-
Posts
2116 -
Joined
-
Last visited
-
Days Won
7
poet last won the day on January 14 2020
poet had the most liked content!
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
6207 profile views
poet's Achievements
-
வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளை அவன் மீண்டும் முறிக்கும் போது அவனை அவர்கள் மீண்டும் அரசனாக்குவர்
-
SRI LANKAN COW AND THE CHINESE MILKMAN STORIES. இலங்கை பசுவும் சீன பால்காரனும் கதைகள் * Chinese Milkman -Stop, Stop.... ..Don't touch my grass. Go to the next fam to Eate grass. I need only milk, Come back for milking. * சீன பால்காரன் - நிறுத்து..நிறுத்து. எனது பண்ணை புல்லை தொடாதே. புல் மேய பக்கத்து பண்ணைக்குப் போ. பால் கறக்க மட்டும் இங்கு வந்துவிடு.
-
இந்திய இராசதந்திர சங்கடமும் உக்ரைன் போரும். (Opinion பக்கத்தில் The Hindu வெளியிட்ட எனது கருத்து ) * இந்திய இராசதந்திரம் தனது கோட்டைகளை அணிசேரா நாடுகள் என்கிற கற்பனையில் கட்டுகிறது. அதானால் இலங்கையோ அல்லது உக்ரைனோ எங்கானாலும் இந்தியா தனது எதிரிகளின் - சீனாவின் நிலைபாட்டையா எடுக்கிறது. அதனால் தனது உண்மை நண்பர்களை இழக்கிறது. அதனால் இந்திய இராசதந்திரம் தொடர்பாக விஞான பூர்வமான மீழாய்வு அவசியம். - .V.I.S.JAYAPALAN POET AND ACTOR * MY COMMENTS ON THE DILEMMA OF INDIAN DIPLOMACY (The Hindu - Opinion) Discussion Jaya Palan2d Indian diplomacy building its castles in an imaginary non aligned world. So whether in Sri Lanka or In Ukraine India always take the Chinese line and loose its friends. Indian diplomacy needs scientific review.
-
நnன்றி விசுகு, நன்றி புரட்சிகர தமிழ் தேசியன். உடல் நலம் தேறி வருகின்றேன். உங்கள் தோழமை உற்சாகம் த்ருகிறது.
-
கொண்டாட்டமே வாழ்வு. - ஜெயபாலன் * பருதியோடு எழுகவென பாடி பல்லுயிர்கள் கொண்டாடும் அதிகாலை. பூப்படைகிற முல்லை என் படுக்கை அறையுள் நுழைகிறாளா?. * எல்லோரும் வாழ்வோம் என்றபடி சன்னலைத் திறந்தேன். கரு முகில் அபாயா அணிந்த நம் முழுநிலவின் புன்சிரிப்பில் விடிகிறது வாழ்வு * என் சின்ன வயசு முழுவதும் முக்காடிட்ட சோனக மாமிகள் தந்த அறியப்படாத சிற்றுண்டிகளின் தேன் கமழ்ந்தது. * வளர் இளம் பருவத்தில் அபாயா அணிந்த அன்னை மேரியும் அம்மனும் ஒன்றென நம்பினேன். வாழ்வு பலவண்ன உறவுகளின் வானவில் என்பதை எப்படி மறந்தோம்? * மா முனிவன் ராமானுஜன் அபாயாவுடன் துலுக்க நாச்சியாரை போற்றிப் பணிந்த மண்ணே வாழிய. * வண்ண வண்ண கியாப் அணிந்து காடு வளர்க்கும் பறவைகளால் உயிர்த்திருக்கிறது நம் உலகு. * நம் மணல்கடிகை ஓயாமல் ஒழுகுகிறது. மதுக்கடை அடைக்கப்போகிறார்கள் என யாரோ பாரசீக மொழியில் பாடுகிறார்கள். பூசலற்ற நிகழ்காலம் மட்டுமே நமது. வருக கொண்டாட்டத்தை ஆரம்பிப்போம்.
-
சம்பந்தன் ஐயா, வணக்கம். நீங்கள் ஓய்வெடுக்கும் வயசில் பிரித்தானியாவிடம் முன் வைத்த கோட்பாட்டு ரீதியான கோரிக்கையில் உறுதியாக இருங்கள். மாவை மற்றும் சாணாக்கியன் போன்ற சகல வடகிழக்கு தோழர்களை முன்னிலைப் படுத்தி மக்கள் போராட்டமாக வளர்த்தெடுங்கள்.. விமர்சனங்களை பின்ன்நகர்த்தி உங்களோடு மக்கள் நிற்பார்கள். கோட்பாட்டு ரீதியான கோரிக்கையுடன் எஞ்சியுள்ள அரசியல் கைதிகள் விடுதலை மறுப்பு போன்ற மறைமுகமாக தொடரும் போரை நிறுத்துவதும் முக்கியம். சகல இயக்க போராளிகளுக்கும் போரால் பாதிக்கபட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் ஈழம்வாழ் வாழ் மலையக தமிழர். வடபகுதி முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், . சாதிவாரியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் இதுவரை மறுக்கபட்ட புனர் வாழ்வும் புனர் நிர்மாணமும் போன்ற இலகுவான அவசரக் கோரிக்கைகளையும் உலகின்முன் வையுங்கள். இவற்றை உங்கள் எதிர்கால கோரிக்கைகளோடு இணைக்க மறக்க வேண்டாம். அமைப்புச் சாரா நிறுவனங்கள் குறிப்பாக போர்களில் நாம்மோடு நின்ற திருச்சபை போன்ற மத நிறுவனங்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. மத நிறுவனங்கள. மக்களை அரசியல் மயப்படுத்தி வீதிக்கு இறக்கினால் வராலாறு உள்ளளவும் வாழ்வ்வீர்கள் ஐயா அரசியல் போர்க்களத்தில் உங்கள் உறுதியோடு சேர்ந்து மக்கள் ஆதரவும் என்போன்ற கலைஞர்கள் ஆதரவும் நிச்சயம். உயரும்
-
வாழ்த்துக்கள் சுமந்திரன். இப்ப நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் ரணில் ஆட்சியை தாங்கிப்பிடித்து ரணிலுக்காக அப்போதைய ஜனாதிபதி சிறிசேனாவையே மிரட்டியபோது உங்களுக்கு வழங்கபட்ட மக்கள் ஆணையின் இலகுவில் பெறக்கூடிய சின்ன விடயமான “தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை” கூட மறந்துவிட்டீங்களே. இது என்ன “திண்ணை” ஞானமா?
-
பொங்கல் வாத்துக்கள். HAPPY PONGAL - ஜெயபாலன் * பொங்கல் வாழ்த்துக்கள் (பாடல்) - ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே பூமியில் என்றும் அகதிகள் என்று புழுதி மண் போல சுழலுவதோ தாயகம் மீண்டு துயர்களை வென்று தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே ********************************************************************************************************** பொங்கல் வாழ்த்துப் பாட:ல் :சில ஆண்டுகளுக்கு முன்னம் எழுதி 2008ல் சென்னையில் ஒலிப்பதிவானது. சென்னை பல்கலைக்கழக இலக்கிய துறையின் ஏற்ப்பாட்டில் 2008 ஆகஸ்ட் 4ம் திகதி நண்பன் கலைஞன் அமரர் பாலு மகேந்திராவால் வெளியிடப்பட்டது. * முகப்பு படம்: எனது கவிதைகளின் முதல் இரசிகன் நண்பர் கலைஞன் அமரர் பாலுமகேந்திரா எடுத்த படம். எடுத்த வருடம் 2007 ஆக இருக்கக்கூடும்.
-
நன்றி கிருபன். நம்மவர்கள் இன்னமும் கண்டுகொள்ளத் தயங்கும் மலையக தமிழர் பற்றிய செய்திக்கு நன்றி. தொடர்ந்து மலையகத் தமிழர்கள். கிழக்கு மாகாண தமிழர்கள் தமிழ்பேசும் முஸ்லிம்கள் பற்றிய சேதிகளை ஆய்வுரைகளை தேடி வெளியிடுங்கள்.
- 1 reply
-
- 1
-
-
poet started following முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு
-
முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு
poet replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
முள்ளிவாய்காலில் சர்வதேச பிரிவினர் ஆவணங்களை புதைத்ததாக கேழ்விப்பட்டேன். கப்பல் வரவில்லை. ஆனால் கஸ்றோவைவிட முக்கியமான பொறுப்பில் இருந்த பொட்டம்மான் இறுதித் தருணத்தில் ஆவணங்கள் தொடர்பாக இராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாராம். அவர், போரில் தப்பிய போராளிகளின் ஆதரவாளர்களின் எதிர்காலம் பற்றிய மிகுந்த பொறுப்புணர்வுடன் தனது கட்டுப்பாடில் இருந்த ஏனைய அனைத்து ஆவணங்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும் கேழ்விப்பட்டேன். போர் முடிந்ததுமே சில தொகுதி ஆவண புதையல்களை இராணுவம் கைபற்றியது. எஞ்சியவற்றுள் சில இப்ப கைபற்றபட்டிருக்கலாம். 2014ல் நான் கைது செய்யப்பட்டபோது பயங்கரவாதத் தடைப்பிர் கையில் புதைத்த தரப்பினர் என்னை எதிரியாக சித்தரித்த பதிவுகள் வெளிநாட்டில் இருந்துவந்த அத்தகைய சிடிக்கள் என்பவையே கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். கைப்பற்றப்பட்ட புதிய ஆவணங்களில் ஆசியா மற்றும் மேற்க்குநாட்டு கிளைகளின் வர்த்தகர்கள் பிரமுகர்களுடனான கொடுக்கல் வாங்கல் கணக்கு வளக்குகள் செயற்பாடுகள் பற்றிய சில ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு. -
மகிழ்ச்சி தோழரே. ஏழை என்னிடம் இருப்பது நினைவுகள் மட்டும்தான்.
-
வாழ ஆசை LUST FOR LIFE * பதின்ம வயசில் சாதி ஒருக்குதலுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதால் சின்ன வயசிலேயே ஆயுத தாக்குதல் அபாயமும் உயிர்காக்கும் அதிஸ்ட்டமும் என்னை தொடர ஆரம்பித்துவிட்டது. உயர் சாதிக் கொடுமை எதிர்ப்பினால் வீட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டேன். அதனால் அப்பா நெடும்பயணம் செல்லும் சமயங்களில்தான் எங்கள் வடகாட்டு பண்ணைவீட்டில் தங்குவேன். 1971 சிங்கள இளைஞர்களின் கிளற்ச்சியின் ஓராண்டு நிறைவு நாளில் பொலிசாருக்கு விசேட அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி 1972 ஏப்பிரல் 4 நள்ளிரவு என்னை சுட பொலிசார் என் வீட்டுக்குள் பாய்ந்தனர். அதிஸ்ட்டவசமாக அந்த இரவில் விவசாய கிழற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் அமரிக்க பத்திரிகையாளர் ஒருவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். அதனால் எனக்கு வாய்திறக்க சந்தர்ப்பம் கிடைத்தது. “இங்ஸ்ஸ்பெக்டர் நான் இலகையன் தமிழன். எங்களை நீ நாய்போல சுடலாம். இவர் அமரிக்க பத்திரிகையாளர். அவருக்கு mechine gun நீட்டுகிறாய்,. நீ அவரை சுடமுடியாது” என கர்ச்சித்தேன். யந்திர துப்பாக்கியை நீட்டிய இங்ஸ்பெக்டரின் கை நடுங்கியது. . இப்படி வாழ்நாள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத அதிஸ்ட்டம் என்னை காப்பாற்றியபடி தொடருகிறது. 2014ல் அம்மாவின் சமாதியை தரிசிக்க இலங்கை சென்றேன். தமிழ் சிங்கள் பத்திரிகைச் சந்திப்புகளில் அரசை காரசாரமாக விமர்சித்தேன். கோத்தபாய அவர்கள் என்னை இரகசியமாக கைது செய்ய உத்தரவிட்டார். அதனால் இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மாவின் சமாதிக்கு நான் சென்ற வழியில் இருந்த காட்டுக்குள் மறைந்திருந்தார்கள். கார் காட்டுக்குள் நுழைந்த போது காரைத் திருப்பு என சொன்னேன். நேரமாகிவிட்டது என மறுத்த சாரதியிடம் “அம்மாவிம் வாழ்நாள் வேண்டுகோளான வன்னிவிழாங்குழம் அம்மன் கோவிலுக்கு விளக்கு வைக்க வேண்டும் திருப்பு” என கத்தினேன். அதனால் என்னை இரகசியமாக கைது செய்யும் வாய்ப்பை இராணுவம் இழந்தது. துரத்தி வந்த இராணுவம் எங்களை கோவிலுக்குமுன் மடக்கியது. மக்கள் கூடட்டும் என்பதால் இராணுவத்துடன் கர்ச்சித்து வாய்ச் சண்டை போட்டேன். எதிர்பார்த்தபடியே வீட்டு வேலிகளுள் மக்கள் கூடிவிட்டார்கள். வன்னிவிளான்குழத்திலிருந்து நோர்வே சுந்தரலிங்கம் லண்டன் பத்திரிகையாளர் குருபரன் போன்றோருக்கு கைபேசி சேதிகள் போனது. (வாற்ஸப் செயலிக்கு நன்றி.) இராணுவ தலைமையகத்தில் இருந்து என்ன நடக்குதுCNN, BBC டிவி யெல்லாம் வரிச்சேதி ஓடுது என பதட்டத்துடன் வாக்கி ரோக்கியில் கத்தினார்கள். இப்படித்தான் இப்படித்தான் லட்சக் கணக்கான உறவுகள் கொல்லபட்ட மண்ணில் நான் உயிர் தப்பி வாழ்கிறேன். இயக்கத் தலைவர் ஒருவர் “ஜெயபாலனை சுடுவதானால் வாய்திறக்குமுன் சுட்டால்தான் உண்டு” என கிண்டலாக சொல்வாராம். உண்மையாக இருக்கலாம். வாழுமாசையால் கவிதை என் வாழ்வின் கவிதையாகும். * வாழும் ஆசையால் - வ.ஐ.ச.ஜெயபாலன். ---- ஒளியும் இருளும் உருள உருள காலத்தேரின் கூரைப் பல்லியாய் தசாப்தம் எழு தாண்டிவிட்டேன். விடிந்தால் தாமரை பொழுதுபட்டால் முல்லையென வழியெங்கும் தேன்சிந்துமே வாழ்வு. இதுதான் என் ஞானம் தோழதோழியரே. இது முது கடலின் இளமைமறாத அலை. வாழும் ஆசையால் கல் வெடிப்பிலும் வேரோடி மலர்கிறதே சிறு புல். * 1965ல் ஒருநாள். யாழ்ப்பாணத்து ராசவீதிகள் அதிர ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என கர்சனையோடு செங்கொடிகள் உயர்ந்தது. அதுவரை கண்டது கல்யாண ஊர்வலம் மட்டுமே. வியர்வையும் மண்ணும் கந்தலுமாக ”நீயும் வாழ் எம்மையும் வாழவிடு” என மண் தோய்ந்த மேனியராய் மானுடம் எழுந்ததை அன்றுதான் கண்டேன். சூரியனும் நிலவும் மறுக்கப்பட்ட இருவேறு உலகமா? பதின்மவயசில் என் ஆன்மா அதிர்ந்தது. * அந்த அறியப்படாத யாழ்ப்பாணத்தில் மாணவப் பருவத்தை பறிகொடுத்து உயிர்த்த செம்மண் சேற்றுச் சிலைகளாய் கழை பறிக்கும் சிறார்களைக் கண்டு நானும் கொதித்தேன். சாதிவெறி பிடித்த தமிழருக்கெதிராய் மீசை முளைக்கயில் ஆயுதம் தாங்கினேன். * பின்னர் ஓர் இரவில் எம் விடுதலைக் கனவின் கருவறையான யாழ் நூலகத்தை சிங்கள பெளத்த வெறிக்கூச்சலுடன் படைகள் எரித்தன. கவிஞன் ஒருவன் “புத்தகத்தோடு புத்தகமாக புத்தனை எரித்தனர்” என்று வெகுண்டான். * கோடைக் காற்று கோடான கோடி கனலும் புத்தக கங்குகளோடு ”விரித்த கருங்குழலும் கையில் சிலம்பும் கண்ணீருமாய்” மதுரையை உலுப்பிய கண்ணகியாக யாழ்பாணத்து தெருக்களில் அலைந்தது. உளதோ உளதோ ”அல்லற்பட்டு ஆற்றாது அழுத” மக்களின் ஓர்மத்தை விடவுமோர் வலிய ஆயுதம் * கொடுங்கோல் வீழ்திய உலகப் புரட்சிகள் நூலகங்களிலிருந்தே ஆரம்பமானது. நாமோ நூலகச் சாம்பர் மேட்டில் இருந்து விடுதலைக்காக ஆயுதம் தாங்கினோம். * மீண்டும் மீண்டும் சர்வதேச மாநுட அரங்கில் சரிநிகராக வாழும் ஆசையால்தானே ஆயுதம் தாங்கினோம். ஆலயம் மசூதி மட்டுமன்றி தேயிலை மலைகளில் எல்லைப் புறத்து விகாரையில்கூட எல்லோரும் இன்புற்றிருக்கவே எழுந்தோம். * இபடித்தான் தோழ தோழியரே கல்லில் வளர்ந்த புல் பூத்ததுபோல என் காதலும் வீரமும் கவிதையானது. 2021.
-
வீரப்பனும் புலிகளும், இயக்குனர் கெளதமன் சொல்கிறார்.
poet replied to valavan's topic in தமிழகச் செய்திகள்
வீரப்பனின் காடுபற்றிய அறிவுவு நாட்டுக்குத் தேவை என்கிற குரல் வீரப்பனுக்கு நேரெதிரான கர்நாடக சூழலியலாளர்களிடமிருந்தும் வன படப்பிடிபாளர்களிடமிருந்தும் பலமாக எழுந்தது. என் நினைவுக்கு எட்டியவரை வீரப்பனும் புலிகளும் தொலைத்தொடர்பு வைத்திருந்ததாக இந்திய உளவுத் துறை ஒருபோதும் அறிவிக்கவில்லை. வீரப்பனுக்கு பொறிவைக்க தமிழக கர்நாடக உளவுத்துறைகள் கட்டுக் கதைகளை உருவாக்கினார்கள். வன்னித் தலமை வீரப்பனை வரவேற்பதான சேதிகளை போலியாக இட்டுக்கட்டி பயன்படுத்தினாகள். சீனா பேச்சுக்கு அழைத்தபோதே மறுத்த புலிகள் இந்தியாவுக்கு பின்வரும் சேதியை அனுப்பினார்கள். “இந்தியா எங்கள் கப்பல்களை தாக்க இலங்கைக்கு உதவுகிறது. இந்தியா இலங்கைக்கு எங்களை தக்கி அழிக்க தகவலும் தாய்க் கப்பலும் வளங்குகிறது. அதற்க்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது. இருந்தும் நாம் இந்திய நட்ப்பை வேண்டி சீனாவின் சிங்கபூர் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்தோம்” எனஇந்தியாவுக்கு புலிகள் இரகசியமாக அறிவித்தார்கள். சீன உறவையே நிராகரித்த பின்னணியில் வீரப்பன் விடயத்தில் இந்தியாவுடன் பகைவளர்க்க ஒருபோதும் முற்பட்டிருக்க மாட்டார்கள். 1995 - 2006 காலக்கட்டத்தில் புலிகளுடனான உரையாடல்களில் இந்திய தரப்பு ஒருபோதும் வீரப்பன் தொடர்பாக குறிபிடவோ குற்றம் சாட்டவோ இல்லை. வன்னிக்கு ரூர் போய்வந்த புலம்பெயர்ந்த தமிழர்களுள் ஒரு சிலர் தமிழக பிரபலங்களோடு தாம் புலிகளுக்கு நெருக்கமென அறிமுகம் செய்து மிகையாக உரையாடி இருக்கிறார்கள். அதுதான் புதிது புதிதாக கிழம்பும் கதைகளின் பின்னணி என நினைக்கிறேன் .