எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே.
மொழியாகி எங்கள்
உயிர்மூச்சான மாவீரர்களே!
வழி ஏதும் தெரியாமல் இன்று
தட்டுத்ததடுமாறுகிறோம்
தளர்ந்து தள்ளாடுகின்றோம்.
தனித்து போய்விட்டோமென
நாளும் நாளும் தவிக்கின்றோம்.
தன்முனைப்பு, போட்டி பொறாமை
தன்னலம்,பொருளாசை என்று
மக்களை மறந்து,
தம்மினம் படும் துயரங்கள் புரியாமல்
மனிதம் மறந்தவர்களாக
தமக்குள் தாமே முட்டி மோதிக் கொண்டு
எம்மவர்கள் மாறிப்போகும் இந்த
கொடுமையான உலகில,;
எமக்காக உள்ளவர்கள்
எங்கள் மாவீரச் செல்வங்கள்
நீங்கள் மட்டுமே.
உங்களுக்காக நீங்கள்
ஒருபோதும் வாழ்ந்ததில்லை.
பெற்றவரையும் உற்றவரைய