Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7226
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Not Telling

Recent Profile Visitors

5850 profile views

satan's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • First Post
  • Collaborator

Recent Badges

1.5k

Reputation

  1. தானத்துக்கு உழுத மாட்டின்ர பல்லைப்பிடிச்சு பாக்கக்கூடாது! அதே! வருமானம் கொழிக்கும் வர்த்தக நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விக்குதுகள், விவசாயிகளை சோம்பேறிகளாக்கி உள்ளூர் உற்பத்தியை நிறுத்தி இறக்குமதி செய்யுதுகள், இதுகளுக்கு ஒவ்வொரு அமைச்சர், இவர்களை நம்பி கடன் கொடுக்கவும் ஆட்கள், இதற்குள் தன்னிறைவுக்கனவு வேறு!
  2. விகாரைகள் கட்டுவதற்கும் புத்தத்தை வளர்ப்பதற்கும் ஆலோசனைகளையும் நிதியுதவியும் அளித்துக்கொண்டு தமிழரிடையே சைவ, கிறிஸ்தவ குரோதத்தையும் வளர்த்து குளிர் காய காத்திருக்கும் ஓணான் இந்தியாவை எதுக்கு அழைக்கிறீர்கள்? அது மவுனம் காக்கவில்லை ரசிக்க காத்திருக்கு தூண்டிவிட்டு.
  3. நாலு முட்டையோடு கோழி அடைபடுத்துவிடும் அதைவைத்து மிகுதி அரசியலை எப்படி சமாளிப்பது?
  4. ஆமாம்! சர்வதேசமே விமர்சிக்கும் பயகரவாதச் சட்டம், தமிழரின் உரிமைகளுக்கெதிராக 1979 ம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஒன்றிணைய யாரும் அறைகூவல் விடுக்கவில்லை, எல்லோரும் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து கைதூக்கினீர்கள். அதை வலுப்படுத்தி, நீட்டித்து தமிழரை சங்காரம் செய்ய, அது உங்களுக்கு தேவைப்பட்டது. உங்களது அரசியல் காலத்திற்கூட அதை வலுவிழக்கச் செய்ய நீங்கள் முன்வரவில்லை, மாறாக எல்லோரின் ஆதரவைப்பெற்று வலுப்படுத்தி தமிழரை வதைத்து, அவர்களின் குரல்வளையை நசித்து ரசித்தீர்கள். இப்போ அந்த சட்டத்தின் வலுக்குறைந்த சட்டத்தை தாங்க முடியாது கூடி ஒப்பாரி வைக்கிறீர்கள், அப்போ கூட, இதனால் பாதிக்கபட்ட தமிழருக்கு உங்கள் அனுதாபத்தை தெரிவிக்க மறுக்கிறீர்கள். எங்களுக்கு அநிஞாயம் இழைத்தீர்கள், வேடிக்கை பார்த்தீர்கள். அது இப்போ உங்களை பதம் பார்த்து விடுமோ என துடிக்கிறீர்கள். எதை விதைத்தீர்களோ, அது இப்போ உங்களுக்கெதிராய் திரும்பி நிற்கிறது, அறுவடை செய்யும் காலமிது. எங்கள் கடவுள்களை நீங்கள் உடைத்தெறியலாம், திருடிக்கொண்டு போகலாம், எங்கிருந்தாலும் அவர்கள் உங்களை தண்டித்தே தீருவார்கள். "பந்து எடுத்து விட்டெறிந்தால், சுவர்மேல் பட்டதுபோல் திரும்பி விடும்." "மண்வெட்டி கையிலெடுப்பார், சிலபேர் மற்றவர்க்கு குழி பறிப்பார், அது தன் பக்கம் பாத்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார், இந்தத் தத்துவத்தை தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?"
  5. வெளியார் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லையாமே, அப்படியிருக்க யார் செய்தது என்று தடுத்தவர்கள் தான் கூறவேண்டும், அந்த பொறுப்பும் அவர்களுக்குரியதே!
  6. அதெல்லாம் சம்பந்தனின் ராஜதந்திரம் அப்போது. கட்டியிருக்கும் துண்டையும் உருவும் தந்திரம் பேசுது இப்போது. இடம் கண்டால் மடம் காட்டாமல் விடுவார்களா யாரும்? அவரே; இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுக்கொடுக்கும்போது யார் விடுவார்? கேள்வி கேட்க்கும் அப்பாவிகள் மீது மட்டும் எரிந்து விழுவார்.
  7. திட்டமிட்டு தமிழரிடையே மத கலவரத்தை ஏற்படுத்தவும் அந்த இடைவெளியில் புத்தரை வைத்து நிலம் பறிக்கும்செயற்திட்டம். ஒவ்வொரு இடமாக அதைத்தானே செய்து கொண்டு வருகிறார்கள். அப்பாவி போல் கதையளக்கிறார் பச்சைத்திருடன்! மக்கள் தங்கள் ஆலயங்களில் தங்கள் வழிபாடுகளை நிறைவேற்ற விடாமல் தடுத்து தொல்பொருள் திணைக்களமும் போலீசாரும் காவல் செய்யும் போது வெளிநபர்கள் எப்படி அங்கு சென்று இந்த அழிவு வேலைகளை செய்திருக்க முடியும்? அதை தடுத்து நிறுத்த முடியாதவர்கள் இன்னும் ஏன் அங்கு நிலைத்து நிற்க வேண்டும்? இந்த நாச வேலையை தொல்பொருள் திணைக்களமோ போலீசாரோ செய்யவில்லையென்றால் மக்களை அங்கு செல்லாமல் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்? தமிழரை காப்பாற்ற கடவுளையும் அனுமதிக்காது சிங்களம். ஆனால் அவர் வெகுண்டெழுந்தால் தாங்காது சிங்களம். ஒரு ஞானியை வைத்து உலகை ஏமாற்றும் சிங்களம் தமிழரின் கடவுளரையும் அவ்வாறே நினைத்து சீண்டிப்பாக்குது. பலனை வெகுவிரைவில் அனுபவிக்கும்.
  8. கிராமம் என்று சொல்லப்பட்டிருக்கு. பெரும்பாலும் எங்கள் வன்னிப்பிரதேசம் போலிருக்கும் போலுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருந்திருக்கும், காலையில் வழிபாட்டுக்கு வந்தவர்கள் கண்டுள்ளார்கள். பூசைநேரம் கூடி கலைகிறவர்கள். சச்சியர் எடுக்கிற எடுப்பைப்பாத்தால் கிறிஸ்தவர்கள்மேல் பழி போடுற வேலையாயுமிருக்கலாம். இங்கு ஏற்கெனவே குடியிருந்தவர்கள் போராலும் சிங்களவரின் கெடுபிடிகளாலும் இடம்பெயர்ந்திருக்கலாம் மிச்சம் மீதியிருந்தவர்களே வழிபட வருவார்கள். ஒவ்வொரு இடமாக புத்தர் இடம் பிடிக்கிறார். அடுத்த குருந்தூர் மலை இது! இது தொடரும். புத்தர் வழிபடுவதற்கு உரியவரல்ல தடுத்து நிறுத்த வேண்டியவராக்கி விட்டார்கள் காணித்திருடர்.
  9. அவர்கள் வந்தபோது விதைத்ததை இவர் தொடருகிறார். அவர்களும் இவ்வாறான கருத்தையே வந்திருந்தபோது தெரிவித்திருந்தார்கள். இந்திய இலங்கையின் ஒற்றர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்க, இப்போ மதத்தை கையிலெடுத்துள்ளார்கள். இப்போ செய்ய வேண்டியது; இந்தச் சச்சியரின் மகுடிக்கு ஆடாமல், இவரை பிடித்து மனநல காப்பகத்தில் போடுவதுதான் சரியான சிகிச்சை.
  10. அவர் கிறிஸ்தவர்களை விரட்டியடிப்பதில் பிஷி. அவரை விட்டுவிடுங்கள் தொந்தரவு செய்யாதீர்கள். இவரோ இது சிங்கள பவுத்த நாடு என நம்மை விரட்டியடிக்கிறார், அவரோ கிறிஸ்தவர்களை விரட்டுறார். பக்குவப்படாத, நடந்தவற்றில் இருந்து பாடம் படிக்காத இளம் குருத்து அவர். வயத்துக்குத் தக்க அறிவு இல்லாவிட்டாலும் வாழ்ந்த அனுபவமும் இல்லை.
  11. இனியென்ன, காசு வந்திட்டுது தேர்தலை நடத்துவோமா? தமிழருக்கு எதிரான ஆட்டத்தை தொடங்குவோமா? இனிப்பு வழங்கி கொண்டாடுவோமா? ஏதோ சந்திர மண்டலத்துக்கு விண்கலம் அனுப்பின மாதிரி கதையளக்கிறார், வந்தது கடன்!
  12. ஆங்..... அது சரியான கருத்து! அது சரி .....என்ன இவர் இப்படிச் சொல்கிறார்? இவர் தனது இரண்டு கை பொக்கற் எல்லாம் கனமில்லாமல் வைத்திருக்கிறாரா? பாராட்டுக்கு பாராட்டு அதே நேரம் கோபப்படாமல் தாக்குகிறார் இதைத்தான் ஊமைக்குத்து என்பதோ? எதை ஆதரிக்கிறார் எதை நிராகரிக்கிறார் என்று விளங்குகிறதா?
  13. தொடரும் இந்தப்போராட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டு கைவிடவும் தீர்மானித்து இருக்கக்கூடும் ஆனால் எது வந்தபோதும் நானும் உங்களுடன் இருப்பேன் என்று சொல்லிச்சென்றதோ இயற்கையும்.
  14. அதுவும் ஏற்கெனவே முடிந்ததோ யாரறிவார்? கச்சதீவு புத்தர் வெளிக்கிளம்பின மாதிரி ஒருநாள் பனையோலை உக்கிப்போக தானா வெளியே தெரியும். அதுக்குத்தானே காட்டிக்கொடுத்ததுகள், ஒதுக்கப்பட்டதுகள் எல்லாம் கூட இருக்குதுகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.