-
Posts
7360 -
Joined
-
Last visited
-
Days Won
18
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Paanch
-
2024 ஆம் ஆண்டு வரை... தேர்தலை நடத்தாமல் இருக்க, அரசாங்கம் தீர்மானம் !
Paanch replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை..... அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார். இதேவேளை, தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நோக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை..... இதேவேளை, திருத்தங்களின் அடிப்படையில் 21வது சீர்திருத்ததில் இலங்கையின் குடிமகனாக இல்லாத அல்லது இலங்கையின் குடிமகனாக இருக்கும் போது மற்றும் ஒரு நாட்டின் குடிமகன் ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கத் தகுதி பெறமாட்டார். அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை தொழில் வல்லுநர் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஏற்கனவே பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு புறம்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மை விருப்பத்தை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள். இந்த பேரவைக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையேஅரச தலைவருக்கு பரிந்துரைக்கும். சுயாதீன ஆணைக்குழுக்கள், தேர்தல், பொது சேவை, தேசிய காவல்துறை, கணக்காய்வு சேவை, மனித உரிமைகள், நிதி, எல்லை நிர்ணயம், தேசிய கொள்வனவு ஆணைக்குழுக்கள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுக்களாக அமையும். அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகள், பணிகள், ஆலோசனை சேவைகள் போன்றவை, கொள்முதல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும். -
-
அம்மாவை உயிரோடு சந்தித்து அளவளாவி அவரது வீர வாழ்க்கை பற்றியும், போராட்ட வாழ்வுபற்றியும் நேரில் அறியும் பாக்கியம் பெற்ற பேற்றை எண்ணும்போது அவர் மறைவின் துன்பத்தையும் மீறி மனதில் ஒரு உத்வேகம் எழத்தான் செய்கிறது. மறைவு துன்பத்தைத் தந்தாலும் மறைந்த தினம் ஏதோ ஒன்றை உணர்த்தி நிற்கிறது. தமழீழம் வளர உரமாக்கப்பட்ட மக்களோடு என் ஆத்மாவும் இணையவேண்டும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்து இணைந்தவர்போல் தெரிகிறார். பிள்ளைகளைப் பெற்று அவர்களைத் தமிழின விடுதலைக்காக மாவீரர்களாக்கிய அந்த அன்னையின் ஆன்மா சாந்திபெற வேண்டுகிறேன். அன்னையைப்பற்றி அறியாதவர்கள் அறிவதற்கு அவரது பிள்ளைகள், மருமகனின் வெளியீடுகளான மனஓசை, சிவா தியாகராசாவின் பெருநினைவின் சிறுதுளிகள், மூனாவின் நெஞ்சில் நின்றவை போன்ற வெளியீடுகளிலிந்து படித்து அறியலாம்.
-
இந்தத் 90 லட்சம் உயிர்கள் இழப்பிற்கும் காரணமாக இருந்து உலக பணக்கார வரிசையில் இடம்பிடித்து மகிழ்ந்தவர்கள் எத்தனைபேர்....?? அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த மக்கள் எத்தனைபேர்...??
- 1 reply
-
- 1
-
-
தலைவரை கோவபடுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
Paanch replied to valavan's topic in எங்கள் மண்
'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 18 டிசம்பர் 2019 பட மூலாதாரம்,விடுதலைப் புலிகள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கே தலைவர் கோபப்பட்டதாகச் செய்தியில்லை. -
எதிர்க் கட்சித் தலைவராக... மஹிந்த? – ராஜித, வெளியிட்ட முக்கிய தகவல்!
Paanch replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பொந்துக்குள் நண்டுகள் உள்ளனவா என்று நரியானது தன் வாலைவிட்டு ஆராய்ந்து பார்ப்பது போன்று மகிந்தமாத்தையாவுக்காக இந்த நரியும் மக்களை ஆராச்சி செய்கிறதோ???? -
டெனீசை சிந்திக்க வைத்த 8வயது மகன்? Tamilan September 14, 2020 http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/09/119539889_1790841451053921_2514811120952575965_n-6-228x300.jpg நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேசுவரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கை வாபசு பெற்ற டெனிசுவரன்: 8 வயது மகன் சொன்ன காரணம் டெனீசுவரனிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேசுவரன் மீதான வழக்கை விலக்கிக் கொள்ளப் போவதாக தொலைபேசி வழியாக அவரிடமே கூறிவிட்டேன் என வடக்கு முன்னாள் அமைச்சர் பா.டெனிசுவரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக்குள் எழுந்த ஊழல் குற்றச்சாட்டையடுத்து, அமைச்சர்கள் பதவிநீக்கம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக, பா.டெனீசுவரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் தீர்ப்பு டெனிசுவரனிற்கு சாதகமாக அமைந்திருந்தும், அதை விக்னேசுவரன் நடைமுறைப்படுத்தவில்லை, அவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என டெனிசுவரன் சார்பில், எம்.எ.சுமந்திரனின் கனிட்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மீளவும் வழக்கொன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இறுதிக்கட்டம் நெருங்கியுள்ளது. நாளை (15) தொடக்கம் 3 நாட்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சுமார் 4 நாட்களின் முன்னர் விக்னேசுவரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டெனிசுவரன், வழக்கை மீளப்பெற போவதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தார். டெனிசுவரன் தொடர்பு கொண்டபோது, விக்னேசுவரன் கதிர்காம கந்தன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். மேலும் டெனிசுவரன் தெரிவித்ததாவது,“விக்னேசுவரன் ஐயாவை சிறையில் அடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நான் வழக்கை தொடரவில்லை. எனக்கு நேர்ந்த அநீதியொன்றில் நீதி கோரியே வழக்கு தொடர்ந்தேன். ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர்கள் சிலர் மீது சுமத்தப்பட்டபோது அனைவரையும் நீக்கினார்கள். மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மறுவாழ்வு திட்டமொன்றை ஜப்பானிய நிதியுதவியில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்ததால் அதை முடிக்கும்வரை அவகாசம்- 2 மாதங்கள்- தருமாறு கோரினேன். அதை அவர்கள் ஏற்கவில்லை. இதனாலேயே வழக்கை தொடர்ந்தேன். நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றம் உறுதிசெய்து விட்டது. இப்பொழுது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகியுள்ளது. எனக்கு எப்படியான தீர்ப்பு வந்தது என்பதற்கு அப்பால், இப்பொழுது விக்னேசுவரன் ஐயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டிய தேவை எங்கள் எல்லோருக்குமுள்ளது. அவர் மீது மாகாணசபை நிர்வாக விமர்சனங்கள் இருந்தாலும், தற்போது நாடாளுமன்றத்தில் எந்த தமிழ் எம்.பியும் தொடாத- எமது வரலாற்றை அங்கு பதிவு செய்யும் முயற்சியில் விக்னேசுவரன் ஐயா ஈடுபட்டுள்ளார். இதுவரை தமிழ் எம்.பிக்கள் யாரும் அதை செய்யவில்லை. இதனாலேயே அவரை பலரும் குறிவைக்கிறார்கள். இனப்பற்றுள்ளவன் என்ற அடிப்படையில் இப்போது அவரை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாக கருதுகிறேன். நான் என்ற சிந்தனைக்கு அப்பால், நாம் என சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதனால்தான், இந்த பரபரப்புக்கள் ஊடகங்களில் ஏற்படுவதற்கு முன்னரே- நான்கு நாட்கள் முன்னர்- அவரை தொலைபேசியில்அழைத்து, இதைப்பற்றி பேசிவிட்டேன். நாளை வழக்கு விசாரணையில், இந்த வழக்கை விலக்கிக் கொள்வதாக எமது சட்டத்தரணி அறிவிப்பார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், சிக்கலின்றி இந்த விவகாரம் முடிந்து விடும். வழக்கை விலக்கிக் கொள்வதென நான் இப்பொழுது முடிவெடுக்கவில்லை. அதை சில வாரங்களின் முன்னரே எடுத்து விட்டேன். எனது 8 வயது மகன் முகநூல் பார்ப்பார். அதன்மூலம் அரசியல் நிலவரம் அவருக்கு ஓரளவு தெரியும். அண்மையில் நாங்கள் வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும்போது, இதை என்னிடம் கேட்டார். “அப்பா… உங்கள் வழக்கினால் விக்னேசுவரன் ஐயா சிறைக்கு போவாரா? வயதான ஒருவர் சிரமப்படுவார் இல்லையா?“ என என்னிடம் கேட்டார். அதற்கு பின்னர் பலமுறை கேட்டு விட்டார். அப்பொழுதே வழக்கை விலக்கிக் கொள்ளலாமா என யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் விக்னேசுவரன் ஐயாவிற்கு எழுந்த நெருக்கடிகளை பார்த்து விட்டு, இந்த முடிவை உறுதியாக எடுத்தேன்“ என்றார். http://eelattamilan.stsstudio.com/
-
என்னதான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை அது இது என்று உலகமகா வல்லரசுகள் பல மில்லியன்கள், பில்லியன்கள் செலவுசெய்து கண்டுபிடித்தாலும், ஒரு தீப்பந்தத்தை ஒரு சதமும் செலவின்றி, அதுவும் சிறிலங்காவின் வடமாகாணத்திலிருந்து கொழும்புக்கு குறிதவறாமல் பாயவைக்கும் தொழில் நுட்பத் திறன் வடமாகாணத்தவனுக்கு மட்டுமே உண்டு.
-
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் குழு தமது கூட்டு பிரகடனத்தை இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர். கூட்டுப் பிரகடனத்தில், போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து குழுக்களின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அம்ச கோரிக்கைகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது கூட்டுப் பிரகடனத்தின் சுருக்கம் குறித்து நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளித்ததுடன், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து விரைவில் செயற்படுமாறு பிரதிநிதிகள் குழு புதிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ‘கோ கோட்டா கம’போராட்டகாரர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் 15 அமைச்சர்கள் மாத்திரமே இடம்பெறும் ஒரு இடைக்கால அரசாங்கம் 18 மாத காலத்திற்கு அமைக்க வேண்டும் 20வது திருத்தத்தை நீக்குதல் மற்றும் புதிய 21வது திருத்தத்தை கொண்டு வருவது போன்ற அரசியலமைப்பின் அத்தியாவசிய திருத்தங்கள் பொருளாதார நெருக்கடி, நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்கான கோரிக்கைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு சமூக பாதுகாப்பு அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டும் நிதி மற்றும் வேறுவகையில் செய்யப்பட்ட அனைத்து குற்றங்களையும் வெளிப்படையான கண்காணிப்பு அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள் சுரைக்காய் காய்த்து வந்தபின்பு சுவைக்கலாம் அதுவரை இது ஏட்டுச் சுரக்காய்தான். .lankasri.com
-
“ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம் ” : அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்
Paanch replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
-
-
*சுவித்தம்பி அவர்கள்*
-
கோட்டாவிற்கு எதிரான... எந்த பிரேரணைக்கும், ஆதரவில்லை – வாசுதேவ
Paanch replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு. அரசியல்வாதியின் பேச்சு விடியுமுன்னே போச்சு. -
அலரிமாளிகைக்கு... முன்பாக, நடுவீதியில் மக்கள் போராட்டம்!
Paanch replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
மகிந்தர் குடும்பம் மக்களை நடுவீதிக்குத்தான் அனுப்பியுள்ளனர், வீதியோரத்துக்கு அல்ல ஆகவே மக்கள் நடுவீதியில் நின்றுதான் போராடவேண்டும் என்ற நியாயமான நல்லெண்ணம் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. அவர்களும் மனிதர்கள்தானே.!!- 1 reply
-
- 1
-
-