Jump to content

Knowthyself

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    528
  • Joined

  • Last visited

Posts posted by Knowthyself

  1. 20 hours ago, பெருமாள் said:

    தமிழ் இணையங்களில் இருக்கும் தரவுகளை வைத்து யு டியூபில் அல்வா சூப்பரா கிண்டுவார் .

    17 Jun 2020 வெளிவந்த ஆக்கம் .Knowthyself  இன்னிக்குதான் கண்டு பிடித்தார் ஆக்கும் .

     

    நீங்கள் பெரியாக்கள் ஐயா, கல்வி மன்களையா, எங்களைப்போன்ற பாமர மக்களுக்கு, கி செ துரை போன்ற பெரியவர்கள் சொன்னாத்தான் கொஞ்சமாவது விளங்குதையா.

    21 st century யில், information & digital உலகத்தில், நாங்க நெக கண்ணளவும் படிக்கவில்லை ஐயா!

    தப்புத்தான் தப்புத்தான் .. 

    கை நெக மண்.

  2.  

     

    என் இன மக்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.. அவர்களின் மேல் மனிதாபிமான அடிப்படையில் கூட கருணை காட்ட கூடாது.. எங்கள் வலி கொஞ்சமாவது அவர்களுக்கு புரியட்டும்
     
     
  3. "மானத்தமிழனே பொங்கி எழு மாற்றத்தை நிகழ்த்து"-கூட்டமைப்பு

    17 hours ago, Elugnajiru said:

    2009 ல் உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்தமிழர்கள் எல்லோரும் இதே  நேரம் அதாவது சித்திரை மாதத்தில் அவரவர் வாழும் நாடுகளில் தெருக்களில் தொடர் போராட்டங்கள் நடத்தித் தொண்டைத்தண்ணீர் வத்தக் கத்தியதை எவருமே கண்டுகொள்ளவில்லை 

    நேற்று நான் வாழும் நாட்டில் நாங்கள் எந்த இடத்தில் நின்று கவவீர்ப்புச் செய்தமோ அதே இடத்தில் இங்கு வாழும் சிங்களவர் நின்று கவனயீர்ப்புச் செய்தவையள் காலம் எப்படி மாறியிருக்கு என்பதற்குச் சரியான உதாரணம் 2009 ல் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு ப் பின்பு சிங்களவர் வாழும் நாடுகள் எங்கும் தமிழர்களது போராட்டத்தை அடக்கிவிட்டோம் எனக் கூறிக்கொண்டு வெற்றிவிழா எல்லாம் நடாத்தினவயள் அதில் பின்லாந்திலும் நடாத்தி அப்போது அதிபராக இருந்த மகிந்தவின் செய்திய சிங்களத்திலும் தமிழிலும் வாசிச்சு மகிழ்ந்தவையள் கொத்தாவை கெமுணுவின் மறு அவகாரமாகவே உவமைப்படுத்தி அங்கு வந்திருந்த முஸ்லீம்களுடன் சேர்ந்து பால்சோறில் தொடங்கி அம்பில் தெவ வரைக்கும் ஒண்டாக்குந்திச் சாப்பிட்டவையள். இன்று அதே கொத்தபாஜவை கழுவி ஊத்துகிறார்கள்.

    ஆனால் இதே கொத்தாவயும் ராஜபக்ஸ கூட்டத்தையும் இன்னும் செலகாலத்தில் அவர்களே அரியணையில் ஏத்தி அழகுபார்ப்பார்கள்.

    இதில் கூட்டமைப்பின் பங்கு என்னவெனில் சிங்களவருடன் ஒன்றைக்கதைத்துவிட்டு தமிழர்களிடம் வந்து வேறமாதிரிக்கதைக்கிறது அதில் சுமந்திரன் கைதேர்ந்த தரகராகவே மாறிவிட்டார் ("டார்" எல்லாம் போடுவது சபை நாகரீகம் கருதியே மற்றப்படி "டான்" தான்)

    சிங்களவர்களின் சம்பந்திகளும் இந்திய நடுவண் அரசில் அதிகாரிகளது சம்பந்திகளும் சேர்ந்து தமிழர்க்கு ஏதாவது செய்வினம் என நினைத்தால் அது கிழவி சாமத்தியப்பட்டதுபோலத்தான்.

    இதில் தற்செயலாக நடந்ததோ இல்லைக் காலத்தின் பதிலோ தெரியாது என்னவென்றால் 

    அப்போது எமது சாவை வேடிக்கை பார்த்த ஐ நா சபையை  இப்போ உக்ரெனின் அதிபர் ஒண்டுக்கும் உதவாத நிறுவனம் என சொல்லுகிறார்.

    குணா கவியளகன் அவர்கள் மானத்தமிழன் மறத்தமிழன் அது இது என இழெளத்துவிடுகிறார். இவரது காணொளியின் தலைப்பைப்பார்த்தால் லங்கசிறி செய்தித்தலைப்புப்போட்டமாதிரி இருக்கு.

    இவர் ஒரு காணொளியில் தனது முப்பது வருடத்துக்கு மேலான அரசியல் வாழ்வில் என இழுத்துவிட்டார் நானும் இலங்கைத்தீவின் அரசியலை துரையப்பா காலத்திலிருந்து கவனிக்கிறன் ஆனால் இவர் எனது கண்ணுக்கோ காதுக்கோ எட்டுப்படவில்லை.

     

     

    "மானத்தமிழனே பொங்கி எழு மாற்றத்தை நிகழ்த்து"-கூட்டமைப்பு

     

    For example, your age is 58 years 21 days 3 hrs 39 mins 24 sec 1 msec .. then you have a 58 years 21 days 3 hrs 39 mins 24 sec 1 msec .. experience in poltics

  4. https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/4478643308840790

    கீழடி அகழாய்வின் பலப்பல மட்பொருள்கள் கிடைக்கின்றன. கீழே படத்தில் உள்ளதும் அவ்வாறு கிடைத்த பெருமட்பாண்டம்தான்.
    கையாளத்தக்க அளவில் உள்ள மட்பொருள்களைச் சட்டி, பானை, கலயம் எனலாம். சற்றே பெரிதாக இருப்பதனைத் தாழி எனலாம். அது இறந்தோரை இட்டு மண்ணில் புதைக்கும் கலமாக இருப்பின் ’முதுமக்கள் தாழி’ ஆகிவிடும்.
    சேர்த்து வைக்கப் பயன்படும் பெருமட்பாண்டங்களை என்னென்று அழைப்பது ? அதற்கு ‘மொடா’ என்று ஒரு சொல் இருக்கிறது.
    அளவிற்பெரிய, அடுக்கத்தக்க, மட்பானையைத்தான் மொடா என்பார்கள். இது ‘மொடு’ என்ற சொல்லிலிருந்து பெறப்படுவது.
    ‘மொடு’ என்பதற்குப் பருமை, மிகுதி என்னும் பொருள்கள் உள்ளன. முகிழ்த்து முனைகுவிந்து பருக்கும் மலர்ப்பொருள் ‘மொட்டு’ எனப்படுவதும் இவ்வாறே. மொடாப் பானையின் வடிவமும் மொட்டு வடிவில் வாய் குவிந்திருப்பதைக் காண்க.
    தாழிக்கும் மொடாவுக்கும் உள்ள வேறுபாடு இது. இரண்டும் பேரளவுப் பொருள் இட்டு வைக்கும் கலன்கள் என்றாலும் தாழி வாயகன்றது. மொடா வாய்குவிந்தது. வாயகன்று இருப்பதால்தான் தாழியை ஆடு மாடுகட்குத் தண்ணீர் காட்டப் பயன்படுத்துவார்கள்.
    ‘மொடா’ என்ற சொல்லை மக்கள் எப்போதும் பயன்படுத்தினார்கள். மொடாக்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்தது.
    அடுக்கிலுள்ள கீழ் மொடா அளவிற் பெரிது. அதன்மேல் வைக்கப்படும் மொடா ஒப்பீட்டில் சற்றே சிறிது. அந்த அடுக்கம் கூம்பு வடிவில் மேலேறிச் செல்லும். அதற்கு ‘அடுக்கு மொடா’ என்று பெயர். “அந்த அடுக்கு மொடாகிட்ட வெச்சிருக்கேன் பாரு” என்று சொல்வார்கள்.
    கள்ளு வடித்துச் சேர்க்கவும் சாராயம் ஊறவைக்கவும்கூடப் பயன்படுத்தப்பட்டது மொடா. அதனால்தான் பெரிய குடிகாரர்களை ‘மொடாக்குடியன்’ என்றார்கள். ஒரு மொடா அளவிற்குக் கள்ளூற்றி வைத்திருந்தாலும் குடித்துவிடுபவர்கள். “ஒரு சட்டி சோறும் ஒரு மொடாக் கள்ளும்” நன்கு உண்டு திளைப்பவர்களின் தேவையாக இருந்தவை. “கிடா கிடாக் கறி அடுப்பில கிடக்கு, மொடா மொடாக் கள்ளு ஊத்து” என்ற திரைப்பாடலும் உண்டு. அதனால் பெரும்பானைகளைக் குறிப்பிடுவதற்கு ‘மொடா’ என்ற சொல்லைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.
    அடிப்பாகம் தரைப்பொருத்தமாய் உள்ளதால் சமதரையில் ஒரு மொடா எப்படிச் சாயாமல் நிற்கும் ? தஞ்சாவூர் பொம்மையைப்போல் ஆடுமே. அப்படிச் சாயாமல் ஆடாமல் அடிப்பகுதியில் நிறுத்துதற்கு ஒரு பொருள் உண்டு. அதற்குப் ’புரிமணை’ என்று பெயர். பேச்சு வழக்கில் சிலர் ‘பிரிமணை’ என்பார்கள்.
    வைக்கோலையோ அல்லது வேறு நார்க்கொடிகளையோ புரிபுரியாய்ச் சேர்த்து வட்டமாய்ப் பின்னுவதால் கிடப்பது புரிமணை. புரிகள் சேர்த்து மணையிடப் பயன்படுவது.
    ஆண்பாவம் படத்தில் தம்மிரண்டு பிள்ளைகளும் பெண்டாட்டிக்கு அடிபணிந்து வாழ்வார்கள் என்பதை உணர்ந்து வி. கே. இராமசாமி தம் தாயாரிடம் ஒன்றைச் சொல்வாரே, நினைவிருக்கிறதா ?
    “மருமக வந்தவுடனே அவதான் சாணி தெளிச்சு கோலம் போடுவான்னு நீ நினைக்கறியா ? அவளுக்கு இவனுகதான் எல்லா வேலையும் செய்யப் போறானுக. வேண்ணா பாரு, பொண்டாட்டிக்குச் சரியான பிரிமணையா இருக்கப் போறானுக.”
    புரிமணை எப்படிப் பயன்பட்டிருக்கிறது, பாருங்கள் !
    - கவிஞர் மகுடேசுவரன்
     
     
     
    • Like 2
  5. 1 hour ago, ரதி said:

    அவையவைக்கு விருப்பானவற்றை கொண்டு வந்து இணைக்கினம்...கட்டாயம் அதை பார்க்க வேண்டும் ,செய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் என்று இல்லைத் தானே 

     

     

    ரசிப்போம் in the title is no good

  6. 4 hours ago, குமாரசாமி said:

    வெள்ளைக்காரங்களே புட்டு இடியப்பம் இட்டலி பழங்கஞ்சி எண்டு களத்திலை இறங்கீட்டாங்கள்....இவரு ஊத்தை கீத்தை எண்டு கொண்டு.....
    சார் சரியான கம்பேக்கர் அடிமை போல.....😎

    வந்திட்டார் ஐயா வெள்ளைக்கார துரை 😠அவனே இப்ப எங்கட சாப்பாட்டை கையால சாப்பிடுறான்

     

     

     

     

    Watch from [11:05]

     

    ஜென்மதிலும் திருந்தமாட்டம்

     

    Note: I meant, clean, not a healthy food (any Indian including Tamil Nadu/Chines street food)

    If we watch these videos, our home food வெறுத்து போம்

     

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.