Jump to content

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7510
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Everything posted by Paanch

  1. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே!!! அண்ணாஎன்றழைக்கவா?, தம்பியென்றழைக்கவா?, மகனேயென்றழைக்கவா?,
  2. 285 பதிவுகளின்மூலம் 360 பச்சைப்புள்ளிகள் பெற்றுள்ள நெற்கொழு தாசனே இதுவரை பச்சைப்புள்ளிகள் பெற்றுள்ளவர்களின் நாயகன் ஆவர். மாவீரர் வாரத்தில் அவர் அடைந்த பேறு பெருமைக்குரியது. கோமகன் அவர்களே! விதிமுறைகளைத் தாண்டி அவருக்கொரு பட்டம் அளிக்க முடியுமா?
  3. தமிழீழ தேசிய மாவீரர்களின் வீரத்தையும் அவர்களின் பண்பாடுகளையும் ஆவணப்படுத்துவதற்கு ஒரு முன்னோடியாக இத்திரி அமைந்துள்ளது. சாந்தி அவர்களுக்கு நன்றிகள்.
  4. இந்த நிகழ்வினால் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா?, உருவாகி முதலிடத்தை அடையுமா?.
  5. தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை என்பதைக் கண்ணுற்ற அம்மா செயலலிதாவின் கோபம்தான், தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவரை இடித்தழித்ததோ???.
  6. நொவெம்பர் 27 மாவீரர்நாள் இது தலைவரால் அறிவிக்கப்பட்டதால் பசுமரத்தாணிபோல் அந்நாள் தமிழர் மனதில் பதிந்துவிட்டது. பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளை, மே18 அல்ல 19 என்று நாட்டுக்கு நாடு வேறுபட அனுட்டிக்கப்படுகிறது. இதனைத் தவிர்ப்பது நல்லது. மே 18-19 இரு நாட்களையும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாட்களாக அறிவித்து அனுட்டித்தால் வேறுபாடுகள் நீங்கிவிட இடமுண்டு.
  7. 5.20 தில் நானும் கேட்டேன் அந்தக்கருத்தில் எந்தத் தவறையும் நான் அறியவில்லை. தேவ அடியார்கள் என்றால் அவர்கள் தேவர்களின் அருளைப் பெற்றவர்கள் அது பெருமைதானே. தேவடியார்களுக்கு பிறப்பதற்கு எத்துணை பாக்கியம் செய்திருக்க வேண்டும். இந்தப்பெண் விசயதாரனிக்கு ஏன் இத்தனை கோபம் வரவேண்டும்???.
  8. கல்தோன்றி மண்தோண்றாக் காலத்து முன்தோன்றி மூத்த தமிழன். பெருமையில் தமிழன் வானத்தில் பறந்தான். இப்போதுதான் அவனைப் பிடித்து பூமிக்குக் கொண்டுவந்து மண்போட்டு மூடுகிறார்கள். வளர்வதற்கு.
  9. இங்கு கொதித்துக் கொந்தளித்துக் குமுறும் அனைவரையும் கேட்கிறேன். இப்போதாவது முள்ளிவாய்கால் முற்றத்தில் கூடியிருக்கும் தலைவர்களை ஓரணியில் நிறுத்த முடியுமா?. அவர்கள் நிற்பதற்குக் கூடி வருவார்களா?. இல்லையென்றால் அடிமைகள் இந்த உலகத்தை அனுபவிப்பது எப்படி? என்று குறிப்புகள் எழுதுவதே சிறந்தது!.
  10. வாழ்த்துக்கள் சோழியன்!!. நூறென்ன! நூறு நூறாகக் கோர்த்து உங்களை அலங்கரிக்க யாழ் உறவுகள் கையில் ஊசி நூலோடு ஆவலாய் உள்ளனர்!!. அவலப்படுகிறேன் நான், கோர்ப்பதற்கு முடியாமல். மன்னித்துக் கொள்ளுங்கள், என்னுடைய ஊசி முறிந்துவிட்டது.
  11. உண்மை சுடும். அது எரித்தாலும் உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நாங்கள் பெயரைப்பார்க்கவில்லை. ஊரைப்பார்க்கவில்லை. ஆளைப்பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இன்று ஈழத்தில் வாழ்ந்திருப்போம். எழுத்தையே பார்த்தோம் அதன் ஒலியையே கேட்டோம். அதனால் எழுந்ததை எல்லாம் அழித்துவிட்டு வழிதேடிப் புலம்பும் நிலைக்கு வந்தோம்.
  12. யாழில் வாகனங்களில் பொறித்திருந்த சிங்களச் சிறியை அழித்து தமிழ்ச் சிறியை பொறிக்க முயன்று பொலீசாரிடம் அடிவாங்கித் தமிழர் அன்று அடங்கிப்போனார்கள். அத்துடன் ஒரு வாகனத்தில்கூட ஒரு தமிழ்சிறியும் இல்லாமல் போனது. ஆனால் இன்றைய யாழோ தமிழ் சிறிக்கே பச்சைப் புள்ளிகள் 1000 பொறித்து வாழ்த்தி நிற்கிறது. வாழ்த்துக்கள்.!
  13. அப்படி ஒன்றும் பெரிய விசயம் இல்லை ஐயா. மொசொபெத்தேமியா சுமேரியர் மம்மிகளுக்குப் பேர்போன மத்திய கிழக்கைச் சேர்ந்தவர். மம்மிகளின் ஆசிகளைப் நிறையப் பெற்றவர். உங்கள் குறும்பினால் கவரப்பட்டு உங்களை மம்மியாக்கிப் பார்க்க ஆசைகொண்டதாகத்தான் பலன் சொல்கிறது.
  14. ஏதோ ஒரு கொஞ்சம் பச்சைப்புள்ளிகளை நான் பெற்றுக்கொண்டதை சுமே மட்டுமே வாழ்த்தியுள்ளார். அவரும் நானும் ஒரே வகுப்பு. அந்த அன்னோனியத்தில் அவர் என்னை வாழ்த்தியதாக ஏனைய உறவுகள் எண்ணிவிடக்கூடாது பாருங்கோ அதுக்குத்தான்.
  15. மப்புறுப்பினர் மப்பிலை நிண்டாலும் ஆள் ஸ்ரெடிதான்...... :D
  16. ஆண்களை வறுத்தெடுக்கும் சுமேரியருக்கு அதிகமாக ஆண்களால் கொடுக்கப்பட்ட பச்சைப் புள்ளிகளே அவவை 600வது பீடத்தில் ஏற்றி அழகுபார்க்க வைத்துள்ளது. அதனால் பரந்த மனம்கொண்ட ஆண்களுக்கே முதலில் வாழ்த்துக்கள்!!. அடுத்துத்தான் சுமேரியருக்....கு!. :D
  17. மப்புறுப்பினர் மப்பில் வாழ்ந்தாலும் அவர் ஸ்ரெடியான மாமனிதர். எல்லாக்கள்ளும் கள்ளல்ல ஒருபனைக்கள்ளே கள்ளென்று எனக்குக் கனவில் ஞான உபதேசம் செய்த அப்பர். பச்சைப் புள்ளிகளை அவர் எங்கெங்கெல்லாம் குத்திக்கொண்டார் என எண்ண வைத்தாலும், 700 பச்சைப் புள்ளிகளைப் பெற்று எழு ஞாயிறுபோல் பிரகாசிக்கின்றார். அந்தப் பிரகாசத்தில் நின்று மகிழ்ந்து வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்!!
  18. நீங்கள் தாய்க்குலமாக அல்லது தாய்க்கு ஒப்பான தாயுமானவனாக இருக்க வேண்டும்! பச்சைப் பாசப் புள்ளிக்கு நன்றிகள்! .
  19. புலி என்று அறியாது, உதைகொடுத்து தன் வீரத்தைக் காட்ட முயன்ற கழுதைபோல் ஆகிவிட்டேன்.
  20. குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும். நான் இன்னுமொரு 44 பச்சைப்புள்ளிகள் பெறும்வரையில் பொறுமைகாத்து அருளியிருக்கக் கூடாதா உறவே.
  21. பச்சைப் புள்ளி வந்ததே! யாழ் உறவு தந்ததே! அஞ்சு நூறாய் வளர்ந்ததே! பாஞ்சின் வாழ்த்தும் சாந்திக்கே!!
  22. யாழ்களம் தொடர்ந்து ஓட பச்சைவிளக்கு தொடர்ந்து எரிவது அவசியம். அதனை ஏற்றிவைக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!!
  23. எனது அப்பாவின் பெயர் பஞ்சாட்சரம். என்னைச் சின்னப்பஞ்சன் என்று கூப்பிடுவார்கள். 79ல் நான் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்தேன். யேர்மானியர்கள் தகப்பனின் பெயரையே குடும்பப்பெயராக வைத்து ஒருவரை அழைப்பதால் Pa 'ப' என்ற ஆங்கில உச்சரிப்பை யேர்மானியர்கள் உச்சரிக்கும்போது 'பா' என்று உச்சரிப்பார்கள் அதனால் பாஞ் என்று பெயர் வந்தது. ஆனாலும் பஞ்சு என்ற பெயரில் யாழ்களத்தில் பதிந்தபோது, நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, பாஞ் என்று கொடுத்தபோது ஏற்றுக்கொண்டது. 2006 என்று நினைக்கிறேன் எனது காரியாலக் கணனியில் யாழ்களத்தில் இணைவதற்குப் பஞ்சு என்று பதிந்ததையும், பின்பு கணணியில் நாங்கள் வெளித்தொடர்பு கொள்வதை அவர்கள் தடுத்து விட்டதால், யாழ்களத்தை தொடரமுடியாது கைவிட்டதை மீட்டுப் பார்ப்பதற்குத் தவறிவிட்டேன். அதனால் 'பஞ்சு' நிலைக்காது தவறி 'பாஞ்' நிலைத்துவிட்டது.
  24. இசைகேட்டால் புவி அசைந்தாடும். ஆடி வந்துவிட்டதே ஆயிரம் ஆனந்தமடைந்து வாழ்த்துகிறேன்.
  25. ஒரு பச்சைப்புள்ளி என்றாலும் அது யாழ்களத்தில் பூத்து மலரும்போது, அதன் அழகோடு, சுகந்த மணம்வீசுவதையும் மறுக்கமுடியாது. எனவே ஒரு பச்சைப்புள்ளி பெற்றவர்களும் வாழ்த்துக்கு உரியவர்களாகின்றனர். ஆகவே பச்சைப்புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!!. இப்படி எழுதினால் யாராவது என்னையும் யாழ்களவு(உ)றவாக மதித்து வாழ்த்திவிட மாட்டார்களா! என்ற நப்பாசை எனக்கில்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.