-
Posts
15317 -
Joined
-
Last visited
-
Days Won
54
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ஈழப்பிரியன்
-
என் இந்தியப் பயணம்
ஈழப்பிரியன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
உந்த கடிக்கதை முன்னரும் கேட்ட மாதிரி இருக்கே? -
என் இந்தியப் பயணம்
ஈழப்பிரியன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
உண்மையை சொல்லணும் உங்கள் பொதியில் 39 கிலோவா 41 கிலாவா இருந்தது? -
ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார். தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புட்டினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி புட்டின் ஐந்தாம் தடவையாகவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கு பதிவு கடந்த மூன்று நாட்களாக ரஸ்யாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காலப் பகுதியில் பல்வேறு எல்லைப் பகுதிகளில் உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தேர்தலில் புட்டினை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர் என்பதுடன் அவர்கள் பெயரளவில் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புட்டினுக்கு எதிரான போட்டியிடக் கூடிய வலுவான வேட்பாளர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. ரஸ்யாவின் அபிவிருத்தியை மேற்குலக நாடுகள் தடுக்கின்றன எதிர்பார்க்கப்பட்டவாரே தேர்தலில் தாம் வெற்றியை பதிவு செய்ததாக புட்டின் தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்தியை மட்டுப்படுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் முயற்சிகளை முறியடித்து ரஸ்ய மக்கள் தங்களது ஒற்றுமையை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இராணுவத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என புட்டின் தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/kremlin-vladimir-putin-claim-landslide-1710720576
-
உஸ்ஸ்ஸ் எங்க அப்பா பெரிய வாத்தியார் அம்மா ரீச்சர் சின்னம்மா ரீச்சர் மாமனார் ரீச்சர் உறவினர்கள் பலர் ஆசிரியர்கள்
-
வாட்சப்பில் வந்த வாஸ்து நல்லா தான் இருக்கு.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ரசிய தேர்தல் =இந்திய தேர்தல். -
மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
பொட்டு,பொட்டு,பொட்டு. -
என் இந்தியப் பயணம்
ஈழப்பிரியன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
முன்னர் கனடா அமெரிக்காவிலிருந்து இரண்டு பொதிகள் தலா 23கிலோ அல்லது 50 இறாத்தல் கொண்ட போகலாம். இப்போ அரேபிய விமானங்கள் தவிர்ந்த எவையும் ஒரு பொதிக்கு மேல் கொண்டு போனால் 100 டாலர்கள். இதில் அநியாயம் என்னவென்றால் இப்போது பாட்டர்சிப் என்று அரேபிய விமானக் கம்பனிகளுடன் அமெரிக்க கம்பனிகளும் சேர்ந்துவிட்டதால் பலர் இந்த சிக்கல்களில் மாட்டுப்பட்டு பொதியை விட்டுட்டுப் போக முடியாமல் மேலதிக பணம் கொடுத்து கொண்டு போகிறார்கள். அடுத்து சகல் விமான கம்பனிகளும் முன்னர் போல உணவு இல்லை என்கிறார்கள். எமிரேட்டை விட சிறிலங்கன் விமானத்தில் சாப்பாடு நல்லதென்கிறார்கள். -
யூரியூப்பர் கதை கட்டுரை கவிதை என்று எழுதுறவன் எல்லாருக்கும் கனடா விசிட்டர் விசா நல்ல தலைப்பா போச்சு.
-
ரயில் ஆசன முன்பதிவில் இன்று முதல் புதிய மாற்றம்!
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை. நன்றி ஏராளன். -
No No No நின்மதி.
-
ரயில் ஆசன முன்பதிவில் இன்று முதல் புதிய மாற்றம்!
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தினக்குரல் முன்பதிவுகளுக்கான சுட்டியையும்(இணைப்பை)இணைத்திருந்தா யாருக்காவது பிரயோசனமாக இருக்குமே? -
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
விடுதலைப் புலிகளின் முகாம்களிலும் புதை குழிகள் இருந்தன. -
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
ஈழப்பிரியன் replied to தமிழ் சிறி's topic in அயலகச் செய்திகள்
பொதுவாக மோடி மனது தங்கம் ஒரு போட்டி என்று வந்துவிட்டால் பொ•க்கி. -
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
வந்த காலத்திலிருந்து 2015 வரை தொடர்ந்து வேலை. குடும்பங்களை இலங்கைக்கு அனுப்பிய போதும் நான் வேலைக்கு போனால்த் தான் பணம் வரும் என்பதால் போகவில்லை. வயது 68 ஆகப் போகிறது.இன்னும் எவ்வளவு காலம் பிரயாணங்கள் செய்ய முடியுமோ தெரியாது. இப்போது பிள்ளகள் எங்கு போனாலும் எங்களைக் கேக்காமலே தங்களுடன் சேர்த்து பயண ஒழுங்குகள் செய்து விடுவார்கள். -
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஆடி 5ம் திகதியில் இருந்து கலிபோர்ணியாவில்த் தான் நிற்பேன். ஆடி 29-ஆவணி 5 வரை கவாய். மீண்டும் கலிபோர்ணியாவுக்கே வருவேன். ஆனாலும் ஆவணி கடைசிவரை நிற்க முடியாது. என்ன பெருமாள் உங்களுக்கும் அனுபவம் போல. -
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஆமாம் பெருமாள். கிரீக் கப்பல் தான். வாழ்வில் எனக்கு கிடைத்த ஒரு கொடையாகவே எண்ணுகிறேன். -
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கப்பல் வாழ்க்கையை பலர் விரும்பி செய்கின்றனர் ...இந்த கப்பலில் வேலை தேடி செல்வது 1970 களில் மிகவும் பிரபலமாக இருந்தது....அந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் கப்பலுக்கு பலர் சென்றனர்.. நானும் 83 வரை ஒரு கப்பல் மாலுமியாக வேலை செய்தேன். அது ஒரு கனாக்காலம். -
ஐயாவுக்கு இந்த பாவாடையில ஒரு கண்ணயிருக்கே? சுவியிடம் சொல்லி அடுத்த அடுத்த பதிவுகளில் பாவாடையே இல்லாமல்…………..? கதையை வாசித்துப் போட்டு வாசகர்கள் சதிராடாமல் இருக்கணுமே? அடபாவி விதானை இதைச் சொல்லி சொல்லியே எத்தனை நாளுக்குத் தான்யா வாமனை ஏமாற்றப் போகிறாய்? யுவர் ஆனர் விதானை ரொம்பவும் கடுப்பேத்துறார்.
-
அடுக்கு மாடிகளில் இருந்த போது ரொம்பவும் தொல்லை தந்தது. கரப்பான் சாப்பிட்டு மிச்சம் தான் நாங்க சாப்பிடலாம் என்ன மாதிரி இருந்தது.
-
அன்றுபோல் இன்று இல்லையே!
ஈழப்பிரியன் replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
உங்கள் கவிதையுடன் இந்தப் பாட்டு ஒத்துப் போவதால் இணைத்துள்ளேன். கவிதைக்கு பாராட்டுக்கள். -
என்ன ரசோதரன் வீட்டில கரப்பான் தொல்லை தாங்க முடியலையோ?
-
அன்றுபோல் இன்று இல்லையே!
ஈழப்பிரியன் replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நாடெங்கும் மதில்கள் இல்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நடைவெளி இடைவெளி நூறிருந்ததே நாலுமணிப் பூவிருந்ததே நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே நன்றி உடையார்.