Jump to content

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10574
  • Joined

  • Last visited

  • Days Won

    30

Everything posted by Maruthankerny

  1. இதில் இருக்கும் போன் நம்பர் வேலை செய்யவில்லை ... விடுமுறையில் சென்று ஒருமாதம் தங்கி வரலாம் என்றால் ... போன் வேலை செய்யுது இல்லையே ...???
  2. கூடி நின்று மேய்ஞ்சு ............... வாத்து விபரீதம் பண்ணி இருக்குமோ?
  3. வானத்தின் உண்மையான நிறம் பச்சை ...................
  4. நியூட்டன் x y யை velocity க்கு முதன் முதலில் பாவித்தார் பின்பு அதுதான் x multiple சைனாக வந்தது என்றும் படித்த ஞாபகம். இந்த விடையை ஆவலுடன் எதிரர்பாற்கும் அதே நேரம். சரியான விடை குழப்பம் மிக்கதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்
  5. Yitang Zhang ஆனால் அதற்கு முன்பே பைதகோரன் தியரி வந்துவிட்டது என்று நினைக்கிறேன்
  6. என்ன 1980ஆம் ஆண்டு எடுத்த போட்டோவை போட்டிருக்கு ? யாரும் சின்ன பெடியளுக்கு வலை விரிக்கிற விளையாட்டு மாதிரி இருக்கு ...... வீட்டு காரரின் தொலைபேசி எண் கிடைக்குமா ? (இதையெல்லாம் உடனே உடனேயே போட்டு கொடுக்கணும்)
  7. எல்லோருக்கும் நன்றி! இங்கேயே படித்து இங்கேயே குப்பை கொட்டி வருவதால் வேறு இடங்களுக்கு போவதில்லை. முன்பு சில இந்திய கருத்துகளங்களில் எழுதிவந்தேன் ஒரே நபர்கள் ஒரே மா திரும்ப திரும்ப அரைத்துகொண்டு இருக்கிறார்கள் என்றுவிட்டு போவதில்லை. எப்போதாவது எட்டி பார்ப்பதுண்டு. நிறைய எழுத நினைப்பதுண்டு ........ நேரம் இருபதில்லை. எல்லோரும் ஒரே குடும்பமாக இப்படியே பயணிப்பது அருமையாக இருக்கிறது. இதுகூட தற்ற்செயலக பார்த்தது. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் நன்றிகள்.
  8. உங்களைபோல்தானே அவர்களும் ............. எந்த மதவாதிதான் உண்மைகளை ஏற்றுகொள்கிறான் ?? பொய்களை பரப்புவதும் ........... மஜாஜாலம் காட்டுவதும்தானே மதவாதிகளின் வேலை. "God bless America" என்றுவிட்டுதான் இவன் ஜப்பானில் போய் அணுகுண்டு போட்டான். "அல்லாஹ் ஒஹ் அக்பர்" என்றுவிட்டு அவன் பிளேனால் வந்து இரட்டை கோபுரத்தை இடித்துவிட்டு போனான். உங்களுக்கு என்ன லூசா என்று கேட்டல் ? மேலே இருப்பதுபோல் .... அங்கே அது இருக்கு இங்கே இது இருக்கு என்று படம் போட்டு காட்டுகிறார்கள். மதம் என்ற பெயரில் வியாபாரம் தொடங்கிவிட்டு .............. இப்போ அவன் அதிக வாடிக்கையாளர்களை (clients) சேர்கிறான் என்று புலம்பி கொண்டு திரிந்து என்ன ஆக போகிறது? புத்திசாலிதனமாக சில உடன்படிக்கைகளை போட்டு கொம்பனிகளை மெர்ச் (merge) பண்றதுதான் நல்லம். அதுதான் ஜேசு முகமது என்கிறான் இஸ்லாமியன் . கிருஷ்ணா வை தான் கிறிஸ்து என்று கிப்ரொவில் சொல்கிறார்கள் என்கிறான் ஹரே கிருஷ்ணா காரன். பேசாம இந்துவைதான் அரபில் இஸ்லாம் என்று சொல்வது ..... அப்படி என்று ஒரு புரளியை கிளப்பிவிட்டால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். மெக்காவிற்கு போறா சாட்டா அப்படியே போய் கொஞ்ச அரபி குதிரைகளை நாங்களும் பார்த்து வர வசதியாய் இருக்கும்.
  9. எங்கோ கிடக்கும் கிறிஸ்தவனால் எனது வீடுக்குள் இருக்கும் குழந்தையை வந்து அரவணைக்க முடிகிறது என்றால்............. எனது வாசல் கதவில் எவளவு பெரிய ஓட்டை இருக்க வேண்டும் ? வேலியை திறந்து விட்டு விட்டு ........ பயிரை மேய்கிறார்கள் என்று கூச்சல் போடுவதால் ஏதும் பலன் இருக்கிறதா? இனியாவது போலிகளை கலைத்துவிட்டு .... உண்மைகளையும் மனிதாபிமானத்தையும் கோவில்களில் நிறுத்த முயற்சி செய்வோம்.
  10. தகவலுக்கு நன்றி அண்ணா ! இந்து குழந்தையாக இருந்தால் மட்டுமே தத்தெடுப்போம் .......... இன்று ஒற்றைக்காலில் நிற்கும் இந்துக்களுக்கு . அப்பாக்குட்டியின் முகவரியை கொடுத்து விடுகிறேன். தெவலயத்திட்கு பொய் மிகவும் அவஸ்தை பட்டு வருகிறார்கள். அங்கே இந்துக்களாக குழந்தைகள் இல்லையாம்.
  11. Isa Ibn Maryam ( Arabic: عيسى, translit.: ʿĪsā ), known as Jesus in the New Testament, is considered to be a Messenger of God and al-Masih (the Messiah) in Islam[1][2]:30 who was sent to guide the Children of Israel (banī isrā'īl) with a new scripture, al-Injīl (the Gospel).[3] The belief that Jesus is a prophet is required in Islam, as it is for all prophets named in the Qur’an. This is reflected in the fact that he is clearly a significant figure in the Qur’an (appearing in 93 ayaat [or, verses]), though Noah, Adam and Moses appear with even greater frequency.[4] It states that Jesus was born to Mary (Arabic: Maryam) as the result of virginal conception, a miraculous event which occurred by the decree of God (Arabic: Allah). To aid in his ministry to the Jewishpeople, Jesus was given the ability to perform miracles (such as healing the blind, bringing dead people back to life, etc.), all by the permission of God rather than of his own power. According to the Quran, Jesus, although appearing to have been crucified, was not killed by crucifixion or by any other means; instead, "God raised him unto Himself". Like all prophets in Islam, Jesus is considered a Muslim (i.e., one who submits to the will of God), as he preached that his followers should adopt the "straight path" as commanded by God. Islam rejects the Trinitarian Christianview that Jesus was God incarnate or the son of God, that he was ever crucified or resurrected, or that he ever atoned for the sins of mankind. The Quran says that Jesus himself never claimed any of these things, and it furthermore indicates that Jesus will deny having ever claimed divinity at the Last Judgment, and God will vindicate him.[5] The Quran emphasizes that Jesus was a mortal human being who, like all other prophets, had been divinely chosen to spread God's message. Islamic texts forbid the association of partners with God (shirk), emphasizing a strict notion of monotheism (tawhīd). An alternative interpretation of this theology is held by MessianicMuslims. நன்றாக முத்திவிட்டது !
  12. "எங்கள் மதம்தான் உலகிலேயே புனிதமானது" என்று கொய்யோ ..... முய்யோ .... என்று கத்துவது அப்படி என்ன புனிதம் இருக்கிறது ? என்று யாரும் கேட்டால் .... பிற மதங்களில் இருக்கும் அசிங்கங்களை காட்டுவது. இந்த காட்டுமிராண்டி தனத்திட்குதான் பெயர் "இந்து மதம்" இந்துக்களாக இருக்கும்வரை இந்த காட்டுமிராண்டி தனத்தில் இருந்து எளிதாக யாராலும் வெளிப்பட முடியாது. மனிதராக மாற நினைக்கும் எவனாலும் இந்த சாக்கடை இந்துமதத்தை பின்பற்ற முடியாது. அடிப்படை நாகரீகம் எங்கு செத்து கிடக்கிறது என்றால் ........... இங்கு இந்து கோவில் ஒன்று இருக்கிறதோ அங்குதான். பல நாடுகள் பெண்களை இந்து நாட்டுக்கு தனியாக செல்லாதீர்கள் என்று அறிவுரை வழங்கும் அளவிற்கு நாரி கிடக்கிறது. இந்த லட்சணத்தில் பாதிரியாரின் சிறுவர் துஸ்பிரயோக படங்களுடன் புனித இந்துக்கள் .
  13. நான் திரும்ப திரும்ப எழுதியும் .......... நீங்கள் இன்னமும் அதே கேள்வியில் தொங்கி கொண்டு நிட்கிண்றீர்கள். இதற்கு பின்பும் தயவு செய்து இதே கேள்வியை கேட்காதீர்கள். தேவாலயத்திற்கு செல்லும் ஒரு மனிதனை கிறிஸ்தவன் ஆக்க ஒரு பாதிரியார் முயற்சி செய்யாது விட்டால். அது பெரும் அயோக்கியத்தனம். க்ரிசதவத்தின் ஊடாகவே ஒரு மனிதன் கடவுளின் இராச்சியத்தை அடைந்து நித்திய வாழ்வை அடையலாம் என்று முழுமையாக நம்பி தனது வாழ்வை. கடவுளுக்கு சேவை செய்ய என்று அர்ப்பணித்த ஒரு பாதிரியார் ............. காணும் மனிதர்கள் எல்லோருக்கும் கிறிஸ்தவத்தை போதிக்க வேண்டும். அது அவருடைய முழு முதல் கடமை. ஒரு நிர்க்கதியான குழந்தையை கூட்டி சென்று விடுவதற்கு ஈழத்தில் ஏதாவது ஒரு இந்து கோவில் இருக்கிறதா?? துன்பத்தால் துவளும் ஒரு பரம்பரை இந்து மனிதன் கடவுளை தொழுவதற்கு என்று வரும்போதே. அவனின் தொழிலை காட்டி அவனுக்கு கதவடைக்கும் ........... அடிப்படை மனிதாபிமானமே செத்து கிடக்கும் இந்து கோவிலில் ஒரு அநாதை குழந்தையை எந்த தயவில் கூட்டி செல்ல முடியும்? அங்கு மனிதர்கள் இருக்கிறார்களா மனிதாபிமானம் பற்றி பேச ? அல்லது ஒரு மனிதனின் துன்பத்தை புரியும் அடிப்படை அறிவு அங்கு இருக்கிறதா ?? எல்லாமே செத்து கிடக்கும் இந்து கோவிலை கட்டி வைத்திருந்தால் .............. மனிதர்கள் சக மனிதர்களை தேடித்தான் போவார்கள். தேடி செல்வோருக்கு கடவுளை காண்பிப்பது அவனது கடமை. ஏன் இந்துக்கள் தேவலயத்திட்கு காசு அனுப்புகிறார்கள்? இந்து கோவிலில் இருக்கும் பிராமணன் எல்லாம் செத்து விட்டார்களா ? ஏன் துயவன் சிறுவர்களை தத்தெடுக்க பாதிரியாரை நாட வேண்டும் ? ஒரு ஐயரை ஏன் நாடவில்லை ? எனது கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் ........... எழுதுங்கள் விவாத்தத்தை தொடரலாம். தயவு செய்து இனியும் கேட்ட அதே கேள்விகளை கேளாதீர்கள். இதை விட விளக்கி பதில் எழுத இந்த அற்ப இந்துவிட்கு தெரியாது.
  14. மதங்களை மனிதன்தான் உருவாக்கினான் ........... மதங்கள் என்ன சொல்கின்றது .... 4000 5000 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது ........... இவை இப்போது ஏற்படும் காயங்களுக்கு மருந்தாகாது. ஊரில் உள்ள கோவிலுக்கு ஒரு மனிதன் போகும் போது .......... நீ இன்ன தொழில் செய்பவன் உள்ளே போக முடியாது என்று. ஈழத்தில் உள்ள எல்லா கோவிலும் கதவடைக்கும் போது. சாதியை மதத்திற்குள் புதைக்காதீர்கள் என்று நீங்கள் புது கதை சொல்கிறீர்கள். ஓகே. அப்போ எங்கு சென்று புதைப்பது? அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ..... மனிதா உள்ளே வா என்று அன்போடு அழைக்கிறது. நீங்கள் என்ன பூதாரம் பேசுகிறீர்கள் என்றே புரிய முடியவில்லை.
  15. இது என்ன ரொம்ப கொமாடியா இருக்கு ?? சாதியே வேண்டாம் என்றுவிட்டு போனவன் ............. எப்படி குறைந்த சாதியில் பெண் எடுப்பது?? கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்று. அதைதானே நாங்கள் திரும்ப திரும்ப சொல்கிறோம்............. பார்ப்பன் எதை சொன்னாலும் இளிக்காதே என்று. இழிவை பார்க்கும்போது அதை ஒழி என்று.
  16. நீங்கள் சிலுக்கு ஸ்மிதாவிட்கு ஒரு கோவில் கட்டி பாருங்கள் .... எங்கு கூட்டம் அதிகம் வருகிறது என்று. வெறும் பித்தல் ஆட்டங்களுக்கு காவடி ஆடியவர்கள் நாங்கள். அதன் பலனை இனி இப்படிதான் அனுபவிக்க வேண்டும். பிள்ளைகள் இப்போ கேள்விகள் கேட்கிறார்கள் ... எங்களிடம் விடைகள் இல்லை. அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் வகுத்து தொடங்கியவர்கள் ... எல்லா கேள்விக்கும் விடை வைத்திருக்கிறார்கள். புதுசா எதையும் பின்பற்றுவது என்றால் ............. பள்ளிக்கூடம் போய் வந்த மேட்டுக்குடியினருக்கு மிகவும் குளிர்ச்சியான விடயம். படித்தவனுக்குத்தான் அது புதுசா தெரியும்.
  17. ஒரு பாதிரியார் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லி கொடுக்கவில்லை என்றால் அவர் கிறிஸ்தவத்தை நம்பவில்லை என்றே நான் பொருள் கொள்கிறேன். கிறிஸ்தவ மதத்தை முழுமையாக நம்பி அதுதான் முழுமுதல் கடவுள் என்ற பின்பே ஒருவன் பாதிரி ஆகிறான். அதுதான் முழுமை என்று நம்பியவன் ............. அதுதான் மனித வாழ்வை மேம்படுத்தும் என முழுமையாக நம்பியவன். சக மனிதர் எலோரும் கிறிஸ்தவத்தை பின்பற்றி சொர்கத்தை எட்ட வேண்டும் என்றே விரும்புவான். அப்படி இல்லாத பட்சத்தில் அவனுடைய பாதிரி என்ற நிலை கேள்விக்கு உள்ளாக்க பட வேண்டும். தேவாலயத்திலேயே வந்து நிற்கும் ஒரு சிறுவனை அவன் கிறிஸ்தவன் ஆக்கவில்லை என்றால் ...? அது பெருத்த அயோக்கியத்தனம். தான் மட்டுமே சொர்கத்தை அடைய வேண்டும் என்ற சுய நிலை சிந்தனை. இத்தனை இந்து கோவில் உள்ள நாட்டில் ............. போரால் பதிக்க பட்ட சிறுவர்களை கூட்டி சென்று விடுவதற்கு என்று ஒரு இந்து கோவில் ஏன் இல்லை? ஏன் தேவாலயத்தில் கொண்டு சென்று விடுகிறீர்கள் ? இதனை பெரிய நல்லூர் கோவிலில் 15 சிறுவர்களை பராமரிக்க இடவசதி இல்லையா ? அல்லது மன வசதி இல்லையா ?? எங்களிலும் .......... எமது மதத்திலும் சேறை வாரி பூசி திரிந்து கொண்டு ............. அடுத்தவன் பற்றி கதைக்க என்ன இருக்கிறது ? கிறிஸ்த்தவம் புனிதம் இல்லை. தமிழர் மீது திணிக்க பட்ட ஒரு அடாவடி தனம். ஆனால் எம்மீது அழுக்கை சுமந்துகொண்டு அடுத்தவனை பற்றி பேச ஏதும் இல்லை. எமது மதத்தில் உள்ள குறைகளை நீக்கினால் ............ யாரும் ஏன் அங்கு போக போகிறான்? போவதற்கு வீதியை போட்டு விடுவதே நாங்கள்தான். பின்பு போனவர்களை அன்போடு அரவணைக்கிறார்கள் என்றால் எப்படி? அது ஒரு குற்றமா ??
  18. அது உங்களுடைய சொந்த அனுபவம். தாம் வணங்கும் கடவுளின் பெயரால் துன்புறுத்தபட்டு வீதியில் திரியும் மனிதர்களை நான் கண்டிருக்கிறேன் இது எனது சொந்த அனுபவம். இந்த அடாவடி தனங்களை மதம் என்று சொல்லி மழுப்பிவிட முடியாது. இந்த கொடூரங்களை மதம் என்று மூடிவிட்டு இனியும் கும்பிட்டு கொண்டு இருக்க முடியாது. இந்துமதம் என்ற சாக்கடை ............. சிறுவயதில் எனது சக மாணவிகளாக இருந்தவர்களை சாதி என்று சொல்லி அவர்களுக்கு செய்த அநியாங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். துன்பம் தாங்காது படிப்பை முறித்து வீடுகளில் தங்கியவர்களை நேரில் கண்டு இருக்கிறேன். இந்த சாதி வெறி பிடித்த பேயை எனது சமூகத்தில் இருந்து விரட்டி அடிப்பது என்பது. வள்ளியை மணம் முடித்த முருகனுக்கு செய்யும் ஒரு சிறு தொண்டு என்று எண்ணுகிறேன்.
  19. கடவுளை சுற்றி இருப்பவர்கள்தான் கடவுளை பிரதிபலிப்பவர்கள். அவர்களுடைய கற்பனைதான் கடவுளாக இருக்கிறார். கடவுளை காணாதவரை ......... கடவுளை பற்றி விமர்சிக்க முடியாது. கடவுளை சுற்றி இருப்பவர்கள் எங்கள் கண் முன்னே இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை எமது கண்முன்னேயே செய்கிறார்கள். இந்த அடாவடி தனங்களை அவர்கள் கைவிட வேண்டும் என்றுதான் எழுதுகிறேன். நீங்கள் எந்த வாளியால் யாரை அடித்தால் எனக்கு என்ன? எனது வீட்டிற்குள் இருக்கும் இந்துமதம் என்ற சாக்கடையை துடைப்பத்தால் அடித்து சுத்தம் செய்வது என்பது கடவுளுக்கு நான் செய்யும் சிறு தொண்டாக நினைக்கிறேன்.
  20. சாக்கடை என்று தெரிந்த பின்பு யாராவது அங்கு நிற்பானா? நங்கள் கரையேறி பலகாலம். இப்போதும் அது சாக்கடையாகவே இருக்கிறது என்றுதான் எழுதுகிறேன். முன்னுக்கும் பின்னுக்கும் நின்று பார்த்தல் எனும் முரண்பாட்டை முதலில் இல்லாது ஒழித்து. மனிதன் பார்க்கும்போது கடவுளின் எண்ணம் சிந்தனை தெரிய கூடிய வாறு மதத்தை மாற்றவேண்டும். அல்லது முன்னுக்கு நின்று பார்ப்பவர்கள் .... தமக்கு என்று ஒரு சொந்த மதத்தை உருவாக்கி இது முன்னுக்கு நின்று பார்பவர்களுக்கு மட்டும் உரித்தானது என்று அடையாள படுத்தி கொள்ளவேண்டும். பின்னுக்கு நிற்பவர்கள் நாங்கள் கிறிஸ்தவமோ இஸ்லாமோ ..... எமக்கு விளங்க கூடியவாறு கதைப்பவர்களுடன் பேசி ஒரு புரிதலை உருவாக்கி கொள்கிறோம். முன்னுக்கு நிற்பவர்களுக்கு மட்டுமே விளங்கும் என்றால் பின்னுக்கு நிற்கும் எங்களை எங்களை ஏன் இந்துக்கள் என்று வரையறுத்து கொள்கிறீர்கள் ?? இஸ்லாமும் கிறிஸ்தவமும் .....இந்து என்று அடிக்க வந்தால் எம்மை முன்னுக்கு தள்ளிவிட வசதியாய் இருக்குமாக்கும் ?? புறம்போக்கு சிந்தனைகளை கலந்து விடுவதால்தான் ............ அது சாக்கடையாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று உலகின் பெரிய இந்து நாட்டில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. ஊரோடு கூடி பஸ் ஏறினாலே உரச என்று ஒரு கூட்டம் ஏறுகிறது. அடிப்படை நாகரீகம் கூட செத்து கிடக்கிறது. கடவுளுக்கு முன்னுக்கு மட்டுமே மனிதர்கள் இருக்கலாம் .............. பின்னுக்கும் இருந்தால்? கடவுள் பற்றி விவாதிக்க நிறைய வந்துவிடும். பின்னுக்கும் வைத்திருப்பவர் கடவுள் என்ற தகுதியை இழந்து .......... வலது குறைந்தவர் என்று ஆகிவிடுவார். வலது குறைந்தவரை வணங்கும் வரிசையில் அறிவுள்ள எவனாவது போய் முன் வரிசையில் நிற்பானா ??
  21. அழகாக சொல்லி இருக்கிறீர்கள்! well done! பச்சை இல்லை. இந்துமதம் ஒரு கடல் அதற்குள் பல முத்துக்கள் இருக்கிறது. வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது எங்கும் சாக்கடைதான் இந்த கடலோடு கலக்கிறது ..... முத்துக்களை காணவே முடியவில்லை. ஒரு திருத்தம் நிச்ச்ச்சயம் வேண்டும்!
  22. சந்திக்கு சந்திக்கு ............ இருக்கும் எல்லா ஆலமரத்தின் கீழும் இத்தியின் கீழும் ... இருக்கும் முருகனும் பிள்ளையாரும் எங்கு போய்விட்டார்கள் ? அவர்களை வணங்கும் அதனை இந்து கூட்டமும் எங்கு போய்விட்டார்கள்? இத்தனை கோவிலும் குளமும் இருந்த ஈழத்தில் பிறந்த ஒரு இந்து குழந்தை ... ஏன் தேவாலயத்தில் சென்று நிற்கவேண்டும்? இவளவு இந்து கோவிலும் ஒரு ஆனதை பிள்ளையை பராமரிக்கும் மனிதாபிமானத்தை ஏன் தனது பக்த அடியார்களுக்கு சொல்லி கொடுக்கவில்லை? நீங்கள் சாக்கடை இந்து மதத்தை தூக்கி பிடிக்கும்போது ............. ஜேசுவிட்காக தனது வாழ்வை துறந்த ஒரு பாதிரியார் ஏன் தனது கிறிஸ்தவத்தை தூக்கி பிடிக்க முடியாது? தன்னிடம் எது இருக்கிறதோ அதைதான் அவனால் பகிர்ந்துகொள்ள முடியும். பாதிரியாரிடம் பைபிள்தான் இருக்கிறது. தேவலாயத்தின் வாசலில் வந்து நிற்கும் ஒருவனுக்கு கிறிஸ்தவமதம் பற்றி சொல்லி கொடுக்காவிட்டால் அது மாபெரும் தவறு. அதை ஒரு பாதிரியார் செய்ய துணியமாட்டார். பாம்பு கோவில்களில் இருக்கும் பாம்பை கொண்டு சென்று ஒரு சரணாலயத்தில் விட்டு விட்டு. அங்கே எமது இனத்தில் இருக்கும் அநாதை குழந்தைகளையும் தொழு நோய் வந்தவர்களையும் வைத்து பராமரிக்கும் மனிதாபிமானம் பற்றி இந்துக்கள் சிந்துக்கும்வரை. கிறிஸ்தவ மதத்தின் பால் ஒரு ஈர்ப்பு சாதாரண மனிதர்களுக்கு தானாகவே வந்துவிடும் .......... அங்கே அடிப்படை மனிதாபிமானம் பற்றி அதிகம் சொல்லி கொடுக்கிறார்கள். ஞாயிற்று கிழமைகளில் குழந்தைகளை சரானாலயம் கூட்டி சென்று அவர்களுக்கு எமது நாட்டில் இருக்கும் பாம்புகள் பற்றியும் அதன் விஷம் பற்றிய அறிவை சொல்லி கொடுக்கலாம். தொழுநோய் வந்தவர்களை சக மனிதர்களாகவே பாக்காத நீங்கள் ............ அப்படி பார்க்க கூடாது என்று கற்று கொடுக்கும் இந்து மதத்தை தழுவும் நீங்கள் ..... அவர்கள் கிறிஸ்தவ மதம் மாறிவிட்டார்கள் என்று ஏன் துள்ளி குதிக்கிறீர்கள் ? அவர்கள் என்ன மதம் மாறினால் உங்களுக்கென்ன? வீதியில் தீண்ட தகாதவர்கள் என்று எறியும்போது இந்த இந்து வேதாந்தம் எங்கு போனது??? 4000 வருடங்கள் முன்பு என்ன இருந்தது ............ புத்தகத்தில் என்ன எழுதியிருக்கு என்பதனால் யாருக்கும் லாபம் இல்லை. நிஜத்தில் இப்போது என்ன இருக்கு இதுதான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியது. லட்சம் இந்துக்கள் இருக்கும் நாட்டில் ......... ஒரு இந்து குழந்தை போய் தேவாலயத்தி வாசலில் நின்றிருந்தால் .உங்கள் மதத்தை வெளியில் சொல்ல வெட்கப்பட பழகி கொள்ளுங்கள். பின்பு அந்த குழந்தையை ஒரு மனித குழந்தை என்று தூக்கி எண்டுத்த்வன் அதை கொடுத்தான் இதை கொடுத்தான் என்று புலம்புவதை என்றாலும் நிறுத்தி கொள்ளுங்கள். தன்னிடம் எது இருக்கிறதோ அதைதான் அவனால் பகிர்ந்துகொள்ள முடியும்.
  23. இந்துமதத்தால் ............... மக்கள் படும் இன்னல்கள் இவர்களுக்கு புரியாது ............. அடுத்தவனை இஞ்சிக்கவே இந்துமதம் இருக்கிறது. எமது மதம் என்று கட்டி பிடிப்பதென்றால் ............ அதில் மற்றம் வேண்டும். இவளவு அயோக்கியதனங்களையும் வைத்து கொண்டு .............. பெருமை கொள்வது என்றால் ............. ஒருவித இந்து சைகோவால்தான் முடியும். "பலனை பாராது கருமம் செய்" என்றும் இந்துமதம் சொல்கிறது..... யார் செய்கிறான்? அப்படி இந்துக்கள் மாறுமட்டும் ............ அந்த அசிங்கத்தில் இருந்து விலகி இருப்பதே நன்று.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.