Jump to content

poet

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2116
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by poet

  1. வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளை அவன் மீண்டும் முறிக்கும் போது அவனை அவர்கள் மீண்டும் அரசனாக்குவர்
  2. இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் இனவாதமும். IBC TAMIL INTERVIEW PART 1
  3. ஐ.பி.சி பேட்டி April, 6 ,2022 பகுதி 2 நான் நினைக்கிறேன் அமரிக்கா இலங்கையின் அன்னிய செலாவணி நெருக்கடியில் ரணிலை அரசுக்குள் கொண்டுவந்து சர்வதேச நிதி நிறுவனத்தினூடாக தீர்வுகாண தீர்மானித்துவிட்டது.
  4. இது கவிதை. கோடையிலே மர நிழலும்கோபத்திலே காதலியும்ஆறுதலைத் தரவில்லையேல்யார் தருவார் என்னுயிரே
  5. என்றும் நான் போற்றும் மாவீரன் பால்ராஜ் அவர்கள் நினைவை துதித்து அஞ்சலிகள்
  6. நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்
  7. அன்புக்குரிய ஜூட், புங்கைஊரான், வல்கனோ, என்மீதான உண்மையான குற்றச்சாட்டு தமிழ் முஸ்லிம்களை இணைத்து போராடும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டிருக்கிறேன் என்கிற அவர்களின் ஊகம் சார்ந்தது. இன்னொருபுறம் எங்கள் பண்ணையை அபகரிக்கும் முயற்சியில் சில பெரும் அரசாங்க புள்ளிகள் ஈடுபட்டிருப்பது கிழைக் கதை. அரசு கண்ணுக்குத் தெரியும் ஒடுக்குதலைக் கைவிட்டு கண்ணுக்கு புலனாகாத ஒடுக்குதலை அதிகரித்திருப்பது தொடர்பான என் ஆய்வுக் கருத்துக்கள். என்னை அவர்கள் உடல்ரீதியாகத் தாக்கவில்லை. ஆனால் சிறைக்குள் முடக்கி வைக்கப் பார்த்தார்கள். அதிஸ்ட்டவசமாமெரிக் சோல்கைம் அரசை எச்சரித்ததும் ரவ்கக்கீம் அரசைன் நடவடிக்கையை எதிர்த்ததும் பசீர் சேகுதாவுத் அரசிடம் என்விடுதலைக்காக பேசியதும் நோர்வீஜிய அரசின் உறுதியான நடவடிக்கைகளும் உலக தமிழர்களது எதிர்ப்பும் சிங்கள தோழர்களது எதிர்ப்பும் நான் சிறைப் படாமல் தப்பிக்க உதவியது. நல்லவேளையாக சிங்கள பத்திரீகைகள் விசம் கக்க ஆரம்பிக்கும்போது நான் வெளியேறியிருந்தேன். . தமதமாகி இருந்தால் சிறை நிரந்தரமாகி இருக்கும். எனக்காக குரல்கொடுத்த எல்லோருக்கும் எனது நன்றிகள். நான் மாறப்போவதில்லை.நான் எனக்குத் தோன்றுவதை செய்ய ஒருபோதும் அஞ்சியதில்லை. எனக்கு என்னுடைய 19 நாள் இலங்கை வாசத்தில் எனக்குத் தேவையான ஆய்வுத் தகவல்களில் சிலவற்றை கிரகிக்கக்கூடியதாக இருந்தது. மீண்டும் போய் என் ஆய்வுகளை பூர்த்தியாக்க வேண்டும் என்கிற மனநிலை தொடரும். யாழ்க்களத்தில் அதிக நேரத்தை செலவுசெய்துவிட்டேன். அன்புடன் விடை பெறுகிறேன்.
  8. தமிழ் சூரியன் உங்களுக்கு என் நன்றி. என்னை அறிந்த ஓரிருவராவது இருங்கு இருக்கிறீர்கள் என்பது நிம்மதி. புலிகளுக்கு எழுதிய கையால் இங்கு காகிதப் புலிகளுக்கு எழுத நேர்ந்ததுதான் என் தலைவிதி. துளசி நீங்களும் நாரதரும் விடப்பிடியாக திரும்ப திரும்ப வலியுறுத்துவதால் நம்முள் யாருக்கோ உளவியல் பிரச்சினை இருக்கலாம். என தெரிகிறது. நம்முள் யார் தவறோ அவர்களை தர்மம் தண்டிக்கட்டும்.
  9. நிழலி களநிலமை தெரியாமல் பேசுகிறீங்க. குடிவரவு குற்றச்சாட்டில் கைதாகும் வெளிநாட்டவர்களிடம் கைபேசியை பறிப்பதில்லை. கைபேசியை அனுமதித்து ஒட்டுக்கேட்பதன்மூலம்தான் அவர்கள் தகவல் சேகரிக்கிறார்கள். ஆனால் நாம் பேசும்போது அவர்கள் விரும்பினால் தொடர்பு இருக்கும். விரும்பாவிட்டால் துண்டிக்கப் படும். அப்படி ஒருமுறை தொடர்பு துண்டிக்கப் பட்டதால் என்னுடன் பேசிக்கொண்டிருந்த அருள் எழிலன் துடித்துப்போனதை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். நிழலி, உங்கள் அனுதாபத்தை கோருகிற அளவுக்கு நான் ஒன்றும் அத்தனை அற்பமில்லை.முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் எனக்கு அனுதாபம் இருப்பதாக அரசு நினைப்பதுதான் எனக்கு பிரச்சினையாயிற்று. உங்கள் அனுதாபத்தை பத்திரப் படுத்துங்கள். அது உங்களுக்குத் தேவைப்படலாம்..
  10. துளசி யாருக்கு உளவியல் பிரச்சினை என்கிற ஆய்வுக்குமுன்னம் நீங்கள் எனக்கெதிராக எழுதிய எல்லாவற்றையும் திரும்ப ஒருமுறை வாசித்துப் பாருங்கள். தப்பிவந்த களை ஆறுமுன்னம் என்மீது நீங்கள் சுமத்திய பழிகளுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு என் எழுத்தில் ஆதாரம் இருக்கா என்பதையும் ஆராய்ந்துபாருங்கள். நீங்கள் எழுதியவை ஆதரமுள்ள உண்மையென்றால் விசர் எனக்கு வரட்டுக்கும்.
  11. நண்பார் விசுக்கு, தூயவன் தெரிந்து சொன்னாரா தெரியாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை விசாரித்தவர்கள் சொன்னதையே தூயவனும் சொல்கிறார்..
  12. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன்.- நாரதர் நாரதர் நான் எங்கே பல்துறை விற்பனன் என்று சொன்னேன? ஆதாரத்தை வெட்டி ஒட்டுங்கள். இப்படி மற்றவர் நினைப்பதை சொல்லமுடியும் என நினைப்பது ஒரு உளவியல் பிரச்சினையல்லவா நண்பரே. வீடுவந்து 72 மணிதியாலங்கள்தான் ஆகிறது அதற்குள்ளேயே ஏன் இப்படி? நாரதர் இராசவன்னியன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி, நீங்கள் களத்தில் வாழும் பல்லாய்ரக்கணக்கான முஸ்லிம் தமிழ் உறவுகளை கேட்டுப்பாருங்கள். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விரும்பும் கோரும் எனது ஆய்வுப் பணிகளிலும் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கான பணிகளிலும் நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழரையும் முஸ்லிம்களையும் சேர்த்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறது. சிங்களப் பத்திரிகைகளும் அதனையே சொல்கின்றன. நீங்கள் இப்படி சொல்கிறீங்க. அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை
  13. ஆன்புக்குரிய நிழலி, இது சிலருக்கு பூனை எலி விழையாட்டாக இருக்கு. ஆனால் எனக்கோ உயிர் மானபிரச்சினை. பிரச்சினை. பொத்தாம் பொதுவாக பேசாமல் உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை என் அறிக்கையில் இருந்து வெட்டி ஒட்டுங்கள். நிழலி, நான் அறிக்கை என எழுதாமல் முதல் அறிக்கை என்று எழுதியதன் பொருளென்ன? என் தோழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தியபின் 2, அறிக்கை எழுதுவேன் என சொன்னதுகூட உங்களுக்கு புரியவில்லையா? நிழலி, ஜெயபாலன் ஏன் தயங்கவேண்டும் களத்தில் அவருக்கு தகவல்கள் தந்தவர்கள் அதன்பின்னர் புலம் பெயர்ந்திருப்பார்கள்தானே. தயங்க வேன்டியதில்லை என நினைதீர்களா?. ஆனால் அவர்கள் இன்னும் புலம்பெயராமல் ஊரில் இலங்கை சர்வாதிகாரத்தின் பிடிக்குள் இருக்கிறார்கள். அதனால்தான் என் அறிக்கையை பிரித்து ,முதல் அறிக்கையை மட்டும் வெளியிட்டேன். தயவு செய்து உங்கள் பக்கம் தவறிருந்தால் மனச்சாட்சியுடன் தவறை என்று ஒத்துக்கொள்ளுங்கள். தவறில்லையெனில் தொடர்ந்தும் அப்படியே எழுதுங்கள். நான் உயிரோடிருப்பது முஸ்லிம் மக்களதும் எரிக் சோல்கைமினதும் ஆதரவால் நிகழ்ந்தது. அது என் தவறல்ல என்பதையாவது நம்புங்கள் நிழலி. தன்நெஞ்சறிவது பொய்யற்க்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
  14. இப்ப கோபமில்லை தூயவன், தமிழ் தேசிய முகம்காட்டும் ஒருவர் என்பது தமிழ்தேசியவாதிபோல வேடம்போடும் ஒருவர் என்றுபொருள். தமிழ் தேசியவாதி என்று பொருளில்லை. நீங்கள் அர்த்தம் புரியாமல் கோபப்பட்டிருந்தால் எழுதியிருந்தால் பிரச்சினை இல்லை. விட்டுவிடுவோம். ஆனால் துளசி நிழலிபோன்ற சிலரின் எழுத்துக்கள் பனையில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிரித்ததுபோல இருக்கு. .எனக்கு இது உயிர்வதை.
  15. தூயவன், மனச்சாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள், இது எனக்கு உயிர்வதை. (சிங்களத்தை அண்டிப்பிளைப்பவர்களைத் தமிழ்த்தேசியவாதிகள் என சுத்த வேண்டாம் ஐயா) இது குறிவைப்பில்லையா? நான் எங்கே தேசியவாதிகள் என்றேன் எங்கே சுத்தினேன்? தமிழ் தேசிய முகம் உள்ளவர் தேனியில் இருப்பதாக எங்கே சொன்னேன். தமிழ் தேசிய முகம் காட்டும் என்கிற நான் எழுத அதை தமிழ் தேசிய முகமுள்ளவர் எனதிரித்து என்னை அரசை அண்டிப்பிழைப்பவர்களை தேசியவாதியென சுத்துகிறவனாக நீங்கள் எழுதியது தப்பா சரியா? தப்பெனில் மனச்சாட்ச்சி இருந்தால் மன்னிப்புக் கேழுங்கள். சரி எனில் வாதம் வேண்டாம் என்னை மனித்தாதாக ஒரு வார்த்தை எழுதுங்கள்.
  16. துளசி. எது நான் அரசுக்கு வளங்கிய நற் சான்று? சான்றை வெட்டி ஒட்டுங்கள்? எங்கே நான் கீரோபோல காட்டுகிறேன்? அவதூறு பேசாமல். சான்றை வெட்டி ஒட்டுங்கள். என் நண்பர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்து என் சாவை கொண்டாட முடியவில்லையே என அங்கலாய்க்கவில்லை. அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நான் தேடிய தகவல்களை தந்தவர்கள். வீரம்பேசி நான் கீரோவாகி அவர்களை மாட்டிவிடுவதில்லை. அவர்கள் உயிர்ப்பாதுகாப்புத்தான் எனக்கு விடுதலை செயல்பாடு. உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் முன்வையுங்கள் பதிலளிக்கிறேன். தனக்கு வரும்போதுதான் வலிதெரியும் என்பார்கள். என் உறவுகள் இன்னும் வலியில் இருந்து மீழவில்லை.மனச்சாட்சியுடன் யோசியுங்கள். என்றாவது ஒருநாள் உங்களுக்கும் அது புரியும்
  17. நண்பா, எனக்காக முஸ்லிம்களும் எரிக்சொல்கைமும் களத்தில் இறங்குவார்கள் என நினைக்கவில்லை. உயிர் காப்பாற்றப்பட்டது தப்பானால் அது அவர்கள் செய்த தப்புத்தான், நான் மீண்டும் 2014ல் மீன்பிடிப் படகில் செல்லக்கூடும். அப்போது நான் கொல்லப்பட்டால் உங்கள் இடைவெளி அகன்றுவிடுமல்லவா? அதுவரை காத்திருப்போம்
  18. ஜெ.. திவயினவில் முழுப் பக்கத்தில் உங்கள் பற்றி ஒரு கட்டுரை வந்தது. புலம்பெயர்ந்தவர்களும் தமிழகமும் அனுப்பிய புலி என்கிற மாதிரித் தலைப்பு இருந்தது - தீபசெல்வன் இது எப்படி இருக்கு நிழலி ? இது எப்படி இருக்கு துளசி?, இது எப்படி இருக்கு தூயவன்? தியவினவை பாராட்டுங்கள். ஏனெனில் நீங்களும் தியவின காரனும் எதிர் எதிர் நிலையில் நின்றுகொண்டு என்னையே குறிவைக்கிறீங்க. நான் கொல்லப்படவில்லை என்பதுதான் இருசாராருக்கும் கவலையாய் இருக்கு.
  19. தூயவனுக்கு என்னாயிற்று? நான் எழுதியது இதுதான் '''தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார்.''. முகம் காட்டும் என்கிற சொல்லுக்கு முகமுள்ளவர் என்கிற கருத்தில்லை. துளசி, நான் என்னைத் தேடிவந்த அரசியல் பதவிகளை எல்லாம் வாழ்நாள் முழுக்க தூக்கி எறிந்தவன்.உயிருடன் திரும்பி வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையென தெரிகிறது. நான் கொல்லப்பட்டிருந்தால் சிலர் ஒரு பெக் விஸ்க்கி அடித்துவிட்டு என்னை தியாகி ஆக்கி இருப்பார்கள். இப்ப திட்டுகிறார்கள். என்ன செய்வது? குளோபல் தமிழ் செய்தியும் முஸ்லிம் மக்களும் எரிக் சொல்கைமும் இப்படி எனது விடுதலைக்கு உழைப்பார்கள் என்று எனக்கே தெரியாது. நான் சாகாமல் திரும்பிவந்தமைக்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் .
  20. அன்புக்குரிய நிழலி, நீங்கள் தசாப்தங்களாக களநிலமைகளை அறிந்துகொள்ளாத நிலையில் களநிலைபற்றி நீங்கள் விரும்பியவற்றை மட்டுமே வாசிக்கிற நிலையில் பேசும் அதிதீவிர தேசியவாதம்பற்றி சற்று சிந்திக்க வேண்டுகிறேன். அதிதீவிரவாதிகளும் எதிரிகளும் எதிர் நிலையில் இருந்து ஒன்றையே சொல்வார்கள் எதிர் எதிர் திசையில் இருந்தாலும் வரலாற்றை ஒரே திசையில் தள்ளுவார்கள் என்து தத்துவம். என்னைப்பற்றி எதிரி சார்ப்பு சிங்களபத்திரீகை எதை எழுதுகிறதோ அதைத்தான் நீங்களும் எழுதுகிறீர்கள். அதிதீவிரவாதிகள் எதிரி விரும்புவதையே செய்து அழிவைத்தேடிக்கொள்வார்கள் என்பதை லெனின் அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்திருக்கிறார் "Left-Wing" Communism: An Infantile Disorder இடது (அதிதீவிர) பொதூடமைவாதம் ஒரு சிறுபிள்ளை நோய் என்கிறகட்டுரையை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அதி தீவிரவாத தமிழ்தேசிய வாதிகள் கட்டாயம் வாசிக்கவேண்டும். மக்களோடு தொடர்பில்லாத புரட்சிக்காரர்களும் தேசிய வாதிகளும் அதிதீவிர தேசியவாதம் என்கிற கற்பனைவாத சிறுபிள்ளை நோய்க்கு ஆளாகும் ஆபத்துள்ளது. மக்களோடு தொடர்புபடுகிறது தவிர்க்க முடியாத தருணங்களில் ஆபத்தை மேற்கொண்டும் மக்களை சந்திப்பது அவசியமானதுதான்லிதனையே நான் செய்தேன். மக்களோடு தொடர்பில்லாத புலம் பெயர் வாழ்வில் தரவுகள் கள ஆய்வுசாராத கொள்கைசார்ந்த கற்பனைகளாகிவிடுகின்றது. இதனை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். அதிதீவிரவாதியும் எதிரியும் எதிர் நிலையில்க் செயல்பட்டாலும் ஒன்றையே செய்வார்கள் என்கிற தத்துவத்துக்கு சரியான உதாரணம் சென்ற கடந்த திருமலை நாடாளுமன்றடத் தேர்தலாகும். தமிழரிடம் இருந்து திருமலையைப் பறிப்பதே எதிரியின் பிரதான குறிக்கோளாக இருந்தது. ஏறக்குறைய 50 ஆயிரம் திருமலைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் சூழலில் இது எதிரிகளுக்குச் சாத்தியமான இலக்குத்தான். மக்களோடு தொடர்பில்லாத அதிதீவிரவாதிகளின் ஆதரவோடு திரு கஜேந்திரகுமார் திருகோணமலையில் சம்பந்தரை தோற்க்கடிக்க வேட்பாளரை நிறுத்தினார்கள். மகிந்த ராசபக்சவின் ஒரே கனவு சம்பந்தரை தோற்க்கடிப்பதும் திருகோணமலையை தமிழரிடமிருந்து கைப்பற்றுவதும்தான். அதிஸ்ட்டவசமாக சம்பந்தர் தப்பிப் பிழைத்துவிட்டார். அதனால் சர்வதேச நாடுகள் 1 தமிழர் பிரச்சினை வடமாகாணப் பிரச்சினை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளும் ஆபத்தும் 2 போரினால் பாதிக்கப்பட்ட தமிழரை அணுகும் ஆபத்தும் தவிர்க்கப்பட்டது. ஆனால் திருமலையினல் தமிழருக்கிருந்த இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஒன்றாக்கியதுதான் அதி தீவிர தமிழ் தேசியவாதிகளின் பங்களிப்பாக இருந்தது. ஆனாலும் தமிழர்கள் சிறுபிள்ளைக் கோளாறுள்ள அதிதீவிர வாதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத்தான் நம் முன்னோர் சிறுபிள்ளை வேளான்மை விழைந்தும் வீடுவந்து சேராது என்பார்கள். நான் தப்பியதற்க்கு முகீய காரனங்கள். 1.என் கைது சம்பவம் இடம்பெற்ற பொழுதே வன்னிவிழான்குளத்தில் இருந்து சுந்தரலிங்கம் கனபதிப்பிள்ளைக்கு (நோர்வே) தகவல்பெகிடைத்ததும் அவர் குளோபல் தமிழ் இணைய நடராசா குருபரனுக்கு உடன் தகவல்தந்ததும், குருபரன் இதயசந்திரன் போன்றவர்கள் அதே கணமே என்கைதை உலகளாவிய செய்தியாக்கியதும். 2. முஸ்லிம் மக்களின் உறுதியான ஆதரவு. தோழர்கள் ரவ் கக்கீமும் பசீர் சேகுதாவித்தும் அரசுக்கு கொடுத்த அழுத்தம். 3.தோழன் எரிக் சோல்கைம் இலங்கை அரசை மிரட்டும் தோரணையில் என் விடயத்த்யைக் கையாண்டதும் நோர்வீஜிய ஐரோப்பிய அரசுகளை செயல்பட வைத்ததும். எனக்காக குரல்கொடுத்த தமிழக புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன். நான் சிறைப் படுத்தப்படுவதை எதிர்பார்த்திருந்து அது நடக்காமல் நான் நாடுகடத்தப் படுவது உறுதியானபின் என் விடுதலைக்காக சிலர் குரல்கொடுத்தார்கள். தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார். நிழலிபோன்றவர்கள் கோபபடுவதைத் தவிர்த்து மகிந்த ஆதரவுச் சிங்களப் பத்திரிகைகள் எழுதுவதுபோல எழுதுவதைத் தவிர்த்து சிந்திக்கவேண்டும் என பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்.
  21. யாழ்க்கள நண்பர்களுக்கு நன்றி. நான் என் அனுபவங்களையும் வடகிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் நிலைபற்றி ஆராய்ந்த விடயங்களையும் புத்தகமாக எழுத வேண்டியுள்ளது அதனால் இனி அடிக்கடி யாழ்க்களம் வாய்ப்பிருக்காது. நான் நிலமையை தெரிந்துகொண்டே இலங்கை சென்றேன். புறப்படுவதற்க்கு 16 மணித்தியாலயங்களுக்குமுன்னம் மனைவிக்கு சொன்னபோது வாய்த் தர்க்கம் ஏற்ப்பட்டது.இதற்க்குமுன் பதினாறு பதினேழுதடவை கொலைமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது யாரும்வரவில்லை நான்தான் தப்பி வந்தேன் எனக்கு புத்தி சொல்லாதே என மனைவியைக் கடிந்துகொண்டேன். என் மனைவி சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவள். எனக்கு மரண ஆபத்துள்ள காலம் என நண்பன் ஆய்வறிஞன் ரகுபதி வேறு கூறியிருந்தான். என் மனைவியின் துயரத்தை நான் புரிந்துகொண்டேன். நான் எடுத்த இடர் risk நியாயமானதுதான். இப்போ வடகிழக்கு மாகாணம் பற்றிய என் சிந்தனைகளுக்கு மிக மிக அவசியமான தரவுகள் பல எனக்கு கிடைதுள்ளது.ஒரு ஆய்வாளனாக தரவுகள் இல்லாமல் உயிர் வாழ்ந்து என்னத்தை சாதித்துவிடப்போகிறேன்? சாத்தியப் படும்போது தரவுகளுக்காக மீண்டும் போகவே செய்வேன். பயணத்தின்முன் எனது முகநூலில் பின்வருமாறு எழுதினேன். '' இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.'' என்னுடனான கடைசி சந்திப்பை தமிழக நண்பன் Don Ashok பின்வருமாறு பதிவு செய்திருக்கிறான். ”திடீரென இலங்கை போகும் ஆசை ஏற்பட்டுள்ளது. என்ன விதியோ தெரியவில்லை”. ''இதுதான் நண்பர் கவிஞர் Jaya Palan தன் தாயின் நினைவு நாளை முன்னிட்டு அவர் சமாதியில் அஞ்சலி செலுத்த இலங்கை செல்வதற்கு முன் என்னிடம் சொன்னது. கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களின் முடிவுகளை நண்பர்களோ, காவல் துறையோ, சிங்கள அரசோ மாற்றிவிட முடியாது. அவர் கவிதைகள் சொல்வதைப் போல அவர் எதற்கும் கட்டுப்படாத, எதற்குள்ளும் அடைக்கப்பட முடியாத ஒருநாடோடிப் பறவை.'' அம்மாவின் சமாதி அமைந்துள்ள எங்கள் பண்ணை நிலத்தை இலங்கை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேறு அரசியல் பிரபலங்கள் அபகரிக்க திட்டமுள்ளதும் இங்கு குறிப்பிடப் படவேண்டிய கிழைக் கதை. எனது முகநூல் அடையாளக் குறி Jaya Palan. என் தோழ தோழியர்களுக்காக அங்கு தகவல் புதிப்பிப்பேன். யாழ்க்களத்தில் என் நோவுக்கு ஒத்தட வார்த்தைகளை எழுதியவர்களுக்கு என் நன்றிகள். தாக்கியவர்கள்மீது கோபமில்லை. நன்றி.
  22. செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். அம்மாவின் சமாதியை பார்க்காமல் உயிர்வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போகிறேன் என்கிற கருத்தை முகநூலில் பதிவுசெய்துவிட்டே சென்றேன்.16 வயசில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்தே பல தடவைக்குமேல் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறேன்.1972 ஏப்பிரல் 2ம்திகதி இரவு அதிஸ்ட்டவசமாக ஒரு அமரிக்க தத்துவஞானி என்வீட்டுக்கு வந்திருந்ததால் பொலிஸ் என்கவுண்டரில் இருந்து தப்பினேன். எனினும் எல்லாத் தடவையும் அதிஸ்ட்டம் என் பக்கத்தில் இருக்காது என்பதையும் அறிவேன். நான் எவ்வழியிலாவது விரைவில் மீண்டும் இலங்கைதீவுக்குச் செல்வேன். அம்மாவின் சமாதிக்கும் மலர் அஞ்சலி செய்வேன்.. என்னை வராதே என்று சொல்ல ராஜப்கச்ச யார்? என் அம்மா இறந்தபோது நான் எழுதிய கவிதை. வரமுடியவில்லை அம்மா தீயினை முந்தி உந்தன் திரு உடலில் முத்தமிட.... சிங்கமும் நரிகளும் பதுங்கும் நீர்ச்சுனையின் வழியில் உயிர்வற்றும் மானாக அஞ்சினேன் அம்மா அரக்கர்களின் மண்மிதிக்க சென்னைச் சுவர்ப் பாலையிலே துடிக்கும் பல்லி வாலானேன் தோப்பாகும் கனவோடு நீ சுமந்த நறுங்கனிகளைத் தின்றதே ஈழத்தமிழன் விதி என்ற பேர் அறியா தேசத்துப் பறவை. துருவக்கரை ஒன்றில் அதன் பீயாய் விழுந்தேனே என் கனிகளைச் சுமந்தபடி இறால் பண்ணை நஞ்சில் நெய்தல் சிதைந்தழியும் சேதுக் கரையோரம் படகுகளும் இல்லை கண்ணீரால் உன்மீது எழுதாத கவிதைகளைக் காலத்தில் எழுதுகிறேன்...
  23. அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை. பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும். சிந்திக்கும்வேழையில் சிலசமயம் பக்கதில் நடப்பதே புலனாவதில்லை. சந்தித்தவேழையில் உங்களை அடையாளம்காண மறந்திருந்தால் மன்னிக்கவும்
  24. நவம், நான் இலங்கைக்கு சென்று அங்கேயே அடக்குமுறைக்கு எதிராக பேசியவன் என்பதைமட்டும் ஏனோ மறந்துவிடுகிறீர்கள். எனக்கு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.