-
Posts
7364 -
Joined
-
Last visited
-
Days Won
18
Paanch last won the day on December 3 2021
Paanch had the most liked content!
About Paanch
- Birthday April 14
Profile Information
-
Gender
Male
-
Location
Germany
Recent Profile Visitors
15342 profile views
Paanch's Achievements
-
Ravi Shangaran 21. Mai um 21:22 · இன்றுடன் ராஜீவ்காந்தி மரணித்து 31 வருடங்கள் நிறைவடைகின்றது. அதனையடுத்து ராஜீவ் ஒரு நேர்மையான சுத்தமான கைகளை உடையவர், அவரை அநியாயமாகக் கொன்றுவிட்டார்கள் என ஈழ எதிர்ப்புக் கூட்டங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே ராஜீவின் கைகள் சுத்தமானவையா? என்றால் ஒரு போதும் இல்லை. அவர் தமிழ் இனத்தை மட்டுமல்ல, சீக்கிய இனத்தைக் கூட அழிக்கத்துணை நின்ற ஒரு இனப்படுகொலையாளி, ஊழல்வாதி! தமிழினப் படுகொலையில் ராஜீவ்காந்தியின் பங்களிப்பு! 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதை அடுத்து 1987 யூலை மாதம் தமிழர் தாயகத்திற்கு இந்தியப் படைகள் ”இந்திய அமைதி காக்கும் படைகள்” என்ற பெயரில் பெருமெடுப்பில் வந்து இறங்கின. இந்தியப் படைகள் தமிழர் தாயகத்திற்கு வந்ததும், சிறிலங்கா இராணுவத்தினரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு இந்தியா இராணுவத்தினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இதனால் இந்தியப் படையினர் தங்களைப் பாதுகாப்பார்கள் என்ற தோற்றப்பாடு தமிழர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இயக்கத்திடமிருந்து ஆயுதங்களை களைந்து அமைதியை ஏற்படுத்துவதாக சொல்லிக் கொண்ட இந்திய அமைதிப்படை மற்றும் உளவு அமைப்பான ரோ, மறுபுறமாக இங்கிருந்து தப்பிச்சென்று இந்தியாவில் ஒழித்திருந்த ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புகளை மீள தமிழர் தாயகத்திற்கு அழைத்துவந்து அவர்களுக்கு பாரியளவில் ஆயுதங்களை வழங்கியிருந்தது. இயக்கத்திடமிருந்து ஆயுதங்களை பறித்துவிட்டு ஏனைய தமிழ் ஒட்டுக்குழுக்களை வைத்து இயக்கம் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒழிப்பது தான் இந்தியப்படை மற்றும் ரோ இன் திட்டமாக இருந்தது. இந்தத் திட்டத்தை இயக்கம் உணர்ந்து கொண்டதாலும், இந்தியப்படைகளின் பின்னணியில் இயங்கிய ஒட்டுக்குழுக்கள், இயக்கத்தின் முகாம்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்தத்தொடங்கியிருந்ததாலும் இந்தியப்படைகளின் தந்திர நடவடிக்கைப் பிழைத்துப் போனது. அதனையடுத்து இந்தியப்படைகள் இயக்கத்தை அழிக்கிறோம் என சொல்லிக்கொண்டு போரை ஆரம்பித்தன. ஆனால் இயக்கத்தை அழிப்பதற்கு மாறாக தமிழ் மக்களை கொன்று குவிப்பதில்த் தான் இந்தியப்படைகள் அதிக முனைப்புடன் செயற்பட்டது. அந்த வகையில் தமிழர் தாயகத்தில் இந்தியப்படைகள் செய்தி முக்கியமான சில சம்பவங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது! 11.10.1987 - புதுக்காட்டுச் சந்தியில் பொதுமக்கள் மீது இந்தியப்படையினர் நடாத்திய தாக்குதலில் 8 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர். 12.10.1987 - கொக்குவில் பிரம்படி மற்றும் பொற்பதியில் இந்தியப்படைகள் நூறிற்கும் மேற்பட்ட தமிழர்களை உயிருடன் நிலத்தில் படுக்க வைத்து அவர்கள் மேல் டாங்கி வாகனங்களை ஏற்றிக் கொலை செய்திருந்தார்கள். 12.10.1987 - சுன்னாகம் மின்சார நிலையப்பகுதியில் இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 08 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 20.10.1987 - சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் அடைக்கலம் புகுந்திருந்தவர்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். 20.10.1987 - யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலையில் அடைக்கலம் புகுந்திருந்தவர்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 17 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் 21.10.1987 - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 21 வைத்தியசாலைப் பணியாளர்களும், 46 நோயாளிகளும் கொல்லப்பட்டனர் 22.10.1987 - யாழ்ப்பாணம் அராலித்துறையில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 35க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர் 24.10.1987 - அச்சம் காரணமாக மக்கள் அடைக்கலம் தேடி தங்கியிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி அகதிகள் முகாம் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 40 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 26.10.1987 - அளவெட்டி இந்து ஆச்சிரமத்தின் மீது இந்தியப்படைகள் நடாத்திய உலங்குவானூர்தித் தாக்குதலில் அங்கு தங்கியிருந்த முதியோர்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். 27.10.1987 - சாவகச்சேரி சந்தைப்பகுதியில் கந்தசஸ்டி விரதகால சூரன்போர் நிகழ்வின் மீது இந்தியப்படைகளின் இரு உலங்குவானூர்திகள் நடாத்திய தாக்குதலில் 68 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 05.11.1987 - மூளாய் வைத்தியசாலை மீது இந்தியப்படைகள் நடாத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். 11.11.1987 - நெடுங்கேணியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள், கோவில்கள் மற்றும் கட்டடங்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதல்களில் 15க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். 12.12.1987 - மட்டக்களப்பு பொதுச்சந்தை மீது இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 159க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். சந்தையிலிருந்த கடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. எரிந்துகொண்டிருந்த கடைகளுக்குள் இரு குழந்தைகள் உட்பட தமிழர்களின் சடலங்களும், உயிருடன் இருந்தவர்களும் தூக்கிப் போடப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் 31 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏனையவர்கள் கடைகளுடன் சேர்ந்து எரிந்து சாம்பலாகினர். 17.01.1989 - வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் இந்தியப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 02-04.08.1989 - வல்வெட்டித்துறையில் இந்தியப்படையினர் நடாத்திய தாக்குதல்களில் 66 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 8000க்கும் அதிகமான தமிழர்கள் இந்தியப்படைகளால் கொல்லப்பட்டிருந்தனர். உண்மையான தொகை அண்ணளவாக 15000 - 25000 வரை இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. 3500க்கும் அதிகமான தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்தியப்படைகளின் இவ்வாறான பாலியல் வன்புணர்வுகள் பற்றி மக்கள் இந்திய இராணுவத்தளபதியிடம் முறையிட்ட போது இவ்வாறான முறைப்பாடுகளுடன் யாரும் என்னிடம் வரவேண்டாம் என்றும், இந்தியப்படைகள் யாரையாவது சுட்டால் மாத்திரம் முறையிடவும் எனக் கூறியிருந்தார். அத்துடன் இக் காலப்பகுதியில் இந்தியப்படையினர் பரவலான பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததால் அதையொரு குற்றமாகக் கருதவேண்டாமென இந்திய இராணுவத்தளபதிகள் மக்களை நிர்ப்பந்தித்திருந்தார்கள். 4000க்கும் அதிகமான தமிழர்கள் இந்தியப்படைகளால் காணாமலாக்கப்பட்டிருந்தனர். 550,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருந்தனர். தமிழர்கள் பல பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் இந்தியப்படைகளால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. சீக்கிய இனத்தவர்கள் மீதான வன்முறைகள்! 31.10.1984அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, அவருடைய இரண்டு சீக்கிய இனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பல இடங்களில் சீக்கிய இனத்தவர்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. அதனால் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெறும் கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கலவரங்களில் ஈடுபடவேண்டாமென காங்கிரஸ் உறுப்பினர்களை வேண்டிக்கொள்ளுமாறு இந்திராகாந்தியின் மகனான ராஜீவ்காந்தியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு ”பெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்” என சீக்கிய இனத்தவர்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறைகளை ராஜீவ்காந்தி நியாயப்படுத்தியிருந்தார். இது சீக்கிய இனத்தவர்கள் மீதான இனப்படுகொலையெனவும் வர்ணிக்கப்படுகின்றது. அதைப்போலவே 21.10.1987அன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை மற்றும் பல இடங்களில் இந்திய இராணுவத்தினரால் பல தமிழர்கள் கொல்லப்பட்டு இரு வாரங்களின் பின்னர், இந்தியாவில் ஒரு கூட்டத்தில் பேசிய ராஜீவ் ”இலங்கையில் இந்தியப்படை சிறப்பாக செயற்படுகின்றது” எனக்கூறி தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மூடிமறைத்திருந்தார். 1984இல் நடைபெற்ற போபால் விசவாயுக்கசிவிற்குக் காரணமானவர்களை தப்பிக்க வைத்தது, மற்றும் ஆயுதக்கொள்வனவில் ஊழல் என ராஜீவ் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்களும் உள்ளது. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது அவருடைய கட்சி முக்கியஸ்தர்கள் யாரும் அருகில் இருக்கவில்லை. இவ்வாறான பல விடயங்களால் ராஜிவ் மரணத்திற்கு உட்கட்சிப் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்கள் உண்டு #தமிழினப்படுகொலை #TamilGenocide
-
பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமை நீக்கப்படும்
Paanch replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
பப்பாவில் ஏற்றுகிறான் என்று தெரியாமல் ஏறிப் பாடையில் வீழ்ந்தேனே. -
2024 ஆம் ஆண்டு வரை... தேர்தலை நடத்தாமல் இருக்க, அரசாங்கம் தீர்மானம் !
Paanch replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை..... அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார். இதேவேளை, தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நோக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை..... இதேவேளை, திருத்தங்களின் அடிப்படையில் 21வது சீர்திருத்ததில் இலங்கையின் குடிமகனாக இல்லாத அல்லது இலங்கையின் குடிமகனாக இருக்கும் போது மற்றும் ஒரு நாட்டின் குடிமகன் ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கத் தகுதி பெறமாட்டார். அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை தொழில் வல்லுநர் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஏற்கனவே பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு புறம்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மை விருப்பத்தை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள். இந்த பேரவைக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையேஅரச தலைவருக்கு பரிந்துரைக்கும். சுயாதீன ஆணைக்குழுக்கள், தேர்தல், பொது சேவை, தேசிய காவல்துறை, கணக்காய்வு சேவை, மனித உரிமைகள், நிதி, எல்லை நிர்ணயம், தேசிய கொள்வனவு ஆணைக்குழுக்கள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுக்களாக அமையும். அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகள், பணிகள், ஆலோசனை சேவைகள் போன்றவை, கொள்முதல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும். -
-
அம்மாவை உயிரோடு சந்தித்து அளவளாவி அவரது வீர வாழ்க்கை பற்றியும், போராட்ட வாழ்வுபற்றியும் நேரில் அறியும் பாக்கியம் பெற்ற பேற்றை எண்ணும்போது அவர் மறைவின் துன்பத்தையும் மீறி மனதில் ஒரு உத்வேகம் எழத்தான் செய்கிறது. மறைவு துன்பத்தைத் தந்தாலும் மறைந்த தினம் ஏதோ ஒன்றை உணர்த்தி நிற்கிறது. தமழீழம் வளர உரமாக்கப்பட்ட மக்களோடு என் ஆத்மாவும் இணையவேண்டும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்து இணைந்தவர்போல் தெரிகிறார். பிள்ளைகளைப் பெற்று அவர்களைத் தமிழின விடுதலைக்காக மாவீரர்களாக்கிய அந்த அன்னையின் ஆன்மா சாந்திபெற வேண்டுகிறேன். அன்னையைப்பற்றி அறியாதவர்கள் அறிவதற்கு அவரது பிள்ளைகள், மருமகனின் வெளியீடுகளான மனஓசை, சிவா தியாகராசாவின் பெருநினைவின் சிறுதுளிகள், மூனாவின் நெஞ்சில் நின்றவை போன்ற வெளியீடுகளிலிந்து படித்து அறியலாம்.
-
இந்தத் 90 லட்சம் உயிர்கள் இழப்பிற்கும் காரணமாக இருந்து உலக பணக்கார வரிசையில் இடம்பிடித்து மகிழ்ந்தவர்கள் எத்தனைபேர்....?? அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த மக்கள் எத்தனைபேர்...??
- 1 reply
-
- 1
-
-
தலைவரை கோவபடுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
Paanch replied to valavan's topic in எங்கள் மண்
'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 18 டிசம்பர் 2019 பட மூலாதாரம்,விடுதலைப் புலிகள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கே தலைவர் கோபப்பட்டதாகச் செய்தியில்லை. -
எதிர்க் கட்சித் தலைவராக... மஹிந்த? – ராஜித, வெளியிட்ட முக்கிய தகவல்!
Paanch replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பொந்துக்குள் நண்டுகள் உள்ளனவா என்று நரியானது தன் வாலைவிட்டு ஆராய்ந்து பார்ப்பது போன்று மகிந்தமாத்தையாவுக்காக இந்த நரியும் மக்களை ஆராச்சி செய்கிறதோ???? -
டெனீசை சிந்திக்க வைத்த 8வயது மகன்? Tamilan September 14, 2020 http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/09/119539889_1790841451053921_2514811120952575965_n-6-228x300.jpg நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேசுவரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கை வாபசு பெற்ற டெனிசுவரன்: 8 வயது மகன் சொன்ன காரணம் டெனீசுவரனிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேசுவரன் மீதான வழக்கை விலக்கிக் கொள்ளப் போவதாக தொலைபேசி வழியாக அவரிடமே கூறிவிட்டேன் என வடக்கு முன்னாள் அமைச்சர் பா.டெனிசுவரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக்குள் எழுந்த ஊழல் குற்றச்சாட்டையடுத்து, அமைச்சர்கள் பதவிநீக்கம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக, பா.டெனீசுவரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் தீர்ப்பு டெனிசுவரனிற்கு சாதகமாக அமைந்திருந்தும், அதை விக்னேசுவரன் நடைமுறைப்படுத்தவில்லை, அவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என டெனிசுவரன் சார்பில், எம்.எ.சுமந்திரனின் கனிட்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மீளவும் வழக்கொன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இறுதிக்கட்டம் நெருங்கியுள்ளது. நாளை (15) தொடக்கம் 3 நாட்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சுமார் 4 நாட்களின் முன்னர் விக்னேசுவரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டெனிசுவரன், வழக்கை மீளப்பெற போவதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தார். டெனிசுவரன் தொடர்பு கொண்டபோது, விக்னேசுவரன் கதிர்காம கந்தன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். மேலும் டெனிசுவரன் தெரிவித்ததாவது,“விக்னேசுவரன் ஐயாவை சிறையில் அடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நான் வழக்கை தொடரவில்லை. எனக்கு நேர்ந்த அநீதியொன்றில் நீதி கோரியே வழக்கு தொடர்ந்தேன். ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர்கள் சிலர் மீது சுமத்தப்பட்டபோது அனைவரையும் நீக்கினார்கள். மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மறுவாழ்வு திட்டமொன்றை ஜப்பானிய நிதியுதவியில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்ததால் அதை முடிக்கும்வரை அவகாசம்- 2 மாதங்கள்- தருமாறு கோரினேன். அதை அவர்கள் ஏற்கவில்லை. இதனாலேயே வழக்கை தொடர்ந்தேன். நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றம் உறுதிசெய்து விட்டது. இப்பொழுது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகியுள்ளது. எனக்கு எப்படியான தீர்ப்பு வந்தது என்பதற்கு அப்பால், இப்பொழுது விக்னேசுவரன் ஐயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டிய தேவை எங்கள் எல்லோருக்குமுள்ளது. அவர் மீது மாகாணசபை நிர்வாக விமர்சனங்கள் இருந்தாலும், தற்போது நாடாளுமன்றத்தில் எந்த தமிழ் எம்.பியும் தொடாத- எமது வரலாற்றை அங்கு பதிவு செய்யும் முயற்சியில் விக்னேசுவரன் ஐயா ஈடுபட்டுள்ளார். இதுவரை தமிழ் எம்.பிக்கள் யாரும் அதை செய்யவில்லை. இதனாலேயே அவரை பலரும் குறிவைக்கிறார்கள். இனப்பற்றுள்ளவன் என்ற அடிப்படையில் இப்போது அவரை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாக கருதுகிறேன். நான் என்ற சிந்தனைக்கு அப்பால், நாம் என சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதனால்தான், இந்த பரபரப்புக்கள் ஊடகங்களில் ஏற்படுவதற்கு முன்னரே- நான்கு நாட்கள் முன்னர்- அவரை தொலைபேசியில்அழைத்து, இதைப்பற்றி பேசிவிட்டேன். நாளை வழக்கு விசாரணையில், இந்த வழக்கை விலக்கிக் கொள்வதாக எமது சட்டத்தரணி அறிவிப்பார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், சிக்கலின்றி இந்த விவகாரம் முடிந்து விடும். வழக்கை விலக்கிக் கொள்வதென நான் இப்பொழுது முடிவெடுக்கவில்லை. அதை சில வாரங்களின் முன்னரே எடுத்து விட்டேன். எனது 8 வயது மகன் முகநூல் பார்ப்பார். அதன்மூலம் அரசியல் நிலவரம் அவருக்கு ஓரளவு தெரியும். அண்மையில் நாங்கள் வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும்போது, இதை என்னிடம் கேட்டார். “அப்பா… உங்கள் வழக்கினால் விக்னேசுவரன் ஐயா சிறைக்கு போவாரா? வயதான ஒருவர் சிரமப்படுவார் இல்லையா?“ என என்னிடம் கேட்டார். அதற்கு பின்னர் பலமுறை கேட்டு விட்டார். அப்பொழுதே வழக்கை விலக்கிக் கொள்ளலாமா என யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் விக்னேசுவரன் ஐயாவிற்கு எழுந்த நெருக்கடிகளை பார்த்து விட்டு, இந்த முடிவை உறுதியாக எடுத்தேன்“ என்றார். http://eelattamilan.stsstudio.com/