Jump to content

Eelathirumagan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    550
  • Joined

  • Last visited

About Eelathirumagan

  • Birthday March 2

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0
  • Yahoo
    eelathirumagan@yahoo.com

Profile Information

  • Gender
    Male
  • Location
    USA
  • Interests
    Engineering, Philosophy, Higher Mathematics, General Relativity and Nano Technology

Recent Profile Visitors

2394 profile views

Eelathirumagan's Achievements

Contributor

Contributor (5/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done

Recent Badges

46

Reputation

  1. பேஷ் பேஷ் ... ரொம்ப நன்னாருக்கே. :lol:
  2. நீதிமதி உங்கள் பதிவு எனது பழைய நினைவுகளை கிளறிவிட்டது. நானும் திரு. திருஞானசேகரம் அவர்களின் மாணவந்தான். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவர் எமது தமிழாசிரியராக டியூசன் வகுப்பு எடுக்க வந்திருந்தார். புத்தூரை பிறப்பிடமாக கொண்டவர். மிக நல்ல ஆசிரியர். ”புத்தெழில்” எனும் சஞ்சிகையை அவர் வெளியிட்டு வந்தார். வகுப்பு முதன்மாணவனை “மொனிட்டர்” என கூப்பிடாமல் “மோட்டர்” என்று கூப்பிடுவார். என் தமிழ்ப் பற்றுக்கு காரணமான இனிய நண்பர். அவரின் இறுதி ஊர்வலத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் மாணவர்களாகிய நாம் நடாத்தினோம். :(
  3. தெனாலியும் பிராம்மணர்களும்: மன்னர் கிருஷ்ணதேவராயரின் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபொது, தன் இறுதி மூச்சை விடுவதற்கு முன் தன் மகன் ராயரிடம் ஒரு மாங்கனி கேட்டார். சேடிகள் மாங்கனி வெட்டி எடுத்து வருவதற்குள் அவரின் உயிர் பிரிந்து விட்டது. ராயருக்கோ அடங்காத துன்பம். தாயின் ஆத்மா சாந்தியடையாதே என்று பெருங் கிலேசமடைந்தார். என்ன செய்வாது? தன் அரசவை பிராம்மணர்களை அழைத்து ஏதாவது வழி இருக்கிறதா என கேட்டு வைத்தார். பேராசைக்கார பிராம்மணர்களும் மிக்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென மகிழ்ந்து, "மன்னா!! ஒரு வெள்ளித் தட்டில் பசும்பொன்னால் செய்த இரட்டை மாங்கனிகளை வைத்து 108 பிராம்மணர்களுக்கு தானம் செய்தால் உங்கள் தாயார் ஆத்மா சாந்தியடையும்." என பெரிய பொய்யொன்றை வாய்கூசாமல் சொல்லிவைத்தார்கள். மன்னரும் சரியெனெ ஒப்புக் கொண்டு, 108 பிராம்மணர்களுக்கு பொன்னால் செய்த இரட்டை மாங்கனிகளும் வெள்ளித்தட்டும் தானமாக கொடுத்தார். இந்த வேடிக்கையை பார்த்த ராமன் மனம் மிக நொந்து, "இப்படி பகற்கொள்ளை அடிக்கிறார்களே. இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என மனதில் நினைத்துக்கொண்டு அரச சபை சென்றான். வழியில் கண்ட பிராம்மணர்களுக்கெல்லாம் "எனது தாயாரின் ஆத்மா சாந்தியடைய நானும் 108 பிராம்மணர்களுக்கு தானம் செய்ய போகிறேன். அவசியம் வரவேண்டும்" என அழைப்பு விடுத்தான். இந்த செய்தி பேராசைக்கார பிராம்மணரிடையே காட்டுத்தீயாக பரவியது. 108 பிராம்மணர்கள் ராமன் வீட்டில் சங்கற்பம் தரித்து உக்கார்ந்திருக்க, ராமன் அவர்கள் ஒவ்வொருவராக வந்து தானம் பெறுமாறு ஒரு இரகசிய அறைக்கு அழைத்துச் சென்றான். இருண்ட அந்த அறையில் ஒரு அடுப்பில் இரும்புக்கம்பி செக்கச் செவேல் என்று காய்ந்துகொண்டு இருந்தது. அதை எடுத்து பிராம்மணர்கள் கைகளிலும் கால்களிலும் சூடு வைத்து அடித்து துரத்திவிட்டான். சூடுவைத்த வெப்பு ரணமும், அடி உபாதையின் வலியும் தாங்கமாட்டாது "ஓவென" புலம்பியபடி மன்னர் ராயரின் அரண்மனை நோக்கி ஓட்டமெடுத்தனர் பிராம்மணர். வழக்கை விசாரித்த ராயர், "அடே ராமா!! ஏன் இந்த கொடிய பாதக செயலை செய்தாய்?" என்று கேட்க, ராமன் மிகவும் பவ்யமாக "மன்னா!! எனது தாயார் வலிப்பு நோயால் கடும் அவஸ்த்தைப்பட்டார். நோயில் இருந்து விடுபடுவதற்காக வைத்தியர் கூறியதுபோல் இரும்புக் கம்பியை காய்ச்சி சூடுவைக்குமாறு வருந்திக் கேட்டார். நான் அதை தயார்செய்து எடுத்துவருவதற்குள் பரலோகம் அடைந்துவிட்டார். என்ன செய்வது. இதுநாள் வரையில் அவர் ஆத்மா சாந்தியடைய எந்த வழியும் தெரியவில்லை. இந்த பிராம்மணர்கள் தங்க மாங்கனி பெற்று உங்கள் தாயாரின் ஆத்மாவை சாந்தியடைய வைத்தபோதுதான் எனக்கும் வழி தெரிந்தது" என கூறினான். இதைக் கேட்ட பிராம்மணர் சொல்வதற்கேதுமின்றி வாய்மூடி மௌனியாக தலைகுனிந்து நின்றனர். மன்னரும் மற்றையோரும் பிராம்மணரின் பேராசை நிமித்தம் அவர்கள் அடைந்த தண்டனை கண்டு சிரிப்பாய் சிரித்தனர்.
  4. நல்லது ஈழவன், வெண்ணிலா. சின்னப் பிள்ளைகள் நிறையக் கதை படியுங்கோ.
  5. ம்.. இன்னொரு கதை. வெற்றித் திருநகரை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயரின் அரண்மனை விகடகவி தெனாலிராமன் மீது பிராமணர்களுக்கு கடுங்கோபம். அது ஏன் என பிறகு எழுதுகிறேன். ஒருமுறை கடும் வயிற்று நோவினால் தெனாலிராமன் அவஸ்த்தைப்பட்டு, ஊண் உறக்கம் இன்றி மெலிந்து துரும்பாக இளைத்துவிட்டான். அரண்மனை வைத்தியர் உட்பட பலரும் மருந்து செய்தும் ஆள் தேறியபாடில்லை. ராமன் மனைவிக்கோ பயம் தொற்றிக் கொண்டது. என்ன செய்வது என கடுமையாக யோசித்த போது, பட்டாபிஷேக சர்மா உடனே நினைவுக்கு வந்தார். அவரிடம் கேட்டால் ஏதாவது யாகம், மந்திரம் செய்து ராமனை பிளைக்க வைத்துவிடுவார் என பூரணமாக நம்பினாள். விடயத்தை கூர்ந்து கேட்ட பட்டாபிஷேக சர்மா, ஏற்கெனவே ராமன்மீதிருந்த குரோதத்தை நினைத்துக்கொண்டே, அவனை பழிக்குப் பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததடா சாமி என சந்தோஷப்பட்டு ராமன் வீட்டுக்கு வந்து பார்ப்பதாக கூறி அனுப்பினார். ராமன் மனைவியும் ஒருவாறு தேறி, வீடுசென்றாள். அடுத்த நல்ல முகூர்த்தத்தில் பட்டாபி சர்மா இராமனை பார்க்க வந்து, "அடே ராமா, பார்த்தாயா? பிராம்மணர்களை வதைத்த தோஷம் உன்னை பிடித்திருக்கிறது. இதற்கு ஒரு யாகம் செய்தால் சரியாக போய்விடும். ஆனாலும் நிறைய பொற்காசுகள் செலவாகுமே? என்ன செய்வது?" என ராமனுக்கு ஒரு போடு போட்டார். பட்டாபி சர்மாவின் வஞ்சனை ராமனுக்கு உடனே புரிந்தது. அவனும், "அய்யா பிராம்மணரே, சாவது விதியென்றால் யாரால் மாற்ற இயலும். போனால் போகட்டும். என்பாட்டில் இருக்கும்வரை இருந்துவிட்டு போகிறேன். இந்த யாகங்களுக்கெல்லாம் என்னிடம் பொற்காசுகள் இல்லை" என வேண்டா வெறுப்புடன் கூற, எங்கே தன் பணம்பண்ணும் வேலை பாழாய்ப் போய்விடுமோ என்று பயந்த பட்டாபி சர்மா, "அடப் பாவி. உயிரைவிடவா பொருள் பெரிது. நீ இப்பொழுது பணம் தரவேண்டாம். நீ பூரணகுணமானதும் உன் குதிரையை விற்று அந்த பணம் முழுவதையும் எனக்கே தந்துவிடவேண்டும்" இதுதான் நமக்குள் எழுதாத ஒப்பந்தம் என அடித்து சத்தியம் வாங்கிக்கொண்டு வீடுசென்றார். அடுத்த கிழமை, ராமனின் வீட்டில் ஒரே அமர்க்களம் போங்கள். தடல்புடலான யாகம், பல்வேறு பட்சணபலகாரங்களுடன் அமோகமாய் நடந்தேறியது. பட்டாபி சர்மாவும், மிகுந்த விநயத்டுடன், யாகத்தை முடித்து, இருந்த பல்வேறு பதார்த்தங்களையும் அள்ளிக் கொண்டு வீடு சென்றார். பிராம்மணர் செய்த யாகம் எப்படியும் கணவனை குணப்படுத்தி விடும் என்று ராமன் மனைவிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை வீண்போகவில்லை. ராமனும் நாளொரு மேனியாக தேறி, பழைய அலங்காரங்களுடன் கொலுவாக வீற்றிருந்தான். பணத்தை வசூல்செய்ய பட்டாபியும் ஒவ்வொரு நாளும் ராமன் வீட்டுக்கு நடையாய் நடந்து துரும்பாய் இளைத்துவிட்டார். ராமனோ பணத்தை தருவதாக இல்லை. இறுதியில், பொற்காசு பெறாமல் நான் வீடு ஏகேன் என பிராம்மணர் ஒரே முடிவாக ராமன் வீட்டில் இருந்துவிட்டார். ராமனுக்கும் மனசு பொறுக்கவில்லை. பிராம்மணரின் பேராசையை மட்டந்தட்ட எண்ணினான். பட்டாபியை பார்த்து, "பிராம்மணரே!! என்னுடன் வாரும். சந்தையில் குதிரையை விற்று உமக்கு பொற்காசுகளை தருகிறேன்" என்று கூற, அவரும் மிகுந்த சந்தோசத்துடன் "ராமா!! நமக்குள் இருக்கும் ஒப்பந்தம் நன்றாக ஞாபகம் இருக்கட்டும். குதிரைவிற்ற பொற்காசு அவ்வளவும் எனக்கே" என மீண்டும் ஞாபகமூட்டினார். சந்தைக்கு புறப்படும்போது ராமன் வீட்டில் நின்ற வெள்ளை பூனைக்குட்டியையும் கடாசுவதற்காக தன்னுடன் எடுத்து சென்றான். வீட்டில் பூனைக்குட்டியின் கொடுமை தாங்க முடியாது. அன்று சந்தையில் குதிரைகள் படு கலாதியாக, அதிக விலைக்கு விற்பனையாகிக் கொண்டு இருந்தன. பிராம்மணருக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை. ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் ராமனுக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தார். "ராமா, குதிரை 1000 பொன் பெறும். கவனம்" என அறிவுரையும் கூறிவைத்தார். உள்ளூர இதைக்கேட்டு நகைத்த ராமன், "இந்த பூனைக்குட்டியை 1000 பொன்னுக்கு வாங்குபவனுக்கு இந்தக் குதிரை 1 பொன்னுக்கு விற்கப்படும். இரண்டும் சேர்த்தே விற்கப்படும்" என பெருங்குரலில் கூவினான். இதைக்கேட்டு பலர் திகைத்தனர். பூனைக்கு 1000, குதிரைக்கு 1 பொன்னா? என்ன விசித்திரம்? பிராம்மணர் மூர்ச்சையாகிவிட்டார். கூட்டத்தில் நின்ற ஒருவன், "அண்ணே!! பூனையென்றால் என்ன, குதிரை என்றால் என்ன. வாங்கிவிடுங்கள்" என தன் தமயனுக்கு உற்சாகமூட்ட, குதிரை 1 பொன்னுக்கும், பூனை 1000 பொன்னுக்கும் விற்பனையானது. மூர்ச்சை அடைந்திருந்த பிரம்மணரை தலையில் தண்ணீர் தெளித்து எழுப்பி, "அய்யா. நமது ஒப்பந்தப்படி குதிரை விற்ற பணம்." என 1 பொற்காசை அவர் உள்ளங்கையில் அழுத்தி வைத்தான் ராமன். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் கற்சிலையாய் நின்றார் பட்டாபி. - ஈழத்திருமகன் -
  6. என்ன கு.சா ஆடிப்பிறப்பு எண்ட உடன வலும் சந்தோசம் போல. பழைய ஞாபகங்கள் வருகுதோ ??????
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.