தமிழ்மக்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து விரட்டியடித்து, ஏதிலிகளாக்கி, பயங்கரவாதிகள் என நேற்றுவரை முத்திரை குத்தி விட்டு இன்று உங்களுக்கு பிரச்சினை என்றவுடன் அழைக்க வெட்கமில்லை. முதலில் எங்கள் பிரச்சனைகளை தீருங்கள், எங்கள் நிலங்களை விடுவியுங்கள், விகாரைகள் அமைப்பதை நிறுத்துங்கள், எங்கள் பிரசனைகளை தீர்த்து சரிசமமாக நடத்துங்கள், அதுவரை உதவி என்கிற வார்த்தைக்கே இடமில்லை, தமிழர் என்ன கேணையர் என்று நினைத்தீர்களா? எங்கள் மக்களுக்கு வந்த, எமது உறவுகளின் உணவு கப்பலை திருப்பி அனுப்பும்போது இவரும் பாராளுமன்றில் வீற்றிருந்தார்தானே! ஏன் அதற்க்கு எதிராக குரல் கொடுக்கவில்லை? தமிழர் அழிவில் அவ்வளவு மகிழ்ச்சி அப்போது, இப்போது உதவி வேண்டும் அவர்களிடமிருந்து. நாக்கை பிடுங்கிறமாதிரி கேள்வி கேட்கவேண்டும் புலம்பெயர்ந்த தமிழர். அப்பாவாவது புத்தி வருமா என்று பாப்போம். பிரச்சனை தீர்ந்தவுடன் பழையபடி இனவாத குரங்கு மரத்துக்கு மேல தாவும், உப்பிடி எத்தினை அனுபவங்களை கண்டவர்கள் நாங்கள். விழுந்த நேரமெல்லாம் உயர்த்திவிட்டு, இன்றுவரை சிங்களவரை கோபப்படுத்தக்கூடாது, அவர்கள் விரும்பாத தீர்வு எங்களுக்கு வேண்டாம் என்று அடம்பிடிக்கும் எமது தலைமை, இருந்தும் வாழவிடுவதில்லை என்கிற பிடிவாதம் பிடித்தவர்களுக்கு உதவுவதால் அது நமக்கே ஆப்பாக மாறும்.