ஈகைச் சோதியே ...
மருத்துவம் படிக்க மறுத்து
மக்களின் அடிமை விலங்கொடிக்க
மறவர் படையில் இணைந்து
வேங்கையாகி களம் கண்டாய்
பாரெங்கும் புகழ் பெற்றாய்
ஊரெழு பெற்ற பார்த்திபனே
பாரதத்தின் முகமூடி கிழித்தாய்
நேரு பேரனின் தூதுவன்
நேரில் பார்க்க மறுத்தான்-உன்
கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்தான்
காலில் போட்டு மிதித்தான்
காலனானான் உனக்கு அவன்
மக்கள் புரட்சி வேண்டி
நல்லூர் வீதியில் அமர்ந்து-உன்
வயிற்றுடன் போரிட்டாயே
அன்னம் தண்ணீர் இன்றி
பன்னிரு நாள் பெரும் தவம்
இருந்தாயே இராசய்யாவின் செல்வமகனே
உன் கனவு ஒருநாள் நிறைவேறும்
கிழக்கு வெளிக்கும் முற்றாக
தேசமெங்கும் கொடிபறக்கும்