-
Posts
257 -
Joined
-
Last visited
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
2033 profile views
வைரவன்'s Achievements
-
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
வைரவன் replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
உங்களின் கருத்தில் இருப்பது பச்சை இனவாதம். மலையகத் தமிழர்களை இன்னொரு இனமாக தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். தொடர்ச்சியாக மலையகத் தமிழர்களை எழுனப்படுத்தும் குறுகிய பார்வை. ஆசாணி வெல்வதை பொறுக்க முடியாமல் உங்கள் யாழ்ப்பாண மைய வாதம் அதனை எதிர்கின்றது. மனோ கணேசன் கனடா வருவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? வடிவேல் சுரேஷ் தமிழகம் செல்வதால் என்ன பிரச்சனை? தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் சொத்துக்களை சேர்த்து அங்கு சென்று வருவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா, அல்லது கனடாவுக்கு உண்டியல் குலுக்க வருவது தெரியாதா? யாழ் இணையமும் உங்களின் மலையக தமிழர்களுக்கு எதிரான அயோக்கியத்தனமான கருத்துகளுக்கு இடம் அளிப்பது வருத்தம் அளிக்கிறது. -
தயவு செய்து இதை பொறுமையாக முழுமையாக படித்து, விளங்கிக் கொண்டு உங்கள் கருத்தை எமக்கு தெரிவிக்கலாம்! துவாரகா விடயத்தில் உண்மையை உரைப்பவர்களை விமர்சனம் செய்து, அவர்களிடமிருந்து உண்மைகள் வெளிவராமல் தடுக்கவென சமூகவலைத் தளங்களில் ஒரு கும்பல் இயங்கி வருகின்றது. கடந்த சூலை மாதம் தொடக்கம் செப்தெம்பர் வரை முன்னாள் போராளிகளை அணுகி, தான் துவாரகா என்று கூறி, WhatsApp ஊடாக தொடர்பை பேணிய நிலையில், துவாரகாவை, துவாரகாவின் விடயங்களை நன்கு தெரிந்த முன்னாள் போராளிகள், கேட்ட வினாக்கள் எவற்றுக்கும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்பதுடன், நீண்ட உரையாடல்களின் போதும், ஒரு கணம் கூட முகத்தை காட்டவில்லை. அத்துடன் ஆரம்பத்தில் போராளிகளை சந்திப்பதாக கூறியவர், அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என சாக்கு போக்கு சொல்லி, சிறிலங்கா அரசாங்கள் பேச்சுவார்த்தை என கூறி, தமிழர் தரப்பை, இழுத்தடித்து எப்படி காலத்தை கடத்துமோ, அவ்வாறான ஒன்றே நிகழ்ந்து வந்தது. இப்போது வாசகர்களான, உங்களிடம் ஒரு கேள்வி எழுந்திருக்கும், துவாரகா இல்லை என்று முன்னரே தெரியுமென்றால்; முன்னாள் போராளிகளான நீங்கள் ஏன் அவருடன் பேசுவதற்கு சென்று, இரண்டு மாத காலத்தை வீணடித்தீர்கள் என்பது தான் அந்த வினா. இதற்கான காரணம், 💥 நாங்கள் அவருடன் பேச செல்லவில்லையானால், அதனை காரணமாக காட்டியே உலகத் தமிழர்களை, தான் உண்மையாக தலைவரின் மகளான துவாரகா தான் என்பதை எளிதாக நம்ப வைத்திருக்க முடியுமல்லவா...!! அத்துடன் 💥 முன்னாள் போராளிகளான எமக்கும் ஒரு பாரிய பொறுப்பு/ கடமை இருக்கிறது, இவர் துவாரகா இல்லை என்பதை உறுதிப்படுத்தி எங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டியதுடன், இவர் யார், இதன் பின்னணி என்ன என்பதை கண்டறிந்து சொல்வதும். இந்த நிலையில் தான், இவரது ஏமாற்று நாடகத்தை நன்கு உறுதிப்படுத்திய நிலையில், செப்தெம்பர் இறுதிப் பகுதியில் எங்களது தொடர்புகளை நிறுத்திக் கொண்டோம். அத்துடன் அவர்கள் தங்கள் ஏமாற்று நாடகத்தை நிறுத்திக் கொள்வார்கள் என எண்ணினோம். ஆனால் அது முடிந்தபாடில்லை. இருந்தும் உண்மையை வெளிப்படுத்தும் முன்னாள் போராளிகள் மீது விசமத்தனமான அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அது எப்படியென்றால், அவர்கள் முன்னாள் போராளி என்று வைத்துக் கொண்டால், அவர் இயக்கத்தில் இருக்கும்போது பெண்களுடன் தகாத உறவுகளை வைத்திருந்தார், ஒன்றிரண்டல்ல பல பெண்களுடன்... அடுத்து முள்ளிவாய்க்காலில், பதுங்கு குழியில் பிறரின் மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்தார். இப்படியே தொடரும்.... விடுதலைப் புலிகள் என்பவர்கள் உலகிலேயே கட்டுப்பாடு, ஒழுக்கம் மிக்க ஒரு விடுதலை இராணுவம் என்பது யாவரும் அறிந்ததே! அதிலும் தவறான பாலியல்/ பெண் தொடர்புகள் என்ற விடயத்தில் அதியுச்ச தண்டனை வழங்கப்பெறுவதுடன், அவ்வாறான சிறிதளவு சம்பவம்/ சேட்டைகள் இடம்பெற்றாலே சம்பந்தப்பட்டவர்கள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டு விடுவார்கள். இதில் மூத்த போராளி, புதிய போராளி என்ற எந்தவித தயவும் கிடையாது. அத்துடன் நிதி மோசடி என்ற விடயமும் இவ்வாறாகவே தண்டனைக்குள்ளாக்கப் பெறும். விடயம் என்னவென்றால், தூவாரகாவின் வருகை என்கின்ற போலி செயற்பாட்டை முன்னெடுக்கும் கும்பலினால், உண்மையை உரைக்கும் நபர்களுக்கு எதிராக வைக்கப்பெறும் அவதூறு பரப்புரை மேற்சொன்ன பெண், நிதி மோசடி என்பதாகவே அமையும். அதிலும் 2009 இறுதியுத்தம் வரை போராளிகளாக இருந்தவர்கள் மீதே இக்குற்றச்சாட்டுக்கள் இந்த கும்பலினால் கூறப்பெறுகின்றன. அப்படியாயின் இதன் பின்னணி என்ன? எங்கள் தாயக மண்ணில் செயற்பட்ட போராளிகள், வாழ்ந்த பெண்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கள் சகோதரர்கள். விடுதலை அமைப்பை, எங்கள் தனியரசை தலைமையேற்று வழிநடத்தியவர் யார்? அவரின் காலத்தில், அவரின் ஆட்சியில் போராளிகளும், எங்கள் பெண்களும் இவர்கள் விமர்சிப்பது போன்ற கலாச்சார சீரழிவையா கொண்டிருந்தனர். தங்களின் நாசகார திட்டத்தை நிறைவேற்ற எங்கள் தேசத்தின் காவலர்களையும், தன்மானத்துடன் வாழ்ந்த எம் பெண்கள் சமூகத்தையும் இழிவுபடுத்துகின்றார்கள். இவர்களின் இந்தச் செயற்பாடுகளினூடாக இவர்கள் அடைய நினைப்பவை... ♦️ விடுதலைப்புலிகள் போராளிகளின் கட்டுப்பாடுகள், ஒழுக்கம் தொடர்பாக அவதூறுகளை பரப்பி, ஒட்டுமொத்தமாக புலிகள் இயக்கத்தின் மீதும் சேறு பூசுதல். ♦️ தலைமறைவாக வாழ்ந்துவரும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளின் புகைப்படங்கள், அவர்கள் பற்றிய விபரங்கள், செய்த பணிகளை பொதுவெளியில் வெளிப்படுத்தி, சிங்களத்திற்கு தகவல் கொடுத்து - இனி எக்காலத்திலும் அவர்களை விடுதலைக்கான பயணத்தில் தொடர முடியாது செய்தல். ♦️ துவாரகாவின் வருகையும், அதற்கான நிதி திரட்டலும் என்ற விடயத்தில், புலம்பெயர் தேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் செயற்பாட்டளர்களிடையே முரண்பாடுகள்/ பிளவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி, புலம்பெயர் தேசங்களிலுள்ள இயக்க கட்டமைப்புகளை சிதைத்தல். ♦️ மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, மக்களை எப்போதும் பரபரப்பு நிலையில் வைத்திருத்தல். இவ்வளவு பிரச்சினைகளை, சிக்கல்களை புலம்பெயர் தேசங்களில் ஏற்படுத்தி, உருவாக்கித் தான் இவர்கள் சொல்லும் துவாரகா வெளிவருவாரா? ஒரு சொல்லில் #உண்மையான_எங்கள் #துவாரகா அழைப்பு விடுத்தால் முன்னாள் போராளிகள், புலம்பெயர் தேச செயற்பாட்டாளர்கள் அனைவரும் பின்செல்லமாட்டார்களா? துவாரகா எங்கள் பிள்ளை! துவாரகா எங்கள் தங்கை!! துவாரகா எங்கள் இளவரசி!!! துவாரகாவின் வாழ்நாளில் அவருடன் கூட இருந்தவர்கள் போராளிகள் தான். அதிலும் அவர் மாமாக்கள் என உரிமையுடன் அழைக்கும் ஆண் போராளிகள் தான். அந்தப் போராளி மாமாக்களின் மீது அளப்பரிய மதிப்பும், மரியாதையும், அதீத நம்பிக்கையும் கொண்டிருந்தவர் எங்கள் தங்கை. அதுபோலவே தளபதிகள், போராளிகள் ஆகியோர் அவரை, தங்கள் பிள்ளையாக, தங்கையாக, இளவரசியாக கொண்டாடினார்கள், #காத்து #நின்றார்கள். இப்படிப்பட்ட எங்கள் இளவரசி, தனது வருகைக்காக எங்கள் போராளிகளை, தனது தந்தை வழியில் நின்ற மாமாக்களை இப்படி இழிவுபடுத்த அனுமதிப்பாளா? அவள் ஒரு பெண். உண்மையான எங்கள் துவாரகா தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இவ்வாறான நாகரீகமற்ற, விசமத்தனமான, கீழ்த்தரமான பிரசாரங்களை #ஒருபோதும் #அனுமதிக்க_மாட்டாள். எங்கள் தலைவனின் பிள்ளை அவள்! அப்பன் 8 அடி பாய்ந்தால், பிள்ளை 16 அடி பாயும் என்பார்கள். எம்மவர்கள் தடுத்து வைத்திருந்த ஒரு சிங்கள இராணுவ கைதியை சந்திக்க வந்த அவரின் மனைவி, அன்றைய நாளை தன் கணவனுடன் கழித்ததால் கர்ப்பமானாள். இந்த விடயம் அவள் ஊர் திரும்பி சில மாதத்தின் பின்னரே தெரியவந்தது. இப்போது அப்பெண்ணின் ஊரில் மக்கள் தவறாக கதைக்கும் நிலை உருவானது. தன் நிலையை அப்பெண் தலைவருக்கு கடிதமாக எழுதினாள். அந்த பெண்ணின் நடத்தை மீது தவறான பெயர் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதால். குறித்த கைதியை உடனடியாக விடுவிக்குமாறு கட்டளையிட்டவன் எங்கள் தலைவன். எதிரியாகவுள்ள சிங்கள படையாளின், மனைவியான பெண்ணிற்கே களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாதென நினைத்த தலைவனின் புதல்வியா இந்த, நாகரீகம் தெரியாத கும்பலை நம்பிக் கொண்டிருக்கின்றாள்...?? எங்கள் தங்கையின் குணவியல்புகள் எங்களுக்கோ, எம்மக்களுக்கோ தெரியாதது அல்ல! தமிழ்ப் பெண்களை நடத்தை கெட்டவர்களாக காண்பிக்கும், விமர்சிக்கும் இந்த கும்பல் தான், எங்கள் தேசத்தின் இளவரசியை பக்குவமாக உலகுக்கு மீண்டும் கொண்டுவரப் போகின்றதாம்! அவர்களைத் தான் எங்கள் இளவரசி நம்புகின்றாராம். எப்படி இருக்கின்றது நாடகம். துவாரகா மீது முன்னாள் போராளிகளுக்கு இல்லாத அன்பும், அக்கறையும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது. #எதற்காக வந்தது...? துவாரகாவை ஒருமுறை தன்னும் பார்த்திராத, #கண்டிராத, #கதைத்திராத நீங்கள், அவரை எப்படி உறுதிப்படுத்துவீர்கள்...? தலைவனின் புதல்வியான துவாரகா, ஆளுமையற்ற கோழையா? அவருக்கு எப்படி வெளியில் வர வேண்டுமென தெரியாதா? தலைவனின் புதல்வியை, எங்களின் தங்கையை பணத்திற்கு இரந்து திரியும் ஒரு பாவையாக காட்ட நினைக்கின்றீர்களா? நேர்மையும், அஞ்சா வீரமும், தன்மானமும் நிறைந்த வீரமங்கை எங்கள் துவாரகா. தன் விழி அசைவினாலும், சுட்டுவிரல் சுட்டலினாலும் ஒரு தேசத்தை கட்டியாண்ட மாமன்னனின் மகளவள்! உங்களிடம் பிச்சைகேட்டுக் கொண்டு, வெளியில் வரும் வழி தெரியாமல் திக்கு முக்காடுவதற்கு அவள் யார்? தமிழீழத்தின் தலைமகள், தமிழினத்தின் இளவரசி! நேர்படப் பேசி, நேர்வழி நடந்த மானமாவீரனின் வாரிசு! அவளை வெளியில் கொண்டுவர நீங்கள் யார்? அவளுக்கு வழி காட்ட நீங்களா? வேடிக்கையாக இல்லை! அப்படியாயின் அந்த தலைவனுக்கும், தமிழீழத்தின் முதற்பெண்மணி மதி மிகப் பெற்ற வதனிக்கும், அவர்கள் வழித்தோன்றலான இளவரசிக்கும் இல்லாத அறிவும், ஆளுமையும் உங்களுக்குத்தான் உள்ளதோ...!! ஈழத்தில் இருந்தபடி தொழில்நுட்ப வசதிகள் குறைந்த/ அற்ற அந்தக் காலத்திலேயே உலகெங்கும் இயக்க கட்டமைப்புகளையும், தமிழர்களையும் வழிநடத்திய ஒப்பற்ற தலைவன், இப்போது தன் #ஒற்றைப்_புதல்வியை வழிநடத்த தெரியாமல் முடங்கி கிடக்கின்றான். ஆதலால் நீங்கள் புறப்பட்டு விட்டீர்கள்! துவாரகாவை தூக்கி வர... அப்படித்தானே? யாரை ஏமாற்றுகின்றீர்கள்...? தூக்கி எறியுங்கள் உங்கள் புளுகு மூட்டைகளை. அவை புழுத்துப் போய்விட்டன. மக்களே! விழிப்படையுங்கள்!! நன்றியுடன் Soori Sinnathurai
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வைரவன் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அவர் உருவாக்கிய பல ஆவணக்காப்பு திரிகளிலும், நல்ல திரிகளிலும் நீங்கள் அவற்றை வரவேற்று ஒரு பதில் தானும் எழுதியதை நான் கண்டில்லை. தவறை மட்டும் தான் கண்டு பிடிப்பீர்களோ ஐயா? இது தான் ஈனத்தமிழ் குணம். சிங்களவர் தம் இனத்துக்கு ஆதரவாக இருக்கும் ஒருவரை எக்காலத்திலும் குறை சொல்லார், ஆனால் தமிழர்கள் தம் இனத்திற்கு மினக்கெடும் ஒருவர் ஒரு தவறு விட்டால், ஓடோடி வந்து அதை சொல்லி சொல்லியே அவரை முடக்கி விடுவர். இப்படியே நடத்துங்கோ இந்த அவசர யுகத்தில் தம் பெறுமதியான மணித்துளிகளை லாபம் எதுவுமில்லாமல் செலவழிப்பவர்களையும் முடக்குங்கோ. -
வழக்கம் போன்று, காசி ஆனந்தனும் கூவுகின்றார் கொடுத்த கூலிக்கு? காசி கூவுவதன் மூலம், இந்த சதித்திட்டங்களின் பின்னால் இந்திய உளவு அமைப்புகள் உள்ளன என்பது தெளிவாகின்றது.
-
மதிவதனி மற்றும் துவாரகா வீர மரணம் - புகைப்பட ஆதாரம்
வைரவன் replied to வைரவன்'s topic in ஊர்ப் புதினம்
வீடியோவில் சொல்லியிருப்பதை போல், 2009 இல் இப் படங்கள் சிங்கள மீடியாக்களில் வெளியாகி பின் இரண்டு நாட்களின் பின் நீக்கப்பட்டன. காரணம், பின்னாட்களில் தமிழர்களை குழப்பி அடிக்க எல்லா உண்மைகளையும் ஒரேயடியாக வெளியிட சிங்களம் விரும்பவில்லை. இப்போது அதன் காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. @goshan_che @Nathamuni @நன்னிச் சோழன் @முதல்வன் @ரஞ்சித் உங்கள் கருத்து என்ன? -
இவ் காணொளியை பார்க்க வயது கட்டுப்பாடு உள்ளதால், யூரியூப் உள்ளே சென்றே பார்க்க முடியும். பார்த்து பலருக்கு பகிர்ந்து தமிழ் தேசியப் போர்வையில், மோசடி செய்யும் கும்பலை தோற்கடிப்போம். யுத்த களத்தில் இறுதி வரைக்கும் நின்று போராடிய தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகங்களை கொச்சை படுத்தும் கும்பலை தோலுரிப்போம்.
-
துவாரகா பிரபாகரன் சுவிட்சர்லாந்தில் வதிவிட உரிமை பெற்றுள்ளார்.
வைரவன் replied to வைரவன்'s topic in ஊர்ப் புதினம்
நீங்கள் காணொளியை பார்க்காமல் தலையங்கம் மட்டும் பார்த்து விட்டு இக் கருத்தை தரவேற்றி இருக்கின்றீர்கள் அய்யனே! எங்கே @விசுகு ஐயா? ஏரம்பு ஐயாவின் மகள் அருணா நல்லவர் என நற்சான்றிதழ் கொடுத்தவராச்சே! இப்ப என்ன ஐயா சொல்ல போகின்றிர்கள்? எங்கே @goshan_cheche தம்பி? துவாரகா வை தலைமை யாக ஏற்பேன் என்றவர்! -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
வைரவன் replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
நான் தொடங்கிய இந்த திரியை பூட்டி விடுங்கள். காரணம்: விலை மாதாக இருப்பினும் கூட, ஏமாற்றக் கூடாது என்பது சிலப்பதிகாரம் வழி வந்த தமிழர் கலாச்சாரம். இங்கு அதற்கு எதிராக செயல்பட்ட சீமானுக்கு ஆதரவாக எழுதுகின்றோம் என்று அவர் செயல்பாட்டை ஆதரிக்கும் கேவலமான பதில்கள் தொடர்ந்து வருவதால் இந்த திரியை பூட்டி விடவும். அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான, சீமானின் பித்தலாட்டஙகள் தொடர்பான செய்திகளை மேலும் நான் புது திரிகளில் இணைப்பேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன். அப்ப நான் வரட்டா. -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் By செய்திப்பிரிவுModified: 28 Aug, 23 02:31 pm சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "2011-ல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக நான் முயற்சித்தேன். அப்போது நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, என்னை ஊர் அறிய திருமணம் செய்துகொண்டு மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் கொண்டு வாழ்கிறேன் என்று கூறியிருந்தார். அதை நம்பி, அந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி கொடுக்கவில்லை. ஆனால் சீமான் அவ்வாறு செய்யவில்லை. எனவே, காவல் ஆணையரகத்தில் இன்று இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறேன். 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசராணை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதேபோல், தற்கொலை முயற்சி வழக்கு, இது தவிர புதிதாக புகார் ஒன்றையும் கொடுத்துள்ளேன். என்னுடைய புகாரின் மீது தற்போதுள்ள திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான், என்னுடைய வாழ்வும் சாவும் அடங்கியிருக்கிறது. சீமான் இன்று காலையில்கூட சொல்லியிருக்கிறார், அவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று. இப்படிப்பட்ட தலைவர் ஒருவர், நாம் தமிழர் என்றொரு கட்சியை நடத்திவருகிறார் என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கு இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதில் எனக்கு முழு ஒத்துழைப்பை வீரலட்சுமி கொடுத்து வருகிறார். ஊடகங்களால்தான் நான் உயிருடன் இருக்கிறேன். வீரலட்சுமி போல, சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எனக்கு உதவி செய்ய முடியும் என்றால், உங்களுடைய ஆதரவை எனக்கு தாருங்கள். 2011-ம் ஆண்டே சீமானை கைது செய்ய வேண்டியது. ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இன்னும் கைதாகவில்லை. எனவே, சீமானை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டிருக்கிறேன். முன்னதாக, சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்திவைத்திருந்தோம். இப்போது அவர் திருமணம் செய்யவில்லை. கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். மதுரை செல்வம் மூலம் ஒரு கோடி ரூபாய் எனக்கு கொடுத்துள்ளதாக கூறுவது மிகப் பெரிய விஷயம். எனவே, அவரை கைது செய்யாமல் விட்டதுதான் பெரிய தவறு. என்னுடைய பிரச்சினையில் அதிமுக அரசு பெரிய அளவில் விசாரணை நடத்தவில்லை. என்னிடம் தான் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்களே தவிர, சீமானிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. ஈழத்துக்கு ஆதரவாக சீமான் பேசியதால், அதிமுக அவருக்கு ஆதரவளித்தது" என்று அவர் கூறினார். https://www.hindutamil.in/news/tamilnadu/1111612-seeman-should-be-arrested-actress-vijaya-lakshmi.html
-
ஆடிய காலும் பாடிய வாயும் மட்டும் சும்மா இருக்காது உண்டியல் குலுக்கிய கூட்டமும், வெளிநாடுகளில் புலிகளுக்காக காசு சேகரித்து செல்வம் திரட்டிய கூட்டமும் சும்மா இருக்காது. தங்கள் தலைமுறைக்கு காசு சேர்த்தாச்சு இனி பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் வாழ்வுக்கும் காசு சேர்க்க தானே வேணும் நடத்துங்கள் நடத்துங்கள் ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல. விரைவில் விரட்டி அடிக்கப்படுவீர்கள்
-
நீண்ட காலத்துக்கு பிறகு எனக்கு திண்ணையை திறந்து விட்டிருக்கினம். அதில் இரண்டி நாளாக நடந்த சம்பாசனையை வாசித்தேன். அதில் விசுகு அய்யா எழுதி இருப்பதையும் வாசிச்சு போட்டுத்தான் மேல் உள்ள பதிலை எழுதினேன். அண்ணைக்கு ஊர் பாசம் போல அதுதான் பொய்க்காரி அருணாவுக்கு சாமரம் வீசுறார் உண்மையான ஈழ ஆதரவாளன் இப்படி தான் சிந்திப்பான். பையன் நீங்கள் பையன் அல்ல. ஒரு விசுவாசம் மிக்க நேர்மையாளன். ஏன் எனக்கு விருப்பு புள்ளி குத்த ஏலாமல் இருக்கு?
-
சோசியல் மீடியா வில் வரும் எல்லாவற்றையமா ஒட்டுகின்றார்? தனக்கு தோதான தான் ஆதரவளிக்கும் ஒன்றைத்தானே கொண்டு வந்து இணைத்து இருக்கிறார். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பறிவு இணைத்தவர் இவ்வளவு நாளும் தலைவர் மேல் எப்படியான மதிப்பை வைத்து இருக்கின்றார்? தானும் குடும்பமும் ஓடி ஒளித்து ஏனைய போராளிகளை கை விட்ட ஒருவராகவா?
-
விசுகு அய்யாவின் கொண்டை வெளியேதெரிந்து விட்டது. புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களை ஏமாற்றி மீண்டும் பணம் வசூலிக்கும் கும்பலின் செயல் இது. சில மாதங்களுக்கு முன் இன்னொரு பெண்ணை கொண்டு துவாரகாவை சந்தித்ததாக கூறினார்கள். சனம் அதை நம்பவில்லை. இப்ப மாதரசி மதிவதனி அக்காவின் சகோதரி மூலம் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள். போனாராம் சாப்பிட்டாராம் ஆனால் ஒரு படம் தானும் எடுக்கவில்லையாம். நாளைக்கு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உயிரோடு இருப்பதாக படம் எடுத்தும் போடுவார்கள இந்த போலிகள். தலைவர் மீதான மதிப்பையும் அவர்களின் குடும்பத்தின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் கூட்டத்தின் செயல் இது. இந்தக் கூட்டத்தில் விசுகு அய்யாவும் சேர்ந்து விட்டார்.
-
பாஞ்ச் அப்புவுக்கு ஹப்பி பிறந்த நாள்