Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8493
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by satan

  1. இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!

  2.   இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.

  3. 9 hours ago, விசுகு said:

    இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....

    15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.

  4. ஒரு உழுந்து வடை, தேநீருக்கு நோகாமல் எண்ணூறு ரூபா வாங்கியவர் எப்படி விறைப்பெடுக்கிறார் பாருங்கள். தண்டம் கொடுக்கும் போது, கொடுத்தவரின் வலி தெரியும், அப்போ நினைப்பார்; இப்படி வரும் என்று தெரிந்திருந்தால், சும்மாவே கொடுத்து புண்ணியத்தை தேடியிருக்கலாமென்று. நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரியும்.

  5. 15 hours ago, பிழம்பு said:

    தப்பியோடிய இருவருக்கு தலா 6 மாத கால சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான், ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்தார். தண்ட பணத்தினை கட்ட தவறின் மேலும் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். 

    தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?

  6. 6 minutes ago, goshan_che said:

    நாம் எல்லாரும் அங்கே இருந்தவர்கள்தான் - அங்கே உள்ள சுத்துமாத்துகள் எல்லாரும் அனுபவித்ததுதான் - பலர் இங்கே வந்தும் அதையே செய்கிறார்கள் - நிலமை இப்படி இருக்க - தாம் ஏதோ யேசு வீட்டின் கடைசிபிள்ளை போல் எழுதுவது - நகைப்புக்குரியது.

    இப்படி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்  எண்ணவும் தலைப்படுவோமானால் எல்லாமே நாங்கள் அனுபவித்து பழகியவைதானே என்று நமது இழப்புகள் அழிவுகள் எல்லாம் அடிபட்டுப்போகும்,  நமக்கு நடந்தவையை பெரிது படுத்த தேவையேயில்லை என்று போய்விடும்.

  7. சிக்கனமாக இருப்பது தவறல்ல, பிச்சையெடுப்பதை, மற்றவரை ஏமாற்றுவதை விட  சிக்கனமாக வாழுவது நன்றே. ஆனா ஒரு ஏமாற்றை நிஞாயப்படுத்துவதும் ஏழைகள் இப்படித்தான் வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்பதுந்தான் சிக்கனத்தை சந்தேகம் கொள்ளச்செய்கிறது.

  8. On 17/4/2024 at 04:15, goshan_che said:

    சுய அனுபவம்.

    இலண்டனில், பரிசில் ஒரு கணிசமான விலையுள்ள பொருளை, பையை கண்ணுக்கு புலப்படும் வகையில் காரில் விட்டு நாம் யாரும் காரை பார்க் செய்வதில்லை. ஒன்றில் கையோடு எடுத்துப்போவோம் அல்லது டிக்கியில் பூட்டுவோம்.

    கொழும்பில் சர்வசாதாரணமாக காரில் இவற்றை விட்டு போகிறார்கள்.

    நீங்களுமா விட்டுபோனீர்கள்? சந்தேகமாக இருக்கிறது! திறைசேரியில் பல அடுக்கு பாதுகாப்போடு இருந்ததையே காணேலையாமே? சொல்லக்கேள்வி! 

    23 hours ago, goshan_che said:

    சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்…

    அவர்கள் அம்மணமாய் திரிந்தாலும் உருவுவதை தகுதி பார்த்தே உருவுவார்கள். நம்மைப்பாத்தா ஏதாவது போடுவமா என்று யோசிப்பார்கள்  அல்லது விலகிப்போவார்கள். அப்படி ஒரு செற்றப் நம்மளது. விமானத்திலேயே அதிக பொதிகளை எப்படி குறைந்த கட்டணத்தில்  தள்ளுவது என யோசனை பண்ணி பொதி செய்து பயணம் செய்பவர்களல்லவா நாம்! இதில அவர்கள் என்னத்தை உருவுவது நம்மளிடம்? ஏமாற்றுபவர்களுக்கு தெரியும் யாரை இலகுவாக ஏமாற்றலாமென்பது. அதிலும் அவர்கள் கஸ்ரப்பட விரும்புவதில்லை.

     

  9. 6 hours ago, நிலாமதி said:

    வந்துடடேன் வந்துடடேன் என்று  இன்னுமா

    வந்து முடியவில்லை ?😃

    அவரது அடுத்த பயணம் வரை இந்தப்பயணம் தொடரும் காத்திருங்கள், பொறுத்திருங்கள், அஞ்சாதீர்கள் வாசிப்பதற்கு. அப்படித்தான் எனக்கு சிறியரும் சுவியரும் ஆலோசனை தந்து ஊக்கப்படுத்தினார்கள், அதை உங்களுடன் பகிர்கிறேன். பயப்படாதீர்கள் வந்துகொண்டே இருப்பார்.

    7 hours ago, தமிழ் சிறி said:

     

     

     

    spacer.png

    animiertes-sonnenbad-smilies-bild-0003.g  animiertes-sonnenbad-smilies-bild-0011.g  animiertes-sonnenbad-smilies-bild-0020.g  animiertes-sonnenbad-smilies-bild-0019.g  animiertes-sonnenbad-smilies-bild-0005.g  animiertes-sonnenbad-smilies-bild-0003.g

    @goshan_che  ஊரில் நின்ற போது...
    எப்பிடி இருந்த கால் இப்பிடியாகி விட்டது @satan😂 🤣

    கண்டிப்பாக இவர் பார்க்க வேண்டியவர் பாதிக்கால் மருத்துவரை.       

    • Haha 1
  10. On 16/4/2024 at 04:54, பெருமாள் said:

    நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன.

    அடே... நம்நாட்டில் அப்படி ஒன்று இருக்கா?

    8 hours ago, goshan_che said:

    சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்…

    மறந்து போயிருக்கும் எப்படி நம்மவர் சொந்த நாட்டுக்குள்ளேயே விரட்டப்பட்டனரென. இப்போ வெளிநாட்டு இங்கையர். இப்போ விமானநிலையத்திலேயே வரவேற்பு அவர்களுக்கு!

    7 hours ago, goshan_che said:

    உடுப்பில்லாமல் நாடு திரும்ப வெட்கப்பட்டு பல ரஸ்யர்களும் உக்ரேனியர்களும் அங்கேயே நீண்ட விசாவில் அல்லது ஓவர் ஸ்டேயில் தங்கி - சொந்தமாக ஓட்டல், உணவகங்கள் கூட நடத்துகிறார்கள்

    வெளிநாட்டினர் தங்கலாம், வேண்டியதெல்லாம் செய்யலாம் இலங்கையில் ஆனால் தமிழர் மட்டும் விரட்டப்படவேண்டியவர்கள். நாடே கொந்தளிக்கும், எரியும், ரத்த ஆறு ஓடும்  தமிழர் உரிமை பெற்றால் இலங்கையில்.. எப்படி எல்லாம் முழுப்பூசணிக்காயை மறைக்க பாடுபடுகிறார்கள்!

    10 hours ago, goshan_che said:

    சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும்.

    நீங்கள் இலங்கையில் இருந்து இதை எழுதியிருந்தால் அதற்கு வரவேற்பு  அதிகமாக இருந்திருக்கும். 

    10 hours ago, putthan said:

    தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்...

    டும்... டும்.... தேர்தல் வரப்போகுது, ஐயா பலாலிக்கு ராணுவத்தோட போட்டு வந்திட்டார். அதுதான் சரியான திசை, அவரோடு பயணியுங்கள், பிடுங்கினதெல்லாம் திரும்ப பறிச்சிடுவார். காலத்துக்கு காலம் அரங்கம், நாடகம், வசனம், மாறவேண்டாமோ? எத்தனை வருடங்களாக உறவுகளை தொலைத்தவர்கள் தெருவிலே அலைகிறார்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கமுடியவில்லை அவர்களை சந்திக்க திராணியில்லை, இராணுவத்தினரோடு பவனி, யாரை ஏமாற்றுகிறார் தன்னையா?     

  11. 55 minutes ago, தமிழ் சிறி said:

    சாத்ஸ்…. நீங்கள் உங்கள் கண்ணை ஒருக்கால் கண் டாக்டரிடம் காட்டுவது நல்லது. 😂

    சும்மா.... சாரை குஷிப்படுத்துவோம் என்றால்; உங்களுக்கேன் இவ்வளவு பொறாமை? இப்படி ஏற்றி விட்டு, அடுத்தமுறை மிளகாய்தூளுக்கு சொல்லி பாருங்கள்... எவ்வளவு என்கிற  கேள்வியே இல்லாமலே சொந்தச் செலவிலேயே கொண்டுவந்து தருவார். உங்களுக்கும் குஷி வரும்!

    • Haha 1
  12. 17 hours ago, ஏராளன் said:

    புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

    நீங்கள் எல்லோரும்,  வருடத்தில் ஒருநாள் விழுந்தடித்துக்கொண்டு  வாழ்த்துவீர்கள், மிகுதி நாட்களெல்லாம் அதை எப்படி சீர்குலைப்பது என்று திட்டமிட்டு செயற்படுவீர்கள். அதனாலேயே நாட்டில் உறவும் ஒற்றுமையும் அழிந்து போய்க்கொண்டிருக்கிறது. வாழ்த்துவோரின் மனம், செயல் உண்மையாயின் அவர்கள் கொடுக்கும் வாழ்த்தும் நிகழும். அழிவையும் வீழ்ச்சியையும்  சிந்தித்துக்கொண்டு வாழ்த்தும் சம்பிரதாய வாழ்த்து ஒரு வாழ்த்தா? அது வாழ்த்துவோரின் இதயத்திலிருந்து வரவேண்டும் அது நிலைக்கும்!

    • Like 1
  13. 16 hours ago, ஏராளன் said:

    . அந்த நாட்களில் 35,000 இராணுவம் வழங்கிய செயல்பாட்டு பணியை 2030 க்குள் 18,000 பேரைப் பயன்படுத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

    குறைக்கப்படும் படையினரை எங்கே கட்டி வைத்து எப்படி சாப்பாடு போடப்போகிறார்கள்? ஏற்கெனவே சட்டம் ஒழுங்கை மீறிய கும்பலாச்சே!

  14. On 11/4/2024 at 02:11, தமிழ் சிறி said:

    அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? 
    ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

    அட ...நான் யாரோ வெள்ளைக்காரனின் கையென்றெல்லா நினைத்திருந்தேன்!

    On 11/4/2024 at 02:55, goshan_che said:

    ஆம்… இப்போ @satan இதில் உள்ள கைரேகையை வைத்து நான் யார் என துப்பு துலக்க துவங்கி இருப்பார்🤣

    12 hours ago, goshan_che said:

    ப்ரோ சாத்ஸ்…என்னையா இது…அது சும்மா பகிடியா எழுதினது

    இத்தனை காலமாக இங்கு நின்று களமாடும், கொழுத்தாடும் எனக்கு,   யாரோடு எதை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்று  நன்றாகவே தெரியும். நீங்கள் பகிடிக்குத்தான் எழுதினீர்கள் என்பது தெரிந்தும், நான் பொதுவாக  எச்சரிக்கையாகவே எழுதினேன். இங்கு நானும் நீங்களும் மாத்திரம் உரையாடுவதுமில்லை, வாசிப்பதுமில்லை. பொருத்தமானவர்கள்  பொருத்தமான கருத்தை எடுத்துக்கொள்ளலாம். முன்பொருமுறை எதேச்சையாக எழுதிய கருத்துக்கு நான் தன்னை உளவு பார்ப்பதாக கள உறவொன்று குற்றஞ்சாட்டியிருந்தார். அதனாற்தான் அப்படி எழுதி, குறிப்பிட்டவர்கள் என்னோடு தொடர்பாடலை தவிர்த்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டேன். நன்றி! 

     

    • Thanks 1
  15. 11 minutes ago, தமிழ் சிறி said:

    @Kandiah57, @குமாரசாமி அண்ணை  ஆட்களை இந்தப் பக்கம் காணேல்லை. சிலவேளை அவைதான்.... காதலர்களோ... 🤣 

    பெரும்பாலும் கள்ளக்காதலன் புலம்பெயர்ஸிலிருந்து வந்து கொலை செய்திருப்பாரோ?

  16. 17 hours ago, ஏராளன் said:

    அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் ஒருமித்து நின்று செயற்பட்டுவதற்கு முன்வருகின்ற பட்சத்தில் சாத்தியமானதொரு வியூகமாகும்.

    ஆனால் கள யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வியடத்தில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையில் ஏகமனதான நிலைமைகள் வரப்போவதில்லை.

    இதன்காரணமாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற உறவுகள் தற்போதைய நிலைமையை விடவும் மோசமானதாகவே அடையப்போகின்றது. 

    தமிழரை இரண்டுபடுத்தி, அடிபட விட்டு தம் காரியம் சாதித்தவர்களுக்கு இதுகூட தெரியாதா என்ன ......? ஒரு சிங்கள அரசியல்வாதியை ஜனாதிபதியாக்க அனைத்து  தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாளிகளாக்குவார்கள். ஆனால் தாம் ஒரு ஜனாதிபதியை உருவாக்கவோ உருவாகவோ விரும்ப மாட்டார்கள்!

    17 hours ago, ஏராளன் said:

    ஆகவே, அவர் சஜித், அநுர ஆகியோருடன் நீண்டகாலமாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகள் சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுத்து தீர்வினை எட்ட வேண்டும்.

    இவர்கள் யாரும் தமிழ்த் தலைவர்களை பேச்சுக்கு அழைத்ததாக கூட செய்திகள் ஏதுமில்லை, போன சுமந்திரனையும் அழையா விருந்தாளியென விமர்சித்திருக்கிறார் ஒருவர். சுமந்திரன் எதுக்காக அங்கு  போனார் என்பது வேறு விடையம். அவர் அவ்வாறுதான்  யாருக்கும் தெரியாமல், தெரிவிக்காமல் போவதும் சந்திப்பதுவும் வழமை என்பதுகூட தெரியாத ஒரு பேச்சாளர் போலுள்ளது.

  17. On 11/4/2024 at 02:55, goshan_che said:

    ஆம்… இப்போ @satan இதில் உள்ள கைரேகையை வைத்து நான் யார் என துப்பு துலக்க துவங்கி இருப்பார்

    அட தெய்வமே! நீங்கள் இன்னுமா நிக்கிறீர்கள்?  ம்ம்..... சும்மாவே சாத்தான் எத்தனை பக்கங்கள் எழுதுகிறார், எத்தனை பேர்  பச்சை குத்துகிறார்கள்? என்று என்னை பின்தொடர்வது தாங்கள், அதில் என்னை கொழுவி வலிய இழுப்பது. களத்தில் நாங்கள் அறிமுகமானோம், அங்கேயே உரையாடலும் உறவும் கொள்ளுப்பாடும் அதோடு முடிந்துவிடும். அதை  வெளியில் கொண்டு போவது, தேடுவது எனது குணமல்ல. இதை நீங்கள் நம்பலாம். இல்லையேல் என்னோடு உரையாடுவதை தவிர்க்கலாம்.  

    On 9/4/2024 at 22:40, ஈழப்பிரியன் said:

    https://sigiriyafortress.com/sigiriya-opening-hours-sigiriya-ticket-prices/

    இதுவே சிகிரியா போனால் இலங்கையர்களுக்கு 120 ரூபாவும்

    வெளிநாட்டினருக்கு 36 டாலர்களும் அறவிடப்படுகின்றன.

    முப்பத்தாறு டொலர்கள் இலங்கை மதிப்பில் எத்தனை ரூபாய்கள்? சும்மா தெரிந்து கொள்வதற்காக கேக்கிறேன், வேறு ஒன்றுமில்லை ...

    On 11/4/2024 at 02:11, தமிழ் சிறி said:

    அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? 
    ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

      நான் கேக்க நினைத்ததை, நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!  

  18. இவர் சொல்லும் கருத்தை அவர் மாறி சொல்லிவிட்டார். அது சரி.... இது என்ன புதுவிதமாக பவ்வியமான கருத்து இவரிடமிருந்து? எலி காரணமில்லாமல் சும்மா அம்மணமாக ஓடாதே.... செய்தி தயாரிப்பாளரை மாற்றி விட்டாரோ?

  19. 1 hour ago, பெருமாள் said:

    வெறி கூடி ஒன்று மட்டையாகி விட்டது அதான்யா நம்மதமிழ்  இனவாத  பிக்குவுக்கு கோவணத்தை அவுத்து கொடுத்த மகராசன் .

    "படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்." இவர்கள் எல்லாம் மதத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அங்கே, புத்தரை வைத்து தமிழர் காணிகளை பிடிக்கிறார்கள். இங்கே, சிவனை வைத்து புத்தருக்கு பாதை அமைக்க  சும்மா கிறிஸ்தவர்களை வம்புக்கு இழுத்து புத்தரை பாதுகாக்கிறார்கள்.  

    • Like 1
  20. 2 hours ago, கிருபன் said:

    முடிந்தளவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த சேவைகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மக்களை ஏமாற்றி வாயால்  செய்யும் அரசியல் இனிவருங்காலத்தில் கைகொடுக்காது, கைகொடுக்க மகிந்த கோஸ்ட்டியும் இனிமேல் இல்லை. அவர்களுக்கே இது  வாழ்வா சாவா போராட்டம். அப்பவும் பாருங்கள்.... தேர்தலின் பின் ஓய்வு என்கிறார், வாய்த்தால் ஓய்வு இல்லாமல் உழைப்பார். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்றலாம் எல்லாரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற ஏலாது. எதுக்கும் ஒரு முடிவு உண்டு .இவர் மக்களை ஏமாற்றி காலத்தை கழித்தவர்.    

  21. On 8/4/2024 at 00:09, goshan_che said:

    1. கடைகள் ஒவ்வொரு நாளும் திறக்கும். ஆனால் வேலை, வியாபாரத்தில் பிசி (பணம் அதானால் வார இறுதியில்தான் சொப்பிங் போகிறார்கள்.

     3.  காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை

    .4. சாப்பிடவே இல்லாதவன் எப்படி ஐயா நல்ல உடை உடுத்துவான்.

     

    On 7/4/2024 at 20:15, goshan_che said:

    அங்கே கூடி நிற்பவர்களை பாருங்கள் - வருடத்தில் ஒரு நாள் உடுப்பு எடுப்பவகள் போலவா அவர்கள் இப்போ போட்டிருக்கும் உடுப்பு உள்ளது?

    வறுமையில் வாடுவோர் இப்படியான பெயர்போன கடைகளிலா வாங்குவாகள்?

    அதனால்தான் வார இறுதிக்கு காத்திருந்து, பெரிய கடைகளில் துணி எடுப்போரை வறுமையில் உழழ்வதாக எழுத முடிகிறது உங்களால்.

    19 hours ago, satan said:

    மொத்தத்தில்,, ஏழைகள் புது உடுப்பு உடுத்தக்கூடாது, புது வருடம் கொண்டாடக்கூடாது, கந்தலும் கவலையும் கலைந்த தலையுமாய் திரிய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? வாழ்க உங்கள் நினைப்பு!

    காசும் நேரமும் இருப்பவர்கள் வார, வருட கடைசிவரை கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்? தலை நகரில் வேலை செய்வோர் தங்களுக்கு விடுமுறை கிடைத்ததும் தம் உறவுகளுக்கு வேண்டிய உடை, உணவுப்பண்டங்களை வாங்கிக்கொண்டு எதிர்பார்த்திருக்கும் உறவுகளை சென்றடைய நிரையில் கால் கடுக்க  நின்று, வாகனத்தின் மிதிப்பலகையில் பயணம் செய்து, தங்கள் விடுமுறையின் பாதி காலத்தை வரிசைகளில் தொலைப்பது உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? 

    வாரம் முழுக்க வேலை செய்தாற்தான் வார இறுதியில் தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய  முடியும்.

     

    11 hours ago, goshan_che said:

    இல்லை ஏழைகள் இந்த கடைகளில், இந்த படம் காட்டும் தோற்றத்தில் இருக்க மாட்டார்கள். 

    அதே போல் அவர்கள் நாளுக்கு நல்ல உடுப்பு எடுத்தாலும், இப்படி பட்ட கடையில் இன்றி, நடைபாதை கடையிலோ அல்லது துணி வாங்கி தைத்தோதான் போடுவார்கள்.

    ஏழைகள்; இப்படிதான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்தவேண்டும், இந்தக்கடைகளிற்தான் உடை வாங்கவேண்டும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் எனும் உங்கள் எதிர்பார்ப்பு விளங்குகிறது. ஏழைகள்; நல்ல நாளும் அதுவுமா வருடத்தில் ஒரு நாள் நல்ல உடை, பெரிய கடைகளில் விலை கொடுத்து வாங்கி உடுத்தினா போதுமே, உங்கள் மனது பொறுக்காது, அதை படம் போட்டு ஏழைகள் எப்படி இந்தப்பெரிய கடைகளில் உடை எடுக்கலாம்? என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்களே! நீங்கள் எப்போதும் செய்பவையை அவர்கள் வருடத்தில் ஒருநாள் அனுபவிக்கட்டுமேன்?

    11 hours ago, goshan_che said:

    இரெண்டும் இருந்தாலும் ஆட்கள் கூட என்றால் வரிசையில்தான் நிற்க வேண்டும்.

    அங்கே, வார இறுதியில்  வரிசையில் காத்திருந்து பணம் செலுத்துவோரை பணக்காரர் என்கிறீர்கள். அதை நான் கேட்டா, இரண்டும் இருந்தாலும் வார இறுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் கடையில் ஆட்கள் கூடினா வரிசையிலேதான்  நிற்கவேணும் என்று குதர்க்கம் பண்ணுகிறீர்கள். உங்கள் வாதம் எனக்கு புரியவில்லை......

    11 hours ago, goshan_che said:

    நீங்கள் கனடா வந்த பின் ஏழ்மை, ஏழைகளை நூதனகாட்சி சாலையில்தான் பார்த்தீர்களோ?

     

    11 hours ago, goshan_che said:

    கனடாவில் நீங்கள் எப்படி?

    எப்படி இந்த புலனாய்வு வேலையெல்லாம் செய்ய உங்களால் மட்டும் முடிகிறது? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரலாமே?  அப்படி நானிருந்தால்; ஏழைகளைப்பற்றிய என் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் உங்களுடையதை போல் இருந்திருக்குமோ என்னமோ?

    சரி, பத்து பக்கங்கள் வந்து விட்டன. வாசக உறவுகளுக்கு எரிச்சலையும், வசிக்கு மன அழுத்தத்தையும் கொடுக்காமல் நீண்ட உரையாடலுடன் முடிவுக்கு வரலாமென நினைக்கிறன். உரையாடலுக்கு நன்றி.   

    எங்கே சிறியர் சுவியரை காணோம்? பக்கங்கள் நிறைவு செய்ய கங்கணம் கட்டி என்னை அழைத்து விட்டு, அவர்கள் காணாமற் போய் விட்டார்கள்.....

    • Haha 1
  22. 12 hours ago, goshan_che said:

    சாப்பிடவே இல்லாதவன் எப்படி ஐயா நல்ல உடை உடுத்துவான்

    மொத்தத்தில்,, ஏழைகள் புது உடுப்பு உடுத்தக்கூடாது, புது வருடம் கொண்டாடக்கூடாது, கந்தலும் கவலையும் கலைந்த தலையுமாய் திரிய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? வாழ்க உங்கள் நினைப்பு!

    12 hours ago, goshan_che said:

    காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு

    காசும் நேரமும் இருப்பவர்கள் வார, வருட கடைசிவரை கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்? தலை நகரில் வேலை செய்வோர் தங்களுக்கு விடுமுறை கிடைத்ததும் தம் உறவுகளுக்கு வேண்டிய உடை, உணவுப்பண்டங்களை வாங்கிக்கொண்டு எதிர்பார்த்திருக்கும் உறவுகளை சென்றடைய நிரையில் கால் கடுக்க  நின்று, வாகனத்தின் மிதிப்பலகையில் பயணம் செய்து, தங்கள் விடுமுறையின் பாதி காலத்தை வரிசைகளில் தொலைப்பது உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? 

    12 hours ago, goshan_che said:

    கடைகள் ஒவ்வொரு நாளும் திறக்கும். ஆனால் வேலை, வியாபாரத்தில் பிசி (பணம் பண்ணுதல்), அதானால் வார இறுதியில்தான் சொப்பிங் போகிறார்கள்

    வாரம் முழுக்க வேலை செய்தாற்தான் வார இறுதியில் தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய  முடியும்.

    ஐயா சிறியர்! விரைவாக வந்து பக்கத்தை நிறைவு செய்து விடுங்கள். இதுக்கு  மேலேயும் தாக்குப்பிடிக்க முடியாது என்னால்.

  23. 42 minutes ago, goshan_che said:

    வார இறுதிக்கு காத்திருந்து, பெரிய கடைகளில் துணி எடுப்போரை வறுமையில் உழழ்வதாக எழுத முடிகிறது உங்களால்.

    இப்போ நகரங்களில் உள்ள  பெரிய கடைகள் எல்லாம் வார இறுதியிலா திறக்கிறார்கள்? வாரச் சம்பளம் பெறுபவர்களாக இருக்கும். கடை திறக்க வேணும்,  காசும் நேரமும் உள்ள நேரந்தானே வாங்கலாம்.  இரக்கப்போனாலும் சிறக்கப் போ என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

    50 minutes ago, goshan_che said:

    உங்களுக்கு வறுமை எப்படி இருக்கும் என்பதே மறந்து விட்டது போல் உள்ளது.

    வறுமை என்னோட கூடப்பிறந்தது. மறக்க வழியேயில்லை ...... 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.