Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1073
  • Joined

  • Last visited

  • Days Won

    25

Posts posted by Kavi arunasalam

  1. On 24/3/2023 at 20:12, நிழலி said:

    தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது.

    தற்கொலைக்கு முயன்றவர் எதற்காக எமர்ஜென்சி விளக்குகளைப் போட்டிருந்தார். “மோட்டு மனுசன்” என்று உங்கள் மனைவி சொன்னது சரிதான்.

    அடுத்தநாள்  ஊசிக்கணவாய் ருசித்ததா?

  2. On 24/3/2023 at 18:30, நிழலி said:

    மனைவியின் இரண்டு சகோதரிகள் உட்பட எல்லாரும் கனடாவில் தான் உள்ளனர் என்பதால், ஊருக்கு போகும் போதோ அல்லது சென்னைக்கு போகும் போதோ குடும்பமாக செல்வதில்லை. அத்துடன் டிக்கெட் செலவில் இருந்து அங்கு தங்கும் செலவு வரை அதிகம் (உறவுகளின் வீடுகளில் தங்குவதில்லை).

    செலவைப் பற்றியல்ல வசதியாக இருக்குமே என்பதால்தான் நான் அப்படிக் குறிப்பிட்டிருந்தேன். நான் தனியாகத்தான் பயணிக்கிறேன் என்பதால் எனக்கு உங்கள் போக்கு பிடித்திருந்தது.

  3. On 24/3/2023 at 16:03, நிழலி said:

    ஆனாலும் இக் காலத்திலும் இப்படி செய்வார்களா என்ற கேள்வி வருகின்றது. முக்கியமாக இக் காலத்தில் எங்கள் சமூகத்தில் இப்படி நடப்பதில்லை அல்லவா? 

    B5-FB0047-C573-41-FB-86-FC-BD065-C1-BA76

    On 24/3/2023 at 16:03, நிழலி said:

    கதை ஊரிலா நிகழ்கின்றது?

    கொடிகாமம்,சாவகச்சேரி, வவுனியா  எல்லாம் வருகிறதை கவனிக்கவில்லையா நிழலி?

    • Like 1
  4. On 20/3/2023 at 22:17, கிருபன் said:

    இரட்டையர்களாக நடித்த ஜோஜூ ஜார்ஜின் இயல்பான நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் மீசை கூட ஒரே மாதிரியாக இருக்கவேண்டுமா?

    இறுதிக் காட்சியில் கண்ணாடியில் தோன்றும் விம்பம் அச்சு அசலாகத் தன்னைப் போல் இருப்பதால்தான் அந்த முடிவை அவர் எடுக்கிறார். மீசையும் ஒரேமாதிரி இருப்பது என்னை குழப்பவில்லை.

    கன்னத்தில் மரு, அல்லது வெட்டுக்காயம், நிறத்தில் மாற்றம், குரலில் வேறுபாடு என எதையும் சேர்க்காமல் தனது நடிப்பால் மட்டும் இரண்டு பாத்திரங்களையும்   வேறு படுத்திக்  காட்டியிருக்கிறார் ஜோஜூ ஜோர்ஜ்.  கதை சொன்ன விதம், நடிப்பு என  படத்தில் எனக்கு எல்லாமே பிடித்திருந்தது

    • Like 2
  5. விடுமுறைக்குப் போகும் போது மனைவி பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு தனியாகப் போகும் உங்களின் போக்கு பிடித்திருக்கிறது

    F317-C254-BD07-4989-8-CE4-8-FFB9-A21-F50

    • Like 5
  6. 15 hours ago, நிழலி said:

    நேற்று இப்படத்தை Netflix இல் பார்த்து முடித்தேன். நேற்று முந்தினம் பார்க்க தொடங்கி, அரைப்பகுதியில் நிறுத்தி விட்டு மீண்டும் மிச்சத்தை பார்த்து முடித்தேன். இதன் காரணம், படத்தின் நீளம் மற்றும் பொறுமையின்மை.

    நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்மூட்டியின் நடிப்பு நன்றாக இருந்தது. ஒரு கிராமத்தை அழகாகப் படம் பிடித்து இருக்கிறார்கள். ஒப்பனை சிறிதும் இல்லாமல் நடிகர்கள் படத்தில் வந்து போவது சிறப்பு.

    வேளாங்கண்ணி யாத்திரை முடிந்து விடுதிக்கு பணம் கட்ட வரும் போது திருக்குறளுக்கு விளக்கம் கேட்கும் மம்மூட்டி, பஸ்ஸை விட்டு இறங்கி கிராமத்துக்குள் ஒரு வீட்டுக்குள் சென்று தமிழ் கதைக்கும் போது ஒரு குழப்பம் வந்து போகிறது. அங்கேதான் கதையிலேயே ஒரு ஈடுபாடு வருகிறது.

    மம்மூட்டி மட்டுமல்லாமல் மற்றவர்களும் கிராமத்துக்குள் படம் முழுவதும் சுற்றிச் சுற்றி வருவது, நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல படம் பார்ககும் போது ஒரு அலர்ச்சியைத் தருவதை மறுப்பதற்கில்லை. ஒருவேளை இந்தப் படத்தை நண்பகலில் பார்ப்பதற்காகவே மம்மூட்டி தயாரித்து நடித்திருக்கிறாரோ தெரியவில்லை.

    பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு குறும்படமாக எடுக்க வேண்டிய ஒரு கதையை ஒன்ரரை மணித்தியாளத்துக்கு இழுத்து வைத்து நித்திரையை வரவழைத்திருக்கிறார்கள்.

    தலைக்கூத்தல்பார்த்தீர்களா? Netflix இல் இருக்கிறது

    • Like 2
  7. 12 hours ago, ரஞ்சித் said:

    நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். இது சபாரட்ணம் அவர்கள் எழுதிய தகவல் என்பதால் நான் சரி பிழை பார்க்கவில்லை. 

    ரஞ்சித்,

    குமார் அச்சகத்தை காந்தி அச்சகம் என்று தவறுதலாக நான் குறிப்பிட்டுவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

    70களில்தான் எனக்கு அவர்களுடனான பழக்கங்கள் கிடைத்தன. ஒருவேளை முன்னர் அவர்கள் நெல்லியடியில் அந்த அச்சகத்தை வைத்திருந்தார்களோ எனக்குத் தெரியாது. ஆக திரு சபாரத்தினம் எழுதியது சரியாகக் கூட இருக்கலாம். எது எப்படியோ பருத்தித்துறையில் இருந்த குமார் அச்சகம் 1984இல் சிறீலங்கா இராணுவத்தால்  எரிக்கப்பட்டது

    13 hours ago, MEERA said:

    அண்ணா புலோலி என்ற ஊரின் சரியான அமைவிடம் எது? மேலைப் புலோலி என்றும் ஊர் உள்ளதா?

    MEERA,

    பருத்தித்துறைக்கு முன்பாக உள்ளதுதான் புலோலி. இதற்கு தெற்கு, கிழக்கு, மேற்கு என பிரிவுகள் உண்டு. இதில்  புலோலி மேற்குதான் மேலைப் புலோலி. மேலைப் புலோலி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருபவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்கள்.

    • Thanks 1
  8. On 17/2/2023 at 07:03, ரஞ்சித் said:

    சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட கிட்டு வல்வை சிதம்பராக் கல்லூரியில் கல்விகற்றவர். அவரது தந்தை நெல்லியடியில் அச்சகம் ஒன்றை நடத்திவந்தவர்,

    கிட்டு என்கின்ற கிருஸ்ணகுமார் தனது மேற்படிப்பை மேற்கொண்டது பருத்தித்துறையில் உள்ள  புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை (வேலாயுதம் மகா வித்தியாலயம்) இல். மற்றது அவர்களதுகாந்தி அச்சகம்இருந்தது பருத்தித்துறை  முதலாம் குறுக்குத் தெருவையும் நகரையும் இணைக்கும் பகுதியில். இன்னும் விபரமாகச் சொல்ல வேண்டுமானால் வீரபாகு கிட்டங்கியின் தென்பகுதியில்.  இராணுவம் அவரைத் தேடும் வரை தனது தமையனான காந்திதாசனுக்கு உதவியாக அவர் அங்கு பணியாற்றியிருக்கிறார்.

    On 17/12/2022 at 14:00, ரஞ்சித் said:

    வீட்டில் செய்யும் வேலைகளுக்காக, சிறு உதவிகளுக்காக கைப்பணமாகத் தனக்குக் கிடைக்கும் சிறியதொகைப் பணத்தினைக் கொண்டு பிரபாகரன் காலைக்கதிர் எனும் மாதாந்த விஞ்ஞான வெளியீட்டையும், மஞ்சரி எனும் மாதாந்த செய்தித் தொகுப்பையும் வாங்கிப் படித்தார்.

    கலைக்கதிர்

    • Thanks 1
  9. நல்லூரானும் வெறும் மேலோடு திரியிரது காதலுக்குத்தானோ? 

    Dr.T.கோபிசங்கர் கடைசிவரை  வெறும் மேலோடு நல்லூருக்குப் போகவேயில்லை என்பது தெரிகிறது.😀

    • Haha 1
  10. 3 hours ago, இணையவன் said:

    வள்ளுவருக்கும் கம்பன் கழகத்துக்கும் என்ன சம்பந்தம் ? வள்ளுவரைக் கோயில் வளாகத்துக்குள்ளும் கொண்டுவந்து விட்டார்கள்.

    கம்பனை விட்டாலும் அம்மனுக்கும் வள்ளுவருக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை.

    அத்தோடு தமிழரசன் ஆவதற்கு என்ன என்ன தகமைகள் வேண்டும் என்று சொன்னால், முடிந்தால் நாங்களும் முயற்சிக்கலாம்

    • Haha 1
  11. 2 hours ago, goshan_che said:

    நன்றி ஐயா. இங்கேயும் அவர் பற்றிய கட்டுரைதான் உள்ளது. அவரின் படைப்புகளின் தரவேற்றம் பற்றிய தகவல்கள் இல்லை. 

    கட்டுரைக்குக் கீழே ஒரு வீடியோ லிங் இருப்பதை கவனிக்காமல் விட்டிட்டீங்களே கோசன்.

    • Thanks 2
  12. On 18/7/2022 at 12:29, goshan_che said:

    அவர் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட ஒலிநாடா இல்லாவிடிலும் பின்னர் ஜேர்மனி வந்த போது செய்தவை நிச்சயம் பதிவில் இருக்கும் என நம்புகிறேன்

    கோசன், உங்கள் நம்பிக்கை இங்கே  நிறைவேறுகிறதா எனப் பாருங்கள்

    https://nathi.eu/index.php/blogs-68340/127-2bloggs/579-2014-08-22-06-39-56

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.