.1, B1.617.2, B1.617.3- இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றுள் சில விகாரங்கள் பொதுவாகவும், சில விகாரங்கள் தனித்துவமாகவும் இருக்கின்றன. ஆனால், மூன்றுமே பிரிட்டனின் விகாரி வைரசின் ஒரு மாற்றத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. முன்னைய விகாரிகள் போலன்றி - இது இந்தியாவில் தோன்றியதாலோ என்னவோ- இந்த விகாரி பற்றிய ஆய்வுகள் மெதுவாகவே நடைபெறுகின்றன. தற்போது 12 நாடுகளுக்குப் பரவி விட்டதால் சில தகவல்கள் ஆய்வுகள் மூலம் வெளிவந்திருக்கின்றன.
-
-
- 4 replies
Picked By
மோகன்,வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Nathamuni posted a topic in வாழும் புலம்,
locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.
இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது.
-
-
- 110 replies
Picked By
மோகன்,‘மரபுவழித் தாயகம்-சுயநிர்ணயம்-தமிழ் தேசியம்’: தமிழினத்தின் பேரெழுச்சியில் மீண்டும் பிரகடனம்!
தமிழ் சிறி posted a topic in ஊர்ப் புதினம்,
வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
-
- 0 replies