Jump to content

karu

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2069
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by karu

  1. நல்லது. ”தமிழில் வளர்த்தெடுக்கப் படவேண்டிய உசாத்துணை முறைமை” என்ற தலைப்பில் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க ஆண்டு மலரில் - 2020 ஜுன், எனது கட்டுரையொன்றுள்ளது. ஹவாட் பல்கலைக்கழக உசாத்துணை முறைமையைப் பின்பற்றி தமிழில் அதில் வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முடிந்தால் அதனைத் தேடியெடுத்து யாழ் களத்தில் பதிவிடுகிறேன், பலருக்கும் அது உதவக்கூடும். தக்க உசாத்துணைப் பாரம்பரியம் இல்லாததால்த்தான் பல ஆய்வுக் கட்டுரைகள் கருத்திழந்து போகின்றன். இனிவருங்காலங்களில் அறிவியல் தமிழை உலக மட்டத்தில் வளர்த்தெடுக்க உசாத்துணைமுறைமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும்.
  2. நீர்கொழும்பிலுள்ள இடிந்துபோன நஞ்சுண்டார் கோவிலின் எச்சங்கள் படங்கள்மூலம் காட்டப்படுகின்றன. நீர்கொழும்பு சிலாபம் போன்ற பிரதேசங்கள் பலதசாப்தங்களின் முன் தமிழர்களின் பூர்வீக நிலங்களாயிருந்தனவென்று தமிழரசுக் கட்சிக் காலத்திலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் சிலாபம் முன்னேஸ்வரம் இலங்கையிலுள்ள பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. கட்டுரையாசிரியர் தேவையான ஆதாரங்களைக் காட்டியே தரவுகளைத் தந்துள்ளார். வேண்டுமானால் இராமாயணகால ஆதாரங்களைப் புறக்கணிக்கலாம். தற்காலத்தில் இலக்கியச் சான்றுகளையும் கருத்திலெடுத்துத்தான் ஆய்வுகளைச் செய்கிறார்கள். வரலாற்றை ஆய்வுசெய்வதற்குப் பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் வேண்டியதில்லை. எனவே கட்டுரையை மறுப்பவர்கள் தங்களது ஆய்வு முடிவுகளைக் கூறி நீர்கொழும்பில் தமிழர்கள் வாழவில்லையென்று நிரூபிப்பதே சரியான அறிவியல் அணுகுமுறையாகும்.
  3. https://www.facebook.com/photo/?fbid=10160014474376950&set=a.10151018148611950&__cft__[0]=AZWx_ghLUGUfdOGsEGqD0O1RrbmZSPkuwd00JPoBavte-iCSNhoJyTSCQXr1UYWhV-IfMvhGBBK_meknfAjNWTrbLXB-T-Q0GYuAVKZeZ0sps0QZ0BAQIgjnY16eW-KRdPc&__tn__=EH-R இலங்கைத் தலைமையின் இரங்கற் கூக்குரல் ஐயாமாரே ஐயாமாரே மொய்யாய் ஏதும் போட்டுப் போங்கோ பணச்சடங்கு நடத்திறம் பார்த்து ஏதும் செய்யுங்கோ பெரிய இடமென்று பிச்சைக்குப் போனால் கரியை வழிச்சுக் கையில கொடுக்கினம் தானத்தைப் பெற்றுக்கொண்டு இனவாதம் பேசியவை கூனிக்குறுகிப் பேசாம இருக்கினம் எங்கபோய் இனித் தானம் பெறுவதென்று ஏதும் புரியாமல் முழிபிதுங்கினம் ஓடிவாருங்கோ ஓடிவாருங்கோ யானைப் பசியோட இருக்கிற எங்களுக்கு சோளப்போரி போடப் பெரியண்ணை நினைக்கிறார் பிச்சை கேட்டுப் போன எங்கள் கச்சையைப் பறிக்க அந்தாள் நிக்குது. ஐயாமாரே ஓடிவாருங்கோ மொய்யாய் ஏதும் போட்டுப் போங்கோ.
  4. கவிதை பற்றிய தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சுவி.
  5. https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர் அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம் பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால் ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக் காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம் போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை. ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில் ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும் ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில் போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர் தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.
  6. கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி சுவி.
  7. பாஜக மாநிலக் கட்சியல்ல, இந்தியாவை ஆளும் தேசியக் கட்சி. அண்ணாமலை மாநில மட்டத்திலான தலைவரானாலும் அவரை அனுப்பியிருப்பது பாஜக.
  8. நன்றி சுவி அதனை யாழ் முகப்பில் கவிதைப் பிரிவில் போடவில்லையே காரணமென்ன?
  9. பேரினவாதத்தின் பிரலாபம் சித்தி கருணானந்தராஜா உலகமே எங்கள் உறுபசியைப் போக்காயோ பேரினவாதப் பெரும்பூதத்தால் வயிற்றில் பற்றியெரியும் பசித்தீயைத் தீர்ப்பதற்காய் நக்குவாரப் பெயர்பெற்று நாடெல்லாம் அலைகின்றோம் சர்வதேச நாணயஸ்தர் தருவாரா ஏதாச்சும்? பெரிய இடமென்று பிச்சைக்குப் போயுள்ளோம் கரியை வழித்துக் கையில் தருவது போல் ஆனைப் பசியில் அலறுகிற எங்களுக்கு சோளப் பொரிதூவிச் சோர்வகற்றச் சொல்வாரோ? என்ன செய்வதென்றறியோம் எம் ஆமத்துறுமார்கள் சொன்னதே வேதமென்றோம் துயர்வந்து சேர்ந்ததுவே! படங்கொண்ட பாந்தள்வாயில் பற்றிய தேரைபோலும் கடன்பட்டுத் தவிக்கின்றோம் காப்பதற்கு யார்வருவார்? சீனத்தலைமைகளும் சிந்துவெளி நாட்டினரும் ஏனித்துரோகமிழைத்தார்கள் எங்களுக்கு? எங்கள் சகோதரர்கள் இருப்பதற்கொன்றோரிடத்தை அன்போடு நாங்கள் அளித்திருக்கலாமன்றோ! முன்னின்று எங்கள் மூத்த சகோதராரை நாட்டைவிட்டு ஓட்ட நயவஞ்சகம் புரிந்தார். பட்டதுயருமினப் படுகொலையும் தாங்காமல் ஓடியொழிந்தவர்கள் உதவிக்கு வருவாரா? தேசிய கீதம்பாடத் திறனிழந்து போனவர்க்கு தேசத்தின்மீதன்பு திரும்ப வந்து சோ்ந்திடுமா? ஒன்றும் புரியாமல் உருக்குலைந்து வாடுகிறோம் காலமென்ன காட்டுமென்று கண்கலங்கி நிற்கின்றோம் புத்தனுரைத்த புனிதவிதி கருமம் இத்தரையில் என்றும் எமக்கும் திரும்புமென்ற தத்துவமே இன்றெம் தலைவிதியை மாற்றியது. நடக்கட்டும் ஓர்நாள் நம் பாவமும் அழியும் தடுக்கட்டும் துன்பததைத் தர்மம் மாநக்கவாரம் - நிக்கோபார் தீவுகள், நக்குவாரம் - இலங்கைத்தீவு.
  10. கவிதையைப் பாராட்டிய சுவி, தமிழ்த்தேசியன் ஆகியோருக்கு அன்பு நன்றிகள்.
  11. கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனது வேறு நற்செயலில்லை யென்றானது. காலமோடியதாற் கவிக்காதலி காத்திருக்க விருப்பிலளாயினள் பாலையானது நெஞ்சப் பெருவெளி பாடயாதும் வராது தவிக்கிறேன் சீல மேவிய என் எழில் நங்கையை தேடி யெங்குமலைந்து திரிகிறேன். அன்னவட்கொரு அஞ்சலி செய்தென(து) அருகில் வாவடியென்று துதித்திட பின்னமுற்ற மனத்தினளாயவள் பிணங்கி யந்தத் துணங்கையை யாடிடும் கன்னியர்க்கு உன் காதலைக் காட்டுதி கவிதையேனுனக்கென்று சபித்தனள் என்ன செய்வது என்று அறிகிலேன் எனது வாழ்வில் அவளைவிட்டோர் துணை இன்னுமுள்ளதுவோ இலை நெஞ்சமே! எறியுனக்கினி ஐபிஎல் ஏன் கொலோ!
  12. https://www.facebook.com/photo?fbid=10159695301231950&set=a.10151018148611950
  13. நன்றி புங்கையூரான், தமிழ்சிறீ. - ஏன் இக்கவிதையை முகப்பிலுள்ள பொருளடக்கத்தில் போடவில்லையென்று புரியவில்லையே.
  14. மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்குச் செய்திட்ட நன்றி மறக்காது நமக்கும் எம் சந்ததிக்கும். இந்த உலகினிலே ஈழத் தமிழ் பெண்கள் சொந்த மண் மீட்க தூக்கினர் தம் ஆயுதத்தை அந்த மறம் போல அகிலம் முழுவதிலும் எந்த இனப் பெண்ணிடமும் இருக்கவில்லை நெஞ்சிலுரம் என்றடித்துக் கூற எமக்குண்டு யோக்கியதை தங்கை தமிழினியே தாருஜாச் சோதரியே உங்கள் இறப்பெமது உள்ளத்தைத் தாக்கிடினும் பெண்மைக்குதாரணமாய் பெருவீரம் காட்டிய உம் வன்மையும் நெஞ்சுரமும் வரலாற்றில் நிலை நிற்கும் ஆதலினால் எங்கள் அகம் நிறைந்து வாழ்ந்திடுவீர் சாதலுக்கு அஞ்சா உம் சரித்திரத்தை நாம் மறவோம். தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம் நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை எங்கள் தாய் மண்ணை ஈழத்தமிழகத்தை பொங்கி யெழுந்து புதுப்பித்துப் போரழித்த நாட்டை நமதாக்கி நமதுயிராம் தாயகத்தை ஆட்டிப்படைக்கும் அயலார்கள் வாய்மூட வெற்றிக் கொடி நாட்டும் வேளை வந்தே தீரும் எவன் என்ன சொன்னாலும் ஈழத்தாய் மண்ணதனை மீட்கும் வரை தமிழன் விழி மூடப்போவதில்லை இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளில் எங்கள் தமிழீழம் இனிதே உருவாகும் அந்த நாள் தன்னில் தம் ஆருயிரை ஈந்திட்ட சொந்தங்காள் உம்மைக்கை தூக்கி வணங்குதற்காய் ஆலயங்கள் கட்டி அதிலும்மைப் பூஜித்து தெய்வங்களாக்கி சிரம் தாழ்த்தி நாம்பணிவோம் இன்றுமது கல்லறைகள் இடித்துடைக்கப் பட்டாலும் என்றும் எம் நெஞ்சில் இருப்பீர் எம் தேவதைகாள் என்றுரைத்திவ் அஞ்சலியை இனிதே முடிக்கின்றேன் நன்றே நடக்கும் நமக்கு.
  15. ஐயாவுக்கு அஞ்சலிகள். அவர் குடும்பத்துக்கு ஆழந்த இரங்கல்கள்.
  16. இன்று தமிழீழத்தின் வீரமங்கை அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நாள் மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெடுக்கவா - ஈழத் தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும் தாங்குவன் நானெனக் கூறியே பாயும் புலி எம் திலீபனும் - பெரும் பட்டினிப் போரைத் தொடங்கவே இந்தியச் சோதரர் இஃதினை எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள் முந்தைய வாக்குறுதி தனை - விட்டு மோசங்கள் செய்யத் தொடங்கினர் சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள் தேச விடுதலைப் போரினைத் - தங்கள் சொந்த நலன்களைப் பேணவே சொதப்பிடலாமென எண்ணினர் நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள் நன்மைகளுக் கொரு காப்பிலை ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில் ஆயிரமாய்க் குடியேற்றலும் சாக்குச் சமாதானம் கூறலும் சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப் போக்கினர் காலம் திலீபனோ - தன்றன் பொன்னுடல் தேயத் தொடங்கினான் மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று மன்னவன் மண்ணின் விடுதலைத் தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ தேசம் அழுது துடித்தனள் பாயும் புலி பசும் புல்லினை - தன்றன் பட்டினி போக்கப் புசிக்குமோ - அட வாயில் வயிற்றில் விடுதலைப் பசி வாட்டத் துடித்தது அவனுயிர் காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன் கருணை உரைத்த உயர் நிலம் - பச் சோந்திகளின் புதரானதால் - எங்கள் சோகத்தை யாரும் மதித்திலர் ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு) என்ன எனத் திமிர் கொண்டுமே சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி செய்தனர் எம்மை ஒடுக்கவே நீருமருந்த மறுத்துமே - கொடு நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப் பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள் பாலகன் தன்னுயிர் நீத்தனன் ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில் ஈரமில்லாதவரோடினிக் - கதை ஏதென ஈழம் தெளிந்தனள் அன்னை பூபதி இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின் எதற்கினி வாழ்வெனக் கென்றுமே தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு தாய் எழுந்தாள் அந்த நாளிலே அன்னை அவள் பெயர் பூபதி - தன் ஐம்பத்தியாறு வயதிலே உன்னி விடுதலைக் காகவே - தன் உணவை மறுத்தனள் சாகவே பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ பூமியிற் சோகம் கவிந்தது சேய் பதினாயிரம் சேர்ந்திட - மறச் சேனை பெருகிச் சிறந்தது வாபதில் சொல்கிறோம் என்று - நின்றிட்ட வானர சேனையிற் பாய்ந்தது தாயவள் காளி விழித்தனள் - இந்தத் தாரணி ஆடச் சிரித்தனள்
  17. ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய புதுவையை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையைப் பதிவிட்டேன். அதனை யாழிலும் பதிலிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பாயும் மறவரின் படை நடந்தது பாரதம் சோர்ந்தது இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது ஈழதேசம் உயிர்த்து எழுந்தது. நீரிலே நெருப்பேற்றிய எங்களின் நேரிலாத் தலைவன் ஒளிர் சூரியன் போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப் பொன்னெழுத்திற் புதுவை பொறித்ததால் தேரிலேறிய தீந்தமிழாளவள் திலகமாகத் திகழ அவன் கவி பாரிலே தமிழீழப் பரணியைப் பாட வேண்டியதில்லை யென்றானது. காற்றையே கயிறாக முறுக்கியும் கனலை நெஞ்சில் அடக்கியும் தங்களின் ஆற்றல் யாவும் விடுதலைக்கேயெனும் அணி வகுத்த மறவரின் நெஞ்சிலே ஏற்றி ஏற்றி உணர்வினை ஊட்டிய இரத்தினத்துரை எம் கவி வாணனைப் போற்ற நாவிற் புகழ்மொழி ஆயிரம் பொய்யிலாதவர் நெஞ்சிலுதிக்குமாம். வாழ்வு வேறு கவிக்களம் வேறெனும் வகை பிரித்த நடிப்புச் சுதேசியாய் தாழ்பிடித்து உயர்ந்திடத் தன்னிலை சாகஸங்கள் நடாத்த அறிந்திலான் கூழ் குடித்து அரைவயிற்றோடுதன் குடும்ப மோடினும் ஈழவிடுதலை நாளை நோக்கி நலிந்தவப் பெற்றியான் நமது தேசக் கவிதனைப் போற்றுவோம்! வேறு: புதுவைக் கவி எம் ரத்தினமே புகழ்மிக்குயர் நட் சத்திரமே எதுகைக்கொரு வெண் நித்திலமே எழுசப்த சுரத்தின் நிலமே வெல்லற்கரிய தமிழினிமை மேவக் கவியால் தளையிடையே அல்லல் படுமெம் நிலையுரைத்த சொல்லேருழவா சீராளா எழுத்தாம் அம்பை மழையாக்கி எறியும் வில்லை நாவாக்கி ஒளித் தூறல்களால் மானுடத்தின் உயர்விற் குறிவைத்துரமூட்டி புழுத்தே வழியும் சமுதாயப் பொல்லா நாற்றச் சிணிபோக்கி முழுத் தாரணியும் கழுவுண்ண முழுக்காட்டினை நின் கவியாலே! என்றும் நின்றன் இனியகவி ஈழமண்ணில் நிலை நின்றே நின்று மறவர்க்(கு) உரம் ஊட்டும் நின்றன் புகழைப் பறைசாற்றும். முற்றும்.
  18. இத்தகைய தியாக வாழ்வு வாழ்ந்து இலட்சியத் தீயில் தன்னையும் தனது மொத்தக் குடும்பத்தையும் ஆகுதியாக்கிய தேசியத்தலைவனின் நினைவுசுமந்து எமது சந்ததி தொடர்ந்து எம் இலட்சியத்தை முன்கொண்டு செல்ல யார்யார் பாடுபடுகிறார்களோ அவர்களின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
  19. கடந்த மாவீரர் தினத்தின்போது ஐபிசி தமிழ் ரிவியில் ஒளிபரப்பான ‘மாவீரம் போகவில்லை‘ என்ற தலைப்பிலான கவியரங்க ஒளிப்பதிவு இருந்தால் யாராவது தயவு செய்து போட முடியுமா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.