Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18308
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals 185/5 Delhi Capitals. (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
  2. 28 MAR, 2024 | 12:32 PM அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  3. மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  4. 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU 28 MAR, 2024 | 12:12 PM சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான். கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது. சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
  5. 28 MAR, 2024 | 09:33 PM இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை (28) காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் . இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார். குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது . https://www.virakesari.lk/article/179920
  6. காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. 24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது. தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
  7. 28 MAR, 2024 | 09:36 PM யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார். அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  8. பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
  9. பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3 28 MAR, 2024 | 04:19 PM பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார். கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர். "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக மட்டுமே அமையும். தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார். அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்தார். இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910
  10. வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  11. கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
  12. பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார். பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர். பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார். பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார். பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது. பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  13. 28 MAR, 2024 | 11:04 AM நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  14. Published By: SETHU 28 MAR, 2024 | 02:08 PM சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர். கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  15. கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
  16. சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம். பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக. பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது. 2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும். பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார். படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
  17. பரவாயில்லை, மக்கள் விழிப்படைகிறார்கள். ஆனால் தமது வீட்டில் அனுமதியின்றி ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கிறார்கள்!
  18. 28 MAR, 2024 | 09:56 AM வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தில் முன்னர் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் வீடுகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டு, அவற்றில் நிறைவு செய்யப்படாத வீடுகளுக்காக பதிவு செய்தவர்களும், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்களும், சொந்தக்காணி இருந்தும் இதுவரை வீடு கிடைக்காதவர்கள் மற்றும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இந்த விசேட திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179870
  19. தேனி: தினகரன் - தங்கதமிழ்செல்வன் உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 27 மார்ச் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேனி நாடாளுமன்ற தொகுதி அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அங்கே போட்டியிடுவதே. அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்தவர். தேனி மக்களவைத் தொகுதி எம்.ஜி.ஆர் காலம் முதலே அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தொகுதியில் இம்முறை அமமுக, திமுக இடையேயான போட்டியாக பார்க்கப்படுவதன் பின்னணி என்ன? தேனி தொகுதியில் அதிமுகவின் நிலைமை என்ன? திமுக - அமமுக உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது?நாடாளுமன்றத் தேர்தல் தேனி மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய தேனிக்கு நேரடியாக சென்றது பிபிசி தமிழ். தேனி தொகுதியில் பலமான கட்சி எது? தேனி நாடாளுமன்ற தொகுதி, முன்பு பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அப்போது அதில் பெரியகுளம்,தேனி, போடிநாயக்கனூர்,கம்பம், ஆண்டிபட்டி, சேடபட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இதி்ல் 1952 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் சரிபாதியாக அதாவது 7 முறை அதிமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக, சுதந்திர கட்சி, சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றியை தன் வசப்படுத்தியிருக்கிறது. பின்னர் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகள், மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் தேனி தொகுதியுடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு 2009, 2014, 2019 ஆகிய மூன்று முறை நடைபெற்றத் தேர்தலில் அதிமுக இரண்டு முறை, காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES 2019ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனியைத் தவிர திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. தேனி்யில் அதிமுக வெற்றது. இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி,கேஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 1,44,050 வாக்குகளைப் பெற்றார். அதிமுக பணத்தை வாரி வழங்கி வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். தேனி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். திமுக - அமமுக உக்கிர போட்டி தேனி மக்களவை தொகுதி இம்முறை கவனம் பெற முக்கிய காரணம் பாஜக கூட்டணியின் சார்பில் அங்கு களமிறங்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இவரை எதிர்த்து இந்தியா கூட்டணியி்ல் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை அமமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து மூன்றாமிடம் பிடித்தார். 2019 தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தேனி மாவட்டத்தின் வடக்கு மாவட்ட செயலாளராக தற்போது உள்ளார். டிடிவி தினகரன், கடந்த 1999-ல் பெரியகுளம் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 2009-ல் அதிமுக, 2019-ல் அமமுக என இருமுறை களம் கண்டு தோல்வியை சந்தித்துள்ளார். ஆனாலும் தங்க தமிழ்செல்வனுக்கு தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளது. மேலும் முன்பு இரட்டை இலை சின்னத்தில் நின்ற இருவரும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து தற்போது வெவ்வேறு சின்னங்களில் களம் காண உள்ளனர். தேனியின் அதிமுக வேட்பாளராக 40 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றிய வி டி நாராயணசாமி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் மதன் ஜெயபால் போட்டியிடுகிறார். ஆனால் தேனி தொகுதியில் டிடிவி தினகரனா? தங்கதமிழ்செல்வனா? என இருமுனைப் போட்டியாகவே பார்க்கப்படுவதாக தொகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் அதிமுக எப்படி இவர்களை தாண்டி வாக்காளர்களை ஈர்க்கும் என அனைவரும் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. தேனி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மாவட்டம் விவசாயம் அது சார்ந்த பணிகள் பிரதானமாக உள்ளன. இந்த தொகுதி வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், கடந்த முறை வென்ற எம்.பி எதை செய்தார், எதை செய்யத் தவறினார் என்பதை அறிந்து கொள்ள அந்த தொகுதியைச் சேர்ந்த பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது. ‘கட்சிக்குதான் வாக்கு, வேட்பாளருக்கு இல்லை’ கட்சி அடிப்படையிலேயே வாக்கு அளிப்போம் என்கிறார் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த விவசாயி பெ. முத்து காமாட்சி. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது."தேர்தலில் எங்களது பகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் எனக் கவனித்து வாக்கை செலுத்துவேன். எனக்கு 40 வயது ஆகிறது. நான் உதயசூரியன் சின்னத்திற்கு தான் வாக்கைச் செலுத்தி வருகிறேன். ஏனென்றால் எனது பகுதியில் உள்ள திமுகவினர் எங்களது பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறார்கள். டிடிவி தினகரன் மீண்டும் இந்த முறை தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரிய வரும்", என கூறினார். தன்னுடைய வாக்கு அதிமுகவிற்கு கிடையாது, என்கிறார் 78 வயதான செல்வராஜ். "நான் எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய காலத்திலிருந்து அதிமுகவின் கட்சியின் உறுப்பினராக உள்ளேன். அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி் தலைமை பொறுப்பேற்றவுடன் அங்கிருந்து விலகி விட்டேன். நான் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தான் வாக்கு செலுத்த உள்ளேன். ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்திற்கு பாலங்கள், சாலைகள் என வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது ஓ.பி.எஸ், டிடிவி தினகரனும் இணைந்து இருப்பதால் அவருக்கு தான் என் ஆதரவு." ‘அதிமுகவுக்கு அறிமுகம் தேவையில்லை’ அதிமுக வேட்பாளர் வெளியே தெரியவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் எளிய மனிதரான நாராயணசாமிக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் உள்ளது என்கிறார் தேனி பஜாரில் நகைப்பட்டறை வைத்திருக்கும் சிதம்பரம். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது,"தேனி நாடாளுமன்ற தொகுதியில் தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே வேட்பாளராக வெளியில் தெரியலாம். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைந்து போட்டியிட்டாலும் அதிமுகவிற்கான வாக்குகள் அப்படியே தான் இருக்கும், அது எங்கேயும் சிதறிவிடாது," எனத் தெரிவித்தார். "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எவ்வளவோ திட்டங்களை தேனிக்கு செய்து இருக்கலாம். அவர் செய்யத் தவறிவிட்டார். குறிப்பாக சுருளிப்பட்டியில் திராட்சை உலர்த்தும் தொழிற்சாலை, பெரியகுளத்தில் மாம்பழம் கூலிங் செய்யும் தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்" என்றார் சிதம்பரம். தங்கதமிழ்ச்செல்வன் பல கட்சிகள் மாறி இருப்பதால் அவருக்கு வாக்களிக்க மக்கள் யோசிப்பார்கள் என பிபிசியிடம் பேசியவர்களில் சிலர் தெரிவித்தனர். "தற்போதைய நிலவரப்படி, திமுக - அமமுக இடையே போட்டி இருப்பதாக தெரிந்தாலும், அதிமுக வேட்பாளர் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் துவங்கினால் தேனி தொகுதியில் நிச்சயம் மும்முனை போட்டி இருக்கும்", என்கிறார் வியாபாரியான சிதம்பரம். மகளிர் வாக்கு யாருக்கு? தன் கணவர் சொல்லும் கட்சிக்கே இதுவரை வக்களித்து வந்துள்ளேன். இம்முறையும் அப்படியே செய்வேன், என்கிறார் தேனி அரப்படிதேவன்பட்டியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான அபர்ணா. "நாங்கள் தேர்தலை பெரிதாகக் கண்டு கொள்வது கிடையாது. எங்கள் தொகுதியில் டிடிவி தினகரன், தங்கதமிழ் செல்வன் போட்டியிடுவதாக எனது தந்தை கூறினார். தேர்தல் சமயத்தில் என் கணவரோ, அப்பாவோ எந்த வேட்பாளர் நம் தொகுதிக்கு நல்லது செய்வார்கள் என்று என்னிடம் சொல்வார்கள். அதை வைத்து என் வாக்கை செலுத்துவேன்," என தெரிவித்தார். தேனி தொகுதியில் பல்வேறு பெண்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது அவர்களின் கருத்தும் அபர்ணாவை கருத்தை எதிரொலிப்பதாகவே இருந்தது. தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் யார்? தேர்தல் களத்தில் என்ன செய்கிறார்கள்?26 மார்ச் 2024 'தலைவி' கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டி - சினிமா முதல் அரசியல் வரை என்ன சாதித்தார்?25 மார்ச் 2024 ‘மீண்டும் போட்டியிட விரும்பினேன்’ பட மூலாதாரம்,P.RAVINDHRANATH /FACEBOOK "தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட விரும்பினேன். ஆனால் காலத்தின் கட்டாயத்தாலும், மூத்த தலைவர்களின் விருப்பத்தாலும் டி.டி.வி. தினகரன் போட்டியிட வழிவிட்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்", என்கிறார் தேனி தொகுதி எம்பியான ஓ.பி ரவீந்திரநாத். "தேனி நாடாளுமன்றத் தொகுதிக்காக கடந்த 5 ஆண்டுகளில் 850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். அதில் 550 கோடி ரூபாயில் மதுரை- போடிநாயக்கனூர் இடையேயான ரயில்பாதை திட்டம் முடிக்கப்பட்டது மிக முக்கியமான திட்டம். இது தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது." என்றார் அவர். திமுக vs அமமுக தொடர்ந்து பேசிய அவர், “தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியில் யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த 2 முறை நல்லாட்சி கொடுத்த மோதி மூன்றாவது முறையாக வரவேண்டுமென நாங்கள் சேர்ந்து கூட்டணியில் நிற்கிறோம். மோதி தலைமையிலான ஆட்சிக்கு அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து சென்றால் தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான திட்டங்களை கொண்டு வருவார். தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ் செல்வன் கடந்த முறை அமமுகவில் நின்று போட்டியிட்டவர். எனவே தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெறுவார். தேனியில் அதிமுக வேட்பாளர் யாரென்று கூட மக்களுக்குத் தெரியாது”, எனக் கூறினார் "ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். எனவே ஓ.பி.எஸ் ராமநாதபுரத்திலும், டி.டி.வி. தினகரன் தேனியிலும் போட்டியிடுகின்றனர். இதனால் தங்கள் தரப்பு வெற்றி உறுதியாகியுள்ளது" என்று ரவீந்திரநாத் தெரிவித்தார். தினகரன் கூறுவது என்ன? தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பரப்புரைகளில் " கடந்த 15 ஆண்டுகளாக வனவாசம் சென்றது போல நான் தேனி மாவட்டத்தை விட்டு சென்றாலும் மீண்டும் உங்களை நோக்கி வந்திருக்கிறேன். இந்த முறை எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தற்பொழுது நமக்கு ஜெயலலிதாவிற்கு பதிலாக நரேந்திர மோதி கிடைத்திருக்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக நடைபெறும் தேர்தல் என்பதால் அவரது கூட்டணியில் போட்டியிடும் எனக்கு உங்களது வாக்கினை செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஸ்டாலினை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் அவர் பிரதமர் ஆகிவிட முடியுமா?", என கேள்வியை முன் வைக்கிறார், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமமும் எனக்கு நன்றாகத் தெரியும் மக்களின் தேவையை நான் நிறைவேற்றுவேன் என பொதுவான பிரச்சாரமே”, செய்கிறார். தங்கதமிழ்செல்வன் பிரசாரம் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் தனது பரப்புரைகளில் டி.டி.வி தினகரை குறிவைத்து விமர்சனத்தை முன்வைக்கிறார். “தேனியில் எனக்கு எதிராக ஒருவர் போட்டியிடுகிறார் அவர் இந்த மாவட்டத்தை சேராதவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றவர், இன்று மீண்டும் வந்திருக்கிறார். அவர் மீது இருக்கும் வழக்கிலிருந்து தப்பிக்க பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார். அவர் வெற்றி பெற்றால், அவரை எளிதில் நீங்கள் தொடர்பு கொள்ள இயலாது. டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகரில் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றி வெற்றியை வசப்படுத்தியவர்.. அதேபோல தேனியிலும் செய்துவிடலாம் என நினைக்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.“ அதிமுக வேட்பாளர் கூறுவது என்ன? அதிமுக தரப்பில், மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவில் சார்பாக போட்டியிட்டு விலகிச் சென்றவர்கள் என்ற பரப்புரை முன்வைக்கப்படுகிறது. “தேனியில் இந்த முறை போட்டியிடும் மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள். மக்கள் உண்மையான அதிமுக யார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்த வேண்டும்,” என்று கூறி அதிமுக வேட்பாளர் வி டி நாராயணசாமி வாக்கினை சேகரிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/ckrxej0dlzpo
  20. இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்பு தொடரும் - பிரதமர் தினேஷிடம் சீன ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: DIGITAL DESK 3. 28 MAR, 2024 | 09:38 AM இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கைக்கு சீனா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என சீன ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர் சீ சின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179866
  21. நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை! நாட்டின் சில பகுதிகளில் இன்று (28) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297373
  22. பும்ரா, ரோஹித்தை புறக்கணிப்பதாக விமர்சிக்கப்படும் ஹர்திக், மீண்டும் செய்த தவறுகள் என்னென்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம் பார்க்கிறோமா அல்லது ஐபிஎல் பார்க்கிறோமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏனென்றால் ஒரே போட்டியில் 38 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகள், 523 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் அரைசதம், 10 பந்துவீச்சாளர்கள் இரு இலக்க சராசரி என வாயை பிளக்க வைக்கும் சாதனைகளுடன் நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதபாபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. 278 ரன்களை சேஸிங் செய்யும் முயற்சியில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில்5 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் சாதனை ஐபிஎல் டி20 தொடரில் கடந்த 11 ஆண்டுகளாக இருந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று முறியடித்தது. கடந்த 2013ம் ஆண்டு புனே அணிக்கு எதிராக ஆர்சிபி அணி சேர்த்த 263 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. அந்த ஸ்கோரை நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி முறியடித்து 277 ரன்கள் சேர்த்து வரலாறு படைத்தது. சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து வரலாற்று வெற்றி பெற்றும் நிகர ரன்ரேட்டில் பெரிதாக உயர்வு ஏதும் பெறவில்லை. 2 புள்ளிகள் பெற்று கணக்கை சன்ரைசர்ஸ் தொடங்கினாலும், நிகர ரன்ரேட் 0.675 என்ற அளவில்தான் இருக்கிறது. மும்பை அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டி இருந்தால் அபாரமான நிகரரன்ரேட்டை சன்ரைசர்ஸ் பெற்றிருக்கும், ஆனால், 31 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி என்பதால்தான் நிகரரன்ரேட் குறைந்துவிட்டது. மும்பை அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடர்ச்சியாக சந்திக்கும் 2வது தோல்வியாகும். அதிலும் வரலாற்று ரீதியான தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது. மோசமான பந்துவீச்சு, பீல்டிங், கேப்டன்ஷி என பல விமர்சனங்களோடு மும்பை அணி தோல்வியைத் தாங்கியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES யாருக்கு ஆட்டநாயகன் விருது? சன்ரைசர்ஸ் அணியில் யாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்குவது என தேர்வாளர்களுக்கு சற்று குழப்பம் வந்திருக்கலாம். ஏனென்றால் டிராவிஸ் ஹெட்(24 பந்துகளில் 62), அபிஷேக் சர்மா(23 பந்துகளில் 63), கிளாசன் (34பந்துகளில் 80) என ரன் மழை பொழிந்தனர். இதில் 273 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி, ஒரு கேட்சைப் பிடித்த இளம் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கிளாசன்(80), ஹெட்(63), அபிஷேக் சர்மா(63) மார்க்ரம்(42) ஆகியோர்தான் முக்கியக் காரணம். பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாகத் திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் மயங்க் அகர்வால் மட்டும் 13 ரன்னில் ஆட்டமிழந்தது வியப்பாக இருக்கிறது. பறந்த சிக்சர்கள், அடுக்கடுக்கான சாதனைகள் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் 20 பந்துகளுக்கு குறைவாக பந்துகளில் எந்த பேட்டரும் அரைசதத்தை எட்டியதே இல்லை. ஆனால், நேற்று களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 18 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதத்தையும் எட்டி முத்திரை பதித்தனர். சன்ரைசர்ஸ் அணி முதல் 10 ஓவர்களில் நேற்று 148 ரன்கள் சேர்த்தது. இது ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் இதுவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டியதில்லை. 2014ம் ஆண்டில் கிங்ஸ் பஞ்சாப், மும்பை அணி 131 ரன்களும் சேர்த்தே அதிகபட்சமாகும். அது மட்டுமல்ல 14.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களை எட்டியது. இதற்கு முன் கடந்த 2016ல் பஞ்சாப் அணி்க்கு எதிராக 14.1 ஓவர்களில் ஆர்சிபி 200 ரன்களை எட்டியிருந்தது. மும்பை அணியில் அறிமுகமாகிய 19 வயது இளம் பந்துவீச்சாளர் வீனா மபாகா 66 ரன்களை வாரி வழங்கினார். ஐபிஎல் வரலாற்றில் எந்த பந்துவீச்சாளரும் இந்த அளவு ரன்களை வழங்கியதில்லை. இதற்கு 2013ல் ஆர்சிபிக்கு எதிராக மைக்கேல் நீசர் 62 ரன்களை வழங்கியிருந்தார். அது மட்டுமல்லாமல் பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 89 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் குவிக்காத ஸ்கோராகும். இதற்கு முன், 2017ல் கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் 79 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் நேற்றைய ஆட்டத்தில் 18 சிக்ஸர்களை விளாசினர். இதற்கு முன் கொல்கத்தாவுக்கு எதிராக 15 சிக்ஸர்கள் விளாசியதே அந்த அணியின் அதிகபட்சமாக இருந்தது. அதை அந்த அணியே முறியடித்தது. மார்கோ யான்செனுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டிருந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் டிராவிஸ் ஹெட் அடித்த ஷாட்டை டிம் டேவிட் கேட்ச் பிடிக்க தவறினார். “கேட்ச் மிஸ், கேம் மிஸ்” என்பதைப் போல் அந்த கேட்சை கோட்டைவிட்டதற்கு மும்பை அணி பெரிய விலை கொடுக்க நேர்ந்தது. டிராவிஸ் ஹெட் கேட்சைப் பிடித்திருந்தால் ஆட்டம் மும்பை அணி பக்கம் திரும்பியிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES அதன்பின் ஹெட், மும்பை பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார். மபாகா ஓவரில் 2 பவுண்டரி, ஒருசிக்ஸர் உள்பட 22 ரன்கள், கோட்ஸி ஓவரில் 23 ரன்கள் என ஹெட் வெளுத்து வாங்கினார். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி 81 ரன்கள் சேர்த்தபோது, ஹெட் 59 ரன்கள் சேர்த்திருந்தார். அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தபின் அபிஷேக் சர்மா களமிறங்கினார். ஹெட்டுக்கு போட்டியாக அபிஷேக் சர்மாவும் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தார். கோட்ஸி, பியூஷ் சாவ்லா பந்துவீச்சை அபிஷேக் சர்மா சிக்ஸர்களாக விளாசினார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 7 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. மபாகா வீசிய அவரின் 3வது ஓவரில் அபிஷேக் மட்டும்2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை வெளுத்து 16 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அபிஷேக் சர்மாவுக்கு சுழற்பந்துவீசப் பயந்து பியூஷ் சாவல் 112 கி.மீ வேகத்தில் மிதவேகப்பந்துவீச்சாளராக மாறி பந்துவீசி இறுதியில் அவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். கிளாசன் பேட்டிங் குறித்து சொல்லத் தேவையில்லை. 2022ம் ஆண்டிலிருந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 174 ஸ்ட்ரேக் ரேட் வைத்திருப்பவர் சர்வதேச அளவில் கிளாசன் மட்டும்தான். சுழற்பந்துவீச்சாளர்கள் என்றாலே கிளாசனுக்கு அல்வா சாப்பிடுவதைப் போலத்தான். கிளாசன் களமிறங்கியபின் அரங்கில் வானவேடிக்கை நிகழ்ந்தது. மும்பை பந்துவீச்சாளர்கள் யார் வீசினாலும் பந்துகள் சி்க்ஸர், பவுண்டரி என பறந்தன. 15 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களை எட்டியது. கிளாசனுக்கு ஒத்துழைத்து மார்க்ரம் பேட் செய்தார். 22 பந்துகளில் கிளாசன் அரைசதம் எட்டினார். கடந்த ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக கிளாசன் அடித்த அடி இன்னும் மறக்காத போது, நேற்றைய ஆட்டம் அவரின் கிளாசிக்கான பேட்டிங்கிற்கு சான்று. முலானி பந்துவீச்சில் அடுத்தடுத்து கிளாசன் இரு சிக்ஸர்களை துவம்சம் செய்தபோது, ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபியின் ஸ்கோரை சன்ரைசர்ஸ் முறியடித்தது. அனைத்து ஆடவர் டி20 போட்டிகளிலும் 4வது பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நொந்துபோன பந்துவீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் பந்துவீசிய பந்துவீ்ச்சாளர்களில் பும்ரா(36ரன்கள்) மட்டுமே ஒற்றை இலக்க சராசரியில் ரன்கள் கொடுத்தார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் இரட்டை இலக்க சராசரியில்தான் ரன்களை வாரி வழங்கினர். மபாகா(66), ஹர்திக் பாண்டியா(46), கோட்ஸி(57), பியூஷ் சாவ்லா(34-2ஓவர்களில்), முலானி(2ஓவர்களில் 33 ரன்கள்) என வெறுத்து பந்துவீசினர். அதிலும் கிளாசன் களத்தில் இருந்தபோது, அவருக்கு பந்துவீச எந்த பந்துவீச்சாளரும் துணிச்சல் இல்லாமல் இருந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு யாரைப் பந்துவீசச் செய்வது, யார் பந்துவீசினாலும் பந்து சிக்ஸர், பவுண்டரி பறக்கிறதே என்று குழப்பத்தில் இருந்தார். பந்துவீச்சாளர்கள் மீது இரக்கமற்றவர்களாக சன்ரைசர்ஸ் பேட்டர்கள் நடந்து கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியும் பதிலடிக்கு முயற்சி மும்பை அணியும் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோருக்கு பதிலடி கொடுக்க முயன்றது. ரோஹித் சர்மா,இஷான் கிஷன் அதிரடியான தொடக்கத்தை அளித்து, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாக மாற்றினர். ஹைதராபாத் விக்கெட்டில் எப்படி பந்துவீசினாலும் விக்கெட்டில் பந்து பேட்டரை நோக்கியே வந்ததால், பேட் செய்வது எளிதாக இருந்தது. அடித்து ஆட வேண்டும் என்றவேட்கையில் ரோஹித் சர்மா(26), இஷான் கிஷன்(34) ரன்களில் பவர்ப்ளேவுக்குள் விக்கெட்டுகளை இழந்தனர். இருவரின் விக்கெட் வீழ்ந்ததுமே மும்பை அணியின் பேட்டிங் சற்று ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் சேர்த்தது. 3-வது விக்கெட்டுக்கு நமன் திர், திலக் வர்மா ஜோடி ரன்களை வேகமாகச் சேர்த்தனர். ரன்ரேட்டை மனதில் வைத்து இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர். ஆனாலும், 37 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தநிலையில் இந்த ஜோடி பிரி்ந்தது. நமன் திர் 30 ரன்களில் உனட்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்து 64 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். திலக் வர்மா, நமன் திர் ஜோடி 21 பந்துகளுக்குள் ஆட்டமிழந்தபின் மும்பை அணி வெற்றிக்கான தருணத்தை இழந்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 ரன்களில் ஏமாற்றினார். டிம் டேவிட் 42, ஷெப்பர்ட் 15ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடினர். பட மூலாதாரம்,GETTY IMAGES மீன்டும் எல்லைக் கோட்டில் ‘பார்வையாளராக’ நின்ற ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியாவைவிட ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் அனுபவமானவர், முதிர்ச்சியானவர். கிரிக்கெட் உலகில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்து கொண்டிருக்கிறார், அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஆனால், சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் மும்பை பந்துவீச்சை வெளுத்து துவம்சம் செய்தபோது, கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னிட்சையாகவே பந்துவீச்சாளர்களை மாற்றி, பீல்டிங்கை மாற்றி கட்டளையிட்டுக்கொண்டார். மாறாக, அனுபவம் மிகுந்த, முன்னாள் வெற்றிக் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கலந்து பேசவில்லை, எந்த ஆலோசனையும் பெறவில்லை என்பதைக் காண முடிந்தது. ஹர்திக் பாண்டியா செய்யும் அனைத்து கேப்டன்சி பணிகளையும் ரோஹித் சர்மா பவுண்டரி எல்லையில் நின்று மவுனப் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தார். ஹர்திக் பாண்டியா விமர்சிக்கப்பட்டது ஏன்? ஹர்திக் தலைமையில் மும்பை அணி சந்திக்கும் 2ஆவது மற்றும் மோசமான தோல்வியாகும். ஹர்திக் பாண்டியா ப்ளேயிங் லெவனுக்கு எடுத்த வீரர்களும் சரியில்லை, பந்துவீச்சாளர்களைக் கையாண்ட முறையும் சரியில்லை என்று தொலைக்காட்சி வர்ணணனையில் வர்ணனையாளர்கள் ஆதங்கம் அடைந்தனர். குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை கையில் வைத்திருக்கும்போது அவரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் கூட பாண்டியாவுக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஓவரை பும்ராவுக்கு அளித்துவிட்டு கடைசி நேரத்தில் வாய்ப்பு வழங்கினார் ஹர்திக் பாண்டியா. பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் அடைந்தநிலையில், பும்ரா ஓவரை ரிஸ்க் எடுத்து அடிக்க வேண்டிய தேவை கிளாசனுக்கும், மார்க்ரமுக்கும் தேவைப்படவில்லை. பவர்ப்ளே ஓவரில் ஹெட், அபிஷேக் இருவரும் மும்பை பந்துவீச்சை வெளுக்கும் போது அவர்களை அடிக்கவிடாமல் நிறுத்த பந்துவீச்சை மாற்றவோ, பீல்டிங்கை மாற்றிவைத்து அதற்கு ஏற்றாற்போல் பந்துவீசச் செய்யவோ ஹர்திக் பாண்டியா எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளே ஓவரில் பெரிய ஸ்கோரை அடையும்போதும் சரி, 10 ஓவர்களில் 2விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தபோதும், 12 ஓவர்களில் 177 ரன்கள் சேர்க்கும் வரை பும்ராவுக்கு பந்துவீச பாண்டியா வாய்ப்பு வழங்கவில்லை. கிளாசன் களமிறங்கியபின்புதான் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 13 ஓவர்களுக்குப்பின்புதான் பும்ராவுக்கு கடைசி 3 ஓவர்கள் தரப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES பவர்ப்ளேயில் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால், சன்ரைசர்ஸ் ஸ்கோர் உயர்வு குறைக்கப்பட்டிருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார். அவர் அளித்தபேட்டியில் “ உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர் உங்கள் கையில் இருக்கும்போது, முதல் 10 ஓவர்களில் அவரின் ஸ்பெல்லை வீசச் செய்து முடிக்க வேண்டும். பும்ரா சிறந்த விக்கெட் டேக்கர். பவர்ப்ளேயில் பும்ரா பந்துவீசியிருந்தால் நிச்சயமாக விக்கெட் எடுத்துக் கொடுத்திருப்பார். பும்ரா தனது 2-ஆவது ஸ்பெல்லை வீச வந்தபோது, சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை அடைந்துவிட்டது, ரன்நெருக்கடி ஏதும் இல்லாமல் இருந்தது. ஒட்டுமொத்தத்தில் பும்ராவை சரியாக மும்பை அணி பயன்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார். அது மட்டுமல்ல கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாகச் செயல்பட்ட, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சுழற்பந்துவீச்சாளர் நேகல் வதேரா, வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஆகியோர் இருக்கும்போது அவர்களை ஹர்திக் பாண்டியா அணிக்குள் சேர்க்கவில்லை. ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி அணியில் இருந்தபோது அனுபவமற்ற மபாகாவை சேர்த்தார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் தொடரில் தொடக்கத்திலேயே புள்ளிகளைப் பெற்று நிகர ரன்ரேட்டை உயர்த்தினால்தான் குறைந்பட்சம் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். நிகரரன்ரேட்டில் சிக்கல் ஏற்பட்டால் ஹர்திக் கேப்டன்ஷியில் லீக் சுற்றோடு மும்பை நடையைக் கட்ட வேண்டியதிருக்கும். தனிப்பட்ட ரீதியில் ஹர்திக் பாண்டியா இரு போட்டிகளில் பேட் செய்தும் பெரிதாக ஸ்கோர் செய்தாதும் அவரின் பேட்டிங் மீதுபல்வேறு கேள்விகளை முன் வைக்கிறது. அவரின் கேப்டன்ஷியில் எடுக்கும் இதுபோன்ற தவறான முடிவுகள், பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தாதது கேப்டன்ஷி மீதும் விமர்சனங்களை வைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சு பற்றி ஹர்திக் பாண்டியா கூறியது என்ன? தோல்வி அடைந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “விக்கெட் (ஆடுகளம்) சிறப்பாக இருந்தது. 277 ரன்கள் குவிப்பு என்பது நாங்கள் மோசமாக அல்லது நல்லவிதமாக நாங்கள் பந்துவீசினோமா என்பதெல்லாம் பிரச்னை அல்ல, எதிரணி நன்றாக பேட் செய்துள்ளார்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். 500 ரன்கள் அடிக்க இந்த விக்கெட் உதவியது. சில புதிய விஷயங்களை முயற்சித்தோம், ஆனால், இளம் பந்துவீச்சாளர்களால் இன்றைய ஆட்டத்தை சமாளிக்க முடியவில்லை.” “ஒவ்வொருவரும் சிறப்பாக பேட் செய்தனர். திலக் வர்மா, ரோஹித், இஷான் சிறப்பு. சில விஷயங்களை மட்டும் சரியாகச் செய்ய வேண்டியது அவசியம். மபாகா முதல் போட்டியிலேயே ரசிகர்களைப் பார்த்து பரவசம் அடைந்தார். திறமையான பந்துவீச்சாளர் மபாகா, அவருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cw4z2384ggvo
  23. விஷமருந்திய கணேசமூர்த்தி எம்.பி. மரணம்: கடைசி நாள்களில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,X கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 28 மார்ச் 2024, 03:48 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் விஷமருந்தி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மதிமுகவைச் சேர்ந்த எம்.பி. கணேசமூர்த்தியின் உயிர் இருதய செயலிழப்பால் பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி தனது வீட்டில் தென்னை மரங்களுக்கு பூச்சிக் கொல்லிக்காக வைக்கப்பட்டிருந்த விஷத்தைப் பருகி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எம்.பி. கணேசமூர்த்தி. அங்கு அவரது வயிற்றின் செரிமான உறுப்புகள் சுத்தம் செய்யப்பட்ட பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது இருதயத் துடிப்பு குறைந்தது. சுயநினைவு இழந்து வந்தார். இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். செயற்கை இருதய நுரையீரல் செயல்பாடுகளுடன் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது முக்கிய உடல் உறுப்புக்கள் சீராக செயல்படுவதில் சிக்கல் நீடித்தது. ரத்த அழுத்தம், அவ்வப்போது குறைந்து வந்தது. இதையடுத்து இன்று காலை 05.05 மணிக்கு இருதயம் செயலிழந்து உயிர்பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கே எம் சி எச் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இது விஷமருந்தி தற்கொலை செய்த வழக்கு என்பதால், ஈரோடு போலீசாரிடம் உடற்கூராய்வுக்காக உடல் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின், அவரது சொந்த ஊரான சென்னிமலை குமாரவலசுக்கு இறுதிச்சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. தேர்தலில் வாய்ப்பு தராத நிலையில் தற்கொலை முயற்சி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு மார்ச் 24ஆம் தேதி வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தற்போதைய எம்.பி. தேர்தலுக்கு கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுப்போம் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு நடந்தது. 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அதன்படியே செய்ய நினைத்தேன். அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன். ஆனால், அவர் தென்னைக்கு வைத்திருந்த நஞ்சைப் பருகிவிட்டார்.” எனக் கூறியிருந்தார். கல்லூரி நாட்களிலேயே வைகோவுடன் நட்பு கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னிமலை குமாரவலசு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 1947 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தையின் பெயர் அவிநாசி கவுண்டர் தாயார் சாரதாம்பாள். இவருக்கு பாலாமணி என்று மனைவி இருந்தார். தமிழ் மீது அதிக பற்று கொண்ட அவர், தனது மகளுக்கு தமிழ் பிரியா என்றும், மகனுக்கு கபிலன் என்றும் பெயரிட்டார். விவசாயத்தை பூர்வீகமாக கொண்ட போதும் தியாகராயர் கல்லூரி பிஏ பயின்றவர் சென்னையில் சட்டப்படிப்பு படித்தவர். தியாகராயர் கல்லூரியில் பயிலும்போதிருந்தே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், கணேசமூர்த்திக்கு நல்ல நட்பு ஏற்படத் தொடங்கியது. பள்ளி நாட்களிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட கணேசமூர்த்தி அக்கட்சியில் மாநில மாணவர் அணி இணை அமைப்பாளர் ஆனார். பேரறிஞர் அண்ணாவை அடிக்கடி சந்தித்துப் பேசுமளவு நெருங்கிப் பழகிய அபிமாகியாக வலம் வந்தார். 1976-ல் அவசரநிலை காலத்தில் தலைவர்களை கைது செய்த சிறையில் அடைத்த போது மாணவர் திமுக சார்பில் தீவிரமாக கழக பணியாற்றினார் கணேசமூர்த்தி. 1984 இல் இந்திய அரசியல் சட்ட ஆட்சி மொழி பிரிவு இணைப்பு போராட்டத்தில் கைதாகி அவர் சிறை சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES மாவட்ட திமுக செயலாளராக இருந்த அவர், மொடக்குறிச்சி எம்எல்ஏவாக 1989 லேயே உயரிய பதவியை அடைந்தார். அப்போது பதவிக்கு வந்த 2 ஆண்டுகளிலேயே 2 கால்நடை மருத்துவமனைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒரு வேளாண் கிடங்கு ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தார். இது ஈரோட்டு மக்களுக்கு அவர் மீதும், அவர் பணியின் மீதும் நன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது. 1991 கீழ்பவானி பாசன பகுதிகள் புஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் விடும் போது, நஞ்சை பயிர் செய்தால் தண்டத் தீர்வை விதிக்கப்பட்டு வந்தது. அந்த தண்டத் தீர்வையை கடும் சிரத்தை மேற்கொண்டு நீக்கினார் 1993-ல் திமுகவில் இருந்து வைகோ வெளியேறிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கட்சி தொடங்கியபோது துணையாக உடன் வெளியேறியவர். அப்போதிருந்து எத்தனையோ பேர் கட்சி மாறி வெவ்வேறு கட்சிகளுக்கு சென்ற பின்பும், வைகோவை விட்டும், மதிமுகவை விட்டும் விலகிவில்லை. 1998ல் பழனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம் பி ஆனார். 2009 -லும் அவர் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 தேர்தலில் தோல்வி பெற்ற போதும் 2019 ஆம் ஆண்டில் மீண்டும் எம்பி பதவியை கைப்பற்றினார். முக்கியத் தலைவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னுடன் கணேசமூர்த்தியைத்தான் அழைத்துச் செல்வார். வைகோ உள்ளிட்ட மதிமுகவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் தோல்வியுற்றபோதும், மதிமுக சார்பில் வெற்றிப் பெற்றுக் காட்டியவர் கணேசமூர்த்தி. அக்கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தார். பட மூலாதாரம்,ANI கோவை திருப்பதி ஈரோடு கோவை உள்ளிட்ட மின்சார ரயில்கள் இயங்க இவர் முக்கியமாக காரணமாக அமைந்தார். 2002ல் பொடா சட்டத்தில் தனது ஈரோடு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி, 555 நாட்கள் சிறைவாசம் சென்றார். இவர் மதிமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தலைமை ஏற்று பொதுப்பணிகள் ஆற்றினாலும் அவற்றில் பெரும்பாலானவை விவசாயிகளுக்கான பிரச்னையாகவே இருந்தது. உரவிலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், பரும்பின் ஆதார விலை நிர்ணயம், பல்வேறு மாவட்ட விவசாயிகளை ஒன்றாக ஒருங்கிணைத்து போராடுவது, முல்லைப் பெரியாறு அணை உரிமை காத்தல், அட்டப்பாடியில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு, முழு மதுவிலக்கு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு, நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு என பல போராட்டங்களிலும் பெரும்பங்கு வகித்தார் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி. தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய உரிய ஆணை பெற்று தரப்பட்டதில் இவரது பங்கும் உண்டு. அதேபோல் தாராபுரத்தில் மூடி கிடந்த கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க கோரி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார். https://www.bbc.com/tamil/articles/crg0pn13d1vo
  24. Published By: SETHU 27 MAR, 2024 | 06:06 PM ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளரன். லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது. ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்றுகொண்டிருந்ததாக பிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/179843
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 27 மார்ச் 2024, 02:42 GMT இந்திய சமையலில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெயும், தென் பகுதியில் கடலை மற்றும் நல்லெண்ணெயும், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் தேங்காய் எண்ணெயும் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளின் புவியியல் அமைப்பு, சீதோஷண நிலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமைக்கும் முறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் மக்கள் இந்த எண்ணெய்களுக்கு பழகி விட்டனர். இவை தவிர்த்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், செம்பனை எண்ணெய் (Palm oil), ஆலிவ் எண்ணெய் போன்றவையும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் சுவையை தீர்மானிப்பதே எண்ணெய் தான் என சொல்லப்பட்டாலும் கூட, பெரும்பாலானோருக்கு கொழுப்பு என்றவுடன் உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் தான் நினைவுக்கு வருகிறது. அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டோர் பலர் எண்ணெய் கலந்த உணவு என்றாலே சற்று விலகி நிற்கிறார்கள். எண்ணெய் பயன்படுத்தாத உணவு என்பது வேகவைத்த உணவு மட்டுமே, ஆனால் அவை தினமும் எடுத்துக்கொள்வதற்கு ஏற்றதாகவும், அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்ததாக இருக்குமா என்றால் இல்லை என்று தான் ஆய்வுகள் சொல்கின்றன. சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது? எண்ணெய் என்றால் கொழுப்பு மட்டும் தானா? ரீஃபைண்டு எண்ணெயை விட செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லதா? எண்ணெய் கலந்த உணவுகளைப் பார்த்து அச்சம் கொள்வது அவசியமா? போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த கட்டுரையில் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன எண்ணெயில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு என்னென்ன? தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் என எடுத்துக்கொண்டால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றை சொல்லலாம். இந்த மூன்று எண்ணெய்களிலும் என்னென்ன கொழுப்புகள் உள்ளன, அவை உடலுக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பார்க்கலாம். எண்ணெய்களில் உள்ள கொழுப்பை மூன்று வகைகளாக பிரிக்கலாம், சாச்சுரேட்டட் (Saturated), மோனோ அன்சாச்சுரேட்டட் (monounsaturated), பாலி அன்சாச்சுரேட்டட் (Poly unsaturated). தேங்காய் எண்ணெய், பாமாயில், நெய், வெண்ணையில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. 1. தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிக அதிகம் (82%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (6%), பாலி அன்சாச்சுரேட்டட் இன்னும் குறைவு (2%). தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். உயர்- வெப்ப சமையலுக்கு இந்த எண்ணெய் உகந்ததாக இருக்கும். அதே வேளை, தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளால், அதை அதிகம் எடுத்துக் கொண்டால் கெட்ட கொழுப்பு உருவாகி, இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தேங்காய் எண்ணெயில் கலோரிகளும் மிக அதிகம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். 2. நல்லெண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிகக் குறைவு (14%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (42%), பாலி அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (40%). எள் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளும் நிறைந்துள்ளன, இது உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். 3. பாமாயிலில் சாச்சுரேட்டட் சற்று அதிகம் (49%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (37%), பாலி அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (9%) பொதுவாக பாமாயிலை எடுத்துக்கொண்டால், அது மலிவானது என்றும், ஆரோக்கியமற்றது என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் இதில் வைட்டமின் இ எனப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இந்த எண்ணெய் ஆரோக்கியமற்றது, கெடுதலானது என்பதற்கு போதிய மருத்துவச் சான்றுகள் இல்லை. சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. எனவே பாமாயிலை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ரீஃபைண்டு எண்ணெய் என்றால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன செக்கு எண்ணெய் Vs ரீஃபைண்டு எண்ணெய். செக்கு எண்ணெய் என்பது மிகவும் பழமையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய். பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் முறைப்படி, மாடுகள் கொண்டு இழுக்கப்படும் ஒரு செக்கில், எண்ணெய் விதைகள் அரைக்கப்பட்டு, எண்ணெய் எடுக்கப்படும். சில நாடுகளில் குதிரைகளும், ஒட்டகங்களும் கூட செக்கிழுக்க பயன்படுகின்றன. இவ்வாறு செக்கில் அரைக்கப்பட்டு கிடைக்கும் எண்ணெய் கோல்ட் பிரஸ்டு ஆயில் (Cold pressed oil) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செக்கில் அரைக்கப்படும் போது, உள்ளிருக்கும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு மேல் செல்லாது. குறைவான வெப்பநிலையில் செக்கில் விதைகள் அரைக்கப்படுவதால், அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் இயற்கையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் (Anti oxidants) என எல்லாம் அதன் அசல் வடிவில் இருக்கும். இதனால் எண்ணெயில் மனம் மற்றும் சுவை அதிகமாக இருக்கும். இதனால் தான் செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணெயின் தயாரிப்பு செலவு அதிகம். காரணம், செக்கின் மூலமாக விதைகளில் இருக்கும் 30 முதல் 40% எண்ணெயை மட்டுமே பிரித்தெடுக்க முடியும். இதனால் கழிவு அதிகமாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுவே இயந்திரத்தால் அரைக்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கும் போது (Expeller pressed oil), 80 முதல் 90% எண்ணெயை பிரித்தெடுக்க முடியும். ஆனால் உள்ளிருக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் எண்ணெயின் இயற்கை தன்மை மாறிவிடும். இதற்கு பிறகு வந்த முறைதான், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு. விதைகளை நன்றாக அரைத்து, பின்னர் அதனுடன் எக்சேன் (Hexane) எனப்படும் வேதியியல் பொருளைக் கலக்கப்படும். விதைகளில் உள்ள 100% எண்ணெயை இந்த எக்சேன் எடுத்துவிடும். பின்னர் அடுத்த கட்டத்தில் எண்ணையில் கலந்துள்ள எக்சேன் பிரிக்கப்படும். பின்னர் பல்வேறு வேதியியல் முறைகள் மூலமாக அந்த எண்ணெய் சுத்திகரிக்கப்படும். இறுதியாக மனமும் சுவையும் அதிகம் இல்லாமல், சுத்தமாக, தண்ணீர் போல நமக்கு கிடைப்பதே ரீஃபைண்டு எண்ணெய். கடந்த சில வருடங்களாக மக்களால் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran oil) போன்றவை எக்சேன் பயன்படுத்தி எடுக்கப்படும் ரீஃபைண்டு எண்ணெய்களே. படக்குறிப்பு, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர். செக்கு எண்ணெய் தான் நல்லதா? “சந்தேகமே வேண்டாம், செக்கு எண்ணெய் தான் நல்லது. அறிவியல் ஆய்வுகள் மூலம் நமக்கு தெரியவருவது அதுதான்” என்கிறார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர். தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாகவே சீதோஷண நிலை, வாழ்வாதார நிலை, உணவுப் பொருட்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் வகை மற்றும் அளவு மாறும். எல்லா வகை எண்ணெய்களிலும் நல்ல கொழுப்பும் உள்ளது, அது உடலுக்கு கண்டிப்பாக தேவை." என்றார். "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமது சீதோஷண நிலைக்கு ஏற்ற எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய் தான். ஆனால் எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோம் என்பது முக்கியம். ஒருவருக்கு இதய நோய், கொழுப்பு பிரச்னை, உயர்ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால் எண்ணெய் அளவு மாறுபடும்” எனக் கூறுகிறார் சந்திரசேகர். “நல்லெண்ணெய் தவிர்த்து ஆலிவ் எண்ணெய் சிறிதளவு பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு ரைஸ் பிரான் எண்ணெய் பயன்படுத்தலாம், வறுப்பதற்கு கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்." "எனவே ஒரு எண்ணெய் மட்டுமில்லாமல் எல்லா எண்ணெய்களையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக ஒரு நாளுக்கு ஒருவருக்கு 15 மில்லிலிட்டர் எண்ணெய் போதுமானது. ஒரு மாதத்திற்கு 450 முதல் 500 மில்லிலிட்டர் என்பது உகந்தது” என்கிறார். “எண்ணெய்யை அறவே தவிர்ப்பது என்பது நல்லதல்ல. அவ்வாறு தவிர்த்துவிட்டு வெறும் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் பல மாற்றங்களும் சத்துக்குறைபாடும் ஏற்படும். எனவே எண்ணெய் மனித உடலுக்கு என்பது மிகவும் அவசியம், ஆனால் எவ்வளவு எண்ணெய்யை எந்த உணவுப் பொருளுடன் எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார் மருத்துவர் எஸ்.சந்திரசேகர். படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். எந்த சமையல் எண்ணெய் உடலுக்கு நல்லது? இது குறித்து பேசிய ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் தான் சிறந்த எண்ணெய், ஏனென்றால் அதில் தான் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அதிகம் எடுத்துக்கொண்டால் நல்லதல்ல என்பதைத் தாண்டி, நல்லெண்ணெயில் ஆபத்துகள் பெரிதாக இல்லை. பெயருக்கு ஏற்றாற்போல இது நல்ல எண்ணெய் தான்” என்கிறார் அவர். தொடர்ந்து பேசிய அவர், “அதோடு சேர்த்து கடலை எண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய்யையும் நான் பரிந்துரை செய்வேன். பாமாயிலையும் பயன்படுத்தலாம், ஆனால் நல்லெண்ணெய் அளவுக்கு நல்லதல்ல” என்கிறார். ஆனால் எந்த எண்ணெயாக இருந்தாலும், ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் என்பதையும் அவர் விளக்கினார். “ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தினால் அது நிறைவுறாக் கொழுப்புகளாக மாறும். இதனால் இதய நோய்கள், புற்றுநோயை ஏற்படுத்தும். ஒருநாளைக்கு 3 ஸ்பூன் அளவிலான எண்ணெய் என்ற அளவைத் தாண்டி அதிகமான எண்ணெய்யை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் அதிகரித்துவிடும். உடல் எடை கூடுவதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளுக்கு அது வழிவகுத்துவிடும்” என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். https://www.bbc.com/tamil/articles/c8v3lqd5j2eo
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.