Jump to content

தயா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11015
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Posts posted by தயா

  1. கிருபன்,பகலவன் ஆகியோருக்கு விளக்கத்துக்கு நன்றி .ஐபாட்,ஐபோனில் எழுதும்போது சொற்களுக்கு இடையில் பிழை வந்தால் திருத்துவதற்கு அந்த இடம் வரைக்கும் எழுதிய முழு எழுத்துக்களையும் அழிக்க வேண்டும். அதுவும் முன்நோக்கி வலமிருந்து இடமாக மட்டுமே அழிக்க முடியும்.பின் நோக்கி அழிக்க முடியாது.அதை விட சில எழுத்துக்களை2,3 எழுத்து எழுதியவுடனனேயே வேறு சொல் தானானவே வந்து விடுகிறது.சில வேளைகளிளில் மாற்றக் கூடியதாக இருக்கிறத. சில வேளைகளில் மாற்ற முடியாதுள்ளது.உதாரணத்துக்கு ஜெயலலிதா என்று எழுதினால்ஜெஜ்லலிதா என்று வருகிறது.முன்னைய களத்தில் இலகுவாக எழுதக் கூடியதாகவும் மேற்கோள் காட்டக் கூடியதாகவும் இரந்தத.ஏன் இப்பொழுது இப்படி சிக்கலான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இப்போழுது எழுத்துப்பிழைகள் கூடுதலாக வருகின்றன்இவசர உலகத்தில் பிழைகளை தெரிந்து கொண்டே தீருத்துவதில் உள்ள சிரமத்தால் விட்டு விடுகிறோம்.

     

    யாழ் களம் நீண்ட காலமாக ஒரே பெயரில் இருப்பதினால்  சடரீதியான மென்பொருளை பாவிக்க வேண்டிய தேவையினால் மோகன் அண்ணாவினால்  தமிழ் யுனிகோட் எழுதியை  உள் நுளைக்க முடியாமல் போய் இருக்கலாம்  எண்று நினைக்கிறேன்... 

     

    யாழை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தனக்கு மிக குறைந்த தொகையாக £1000  ஆவது வேண்டும் எண்று மோகன் அண்ணா சொன்னதில் இருந்து இந்த மாற்றம் இங்கு இருக்கிறது...  அதாவது சட்ட ரீதியான மென்பொருள் தேவையையும் அவர் கோடிட்டு இருந்தார்... 

     

    மற்றது உங்களுக்கு தோண்றும் எழுத்து பிழைகளுக்கான காரணம் உங்களின் தேடு பொறிகளில் நிறுவ பட்டு இருக்கும் எழுத்துரு கட்டமைபே (character encoding) காரணம்...  இதை விளக்கமாக சொல்வதாக இருந்தால் நிறைய சொல்ல வேண்டி வரலாம்...  

     

    சுருக்கமாக சொன்னால்  நாங்கள் நாளாந்தம் உபயோகிக்கும் தேடு பொறிகள் 16 bit , 32 bit  எண்று முன்னே போய் கொண்டு இருக்க  நாங்கள் 8 bit  எழுத்துருக்களையே உபயோகித்து கொண்டு இருக்கிறோம்...  யாழை குறை சொல்லி புண்ணியம் இல்லை... 

     

    நீங்கள் உபயோகிப்பது கணனியாக இருந்தால்  இந்த மேம்படுத்த பட்ட  E-கலப்பையை உபயோகித்து பாருங்கள்... 

    http://thamizha.org/

     

    இல்லை IOS or android ஆக இருந்தால் நல்ல தமிழ் விசைபலகையை தேட வேண்டியதுதான்...  

    • Like 1
  2. "அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

     

    புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

    உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

    அதெண்ணால் உண்மைதான்... !!! பாட்டிகளுக்கு போய் தண்ணியை போட்டு விட்டு உளறுவதுதானே இப்ப எல்லாம் விமர்சனம்... !

    இலங்கையிலை தனக்கு சுதந்திரம் இருக்காது எண்டு போக முன்னம் தெரிந்திருக்காத கவிஞர் நீங்களும் தான் முற்றும் தெரிந்தவர்கள் எண்டு சொன்னால் நம்பவா முடியும்...???

  3. யாழ்க்கள நண்பர்களே, நான் பொறுப்பில்லாமல்பேசி என்னோடு தொடர்பு கொண்டவர்களையும் எனக்காக அலுவல் பார்த்தவர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடமுடியாது. எனது இரண்டாவது அறிக்கை எழுதுமுன்னம் நான் என் தோழ தோழியர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பண்ணைவீட்டை ஒரு அமைச்சர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அவரது சேட்டைகள் இங்கு ஒரு கிழைக்கதையாக உள்ளது. என் தோழ தோழியர் நலன்கருதி நான் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பேசுவது முக்கியமாக உள்ளது.

    நெடுக்காலபோவான் போன்றவர்கள் என்னை புரிந்துகொள்ளுகிற காலம் வரும்.  .

    வணக்கம்... கண்டதில் மகிழ்ச்சி.....!!!

    உங்களின் உரையில் இருந்து ஒண்று மட்டும் எனக்கு புரிகிறது.... நீங்கள் மீண்டும் இலங்கை போக போகிறீர்கள் என்பதுதான் அது...

    அப்போது நீங்கள் மீண்டும் கைது செய்யபட மாட்டீர்கள்... செய்யப்படாமல் இருக்க ஆவன செய்து கொண்டு இருப்பீர்கள்... !!!

    உங்களுக்கு தமிழ் வெளிநாட்டு ஊடகங்கள் பெருமளவில் ஆதரவை தந்தன... அது ஜெயபாலன் எனும் தனிமனிதனுக்காக அல்ல... இலங்கை அரசின் அடக்கு முறையில் சிக்கிய ஒருவருக்கு... இதை நீங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்...

    அந்த அடக்கு முறையை மழுப்பும் போக்கானது உங்களுக்கான ஆதரவை மீளாய்வு செய்யும் நிலைக்கே எல்லாரையும் கொண்டு செல்லும் என்பதை புரிந்து கொள்ள உங்களால் முடியும் எண்று நம்புகிறேன்...

    அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ...

  4. ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு  வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .

     

     

    இப்படி ஒரு மலினமான விளம்பரமா...??  இருக்கும் இருக்கும்...  :unsure:

    • Like 1
  5. சிவா அண்ணை... 

     

    கவிஞர் தனக்கு இருக்கும் இருந்த  அச்சுறுத்தலை மீறி ஊர் போனார் அரசியலமைப்புகளை சந்தித்தார் என்பதுவே போதுமானது அவரின் போர்க்குணத்தையும் துணிவையும்  சொல்ல.... !!!   

     

    விமர்சகர்களில் இரண்டு வகை....  புலிகளை விமர்சிப்பவர்களையும் கூட அப்படி வகைப்படுத்தலாம்....   ஒண்று அரசாங்கத்தை அண்டி நிண்டு கொண்டு தங்கள் தரப்பை நியாயப்படுத்த விமர்சிப்பது...  மற்றது   புலிகள் மீது அதிகப்படியான ஈடுபாட்டால்  வருவது...   கவிஞர் புலிகளிடமே போய் புலிகளை விமர்சிக்கும் இரண்டாவது வகை.... !!   அதில் சந்தேகம் கிடையாது... 

     

    இலங்கை அரசு  எந்தக்காலத்திலும் கருத்து சுதந்திரத்தையோ தனிமனித சுதந்திரத்தையோ மதிப்பது கிடையாது...  இது அனைவருக்கும் தெரிந்த ஒண்று...   அங்கு சுதந்திரமாக போய் அரசியல் வேலை செய்யலாம் எண்று  கவிஞர் நினைத்து போய் இருந்து இருப்பார் ஆகில் இது அவரின் மிகப்பெரிய தவறு... 

     

    இல்லை இணக்க அரசியல் செய்து தமிழ் மக்களுக்கு வேண்டியதை பெற  போய் இருந்து இருப்பார் ஆயின் அவருக்கு இந்த நிலை வந்து இருக்க வாய்ப்பே இல்லை....   

     

    இண்டைக்கு கவிஞர் வெளியால் விடப்பட்டதுக்கும் கூட தமிழ் ஊடகங்களே மிகமுக்கிய காரணம்...  கவிஞரின் கைதை செய்தவர்கள் எந்த சீருடையிலும் வரவில்லை என்கிறது தகவல்கள்...   வளக்கமான காணமல் போனோர் பட்டியலில்  போய் இருந்து இருக்க வேண்டியவரை முக்கிய செய்தியாக்கி காப்பாத்திய அனைத்து ஊடகங்களுக்கும் முதலில்  நண்றி... 

    • Like 3
  6. சிவா அண்ணை ..!

     

    எனக்கு நீங்கள் சொல்வதில் பூரணமாக உடன் பாடு இருக்கிறது...  ஆனால் உள்ளுக்குள் பலரை போல் கேள்வியும் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது...

     

    அதை அவர் திரும்பி வரும் போது அவரிடமே காரசாரமாக கேட்கலாம் எண்று இருந்தேன்... அதை பொதுவாக கேட்கிறேன் திரும்பி வந்து அவர் பதில் அளிக்கட்டும் ... அவரின் மீதான மரியாதையை நிலைத்து வைத்திருக்க எனக்கு இதற்கு பதில் வேண்டும்... !!!

    கேள்வி 1

    ஊர் அறிந்த அரசியல் செயற்பாட்டாளர், உலகறிந்த கவிஞர் எந்த பாதுகாப்பு முனேற்பாடும் இல்லாது ஏன் இலங்கை போனார்...??? இலங்கையில் இராணுவத்தால் நடந்த நடக்கும் கொடுமைகளை இந்த தமிழ் சர்வதேச ஊடகங்கள் சொன்னவைகளையும் அவர் நம்பவில்லையா...??

    இதில் விடுதலை புலிகளின் முன் யோசனையும் தந்திரமும் போதாது எண்ற கவிஞருக்கு இப்படி என்பதை நம்பமுடியாமல் இருக்கிறமையை தவிர்க்க முடியவில்லை...

    கேள்வி 2

    கைது செய்த பின் கவிஞரின் பேட்டியை கேட்டேன்... தனது கைதை அவர் எதிர்பார்த்து இருந்து இருக்கவில்லை என்பது புலப்பட்டது... இப்போ கேள்வி என்ன எண்றால் புலிகளை விமர்ச்சித்து புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய் வந்த போது புலிகள் கொடுத்த அதே மரியாதையையும் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் தனக்கு தரும் எண்று எதிர்பார்த்தாரா...??

    • Like 3
  7. நான் சீமான் அண்ணாவுக்கு தான் ஆதரவு.. :icon_mrgreen:

     

    ஆனால் வைகோ ஐயா ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற ரீதியில் அவர் போராட்டங்களை மதிக்கிறேன். :rolleyes:

     

    மன்னிக்கோணும் பிள்ளை...   நான் வைகோவுக்குதான் ஆதரவு...  

     

     தமிழாக்கள் ஆட்சிக்கு வாறதை நான் விரும்பவில்லை.... இல்லை சாதிக்கட்சிகள் ஏதாவது தலைமை ஏற்கலாம் முடியாவிட்டால் திராவிட  கட்ச்சிதான் ஆட்ச்சிக்கு தமிழ் நாட்டி வர முடியும்...   

     

    தமிழன் எல்லாம் சுயநல வாதிகள்...   ( அடிமை புத்தி பாருங்கோ இப்படி மட்டும் தான் என்னாலை சிந்திக்க முடியும்... ) 

  8. முள்ளிவாய்க்கால் முற்றதை முழுவதும் இடிக்க முயற்சி வைகோ உட்பட உணர்வாளர்கள் முற்றத்தில் குவிந்தனர்..சிமான் சிறுது நேரத்தில் முற்றுத்தை அடைகிறார்...

    https://www.facebook.com/kondal.samy.12

     

    இப்ப என்ன பதில் எண்டால்...    சீமான் தேவையே இல்லாமல் தமிழ் மக்களுக்காக நாடகம் போடுகிறார்...   நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை  வல்வளைப்பு செய்தமையாலேயே  சுவர் இடிக்கப்பட்டது.... சீமான் தனது வளர்ச்சிக்காக அரசியல் செய்கிறார்...  

     

    வராவிட்டால் ஏன் வரவில்லை...??   வந்தால் அரசியல் செய்கிறார்...!   இதுதான் எங்களின் பதில்...   முடிஞ்சால் மோதிப்பாருங்கள்.... 

     

    • Like 1
  9. கன சோலியாக திரிந்தாலும் யாழுக்கு மறக்காமல் வந்து 100 அடித்தும்  சும்மா ஆ(ட்)டாத உறவான  சோழியன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...  :D  :D  :D

  10. படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா .

     

     

    முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை :(

    அப்படி இல்லை எண்றால்

     

     [img=  படத்தினுடைய லிங் ]   

     எண்று இடைவெளி இல்லாது  எழுதுங்கள்..   

  11. நன்றி தயாண்ணா அன்புக்கு... இனிமேல் யாழுக்கு ஒழுங்கா வருவியள்தான..? இல்லாட்டி சொல்லாமல் கொள்ளாமல் மறுபடியும் நின்றுவிடுவீர்களா..? இனிமேல் தலைமறைவானால் ஆள்வைச்சு ஆளை யாழுக்கு இழுத்து வரவேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.. :)

     

    இனிமேல் வருவன் எண்டு தான் நினைக்கிறன்...   இதிலை எது எங்கட கையிலை இருக்கு...     இருக்கிறது பத்து விரல் மட்டும் தானே....  :lol:

  12. MP4  (லிங்கை) வீடியோவை எப்படி நேரடியாக யாழில் இணைப்பது...?? 


    யாழ்அன்புவின் தலைப்புக்கள் இன்று இவ்வாறு சீர்குலைந்து காணப்படுகின்றனவே.. ஏன்..??!

     

    yari11.jpg

     

     

    நான் நினைக்கிறேன் யாழ்அன்பு வின் அவதாரில் இருந்த படம்  வேலை செயாததால் வந்த பிரச்சினையாக இருக்க வேண்டும் நெடுக்கு... 

     

    அனேகமாக யாழ்அன்பு தான் சரி செய்ய வேண்டும்.

  13. நல்ல  காலம்  நான்  கண்ணில  படவில்லை

    எண்ணூற்றி  சொச்சம் அடித்ததுக்கு என்ன  சொல்லுவாரோ....... :lol:  :D  :D

     

    நீங்கள் பிளாவிலை அடிச்சாக்களும் அவரும் சமனே...?? 

     

    பொறுங்கோ ஒரு லீட்டர் ஆகட்டும்...  :D

    • Like 1
  14. 200ml   அடிச்சும்  ஆடாமல் ஸ்ரெடியாக நிக்கும் இராச வன்னியருக்கு வாழ்த்துக்கள்... 

     

    ( நீங்கள் ராமதாஸ் பாட்டீங்களா...?? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  )

     

     

     

     

  15. நண்றி...

    பச்சை புள்ளிக்கெல்லாமா வாழ்த்துவீயள்...

    சரி அதிக புள்ளி எடுத்த புள்ளி ராஜா, புள்ளி ராணி பட்டம் எல்லாம் இங்கை குடுக்கிறது இல்லீங்களா...??? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.