Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8447
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. அது உங்களின் கருத்து. காலிமுகத்திடலில் நடக்கும் போராட்டங்களை ஓரளவுக்கேனும் தமக்கு சாதகமாக பயன்படுத்தியவர்களும் கொழும்புவாழ் தமிழர்கள், அதுவும் அரசியல் சாராத சாதாரண மக்கள்.
  2. அதுவல்ல சிறியர் காரணம். அவர்கள் எதிர்பார்ப்பு வேறாக இருக்கலாம்! லட்ஷியம் இல்லாத மனிதர்கள், அவ்வப்போது முடிவை மாற்றுவார்கள்.
  3. உண்மையை ஏற்க மறுபவருக்கு உண்மையை எடுத்துரைப்பதே சம்பந்தப்பட்டவரின் கடமை, பொறுப்பு. பொய்க்கு தாளம் போடுவது உண்மையாகாது எவ்விதத்திலும் பிரச்சனையை தீர்க்காது. அதையே விக்கினேஸ்வரன் செய்கிறார், அது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்குது. கண்கொத்திப்பாம்பாய் விமர்சிக்கிறார்கள், அடங்கி விடுவார் என நினைக்கிறார்கள். கை கொடுக்காவிட்டாலும் விலகி இருக்கலாம்!
  4. மக்களின் வாக்குகளால் பதவிபெற்றதும் மக்களை சிந்திப்பவர் யாருமுண்டோ? அப்படி யாரும் முனைந்தாலும் சேறடித்து அவர்களை துரத்தி விடுவார்கள்! இவர்கள் தங்களை விடுவிப்பார்கள் என்று நம்ம உறவுகள் சிறைகளில் காத்திருக்க, தம் உறவுகளுக்கு விடுதலை வேண்டித்தருவார்கள் என்கிற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இவர்களை அனுப்பிவைக்க, அவைகளை எல்லாம் மறந்துவிட்டு, புறந்தள்ளிவிட்டு இந்த மாமனிதனை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்து, எதிர்கட்சி கதிரையை இழந்ததுதான் மிச்சம்!
  5. அடிப்படை விளக்கமே குளறுபடியாய் இருக்கிறதே! இருவரின் மதமும் ஒன்றுதானே! அப்படியென்றால் ஒருவருக்கு தனது மதம் எதுவென்று தெரியாத குழப்பமாக இருக்கலாம், தந்தையார் சரிவர சொல்லிக்கொடுக்கவில்லை, அங்கேதான் தவறு, உண்மையும் அதுதான். பிள்ளைகளிலில்லை!
  6. ஒருவரை மட்டும் குத்திக்காட்டுவதன் நோக்கம் என்னவோ? சரி பிழையாகாது, பிழை சரியாகாது. எந்த விட்டுக்கொடுப்பும் இனியில்லை, கொடுத்ததே அதிகம் என்கிறார், பேராசையை தட்டிகேட்க்கிறார்!
  7. எதுவும் மாறாது விட்ட இடத்திலிருந்து தொடரும் எனும் செய்தி!
  8. நரியார் புலிகளுடன் பேசிக்கொண்டே, புலிகளுக்கெதிராக சர்வதேச வலை விரித்தததை தாமே ராஜதந்திரிகள் ஆர்வ மிகுதியாலோ, தாம் தாம் வெற்றிபெறப்போகிறோம் என்கிற திமிரிலோ, தேர்தல் காலத்தில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஷ நாயக்கவும் போட்டுடைத்ததே தலைவர் தனது முடிவை மாற்ற காரணமாகியது. அவரை ஆதரித்திருந்தாலும் நமது தலைவிதி இதுதான், ஆனால் சிங்கள இராணுவம் தப்பி அமெரிக்க, இந்திய இராணுவம் முடித்திருக்கும். ஆனாலும் தலைவர் ராஜபக்ஸ்ஷாக்களின் குணாதிசயத்தையும், அதன் பலனையும் எதிர்வு கூறியிருந்தார்!
  9. அவையும் வெல்லுற அவசரத்தில எழுதிக்குடுத்துப்போட்டு நாளைக்கு மறுப்பறிக்கையோ? வாங்கி கிழித்து குப்பைக்கூடைக்குள் போடுறதோ? அல்லது விட்டிட்டு கலைப்படுகிறதோ? "உறுதிப்பாடு" இவர்களே மக்களுக்கு கொடுத்த உறுதிப்பாட்டை தூக்கி கடாசிப்போட்டினம், இதுக்குள்ள டிலான் பெரேராவின் முகமும் தெரியுது. தேர்தல் என்றால்; நடக்காததும் நடக்கும், பல புதுமைகளைச்சொன்னேன். சிங்களத்துக்குள் ஒரு டக்கிளஸ் தேவானந்தா இவர், கொப்பு விட்டு கொப்பு தாவுவதில் வல்லவர். எல்லோருந்தான் இவர்கள் ஒருபடி மேல். ஒருவேளை கூட்டமைப்பினரின் முடிவு அறிய அனுப்பப்பட்டாரா?
  10. தொல்லியல் திணைக்களம் பிடிக்கும் காணிகளில் விகாரைகள் எழும்பும் என அர்த்தம், இனி முழு மூச்சாக தொல்லியல் திணைக்களம் காணி பிடிக்கும், மறுநாளே விகாரை எழும்பும், முழுக்கு விழா நடைபெறும், தமிழர் போராடிக்கொண்டே இருக்கணும் என்கிறது நம்ம நீதிமன்றம் என நினைக்கிறன். கை வாங்கப்படுகிறது என்றால்; குறித்த முன் கட்டளையிலிருந்து பின்வாங்கப்படுகிறது என நினைக்கிறன்.
  11. விக்கினேஸ்வரன் இலங்கையில் தமிழருக்கு நடந்தது இனவழிப்பே என்று கூற, அதற்கு ஆதாரம் இல்லை என அதிமேதாவி சுமந்திரன் வாதாட, கிளம்பியது பூதம் விக்கினேஸ்வரனுக்கு எதிராக! கூட்டமைப்பை பொறுத்த மட்டில், சுமந்திரன் ஒரு மணி கட்டின மாடு! விக்கினேஸ்வரன் வேண்டாத பெண்டாட்டி. தானே விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டவந்ததாகவும் அவர் தனது முதுகில் குத்திவிட்டார் என்றும் புலம்பி அவருக்கு எதிராக மாவையரை கொம்பு சீவினார். (சிங்களத்தை குற்றவாளியாக்கியதே முதுகில் குத்தியது என்பதன் விளக்கம்) கட்சியை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று துரத்தினார், அவர் வென்றதும் கட்சியை உடைத்து விட்டார் என்று புலம்பினார். அவர் வெளியேறியதும் தன்னை அரசியலுக்கு கொண்டுவந்த மாவையரில் வாய் வைத்தார். இவரின் அடுத்த பகிடி, உட்கட்சி பூசலை உள்ளுக்குள் பேசி தீர்க்க முடியாமல் வெளிநாடுகளில் அறைகூவல் விட்டவரிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, ஏன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உங்களை மட்டும் பேச்சுக்கு அழைக்கிறார்கள்? என அதற்கு இவர் அழித்த பதில் மிகவும் பரிகாசத்துக்குரியது. அதாவது அவர்கள் சில இரகசிய பேச்சுக்களை மேற்கொண்டார்களாம், அது இரகசியமாக இருப்பதற்காக தன்னை அழைக்கிறார்களாம், ஆனால் தான் வந்து பேசப்பட்ட விடயங்களை கூட்டத்தில் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கிறாராம். இதில் எங்கே இரகசியம்? ஏன் இவர் மட்டும்? என்பதை இவர்தான் விளக்க வேண்டும். இதுமட்டுமல்ல ஒருதடவை விக்கினேஸ்வரன் ஒரு அறிக்கை விட்டார், அதாவது தமிழருக்கு நடந்த அனிஞாயங்களை சர்வதேச பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாரப்படுத்த வேண்டுமென்று. அதற்கு நேற்று பெய்த மழையில் இன்று முளைச்ச காளான், சாணக்கியன், சொன்ன பதிலை தேடிப்பாருங்கள்., சாணக்கியனின் சிங்கள விசுவாசம் தெரியும். தங்களது சிங்கள விசுவாசத்தை மறைக்க, சிங்கள சம்பந்தி என இலகுவாக முத்திரை குத்தி விடுகிறார்கள். தங்களை, தங்களது பின்புலத்தை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். எப்போவெல்லாம் விக்கினேஸ்வரன் சிங்களத்தால் தமிழருக்கு எதிராக நடாத்தப்பட்ட கொடூரங்களை வெளிப்படுத்துகிறாரோ, அப்போவெல்லாம் இந்த; சிங்கள சம்பந்தி, கொழும்புவாசி, சிங்களவரை கோபப்படுத்துகிறார் என்று சிங்கள விசுவாசிகள் கொடி தூக்க தொடங்கிவிடுவார்கள். சிங்கள கட்சியில் ஒட்டியிருந்துவிட்டு, சரிந்து போன தன் அரசியலை உயர்த்துவதற்காக இங்கு வந்து ஒட்டிக்கொண்டு போடும் நாடகம், பேசும் பேச்சு கொஞ்சநாளில் வெளுக்கும். அவரின் தனிப்பட்ட வாழ்வையும் அறிவோம். அதிலும் குருந்தூர் விகாரை விவகாரத்தில் பிக்குகளோடு மல்லுக்கட்டி, போராடி, போலீசாருடன் மோதுப்பட்டவர்கள் யாரோ, பெயர் இவர்களுக்கு. பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யாரோ, பெயரை தட்டிக்கொண்டவர்கள் இவர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, மக்கள் பேரணி என்று நினைக்கிறன். ஆனால் அதற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார் சுமந்திரன். ஏன்? தனக்கு முன்னுரிமை வழங்கப்படாது என்பதால். இப்படி தங்களை முன்னிலைப்படுத்தவே அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள், யாரையும் முன்னுக்கு வர இவர்கள் விட மாட்டார்கள்.
  12. தொலைபேசியில் சம்பந்தனை அழைத்த ரணில்! வீடு தேடிச் சென்ற சஜித் சம்பந்தர் ஐயா ஏதும் சொல்லிகொடுத்திருப்பாரோ? மக்கள் விடுதலை முன்னணியும் பின்வாங்குது, இதோ தமிழரை அரவணைத்து அரசியல் செய்யப்போகிறேன் என்று அறிக்கை விட்டவர் அமைதியாகி விட்டார், ஏதோ நடக்குது, என்ன என்றுதான் தெரியேல்ல. எதுக்கோ பயப்படுகிறார்களா? தேறாது, கதிரை ஏறின உடனேயே இறங்கி விடுவோமென என்று பின்வாங்குகிறார்களா?
  13. தென்பகுதியில் கோத்தா கோ கம, ரணில் கோ கம கொந்தளிப்பை பொலிஸார் திசைதிருப்பி இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்க முனைகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை போலீசார் மேல் சுமத்த வேண்டும். ஆதாரமாக போராட்டக்காரர் கூற்று "அரசாங்கமே இன, மத, மொழி முரண்பாட்டை வளர்த்து இனங்களை பிரித்து வைத்ததாக போராட்டக்காரர் கூறியிருக்கிறார்கள். அதோடு அத்தகைய முரண்பாடுகளுக்கு தாம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை வைப்பதாக அறிவுறுத்த வேண்டும். தமிழர் பிரதேசத்தில் விகாரை கட்டினால் தென்பகுதி கொந்தளிக்குதாம், வடக்கில் தங்கள் நிலத்தில், தங்கள் வழிபாட்டுத் தலத்தை அழித்து, வழிபட விடாமல் தடுத்தால் அவர்கள் கொந்தளிக்க மாட்டார்களா? எது நீதி? இதை, விகாரையை அழித்து தமிழர் ஆலயம் அமைத்தால் தென்பகுதி சும்மா இருக்குமா? தென்பகுதி நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு கொடுக்கும்? அடுத்தமுறை இத்தனைக்கும் விடையோடு வாருங்கள் என்று பொலீசாரை திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
  14. வெளிநாடெல்லாம் போய் விக்கியர் பதவி விலக வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாய் உளறிக்கொண்டு திரிந்த சுமந்திரன், அனந்தி மீதும் பிற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த சம்பந்தர் இந்த விடயத்தில் வாயை அடக்கிக்கொண்டிருந்த நடுவுநிலைமையும், முடிந்தால் கட்சியை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று சவால் விட்ட சுமந்திரன், அத்தனையையும் அமைதியாக, பண்பாக ஏற்று, வென்று காட்டியுள்ளார். சிலர் விக்கியரை விமர்சிப்பதால் தங்களை பிறர் விமர்சிப்பதை தவிர்க்கும் தற்காப்பாய் நினைக்கிறார்களோ? அல்லது தங்களை அதன்பின்னால் மறைப்பார்க்கிறார்களோ தெரியவில்லை? ஆனால் விமர்சிக்கப்படுபவரை விட ,விமர்சிக்கிறவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் உண்மைக் காரணி புரியும்! சுமந்திரனைவிட வேறு யாருமில்லை என்று பலர் இங்கு வந்து கதை அளப்பது உண்டு. உண்மையில் இல்லை என்பதில்லை, யாரும் முன்வரமாட்டார்கள். காரணம் முன்னேற விடமாட்டார்கள், மாறாக நாறடித்து விடுவார்கள். காரணம் தாங்கள் செய்யாததை வேறு யாரும் செய்து மக்களிடம் நன்மதிப்பு பெறக்கூடாது, தங்களை விட யாரும் மேல் வரக்கூடாது என்கிற சுயநலம். அதற்காக மக்கள் இவர்களை தெரிந்தெடுத்து கதிரையில் உக்காத்திவிட்டு அவஸ்த்தை படவேணும்.
  15. விக்கியர் ஒன்றும் தானாக அரசியலுக்கு வரவில்லை, அவரை இழுத்துக்கொண்டு வரும்போது அவர் கொழும்பு வாசியென்றோ, அரைச் சிங்களமென்றோ, சிங்களச்சம்பந்தியென்றோ யாருக்கும் தெரியவில்லை. தங்களை தக்கவைக்கும் தெய்வமாக தெரிந்தார். ஆனால் தங்களுக்கு அடிபணிந்து போகவில்லையென்றதும் இவற்றையெல்லாம் கண்டுபிடித்து அவரை ஓரங்கட்ட வெளிக்கிட்டார்கள். ஆனால் இதை கண்டுபிடித்து பரப்பியவரும் அதே ஓடத்தில் இருக்கிறார், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. தணிக்கை. விக்கியர் ஒருபோதும் சிங்களவருடன் வாழ்வது பெரும் சந்தோசம் என்று சொல்லவில்லை, தமிழரின் தேவைகளை புறந்தள்ளிவிட்டு அடுத்தவரின் தேவையை முன்னிறுத்துவதில்லை, என்று மக்கள் அவரை தெரிந்தெடுத்தார்களோ அன்றே அவர்களோடு வாழ வந்துவிட்டார். ஏனோ விக்கியர் வாய் திறந்தால் சிலருக்கு பயம், கொதி வந்துவிடுகிறது. அவரை சாடுவோரின் பின்புலத்தை ஆராய்ந்தால், இவர்கள் அவர்கள் ஏதோ வகையில் அவரை விட சிங்கள அல்லது வேறு ஒரு இன நெருக்கம் கலப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இது விக்கியரை விமர்சித்த பலபேரின் பின்புலம் அறிந்தபின் நான் தெரிந்துகொண்டது. அவரின் அரசியலை விமர்சிக்க முடியாவிடில் வாழ்க்கையை விமர்சித்து வெறுப்பேற்றுவது, விலகியிருக்கச்செய்வது, நாறடிப்பது. இது ஒரு பண்பற்றவரின் செயல். ஆத்தாதவன் செயல், அவரை எதிர்கொள்ள முடியாதவரின் செயல், பொறாமையாகக் கூட இருக்கலாம்!
  16. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எதிர்வு கூறப்பட்டுள்ளது இச்சந்திப்பின் மூலம்.
  17. உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி! பொதுமக்களை ஒடுக்க இராணுவத்திற்கு கற்பித்து, பயிற்சி அளித்ததே அரசாங்கங்கங்கள் தானே, இப்போ ஒன்றுமறியாததுபோல் கதை விடுகிறார்.
  18. தமிழரைப்பற்றி யாரும் இன்னும் வாயே திறக்கவில்லையே? சிந்திக்கவுமில்லை. ஒருவேளை கடைசியில் நினைவு வந்து அணுகுவதென்றால் இந்த கொள்கையோடு என்னை எங்களை அணுகுங்கள் என்று சொல்கிறார் போலுள்ளது. தமிழரின் வாக்கு தேவையில்லை அவர்கள் இல்லாமல் ஆட்சியை பிடிக்கலாம் என்று கர்சித்தவருக்கு அந்த மக்களால் கற்பிக்கப்பட்ட பாடம் எல்லோருக்கும் பாடமாக இருக்க வேண்டும். இலங்கையில் தமிழன் இல்லாமல் அரசியல் முழுமை இல்லை, அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லை.
  19. ரணிலை பப்பா மரத்தில ஏத்தி, விழுத்தி, எழுந்திருக்க முடியாமல் முறிக்கிற திட்டம் போலத் தெரிகிறது!
  20. அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் நிலைக்கேல, ஓடி ஒளிச்சு திரியுறார். இனி குலுக்கல் முறையில் தெரிவாகுபவர் எத்தனை நாளைக்கு நிலைக்கப்போகிறார்? இன்னும் நாட்டின் இக்கட்டான நிலை புரியாமல் விளையாடுகிறார்கள், வெளிநாடுகள் கைகொடுக்கும் எனும் கனவில்.
  21. அதன் பயனை அவர்காலத்தில் அவரே அறுவடை செய்ய வேண்டுமென்று காலம் கணித்து காத்திருந்திருக்கு. எப்படியாகுமென்று பாப்போம்.
  22. நாட்டை கொள்ளையடித்து கொளுத்தியது காணாது என்று முடிவெடுத்து விட்டார்.
  23. இனியும் அதை தொடருவதற்கே அரசியல் கதிரை ஏற துடிக்கிறார்கள், ஏறி விழப்போகிறார்கள். மக்கள் போர் செய்யும் மன நிலையிலில்லை, சோர்ந்து களைத்து விட்டார்கள். அவர்களுக்கு தேவையானதை கொடுக்க இவர்களால் முடியாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.