எனது அப்பாவின் பெயர் பஞ்சாட்சரம். என்னைச் சின்னப்பஞ்சன் என்று கூப்பிடுவார்கள். 79ல் நான் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்தேன். யேர்மானியர்கள் தகப்பனின் பெயரையே குடும்பப்பெயராக வைத்து ஒருவரை அழைப்பதால் Pa 'ப' என்ற ஆங்கில உச்சரிப்பை யேர்மானியர்கள் உச்சரிக்கும்போது 'பா' என்று உச்சரிப்பார்கள் அதனால் பாஞ் என்று பெயர் வந்தது. ஆனாலும் பஞ்சு என்ற பெயரில் யாழ்களத்தில் பதிந்தபோது, நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, பாஞ் என்று கொடுத்தபோது ஏற்றுக்கொண்டது. 2006 என்று நினைக்கிறேன் எனது காரியாலக் கணனியில் யாழ்களத்தில் இணைவதற்குப் பஞ்சு என்று பதிந்ததையும், பின்பு கணணியில் நாங்கள் வெளித்தொடர்பு கொள்வதை அவர்கள் தடுத்து விட்டதால், யாழ்களத்தை தொடரமுடியாது கைவிட்டதை மீட்டுப் பார்ப்பதற்குத் தவறிவிட்டேன். அதனால் 'பஞ்சு' நிலைக்காது தவறி 'பாஞ்' நிலைத்துவிட்டது.