பச்சைப் புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!!!
அட எனக்கு இது தெரியாமல் போச்சே...!!!
863 பச்சை குத்தி 1000 ஆக்குவோருக்கும், 1000 ஆன பிறகு வாழ்த்துக் கூற இருப்போருக்கும் அட்டுவான்சு நன்றிகள்!!
பச்சைப்புள்ளிகள் பெற்று நட்சத்திரமாக யொலிக்கும், நெடுக்காலைபோவனுக்கும், பிரகாசிக்கும், மெசொபொத்தேமியா சுமேரியர், நுணாவிலானுக்கும் பசுமை நிறைந்த வாழ்த்துக்கள்!!
900 பச்சைப் புள்ளிகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க முயலும் தமிழரசுவிற்கும், 800 பச்சைப் புள்ளிகளைப் பெற்று முன்னேற முயலும் நுணாவிலானுக்கும்... நல் வாழ்த்துக்கள்.
பச்சைப் புள்ளிகளுக்கு எல்லை உண்டா...? இருந்தால் பாகிசுதான், சீனா எல்லைகளைப்போல் இல்லாது தீர்மானியுங்கள்.
சோழியன் குடுமி ஆடிவிட்டுது அமோக வாழ்த்துக்கள்!!
இன்றுவரையிலும் பச்சை புள்ளிகளால் பாராட்டுப்பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்!!
எனக்கு இனி பச்சைப்புள்ளிகள் வேண்டாம். சீ, சீ அது புளிக்கும்.
285 பதிவுகளின்மூலம் 360 பச்சைப்புள்ளிகள் பெற்றுள்ள நெற்கொழு தாசனே இதுவரை பச்சைப்புள்ளிகள் பெற்றுள்ளவர்களின் நாயகன் ஆவர். மாவீரர் வாரத்தில் அவர் அடைந்த பேறு பெருமைக்குரியது.
கோமகன் அவர்களே! விதிமுறைகளைத் தாண்டி அவருக்கொரு பட்டம் அளிக்க முடியுமா?
தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை என்பதைக் கண்ணுற்ற அம்மா செயலலிதாவின் கோபம்தான், தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவரை இடித்தழித்ததோ???.
நொவெம்பர் 27 மாவீரர்நாள் இது தலைவரால் அறிவிக்கப்பட்டதால் பசுமரத்தாணிபோல் அந்நாள் தமிழர் மனதில் பதிந்துவிட்டது. பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளை, மே18 அல்ல 19 என்று நாட்டுக்கு நாடு வேறுபட அனுட்டிக்கப்படுகிறது. இதனைத் தவிர்ப்பது நல்லது. மே 18-19 இரு நாட்களையும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாட்களாக அறிவித்து அனுட்டித்தால் வேறுபாடுகள் நீங்கிவிட இடமுண்டு.
5.20 தில் நானும் கேட்டேன் அந்தக்கருத்தில் எந்தத் தவறையும் நான் அறியவில்லை. தேவ அடியார்கள் என்றால் அவர்கள் தேவர்களின் அருளைப் பெற்றவர்கள் அது பெருமைதானே. தேவடியார்களுக்கு பிறப்பதற்கு எத்துணை பாக்கியம் செய்திருக்க வேண்டும். இந்தப்பெண் விசயதாரனிக்கு ஏன் இத்தனை கோபம் வரவேண்டும்???.
இங்கு கொதித்துக் கொந்தளித்துக் குமுறும் அனைவரையும் கேட்கிறேன். இப்போதாவது முள்ளிவாய்கால் முற்றத்தில் கூடியிருக்கும் தலைவர்களை ஓரணியில் நிறுத்த முடியுமா?. அவர்கள் நிற்பதற்குக் கூடி வருவார்களா?. இல்லையென்றால் அடிமைகள் இந்த உலகத்தை அனுபவிப்பது எப்படி? என்று குறிப்புகள் எழுதுவதே சிறந்தது!.
வாழ்த்துக்கள் சோழியன்!!. நூறென்ன! நூறு நூறாகக் கோர்த்து உங்களை அலங்கரிக்க யாழ் உறவுகள் கையில் ஊசி நூலோடு ஆவலாய் உள்ளனர்!!.
அவலப்படுகிறேன் நான், கோர்ப்பதற்கு முடியாமல். மன்னித்துக் கொள்ளுங்கள், என்னுடைய ஊசி முறிந்துவிட்டது.
உண்மை சுடும். அது எரித்தாலும் உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
நாங்கள் பெயரைப்பார்க்கவில்லை.
ஊரைப்பார்க்கவில்லை.
ஆளைப்பார்க்கவில்லை.
பார்த்திருந்தால் இன்று ஈழத்தில் வாழ்ந்திருப்போம்.
எழுத்தையே பார்த்தோம் அதன் ஒலியையே கேட்டோம். அதனால் எழுந்ததை எல்லாம் அழித்துவிட்டு வழிதேடிப் புலம்பும் நிலைக்கு வந்தோம்.
யாழில் வாகனங்களில் பொறித்திருந்த சிங்களச் சிறியை அழித்து தமிழ்ச் சிறியை பொறிக்க முயன்று பொலீசாரிடம் அடிவாங்கித் தமிழர் அன்று அடங்கிப்போனார்கள். அத்துடன் ஒரு வாகனத்தில்கூட ஒரு தமிழ்சிறியும் இல்லாமல் போனது. ஆனால் இன்றைய யாழோ தமிழ் சிறிக்கே பச்சைப் புள்ளிகள் 1000 பொறித்து வாழ்த்தி நிற்கிறது. வாழ்த்துக்கள்.!
அப்படி ஒன்றும் பெரிய விசயம் இல்லை ஐயா. மொசொபெத்தேமியா சுமேரியர் மம்மிகளுக்குப் பேர்போன மத்திய கிழக்கைச் சேர்ந்தவர். மம்மிகளின் ஆசிகளைப் நிறையப் பெற்றவர். உங்கள் குறும்பினால் கவரப்பட்டு உங்களை மம்மியாக்கிப் பார்க்க ஆசைகொண்டதாகத்தான் பலன் சொல்கிறது.
ஏதோ ஒரு கொஞ்சம் பச்சைப்புள்ளிகளை நான் பெற்றுக்கொண்டதை சுமே மட்டுமே வாழ்த்தியுள்ளார். அவரும் நானும் ஒரே வகுப்பு. அந்த அன்னோனியத்தில் அவர் என்னை வாழ்த்தியதாக ஏனைய உறவுகள் எண்ணிவிடக்கூடாது பாருங்கோ அதுக்குத்தான்.