Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18308
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றியது ஏன்? அடுத்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழக அரசின் முக்கிய நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஆளுனர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையில் மோதல் நீடித்து வரும் நிலையில், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுமார் 22 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருந்தன. இந்த மசோதாக்களில் 10 மசோதாக்களை நவம்பர் 13ஆம் தேதி ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பினார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பதை மாற்றி, மாநில முதல்வர்களே வேந்தர்களாக இருக்கச் செய்யும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் சட்டத்தையும் திருத்துவதற்கான மசோதாக்கள்தான் இந்த பத்து மசோதாக்கள். மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டவுடனேயே, மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்டுவதாக அறிவித்த தமிழ்நாடு அரசு, இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்பப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி, தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. முதலில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பான தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசினார். "இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மையமாக இருந்து சட்டமியற்றும் இந்த சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி ஒன்று முளைக்குமானால், இந்தச் சூழ்நிலை என்பது இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான வகையில் கொண்டு செலுத்திவிடும் என்ற அச்சத்துடன் தான் உங்கள் முன்னால் நிற்கிறேன். “I withhold assent” அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13.11.2023ஆம் தேதியன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார் ஆளுநர். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசு வழங்க வேண்டும். இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்துள்ளனர். எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும். சட்ட முன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதமாகும். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், அப்படி எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விளக்கம் அளிப்பதும் - விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது. பொதுமேடைகளில் அவர் நமது தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். தெரிவித்துக் கொண்டும் வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குமான பிரச்சினை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல; சமூகநீதியாகவும் இருக்கிறது. அதனால்தான் முடிந்தளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தமிழ்நாடு வளர்ந்திருப்பதை - வளர்வதைக் காணப் பொறுக்காத காரணத்தினால்தான் என்னவோ, ஆளுநர் அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார் என்று நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் எவ்வித பயனையும் தராததால்தான், தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், ஆளுநர் அவசர அவசரமாக 10 சட்டமுன்வடிவுகளுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், கடந்த நவம்பர் 10ஆம் தேதியன்று கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200ன்படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத்தான் உள்ளது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு தனித் தீர்மானத்தை வாசித்தார். அந்தத் தனித் தீர்மானத்தில் பத்து மசோதாக்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு அவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. முதலமைச்சர் பேசி முடித்ததும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். பா.ஜ.கவின் சார்பில் நயினார் நாகேந்திரன் பேசினார். "தமிழ்நாட்டில் மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளை மூடி மறைக்கத்தான் ஆளுநர் விவகாரத்தை இந்த அரசு கையில் எடுத்திருக்கிறது என்று கூறினார். இதற்குப் பிறகு பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர். அ.தி.மு.கவின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும்போது, ஏற்கனவே 1990களில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இதே போன்ற சட்டத்தைக் கொண்டுவந்ததாகவும் அப்போது தி.மு.க. அதனை எதிர்த்தாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர், அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அ.தி.மு.க. அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தது. இதற்குப் பிறகு, முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானமும் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தின் பின்னணி தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் மாளிகை எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தது. இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது. இதையடுத்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதற்குப் பிறகு, இதே போன்ற வழக்குகளை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் தொடர்ந்தன. இந்த வழக்குகளை ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ஆளுநர்கள் இதுபோலச் செயல்படுவது, "நெருப்போடு விளையாடுவதைப் போல" என்று குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம். வழக்கு நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில்தான் நவம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நவம்பர் 20ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இந்த மசோதாக்கள் மீண்டும் ஆளுநர் மாளிகையிலேயே இருக்க வேண்டும் எனக் கருதிய தமிழ்நாடு அரசு இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது. படக்குறிப்பு, ஆளுனருக்கும், தமிழக அரசுக்கும் இடையே முரண்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. அடுத்தது என்ன நடக்கக் கூடும்? "மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் உறவு இவ்வளவு மோசமாகியிருக்கும் நிலையில், நீதிமன்றம் நெருக்கும் நிலையில் வேறு யாராவதாக இருந்தால் மத்திய அரசிடம் தெரிவித்து வேறு மாநிலத்திற்குச் சென்றிருப்பார்கள். ஆனால், தற்போதைய ஆளுநர் இங்கேயே நீடித்து குடைச்சல் கொடுக்க விரும்புகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த மசோதாக்களை தன்வசமே வைத்திருந்து காலத்தை நீட்டிக்கவே விரும்பினார். ஆனால், விரைவில் உச்ச நீதிமன்ற வழக்கு வருகிறது என்பதால் இப்போது மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்போது மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால், அதையும் மீறி மத்திய பா.ஜ.கவின் பிரதிநிதிபோல அவர் செயல்பட்டால் சிக்கல்தான்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, "சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் கடமை," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "நிராகரிப்பா, நிறுத்திவைப்பா?": மூத்த பத்திரிகையாளர் எழுப்பும் கேள்வி ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு சட்டச் சிக்கல் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். "ஒரு மசோதாவை ஆளுநர் நிராகரித்துத் திருப்பி அனுப்பினால், அதனை திரும்பவும் சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம். ஆனால், ஆளுநர், பத்து மசோதாக்களைக் குறிப்பிட்டு 'I withhold assent” என்று கூறியிருக்கிறார். ஒரு விஷயத்தில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, அது நிராகரிக்கப்பட்டதாகக் கருதி, மீண்டும் எப்படி நிறைவேற்றி அனுப்ப முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் ஷ்யாம். இது ஒரு மிகப் பெரிய சட்டச் சிக்கல் எனக் குறிப்பிடும் ஷ்யாம், தமிழக அரசு இப்போது அனுப்பும் மசோதாக்களையும் அப்படியே வைத்திருப்பார். ஆகவே இதற்கு உச்ச நீதிமன்றம்தான் விடைசொல்ல முடியும் என்கிறார். 1990களில் அ.தி.மு.க. இது போன்ற சட்டம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பியபோது ஆளுநர் நிராகரித்த விவகாரம் குறித்துக் குறிப்படும் ஷ்யாம், அப்போது இருந்த அரசியல் சூழலே வேறு என்கிறார். "தமிழக பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர்களே வேந்தர்களாக இருக்கும் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். அந்தச் சட்டத்தை அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி நிராகரித்தார். நிராகரித்தது குறித்துப் பேட்டியளித்த அவர், ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர் வேந்தராக இருந்தால் பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி செய்யாது என்று கூறினார். ஆனால், இதற்குச் சில மாதங்களுக்குள் மத்தியில் இருந்த நரசிம்மராவ் அரசுடன் ஜெயலலிதாவின் உறவு மேம்பட்டது. 1996 தேர்தலில் காங்கிரசும் அ.தி.மு.கவும் கூட்டணி அமைத்தன. இதனால், இந்த மசோதாவை ஜெயலலிதாவும் பிறகு வலியுறுத்தவில்லை" என்கிறார் ஷ்யாம். இதற்கு முன் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி வந்த பிறகு, இதற்கு முன்பும் வேறு சில மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கிறார். 1. நீட் விலக்கு மசோதா: தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இளநிலைப் படிப்புகளுக்கு நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அல்லாமல் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க வழிவகுக்கும் மசோதா கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா செப்டம்பர் 18ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் இந்த முறை மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். இப்போது அந்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. 2. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அக்டோபர் 1ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதற்குப் பிறகு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கிடையில் அவசரச் சட்டமும் காலாவதியானது. இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு மேல் மசோதாவை பரிசீலனையில் ஆளுநர் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதற்குப் பிறகு இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் மார்ச் 23ஆம் தேதி அந்த மசோதா திரும்பவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடின. வழக்க விசாரித்த உயர் நீதிமன்றம் சட்டம் செல்லும் எனக் கூறியது. ஆனால், திறமையின் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் குறிப்பிட்டது. https://www.bbc.com/tamil/articles/c878pnk4417o
  2. காலம் : 19/11/2023 ஞாயிறு பிற்பகல் 3 மணி இடம் : கலாச்சார மண்டபம், சங்கானை
  3. ராகுல் டிராவிட்: ஷமி, லோகேஷ் ராகுலை ஆதரித்து சிறந்த இந்திய அணியை கட்டமைத்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் ராகுல் டிராவிட் பெரும் பங்கை எடுத்துக்கொண்டுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், விகாஸ் பாண்டே பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டும், அவரது அணியினரும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதுவரையிலும் தோற்கடிக்கப்படாத ஆஸ்திரேலியாவுடன் விளையாடினர். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு அப்போது சென்றதால் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் இந்தியர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது என்பதுடன், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணிக்கு மோசமான தோல்வியை அளித்தனர். 2007 ஆம் ஆண்டில், மீண்டும் ஒரு போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அவர் தான் அணிக்குத் தலைமை தாங்கினார். சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறத் தவறினர். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் திறமையான பேட்ஸ்மேன் தற்போது மீண்டும் களத்தில் உள்ளார். இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இப்போது அவர் இந்த மதிப்புமிக்க உலகக் கோப்பையைப் பெற முடியுமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் சிறந்த பயிற்சியாளர்கள் பட்டியலில் டிராவிட்டின் பெயர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் ராகுல் டிராவிட்டின் 'மேஜிக் டச்' இருக்கிறது. ஆனால் அவர் எப்படி ஒரு பழம்பெரும் பேட்ஸ்மேன் என்ற நிலையிலிருந்து தன்னை ஒரு பயிற்சியாளராக மாற்றிக் கொண்டார். அவர் திரைக்குப் பின்னால் இருக்க விரும்புகிறாரா, அல்லது அவரது அணியின் வலுவான செயல்திறன் மூலம் தனது இருப்பை உணர்த்துகிறாரா? பதில் அவரது புத்திசாலித்தனமான விளையாட்டு நிர்வாகத்தில் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட் தனது வாழ்க்கையில் கடின உழைப்பாளி என்று அறியப்படுவதுடன் பெரும் புகழையும் பெற்றுள்ளார். மிக எளிதாக அவர் விக்கெட்டுகளை இழந்த அரிதான சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால்தான் அவர் 'தி வால்' அல்லது 'மிஸ்டர் டிபெண்டபிள்' என்றும் அழைக்கப்பட்டார். 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியாத நிலை ஏறக்குறைய உறுதியாகிவிட்ட போது, டிராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண் உடன் இணைந்து 376 ரன்கள் எடுத்த மறக்க முடியாத இன்னிங்ஸுடன் ஆட்டத்தை மாற்றியபோது அவரது மிக முக்கியமான பேட்டிங் திறன் வெளிப்பட்டது. 2004-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் 12 மணி நேர இன்னிங்ஸ் இன்றும் சிறந்த விளையாட்டுத் திறன்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. 2011 இல் இந்தியாவின் மோசமான இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டிராவிட் தனது சக வீரர்கள் மத்தியில் உறுதியாக இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா 4-0 என்ற அவமானகரமான தோல்வியை சந்தித்தாலும், டிராவிட் அப்போதும் 602 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருக்கும் அவரது ஸ்டைல் அவரது பயிற்சி பாணியிலும் தெரிகிறது. ஆனால் நீங்கள் இன்னும் நெருக்கமாகப் பார்க்கும் போது, இந்த பதவிக்காலமும் அவருக்கு மிகவும் எளிதானது அல்ல என்பதை நீங்கள் காணலாம். விளையாடிய நாட்களைப் போலவே, டிராவிட் ஒரு பயிற்சியாளராக கடினமாக உழைத்தார், விமர்சனங்களை எப்போதும் புறக்கணித்தார் என்பதுடன் அவரது தனி அடையாள பாணியை கைவிடவில்லை. டெபிட் கார்டு மூலம் இலவச ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு பெறுவது எப்படி?58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழப்பத்தில் இருந்து மீட்டு உச்சத்திற்கு... அவரது வெற்றி வெற்றிடத்திலிருந்து வந்தது அல்ல. சர்வதேச அளவில் செயல்படத் தயாராக இருக்கும் இந்தியாவின் மூத்த அணியின் திறமை எங்கிருந்து வருகிறதோ அந்த அடித்தளத்திலிருந்தே அவர் தொடங்கினார். அவர் 2016 இல் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட மற்றும் A (ஜூனியர் நேஷனல் சைட்) அணிகளின் தலைமை பயிற்சியாளராக ஆனார். இது தேசிய அளவிலான கவர்ச்சியைப் பெற்றிராத பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் இதில் அவர் சிறப்பாக செயல்பட்டு தனது அணியை 2018-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை எடுத்துச் சென்றார். மூன்று ஆண்டுகள் ஜூனியர் நிலை வரை திறமைகளை வளர்த்த பிறகு, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) இயக்குநராக நியமிக்கப்பட்டார். நேஷனல் கிரிக்கெட் அகாடமி ஒரு பிரீமியம் மையமாகும். அங்கு வீரர்கள் தங்களுடைய உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்கின்றனர். அல்லது காயங்களில் இருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையைப் பெறுகிறார்கள். அவர் என்சிஏவில் இருந்த போது, இந்திய கிரிக்கெட் பெரும் கொந்தளிப்பான கால கட்டத்தை கடந்து கொண்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோப்பைக்காக நாடு காத்திருக்கும் நிலை நீண்டு கொண்டே இருந்தது. இந்தியா கடைசியாக 2013ல் ஐசிசி போட்டியில் வென்றது. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த பின்னணியில், 2021ல் டிராவிட்டிடம் அணியின் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே ஜூனியர் மட்டத்தில் டிராவிட்டிடம் இருந்து பயிற்சி அல்லது வழிகாட்டுதலை பெற்றுள்ளனர் என்பதே உண்மை. எனவே, அது அப்படி இல்லாவிட்டாலும், டிராவிட்டிற்கு மிகவும் எளிதாகத் தோன்றியது. அதன் பின் அணியில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டன, 2022 இல் விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு வெளியேறியபோது, பிரச்னைகள் மேல் மட்டத்திற்கு வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஷமி, லோகேஷ் ராகுலுக்கு ஆதரவு டிராவிட் தனது வழக்கமான பாணிக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சலசலப்பை விட்டு, தோல்வியால் வருத்தப்படாமல், செயல்முறையை நம்பும்படி தனது அணிக்குக் கூறினார். 2023ல் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் அவரது கவனம் நிலைத்திருந்தது. இப்போட்டிக்காக அவர்கள் பலவிதமான வீரர் தேர்வுகளை முயற்சிக்க வேண்டியிருந்தது - அணி இழப்புகளைச் சந்தித்தாலும் கூட. அவர் தனது வீரர்களை பெரிதும் ஆதரித்தார். கே.எல்.ராகுலை அணியில் சேர்ப்பது குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் இந்த பேட்ஸ்மேனுக்கு ஆதரவாகவே நின்றார். இன்றைக்கு ராகுல் அவரது பேட்டிங்கால் மட்டுமல்ல, விக்கெட் கீப்பிங் திறமையாலும் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். 2003 போட்டியில் ராகுல் டிராவிட் தன்னலமின்றி விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர் அணியில் விளையாட முடியும். லோகேஷ் ராகுல் ஒரு விக்கெட் கீப்பர் இல்லை. ஆனால் அவர் மற்ற விக்கெட் கீப்பரைப் போல் சிறந்த வேலையைச் செய்து வருகிறார். பலர் ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் இந்தியாவுக்காக விளையாடும் முதல் நான்காவது பேட்ஸ்மேன் ஆவார். டிராவிட் தனது பந்துவீச்சாளர்களில், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்வதில் நிறைய கவனம எடுத்துக் கொண்டார். இதில் முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அடங்குவர். 2025க்கு பிறகு உங்கள் மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யப்போகும் பருத்தி, மருதாணி பேட்டரிகள்17 நவம்பர் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES மிகச் சிறந்த இந்திய அணியை கட்டமைத்தது எப்படி? உண்மையில், ராகுல் டிராவிட்டின் செயல்பாட்டில் இந்திய அணி சரியான வீரர் தேர்வைக் கொண்டிருப்பதையும், ஒரு பெரிய போட்டிக்குச் செல்வதற்கு முன்பு சரியான நேரத்தில் ஃபார்மில் இருப்பதையும் உறுதி செய்வதை உள்ளடக்கியது. அவர் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் நம்பகமான உறவை உருவாக்கினார். அவர் இந்த போட்டியில் தனது வியூக ரீதியான முடிவுகள் மற்றும் தைரியமான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்துவருகிறார். அணியை மேம்படுத்துவதில் டிராவிட் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவுகள் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. உலகக் கோப்பை போட்டிக்கு முன், இந்தியா, பாகிஸ்தானையும், இலங்கையையும் மோசமாக தோற்கடித்து, ஆசிய கோப்பையை வென்றது. மேலும் இந்த போட்டியில் இதுவரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார். இந்த லெஜண்ட் தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான கடைசி தடை மட்டுமே உள்ளது. அது இதுவரை ஒரு வீரராக அவரது எல்லைக்கு அப்பாற்பட்டது. அவர் நிச்சயமாக கோப்பையைப் பெற ஆர்வமாக இருப்பார். ஆனால் போட்டி தொடங்கிய பிறகும், பெரும்பாலும் போட்டி முடிந்த பிறகும் அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார் என்பதை உறுதியாகக் கூறலாம். விண்டேஜ் ராகுல் டிராவிட் அப்படிப்பட்டவர் தான். அவர் எப்போதும் தனது வேலையை அமைதியாக செய்ய விரும்புகிறார். https://www.bbc.com/tamil/articles/cd1pglz6353o
  4. Published By: VISHNU 17 NOV, 2023 | 11:05 AM (எம். எம். சில்வெஸ்டர் ) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த எஸ். மிதுன் ராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 34ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்றைய தினம் சாம்பிரதாய பூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பமானது. எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிறு வரை நடைபெறவுள்ள இப்போட்டி விழாவில் நாடு முழுவதிலிருந்தும் 15 வயது முதல் 29 வயது வரையான 3000 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப்போட்டி விழாவில், 15 -20 , 21 - 29 என்ற இரண்டு வகையான வயதுப் பிரிவுகளின் கீழ் ஆண், பெண் என இருபாலாருக்கும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/169514
  5. 18 NOV, 2023 | 12:45 PM ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் " என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) காலை கூடியது. அவை கூடியவுடன் சபாநாயகர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை வாசிக்க அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். அப்போது பேசிய முதல்வர், "எனது உடல் நலனைவிட மாநில மக்களின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. இது தொடர்பாக சட்ட ரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை. ஆனால் ஆளுநர் ரவி தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளால், சட்டமுன் வடிவுகளை திருப்பி அனுப்பியிருப்பது, தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவர் அவமதிக்கிறார் எனப் பொருள். இது சட்டவிரோதம், மக்கள் விரோதம், ஜனநாயக விரோதம், மனசாட்சி விரோதம், அதையும்விட சட்டமன்றத்தின் இறையான்மைக்கு எதிரானது. மத்திய அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை தமிழக அரசால் செயல்படுத்த முடியும். மத்திய அரசிடம் ஆளுநருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர் தமிழ்நாட்டுக்கான நிதியை பெற்றுத்தர முயற்சிக்கலாம். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை பெற்றுத் தரலாம். புதிய ரயில்வே திட்டங்களைப் பெற்று தரலாம். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருக்கலாம். ஆனால் இதில் எதையும் செய்யாமல் மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார். விழாக்களுக்கு செல்கிறார்.செல்லட்டும் ஆனால் விதண்டாவாதமாக கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொது வழியில் விளக்கம் அளிப்பதும், விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு கிடையாது, தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிட கொள்கை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரின் அபத்தமான கருத்துக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மறுப்பு செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாடு வளர்ந்து வருவதை காண பொறுக்காமல் ஆளுநர் இத்தகைய செயல்களை செய்து வருவதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்திற்கு முழுவதும் மாறாக ஆளுநர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். எனவே அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு இந்திய குடியரசு தலைவர் அவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி இருக்கிறார்கள். நானும் இந்திய பிரதமருக்கு இந்த பிரச்சினை குறித்து கடிதம் எழுதி இருக்கிறேன். இந்த அனைத்து முயற்சிகளும் எந்தவித பயனும் தராததால்தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் கட்சி கதவுகளை தட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் " என்று கூறினார், முதல்வர் பேசியதை அடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை விமர்சிக்காமல், தனிப்பட்ட விமர்சனங்களைக் கூறாமல் தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுமதியளித்தார். https://www.virakesari.lk/article/169617
  6. அல்ஸிபா மருத்துவமனை ஹமாசின் தலைமையகமா? இதுவரை இஸ்ரேல் உறுதியான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவில்லை – கார்டியன் Published By: RAJEEBAN 18 NOV, 2023 | 12:27 PM அல்ஸிபா மருத்துவமனை ஹமாசின் தலைமையகம் என தான் தெரிவித்துவந்துள்ளதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களை இதுவரை இஸ்ரேல் முன்வைக்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. மருத்துவமனையை கைப்பற்றுவதற்கு முன்னர் அந்த மருத்துவமனை ஹமாசின் தலைப்பீடம் என சித்தரிப்பதற்கு இஸ்ரேலிய படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள கார்டியன் அங்கிருந்தே தாக்குதல்கள் திட்டமிடப்படுகின்றன என இஸ்ரேல் தெரிவித்துவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது. எனினும் இதுவரை இஸ்ரேல் அதற்கான போதிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள கார்டியன் இதுவரை மருத்துவமனையில் கைப்பற்றியதாக சிறிய ரக ஆயுதங்கள் சிலவற்றையே காண்பித்துள்ளது எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது. அந்த ஆயுதங்கள் அங்கு ஆயுததாரிகளின் பிரசன்னம் இருந்திருக்கலாம் என்பதை தெரிவித்துள்ளன ஆனால் இஸ்ரேல் தெரிவித்தது போல அல்ஸிபா மருத்துவமனை ஒரு கட்டளைப்பீடமாக அல்லது தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு இந்த ஆதாரங்கள் போதுமானவை இல்லை எனவும் குறிப்பிட்டு;ளது. இஸ்ரேலிய படையினர் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் கூட சந்தேகங்களை எழுப்புவதாக காணப்படுகின்றன – மீட்கப்பட்ட துப்பாக்கியை இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலிய படையினர் வெளியிட்டுள்ளனர்,இந்த வீடியோ அந்த பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளது என கார்டியன் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் காண்பிக்கப்பட்ட வீடியோவில் பல துப்பாக்கிகள் காணப்படுகின்றன - இஸ்ரேலிய படையினர் அந்த வீடியோ எடிட் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர் ஆனால் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/169613
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் அடிமை முறை இருந்ததாக விவரிக்கிறது சமீபத்தில் வெளியான புத்தகம் ஒன்று. தங்களைத் தாங்களே விற்றுக் கொள்ளும் அளவுக்கு அப்போது இருந்த நிலைமை என்ன? புத்தகத்திலிருந்து விரிவான தகவல்கள். மனிதர்களை உடைமையாக வாங்கி, பயன்படுத்தும் அடிமை முறை குறித்துப் பேசும்போது பெரும்பாலும் வெளிநாடுகள் குறித்த பதிவுகளே காணக் கிடைத்து வந்தன. குறிப்பாக எகிப்து, கிரேக்கம், ரோம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்த அடிமை முறை குறித்துப் பல பதிவுகள் தமிழில் காணக் கிடைக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்த அடிமை முறை குறித்த பதிவுகள் முறையாகத் தொகுக்கப்படவே இல்லை. இந்த நிலையில்தான், 1980களின் ஆரம்பத்தில் சில ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தனர் என ஒரு சிறு நூலை வெளியிட்டார் ஆ. சிவசுப்பிரமணியன். பிறகு அது விரிவாக்கப்பட்டு 2005ஆம் ஆண்டில் 'தமிழகத்தில் அடிமை முறை' என்ற நூலாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. அந்தப் புத்தகம் வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகப் பகுதியில் நிலவிய அடிமை முறை குறித்து 'தமிழகத்தில் அடிமை முறையும் ஆள் விற்பனையும்' என்ற நூல் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த நூலை எழுதியவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டு - தொல்லியல் துறையின் முன்னாள் தலைவரும் ஆய்வாளருமான புலவர் செ. ராசு. அவர் சமீபத்தில்தான் உயிரிழந்த நிலையில், இந்தப் புத்தகம் வெளியாகிருக்கிறது. ஆ. சிவசுப்பிரமணியனின் புத்தகத்தில் 29 ஆவணங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த நூலில் 50 ஆவணங்களைப் பதிவு செய்து இங்கிருந்த அடிமை முறை குறித்துக் கூறுகிறார் செ. ராசு. தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறை குறித்த ஆதாரங்கள் தமிழ்நாட்டின் வரலாற்று நூல்களில் இங்கிருந்த அடிமை முறை குறித்து சரியான வகையில் எழுதப்படாததாகக் குறிப்பிடும் ஆசிரியர், சில நூல்களில் அது மறைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார். இருந்தபோதும் 1931-33ஆம் ஆண்டுகளில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சில அடிமை ஆவணங்களைத் தொகுத்தனர். அதற்குப் பிறகு அ.கா. பெருமாள், செ. போஸ், க.பன்னீர்செல்வம், எம்.ஏ.கிருஷ்ணன், மார்க்சிய காந்தி போன்றவர்கள் சில அடிமை ஆவணங்களைக் கண்டறிந்தனர். இதற்குப் பிறகு ஆ. சிவசுப்பிரமணியனின் நூல் வெளிவந்தது. இந்த நிலையில், 1982இல் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்த புலவர் ராசு, அடிமை ஆவணங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். கல்வெட்டுகள், ஓலைகள் என மொத்தமாக ஐம்பது ஆவணங்கள் அவருக்குக் கிடைத்தன. அடிமைகள் விற்கப்படுவதை பதிவு செய்யும் இந்த ஆவணங்கள் 'ஆள்விலைப் பிரமாண இசைவுச் சீட்டு' எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிய அடிமை முறை குறித்த அதிர வைக்கும் தகவல்களை முன்வைக்கிறார் ராசு. பொதுவாக மன்னர்களின் ஆட்சிக் காலம் பொற்காலம் எனக் கூறப்படும் நிலையில், அந்தக் காலகட்டங்களில்தான் மிகப் பெரிய அளவில் அடிமை விற்பனை அமலில் இருந்ததைக் குறிப்பிடுகிறார் அவர். செ. ராசுவின் நூலில் பிற்காலச் சோழர் காலம் துவங்கி, 19ஆம் நூற்றாண்டுவரை அடிமைகள் குறித்துக் குறிப்பிடும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் அடிமைகள் ராஜராஜ சோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் பிள்ளையார் பிருதிகங்கர் கோவில் கன்மிகளுக்கு (தொழிலாளர்களுக்கு) ஒரு அடிமை ஆவணம் கல்வெட்டின் மூலம் அளிக்கப்பட்டது. இரண்டு பேர் இந்தக் கல்வெட்டை வெட்டி, தங்களை அடிமை என அறிவித்துக் கொண்டனர். தாங்களும் தங்கள் வழித்தோன்றல்களும் பிள்ளையாருக்கே பணி செய்து கொடுப்பதாக எழுதிக் கொடுத்தனர். இரண்டாம் ராஜாதிராஜன் காலம் முதல் மூன்றாம் ராஜராஜனின் காலம் வரை தமிழ்நாட்டில் அதிக அளவில் அடிமைகள் இருந்தார்கள் என்கிறார் ராசு. மூன்றாம் குலோத்துங்கன் வீரபாண்டியனை கொன்று அவனது மனைவியை அடிமையாகக் கொண்டு வந்ததாக ஒரு ஆவணம் கூறுகிறது. சோழ மன்னர்கள் சிலர், போரில் தோற்ற நாட்டின் பெண்களை அடிமைகளாகக் கொண்டு வந்ததும் அல்லாமல், சில பெண்களின் மூக்கை அரிந்துள்ளனர். அதற்குப் பிறகு வந்த விஜயநகர மன்னர்கள் காலத்திலும் அடிமை முறை நீடித்தது. 1568இல் செஞ்சி மன்னன் சூரப்ப நாயக்கர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சில அடிமைகளை தானமாக அளித்தார். தஞ்சாவூரில் 1676 முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி நடந்தபோதும் அரசு அதிகாரிகளே அடிமை வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் மோதி மொழியில் கிடைத்திருக்கின்றன. உதாரணமாக, அக்கப்பட்டி மிராசு சிதம்பரம் என்பவர் பிழைக்க வழிதேடி இரு மகள்களுடன் தஞ்சாவூருக்கு வந்து தங்கினார். அவர் வீட்டில் இல்லாதபோது அரண்மனைக்கு அடிமை சேகரிக்கும் ஆட்கள் அவரது இரண்டு பெண்களையும் அடிமைகளாக இழுத்துச் சென்றனர். சிதம்பரம் ஆளுநரிடம் புகார் செய்தபோது, ஆளுநர் 'ஒன்றும் செய்வதற்கில்லை' என்று பதிலளித்தார். இது நடந்தது 1842இல். அடிமைகளின் விலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அடிமைகளின் விலையைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கிறது. வாங்குவோரின் பொருளதார நிலையும் அதைத் தீர்மானித்திருக்கிறது. வேதாரண்யம் கோவிலில் 1221ஆம் ஆண்டு 10 அடிமைகள் 1,000 காசுக்கு வாங்கப்பட்டுள்ளனர். இதற்கு நாற்பது ஆண்டுகள் கழித்து 1,261ஆம் ஆண்டில் 4 அடிமைகள் 700 காசுக்கு வாங்கப்பட்டுள்ளனர். 1781இல் புதுச்சேரியில் ஒரு பெண் 2 ரூபாய்க்கும் தஞ்சாவூரில் 1845இல் ஒரு பெண் 8 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளார். கோவில்களில் அடிமைகளுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டது. பெண்களைவிட ஆண்களுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டது. குழந்தைகளின் விலை மிக மிகக் குறைவாக இருந்திருக்கிறது. அடிமைகளாவதற்கான காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரம்பத்தில், போரில் பிடித்து வரப்படுவது, சாதி போன்ற பல காரணங்கள் அடிமை முறைக்கு அடிப்படையாக இருந்தாலும் பிற்காலங்களில் வறுமை மிக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. 1833, 1854 ஆகிய வருடங்களில் திருமணம் செய்வதற்காக கடன் வாங்கியவர்கள் திருமணம் முடிந்த பிறகு தன் மனைவியுடன் அடிமையாகியிருக்கிறார்கள். 1890இல் தன் சகோதரனின் இறுதிச் சடங்கிற்காக கடன் வாங்கியவர், அதற்குப் பதிலாக தன்னை எழுதிக் கொடுத்திருக்கிறார். சில தருணங்களில் வறுமை தாங்க முடியாமல், சாவதைத் தடுக்க கோவிலுக்குத் தாங்களே அடிமை ஆகியிருக்கிறார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழனின் 23வது ஆட்சியாண்டில் காட்டுடையான் என்பவர் தன் மனைவி, மக்களோடு திருப்பாம்புரமுடையார் கோவிலுக்கு அடிமை ஆனார். தனியார் ஒருவரிடம் அடிமையாய் இருப்பதைவிட கோவில்களில் அடிமையால் இருப்பது சற்று மேம்பட்டதாய் இருந்திருக்கிறது. சில இடங்களில் கோவில்கள் அடிமைகளுக்கு நிலமும் வீடும் அளித்திருக்கின்றன. சங்க காலத்திலும் அடிமை முறை பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது வெளிவந்திருக்கும் புத்தகத்தைப் போலவே, ஆ. சிவசுப்பிரமணியன் எழுதி 2005இல் வெளிவந்த தமிழகத்தில் அடிமை முறை என்ற புத்தகமும் இங்கு நிலவிய அடிமை முறை பற்றிக் கூறுகிறது. இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை பட்டினப்பாலை, முல்லைக்கலியில் வரும் பாடல்களை வைத்து சங்க காலத்தில் இருந்தே அடிமை முறை இருந்ததைக் குறிப்பிடுகிறது. அதேபோல கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை நீடித்த பல்லவர் ஆட்சிக் காலத்திலும் அடிமை முறை நிலவியதை பக்தி இயக்கப் பாடல்களில் வரும் சொற்களை வைத்துச் சுட்டிக்காட்டுகிறார் ஆ. சிவசுப்பிரமணியன். அதேபோல, பத்தாம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையான பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்திலும் அடிமை முறை இருந்தது என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன். ஆனால், இவர்களது வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பது குறித்த பதிவுகள் இல்லை என்கிறார் அவர். இதற்குப் பிறகு விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு வந்தபோது செஞ்சி, தஞ்சாவூர், மதுரையை தலைநகராகக் கொண்ட நாயக்கர் ஆட்சி தோன்றியது. அப்போதும் அடிமை முறை நிலவியது. பல்வேறு கால கட்டங்களிலும் இந்த அடிமைகள் தங்கள் கடமைகளில் இருந்து தவறினால் தண்டிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பண்ணைகளில் அடிமைகளாக இருந்தவர்கள் மிகக் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதையும் ஆ. சிவசுப்பிரமணியனின் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. "ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் தொழில்கள் மாறி வந்துள்ளன. உற்பத்தி உறவுகள் மாறி வந்துள்ளன. இதைப் புரிந்துகொண்டபோதுதான் வெளிநாடுகளைப் போல இங்கேயும் அடிமைகள் இருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். மெல்ல மெல்ல அதற்கான ஆவணங்களைத் தேடும்போது, ஒவ்வொன்றாகக் கண்ணில்பட ஆரம்பித்தன. அவற்றை வைத்து 1980களின் தொடக்கத்தில் ஒரு சிறிய உரையை நிகழ்த்தினேன். பிறகு அதை ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டேன். பிறகு ஆதாரங்களையெல்லாம் இணைத்து 2005இல் வெளியிட்டேன்," என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன். இந்தியாவின் பல பகுதிகளிலும் அடிமை முறை இருந்தாலும், சமீப காலம் வரை வரலாற்று ஆசிரியர்கள் அதுகுறித்து எழுதுவதைத் தவிர்த்து வந்தார்கள் என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. "அடிமை முறை என்பது உலகம் பூராவுமே இருந்தது. அதேபோல இந்தியாவிலும் தமிழகப் பகுதிகளிலும் இருந்தது. ஆனால், இதுபோன்ற அடிமை முறை இந்தியாவில் கிடையாது என்று நவீன கால வரலாற்றைப் பேசுபவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையில் இன்றைக்கு ஏற்றத் தாழ்வுகள் இருந்ததைப் போலவேதான், அந்தக் காலகட்டத்திலும் இருந்தது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு இதுபோன்ற அடிமை முறை நீடித்தது," என்கிறார் வரலாற்று ஆய்வாளரான பொ. வேல்சாமி. பட மூலாதாரம்,GETTY IMAGES சமீப காலம்வரை அதாவது, 19ஆம் நூற்றாண்டு வரை இந்த அடிமை முறை நீடித்திருந்தது என்கிறார் வேல்சாமி. "இதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் 'தாது வருடப் பஞ்சம்' என்ற நூல் இருக்கிறது. அந்த நூலில் தாது வருடப் பஞ்சத்தின்போது விழுப்புரம் மாவட்டத்தில் வறுமையின் கொடுமையால் பெண்கள் தங்களை விற்றுக் கொண்டார்கள் என்ற தகவல் இருக்கிறது. தாது வருடப் பஞ்சம் 1876இல் ஏற்பட்டது. ஆகவே 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை அடிமை முறை இருந்தது தெரிய வந்திருகிறது. ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் வந்த பிறகுதான் மனிதர்கள் சமம் என்பது உலகம் முழுவதும் பரவலாக ஏற்கப்பட்டது. உலகம் முழுவதும் அடிமைகள் உருவாவதை போரின் வெற்றி தோல்விகளும் பொருளாதாரக் காரணிகளும்தான் தீர்மானித்தன. ஆனால், இந்தியாவில் அடிமை முறையைத் தீர்மானிப்பதில் சாதிய ஏற்றத் தாழ்வுகளும் அடிமைத்தனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன. எல்லா மன்னர்களின் காலத்திலும் இது நீடித்திருக்கிறது," என்கிறார் பொ. வேல்சாமி. ஆனால், வெளிநாட்டில் இருந்த அடிமை முறைக்கும் இங்கிருந்த அடிமை முறைக்கும் இடையிலான ஒரு சிறிய வித்தியாசத்தை ஆ. சிவசுப்பிரமணியன் சுட்டிக் காட்டுகிறார். "ரோம் போன்ற நாடுகளில் சங்கிலியால் கட்டப்பட்ட அடிமைகள் உண்டு. இங்கே அதுபோல கிடையாது. இங்கே அவர்களிடம் கடுமையாக வேலை வாங்கப்படும். ஆனால், சங்கிலியால் கட்டிப் போடும் வழக்கம் கிடையாது," என்கிறார் அவர். அம்பேத்கரை பொறுத்தவரை, தீண்டாமை என்பது இந்திய அடிமை முறையின் ஒரு வடிவம். இந்த வரலாற்றை பள்ளியிலிருந்தே கற்றுக்கொடுத்தால், சாதி குறித்த புரிதல் வேறு மாதிரியிருக்கும் என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன். இந்தியாவில் 1843ஆம் ஆண்டு அடிமைகளை வைத்துக்கொள்வது சட்டப்படி தடைசெய்யப்பட்டது. தற்போது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 370, 371வது பிரிவுகள் அடிமைகளை வைத்திருப்பதையும் அடிமை வணிகம் செய்வதையும் தண்டனைக்குரிய குற்றங்களாக கூறுகின்றன. https://www.bbc.com/tamil/articles/cgepxlk59k4o
  8. மற்றுமொரு ஆய்வுக்கப்பலை அனுப்புவதற்கு சீனா முஸ்தீபு 18 NOV, 2023 | 03:40 PM நமது நிருபர் இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக ஷியான் யாங் ஹொங் 03 என்ற மற்றுமொரு ஆய்வுக் கப்பலை அனுப்புவதற்கு சீனா இலங்கையிடம் அனுமதியை கோரியுள்ளது. குறித்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, சீனா எதிர்வரும் 2024 ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி முதல் பெப்ரவரி 20ஆம் திகதி வரை ஷியான் யாங் ஹொங் 03 கப்பலை ஆய்வு செய்வதற்கு தயாராகியுள்ளது. ஷியான் யாங் ஹொங் 03 கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானதாக உள்ளதோடு, அக்கப்பல் 99.06மீற்றர் நீளம் கொண்ட பல்நோக்குகளைக் கொண்டதாகும். குறித்த கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கான கோரிக்கை சீனாவால் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த கோரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் உறுதிப்படுத்த முடிந்திருக்கவில்லை. இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த ஷியாங் யாங்-06 கப்பல் அக்கப்பல் இந்து சமுத்திரத்தில் தரித்து நிற்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் குறித்த கப்பல் மீண்டும் நாட்டிற்கு வருகை தருவது குறித்து அமைச்சுக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/169632
  9. 18 NOV, 2023 | 12:45 PM யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளை சேர்ந்த வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்கபுளியடியை சேர்ந்த 24, 31 மற்றும் 33 வயதுடையவர்களை கைது செய்தனர். சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் 8 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/169611
  10. 2003 உலகக்கோப்பை: 90ஸ் கிட்ஸை கண்ணீர் விட்டு அழ வைத்த ரிக்கி பாண்டிங் - இறுதிப்போட்டி நினைவுகள் காணொளிக் குறிப்பு, IND vs AUS - 2003 உலகக்கோப்பை: ரிக்கி பாண்டிங்கின் வெறியாட்டம் நினைவிருக்கிறதா? 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2003 ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. 90ஸ் கிட்ஸ் உள்பட பலரையும் அழ வைத்த போட்டி அது. ஆஸ்திரேலியா, இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியது. ரிக்கி பாண்டிங்கின் பேட்டில் ஸ்பிரிங் இருக்கிறது என்பன போன்ற பல கதைகள் உலா வந்தன. அந்தளவுக்கு இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார் ரிக்கி பாண்டிங். அவர் சேர்த்த 140 ரன்கள் இந்திய ரசிகர்களுக்குத் தீராத வலியைத் தந்தது. கிரிக்கெட்டில் ஊறிப்போன இந்திய ரசிகர்கள் அன்று இரவு தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள். காரணம், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்றது இந்தியா. ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா. 2003 இறுதிப்போட்டியில் அப்படி என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES மார்ச் 23, 2003 தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்தது ஒருநாள் உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தம். 1987, 1999 என இரு முறை தொடர்ச்சியாக உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் உச்சத்தில் இருந்தது ஆஸ்திரேலியா. மறுபுறம், இந்திய அணி 1983இல் கோப்பையை வென்று, சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தது. வீரர்கள் யாருக்குமே அவ்வளவு பெரிய களத்தில் ஆடிய அனுபவம் இருக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES டாஸில் வென்றது என்னவோ இந்தியாதான். கேப்டனாக இருந்த செளரவ் கங்குலி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இந்த முடிவு அப்போது பரவலாக விமர்சனத்திற்குள்ளானது. கங்குலியின் முடிவை சாதகமாக்கிக்கொண்டது ஆஸ்திரேலியா. ஆடன் கில்கிறிஸ்டும் மேத்யூ ஹேய்டனும் ஓபனிங்காக களம் இறங்கினர். தொடக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு துளியும் எடுபடவில்லை. சதம் விளாசிய பாண்டிங் சஹீர் கான் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா. 40 பந்துகளில் அரைசதம் விளாசினார் கில்கிறிஸ்ட். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கில்கிறிஸ்டை ஒரு வழியாக ஹர்பஜன் சிங்கின் சுழல் கட்டுப்படுத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES கில்கிறிஸ்ட் 57 ரன்களிலும் ஹெய்டன் 37 ரன்களிலும் விடைபெற்றனர். அடுத்து வந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்தார். அவருக்குப் பக்கபலமாய் நின்றது டமின் மார்டின். இருவரும் சேர்ந்து மீதமிருந்த 30.1 ஓவர்களில் 234 ரன்கள் சேர்த்தனர். 121 பந்துகளில் 8 சிக்சர், 4 பவுண்டர் என இறுதி வரை ஆட்டமிழக்காமல் 140 ரன்களை சேர்த்திருந்தார் பாண்டிங். மார்டின் தன் பங்கிற்கு 84 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 359 ரன்களை குவித்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பந்துவீச்சு ஆஸ்திரேலியாவிடம் துளியும் எடுபடவில்லை. குறிப்பாக ஜவகல் ஸ்ரீநாத் 10 ஓவர்கள் வீசி 87 ரன்களை விட்டுக் கொடுத்தார். சேவாக், சச்சின், யுவராஜ் சிங்கை பந்துவீச வைத்தார், கங்குலி. ஆனால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. எக்ஸ்டிராஸ் மட்டுமே 37 ரன்களை இந்தியா வழங்கியிருந்தது. பாயிண்டிங்கின் ஆட்டம் ஆஸ்திரேலியாவை வலுவான நிலையில் வைத்திருந்தாலும் 40களில் அவர் இருந்தபோதே நூலிழையில் ஆட்டமிழக்காமல் தப்பித்திருந்தார். தினேஷ் மோங்கியா வீசிய பந்தில் பாண்டிங் எல்பிடபுள்யூ ஆகிவிட்டதாகவும் கள நடுவர் அவுட் தராததால்தான் ஆஸ்திரேலியாவால் ரன்களை குவிக்க முடிந்ததாகவும் அப்போது சர்ச்சைகள் எழுந்தன. கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா உலகக்கோப்பையை வெல்ல 360 ரன்கள் எடுத்தாக வேண்டும். கடினமான இலக்குடன் களமிறங்கியது இந்தியா. முழு கவனமும் சச்சின் பக்கமே இருந்தது. காரணம், 2003 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சச்சின் பிரமாதமாக ஆடினார். அந்த தொடரிலேயே அதிக ரன்களை சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருந்தார். தொடர் நாயகன் விருதும் சச்சினுக்கே கிடைத்தது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த சச்சின், சேவாகுடன் இணைந்து ஓபனிங் ஆடினார். மெக் கிராத் வீசிய முதல் 3 பந்துகள் டாட் பால். 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் சச்சின். ஆரங்கம் ஆர்ப்பரித்தது. ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்த பந்தே சச்சின் ஆட்டமிழந்தார். இந்தியாவின் சரிவு ஆரம்பமானது. ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து வந்த கங்குலியாலும் பெரிதாக மாயம் செய்ய முடியவில்லை. அந்த தொடரில் கங்குலியும் சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார். தொடரில் அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் கங்குலி. 3 சதங்களையும் அவர் பதிவு செய்திருந்தார். கங்குலியைத் தொடர்ந்து வந்த கைஃபும் டக் அவுட்டாக ஆட்டம் முற்றிலுமாக ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. இந்தியா 59 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. தனி ஆளாக போராடிக்கொண்டிருந்த சேவாக், முடிந்தளவு ரன்களை சேர்க்கத் தொடக்கினார். மோசமான தவறால் சேவாக்கின் ஆட்டமும் ஒரு ரன் அவுட்டால் முடிவுக்கு வந்தது. அது ஒரு தற்கொலைக்கு நிகரான ரன் அவுட் என அப்போது வர்ணிகப்பட்டது. சேவாக் 81 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்திருந்தார். இதுதான் அந்தப்போட்டியில் இந்திய அணியில் தனிநபர் விளாசிய அதிகபட்ச ஸ்கோர். டிராவிட்டை தவிர்த்து அடுத்து வந்த வீரர்கள் யாராலும் களத்தில் வெகு நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. டிராவிட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். 2003க்கும் 2023க்கும் உள்ள ஒற்றுமை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரசிகர்கள் பலர் அழுகையில் மூழ்கினர். ஆஸ்திரேலியாவின் மாபெரும் வெற்றியால் 3வது முறையாக உலகக்கோப்பை அவர்கள் வசமானது. தற்போது அதே பாணியில் நவம்பர் 19ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் களம் காண்கின்றன. இந்திய ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில், இந்தியா 2003 தோல்விக்காக ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர். 2003-ல் ஒரு போட்டியில் கூட தோற்காமல் உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்தியா அந்த சமயம் 2 ஆட்டங்களில் தோற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 2003 தொடரில் சச்சின் டெண்டுல்கர் டாப் ஸ்கோரராகத் திகழ்ந்தார். நடப்புத் தொடரில் விராட் கோலி டாப் ஸ்கோரராகத் திகழ்கிறார். இப்படியாக 2003 தொடருக்கும் நடப்புத் தொடருக்கும் இடையே சில ஒற்றுமைகளும் இருக்கத் தான் செய்கின்றன. 2003-க்குப் பிறகும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடவில்லை. 2007,2015 என இரு முறை ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை நவம்பர் 19ம் தேதி எதிர்கொள்கிறது இந்தியா. அன்று கங்குலியால் முடியாததை இன்று ரோஹித் முடித்துக் காட்டுவாரா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். https://www.bbc.com/tamil/articles/c2v2njy46d0o
  11. 18 NOV, 2023 | 03:51 PM காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த ஸ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் இதுதொடர்பில் தெரிவிக்கையில், ஜனவரி முதல் கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன. இதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் ஈடுபடுத்தப்படவுள்ளது. இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இக்கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் பயணிக்கலாம். ஒருவழிப் பயணக்கட்டணமாக 4,250 இந்திய ரூபாவும் மற்றும் வரிகளும் அறவிடப்படும். அத்தோடு ஒருவழிப் பயணக்கட்டணமாக 17,000 இலங்கை ரூபா மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான முற்பதிவுகளை தொலைபேசி செயலி மற்றும் இணைவழிகளில் மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/169636
  12. 18 NOV, 2023 | 12:40 PM யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துள்ளார். இதன் போது அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்துள்ள நிலையில் தூக்கில் அகப்பட்டுள்ளார். இந்நிலையில், குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/169604
  13. அல்-ஷிஃபா மருத்துவமனையின் கீழே ஹமாஸின் ரகசிய சுரங்கம் உள்ளதா? இஸ்ரேலுக்கு என்ன கிடைத்தது? பட மூலாதாரம்,IDF படக்குறிப்பு, காஸா மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் இருப்பதாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள படம். பிபிசி இதைச் சரிபார்க்கவில்லை. 18 நவம்பர் 2023, 02:53 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையிலான மோதல் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாகக் கொண்டு வந்துள்ளது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்க அமைப்புகளா? பட மூலாதாரம்,IDF இந்நிலையில், அல்ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸின் சுரங்கம் இருப்பதாகக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை `எக்ஸ்` (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தப் புகைப்படங்களை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. "அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே ஹமாஸ் ஆயுதக்குழுவின் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்தப் பதிவில் காஸா மருத்துவமனைக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலின் காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, காஸாவின் முக்கியமான குழந்தைகள் மருத்துவமனையான அல்-ரன்டிசியா மருத்துவமனைக்கு அடியிலும் "மற்றுமொரு ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் சுரங்கத்தை" கண்டறிந்துள்ளதாகக் கூறும் இஸ்ரேல் ராணுவம், அந்த சுரங்கப் பாதையின் உள்ளே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. படக்குறிப்பு, அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஓர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகள். அதோடு, இதே மருத்துவமனையில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கும் காணொளி ஒன்றையும் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்தது. மேலும், அல்-கட்ஸ் மருத்துவமனையில் இருந்து "பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்" கண்டெடுக்கப்பட்டதாகக் காட்டும் புகைப்படத்தையும் இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் பதிவிட்டிருந்தது. மருத்துவமனைகளுக்கு உள்ளே இருந்தும் அதன் அடியிலிருந்தும் ஹமாஸ் குழுவினர் இயங்கி வருவதாக இஸ்ரேல் கூறி வரும் நிலையில், தங்கள் கூற்றை ஆதரிக்கும் உளவுத் தகவல்களும் இருப்பதாகத் தெரிவித்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் இந்தக் கூற்றை ஹமாஸும் மருத்துவமனைகளின் நிர்வாகமும் தொடர்ந்து மறுத்து வருகிறது. அல் ஷிஃபா மருத்துவமனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் தங்களது சோதனைகளைத் தொடர்ந்து வருகிறது. கண்டெடுக்கப்பட்ட பணயக் கைதிகளின் உடல்கள் இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 17) மாலை வரை, ஹமாஸ் குழுவினரால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் இருவரின் உடல்கள் அந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டடத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதில் 65 வயதான யஹுடிட் வைஸ் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நோவா மார்சியானோ இருவருடைய உடல்கள், அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள கட்டடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இவர்களுள் நோவா மார்சியானோ உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், அவருடைய உடலை அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு வீட்டிலிருந்து கண்டெடுத்ததாக வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. 'அன்பான பாட்டி' பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, யஹுடிட் வைஸ் காஸா எல்லைக்கு அருகேயுள்ள பியரி எனும் பகுதியைச் சேர்ந்த யஹுடிட் வைஸ் தன்னுடைய வீட்டிலிருந்து பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யஹுடிட் வைஸ் அந்த நோயிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்தார். ஹமாஸ் குழுவினரால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டபோது அவர் தன்னுடைய மருத்துகளைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை என, `பிரிங் தெம் ஹோம் நவ்` (Bring Them Home Now) என்னும் குழு தெரிவித்துள்ளது. இவருடைய உடல் 16ஆம் தேதி அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள கட்டடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. யஹுடிட் வைஸின் கணவர் ஷ்மூயெல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. "முழுநேரமும் அன்பான பாட்டியாக இருப்பவர்" என யஹுடிட் வைஸ் குறித்து தெரிவித்துள்ள `பிரிங் தெம் ஹோம்` இணையதளம், கலாசாரம், விளையாட்டு, பயணம், பேக்கிங் உள்ளிட்டவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என விவரித்துள்ளது. அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. "துரதிருஷ்டவசமாக, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் யஹுடிட் கொல்லப்பட்டார். சரியான நேரத்தில் எங்களால் அவரைச் சென்றடைய முடியவில்லை," என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். யஹுடிட் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்களை அவர் அளிக்கவில்லை. நோவா மார்சியானா பட மூலாதாரம்,REUTERS மற்றொருவரான இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 19 வயதான நோவா மார்சியானாவின் உடல் இருக்கும் இடத்தை இஸ்ரேல் உளவு அமைப்பால் வழிநடத்தப்படும் படையினர் துல்லியமாகக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இதையடுத்து, நோவாவின் உடல் இஸ்ரேலில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹகாரி தெரிவித்தார். நோவாவின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பணயக் கைதிகள் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தங்களால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் காஸா நகரத்திற்குள்ளேயே "பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்க அமைப்புகளுக்குள்" மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. நோவா மார்சியானா எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த விவரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. ஆனால், நவம்பர் 9 அன்று இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தான் நோவா இறந்ததாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், ஹமாஸின் இந்தக் கூற்றை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை. பட மூலாதாரம்,IDF படக்குறிப்பு, நோவா மார்சியானா நோவா நஹல் ஓஸ் கிபுட்ஸில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இஸ்ரேல்-காஸா எல்லை வழியாக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் நோவா சிக்கினார். தாக்குதல் நடந்த அன்று காலையில் தனது மகளுடன் கடைசியாகப் பேசியதாக நோவாவின் தாயார் அடி மார்சியானா ஒரு பேட்டியில் கூறினார். தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அழைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும் தன் மகள் தெரிவித்ததாக அவர் கூறினார். "துப்பாக்கிச் சூடு, அலறல் சத்தத்தை நான் கேட்கவில்லை. அரை மணிநேரம் கழித்து நான் அவளின் செல்போனுக்கு செய்தி அனுப்பினேன், ஆனால் அவள் பதில் அனுப்பவில்லை," என அவர் கூறினார். கடந்த திங்கள்கிழமை ஹமாஸ் வெளியிட்ட காணொளியில் நோவா தோன்றினார். இதை "உளவியல் பயங்கரவாதம்" என இஸ்ரேல் தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/cjrpe210njvo
  14. நல்ல முயற்சி. எல்லாக் காலங்களிலும் காய்த்து பயன்தரக் கூடிய எலுமிச்சம் பழக்கன்றுகளை எங்கே வாங்கலாம். தமிழ்நாட்டில் உள்ளதாக யுடீயூப் காணொளியில் பார்த்தேன். 1/2 கிலோ தேசிக்காய் 600ரூபா விற்கிறார்கள்.
  15. Published By: DIGITAL DESK 3 18 NOV, 2023 | 03:29 PM இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். தற்போதைய வானிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். வட கிழக்கில் இன்று தொடக்கம் எதிர்வரும் 21வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வருகின்றது. இம்மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்றையதினம் சனிக்கிழமை காலை 7 மணியளவில் இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/169633
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வில்லியம் மார்க்கெஸ் பதவி, பிபிசி முண்டோ 17 நவம்பர் 2023 இதுபற்றிப் பேசும் பலரும் இதை ‘நண்பர்களுக்கு இடையிலான அரவணைப்பு’, ‘உணர்ச்சிகரமான பிணைப்பு’, ‘இரக்கம்’, ‘மற்றொருவருக்கு நல்லது செய்யும் விருப்பம்’ என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். தென் கொரிய மக்கள் இந்த அத்தனை உணர்ச்சிகளும் சேர்ந்த ஒரு உணர்வை ‘ஜியோங்’ என்று அழைக்கின்றனர். இது 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தென் கொரிய கலாசாரம் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. நம்மில் பலரும் நிச்சயமாக இதேபோன்ற ஒன்றை உணர்ந்திருப்போம் — குறிப்பாக மேற்கத்திய கலாசாரம் சாராத, தொழில்வளம் மிக்க நுகர்வுக் கலாசாரத்தால் ஆட்கொள்ளப்படாதவர்கள். ஆனால் இந்த உணர்வை விவரிப்பது எளிதானதல்ல. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உளவியலாளரும், ‘மைண்ட் இன் மோஷன் சைக்காலஜிகல் தெரபி’ நிறுவனத்தின் இணை நிறுவனருமான மருத்துவர் ஜிஹீ சோ, இதுபற்றி பிபிசியுடன் பேசும்போது, இதை யாரும் வெளியிலிருந்து கற்றுக்கொள்வதில்லை என்றார். “இது நம்மில் வேரூன்றியிருக்கிறது. இது வாழ்ந்து பெறும் அனுபவத்திலிருந்து வருகிறது. இது உள்ளுணர்வு சார்ந்தது,” என்கிறார். மற்ற கலாசாரங்களிலும் ‘ஜியோங்’கை போன்ற அணுகுமுறைகள் உள்ளன என்றாலும், கொரியாவில் இது ஒரு கூட்டு சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் தனித்துவமாக இருக்கிறது. ஜியோங் என்றால் என்ன? தென் கொரிய கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ‘ஜியோங்’கை ‘உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான பிணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களிடையே உள்ள அன்பு, உறவு, இரக்கம் மற்றும் பிணைப்பு ஆகியவற்றின் கதகதப்பான உணர்வு’ என்று விவரிக்கிறது. ஆனால், இது மக்களிடையே மட்டும் உருவாவதல்ல என்று மருத்துவர் சோ கூறுகிறார். "இது பொருட்கள், இடங்கள், செல்லப் பிராணிகளுடன்கூட ஒரு பிணைப்பாக இருக்கலாம். எதனுடனும் நீங்கள் ஒரு பிணைப்பை உருவாக்க முடியும்,” என்கிறார். ஜிஹீ சோ தென் கொரியாவில் பிறந்தவர். அங்கு அவர் தனது 13 வயது வரை வாழ்ந்தார். இவரது குடும்பத்தினர் 30 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வந்தனர். அங்கு வாழ்ந்த குடும்பங்கள் மட்டுமின்றி, கடைகள், சலூன்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் அனைவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். "நான் எப்படி இருக்கிறேன், பள்ளியில் எப்படி இருக்கிறேன் என்று அவர்கள் என்னிடம் கேட்பார்கள். என் அம்மா வேலை செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால், பணம் வாங்காமல் கொடுத்தார்கள். என் பெற்றோர் பின்னர் பணம் செலுத்துவார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதுவொரு பரிச்சய உணர்வு,” என்கிறார் ஜிஹீ சோ. கொரிய கலாசாரத்தில், நெருக்கமாக இருப்பவர்களை ‘மாமா-அத்தை’ என்று அழைக்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் தாய்மார்களைக் குறிப்பிடும்போது அவர்கள் ‘என் அம்மா’ என்று சொல்லாமல், ‘எங்கள் அம்மா’ என்று சொல்வார்கள். அமெரிக்காவிற்கு சென்று, அங்கு அவர் படித்து, முனைவர் பட்டம் பெற்றார். பிறகு நியூயார்க்கில் தனது பயிற்சியைத் தொடங்கிய பிறகு, ஜிஹீ சோ ‘ஜியோங்’கை மறக்கவில்லை. குறிப்பாக, மக்கள் தனித்தனியாக வாழும் வாழும் நியூயார்க் போன்ற ஒரு பெரிய நகரத்தில். ஆரம்பத்திலிருந்தே அவர் இரண்டு அல்லது மூன்று குடும்பங்களுடன் நெருக்கமாக இருந்தார். அவர்கள் தேவாலயத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். ஒன்றாக வேலைகளைச் செய்தனர். பெண்கள் ஒரே நேரத்தில் கருவுற்றதால் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். " எங்கள் பரஸ்பர அனுபவங்கள் மூலம் எங்களைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் நிறைய தெரிந்து கொள்கிறோம்,” என்கிறார் சோ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'ஜியோங்’ என்பது ‘உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான பிணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களிடையே உள்ள அன்பு, உறவு, இரக்கம் மற்றும் பிணைப்பு ஆகியவற்றின் கதகதப்பான உணர்வு. ‘இது கருணைக்கும் மேல்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஹீ சோவின் தந்தை கோவிட் பெருந்தொற்றின்போது மறைந்தார். அதனால் சோ அவசரமாக தென் கொரியாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. அவருடைய நண்பர்கள் ‘ஜியோங்’ அணுகுமுறையை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான தருணம் அது. “விளக்கமே தேவையில்லாமல், அவர்கள் உடனடியாக உதவினர். எனது நண்பர்களில் ஒருவர் என் குழந்தைக்கு காலை உணவைத் தயாரித்தார், மற்றொரு குடும்பம் என் கணவருக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்தது, வார இறுதி நாட்களில் அவருடன் இருக்க வீட்டுக்கு வந்தார்கள். ஜியோங்கிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு,” என்று அவர் கூறுகிறார். இது ஒரு எளிய கருணையாகவே பார்க்கப்படலாம். ஆனால் இது கடினமான காலங்களில் ஒருவருக்கு என்ன தேவை என்பதை உள்ளுணர்வாக அறிந்துகொள்வது என்கிறார் மருத்துவர் சோ. அது ஒரு நல்ல அண்டை வீட்டாராக இருப்பதற்கும் அப்பாற்பட்டது. அது மற்ற நபரைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொள்வது, என்கிறார். "இது ஈடுபாடு, தொடர்ச்சியான உண்மையான தொடர்பில் இருப்பது, ஒருவரின் நல்வாழ்வைப் பற்றிய உண்மையான ஆர்வம் கொள்வது,” என்று அவர் கூறுகிறார். ஆனால் இது கடினமான தருணங்களில் மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை. இது அன்றாட வாழ்விலும், மகிழ்ச்சியான தருணங்களிலும் நிகழலாம், என்கிறார் அவர். "யாருக்காவது ஒரு நல்ல செய்தி வந்தால், நாங்கள் அனைவரும் அதற்காக மகிழ்ச்சியடைகிறோம்,” என்கிறார் சோ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆயிரக்கணக்கானோர் தங்கள் மோதிரங்கள், நெக்லஸ்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற ஆபரணங்களை ஒப்படைக்க முன்வந்தனர். கூட்டு தியாகம் ‘ஜியோங்’கின் அடிப்படைக் கூட்டு வாழ்க்கை. குடும்பம், சமூகம், ஆகியவற்றைக் கடந்து, இதை பணியிடம் மற்றும் தேச அடையாளம் வரை நீட்டிக்க முடியும். மருத்துவர் சோ 1998இல் தென் கொரியாவில் நடந்த இரண்டு முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். அவற்றில் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டபோது அந்நாடு சந்தித்த ஆழ்ந்த நிதி நெருக்கடியின் போது நிகழ்ந்தது. தென் கொரிய அரசாங்கம், கடனை அடைப்பதற்குப் போதுமான தங்கத்தைச் சேகரிக்க, குடிமக்களிடம் அவர்களது தங்கப் பொருட்களை நன்கொடையாக வழங்கும்படி ஒரு பெரிய ஊடக பிரசாரத்தைத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் மோதிரங்கள், நெக்லஸ்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற ஆபரணங்களை ஒப்படைக்க முன்வந்தனர். "யார் இப்படிச் செய்வார்கள்? தங்கள் சொந்த உடைமையான தங்கத்தை ஏன் தானம் செய்வார்கள்? ஆனால் அது ஒரு சிறந்த தருணம். அது தேசிய தியாகத்தின் ஒரு இயக்கம். இதன் மூலம் தென் கொரியாவால் பொருளாதாரச் சிக்கலைக் கடக்க முடிந்தது," என்கிறார் அவர். அதேபோல், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘தேசிய ஜியோங்’ மற்றொரு தருணத்தில் நிழந்தது. அது சியோல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயன்றபோது நடந்தது. தென் கொரியர்கள் அந்த இலக்கை அடைய நிறைய உற்பத்தி செய்யக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. "ஆனால் அது நாட்டின் அரசாங்கத்தினுடைய குறிக்கோள் மட்டுமல்ல, மக்கள் அனைவரின் இலக்காகவும் இருந்தது. அவர்கள் நாட்டின்மீது அவர்களுக்கு இருந்த பற்றைக் காட்டினர்," என்கிறார் மருத்துவர் சோ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சியோல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயன்றபோது தென் கொரியர்கள் அந்த இலக்கை அடைய நிறைய உற்பத்தி செய்யக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. மாறி வரும் தென் கொரியா இந்தப் பண்டைய பாரம்பரியம் இருந்தபோதிலும், நவீன தென் கொரியா மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சமூகமாக மாறியுள்ளது. அதன் குடிமக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த கல்வித் தகுதிகள் மற்றும் சிறந்த வேலைகளை அடையவும் தொடர்ந்து அழுத்தத்தில் வாழ்கின்றனர். இதன் விளைவாக, மக்கள் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மைக்கு ஆளாகின்றனர். இது போதைப்பொருளுக்கு அடிமையாதல் மற்றும் தற்கொலைக்கு வழிவகுக்கிறது, என்கிறார் சோ. "காலப்போக்கில் தென் கொரியாவிலும் தனிமனிதவாதம் அதிகரித்து வருகிறது," என்று மருத்துவர் சோ கூறுகிறார். “முந்தைய காலங்களில் கூட்டுப் போக்கு அதிகமாக இருந்தது. இப்போது உலகமயமாக்கல், இணையம் போன்றவற்றால் நாம் சுயநலவாதிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்,” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெருநகரங்களில் மக்கள் மிகவும் தனிமைப்பட்டுப் போகலாம். அவர்கள் தங்கள் குமிழியை விட்டு வெளியேறவில்லை என்றால், உறவுகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் மிகவும் கடினமாகிவிடும். பெரிநகரங்களின் தனிமையைச் சரி செய்யும் வழி ஜிஹீ சோ மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தனிப்பட்ட உறவுச் சிக்கல்கள் சார்ந்த விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது அலுவலகம் இருக்கும் நியூயார்க்கில் நகரத்தின் மக்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள் இவை. பெருநகரங்களில் மக்கள் மிகவும் தனிமைப்பட்டுப் போகலாம். அவர்கள் தங்கள் குமிழியை விட்டு வெளியேறவில்லை என்றால், உறவுகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் மிகவும் கடினமாகிவிடும் என்று அவர் கூறுகிறார். தன்னிடம் வரும் நோயாளிகளில் பலர் மனச்சோர்வடைந்து இருப்பர், அல்லது தஙகள் சுயத்தை மட்டுமே சார்ந்து இருப்பர், என்கிறார். அப்போதுதான் அவர் ஜியோங் முறையைப் பயன்படுத்துகிறார். "ஒரு சிகிச்சையாளராக எனது வேலை அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று போதிப்பதல்ல. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதற்கான தொடக்கப் புள்ளியைக் கண்டறிய அவர்களுக்கு வழிகாட்டுவது," என்று அவர் விளக்குகிறார். “அவர்கள் சமூக வட்டங்களை எவ்வாறு உருவாக்குவது, ஒத்த எண்ணம் கொண்டவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது மற்றும் உறவுகளை எப்படி வளர்ப்பது பற்றி நாங்கள் பேசுவோம்," என்கிறார். ஜியோங்கை செயல்படுத்துவது ஒரு சிறிய தொடக்கம்தான். உண்மையில், நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல் பகிர்ந்து கொள்ள வேண்டும், அதைப் பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை இழக்கக் கூடாது. "எனவே அதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அடுத்த நபரைப் பற்றித் தெரிந்துகொள்ள முயலுங்கள், மதிய உணவிற்கு அவர்களுடன் வெளியே செல்லுங்கள், அடுத்த நாள் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்புங்கள், அவர்கள் மீண்டும் சந்திக்க விரும்புகிறீர்களா என்று அறிந்துகொள்ளுங்கள்," என்று அவர் தனது நோயாளிகளுக்கு அறிவுறுத்துவதாக ஜிஹீ சோ கூறூகிறார். ‘சமநிலை முக்கியம்’ ஜியோங்கை பெறுபவர்களைவிட தருபவர்களே அதிக நன்மையடைகிறார்கள் என்று கூறும் சோ, அது பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார். ஒருதலைபட்சமான ஜியோங் உறவை சேதப்படுத்தும். "அதிகமாக ஜியோங்கை பெறும் நபர் திக்குமுக்காடிப் போகலாம். நீங்கள் பகிரும் நபருடன் ஒரு சமநிலை இருக்க வேண்டும். இதை அறிவியல் ரீதியாக அளவிட முடியாது என்றாலும், தென் கொரிய மொழியில் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் பல வெளிப்பாடுகள் உள்ளன,” என்கிறார் அவர். "உங்களிடம் ஜியோங் இல்லை என்றால், நீங்கள் மற்றவரைப் பாராட்டவில்லை, என்று அர்த்தம். நீங்கள் ஒரு உறவைத் தொடங்கும்போது ஜியோங்கை 'விதைக்கிறீர்கள்', ஆனால் அது தடுமாறத் தொடங்கினால், நீங்கள் ஜியோங்கைக் கைவிடுகிறீர்கள்,” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c72973p7xd3o
  17. Published By: DIGITAL DESK 3 18 NOV, 2023 | 10:01 AM பராமரிப்பு பணிகளுக்காக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் 6 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 165 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் எரிவாயு சுழலி ஆலை மற்றும் நீராவி சுழலி ஆலை இரண்டின் பராமரிப்பு பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்துள்ளது. செயலிழந்த மின் உற்பத்திப் பிரிவில் திருத்தப் பணிகளில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயலிழந்த நிலையில் இருந்த நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஆம் அலகு, திட்டமிடப்பட்ட பாரிய சீரமைப்புப் பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளதோடு, தற்போது பரிசோதனை செய்யப்பட்டுள் வருகிறது. அந்த வகையில், இந்த மின் உற்பத்தி அலகு கூடிய விரைவில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தற்போதுள்ள சூழ்நிலையால் மின்சார தடை ஏற்படாது என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169593
  18. மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு Published By: DIGITAL DESK 3 18 NOV, 2023 | 10:42 AM மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையிலீடுபடுவோரால் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது. பஞ்சாட்சரம் என்பவருடைய 4 வயது மதிக்கத்தக்க பசுவே இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு உயிரிழந்துள்ளது. https://www.virakesari.lk/article/169600
  19. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஆளும் தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சற்று முன்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் அருள் என்பவரைத் தவிர மற்ற 6 பேரின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கிராம மக்கள் கூறுவது என்ன? திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமைந்துள்ள மேல்மா என்ற இடத்தின் அருகே சிப்காட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக மேல்மா உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், இதற்கு மேல்மா கிராமத்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குப் பிறகு மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்து. இந்த அமைப்பு கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் சிப்காட்டிற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாகப் பேரணி ஒன்றை நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து காவல் துறையினரின் தடையை மீறி செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி புறப்பட்டது. அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டபோது, போராட்டக்காரர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குப் பிறகு செய்யாறு சார் ஆட்சியர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பத்திற்குப் பிறகு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணியாகச் சென்றது, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றிக் கூடியது என 11 வழக்குகள் போராட்டக்காரர்களின் மீது பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நவம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இப்படிக் கைது செய்யப்பட்ட 22 பேரில், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அத்திபாடி கிராமத்தில் வசிக்கும் அருள் ஆறுமுகம் (45), விவசாயிகளான செய்யாறு வட்டம் தேத்துறை கிராமத்தில் வசிக்கும் பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தில் வசிக்கும் தேவன் (45), மணிப்புரம் கிராமத்தில் வசிக்கும் சோழன் (32), மேல்மா கிராமத்தில் வசிக்கும் திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தில் வசிக்கும் மாசிலாமணி (45), குரும்பூர் கிராமத்தில் வசிக்கும் பாக்கியராஜ் (38) ஆகிய 7 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நவம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் உள்ள அருள் ஆறுமுகம், கோவை சிறையில் உள்ள தேவன், கடலூர் சிறையில் உள்ள சோழன், மதுரை சிறையில் உள்ள பச்சையப்பன், திருச்சி சிறையில் உள்ள திருமால், வேலூர் சிறையில் உள்ள மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை செய்யாறு காவல்துறையினர் வழங்கி உள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையையும் அவர்களில் சிலரை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதையும் பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. கல்வியாளர் வசந்தி தேவி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஹென்றி திபேன், பியுசிஎல்லின் டாக்டர் வி. சுரேஷ், சென்னை சாலிடாரிட்டி குழுவைச் சேர்ந்த நித்யானந்த் ஜெயராமன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட சிவில் சமூகக் குழுக்கள் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் அமைதியாகப் போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததையும் பல்வேறு சிறைகளில் அடைத்ததையும் அவர்கள் கண்டித்துள்ளனர். கைது நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ள கிராமத்தினர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் இந்தக் கைது நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ளனர். நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு இப்போது வரை அழுதுகொண்டிருக்கிறார். “இரவு இரண்டு மணி இருக்கும். வீட்டின் முன்புறம் தாழ்வாரப் பகுதியில் எனது மகன் பாலாஜி படுத்திருந்தான். திடீரென்று கூட்டமாக தடியுடன் வந்த காவல்துறையினர் வீட்டைச் சுற்றி வளைத்து நின்றுகொண்டு எனது மகனை இழுத்தனர். நான் எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது நீங்கள் அமைதியாக இருங்கள் என்று கூறி இரவு 2 மணிக்கு அழைத்துச் சென்றனர். இன்று வரை என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை,” என்றார். 'திமுக தேர்தலுக்கு முன்பு சொன்னது ஒன்று, இப்போது செய்வது ஒன்று' தேர்தலுக்கு முன்பாக, விவசாயிகள் ஒப்புதல் இன்றி எதையும் செய்ய மாட்டோம் என்றார் மு.க. ஸ்டாலின். ஆனால், இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயல்வதோடு, அதை எதிர்ப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கிறார்கள் என்கிறார் மேல்மா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான தயாளன். “கடந்த 2017ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சிப்காட் அமைப்பதற்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. தி.மு.க. அரசும் தொடர்ந்து அதைச் செயல்படுத்த முயல்கிறது. தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பேன் என்றும் விவசாயிகள் ஒப்புதல் இன்றி எதையும் செய்ய மாட்டோம் என்றும் கூறினார். ஆனால், எங்களுக்கு விருப்பம் இன்றியும் இதுபோன்ற செயல்கள் நடந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தப் பகுதியில் மேல்மா, அத்தி, குரும்பூர், சேத்துரை உள்ளிட்ட 11 கிராமங்கள் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும். இது தொடர்பாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயன்றோம். அது நடக்கவில்லை. பிறகு எங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அருள் என்பவரின் உதவியை நாடினோம். ஆனால் இப்போது அவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது எங்களுக்கு வேதனை தருகின்றது. எதற்காக குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது என்பது தெரியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி, பாளையங்கோட்டை, கடலூர், கோயமுத்தூர் என வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்கிறார் தயாளன். எங்களுக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும், அதைப் பறிப்பது சரியா? காந்தீய வழியில் போராடியவர்களைக் கைது செய்திருப்பது என்ன நியாயம் என்கிறார் கைது செய்யப்பட்ட மாசிலாமணியின் மனைவியான எழிலரசி. "எங்களுக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும். நன்கு விளையக்கூடிய எங்களுடைய நிலங்களை அரசு எடுத்து சிப்காட் அமைப்பதாகச் சொல்கிறது. இதை எதிர்த்து காந்திய வழியில் போராடி வந்தோம். இந்த நிலையில் எனது கணவரையும் வேறு பல பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் ஆறாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை,” என்கிறார் எழிலரசி. குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல்துறையிடம் கேட்டபோது, "இந்த எட்டு பேரும் அரசின் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டுபவர்கள், ஏற்கெனவே எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டங்களைத் தூண்டியவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக," கூறியதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பாகப் பேச மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. "எட்டு வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படுவர்களில் சிலர் இந்தத் திட்டத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இரண்டு போராட்டங்களிலும் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் என்ன தவறு?" என்கிறார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அருள் ஆறுமுகத்தின் சகோதரரான சௌந்தர். போராட்டத்தை முடக்கவே இந்தக் கைது நடவடிக்கையா? இந்தப் போராட்டத்தை முற்றிலுமாக முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது என்கிறது அறப்போர் இயக்கம். "குண்டர் சட்டம் போடப்பட்ட 7 பேரில் நான்கு பேரின் நிலங்கள் கையகப்படுத்தப்படும் பகுதிக்குள் வருகின்றன. தங்களுடைய நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது என ஜனநாயக வழியில் விவசாயிகள் போராடுகிறார்கள். அதில் அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு போராட்டத்தில் முன்னால் நிற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது ஏற்க முடியாதது," என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராமன். தமிழக தொழில்துறை வட்டாரங்களில் இது குறித்துக் கேட்டபோது, "இந்த விவகாரத்தில் தொழில்துறை, சிப்காட் ஆகியவை சொல்வதற்கு ஏதும் இல்லை. சிப்காட்டிற்கு நிலத்தைக் கையகப்படுத்தித் தர வேண்டியது மாவட்ட நிர்வாகம்தான். ஆகவே, இது மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை," என்பதோடு நிறுத்திக்கொண்டனர். அ.தி.மு.க. ஆட்சியில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டங்களில் போராடியவர்களுக்கு ஆதரவாக நின்ற தி.மு.க., இப்போது இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியிருப்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தி.மு.க. தரப்பில் கேட்டபோது, இது குறித்துப் பேச விரும்பவில்லை என்று தெரிவித்தனர். இப்போது இந்த விவகாரத்தை அ.தி.மு.கவும் கையில் எடுத்துள்ளது. குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். "அ.தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தபோது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வந்ததாலும், அந்நிலங்கள் விவசாயப் பணிகளுக்கு பயன்படக்கூடிய நிலமாக இருப்பதாலும், நிலம் கையகப்படுத்தும் நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு கைவிட்டது. விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அ.தி.மு.க. போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்," என்று தெரிவித்திருக்கிறார். செய்யாறு பகுதியில் ஏற்கெனவே இரண்டு சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் செய்யாறு - சிப்காட் அலகு மூன்று என்ற பெயரில், இதை விரிவுபடுத்த 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் 54 அலகுகளாக பிரிக்கப்பட்டு 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் திட்டத்தை அந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நெல், கரும்பு, நிலக்கடலை போன்றவை பிரதானமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. கூடுதல் செய்திகளை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் மாயகிருஷ்ணன் வழங்கியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c2x2rd6p1emo
  20. 17 NOV, 2023 | 06:31 PM இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 55 வயதுடைய அருச்சுணன் சுந்தரலிங்கம் என்பவராவார். கடந்த 31 ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் மனைவியுடன் தோட்டத்தில் களை பிடுங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது இரத்தப்புடையன் பாம்பு அவரை கையில் தீண்டியதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (16) உயிரிழந்துள்ளார். இம்மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணையினை மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் இன்றையதினம் (17) உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/169578
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், செலின் கிரிட் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் “பாலத்தீனிய கொடியை உயர்த்திப் பிடிப்பது குற்றமாகக் கருதப்பட்ட பாலத்தீனத்தில், இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலத்தீனிய கொடியின் நிறங்களைப் பிரதிபலிக்கும் சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அடங்கிய தர்பூசணி உயர்த்தி பிடிக்கப்பட்டது.” அமெரிக்க கவிஞர் அரசெலிஸ் கிர்மேவால் எழுதப்பட்ட ‘ஓட் டூ தி வாட்டர்மெலன்’ என்ற பாடல் வகை கவிதையின் வரிகள் இவை. இது பாலத்தீனிய பிரச்னைகளைக் குறிக்கும் தர்பூசணியின் குறியீட்டு விளக்கத்தைப் பாடும் கவிதை. தர்பூசணி பழத்தில் உள்ள சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்கள் அதற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. பாலத்தீனிய கொடியிலும் இந்த நிறங்களை ஒருசேரப் பார்க்கலாம். எனவே, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பேரணிகள் மற்றும் எண்ணற்ற சமூக ஊடக பதிவுகளில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இப்படியாக, பாலத்தீன பிரச்னைக்கு தர்பூசணி உருவகமாகச் சொல்லப்பட்டதற்கு ஒரு வரலாறு உள்ளது. பாலத்தீன கொடிக்கு தடை பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1967ஆம் ஆண்டில் நடந்த அரபு - இஸ்ரேல் போருக்குப் பிறகு காஸா மற்றும் மேற்குக் கரையை இஸ்ரேல் கையகப்படுத்தியது. அதற்குப் பிறகு பாலத்தீனிய தேசிய அடையாளங்களான பாலத்தீனிய கொடி மற்றும் அதன் நிறங்களை, கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது. பாலத்தீனிய கொடிகளைக் கையில் வைத்திருப்பதே குற்றமாக்கப்பட்டதால் அதற்கு எதிரான போராட்டத்தில் பாலத்தீனியர்கள் தர்பூசணித் துண்டுகளை பயன்படுத்தத் தொடங்கினர். இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்களுக்கு இடையில் 1993ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒஸ்லோ இடைக்கால ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக கரை பகுதிகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட பாலத்தீனிய அதிகார மையத்தின் கொடியாக இந்த சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிற கொடி அங்கீகரிக்கப்பட்டது. ஒஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தான நேரத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளரான ஜான் கிஃப்னர், “எந்த காஸாவில் சிவப்பு, கருப்பு மற்றும் பச்சை பாலத்தீனிய நிறங்களைப் பிரதிபலிக்கும் தர்பூசணித் துண்டுகளை வைத்திருந்ததற்காக சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்களோ, அதே இடத்தில் முன்பு தடை செய்யப்பட்ட கொடியை வீசிக்கொண்டே பேரணியாகச் செல்லும் மக்களை ராணுவ வீரர்கள் அலட்சியமாகப் பார்த்து நின்றனர்,” என்று எழுதியிருந்தார். சில மாதங்கள் கழித்து 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கைது நடவடிக்கை குறித்த தகவல்களை உறுதிபடுத்த முடியவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபோது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதை மறுக்க முடியாது என்று கூறியதாகவும் அதில் இடம்பெற்றிருந்தது. பட மூலாதாரம்,INSTAGRAM/KHALED HOURANI கலைத்துறையிலும் பிரதிபலிப்பு அப்போதிருந்தே பாலத்தீனத்திற்கு ஆதரவாக கலைஞர்கள் பலரும் தர்பூசணியையும் சேர்த்துக்கொண்டே தங்களது கலைப் படைப்புகளைப் படைத்து வருகின்றனர். அதில் மிகவும் பிரபலமான படைப்பு காலீத் ஹூரானியுடையது. 2007ஆம் ஆண்டு சப்ஜெக்ட்டிவ் அட்லஸ் ஆஃப் பாலத்தீன் என்ற புத்தகத்திற்காக அவர் வரைந்த ஒரு துண்டு தர்பூசணி மிக முக்கியமான பாலத்தீன படைப்பாகும். இந்த ஓவியம் தர்பூசணியின் கதை என்ற தலைப்பிடப்பட்டு உலகம் முழுவதும் பிரபலமாக வலம் வந்தது. அதிலும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நேரத்தில்தான் அதிகமாகத் தொடர்புப்படுத்தி பேசப்பட்டது. தர்பூசணியை அடையாளமாகப் பயன்படுத்துவதில் இந்த ஆண்டு மேலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் - ஜிவிர் பொது இடங்களில் இருக்கும் பாலத்தீனிய கொடிகளை அகற்ற உத்தரவிட்டது மற்றும் அவற்றை பயன்படுத்துவது அல்லது பறக்கவிடுவது ‘பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் செயல்” என்று அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் எதிர்ப்பு அமைப்புகள் நடத்தும் பேரணிகளில் பெரும்பான்மையான தர்பூசணியின் படங்கள் இடம்பெற்றிருந்தது. இஸ்ரேல் சட்டப்படி பாலத்தீனிய கொடிகளுக்கு தடையேதுமில்லை. ஆனால், காவல்துறையினரோ அல்லது ராணுவத்தினரோ சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அதைக் கருதும் சூழலில் அகற்றிக்கொள்ள உரிமை உள்ளது. ஜெருசலேமில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தில்கூட இஸ்ரேலிய போராட்டக்காரர்கள் பாலத்தீனிய கொடியின் நிறங்கள், தர்பூசணி வரையப்பட்ட அல்லது சுதந்திரம் என்று எழுதப்பட்ட அட்டைகளைக் கையில் ஏந்திக் கொண்டிருந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மற்றுமொரு குழு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தர்பூசணியின் விதவிதமான ஓவியங்களை தாங்கிய டி-ஷர்ட்டுகள் அணிந்துகொண்டு டெல் அவிவ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சமூக ஊடங்கங்கள் முழுதும் தர்பூசணி சமீபகாலமாகவே காஸாவில் நடக்கும் போருக்கு எதிராகப் பகிரப்படும் பெரும்பான்மையான பதிவுகளில் தர்பூசணி இடம்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு, பிரிட்டிஷ் இஸ்லாமிய நகைச்சுவைக் கலைஞர் ஷுமிருன் நெஸ்ஸா தனது டிக்டாக் பக்கத்தில் வாட்டர்மெலன் ஃபில்டர்களை பயன்படுத்தி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தனது முழு வருமானத்தை காஸாவில் இயங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போவதாகக் குறிப்பிட்டு தனது ரசிகர்களையும் வாட்டர்மெலன் ஃபில்டர்களை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி பகிருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சில சமூக ஊடக பயனர்கள் எங்கு பாலத்தீன கொடியை பதிவிட்டால் தங்களது சமூக ஊடக கணக்கு அல்லது வீடியோக்கள் நீக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தர்பூசணிகளை பயன்படுத்துகின்றனர். கடந்த காலங்களில், பாலத்தீனிய ஆதரவு பயனர்கள் இதேபோல ஒரு குற்றச்சாட்டைக்கூட முன்வைத்தனர். இன்ஸ்டாகிராம் தளம் தங்களது பதிவுகளை வேறு யாருக்கும் தெரியாமல் செய்யும் ஷேடோ பேனிங் செய்கிறது என்று விமர்சனம் செய்தனர். ஆனால், அது போன்று தற்போது நடக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார் பிபிசி டெக்னாலஜி செய்தியாளர் ஜோ டெடி. “பாலத்தீன ஆதரவு பதிவுகளைப் பகிரும் கணக்குகளை ஃபீடில் வராமல் தடுப்பது போல எந்தச் செயலும் நடப்பதாகத் தெரியவில்லை,” என்று அவர் கூறுகிறார். “மக்கள் தங்களது சமூக ஊடக பதிவுகளில் தர்பூசணியின் படங்களைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரம் பாலத்தீனிய கொடியைப் பகிர்வது மற்றும் போர் குறித்து எழுதுவது போன்றவற்றையும்கூட வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் செய்து வருவதாக” கூறுகிறார் அவர். பாலத்தீனிய பகுதிகளில் பல தசாப்தங்களாகவே, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாவது பாலத்தீனிய எழுச்சி முதலே, தர்பூசணி அரசியல் அடையாளமாகக் கருதப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் தர்பூசணி என்பது அந்தப் பகுதிகளில் பிரபலமான உணவு மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாகத் தங்களது போராட்டத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு பாலத்தீனியர்களின் சக்தி வாய்ந்த அடையாளமாகவும் மாறியிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c878p5kdeppo
  22. 17 NOV, 2023 | 06:30 PM கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் (INS) கோரா இன்று வெள்ளிக்கிழமை ( 17) இந்தியாவிற்கு புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படை மரபுகளுக்கு அமைய குறித்த கப்பலை வழியனுப்பி வைத்தனர் . 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலானது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை கப்பலாகும். கோரா கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் ஆர்.எம். நம்பியர், ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கப்பலில் வருகை தந்திருந்த இந்திய கடற்படையினர் நாட்டில் இருந்த போது கொழும்பில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/169579
  23. தென்னாபிரிக்காவை துரதிர்ஷ்டம் விட்டபாடில்லை : அவுஸ்திரேலியா 8 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் 16 NOV, 2023 | 10:57 PM (இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, 8ஆவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ஐந்து தடவைகள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா, அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அதேவேளை, கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சுமாரான மொத்த எண்ணிக்கையே பெறப்பட்டது. தென் ஆபிரிக்காவினால் நிர்ணியிக்கப்பட்ட 213 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இற்றைக்கு 24 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 214 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்ளைப் பெற்றதால் அப் போட்டி சம நிலையில் முடிவடைந்திருந்தது. எனினும் சுப்பர் 6 சுற்றில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருந்ததால் தென் ஆபிரிக்கா போட்டியிலிருந்து வெளியேறியது. இம்முறை தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது கடும் நெருக்கடிக்கு மத்தியில் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றியையும் உலகக் கிண்ண இறுதி ஆட்ட வாய்ப்பையும் தனதாக்கிக்கொண்டது. டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 37 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும் டேவிட் வோர்னர் (29), மிச்செல் மார்ஷ் (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தது அவுஸ்திரேலியாவுக்கு பேரிடியைக் கொடுத்தது. தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ட்ரவிஸ் ஹெட் 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (106 - 3 விக்.) அதன் பின்னர் ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தியபோது லபுஷேன் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதிரடி ஆட்ட நாயகன் க்லென் மெக்ஸ்வெல் ஒரு ஓட்டத்துடன் களம் விட்டகன்றார். (137 - 5 விக்.) இதனைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் இங்லிஷ் ஆகிய இருவரும் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மீளுயிர் கொடுத்தனர். எனினும் ஸ்டீவன் ஸ்மித் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தவறான அடி காரணமாக ஆட்டம் இழக்க, அவுஸ்திரேலியா மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது. (174 - 6 விக்.) ஆனால், ஜொஷ் இங்லிஸ், மிச்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெத்தாடி அணிக்கு சிறிய அளவில் உற்சாகத்தைக் கொடுத்தபோதிலும் இங்லிஸ் 28 ஓட்டங்களுடன் வெளியேற ஆட்டத்தில் மீண்டும் பரப்பரப்பு ஏற்பட்டது. (193 - 7 விக்.) இந் நிலையில் வெற்றிக்கு தேவைப்பட்ட 20 ஓட்டங்களை மிச்செல் ஸ்டார்க்கும் பெட் கமின்ஸும் 45 பந்துகளை பொறுமையுடன் எதிர்கொண்டு பெற்றுக்கொடுக்க, தென் ஆபிரிக்கா மீண்டும் அதிர்ஷ்டமற்ற அணியாக அரை இறுதியுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது. போட்டியின் கடைசிக் கட்டத்தில் குவின்டன் டி கொக் தவறவிட்ட பிடியும் தென் ஆபிரிக்காவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனலாம். மிச்செல் ஸ்டார்க் 16 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் தப்ரெய்ஸ் ஷம்சி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெரால்ட் கோயெட்ஸீ 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. டேவிட் மில்லர் சதம் குவித்திராவிட்டால் தென் ஆபிரிக்காவின் நிலை மிகவும் மோசமாகியிருக்கும். இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 12ஆவது ஓவரில் தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. எனினும் ஹென்றி க்ளாசன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 95 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். க்ளாசன் 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ ஆரம்பித்தன. எனினும் டேவிட் மில்லர் மிகவும் இக்கட்டான வேளையில் தனித்து போராடி அபார சதம் குவித்து 9ஆவதாக ஆட்டம் இழந்தார். 116 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரவிஸ் ஹெட் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட் https://www.virakesari.lk/article/169496
  24. பணயக்கைதிகள் விடுதலை அடுத்த வாரமளவில் சாத்தியமாகலாம் - பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர் நம்பிக்கை Published By: RAJEEBAN 17 NOV, 2023 | 12:43 PM ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளில் சிலரை அடுத்தவாரமளவில் விடுதலை செய்யலாம் என பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒருவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். லெபானின் புலனாய்வுபிரிவின் முன்னாள் தலைவர் அபாஸ்இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார். சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டால்பணயக்கைதிகள் விடுதலை சாத்தியமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தன்னுடைய சில நிபந்தனைகளை வாபஸ்பெற்றால் அல்லது ஹமாசின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் விடுதலை சாத்தியமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் சிறுவர்களை அந்த நாடு விடுதலை செய்தால் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். காசா மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதியளிக்கவேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/169531
  25. இலங்கையில் மிதக்கும் அணுமின் நிலையம்? 2032 ஆம் ஆண்டளவில், நாட்டிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்காக மிதக்கும் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார். இலங்கையில் அணுசக்தி சட்டத்தை தயாரிப்பதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணுசக்தி சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தற்போதைய சட்டத்தின்படி, இலங்கை அணுமின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகத்தைப் பெற வாய்ப்பில்லை. அதன்படி, சம்பந்தப்பட்ட சட்டத்தை மாற்றுவதற்கான வரைவுகளைத் தயாரிப்பதே முதலில் செய்யப்பட வேண்டும். சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் சட்ட விவகார அலுவலகத்தின் அணுசக்தி மற்றும் ஒப்பந்தச் சட்டப் பிரிவின் தலைவர் அந்தோனி வெதரோல் உட்பட நான்கு பிரதிநிதிகள், அதற்கு உதவுவதற்காக அண்மையில் நாட்டுக்கு வந்தனர். கொழும்பு துறைமுக நகரம், இலகுரக ரயில் உள்ளிட்ட நாட்டின் புதிய திட்டங்களுக்கு தொடர் மின்சாரம் தேவை. இதற்கு அணுசக்தி மின்சார வழங்கல் மிகவும் பொருத்தமான தெரிவாகும் இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்தார். இதற்கமைய, 400 மெகாவோட் திறன் கொண்ட மிதக்கும் அணுமின் நிலையம் குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். https://thinakkural.lk/article/281586
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.