
Kadancha
கருத்துக்கள உறவுகள்-
Posts
1881 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Kadancha
-
முயல், மீன் வளர்ப்பது என்று தொடங்கியதால்., இரண்டு தரம் எனது உறவுகளும் நானும் பொறிவைத்து பிடித்தோம். அதில் இருந்து தான் அவை கருமை நிறம் என்பதும், சற்று பெரிது என்பதும் தெரியும். ஆனால்ல், எனக்கு நன்கு நினைவு உள்ளது, அங்கு வெளிச்சத்துக்கு அது முகத்தை காட்டவில்லை. பொறியானது வலை பெட்டி ஆகையால் நாங்கள் எல்லோரும் சுற்றி பார்க்க கூடியதாக இருந்தது. முயலில் இருந்து தொடக்கி அறிந்ததே அவற்றின் மற்றும் எலி, அணிலின் பற்கள் எப்போதும் வளரும் என்று. காட்டுப் பன்றி பற்றி hunting என்று ஈர்ப்பு வந்ததால் பின்பே அறிந்தது. honey badger பற்றி சென்ற வருடத்தில் அறிந்தேன்.
-
இவற்றிலும் பல வகைகள் இருக்கிறது என்று நினைக்கிறன். வெப்பவலயத்தில் இருப்பவை கருமை நிறமும், சற்று பெரிய தோற்றம் உள்ளது. இதை போன்றதே தேன் கரடி. honey badger. ஆனால், தேன் கரடிக்கு பாம்பிடம் கடி வாங்கி, மயங்கி, விடமுறித்து, மீண்டும் எழும் தன்மை இருக்கிறது. அனால், இந்த குடும்பம் (rodents; அணில், முயல் போன்றவையும் ) போறவற்றின் பற்கள் எப்போதும் வளருபவை (எலி போல, open rooted) போல இருக்கிறது. அதனால் எலி போல கடித்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறே அவை பற்களை தேய்த்து அரிக்கின்றன . மற்றது அநேகமாக எல்லா rodents உம், metabolism மிக கூடியவை. இதுவும் ஓர் காரணம் இவை எப்போதும் எதாவது உண்ணவும் அல்லது வேட்டையாடவும். காட்டுப் பன்றியும் இந்த எப்போதும் வளரும் (open rooted) தந்தம் உள்ளது. காட்டுப் பன்றி அவற்றிடையே சண்டை (இனப்பெருக்க காலத்தில்) அல்லது மரங்களில் தேய்த்து இந்த வளர்ச்சியை கட்டுக்குள் வைத்து இருக்கும். வளர்ப்பு பண்றியிலும் இருக்கலாம். வளர்ப்பு என்றபடியால், தகுந்த நேரத்தில் அவை அகற்றப்படும் என்று நினைக்கிறன். மரையின் கொம்புகள் (இது சரியான பதம் அல்ல என்று ன் நினைக்கிறேன்) மீண்டும் வளரும். மானின் கொம்புகள் வளருமா என்பது தெரியவில்லை.
-
பசிபிக் தீவுகளின் நிலை வேறுபட்டது. ஆனால், பசிபிக் தீவுகள், nz நாணயத்தை கைவிடமுடியுமா என்றால், பொருளாதாரம் படுக்காமல், கை விட முடியாது. உ.ம். ஆக பசிபிக் தீவுகள் சிலவற்றின் வெளியாக பாதுகாப்பை கூட US பொறுப்பேற்று கொண்டு இருக்கிறது, ஆனால் அவை இறைமை கொண்ட அரசுள்ள நாடுகள் என்கின்றன, உண்மையில் அவை protectorate. இது போன்றதே நாணயத்தில் உள்ள ஏற்பாடாகும்.
-
UK பொருளாதாரத்தில் மட்டுமே இணைந்தது. ஆனால்நனைய ஒன்றியம் என்று உருவாக்குவது, ஒரு அரசால் மட்டும் முடியாது. அப்படி என்றால், இதில் கிந்தியவும் அந்த ஒன்றியத்துக்கு உடன்பட வேண்டும். இது மற்றொரு காரணம் peg, ஏனெனில், குறுகிய காலத்தில் செய்யமுடியும், வெறு எந்த அரசின் உடன்பாடும் தேவை இல்லை. எவ்வாறாயினும், கிந்தியா - சொறி சிங்களம் என்ற அளவு வேறுபாட்டில் முன்பு சொன்ன அபாயங்கள் உள்ளது, கிந் யா நாயத்தை கொண்டுவந்தால். அனால், பொதுவாக, சொறி சிங்களம் எந்த test ஐ வைத்தாலும், இப்போதைய நிலையில் அத்தை வேறு எவரும் பொருட்படுத்த மாட்டார்கள். எல்லோரும், சொறி சிங்களம் கிந்தியாவுடன் இணைந்து விட்டது என்ற நிலையையே எடுப்பதத்திற்கு வாய்ப்புகள் கூட. அது உண்மையும் கூட, கிமந்திய மத் தியவங்கி, மற்றும் பொருளாதார கொள்கைகள் , சிங்களத்தின் பொருளாதாரம் மட்டும் அல்ல, பாதுகாப்பு போன்றதையும் ஹிந்தியை மறைமுகமாக கட்டுப்படுத்தக் கூடிய நிலை உருவாகும் (ஏனெனில், பண விநியோகம் சிங்களத்தின் கைகளில் இருக்காது என்பதால்). உ.ம். ஆக பாதீட்டை 5% ஆக உயர்த்துவதற்கு, ஹிந்தியை மத்திய வங்கியின் அனுமதி தேவை, ஏனெனில் ஹிந்தியை மத்திய வங்கியே பண விநியோகம், வழங்குதலை மேற்றுக்கொள்ளும் ஆகையால். பாதீட்டை உயர்த்துவது என்பதின் அர்த்தம், பண விநியோகம், வழங்குதலை 5% ஆக உயர்த்துவது. இப்படை பல பிரச்சனைகள் இருக்கிறது. சரி பின்பு ஹிந்தியை நாணயத்தை விடுவது என்றாலும் பிரச்னை, ஏனெனில், அந்த நிலையில் சொறி சிங்களத்தின் பொருளாதாரத்தை பெரிய அளவில் தீர்மானிப்பது ஹிந்தியை பொருளாதாரம். சொறி சிங்களம் எவ்வ்ளவு காலம் ஹிந்தியை நாணத்தில் இருக்கிறதோ, அதற்கும் அதிகமாக கிந்தியாவுக்குள் இழுக்கப்படவதற்கே வாய்ப்புகள் கூட. இதாய் போன்ற பிரச்சனைகளே, peg ஐ அரசுகள் நாடுவதத்திற்கு காரணம், இலகுவாக கழற்றி விட்டு விடலாம், பொருளாதாரத்தை தாக்கினாலும். இதை eu இலும் காணலாம், UK, EU பொருளாதாரத்தில் எல்லாவற்றையும் இணைத்தது, நாணயத்தை வைத்து கொண்டது. பின்பு இணைந்த நாடுகளில், பெரியவை, வரலாற்றில் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட போன்ற நாடுகள், அவற்றின் நாணயத்தை, பாதுகாப்பு துறையை தக்க வைத்து கொண்டன. இது ஒருவிதத்தில் EU இன் வருங்கால போக்கை அவை முற்றாக நம்புவதற்கு பின்னடிக்கினறன என்பது.
-
இதை இங்கே எதிர்வு சொல்லி இருந்ததாக நினைவு. டாலர் என்று குறித்து சொல்லவில்லை, அனால் திரவ நிலையில் உள்ள சொத்துக்கள் என்று சொன்னது நினைவு. இதன் அர்த்தம், இறைமையுள்ள அரசுகள், தமது நிலையை பேணுவதத்திற்கு தனியாரின் சொத்துக்களை எடுத்துக்கொள்ளலாம் என்பது. சர்வதேச சட்டம், உறவில் இது ஏற்றுக்க்கொள்ளப்டது ஒன்று. இப்போதைய நிலையில் எடுக்கவில்லை, அனால் aggregate ஆக டாலர் எவ்வளவு சிரசின் financial system த்தில் உள்ளது. அதை வைத்து, கடன் பெற முயற்சிக்கலாம்.
-
என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி
Kadancha replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in வாழும் புலம்
other asian என்று கொடுங்கள். ethnicity, Ethnic Identity க்கு Eezham Tamil என்று அடையாளப்படுத்துங்கள். பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள். -
Amerigo Vespucci கொலம்பஸ் ஆள் அறியப்பட்டதாக வரலாறு மாற்றப்பட்டது. அனால், இப்பொது மேட்ற்கு நாடுகளில் Amerigo Vespucci என்று வரலாற்று பாடத்திட்டத்தில் உள்ளது என்று நினைக்கிறேன். தென்னமெரிக்காவில், முக்கியமாக பிரேசிலில் ஓர பழமொழி உள்ளது என்று நினைக்கிறன் - மேலே கையை நீட்டினால் பழம், தடியை குத்தினால் மீன் எனும் கருத்துப்பட.
-
முதலை இறைச்சி, தீக்கோழி இறைச்சி - பண்ணை வளர்ப்பு
Kadancha replied to Nathamuni's topic in வாணிப உலகம்
முதலில் ஆட்டின் எல்லா பகுதிகளையும், அரியண்டம் காட்டாமல், சமைக்க, புசிக்கப் பழகவும். அதன் பின் வேறு இறைச்சியை பற்றி பார்க்கலாம். -
கடைசியாக , peg அனுபவம் terra luna இலை நடந்தது terra luna ஐ நாட்டுக்கு ஒப்பிட முடியாது. அனால், நான் மற்றும் என்னை போன்ற சிந்தனை உள்ளவர்கள் அனாமதேய பெயரில், டெரா luna இன் boss க்கு chat இல் சொன்னது, நீங்கள் இப்பொது peg ஐ கைவிட வேண்டும், கை விட்டால் terra லூனா இதுவரை நடந்த இழப்போடு தப்பும். ஆனால் , நீங்கள் peg ஐ நாண்டு பிடித்தால், கைவிட வைக்கப்படுவீர்கள், எல்லவற்றையும் இழந்து. terra luna இன் boss, என்னைப் போன்றவர்களின் கருத்தை எடுக்கவில்லை. இறுதியில், இயலாமலேயே, terrA லூனா, peg ஐ கைவிட்டது. அதாவது, speculation ஆல் peg தாக்கப்பட்டு, தளம்பும் ஆயின், peg ஐ வைத்து இருப்பது மிகவும் கடினம்.
-
ஓர் தேசிய நாணயத்தின் (கடத்தப்படும்) பெறுமதி முதலில் நிலைநாட்டப்படுவது, அந்த இறைமையுள்ள அரசால் ஆகும், முக்கியமாக அந்த அரசின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில். இது முதலில் கதைத்த, நாணயத்துக்கான பெறுமதியை அரசின் financial system இடம் எதோ ஓர் பெறுமதியை கொடுத்தே நாணயத்தை எல்லோரும் பெறுகிறார்கள். அரசு உத்தரவாதம் கொடுக்கிறது, அந்த பெறுமதி அந்த நாணய தொகையை வாங்குபவருக்கு அளிக்கப்படும். என்பதில் ஆரம்பிக்கிறது. முதலில் சொன்னபடியால் மேலதிக விளக்கம் இன்றி, நீங்கள் சொல்வது, ஏறத்தாழ sovereign guarantee ஐ தற்கலிகமாக (ஆகக் குறைந்தது) ஒத்தி வைப்பது. அந்த அரசே (சொறி சிங்களம் ), இப்போதைய நிலையில் அந்த நாணயத்தின் (sl rupee ) sovereign guarantee ஐ தற்கலிகமாக (ஆகக் குறைந்தது) ஒத்தி வைப்பது, sl rupee முழுமையாக வலுவிழந்து விடும். அதனால், அப்படி செய்யும் போது, சிங்களத்தின் வங்கித்துறையையே உடைத்து விடும் சாத்தியக் கூறுகள் கூட உள்ளது. மற்றது, அளவு ஹிந்தியா பொருளாதாரம், சனத்தொகை என்பது, இலங்கைத் தீவை கிந்தியாவின் உள்ளே உள்ளிளித்து விடும் அபாயம் உள்ளது, ஹிந்திய நாணயத்தை மட்டும் புழக்கத்தில் கொட்ண்டு வந்தால். இது ஓர் முக்கிய காரணம், பொதுவாக, தனக்கே உரிய நாணயத்தை கொண்டு இருக்கும் அரசுக்கள், peg செய்வது. இப்போதைய நிலையில் peg இலும் பிரச்னை இருக்கிறது. ஒரு விதத்தில், உத்தியோகபூர்வம் இல்லாத pegging நடைமுறையில் இருக்கிறதை, மத்திய வங்கி sl rupee / dollar ஐ அறிவிப்பது. ஏனெனில், கிந்தியாவின் பொருளாதாரம் பல மடங்காக உயர்வதற்கு வாய்ப்புகள் கூட, peg செய்தால், அந்த peg வீதத்தை பேணுவதற்கு, ஒன்றில் பொருளாதாரம் வேண்டும் அல்லது கிந்திய நாணயத்தை மதிவாங்கி கையிருப்பில் வைத்து இருக்க வேண்டும், அதாவது தொடர்ந்து வாங்க வேண்டும். இதுவரையில், peg செய்த நாடுகள் எல்லாவற்றனதும் அனுபவங்கள் கசப்பாக முடிந்து உள்ளது என்பதே வரலாறு (ERM, 1998 Asian financial Crisis, Swiss Franc - Euro peg). ஆனா, சொறி சிங்களசத்தின் நிலையில், pegging செய்வதில் அதை speculation ஆல் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். greece இல், 2001 / 2002 இல் இருந்து Euro வந்துவிட்டது, ஆனாலும் greece பல வருடங்கள், drachma நாணயத்தை மாற்றும் வழிவகையை வைத்து இருந்தது. அது சாத்தியக்கூறாக இருந்தது, greece, ஆகக்குறைந்தது நம்பிக்கையை கொண்டு இருந்தது. மற்றது, பல நாடுகள் ஒரே நேரத்தில் செய்தது (Euro ஐ நாணயமாக கொண்டு வந்தது), ஓர் நம்பிக்கையை உருவாக்கியதும் கூட. அனால் peg செய்யும் போது sovereignty தேய்வடையும் என்பது உண்மை. உ.ம். ஆக, கிந்தியா சொல்லலாம் கிந்திய நாணய peg ஐ குறிப்பிட தேவைகளுக்கு பாவிக்க கூடாது என்று.
-
கனடா இராணுவத்தில் 5-6 வருடமாக பணியாற்றி, பரசூட் விருது பெற்றவர். இவரின் இராணுவ அணியில் இவரே அதி கூடிய விருதை பெற்றவராக இருந்தார். உக்ரைன்க்கு பரசூட் இராணுவ பயிற்சிக்கு, பயிற்சி கொடுப்பதற்கு கனடா இராணுவதால் தேர்ந்து எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர். எதை சொல்வது என்று தெரியவில்லை. Motorbike race கூட இவரின் பொழுதுபோக்கு. அடுத்த பிறவியிலும், புகழோடு தோன்ற , புகழ் எடுக்க அஞ்சலிகள். ஒவ்வொரு நாளும், இப்படியான இழப்புக்கள் நடக்கின்றன. அனால், சொந்தத்தில், இரத்தத்தில் நடக்கும் பொது கொடுமை தெரிகிறது. இவருக்கு பெயர் வைத்ததே இவரின் குடும்ப பின்னணிக்கு ஒத்ததாக பெயரைத் தேடி, சோழ பேரரசை மீண்டும் கட்டி எழுப்பிய, விஜயாலயன் என்றே பெயர் சூட்டப்பட்டது இவரின் பெயர் விஜயாலயன்.
-
அண்மையில் ஒரு திரி தொடர்ந்தது. பிரான்சு அடிமையுரிமையாளர் அடிமைகளை இழப்பதற்கான நட்ட இடை பிரான்ஸ் கோரி, மீண்டும் ஹெய்ட்டி மீது படையெடுப்பதாக பிரான்ஸ் அச்சுறுத்த, ஹெய்ட்டி சுதந்திரம், இறையாண்மையை பிரான்சிடம் வாங்கியது அந்த நட்ட எடை கொடுத்து எனும் கருத்துப்பட பதிவு ன்று தொடர்ந்தது. அதை yarl இல் யார் சொன்னார்கள் என்பதை பார்க்கிலும், சம்பிக்க சொன்னதில் உள்ள இறுமாப்பு (அதை நான் இறுமாப்பு என்று சொல்லமாட்டேன்) போன்றவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் தெரிகிறது இறைமையை விலை (பணம், பொருள்) கொடுத்து வாங்க முடியாது என்று. இது தான் இறையாண்மைமையை கொண்டுள்ள இனம் / தேசம் இடம் உள்ள தன்னம்பிக்கையும், துணிவும். இறையாண்மை என்பது தேசம் / இனம் முழுவதும், பரவி, வியாபித்து, புரையோடி இருப்பது; வாங்கும், விற்கும் விடயம் அல்ல. இறையாண்மை நிலை நாட்டப்படுவது (நீங்கள் சமபிகாவை எது சொன்னாலும்). நான் நல்லூர் வாய் வழி வரலாற்றில் சொல்லிய கொடி கொடுப்பது என்பதை, ஒரு முறை எவரோ பலர் தமக்கு தரும் படி, கொடி கொடி கொடுப்பவர்கள் சற்று நலிந்து இருக்கையில் கேட்டு இருக்கிறார்கள் என்பதே எனக்கு நினைவு வந்தது இறையாண்மையை வாங்கலாம், விற்கலாம் எனும் கருத்தை பார்த்தபோதும், இப்பொது சம்பிக்க சொன்னதை பார்த்த போதும். கொடி கொடுப்பவர்கள் அப்படி நலிந்த நிலையில் கூட, கொடி கொடுக்கும் செலவுகளுக்கு நேரடியாந ஒரு சிறு உதவியையும் கேடகவில்லை. அவர்களின் உறவுகள் எவரும் கூட கொடி கொடுக்கும் செலவுகளுக்கு நேரடியாக உதவ மறுத்து விட்டனர். உறவினர்கள், அவர்களின் வாழ்க்கைக்கு தேவையானதுக்கே செலவுகள், பொருட்கள் போன்றவற்றை கொடுத்தனர். இது ஓர் சிறிய ஒப்பீடு. கொடி கொடுப்பதிலேயே இவ்வளவு இறையாண்மை இருக்கும் போது, தேசத்துக்கான இறையாண்மையை சிந்தித்து பாருங்கள். சொல்ல மறந்து விட்டேன், நல்லூர் கோயில் நிர்வாகம், உரிமையாளர் கூட இணங்கி இருக்க மாட்டார்கள் வேறு எவரும் கொடி கொடுப்பததற்கு.
-
கீரிமலையில்... அழிந்து கிடக்கும், சித்தர்களின் சமாதிகள்!
Kadancha replied to தமிழ் சிறி's topic in எங்கள் மண்
இவ்வளவையும் சிங்களம் புத்தம் என்று சொல்லாமல் விட்டது, தலை தப்பினது தம்பிரான் புண்ணியம். சடையம்மா அமைத்த மடம் கீரிமலையில் உள்ளது. கதிர்காமத்திலும் சடையம்மா மடம் அமைத்துள்ளார். கதிர்காமத்திலேயே சித்தி வந்ததாக சொல்லப்படுகிறது. சிங்களம் கதிர்காமத்தில் இருந்த சடையம்மா மடத்தை இடித்து அல்லது எடுத்து வேறு ஒன்றாகி வைத்து இருக்கிறது என்று நினைக்கிறன். திருச்செந்தூர் என்று நினைக்கிறேன் சடையம்மா மடம் அமைத்துள்ளார். மற்றது நகுலகிரி என்று சொல்லப்படும் இடத்தில் சடையாம மேடம் அமைத்ததாக , அது இலங்கைத் தீவிலா? நல்லூரில், தேரடியில், 63 நாயன்மார் குருபூசை மடம் என்பது, சடையம்மாவால் நிர்மாணிக்கப்பட்டு, சடையம்மா மடம் என்றே வழங்கியது. (நல்ல காலம் இது எனக்கு நினைவு வந்தது மற்ற திரியில் பதிந்து விடுகிறேன்). இந்த மடம், பொதுவாக சாமி, சித்து போக்கு உள்ளவர்களே தங்கி இருந்ததாக, பவித்ததாக என்ற கதையும் இருக்கிறது. சாதாரண பொதுமக்களால் இதற்குள் தங்கி நின்று பிடிக்க முடியாது என்ற கதையும் இருந்தாக இப்போதும் அறியப்படுகிறது. சடையம்மா எனது அம்மாவின் வழி உறவு. அனால், அதன் அடையாளம், சுவடு தெரியாமல் போய்விட்டது. எவ்வளவு தூரத்தில் உறவு என்று தெரியாது. அம்மம்மா மற்றும் அம்மாவின் அப்பாவிடம் சடையம்மா அடிக்கடி வந்து சென்றதாகவும் அவரகள் சொன்னதாகவும் , எனது அம்மாவின் 5- 10 வயதில் சில தடவை வந்து சென்றதாகவும் எனது அம்மா சொல்லி இருக்கிறார். எனது அம்மா வழிக்கு, மிகவும் கிட்ட உறவு என்றே எனது அம்மா சொன்னது, அப்பாவின் வழி க்கும் இருக்கலாம். நல்லூருக்கு கொடி தேரில் கொண்டுவருபவர்களுக்கு, நெருங்கிய உறவாகவும் சடையம்மா இருப்பார் என்றே நினைக்கிறன். மற்றது, நல்லூர் வாய் வழிக்கதையில் எழுத இருக்கிறேன் சடையயம்மா வழி முன் சந்ததி, நல்லூர் முடிகாரர் (இதை பற்றி எழுத இருக்கிறேன்) இப்போதைய வழி பெரும்பகுதி ஆகும். சடையம்மாவை, விக்ரமாகவே வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் பிரதிஸ்டி செய்யப்பட்டு இருக்கிறது என்று நினைக்கிறன். உங்களுக்கும் எவருக்காவது மற்ற சித்தரை பற்றி தெரிந்தால் பதியவும். வாய் வழி வரலாறையும் பதியவும். வெள்ளை அண்ணை எனப்படும் சித்தர் - அனால் அவர் மிகவும் மற்றவர்களோடு பழகுவார் என்று அறிந்துள்ளேன். யோகர் வெள்ளை அன்னையின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதாக. இதை பிறிம்பாக எழுதுகிறேன். யோகரின் சமாதிக்கு கிட்டத்தில் வெள்ளை அன்னை சுமதியும் இருக்கிறது என்று நினைக்கிறன். -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Kadancha replied to goshan_che's topic in வாணிப உலகம்
இவை நேர்மாறு etf - inverse exchange traded fund. ETF என்பது பல பங்குகள், வேறு நிதி கருவிகள் (debt, credit போன்றனவும், அடிப்படை commodities போறனவும், மற்றும் அதற்கு வேறுபட்ட அல்லது இடைப்பட்ட நிதி அமைப்பை அடிப்படையாக கொண்டு) உருவாக்கப்படுவது. Inverse ETF என்பது, அதன் பெயருக்கு ஏற்ப, ETF இல் அடிப்படையாக இருக்குக்கும் நிதி கருவிகள் இறங்கும் போது ஏறும், நிதி கருவிகள் ஏறும் போது இறங்கும். அதாவது, trade இல் உள்ள shorting ஐ போல , பெரிய ரிஸ்க் எடுக்காமல், சாதாரண முதலீட்டாளர்கள் முதல் இடுவதற்கு. Inverse ETF இருக்கும் பங்குகல்,சுட்டிகள் என்பதன் ஏற்ற, தாழ்வை கொண்டு, Inverse ETF இந்த நிகர ஏற்றம், இறக்கம் இருக்கும். -
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍
Kadancha replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
முதலில் கிளளைக் கதைகள், விட்டால் மறந்து விடுவேன். இப்போதுள்ள நல்லூர் தேரில் பீடத்தின் (உள்ளே) , போத்துக்கேயருக்கு முன்பு இருந்த தேரில் இருந்த பெரும் மரத் துண்டு ஓன்று இருப்பதாக ஓர் கதை இருக்கிறது. அதை போத்துக்கேயரிடம் இருந்து மறைத்து, நல்லூரை மீண்டும் கட்டும் போது கொடுத்தது, இப்பொது கொடி வழங்குபவரின் (அதாவது இப்பொது சிறிய தேர் வைத்து கொடியை நல்லூருக்கு கொண்டு வருபவர்கள் (youtube இல் இருப்பது), அதாவது எனது அம்மாவின் வழி) முனைய சந்ததி. இப்போதுள்ள, கொடி கொண்டு செல்லப்படும் சிறிய தேர் (youtube இல் இருப்பது), போத்துக்கேயருக்கு முன்பு இருந்த தேரின் அழிவு எச்சத்தை மறைத்து, பாதுகாத்து, அந்த எச்சங்களை அடி பீடத்தில் உள்ளே வைத்து கட்டப்பட்டதாக. இதை, எனது அம்மம்மாவின் சகோதரரும் அவ்வப்போது சொல்லி இருக்கிறார். இரண்டுமே, நடந்து இருக்கலாம். பெரிய மரப்பகுதியை பகுதியை நல்லூர் மீண்டும் கட்டப்படும் போது (இப்போதுள்ள) நல்லோர் தேருக்கு கொடுத்து விட்டு, மிகுதி பகுதிகளை கொண்டு கொடி கொண்டு செல்லப்படும் (அவர்களின்) தேரை கட்டி இருக்கலாம். -
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍
Kadancha replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
முந்தைய பதிவில் சொன்ன வரலாற்று எச்சம் பற்றி சொல்லுவதற்கு காரணம், இப்போதுள்ள நல்லூரை 1700 களில், ஒல்லாந்த ஆட்சியில், மீண்டும் கட்டும் போது, இந்த இரண்டும், கொடி சீலை வழங்குதல் (முன்னைய பதிவுகளில் youtube இணைப்பு), மற்றது சூரன் போரில் முடி வீரர்களாக (நவ வீரர்களை) பிரதிநிதிப்பதும் நினைவு (இதை ஓரளவு விளக்குகிறேன்) மீண்டும் முக்கிய (வரலாற்று நினைவு) சடங்குகளாக கட்டி எழுப்பப்பட்டது. இதில் கிளைக் கதைகள் உள்ளது நினைவு வந்ததால் சொல்லிவிட்டு, மீண்டும் சூரன் போர், அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம். உங்களுடைய கேள்விக்கு, வரலாற்று (புராண வரலாறு கூட) ஊடான பதிலாக அடுத்த 2-3 பதிவுகளில் இருக்கும். -
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍
Kadancha replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
இது எனது அவதானமும் முடிவும், போத்துகேய குறிப்புகள் சொல்வது பொய் அல்லது திரிபு என்று. போத்துக்கேய குறிப்பு சொல்வது, சங்கிலியனுக்கான சிரச்சேதம், மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சங்கிலியன் செய்ததன் காரணமாக. அது நடந்த போது ஆட்சியில் இருந்தது (மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சங்கிலியன்) , சங்கிலியன் 1 (செகராசசேகரம்). அனால் போத்துக்கேயர் பிடித்தது சங்கிலி (சங்கிலி குமாரன்), அவரை சங்கிலியன் 2 என்று இப்பொது அழைக்கும் வழக்கம் வந்து விட்டது. போத்துக்கேயர் சங்கிலிக்கு (சங்கிலி குமாரன்) சிரச் சேதம் செய்தது, சங்கிலியன் 1 ((செகராசசேகரம்) ஆல் மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சிரப் சேதம் செய்ததுக்கு என்பதி பொய்யாக, திரிப்பாக உள்ளது. இதில் எனது உறவினர்களும், சங்கிலியின் படையினராக, குடும்பம், குடும்பமாக அழிக்கப்பட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். முதியவர்களும் அது நடந்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால், போத்துக்கேயர் எதிர்த்தவர்களை, அரசோடு நின்றவர்களை, தொடர்பு உள்ளவர்களை, ஏன் அவர்களது சட்டங்களை மீறியவர்களை குடும்பம் குடும்பமாகவே அழித்தனர். அதனால், தெளிவான தொடர்பு இல்லாமல் இருக்கிறது. அனால், வரலாறு எச்சங்கள் இருக்கும். இந்த எச்சம் இப்பொதும் தொடர்வது, நல்லூர் சூரன் போரில். -
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍
Kadancha replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
கந்தர்மடம் என்ற பெயரிலேயே தெரிகிறது அது சைவ சமயம் மற்றும் கோயிகளுடன் தொடர்புபட்ட இடம் என்று. -
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍
Kadancha replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
போத்துக்கேயருக்கு பின்பே, இப்படி எழுதி கொடுத்தது சரியாக இருக்கும். அனால், நீங்கள் சொன்னது நல்லம், ஏனெனில், பல கிளை கதைகள் எனது நினைவுக்கு வருகிறது. முழு இராச்சியமுமே (சைவ) சமயம் மற்றும் கோயில்களின் சொத்தாக இருந்தது என்றும் . இராச்சியம் கோயில் மற்றும் மதத்தின் பாதுகாவர் என்றே நிலையில், காணிகளை உரிமம் மாற்றம் செய்யும் உரிமை சமயத்தின் பெயராலேயே இராச்சியத்துக்கு வந்தது என்றும். ஏனெனில், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயில் இருந்த இடத்தில, இப்பொது St James Church இருக்கும் இடத்தில் ஓர் உரிமம் பிரச்னை இருக்கிறது. அரசி வேதத்துக்கு மாறிய பின் Church கட்டுவதற்கு கொடுத்ததாக. அனால், மாறியதும் காணி உரிமம் மாற்றம் செய்யும் உரிமையை அரசி இழந்து விட்டதாகவும், அதனால், St James Church க்கு அந்த காணி உரிமம் இல்லை என்றும். இதை எனது முதியவர்கள், அவர்களுக்கும் வாய்வழியாக சொல்லப்பட்டு வந்துள்ளது. அனால், போத்துக்கேயர் ஆட்சியில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்கள் அனைவர்க்கும் இது பொருந்தும். ஏனெனில், அவர்களின் காணி, அவர்களுக்கு இராச்சியதால் வழங்கப்பட்டு இருந்தால், அது அவர்கள் சைவ சமயத்தினர் என்ற அடிப்படையிலேயே காணி உரிமம் கொடுக்கப்பட்டு இருந்து இருக்க வேண்டும். அனால் சங்கிலி மதம் மாறவில்லை என்றும்,போத்துக்கேயர், அரசிக்கு , காணியை தந்தால் சங்கிலியை உயிருடன் விடுவதாக சொல்லி, காணியை அரசி எழுதிய பின், அரசியை ஏமாற்றி சங்கிலியை சிரச்சேதம் செய்தது நடந்தது என்றும் ஓர் வாய் வழி கதை இருக்கிறது. அனால், போத்துகேய வரதலற்று குறிப்புகள் சொல்கிறது, சிரப் சேதத்தை போது, சங்கிலி, அரசனகா இருப்பதை காட்டிலும் இயேசுவின் கூலியாக சாவதே மேல் என்று சொல்லியே சிரச்சேதத்தை வாங்கியதாகவும் (இது பின்பு அறிந்தது, இது வாய்வழி கதை இல்லை). இது உண்மையாக இருப்பதற்கு இடம் இருக்கிறது, மன்னாரில் நடந்ததை வைத்து பார்த்தால். இதுவரையும், மன்னாரில் சங்கிலியன் (இது சங்கிலியன் 1, செகராசசேகரம்) மதம் மாறியோரை சிரச்சேதம் செய்ததாக. அவரது மகனும் கத்தோலிக்கத்துக்கு மாறியதால் மனையும் சங்கிலியன் சிரப் சேதம் செய்ததாகவுமே (போத்துகேய) குறிப்புகள் இருக்கிறது. அனால், போத்துக்கேயேரே அங்கு இருந்தவர்களை Church கட்டுவதற்கு அத்திவாரத்துக்கு பலியாக இடுவதற்கு சிரச் சேதம் செய்ததாக, ஏனெனில், அவர்கள் போத்துக்கேயரை எதிர்த்ததால். சங்கிகிலியன் முதலில் மகனை அனுப்பியதாகவும், போத்துக்கேயர் மகனை உள்வீட்டு சூழ்ச்சியால் பிடித்து கொன்று விட்டு, சங்கிலியன் மீது பழியை போட்டு விட்டார்கள் என்றும் கதை இருக்கிறது. -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Kadancha replied to goshan_che's topic in வாணிப உலகம்
gold குறைகிறது. அதனால் us data கூடும் போல தெரிகிறது . இவை சந்தை எதிர்பார்ப்பு. அனால், fed balance sheet ஐ இருக்க தொடங்கிவிட்டது. இந்த கிழமையில் இருந்து, 50 billion முதலில் quantitative tightening. நேரம் இல்லை, வேறு தனிப்பட்ட அலுவல் காரணமாக. terra luna பற்றியும் ஓர் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதியபோது அழிந்து விட்டது. மீண்டும் எழுத நேரம் இல்லை. ஆனால், டெர்ரா luna, 4 billion usd பெறுமானத்தை வைத்து இருந்து இருந்தால் இது நடந்து இருக்கா முடியாது என்ற ஓர் கருதும் இருக்கிறது. terra லுனாவில் நடந்தது , ஏறத்தாழ, george soros இன் pound speculation ஆல், 1992 பிரித்தானியா erm இல் வெளியேறியது போல . -
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍
Kadancha replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஆம், இன்னொன்றையும் மறந்து விட்டேன். தாய் முன்பே சொல்லி இருந்தால் ஓர் தொடர்ச்சி இருக்கும். செம்மணியில் உள்ள வயல்கள் இப்போது தனியார் கையில் உள்ளதாயினும், முழு வயல்களுமே ஏதொ ஓர் கோயிலிலுக்கு சொந்தமாக இருந்து இருக்க வேண்டும். அநேகமாக அவை சிவன் கோயில்களாக இருந்து இருக்கும். இப்போதும் செம்மணிடயில் உள்ள வயல்களில் ஓர் பகுதி சட்ட நாதர் கோயிளுக்கும், வண்ணை வைதீஸ்வரன் கோயிலுக்கும் முதல் விளைச்சல் அனுப்புகிறார்கள் என்று நினைக்கிறன். அனால், செம்மணியில் உள்ள வயகல்ளில் ஓர் பகுதி சிதம்பரம் கோயிலுக்கும் விளைச்சல் அனுப்பியதாக அப்போது இருந்த எனது பல முதுமையானவர்கள் சொல்லி அறிந்து இருக்கிறேன். - 1960 மற்றும் 70 தொடக்கம் வரை இது நடந்து இருக்க வேண்டும். பின்பு, பணம் கொடுத்ததாக. அதுவும் நின்று இருக்கும் என்று நினைக்கிறன். -
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍
Kadancha replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஆட்டு இரத்தத்தோடு சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வும் இருக்கிறது. நல்லூரில் ஆடு வெட்டுவதை முன்பு அறிந்து இருந்தாலும் மறந்து விட்டேன், இதை இப்பொது உயிருடன் உள்ள மிகவும் வயதாபன ஒருவரின் கதைக்கும் போதே, மாவிளக்கு ஆட்டு இரத்தம் சம்பந்தமான கதை வந்து நினைவு படுத்தினார். நல்லூரில் அல்லது மிகவும் புராதன முருகன் கோயிலில் (இது எனது அம்மா சொன்னது அப்போது - முழுவதையும் வாசிக்கவும்) மாவிளக்கு போடும் போது குங்குமம் பூசியே மாவிளக்கு ஏற்றப்படும். அநேகமாக நான் அம்மாவுடன் போவது மாவிளக்கு போடுவதற்கு (இப்பொது மாவிளக்கு ஏற்றுவதற்கு நல்லூர் கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறதா என்பது தெரியவில்லை) . தேனும், நெய்யும், தினை மாவுன் கலந்து மாவிளக்குகளை மெழுகி விட்டு குங்குமம் பூசும் விதத்தை காட்டி, என்னை மிகுதியான மாவிளக்குகளிற்கு குங்குமம் பூசி அடுக்கி வைக்குமாறு சொன்னார். நான் குங்குமம் பூசாமல் அடுக்க, ஒரு விதமான கடியும் தொனியில் சொல்லி, குங்குமம் பூசி அடுக்குமாறு சொன்னார். எல்லாம் முடிந்து நான் கேட்டேன் ஏன் குங்குமம் பூச வேண்டும் என்று, எனது அம்மா (எனது அமம்மா அவரிடம் சொன்னதாக) சொன்னது முருகனுக்கு தினையும் ஆட்டு இரத்தமும் கலந்த நைவேத்தியம் வைத்து வழிபாடு இருந்ததாக. அதை தொடரும் வழிக்கே, குங்குமம் மாவிளக்குக்கு பூசப்படுவதாக. பல காலத்தின் பின்ப எனது அம்மா, சைவ சமயம் மற்றும் பொருள் சொல்வதில் ஆழமாக ஈடுபட்ட பொது, ஒருமுறை திருமுரு காற்றுப் படையில் எனது அம்மா கண்டதை வாசித்த காட்டினார். திருமுருகாற்றுப் படையில் இருக்கிறது முருகனை வழிபட ஆடு இரத்தமும் தினையும் கலந்த நைவேத்தியம் வைத்து வழிபாடும் முறை. எனது அம்மா சொன்னது, வாய் வழியாக வழங்கி வந்த கதை உண்மையாகத் தன் இருக்க வேண்டும். அதனால், ஆடு வெட்டுவது முருக வழிபாட்டில் அநேகமாக இருந்து இருக்க வேண்டும். -
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍
Kadancha replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
நல்லூர் கோயிலில் ஓர் வழக்கம் இருந்தது. அதாவது, வைரவர் மடைக்கு ஆடு வெட்டுவது. இதை சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள் இப்பொது. ஆனால், ஆடு வெட்டுவது நடந்தது. இதனுடன் தொடர்பு பட்ட சுவாரசிய சம்பவம் ஒன்றும் நடந்தது. ஆட்டு வெட்டுவதற்கு முதல் ஆட்டின் காதை கூறி கத்தியால் கீறி, அந்த இரத்தம் வைரவர் படையலுக்கு வைக்கப்படும். வைரவர் மடை பூங்காவனத்துக்கு அடுத்த நாள். ஆடு வெட்டுவதை நாவலர் வெகுவாக எதிர்த்தார். ஒருமுறை நாவலர், வைரவர் மடை நேரத்தில், ஆட்டுக்கு பதில் என்னை வெட்டுங்கள் என்று, வெட்டுபவர்களுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டும் வகையில் (இது வெட்டுவார்கள் நினைத்தது), ஆட்டின் கதை கீறுவதை தடுக்க முற்பட, நாவலர் எதிரிபார்க்கவில்லை, வெட்டுபவர்களும் நாவலரை எதிர்ப்பார்கள் என்று. வாக்குவாதம் முற்றி, வெட்டுவபவர்கள், சரி நாவலரை பிடி அவரின் காதை வெட்டுவோம் என்று கத்தியை நாவலருக்கு நீட்ட, நாவலர் ஓடி விட்டார் என்று அந்த நேரதில் இருந்த பலருக்கு தெரிந்தும் பார்த்தும் இருந்தவர்கள் இருந்தார்கள் (இப்பொது ஒருவரும் இல்லை). வெட்டுபசவர்கள் சொன்னது, நாவலர் தன்னை காட்டி கதை விடுகிறார், நாவலரின் நடிப்பை உடைப்பதா ற்கே தாம் கத்தியை நீட்டியதாகவும், உண்மையில் நாவலரின் காதலி வெட்டும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை என்றும்.