-
Content Count
1,969 -
Joined
-
Last visited
-
Days Won
6
poet last won the day on December 6 2013
poet had the most liked content!
Community Reputation
428 ஒளிAbout poet
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
4,608 profile views
-
புனிதம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்? இலங்கை தமிழரின் இரத்தத்தை என்னுள் இறங்கிக் கழுவவோ? கூடா நட்பின் கேடாய் நானும் பாவ நதியாய் மாழவோ? கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்? .
-
பிழைத்திருத்தல் கேழ்விக்குறியாகும் தருணங்களில் ஆண் பெண்ணாகவல்ல தப்பிக்க வழிதேடும் மனிதர்களாவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம். இது தொடர்பான புரிந்துணர்வு மனிதாபிமானத்தின் அடிப்படையாகும்.
-
சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்
poet replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்
எங்கள் பிரச்சினைகள் 100%மும் விவாதாங்கள் தீர்மானங்களும் தீர்வும் இல்லாமல் இருக்கு. அவற்றை விவாதிப்போம். தமிழகத்தில் ஈழ ஆதரவுக் குரல் கொடுப்பவர்களிடை ஆயிரம் உட்பிரச்சினைகள். இவற்றுக்குள் நாம் மூக்கை நுழைப்பது பிழையான ராஜதந்திரமாகும். நண்பர்கள் உதவுகிறவர்கள் ஆதரவு சக்திகளிடையே நிலவும் மோதல்களில் எவ்வண்ணம் நிலைபாடு எடுப்பது என்பதை பலஸ்தீனிய தலைவர் ஜசீர் அரபாத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். எல்லோருடைய ஆதரவுக்குரலும் உதவியும் நிலைப்பது முக்கியம் என்பதை பலஸ்தீனியர்கள் உணர்ந்திருந்தனர். அந்த சரியான இராஜதந்திரத்தில் இருந்து ஈழ இறுதி யுத்தத்தின்போது பலஸ்தீனியர்கள் தவறிவிட்டார்கள் என்பது என் கவலை. தமிழக நட்புச் சக்திகளின் உள்விவகாரம் நமக்கு வேண்டாம். பஞ்சாயத்துக்களை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும். -
இச்செய்தி இந்தியாவை ஆழம்பார்க்கும் தந்திரமாக இருக்கும். சீனாவின் ராசதந்திரம் கடைசிவரை மாற்றாரை குழப்பிக்கொண்டிருப்பதும் திசை திருப்புவதும்தான். . தனது நண்பர்களை எதிரியின் நண்பராக காய் நகர்த்துவார்கள். சீனா வடகிழக்கு மாகாணங்களில் வீதி, புகையிரத வீதி கட்டிடங்கள் அமைப்பதைக்கூட அமரிக்காவும் இந்தியாவும் இதுவரை அனுமதிக்கவில்லை. இலங்கையில் சீன அணிக்கும் அமரிக்கா சக இந்தியா அணிக்குமிடையில் தென்னிலங்கை என் ஏரியா, வடகிழக்கு உங்க ஏரியா என்பதுபோல ஒரு எழுதப்படாத புரிந்துணர்வு, மோதல் தவிர்ப்பு செயற்பாடு நிலவுகிறது. ஆதலால் கச்சதீஇல் சீன அணுமின் நிலையம் செய்தியில் உண்மை இருக்க வாய்பெதுவும் இல்லை.
-
Maharajah பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். எங்கள் ராணிக்காய் தேசிய இன அரசியல் தான். இன்றைய நிலையில் எல்லா விமர்சனங்களோடும் தன் வல்லமைக்குள் சம்பந்தரைதவிர வேறுயாரும் அந்தக் காயைப் போட்டுடைக்காமல் காப்பாற்ரவில்லை. வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது. சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில் சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும் என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும்.
-
நட்புடன் ஈழப்பிரியன், Maharajah, சர்வதேச சமூகம் நம்மை தொடர்ந்தும் மோப்பம் பிடித்தபடி.மவுனித்தபிறகு எஞ்சிய அரசியல் வெளியுள் பிரவேசித்து செயல்பட அரசியல் ராஜதந்திர வசனக்கள்தானே கடவுச்சொற்கள். இதனை புரிந்து செயல்படுவது தப்பா
-
STRAIT FORWARD PRESIDENT - V.I.S.JAYAPALAN POET ஓளிவு மறைவற்ற ஜனாதிபதி - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .. .. CONGRATULATION MR. PRESIDENT FOR YOUR OPEN STAND ON THE ETHNIC QUESTION. YOU HAVE ESTABLISHED THE FIRST SINHALESE ONLY GOVERNMENT IN SRI LANKA.இனப்பிரச்சினையில் உங்கள் ஒழிவு மறைவற்ற நிலைபாட்டுக்கு வாழ்த்துக்கள் திரு ஜனாதிபதி அவர்களே. நீங்கள் இலங்கையின் சிங்களம் மட்டும் அரசை நிறுவியுள்ளீர்கள்.. King Dutugemun . IN SRI LANKA ALMOST ALL THE ACUTE PROBLEMS ARE ONE WAY OR ANOTHER CONNECTED TO THE ETHNIC AND SOCIAL DISCRIMINATION. I DON'T KNOW HOW THIS SINHALESE ONLY GOVERNMENT GOING TO BRING PEACE AND DEVELOP SRI LANKA..இலங்கையில் சகல பிரச்சினைகளும் எதாவது ஒருவழியில் இன மற்றும் சமூக ஒடுக்குதல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. எப்படி சிங்களவர் மட்டும் அரசினால் சமாதான சூழலை உருவாக்கி இலங்கையை சமூக பொருளாதார வளற்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முடியுமென்பது புரியவில்லை.
-
நம் காலத்து நாயக நாயகியரே வாழிய - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன். * திரு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் சூழலின் அச்சத்தை புறந்தள்ளி தடைகளைத் தாண்டி ஈழத் தாய் மண்ணில் மாவீரர் தின வீர வணக்க நிகழ்வை மக்கள் அனுஷ்டித்துள்ளார்கள். உயிர் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இடம்பெற்றபோதும் மாவீரர் வணக்க நிகழ்வு சற்றும் நமது தேசிய இனத்துவ தன்மை குறையாமல் வீரமுடன் நிகழ்த்தபட்டமை மெய்சிலிர்க்க வைக்கிறது.இளைய ஈழத்துக்கு வீர வணக்கம். நாம் சிறுபாண்மை இனமல்ல தேசிய இனம் என்கிற சேதியை மக்கள் தங்கள் தன்எழுச்சி செயற்பாடுகளால் சர்வதேச சமூகங்களுக்கும் உரத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முன்னோடிப் படையணியாகச் செயல்பட்டுள்ளனர். முன்மாதியான வீரத்துடன் முன்னணிப் படையாகச் செயல்பட்ட யாழ் மற்றும் மட்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நம் காலத்து நாயக நாயகிகளை பணிவறியாத தலை பணிந்து வாழ்த்துகிறேன்.
- 1 reply
-
- 1
-
-
தங்கத் தலைவனுக்கு... 65´வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
poet replied to தமிழரசு's topic in வாழிய வாழியவே
சகல விமர்சனங்களையும் கடந்து ஈழத் தமிழர்களது அடையாளமாக மேம்படுகிற திருமிகு போராளி தலைவர் பிரபாகரனுக்கு என்னுடைய பிறந்ததின நல்வாழ்த்துக்கள். -
இன்னுமொரு இனக்கொலைக்கு தூண்டுதலா - வ.ஐ.ச.ஜெயபாலன். இந்திய நாடாளுமன்றத்தில் திரு டி ஆர் பாலு “விடுதலைப் புலிகளால் சோனியாவுக்கு ஆபத்துள்ளது” என்று ஒரு பாதகமான அபாண்டத்தை தெரிவித்தது மீண்டும் ஒரு இனக்கொலையை தூண்டும் முயற்சியா? இந்தியாவையும் ஈழத் தமிழரையும் பிழவு படுத்தும் முயற்ச்சியா? விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குகிறதா? அது குறித்த தலைவரை இலக்கு வைக்கிறதா? இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு எங்கிருந்து கிடைத்தது? இது தீமுக வின் சம்மதத்துடன் தெரிவிக்கப்பட்டதா? திரு.ஸ்டாலின் இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?” இது அரசின் முந்தைய தகவல் என்றால் இப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென்ற அரசின் நிலைபாட்டை ஏன் தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவரின் பாதுகாப்பை வலியுறுத்த வேண்டுமானால் உண்மையான காரணங்களையல்லவா முன் வைக்க வேண்டும். 2009ல் மவுனித்த விடுதலைப்புலிகளை கோர்த்து விடுவதன்மூலம் அனைத்து ஈழத் தமிழர்கள் முகத்திலும் ஏன் காறி உமிழ்கிறீர்கள்? மீண்டும் இந்தியாவையும் இலங்கையையும் ஈழத் தமிழருக்கு எதிராக தூண்டும் இந்த கூற்றை திமுக வாபஸ் பெற்று டி.ஆர் பாலுவை கண்டிக்குமா? இது ஈழத்தில் வாழும் தமிழரை கொலையாளிகளிடம் கையளிப்பதுபோன்ற செயலாகும். யாழ்கழ தோழ தோழியர்கள் திமுக தலைமையை சமூக ஊடகங்கள் மூலமும் ருவீட்டர் மூலமும் செய்திகள் மூலமும் பதில் சொல்லவும் டி.ஆர்.பாலுமீது நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்த வேண்டும். . http://www.theweekendleader.com/Headlines/43577/congress-dmk-stage-walkout-from-ls-over-gandhis-spg-cover-.html