Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8487
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by satan

  1. 14 hours ago, island said:

    நீங்கள் எழுதியதாக நானும் குறிப்பிடவில்லையே! அவ்வாறான கருத்துக்கள் இந்த திரியில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அதைவிடுத்து தமிழருக்கு எதிராக என்னால் அவதூறு கூறப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக நீங்கள் தெரிவித்த கருத்தைப்பற்றியே கேள்வி கேட்டேன்.

     

    16 hours ago, island said:

    இந்தத் திரியில் நீங்கள் பதிலளித்த எந்த கருத்திலாவது தமிழரை பற்றி அவதூறு கூறிய கருத்து இருந்ததா?  அது எது என்று கூறமுடியுமா?  அப்படியிருக்க அவ்வாறு இருந்ததாக பச்சைப்பொய்கூறியதும்  தேவையற்று அரசியலை இழுத்ததும் ஏன்? 

    இங்கு நான் குறிப்பிட்டதுகடந்தகால தமிழர் பற்றிய செய்திகளுக்கு இலங்கைச் செய்தியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றியதே, நான் யாரிடம்? எங்கே? உங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி தெரிவித்தேனென சொல்வது சிவத்தப்பொய் என உங்கள் உரைநடையில் சொல்லலாமா? நான் எழுதியது இலங்கை செய்திகள் பற்றியதே என மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதில் பச்சைப்பொய் சிவத்தப்பொய் என்று ஒன்றுமில்லை.

    21 hours ago, satan said:

    அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே

     

    21 hours ago, satan said:

    உலக நாடுகளில் எங்கே குண்டு வெடித்தாலும் இலங்கையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்கும் முடிச்சுப்போட்டு பத்திரிகைகளில்  கொட்டை எழுத்திலும் தொலைக்காட்சியிலும்செய்தி வந்ததே,

     

    • Like 2
  2. 1 hour ago, island said:

    அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களே இங்கு வைக்கப்பட்டிருந்தன. 

    என்னது.... ? அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களா? நான் எழுதினேனா?  எங்கேயென காட்டுங்கள். நான் எழுதியது, கொலையாளியை பற்றியதும் இலங்கை செய்திகள் பற்றியதும். வேறேதும் யான் அந்தக்குடும்பத்தை பற்றி எழுதவில்லை.  

  3. 35 minutes ago, island said:

    சாத்தான் இங்கு நடை பெற்றது ஒரு குடும்பத்துக்குள் நடந்த தனிப்பட்ட  கொலைச்சம்பவம். இதே போன்ற பல கொலைச்சம்பவங்கள் புலம் பெயர் நாடுகளில் தமிழர் குடும்பங்களுக்குள்ளும் நடைபெற்றுள்ளன. இதற்குள் அரசியலை இழுத்து பந்தி பந்தியாக  புராணம் பாடும் அளவுக்கு நட்டு கழன்றவர்களாக நாம் இருக்கவேண்டியதில்லை. 

     

    On 13/3/2024 at 10:49, Kapithan said:

    இராணுவ முகம்களை, இராணுவத் தளங்களை வெற்றிகொள்ளும்போதும் அதன் பின்னரும் எல்லோரைப் போன்று நானும் இறுமாப்பும், பெருமிதமும் கொண்டிருந்தேன். 

    ஆனால் பின்னர் வெளிவரும் படங்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினர்களின் உடல்களையும் போராளிகளின் புகளுடல் ஊர்திகளையும்  காணும்போது எனது பெருமிதம் காணாமல் போய்விடும். 

    ம் ..... நாமேதோ நாகரீகமற்றவர்கள், மனிதநேயமற்றவர்கள் என்பதுபோல் எழுதிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதில், சிங்கள அரசாங்கம் வெளியிட்ட செய்திகளின் முறை பற்றிய விளக்கம் எழுதப்போய் அது பந்தியாகி உங்களுக்கு வாசிச்சு நட்டு களர வைத்ததற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்க.

    • Haha 1
  4. On 12/3/2024 at 16:15, island said:

    இங்கிலாந்து, கனடா,  பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து என பல நாடுகளில் தமிழர்களிடையே இது போன்ற  பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே

    ஐயா...! நான் ஒன்றும் நடக்காததை  இட்டு வைச்சு காழ்ப்புணர்வில் சொல்லவில்லை. உலக நாடுகளில் எங்கே குண்டு வெடித்தாலும் இலங்கையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்கும் முடிச்சுப்போட்டு பத்திரிகைகளில்  கொட்டை எழுத்திலும் தொலைக்காட்சியிலும்செய்தி வந்ததே, கொழும்பில் பல காரணங்களுக்காக போலீசில் பதிந்து வசித்த தமிழரை சுற்றி  வளைத்து பிடித்து தாக்குதல் நடத்த வந்த புலிகள் என செய்திகள் வெளியிட்டு சிங்களம் மகிழவில்லை?  மக்களை ஏமாற்றவில்லை இலங்கை செய்திகள்? அப்பாவி இளைஞரை கொன்றுவிட்டு அவர்ளுக்கு அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து, உறவுகளை இவர்கள் புலிகள் என்று கைப்பட எழுதித்தந்தாற்தான் உடலை உங்களிடம் கையளிப்போமென மிரட்டி கையெழுத்து வாங்கி பத்திரிகைகளில் வெளியிடவில்லை? இங்கு இறந்தவர்களை பற்றி நாங்கள் விமர்சிக்கவில்லை,  கொலை செய்தவனையும் இலங்கை அரசின் செயற்பாடுகளையுமே விமர்சிக்கிறோம். அது ஏன் பலருக்கு வெறுப்பை உண்டாக்கி வேறு திசையில் கொண்டு போகிறார்கள்? விடுதலைப்புலிகள் என்கிற பெயரில் பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்து பாற்சோறு உண்டு, வெடி கொழுத்தி கொண்டாடி, அந்த வெற்றியை நாடளாவிய ரீதியில் பெரிய அளவில் கொண்டாட முனைப்புகள் செய்யும் போது மழை கொட்டிதீர்த்து தென்பகுதி வெள்ளத்தில் மிதந்தபோது, தம் அழிவிலிருந்து மீண்டெழாத தருணத்திலும் அந்த மக்களுக்கு உணவுகளை திரட்டி வாகனகளில் அனுப்பி வைத்தவர்கள் நாம். மணலாற்றில் போர்முனையில்  இறந்த போராளிகளின் உடல்களை அவமானப்படுத்தி மகிழ்ந்து வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியவர்கள் யார்? தங்கள் மாவீரரின் புகழுடலுக்கு தாம் இறுதி மரியாதை செய்வது போல், இறந்த இராணுவ வீரரும் இராணுவ இறுதி மரியாதைக்குரியவர்களே என எண்ணி, அவர்களுக்குரிய உடை அணிவித்து, உரிய மரியாதையுடன் செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பி வைத்தபோது, அவர்களின் உடலை  வாங்க மறுத்து அந்த இடத்திலேயே கொழுத்தி அவமரியாதை செய்தவர்கள் யார்? அதன்பின் விடுதலைப்புலிகள் இறந்த இராணுவத்தினரின் உடலை தகனம் செய்து சாம்பலை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஏதோ நாங்கள் நாகரிகம் அற்றவர்கள் என பாடம் நடத்துபவர்கள், நடந்த உண்மை தெரியாமல் பகட்டுக்கு எழுதித்தள்ளுகிறார்கள்.  

    • Like 2
    • Thanks 2
  5. புடின் தேர்தலில் தோல்வியுற்றால், அவரின் நிலை என்னாகும்? யாரின் நிலையோடு ஒப்பிடலாம் அவரை? கிட்லர்.....? முசோலினி....? எதற்கும் ஒரு முடிவுண்டு. அது அவரின் அழிவோடுதான் தொடங்கும். இருபது ஆண்டுகளாக உலக மக்களின் மன அமைதியை அழித்து ரசித்தது போதாதா இவருக்கு? 

    • Like 1
  6. 1 hour ago, கிருபன் said:

    சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11வயது சிறுவன் ஒருவன் விளையாட்டில் தோல்வியடைந்த சிறுமிக்கு தண்டனை என்ற ரீதியில் சிறுமியை தகாதமுறைக்கு ஈடுபடுத்தியுள்ளார்.

    இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் ஏனைய 14,15,18 வயதுடைய நண்பர்களுக்கும் இந்த சூட்சமத்தை தெரிவித்துள்ளதையடுத்து

    கலியுக காலம்.

    1 hour ago, கிருபன் said:

    இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நல்ல வேளை.

  7. 11 hours ago, nunavilan said:

    இந்திய மீனவர்களை கண்காணிக்க வந்துள்ளதாம்.

    ஹி... ஹி..... சிரிப்பு சிரிப்பாய் வருகுது. அழிக்க முடியாது என்று உலகநாடுகளால் சொல்லப்பட்ட, நம்பப்பட்ட விடுதலைப்புலிகளை அழித்த, சிறந்த, வீரம் மிகுந்த இலங்கை இராணுவப்படையால் இந்திய மீனவர்களை கண்காணிக்க, நாட்டுக்குள் கடத்தப்படும்  போதைப்பொருளை தடுக்க முடியவில்லை, புலிகளை அழிக்க தோள்கொடுத்தவர்களின் வருகை தேவைப்பட்டிருக்கு என்று சொல்லுங்கோ இதுகளை கண்காணிக்க.

  8. 11 hours ago, குமாரசாமி said:

    சீனா இந்தியா ரஷ்யா அமெரிக்கா எண்டு ஹை லெவல் ஆக்களோட தான்  சிரிலங்கா  டச்சிங்ல இருக்கு 🤣

    ம்....பிச்சைக்காரனுக்கு தெரிவும் இல்லை, தடுப்பும் இல்லை, வெக்கமும் இல்ல.  யார் போட்டாலும் தட்டு நிறைஞ்சா போதும் இப்போ. தட்டோட எடுத்துக் கொண்டு போகும் போதுதான் புரியும், அப்போதும் தட்டிக்கேட்க முடியாது, தமிழரை துணைக்கு கூப்பிடுவார்கள் தம்மைக் காத்துக்கொள்ள.

    • Like 1
  9. On 10/3/2024 at 17:04, alvayan said:

    இந்த செயலை நமது இன பொடியன் செய்திருந்தால்...கனடாவில் நமது நிலை எப்படியிருக்கும்

    எமது  இனத்துக்கு நடந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசு வறுத்தெடுத்து பாடம் நடத்தியிருக்கும், இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் பிரசுரித்திருக்கும், பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருக்கும். ஆகவே ..... நாமும் கொஞ்சம் கொட்டித்தீர்ப்போம்.  

     

    On 8/3/2024 at 08:14, Kapithan said:

    போதைப் பழக்கம்? 

    ☹️

    இயற்கையாகவே இவர்கள் இரத்தத்தில் ஊறிய குணம், அதை மறைக்க போதை, காணொளி விளையாட்டு என்று எதையாவது சேர்க்க வேண்டியது. சொந்த நாட்டிலே கல்வி கற்ற பாடசாலையிலேயே  இவர் நன்னடத்தை பிரச்சனையை எதிர் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, சக மாணவனை கொடூரமாக தாக்கியதாக......

     

    • Thanks 2
  10. 2 hours ago, alvayan said:

    இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... இந்த செயலை நமது இன பொடியன் செய்திருந்தால்...கனடாவில் நமது நிலை எப்படியிருக்கும்

    ரொம்ப தலை குனிவாக இருந்திருக்கும், அது நமது  தாயகத்தையும் பாதித்திருக்கும்.     தமிழர் மிகவும் ஜாக்கிரதையாக  தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதும் நண்பர்களைப்போல் உரையாடுவதும்  கண்காணிப்பதுவும் அவசியம்.

  11. அரசியல்வாதிகளே கஞ்சா கடத்துவதும், அதை ஊக்குவிப்பதும், வளர்க்க சட்டம் இயற்றுவதும்,போலீசார் அதற்கு கப்பம் பெறுவதுமாக இருந்தால்; எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும்

  12. இதெல்லாம் இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கெதிராக காலகாலமாய் சர்வசாதாரணமாக நடந்த சம்பவங்கள் தான், கனடாவில் இது அதிர்ச்சியாக இருக்கலாம். அதாவது, உயிர் பிழைத்தவர் காருண்யமானவர், அன்பானவர், சம்பந்தப்பட்டவருக்கு உதவும் நோக்கிலேயே அவரை அழைத்து வந்து தங்க வைத்ததாக செய்திகள் கூறுகின்றன, அதே நேரம் அவரின் மனோநிலையை அங்கிருந்த விக்கிராதிபதிக்கும் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் ஏன் அதற்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவரை ஆற்றுப்படுத்த முன்வரவில்லை? இங்கு பௌத்த மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடவைக்க முனையும் அவர்களால் வேறு எதை சாதிக்க முடியும்? இருந்தாலும் ஒரு ஆறுதல், வழமையாக தமிழர்தான் முன்னுக்கு ஓடிச்சென்று உதவி செய்து தாக்குபடுபவர்கள், இந்த முறை தப்பிக்கொண்டனர். அந்தப்பையன் இங்கிருந்திருந்தால் நம்மினத்துக்கு ஒரு சவாலாக இருந்திருக்க கூடும்.     

    • Like 1
  13. தேநீர், சிற்றுண்டி தூக்கப்போய், தாக்குதலில் இருந்து தப்பித்தவர் தாடியராய் இருப்பாரோ.....? இல்ல....  எதுக்கு சொல்லுறேனென்றால், எங்க போனாலும் அவருக்கு ஒரு அதிஷ்டம் இருக்கு, தான்  உயிர் தப்ப மட்டுமல்ல, இளைஞர்களின் உயிரையும் பறிக்க. இன்றுவரையும் அது இருக்கு, இனிமேல் இருக்குமென்று சொல்ல முடியாது. இவரது அதிஷ்டம் இன்னொருவருக்கு கைமாறும்போது, அது இவருக்கு எதிராகவும் திரும்பலாம்....

  14. இலங்கையில் நீதி நிலைத்து இருந்தால்; இவர் எப்பவோ கம்பி எண்ணிக்கொண்டிருந்திருப்பார். வடக்கும் கிழக்கும் இணைந்து அமைதியாய் இருந்திருக்கும், நாங்களும் இங்கே சமத்துவம் அடைந்திருப்போம், சர்வதேசத்தை நாடிப்போக வேண்டிய தேவை வந்திருக்காது என்பதை உணரத் தெரியாத மனிதர். "எங்கே கல்லெறி பட்டாலும், காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடித்திரியுமாம்." பழமொழியைச் சொன்னேன் நான்.

    • Like 2
    • Thanks 1
  15. 1 hour ago, putthan said:

    இது உங்களது அமைப்பின் எத்தனையாவது அறிக்கை? ,,,,அறிக்கை மேல் அறிக்கை விட்டு எமது மக்களின் வாழ்க்கையை சீரழிக்குமுங்கள் அமைப்பு மீது நாங்கள் தான் நட்வடிக்கை எடுக்க வேண்டும்

    பாவம் அவர்கள்! அவர்களை குறை கூறாதீர்கள்,  அவர்களால் நடந்த அவலங்களை தடுக்கவோ தட்டிக்கேட்கவோ முடியவில்லை. அறிக்கை விட்டாவது தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளட்டும்.

  16. On 1/3/2024 at 04:10, ஈழப்பிரியன் said:

    அட பாவிகளா 14 மாதமா பணிகள் நடக்குதா?

    எஞ்சியுள்ளவர்களை என்ன செய்யலாம் என்று திட்டம்?

     

    50 minutes ago, ரஞ்சித் said:

    ரஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று புலிகளையும், ஒன்றரை இலட்சம் தமிழர்களையும் அழித்த காங்கிரஸ் , இறுதியாக தமிழ்நாட்டுச் சிறையில் இருந்த சாந்தனையும் கொன்றுவிட்டது. 

    தனது நலனுக்காக, தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக, குற்றமேதும் செய்யாத  தமிழரை ராஜீவ் காந்தியின் கொலையுடன் பயன்படுத்திக்கொல்கிறது இந்தியா. இது தொடரும் ....... 

  17. 9 hours ago, பையன்26 said:

    அண்ண‌ன் சீமான் 2009க‌ளில் ம‌ற்றும் 2010க‌ளில் அதிக‌ம் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்...........அண்ண‌ன் சீமானின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இவ‌ர்க‌ள் எந்த‌ சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டு இருக்கின‌ம் என்று ப‌ல‌ருக்கு தெரிய‌ வ‌ந்த‌து..........ஜெய‌ல‌லிதா கால‌த்தில் காங்கிர‌ஸ் ஆட்சியின் போது இவர்க‌ளுக்கு தூக்கு த‌ண்ட‌னை நிறைவேற்ற‌ அதை க‌டுமையா த‌டுத்து நிறுத்திய‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி

    செங்கொடியும் இவ‌ர்க‌ளின் தூக்கை க‌ண்டித்து த‌ன‌க்கு தானே தீய‌ மூட்டின‌வா

    அண்ண‌ன் சீமான் அப்போது சொன்ன‌து எங்க‌ள் பின‌த்தை க‌ட‌ந்து தான் இவ‌ர்க‌ளை தூக்கிலிட‌ முடியும் என்று............த‌மிழ் நாட்டில் எதிர்ப்பு கில‌ம்ப‌ தூக்கு த‌ண்ட‌ன‌ய‌ அப்ப‌டியே கைவிட்ட‌வை...............அக‌திக‌ல் முகாமில் சாந்த‌ன் அண்ணாவை த‌ங்க‌ வைச்ச‌ போது அண்ண‌ன் சீமான் ப‌ல‌ முறை ச‌ந்திக்க‌ கேட்டும் இப்ப‌ இருக்கும் அர‌சால் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து அத‌னால் சீமான் அண்ணாவாள் நேரில் சாந்த‌னை பார்க்க‌ முடியாம‌ போச்சு..........சாந்த‌ன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன்🙏.....................

    நீங்க‌ள் சொல்வ‌து பொய் இவ‌ர்க‌ளுக்காக‌ த‌மிழ் நாட்டில் யாரும் குர‌ல் கொடுக்க‌ வில்லை என்று சொல்வ‌து.............க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை திரும்பி பாருங்கோ இவ‌ர்க‌ளுக்காக‌ அதிக‌ம் யார் குர‌ல் கொடுத்த‌து என்று................

     

    On 28/2/2024 at 17:05, தமிழ் சிறி said:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

     

    On 28/2/2024 at 17:05, தமிழ் சிறி said:

    சாந்தன் இலங்கையை சேர்ந்தவர்  என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

    முப்பத்தியிரண்டு ஆண்டுகளின் பின்  கிடைத்த விடுதலையை, சிறை வாசத்தை இன்னொரு சிறப்பு முகாமில் கழித்து தன் வாழ்நாள் இறுதி ஆசை நிறைவேறாமலே இந்த உலகை அயல் மண்ணில், உறவுகளற்ற நிலையில் வாழ்ந்து முடித்துவிட்டார் சாந்தன். தமக்கு விடுதலை கிடைக்காதா, உறவுகளை பார்க்க மாட்டோமாஎனும் ஏக்கத்தோடு காத்து   இருப்பவர்களையாவது தங்கள் சொந்த மண்ணில் சொந்த உறவுகளோடு இருக்கும் சொற்ப காலத்தையாவது கழிக்க தமிழக அரசியல்வாதிகள், உறவுகள் முன்வரவேண்டும்.

  18. On 22/2/2024 at 21:30, ஏராளன் said:

    நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று.
    இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா?

    நீங்கள் அவருக்கு செய்த சேவையிலும், பரிவிலும் அவர் யேசுவைக்கண்டிருக்கலாம் அல்லது உங்கள் வடிவில் ஏசுவே வந்திருக்கலாம். இருந்தாலும் இந்த வார்த்தை உங்களை ஏசுவைபோல் வாழ  உறுதி எடுக்க வைத்திருக்கும். இயேசுவின் நிறம் அழகு எல்லாம்: நாம்  நம்மை அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய்வதே!             

    • Like 1
  19. 1 hour ago, vasee said:

    இந்தியா எமக்கு உரிமைகள் பெற்றுத்தராது, அதற்கான புறச்சூழ்நிலையினை உருவாக்கக்கூடிய அரசியல் தலைமளும் எம்மிடம் இல்லை.

    சிங்களமே ஒரு கட்டத்தில் களைத்துப்போய் எமது உரிமைகளை தந்தாலும் அதை தட்டிப்பறிக்கும் சகுனி இந்தியாவும், அவர்களிடமே பெற்ற உரிமைகளை திருப்பிக்கொடுத்து விசுவாசம் காட்டி இந்தியாவுக்கு சேவகம் செய்ய காத்திருக்கும்  வக்கற்ற தலைமைகளையும் கொண்ட நாம் அதிகாரம் என்றெல்லாம் கனவு காணக்கூடாது என்பதே எனது எண்ணம்.

  20. சாந்தனின்  மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன? இன்னும், இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என சத்தியம் செய்து காத்திருப்போரை என்ன சொல்வது? தமிழக அரசியல்வாதிகள் கூட அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லையே? நம் துயருக்காக நாமே அழுது, நாமே துடைத்து, அதிலிருந்து மீளும் வழியை நாமே தேடுவோம்.            

  21. இனம் எனும் விருட்ஷத்தை இலகுவாக அழித்து விட முடியாது, அப்படி வெளிக்கிட்டால் பல இழப்புகள், ஆபத்துகள் ஏற்படும். அதன் கிளைகளை, வேர்களை முதலில் அழித்து மரத்தை தனிமைப்படுத்தினால் அது தானாகவே  பட்டு வீழ்ந்துவிடும். எதிரி இவ்வளவு பலத்தோடும் வீரத்தோடும் எம்மை விழுத்துகிறான் என்றால்; அது அவனின் சமயோசிதம் எமது விலைபோகும் தன்மையும், விலகிப்போகும், அமைதிகாக்கும் தன்மையும் காரணம். யாழில் மத, சமூக விழாக்களுக்கு கண்டி நடனம், நம்மளால அவர்கள் விழாக்களில் இடங்களில் பரதநாட்டியம் ஆடமுடியுமா, விடுவார்களா? நமது பூர்வீக தனியார் நிலங்களில்  விகாரைகள் கேட்பாரின்றி எழுகின்றன, சைவ ஆலயங்கள் கேட்பாரின்றி முற்றுகை இடப்படுகின்றன, உடைத்தெறியப்படுகின்றன தடுக்க முடிந்ததா நம்மால்? பிறரால் நம்மவர் மதம் மாற்றப்படுகிறார்கள் என்று குறை கூறும் நாம், மற்றவர்களை மதம் மாற்றவேண்டாம், நம்மவர் மதம் மாறாமல் தடுக்க முயலலாமல்லவா? எமது கொள்கையில் உறுதியாய் ஒற்றுமையாய் நிற்கலாமல்லவா? முடியுமா நம்மால்?  நாம் எமது தலைவர்களை எமது சார்பாக அனுப்பிவைத்தால், அவர்கள் தங்கள் சொந்த நலன்களை பெற்றுக்கொள்வதோடு திருப்தியடைந்து விடுகிறார்கள். தாங்களும் செய்வதில்லை செய்பவர்களையும் விடுவதில்லை, தடைக்கற்களாக செயற்படுகிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டு அனுமதி பெற முடியுதென்றால், ஏன் அதை தமிழாக கேட்க முயற்சிக்கக்கூடாது? ஆங்கிலமாக கேட்டால் என்ன சிங்களமாக கேட்டால் என்ன அவர்கள் தானே பயனடைகிறார்கள், அதனடிப்படையில் ஆக்கிரமிக்கிறார்கள். இதற்குத்தானா இவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைக்கிறார்கள்? 

    • Like 1
  22. ம் .... ஏமாற்று, கடத்தல், கொலை, கொள்ளை செய்பவரெல்லாம் ஜனாதிபதிக்கு பக்கத்தில் அமைச்சர் பதவி. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை. உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க  வக்கத்த நீதித்துறை. இவர்களை அழைத்து பக்கத்தில் வைத்து அமைச்சர் பதவி கொடுத்தவர்களின் யோக்கியதை என்னவென்று இதிலிருந்து தெரிகிறது. இதில, இவர்வேற மன்னித்து புனிதராகி விட்டாராம்.

  23. 8 hours ago, nunavilan said:

    மரணசடங்கில் கலந்து கலந்துகொள்ளாமைக்கு, எனது நண்பர் #இளவரசு சொல்லும் கோணம் சரியாக படுகிறது.

    சில ரசிகர்களின், தொண்டர்களின்  கேள்வியும், வருத்தமும், கோபமும்  இதுவே.  விஜயகாந்த் நோயுற்றிருக்கும்போதும் வடிவேலு அவரை  சந்தித்து வருத்தத்தை தெரிவிக்கவில்லை, அவர் இறந்த போதும்  காணொளியிலோ பத்திரிகை வாயிலாகவோ இரங்கலையும் தெரிவிக்கவில்லை என்பதே. அது வடிவேலுவுக்கும் வடிவாக தெரியும் அதனாலேயே தவிர்த்துக்கொண்டார். வடிவேலுவை எல்லோரும் ரசிக்க வேண்டும், எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது பேச்சு தெளிவாக விளக்குகிறது. விஜயகாந்தின் வாழ்வு துதிப்பதற்கு உரியதென மக்கள் காண்பித்துள்ளனர்.

  24. On 4/1/2024 at 08:25, விசுகு said:

     

    இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி

    நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்???

    ராமதாஸ்

    விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன்

    திருநாவுக்கரசு

    உட்பட...😭

    https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/

    வடிவேலுவின் பெருந்தன்மை பேச்சு, உண்மை முகம், கொஞ்சம் கூட சபை நாகரிகம் இல்லாமல் அரசியல் மேடையை நகைச்சுவை மேடையாக பாவித்து கைதட்டல் வாங்கியிருக்கிறார். நாளைக்கு நமக்கும் இதுதான் என்று உணராதவர்களும், தான் வெளியே தனித்து நிற்பேன் என்று அப்போ உணராத வடிவேலுவும். நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலுங் கூட மிதிக்கும் என்பார்கள். ஆனால் வடிவேலுவை பற்றி விஜய காந்த் பேசியதாக எங்கேயும் காண்பிக்கப்படவில்லை. பல தடவை விஜயகாந்த் சொல்லியதை கேட்டிருக்கிறேன், "என்னைப்பற்றி யார் எது வேண்டுமானாலும்  பேசினால் பேசிற்று போகட்டும், அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன், நான் செய்ய வேண்டியதை செய்து போட்டுபோவேன்." என்பார். சொன்னார், செய்தார். அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கடைசியில் நிரூபித்தார்கள், மக்களின் மனதை வென்றார். கள்ள வோட்டு வாங்காதவர்.                             

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.