Jump to content

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7510
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Posts posted by Paanch

  1. இந்தியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயின் பிறந்தநாளில் 100 கிலோ கேக் வெட்டியதுடன் 5000 கிராம மக்களுக்கு விருந்தளித்து உபசரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

    கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா துக்காநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா மர்தி.

    பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான சிவப்பா மர்தி தொழிலதிபர் ஆவார், இவர் தன்னுடைய வீட்டில் கிரிஷ் என்ற வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

    கிரிஷ் மீது சிவப்பா மர்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர், கிரிஷ்க்கு பிறந்தநாள் வந்துவிட அதை வெகுவிமர்சையாக கொண்டாட முடிவு செய்தார்.

    நாயின் பிறந்தநாளுக்கு 100 கிலோ கேக் வெட்டிய தொழிலதிபர்! 5000 பேருக்கு விருந்து

    இதற்காக 100 கிலோ கேக் ஒன்றை செய்து, அதை கிரிஷ் வெட்ட ஊர் மக்களே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

    மேலும் அந்த நாய்க்கு மாலை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்லவமாக அழைத்து சென்றனர்.

     

    news.lankasri.com

  2. வைத்தியர்கள் உட்பட வெளிநாடு சென்றோருக்கு ஏற்பட்ட சிக்கல்! இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை

    Sri Lanka RefugeesSri Lanka Economic CrisisSri Lankan political crisis

    1 மணி நேரம் முன்

     நாடு கடத்துமாறு அறிவித்தல்

    உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடு சென்றவர்கள் மற்றும் வெளிநாடு சென்ற வைத்தியர்களை உடனடியாக நாடு கடத்துமாறு அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் வெளியாக்கியுள்ளது.

    பதிவி நீக்கம்

    உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெறாமல் வைத்தியர்கள் வெளிநாடு சென்றால், நிறுவன சட்டத்தின் பிரகாரம் சேவையில் இருந்து விலகியவர்கள் என பதிவை நீக்க வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சில வைத்தியர்களும் இலங்கைக்கு வர மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முறையான நடைமுறைகள் இல்லாமல் வெளிநாடு செல்வோர்

    முறையான நடைமுறைகள் இல்லாமல் வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

    எப்படியிருப்பினும் முறையான நடைமுறைக்கு அமைய வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் வைத்தியர்களுக்கு அனுமதி வழங்க பின் வாங்க மாட்டோம் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

     

  3. On 16/6/2022 at 20:59, suvy said:

    ஆஹா.......நன்றாக இருக்கின்றது......தொடருங்கள்.....பாஞ்ச் ......!   👏   👍

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு......

    1960

    1. அடுத்த வீட்டுப் பெண்
    2. அன்புக்கோர் அண்ணி
    3. ஆட வந்த தெய்வம்
    4. ஆளுக்கொரு வீடு
    5. இரும்புத்திரை
    6. அவன் அவனேதான்
    7. இருமனம் கலந்தால் திருமணம்
    8. உத்தமி பெற்ற ரத்தினம்
    9. எங்கள் செல்வி
    10. எல்லாரும் இந்நாட்டு மன்னர்
    11. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
    12. கடவுளின் குழந்தை
    13. களத்தூர் கண்ணம்மா
    14. கவலை இல்லாத மனிதன்
    15. குறவஞ்சி
    16. குழந்தைகள் கண்ட குடியரசு
    17. கைராசி
    18. கைதி கண்ணாயிரம்
    19. சவுக்கடி சந்திரகாந்தா
    20. சங்கிலித்தேவன்
    21. சிவகாமி
    22. சோலைமலை ராணி
    23. தங்கம் மனசு தங்கம்
    24. தங்கரத்தினம்
    25. தந்தைக்குப்பின் தமையன்
    26. திலகம்
    27. தெய்வப்பிறவி
    28. தோழன்
    29. நான் கண்ட சொர்க்கம்
    30. பக்த சபரி
    31. படிக்காத மேதை
    32. பாக்தாத் திருடன்
    33. பார்த்திபன் கனவு
    34. பாட்டாளியின் வெற்றி
    35. பாதைதெரியுது பார்
    36. பாவை விளக்கு
    37. புதிய பாதை
    38. பெற்ற மனம்
    39. பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
    40. பொன்னித் திருநாள்
    41. மகாலட்சுமி
    42. மன்னாதி மன்னன்
    43. மீண்ட சொர்க்கம்
    44. யானைப்பாகன்
    45. ரத்தினபுரி இளவரசி
    46. ராஜபக்தி
    47. ராஜா தேசிங்கு
    48. ராஜமகுடம்
    49. ரேவதி
    50. விஜயபுரி வீரன்
    51. விடிவெள்ளி
    52. வீரக்கனல்

    1959

    1. வீரபாண்டிய கட்டபொம்மன்
    2. அவள் யார்
    3. அமுதவல்லி
    4. அல்லி பெற்ற பிள்ளை
    5. அழகர்மலை கள்வன்
    6. அபலை அஞ்சுகம்
    7. அதிசய பெண்
    8. அருமை மகள் அபிராமி
    9. உலகம் சிரிக்கிறது
    10. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
    11. எங்கள் குலதேவி
    12. ஒரே வழி
    13. ஓடிவிளையாடு பாப்பா
    14. கலைவாணன்
    15. கல்யாண பரிசு
    16. கண் திறந்தது
    17. கல்யாணிக்கு கல்யாணம்
    18. காவேரியின் கணவன்
    19. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
    20. சகோதரி
    21. சிவகங்கை சீமை
    22. சுமங்கலி
    23. சொல்லுத்தம்பி சொல்லு
    24. தங்கப்பதுமை
    25. தலை கொடுத்தான் தம்பி
    26. தாமரைக்குளம்
    27. தாய் மகளுக்கு கட்டிய தாலி
    28. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
    29. தெய்வபலம்
    30. தெய்வமே துணை
    31. நல்ல தீர்ப்பு
    32. நாலுவேலி நிலம்
    33. நான் சொல்லும் ரகசியம்
    34. நாட்டுக்கொரு நல்லவன்
    35. பத்தரமாத்து தங்கம்
    36. பாகப்பிரிவினை
    37. பாக்யதேவதா
    38. பாஞ்சாலி
    39. பாண்டித் தேவன்
    40. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
    41. புதுமைப்பெண்
    42. பெண்குலத்தின் பொன் விலக்கு
    43. பொன்னு விளையும் பூமி
    44. மஞ்சள் மகிமை
    45. மரகதம்
    46. மணிமேகலை
    47. மனைவியே மனிதனின் மாணிக்கம்
    48. மாதவி
    49. மாலா ஒரு மங்கல விளக்கு
    50. மாமியார் மெய்ச்சிய மருமகள்
    51. மின்னல் வீரன்
    52. யானை வளர்த்த வானம்பாடி
    53. ராஜ சேவை
    54. ராஜா மலையசிம்மன்
    55. வண்ணக்கிளி
    56. வாழவைத்த தெய்வம்
    57. வாழ்க்கை ஒப்பந்தம்

    1958

    1. அன்பு எங்கே
    2. அன்னையின் ஆணை
    3. அதிசய திருடன்
    4. அவன் அமரன்
    5. இல்லறமே நல்லறம்
    6. உத்தம புத்திரன்
    7. எங்கக் குடும்பம் பெரிசு
    8. கன்னியின் சபதம்
    9. கடன் வாங்கி கல்யாணம்
    10. காத்தவராயன்
    11. குடும்ப கௌரவம்
    12. சபாஷ் மீனா
    13. சம்பூர்ண ராமாயணம்
    14. சாரங்கதாரா
    15. செங்கோட்டை சிங்கம்
    16. திருமணம்
    17. திருடர்கள் ஜாக்கிரதை
    18. தேடிவந்த செல்வம்
    19. தை பிறந்தால் வழி பிறக்கும்
    20. நல்ல இடத்து சம்பந்தம்
    21. நாடோடி மன்னன்
    22. நான் வளர்த்த தங்கை
    23. நீலாவுக்கு நெறஞ்ச மனசு
    24. பதிபக்தி
    25. பானை பிடித்தவன் பாக்கியசாலி
    26. பிள்ளைக் கனியமுது
    27. பூலோக ரம்பை
    28. பெரிய கோவில்
    29. பெற்ற மகனை விற்ற அன்னை
    30. பொம்மைக் கல்யாணம்
    31. மணமாலை
    32. மனமுள்ள மறுதாரம்
    33. மாலையிட்ட மங்கை
    34. மாங்கல்ய பாக்கியம்
    35. மாய மனிதன்
    36. வஞ்சிக்கோட்டை வாலிபன்

    1957

    1. அம்பிகாபதி
    2. அன்பே தெய்வம்
    3. அலாவுதீனும் அற்புத விளக்கும்
    4. ஆரவல்லி
    5. இரு சகோதரிகள்
    6. எங்கள் வீட்டு மகாலட்சுமி
    7. கற்புக்கரசி
    8. சமய சஞ்சீவி
    9. சக்கரவர்த்தி திருமகன்
    10. சௌபாக்கியவதி
    11. தங்கமலை ரகசியம்
    12. நீலமலைத்திருடன்
    13. பத்தினி தெய்வம்
    14. பக்த மார்க்கண்டேயா
    15. பாக்யவதி
    16. புது வாழ்வு
    17. புதுமைப்பித்தன்
    18. புதையல்
    19. மகதலநாட்டு மேரி
    20. மக்களை பெற்ற மகாராசி
    21. மணாளனே மங்கையின் பாக்கியம்
    22. மணமகள் தேவை
    23. மல்லிகா
    24. மகாதேவி
    25. மயாபஜார்
    26. முதலாளி
    27. யார் பையன்
    28. ராஜராஜன்
    29. ராணி லலிதாங்கி
    30. வணங்காமுடி

    1956

    1. அமரதீபம்
    2. அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
    3. ஆசை
    4. ஒன்றே குலம்
    5. கண்ணின் மணிகள்
    6. காலம் மாறிப்போச்சு
    7. குடும்பவிளக்கு
    8. குலதெய்வம்
    9. கோகிலவாணி
    10. சதாரம்
    11. தாய்க்குப்பின் தாரம்
    12. தெனாலிராமன்
    13. நல்ல வீடு
    14. நன்நம்பிக்கை
    15. நாகபஞ்சமி
    16. நானே ராஜா
    17. நான் பெற்ற செல்வம்
    18. படித்தபெண்
    19. பாசவலை
    20. பிரேம பாசம்
    21. பெண்ணின் பெருமை
    22. மதுரை வீரன்
    23. மந்திரவாதி
    24. மர்ம வீரன்
    25. மறுமலர்ச்சி
    26. மாதர் குல மாணிக்கம்
    27. மூன்று பெண்கள்
    28. ரங்கூன் ராதா
    29. ரம்பையின் காதல்
    30. ராஜா ராணி
    31. வானரதம்
    32. வாழ்விலே ஒரு நாள்
    33. வெறும் பேச்சல்ல

    1955

    1. ஆசை அண்ணா அருமை தம்பி
    2. உலகம் பலவிதம்
    3. எல்லாம் இன்பமயம்
    4. ஏழையின் ஆஸ்தி
    5. கள்வனின் காதலி
    6. கல்யாணம் செய்துக்கோ
    7. கணவனே கண் கண்ட தெய்வம்
    8. கதாநாயகி
    9. காதல் பரிசு
    10. காவேரி
    11. கிரகலட்சுமி
    12. குலேபகாவலி
    13. குணசுந்தரி
    14. கோமதியின் காதலன்
    15. கோடீஸ்வரன்
    16. செல்லப்பிள்ளை
    17. டவுன் பஸ்
    18. டாக்டர் சாவித்திரி
    19. நல்ல தங்கை
    20. நல்லவன்
    21. நம் குழந்தை
    22. நீதிபதி
    23. பெண்ணரசி
    24. போர்ட்டர் கந்தன்
    25. மகேஸ்வரி
    26. மங்கையர் திலகம்
    27. மாமன் மகன்
    28. மிஸ்ஸியம்மா
    29. முல்லைவனம்
    30. முதல் தேதி
    31. மேனகா
    32. மேதாவிகள்
    33. வள்ளியின் செல்வன்

    1954

    1. அந்த நாள்
    2. அம்மையப்பன்
    3. இல்லற ஜோதி
    4. என் மகள்
    5. எதிர்பார்த்தது
    6. கனவு
    7. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
    8. கற்கோட்டை
    9. குடும்பம்
    10. கூண்டுக்கிளி
    11. சந்தஹாரம்
    12. சுகம் எங்கே
    13. சொர்க்க வாசல்
    14. துளி விசம்
    15. நண்பன்
    16. நல்லகாலம்
    17. பத்மினி
    18. பணம் படுத்தும் பாடு
    19. புதுயுகம்
    20. பெண்
    21. பொன்வாசல்
    22. போனமச்சான் திரும்பி வந்தான்
    23. மலைக்கள்ளன்
    24. மனோகரா
    25. மதியும் மமதையும்
    26. மாங்கல்யம்
    27. ரத்தக்கண்ணீர்
    28. ரத்தபாசம்
    29. ராஜீ என் கண்மணி
    30. விடுதலை
    31. விளையாட்டு பொம்மை
    32. வீரசுந்தரி
    33. வைரமாலை

    1953

    1. அன்பு
    2. அவன்
    3. அழகி
    4. ஔவையார்
    5. ஆசை மகன்
    6. இன்ஸ்பெக்டர்
    7. உலகம்
    8. என் வீடு
    9. கண்கள்
    10. குமாஸ்தா
    11. சண்டிராணி
    12. சத்யசோதனை
    13. திரும்பிப்பார்
    14. தேவதாஸ்
    15. நால்வர்
    16. நாம்
    17. பணக்காரி
    18. பரோபகாரம்
    19. பூங்கோதை
    20. பெற்றதாய்
    21. பொன்னி
    22. மதனமோகினி
    23. மனிதன்
    24. மருமகள்
    25. மனிதனும் மிருகமும்
    26. மனம்போல் மாங்கல்யம்
    27. மாமியார்
    28. மின்மின்
    29. முயற்சி
    30. ரோகிணி
    31. லட்சுமி
    32. வஞ்சம்
    33. வாழப்பிறந்தவன்
    34. வேலைக்காரி மகள்
    35. ஜாதகம்
    36. ஜெனோவா

    1952

    1. அம்மா
    2. அமரகவி
    3. அந்தமான் காதலி
    4. ஆண்
    5. என் தங்கை
    6. ஏழை உழவன்
    7. கலியுகம்
    8. கல்யாணி
    9. கல்யாணம் பண்ணிப்பார்
    10. காஞ்சனா
    11. காதல்
    12. குமாரி
    13. சின்னத்துரை
    14. சியாமளா
    15. தர்ம தேவதா
    16. தாய் உள்ளம்
    17. பணம்
    18. பராசக்தி
    19. புயல்
    20. பெண்மனம்
    21. மாப்பிள்ளை
    22. மாய ரம்பை
    23. மூன்று பிள்ளைகள்
    24. ராணி
    25. வளையாபதி
    26. வேலைக்காரன்
    27. ஜமீந்தார்

    1951

    1. உண்மையின் வெற்றி
    2. ஓர் இரவு
    3. கலாவதி
    4. கைதி
    5. சம்சாரம்
    6. சர்வதிகாரி
    7. சத்யாவதாரம்
    8. சிங்காரி
    9. சுதர்சன்
    10. சௌதாமினி
    11. தேவகி
    12. நிரபராதி
    13. பாதாளபைரவி
    14. மர்மயோகி
    15. மலைக்கள்ளன்
    16. மணமகன்
    17. மாயமாலை
    18. மாயக்காரி
    19. மோகனசுந்தரம்
    20. ராஜாம்பாள்
    21. லாவண்யா
    22. வனசுந்தரி
    23. ஸ்திரீ சாகசம்
    • Like 1
  4. 10 hours ago, ஏராளன் said:

    மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவின் தாய்மையை அவமதிக்கும் விதத்திலான புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

    நாகரீகமான சமூதாயம் தாய்மையை அவமதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

    தாய்மை என்ற கருப் பொருள் எல்லாவற்றிற்கும் மேலாக உயரிய இடத்தில் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சாத்தானின் வேதம் ..... புல்லரிக்கிறது.

    அதைவிடப் புல்லரிக்கிறது கிழட்டு நரிபற்றிய ஒரு ஓநாயின் வேதம்.

    th?id=OIP.IecFOLjR-ShzLpdUBa-ZMAHaEK&pid=Api&P=0&w=325&h=183

  5. 13 hours ago, Paanch said:

    காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள்

    என் நண்பர் ஒருவர் வாட்ச் அப் மூலம் எனக்கு இதனை அனுப்பியிருந்தார். காமம் என்றுதான் அவர் தலைப்பிட்டிருந்தார். ஆனால் வாசித்தபின்பு சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. இந்த இன்பத்தை உறவுகளும் அனுபவிக்கவே இதனைப் பதிந்தேன்.

     1 நீங்கள் என் ஆடைகளை அவிழ்க்கும் வரை என்னைச் சுவைக்க முடியாது

    வாழை

    2 நீங்கள் என்னை உண்ண முடியாமல், என் கவசங்களை அகற்றி என்னை நக்குகிறீர்கள்

    குளிர்கழி

    3 நீங்கள் என்னை ஊதி உச்சம்கொள்ள வைத்தால் ஒழிய என்னுடன் விளையாட முடியாது

    பலூன்

    4 நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது

    லாலிபாப்

    5 நீங்கள் தினமும் என்னை அழுத்திக் கசக்கி உங்கள் வாயில் போடுகிறீர்கள்

    ற் பசை

    6 நீங்கள் என்னை பரப்பாத வரை நீங்கள் என்னை அனுபவித்துச் சுவைக்க முடியாது

    வெண்ணெய்

     

    நுனாவிலானின் நுங்கும் அவர் பங்கில் பொருந்தி நிற்கிறது. 

    சுவி முதலில் சறுக்கினாலும் இறுதியில் பலூனை ஊதிவிட்டார்.

     

    இந்தப் பதிவில் காமம் கொண்டு பங்குபற்றிய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.!! 

     

  6. காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள் சில இங்கு தரப்பட்டுள்ளன. இவைகளுக்குப் பொருத்தமான காரணிகளைத் தெரிவிப்பவர்களுக்கு ஒரு பச்சை பரிசாகத் தரப்படும்..

     

    நீங்கள் என் ஆடைகளை அவிழ்க்கும் வரை என்னைச் சுவைக்க முடியாது

     

    நீங்கள் என்னை உண்ண முடியாமல், என் கவசங்களை அகற்றி என்னை நக்குகிறீர்கள்

     

    நீங்கள் என்னை ஊதி உச்சம்கொள்ள வைத்தால் ஒழிய என்னுடன் விளையாட முடியாது

     

    நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது

     

    நீங்கள் தினமும் என்னை அழுத்திக் கசக்கி உங்கள் வாயில் போடுகிறீர்கள்

     

    நீங்கள் என்னை பரப்பாத வரை நீங்கள் என்னை அனுபவித்துச் சுவைக்க முடியாது

     

    • Like 3
  7. 20 hours ago, கிருபன் said:

    வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

    இவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரோ, நியமிக்கப்பட்டரோ அல்ல. சனாதிபதியால் நியமிக்கப்பட்டவர், சனாதிபதியின் புத்திதானே இவருக்கும் இருக்கும்.🤔

  8. Video shows Bangladesh Air Force drop supplies to residents stranded by floods

    புதுடெல்லி இந்தியா மற்றும் வங்கதேசம் முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் ஒட்டுமொத்த சமூகங்களும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர்.

    1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தெற்காசிய நாடுகள் குறிப்பாக மழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன, காலநிலை நெருக்கடி காரணமாக தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், பல ஆண்டுகளில் மிக மோசமான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது

    People wade past stranded trucks on a flooded street in Sunamganj, Bangladesh on June 21, 2022.

    யூன் 21, 2022 அன்று பங்களாதேசின் சுனம்கஞ்சில் வெள்ளம் சூழ்ந்த தெருவில் சிக்கித் தவிக்கும் டிரக்குகளை மக்கள் கடந்து சென்றனர்.

     இந்தியாவில், வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் பெய்த கனமழைக்குப் பிறகு, யூன் 14 முதல் குறைந்தது 48 பேர் இறந்துள்ளனர், அதன் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, நிலச்சரிவுகளால் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்தது.. மாநிலத்தில் மட்டும் 5.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

     அசாமின் முதலமைச்சர் கிமந்தா பிசுவா சர்மா செவ்வாயன்று 1,687 நிவாரண முகாம்களில் ஒன்றை பார்வையிட்டார், மாநிலத்தில் 260,000 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர்.

    A man attempts to move his cattle through a flooded field to a safer place after heavy rains in Nagaon district, Assam, India, June 21, 2022.

    யூன் 21, 2022 அன்று இந்தியாவின் அசாமில் உள்ள நாகோன் மாவட்டத்தில் பெய்த கனமழைக்குப் பிறகு ஒரு நபர் தனது கால்நடைகளை வெள்ளத்தில் மூழ்கிய வயல் வழியாக பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார்.

     "பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கால்நடை இழப்பு மற்றும் வெள்ளநீரால் ஏற்படும் பிற சேதங்களைப் பதிவு செய்ய எங்கள் அரசாங்கம் விரைவில் ஒரு போர்ட்டலைத் தொடங்கும்" என்று அவர் டுவிட்டரில் எழுதினார். வெள்ள நிவாரணப் பொதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

    Flood affected people queue in knee-deep flood waters to collect food relief following heavy monsoon rainfalls in Sunamganj district, Bangladesh on June 21, 2022.

    யூன் 21, 2022 அன்று பங்களாதேசின் சுனம்கஞ்ச் மாவட்டத்தில் பெய்த பலத்த பருவமழையைத் தொடர்ந்து உணவு நிவாரணம் பெற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முழங்கால் அளவு வெள்ள நீரில் வரிசையில் நிற்கிறார்கள்.  அண்டை நாடான பங்களாதேசில், வெள்ளம் தொடர்பான சம்பவங்களால், மின்சாரம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு உட்பட்டு, குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    1.6 மில்லியன் குழந்தைகள் உட்பட 4 மில்லியன் மக்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கித் தவித்துள்ளதாக யுனிசெவ் தெரிவித்துள்ளது.

    "குழந்தைகளுக்கு இப்போது பாதுகாப்பான குடிநீர் தேவை. கொடிய நீர்வழி நோய்களைத் தடுப்பது பல முக்கியமான கவலைகளில் ஒன்றாகும்" என்று வங்காளதேசத்திற்கான யுனிசெவ் பிரதிநிதி செல்டன் யெட் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

    மழையினால் வடகிழக்கு சில்கெட் பகுதியில் பேரழிவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். "சில்கெட் பகுதியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது" என்று வங்காளதேச பேரிடர் மேலாண்மைத் துறையின் இயக்குநர் யெனரல் அதிகுல் க் திங்களன்று ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

    An aerial shot of a flooded area following heavy monsoon rainfalls in Companiganj, Bangladesh on June 20, 2022.

    யூன் 20, 2022 அன்று பங்களாதேசின் கம்பனிகஞ்சில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியின் வான்வழி காட்சி.

     யுனிசெஃப் கருத்துப்படி, சில்கெட்டில் சுகாதார வசதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

    36,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்ட நெரிசலான தங்குமிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று யுனிசெவ் தெரிவித்துள்ளது.

    பள்ளிகள் மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இது கொரோனா வைரசு தொற்றுநோய் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் கல்வியை மேலும் பாதிக்கிறது.

    காலநிலை நெருக்கடி காரணமாக தெற்காசியாவில் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலையின் போது இந்தியா மற்றும் பாகித்தானின் சில பகுதிகளில் வெப்பநிலை சாதனை அளவை எட்டுகிறது. பருவநிலை நெருக்கடி இந்தியா மற்றும் பாகித்தானை தாக்கும் வெப்ப அலையை "100 மடங்கு அதிகமாக" தாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் 2022 அறிக்கை, வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதமான அழுத்தங்கள் இன்னும் "தீவிரமாகவும் அடிக்கடி" மாறும் என்று அவர்களுக்கு நடுத்தர நம்பிக்கை இருப்பதாகக் கூறியது.

     

    • Thanks 1
  9. அடுத்தடுத்து எத்தனை பிறவிகள் எனக்கு இருந்தாலும் அத்தனை பிறவிகளிலும் என் மனைவியே எனக்குத் துணைவியாக வரவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் பதிந்துவிட்டதால் இந்தப் பதிவிற்கான கருத்தாடலில் பங்குபற்ற நான் வரவில்லை.🙏😌

     

  10. On 18/6/2022 at 17:17, தமிழ் சிறி said:

    3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் இரத்து

    இப்பிடி ஒரு கானில்தான் நான் தண்ணிபிடித்து எனது காரில் கொண்டுவாறனான். பாவம் அந்தாள் பவுசரில் கொண்டுவந்தது குற்றமா. 🤔

  11. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

    யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, விமான நிலையத்தை பார்வையிட்டார்.

    இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார்.

    மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாகவும் அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார்.

    யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

     

    athavannews.com

  12. 1 hour ago, nunavilan said:

    289060659_10217023723544386_736808904883

    Tht ruled Thenmarachi (தென்மராட்சி) for 14 years from 1970 to 1984. Principal Vettivelu’s official vehicle.

    தகவல் வெற்றிவேலு குமரன்

    சையிக்கிள் எத்தனை கறள்கட்டி இருந்தாலும் அதற்குப் பூக்கட்டி அழகுபார்க்க அதிபர் தவறவில்லை.😁

  13. 22 hours ago, தமிழ் சிறி said:

    இலங்கை வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசை!

    இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை!

    இலங்கை மக்கள் எத்துணை பொறுமையானவர்கள் என்பதனை உலகுக்குத் தெரிவிக்க இதனைவிட வேறு ஆதாரங்கள் இல்லை. 😌  

  14. 12 hours ago, putthan said:

    என்ன மானிப்பாய் வீதியா....? மனிப்பாய்வாசிகள் வாங்கோ காசு தாங்கோ ரோட்டு போடுவோம் .....மகிநதா & கோத்தா அழைப்பு 

     

    1 hour ago, goshan_che said:

    🤣 லாபாய், லாபாய்.

    ஆமாம் அவர்களுக்குத் தெரியும் காப்பற் வீதியை விடவும் பாய் வீதி மலிவு.

    • Like 1
    • Haha 1
  15. 2 hours ago, கிருபன் said:

    தமிழ் மக்களின் நினைவுத்திற உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும்.

    ஆமா சொல்லிப்புட்டோம் நாங்களும் தமிழர்கள்தான்.

    th?id=OIP.yvvnmmwWN2EWVUWEEUzwdgHaE6&pid=Api&P=0&w=267&h=177   th?id=OIP.C5rUcXlp0lfFUAey3KEJDgHaGH&pid=Api&P=0&w=222&h=184 th?id=OIP.RK2O4g6n6V8ukT86BHROywHaEK&pid=Api&P=0&w=312&h=175   th?id=OIP.k3SgpCcLHssOUCRAMNA5BQHaJp&pid=Api&P=0&w=138&h=180 th?id=OIP.QJked2VjlvhXWWNeNxsYewHaG4&pid=Api&P=0&w=195&h=181

  16. 38 minutes ago, தமிழ் சிறி said:

    👉  https://www.facebook.com/watch?v=585085876323971 👈

    ☝️ பெற்றோல் வியாபாரம்... இப்படியும் நடக்கிறது.

    பெண் என்றால் பேயும் இரங்கும். பெற்றோல் இரங்காதா.....😜

    • Haha 1
  17. ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்கள்

     

    75 ஆண்டுகளுக்கு சற்று குறைந்த காலத்திற்கு முன்பாக இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. அந்த சமயத்தில், 1945 இல், ஐரோப்பா முழுமையும் சின்னாபின்னமாகிக் கிடந்தது. கொலைக்களங்களிலும், நாஜி விசவாயு அறைகளிலும், மற்றும் குண்டுவீச்சுகளிலுமாய் 60 மில்லியனுக்கும் (60,000,000) அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தகைய குற்றங்கள் இனியொரு முறை எப்போதும் நடக்கக் கூடாது என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் முதலாளித்துவம் ஜனநாயகம், செழுமை அல்லது அமைதிக்கு இணக்கமற்றது என்பது இன்று முன்னெப்போதினும் மிகவும் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

    மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் தலைமையில் ஒரு அதி-வலது ஜனாதிபதி நின்று கொண்டு வட கொரியா, ஈரான், அணு-ஆயுத வல்லமை கொண்ட ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளை போரைக் கொண்டு அச்சுறுத்துகிறார். ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது கட்சிகள் மேலெழுச்சி காண்கின்றன. இத்தாலி, ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி, பின்லாந்து, பல்கேரியா, செக் குடியரசு, ஸ்லோவேக்கியா மற்றும் கிரீஸ் ஆகிய ஒன்பது நாடுகளில் அவை அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ளன; பிரான்சில் இரண்டாவது வலிமைமிக்க கட்சியாக உள்ளது.

  18. 9 hours ago, Nathamuni said:

    அட, நான் பகிடிக்கெல்லே சொன்னனான்.

    சேனாதிராசா, தமோதரம்பிள்ளை??

    நீங்கள் தெரிவித்த பெயரில் ஒரே ஒரு எழுத்துத்தான் 'தி' பொருந்தியிருக்கிறது. திருநெல்வேலியைத் தெரிந்தவர்களிடம் கேட்டால் அந்த பொலீசு சார்யென்டு யார் எனத் தெரிந்துகொள்ளலாம்.

    என்ன செய்வது, எங்கள் அர்யுன் அவர்கள்தான் இப்போது யாழுக்கு வருவதில்லையே.😩 photo-thumb-3687.jpg

  19. 53 minutes ago, தமிழ் சிறி said:

    நாறல் பயல். இவன் எல்லாம் ஒரு பொலிஸ் சார்ஜண்ட். 🤔
    மீன் குழம்பை… ஆரும் தலையில் ஊற்றுவார்களா?
    குழம்பு கண்ணுக்குள் வந்து, எவ்வளவு எரிவை ஏற்படுத்தி இருக்கும். 😢

    உங்களுக்கும் அவரைத் தெரிந்திருக்கலாம் தமிழ் சிறி, லொறிகளைப் பிடித்து ஏதாவது ஒரு குற்றம் கண்டு, ஓசியில் கல்லு மணல் ஏற்றிவரச்செய்து புதுவீடு கட்டினவர். ஊர்ப் பெரியவர்கள் முதல் விதானையார் வரை அவருடைய வண்டவாளங்கள் தெரியும். ஆனாலும் காவல்துறை, அதுவும் சார்யென்டு தரம், அவரை விமர்ச்சிக்க எல்லோருக்கும் தயக்கம்.

    1 hour ago, Nathamuni said:

    கொட்டினாலும், முழுக்காத்தி இருக்கிறாரே, பொறுப்பா... 😁

    எனெக்கெண்டா... அவர் அரப்பு, சீயாக்காய் வைத்து, உங்களுக்கு.... எடுப்பு காட்ட... மீன்குழம்பை ஊத்தின மாதிரி கதை விட்டு, குரலை எழுப்பி.... முழுக்காத்தி இருக்கிறார்.... நீங்கள் தான் இண்டைக்கு வரை பிழையா விளங்கி இருக்கிறியள்... 😜

    அவர் மனைவியின் தலையில் மீன்முள்ளுக் கீறி எனது அம்மாவும் வருத்தம் பார்க்கப் போனது பாவம் உங்களுக்கு எப்படித் தெரியும்.??😲

  20. 2 hours ago, Nathamuni said:

    ஈராக்கில், ஈரானில் கூட மோசம்...

    ஏன் இலங்கையில் மட்டும் என்னவாம்,,,,!அதுவும் யாழ்ப்பாணத்தில்....!! என் வீட்டுக்கு அருகில் இருந்த, காவற்துறையில் சார்யென்டு அதிகாரத்தில் இருந்த ஒருவர் தன் மனைவி வைத்த மீன் குழம்பு சரியில்லை என்று அதனை மனைவியின் தலைமீதே கொட்டிப் பிரட்டி கிணற்றடிக்கு இழுத்துச் சென்று முழுகவாத்ததைக் கண்டோம். 

  21. 1 hour ago, பிழம்பு said:

    மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்தது.

    ஆசிரியை யாருக்கு வேண்டியவர்....?? அவர் எப்படி இருப்பார்.???

  22. 4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    நேரே ஸ்பிக் , விசய் கம்பனி முதலாளிகளிடம் விழுந்துவிட உத்தேசம் போல கிடக்கு..

    உங்கட மேல கேஸ் இருக்கு ..😢

    தேசிகரே! அப்படி எல்லாம் எடைபோடக்கூடாது. கேசு அங்கு இருக்கும்போதே பாரதப் பிரதமருக்குக் கைலாகு கொடுத்து வந்தவர்தான் அந்த அத்தியடிக் குத்தியர்.

    • Haha 1
  23. 4 hours ago, குருக்கள் said:

     

    'க்' இற்கு பதிலாக 'சு' இருந்திருந்தால் தான் ஒரே சத்தமாக இருந்திருக்கும்,

     

    சத்தமல்ல குருக்கள் அவர்களே! ஒரு குருக்கள் கிறித்துவர் ஆகிவிடுவார்.😆

  24. 36 minutes ago, தமிழ் சிறி said:

    வீட்டுத் தேவைக்காக... சமையல் எரிவாயு சிலிண்டர்கள், விற்பனை செய்யப் படாதாம்!

    மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அடுப்பு, விறகு, எரிவாயு சிலின்டர் எதுவுமே தேவையில்லை.

    உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’

     admin  6 months ago 1 min read 
     
    202112181551299499_relationship-between-

    பச்சைக் காய்கறிகளில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இதனால், உடலில் தேவைக்கும் அதிகமான அளவு கலோரி சேர்வதைத் தவிர்க்க முடியும்.

    சமைக்காத உணவுகளை அதிகமாக சாப்பிடும் உணவு முறை ‘ரா புட் டயட்’ எனப்படுகிறது. இந்த உணவு முறையின் மூலம் அதிக கலோரிகள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்கலாம். 
    இதன் வழியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும். ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. சிலர் பச்சை முட்டை மற்றும் பால் பொருட்களையும் இந்த உணவு முறையில் சாப்பிடுவார்கள்.
    104-118 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சூடுபடுத்தாமல் இருக்கும் உணவு, பச்சை  உணவாகவே கருதப்படுகிறது. உணவை சமைக்கும்போது அதில் உள்ள நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் இழப்புகள் ஏற்படுகிறது. 


    ஆகையால் ரா புட் டயட்டில், சமைத்த உணவுகளுக்கு மாறாக, காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சாலட், ஜூஸ், புட்டிங், ஊறவைத்த மற்றும் முளைகட்டிய தானியங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. 
    இம்முறையில் உணவு உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும். மேலும், ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு இந்த முறை சிறந்தது.
    பச்சைக் காய்கறிகளில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இதனால், உடலில் தேவைக்கும் அதிகமான அளவு கலோரி சேர்வதைத் தவிர்க்க முடியும்.
    ரா புட் டயட்டில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். சோடியம், கலோரி, சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாக இருக்கும். இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை புத்துணர்வு அடையச் செய்யும்.


    இதில் சில உணவுப் பொருட்களில் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும். அதன் காரணமாக உணவு செரிமானமாகாமல் வாயுவை உண்டாக்கும். ஆகையால், தினமும் இஞ்சியை ஒரு வேளையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
    ரா புட் டயட்டில், சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவதால் அவ்வப்போது பசி எடுத்துக்கொண்டே இருக்கும். ஆகையால் சாப்பிடும் உணவை காலை உணவு, சிற்றுண்டி, மதிய உணவு, மாலை நேர சிற்றுண்டி, இரவு உணவு மற்றும் நாள் இறுதியில் ஏதேனும் ஒரு இனிப்பு வகை என ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிட வேண்டும்.
    முந்திரி, உலர் திராட்சை, பாதாம், வேர்க்கடலை, ஊறவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டை, கிராம்புத் தூள், மிளகுத் தூள், கொத்தமல்லித்தழை, புதினா, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், டிராகன் பழம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கேரட் ஆகிய உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், புட்டிங், சாலட், உருண்டைகள், ஸ்மூத்தீஸ் போன்ற வடிவிலும் சாப்பிடலாம். 

    thinasari.com

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.