Jump to content

Rajesh

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    3105
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Rajesh last won the day on June 30 2020

Rajesh had the most liked content!

2 Followers

Profile Information

  • Gender
    Male
  • Location
    பூவுலகு
  • Interests
    எல்லாம்

Recent Profile Visitors

18051 profile views

Rajesh's Achievements

Veteran

Veteran (13/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done

Recent Badges

1.4k

Reputation

  1. மேலும் 39 பேருக்கு கொரோனா – ஒரேநாளில் அதிகளவானவர்கள் அடையாளம் In இலங்கை May 26, 2020 4:33 pm GMT 0 Comments 1011 by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. http://athavannews.com/மேலும்-39-பேருக்கு-கொரோனா-ஒ/
  2. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு In இலங்கை May 3, 2020 5:55 pm GMT 0 Comments 1284 by : Benitlas நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை, இதுவரையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-47/
  3. சற்று முன்னர் வெளியான அறிக்கை; ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 3 கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 619 இலிருந்து 622 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 134 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது படிப்படியாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/142152?ref=imp-news குருநாகலில் 326 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்! In இலங்கை April 29, 2020 8:31 am GMT 0 Comments 1189 by : Benitlas குருநாகலில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 326 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளர் என்.பரீட் இதனைத் தெரிவித்துள்ளார். அலவ்வ, பொல்கஹவெல, மடஹபொல, நிக்கவெரட்டிய, கொடவெஹெர, தும்மலசூரிய, உடுபத்தாவ, மாவத்தகம, கல்கமுவ, குளியாப்பிட்டிய, மாஹோ, வாரியப்பொல, பண்டாரகொஸ்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் குருநாகல் மாவட்டம் முழுவதும் சுற்றி திரிந்துள்ளார்களென, அவர்களுடன் தொடர்புப்பட்டவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் இராணுவத்தினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/குருநாகலில்-326-பேர்-சுய-தனி/
  4. ஸ்ரீலங்காவில் இன்றும் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 15 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களது எண்ணிக்கை 420 இலிருந்து 435 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை 116 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/141892?ref=imp-news UPDATE கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரிப்பு In இலங்கை April 25, 2020 2:00 pm GMT 0 Comments 1144 by : Benitlas நாட்டில் மேலும் 05 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-32/
  5. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் ஆறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று இதுவரையில் 100 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-24/
  6. ஸ்ரீலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை 217ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 218ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/141169
  7. சற்று முன்னர் வெளியான அறிக்கை! மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று இலங்கையில் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 56 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/141090
  8. அறிவுறுத்தல்களை பின்பற்றாத அக்குறணை வாசிகள் புனானைக்கு அனுப்பி வைப்பு! In இலங்கை April 5, 2020 6:33 am GMT 0 Comments 1168 by : Benitlas சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை பின்பற்றாத ஒரு குழுவினர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அக்குறணை பகுதியினைச் சேர்ந்த 144 பேரே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கே ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்கருதி அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைத்து மக்களினதும் கடமை என்பதனை நாம் இந்த இடத்தில் ஒருதடவை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். http://athavannews.com/அறிவுறுத்தல்களை-பின்பற்/
  9. வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை! – அறிக்கை வெளியானது In இலங்கை April 2, 2020 11:25 am GMT 0 Comments 1032 by : Litharsan வவுனியா, கற்குழியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை இந்தப் பெண், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே மரணித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வவுனியாவில்-உயிரிழந்த-ப-2/
  10. அத்தியாவசிய தேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் மக்கள் தகவல்களை தெரிவிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் “அத்தியாவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு”வினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும். தொலைபேசி இலக்கங்கள் - 0114354854, 0114733600 நேரடி தொலைபேசி இலக்கங்கள் - 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204 பெக்ஸ் இலக்கங்கள் - 0112333066 0114354882 மின்னஞ்சல் முகவரி - ptf@pmoffice.gov.lk https://www.ibctamil.com/srilanka/80/140035
  11. ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது!! இரண்டாம் இணைப்பு தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி ஸ்ரீலங்காவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாம் இணைப்பு ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 107 ஆக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மருத்துவமனைக்கு வருமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் 106 ஆக இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை தற்போது 107 ஆக அதிகரித்திருக்கிறது. இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் பொது மக்கள் விழிப்பாகவும் சுகாதாரத்துடனும் செயல்படுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/140021?ref=imp-news
  12. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து! In இலங்கை March 27, 2020 2:20 am GMT 0 Comments 1027 by : Benitlas அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரையில் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/அனைத்து-பொலிஸ்-உத்தியோகத/
  13. அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்...! கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை நாளை காலை 6 மணிக்கு தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது. எனினும், நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்ததன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாத்திரம் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இந்த மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இதேநேரம், குறித்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. அந்த பிரதேசங்களில், எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பின்னர் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம். பிற்பகல் 2 மணிக்கு அந்தப் பகுதிகளில் மீள அமுல்படுத்தப்படும். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்தவொரு மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களுக்கும், சிறு தேயிலை தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊடக சேவைகளை முன்னெக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் சுகாதாரத் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்களும், விற்பனை நிலையங்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசேட உத்தரவுகளுக்கு அமைய, நாடு முழுவதும் 600 வரையான வீதித்தடைகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்தை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அபாயகரமான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலும் அத்தியாவசிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்காக மாத்திரமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும். அதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையிலும் மெனிங் சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.' எனினும் குறித்த சந்தையில் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/sooriyanfmnews/237297/அதிக-விலையில்-விற்பனை-செய்யப்பட்ட-அத்தியாவசிய-பொருட்கள்
  14. இலங்கையில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிப்பு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவுடன் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். புத்தளமும் கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் அதி ஆபத்து பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை பொறுமையாக செயற்பட்டால் ஆபத்தில் இருந்து மீளலாம் என்றும் அவர் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/139914?ref=home-imp-parsely
  15. ஸ்ரீலங்காவில் இன்று மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயாளர்கள்! ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்காவில் ஏற்கனவே 102 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139896
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.