-
Posts
1960 -
Joined
-
Last visited
-
Days Won
1
karu last won the day on December 8 2014
karu had the most liked content!
About karu
- Birthday August 28
Contact Methods
-
Website URL
http://www.thamilarivu.com
-
ICQ
0
-
Yahoo
karunanandarajah@yahoo.co.uk
-
Skype
Sithiravelu Karunanandarajah
Profile Information
-
Gender
Male
-
Location
London - UK
-
Interests
Tamil Poetry & literature
Recent Profile Visitors
5625 profile views
karu's Achievements
-
கவிதை பற்றிய தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சுவி.
-
ஏற்றமைக்கு நன்றி தமிழ்த் தேசியன்.
-
karu started following நெருப்பு......! , இலங்கையை ஆள யார்வேண்டும்? , கனியட்டும் பொற்காலம் and 4 others
-
https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர் அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம் பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால் ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக் காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம் போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை. ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில் ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும் ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில் போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர் தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.
-
கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி சுவி.
-
உடன் பதிலுக்கு நன்நி சுவி.
-
நன்றி சுவி அதனை யாழ் முகப்பில் கவிதைப் பிரிவில் போடவில்லையே காரணமென்ன?
-
பேரினவாதத்தின் பிரலாபம் சித்தி கருணானந்தராஜா உலகமே எங்கள் உறுபசியைப் போக்காயோ பேரினவாதப் பெரும்பூதத்தால் வயிற்றில் பற்றியெரியும் பசித்தீயைத் தீர்ப்பதற்காய் நக்குவாரப் பெயர்பெற்று நாடெல்லாம் அலைகின்றோம் சர்வதேச நாணயஸ்தர் தருவாரா ஏதாச்சும்? பெரிய இடமென்று பிச்சைக்குப் போயுள்ளோம் கரியை வழித்துக் கையில் தருவது போல் ஆனைப் பசியில் அலறுகிற எங்களுக்கு சோளப் பொரிதூவிச் சோர்வகற்றச் சொல்வாரோ? என்ன செய்வதென்றறியோம் எம் ஆமத்துறுமார்கள் சொன்னதே வேதமென்றோம் துயர்வந்து சேர்ந்ததுவே! படங்கொண்ட பாந்தள்வாயில் பற்றிய தேரைபோலும் கடன்பட்டுத் தவிக்கின்றோம் காப்பதற்கு யார்வருவார்? சீனத்தலைமைகளும் சிந்துவெளி நாட்டினரும் ஏனித்துரோகமிழைத்தார்கள் எங்களுக்கு? எங்கள் சகோதரர்கள் இருப்பதற்கொன்றோரிடத்தை அன்போடு நாங்கள் அளித்திருக்கலாமன்றோ! முன்னின்று எங்கள் மூத்த சகோதராரை நாட்டைவிட்டு ஓட்ட நயவஞ்சகம் புரிந்தார். பட்டதுயருமினப் படுகொலையும் தாங்காமல் ஓடியொழிந்தவர்கள் உதவிக்கு வருவாரா? தேசிய கீதம்பாடத் திறனிழந்து போனவர்க்கு தேசத்தின்மீதன்பு திரும்ப வந்து சோ்ந்திடுமா? ஒன்றும் புரியாமல் உருக்குலைந்து வாடுகிறோம் காலமென்ன காட்டுமென்று கண்கலங்கி நிற்கின்றோம் புத்தனுரைத்த புனிதவிதி கருமம் இத்தரையில் என்றும் எமக்கும் திரும்புமென்ற தத்துவமே இன்றெம் தலைவிதியை மாற்றியது. நடக்கட்டும் ஓர்நாள் நம் பாவமும் அழியும் தடுக்கட்டும் துன்பததைத் தர்மம் மாநக்கவாரம் - நிக்கோபார் தீவுகள், நக்குவாரம் - இலங்கைத்தீவு.
-
விரைவில் மீண்டெழுவோம் : சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ்
karu replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
கோபாலல்ல சிக்கல் சிங்காரவேலன். கோபால் - புதியபறவை சிவாஜி சரோஜாதேவி. -
கவிதையைப் பாராட்டிய சுவி, தமிழ்த்தேசியன் ஆகியோருக்கு அன்பு நன்றிகள்.
-
கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனது வேறு நற்செயலில்லை யென்றானது. காலமோடியதாற் கவிக்காதலி காத்திருக்க விருப்பிலளாயினள் பாலையானது நெஞ்சப் பெருவெளி பாடயாதும் வராது தவிக்கிறேன் சீல மேவிய என் எழில் நங்கையை தேடி யெங்குமலைந்து திரிகிறேன். அன்னவட்கொரு அஞ்சலி செய்தென(து) அருகில் வாவடியென்று துதித்திட பின்னமுற்ற மனத்தினளாயவள் பிணங்கி யந்தத் துணங்கையை யாடிடும் கன்னியர்க்கு உன் காதலைக் காட்டுதி கவிதையேனுனக்கென்று சபித்தனள் என்ன செய்வது என்று அறிகிலேன் எனது வாழ்வில் அவளைவிட்டோர் துணை இன்னுமுள்ளதுவோ இலை நெஞ்சமே! எறியுனக்கினி ஐபிஎல் ஏன் கொலோ!
-
அடர்வனத்தில் எரிந்தால் கோரம் ---- காட்டுத் தீ
-
வரவேற்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தமிழ்த்தேசியன் மிக்க நன்றி சுவி.