-
Content Count
70 -
Joined
-
Last visited
Community Reputation
78 GoodAbout பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
-
Rank
புதிய உறுப்பினர்
- Birthday வெள்ளி 17 மே 1963
Profile Information
-
Gender
Male
-
Location
Tirunelveli, Tamilnadu, India
-
Interests
சைவ, வைணவ தத்துவங்கள், சைவ, வைணவ இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சைவ சித்தாந்தம், தமிழர் பண்பாடு, நாகரிக வரலாறு, அரசியல், கணணி அறிவியல்
Recent Profile Visitors
2,434 profile views
-
அருள்மொழி வாதிரியார் started following பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
-
இதற்கான உங்கள் பதில் குறித்து சண்முக சுந்தரம் துரைராசன் (Shanmuga Sundaram Durairajan) கருத்து இட்டார்: ”மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தளவிற்கு பிராமணர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்?” என் உயிர் நண்பரும் பிராமணரே. மிகச் சிறந்த மனிதர் ஆயினும் அவர் மனம் நோகாமல் என் கருத்தை முன் வைக்க உங்கள் பதில் மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றிகள் அய்யா.
-
இதற்கான உங்கள் பதில் குறித்து விவேகானந்தன் சபாபதி (Vivekanandhan S) கருத்து இட்டார்: ”மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் பிராமணர்கள் இந்தளவிற்கு விமர்சிக்கப்படுகிறார்கள்?” வரலாறு மற்றும் சமூக நீதி புத்தகங்கள் நூறு படித்து பெற்ற திருப்தி உங்கள் பதிலில் கிடைத்தது அய்யா,சோமசுந்தரம் அய்யா கண்டிப்பாக குவாராவில் எழுதும் நாள் கூடிய விரைவில் அமைய ஆவலாய் எதிர்பார்த்து காத்திருப்பேன்.
-
தமிழ் Quora வில் ஐயா சோமசுந்தரம் அவர்களின் பதிவிற்கு, ஐயா அசோகன் அண்ணாவி சுப்பிரமணியன் அவர்கள் அளித்த பின்னூட்டம் சோமசுந்தரம் ஐயாவுக்கு உரியது என்பதால், இங்கு மீள்பதிவு செய்திருக்கிறேன். ------------- வசைபாடி களை அறிவார்ந்த கருத்துக்களால் வெல்ல முடியும் என்பதை நீருபணம் செய்துள்ளீர்கள் சகோதரரே. நீண்ட நாளுக்கு பிறகு நீண்ட நெடிய பதிலை படித்ததில் பெரும் மகிழ்ச்சி நன்றி. --------//
-
ஐயா சுப.சோமசுந்தரம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! "மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் பிராமணர்கள் இந்தளவிற்கு விமர்சிக்கப்படுகிறார்கள்?" என்ற வினாவுக்கு, இப்பதிவையே விடையாக, தமிழ் Quora தளத்தில் மீள்பதிவு செய்தேன். ஐயா சுப.சோமசுந்தரம் அவர்களின் விடையைக் காட்டிலும், சிறந்த விடையை, மேற்கண்ட Quora வினாவுக்கு, இப்பூமிதனில் யாங்கணும் யாம் கண்டதில்லை! உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை! இவ்விடையில், வெறுப்பு இல்லை! தோழமை உண்டு! கனிவு உண்டு! பாசம் உண்டு! தவறைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நட்பு உண்டு! நடந்தவை போகட்டும். இனியாவது நன்மை நடக்கட்டும். மனம் திருந்த
-
பேசாப் பொருளைப் பேசத் துணிந்த பெருந்தகை! மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார் ( 1289) என்ற வள்ளுவன் கண்ட அறவாழ்வில் பொருளீட்டி, இன்பம் துய்க்கும் நனி நாகரிகத் தமிழன் வாழ்ந்த வாழ்வின் பதிவுகள் நம்தம் தமிழரின் செவ்வி தலைப்பட்ட காதையைச் செருக்குடன் செப்பும். அறமில்லாப் பொருளீட்டும் அய்ரோப்பிய விலங்கியல் தடத்தில் பயணிப்பதை நனி நாகரிகமெனக் கொண்ட கீழ்மையை, செவ்வியுடன் கோடிட்ட தகைமை நனி நன்று!
-
வாழ்வில் கலந்த வள்ளுவம் நம்முடன் வாழ்கிறது என்பதை உணர்ந்து துய்ப்பவர் பேறு பெற்றோர். வள்ளுவமே மழை போன்று 'துப்பார்க்குத் துப்பாய துப்பார்க்குத் துப்பாக்கித் துப்பாயத் தூவும் வள்ளுவம்' என வள்ளுவத்தை வாழ்ந்து, வழங்கி, உண்டு, உயிர்த்து, பகிர்ந்து . . . அருமை! வாழ்க்கைப் பயணத்தின் இறுதி இலக்கு இறைவன் திருவடிகள் என்பதை முன்னிறுத்தி, வாழ்வே மாயம் என்று பயணத்தை நரகமாக்கும் பயனிலிகளின் அறியாமையை எண்ணி , அவர்களுடன் பயணிக்கும் இறைவன் நகுவான்.
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும், சமஸ்கிருதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்குத் தமிழக தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "ச
-
- 1
-
-
- அண்ணா பல்கலைக்கழகம்
- தத்துவம்
-
(and 2 more)
Tagged with:
-
திருஞானசம்பந்தர் தேவாரம் சமணர் பெண்களைக் வன்புணரச் சொல்லுகிறதா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே" என திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுவது ஏன்? வரலாறு நெடுக மதம் என்பது வன்முறை சார்ந்தே வளந்திருக்கும்போது அது அன்பை போதிக்கிறது என பொய்யுரைகள் புகல்வதேன்? மேற்கண்ட வினா 'Quora' தமிழ் தளத்தில் வினவப்பட்டு, பலநாட்கள் கழித்தே என் கண்ணில்பட்டது. ஐயம் வினவுவ
-
கி. மு. 6-வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்ததைக் காட்டும் கீழடி அகழாய்வுகளின் தொல்காப்பியத் தொடர்புகள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் கிமு ஆறாவது நூற்றாண்டிலேயே தமிழ் உயரிய எழுத்துவடிவம் கொண்டிருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வுகள் உறுதிசெய்கின்றன! கீழடி தரும் புதிய ஆதாரங்களின் பின்புலத்தில், நம் தொன்மையான இலக்கியங்களில் காணப்படும் இலக்கியச் சான்றுகளில் சிலவற்றை மீள்வாசிப்பு செய்வோம்! 1.கீழடி அகழாய்வுகள் காட்டும் முதல் இலக்கிய
-
கவியரசு கண்ணதாசனின் நெத்தியடி பதில்! - "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்! அது தெரியாமல் போனாலோ வேதாந்தம்!" பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பது ஏன்? - இது 'quora' தளத்தில் கேட்கப்பட்ட வினா. இவ்வினா இரண்டு வினாக்களை உள்ளடக்கியது! 1. முதல் வினா: அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது ஏன்? 2. அத்துவைத வேதாந்தம் பலராலும் ஏற்ற
-
மிக்க நன்றி ஐயா. எழுத்துக்கு ஊக்கம் தரும் ஆக்க சக்தி தங்கள் பின்னூட்டம்.
- 6 replies
-
- திருக்குறள்
- ஆசிரியர்
-
(and 3 more)
Tagged with:
-
ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ல் பல்கலைக்கழக ஆசிரியர் தின விழாவில் அறிவியற்புல முதன்மையர் என்ற முறையிலும், மூத்த பேராசிரியர் என்ற முறையிலும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். புதிய செய்தியினை இவ்வாண்டு ஆசிரியர் தின வாழ்த்தாகத் தெரிவிக்க மனம் விரும்பியது. ஆசிரியர் இன்னார் என்று வரையறுக்காத குறளாசான்! வேண்டுவதை வேண்டியப
- 6 replies
-
- 3
-
-
- திருக்குறள்
- ஆசிரியர்
-
(and 3 more)
Tagged with:
-
பெண்ணிற் பெருந்தக்க யாவுள !
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in சமூகச் சாளரம்
'பாவநாசம்' திரைப்படத்தில் (கதையில் வரும் கொலை, சிக்கல் போன திரைக்கதைக் கருக்களைத் தவிர்த்துவிடவும்) கமல்ஹாசன் கிட்டத்தட்ட தம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, அனுபவித்து வாழ்ந்திருப்பார். திரைக்கதை என்பதால் அவ்வாறு அமைத்திருக்க இயலும்தான்; அதிலும், நடிப்பில் யதார்த்தத்தை அற்புதமாகத் தருவதில் கமல் ஒரு பிறவிக் கலைஞன். நம் வாழ்விலும் நாமும் நமக்குக் கிடைத்த அற்புதமான தருணங்களை இவ்வாறு உணர்ந்து, ரசித்து, ருசித்து, பாராட்டி வாழ்ந்தால், இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கவைத்த திரைப்படம். ஒரு சில நாட்கள் தொடர் நினைவில் நின்று, பின் அவ்வப்போது நிழலாடிப் போகும். இப்பதிவை வாசித