Jump to content

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    401
  • Joined

  • Last visited

  • Days Won

    4

சுப.சோமசுந்தரம் last won the day on November 18 2023

சுப.சோமசுந்தரம் had the most liked content!

1 Follower

Profile Information

  • Gender
    Male
  • Location
    Tirunelveli, Tamilnadu, India
  • Interests
    Literature - Classical and Modern, Social and Union Activities

Recent Profile Visitors

7061 profile views

சுப.சோமசுந்தரம்'s Achievements

Proficient

Proficient (10/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • First Post
  • Collaborator

Recent Badges

651

Reputation

  1. ஜெயமோகன் செய்த தவறை நானும் செய்திருக்கிறேன் - ஒரு கருத்தைக் களம் மாறி வெளிப்படுத்துவது; 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பேச வந்த நான் '96' ஐயும் பேசியது. இதனால் '96' ஐக் கொண்டாடியவர்களுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உப்பைத் தின்றுவிட்டால் தண்ணீர் குடிக்கக்கத்தானே வேண்டும் ! 'கற்பு' என்றெல்லாம் நான் பேசவேயில்லை. ஒரு காதல் சரி வரவில்லை என்றால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மறுகாதல் எனும் கருத்துடைய எனக்கு, 'கற்பு' மட்டுமல்லாமல் சென்ற 'காதலே' புனிதம் கிடையாது. அதனால்தான் '96' ன் பழைய காதலைக் கொண்டாடுவதைப் 'புனிதப் படுத்துதல்' என்றேன். சமூகமாய் வாழ சமூக விலங்காகிய மனித இனம் (அமைதியான வாழ்க்கைக்காக) சமரசம் செய்து கொண்ட பிறகு சில வரையறைக்குள்தான் இயங்க முடியும். தெருவில் இறங்கி மற்றவர்களுடன் பிரச்சினையின்றி நடக்க முடிவெடுத்த பிறகு எல்லைக்கோட்டை மதித்துதானே ஆக வேண்டும் ? பழைய காதலைத் தூக்கியெறிய முடியாவிட்டால், வேறு ஒரு மண வாழ்க்கை என்ற சமூகக் கட்டமைப்பில் சென்று நிற்பது நேர்மையில்லையே ! (புதிய வாழ்க்கையில் கணவனும் குழந்தைகளும் அருமையாக அமைந்ததாய் நாயகியே ஓரிடத்தில் சொன்னதாக நினைவு). பழைய காதலருடன் இரவில் ஊர் சுற்றுவதும், விடுதி அறையில் அருகருகில் குளிர் காய்வதும், அவன் சட்டையின் வாசத்தை சுவாசிப்பதும் அந்தக் காதலை (!!!) ரசிப்பது அல்லது புனிதப்படுத்துவது அன்றி வேறென்ன ? அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லையே, அங்குதான் புனிதம் இருக்கிறது என்பீர்களா ? மனித மனங்களில் விகாரங்கள் வெவ்வேறு வகைகளில் தோன்ற வாய்ப்பு உள்ளது. அவற்றை மனிதன் தனக்குள் வைத்து ரசித்துக் கொள்ள வேண்டும்; முடிந்தால் தவிர்க்க வேண்டும். அத்தனையும் காவியமாக முடியாது. நீங்கள் இதற்கு மேல் எவ்வளவு கேட்டாலும் '96' ஐப் பற்றி விவாதிக்க என்னிடம் வேறெதுவும் கிடையாது. Tailpiece : In a lighter vein or even seriously - அது என்ன 94, 95,97,98 இவற்றையெல்லாம் விட்டு 96 ? அது எனது பார்வையில் உள்ள விரசம் (perversion) அன்றி மற்றபடி தற்செயலான தேர்வுதான் என்பீர்களா? சரி, ஏற்றுக் கொள்கிறேன். 'lighter vein' என நான் அறிவிப்புப் பலகை வைத்ததால், இதனைப் பேசு பொருளாக்கும் எண்ணம் கண்டிப்பாக இல்லை. மற்றபடி உங்கள் சாட்டையைச் சுழற்றலாம்.
  2. ஜெயமோகன் குறிப்பிடும் 'குழு மனப்பான்மை (mass mentality)' பற்றிய கருத்தை எந்த ஒரு குழுவின் மீதும் வைக்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனெனில் 'குழு மனப்பான்மை' என்பது சமூகத்தில் விரும்பத்தகாத எதார்த்தம். பெரும்பாலான மனிதர்களின் நடத்தையை அவர்கள் சார்ந்த குழுவே தீர்மானிக்கும் (It's termed peer culture) - ஒரு போராட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நம் எதிரி தீர்மானிப்பது போல. ஆனால் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' திரைப்படத்தைப் பேசுகையில் இத்தலைப்பை ஜெயமோகன் கையிலெடுத்திருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அதில் வரும் இளைஞர்கள் எந்தவொரு சமூகத்து இளைஞர்களையும் போல் அந்த வயதிற்குரிய சிறுபிள்ளைத்தனத்தனத்துடன் கதையை ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவே. பெரிய அழிவு நடவடிக்கைகளில் (destructive behaviour) அவர்கள் ஈடுபடுவதாகக் காட்டப்படவில்லை. பொதுவாக மலையாளத்து இளைஞர்களின் அழிவு நடவடிக்கைகள் பற்றி ஜெயமோகன் கருத்து கொண்டிருந்தால், அதனைப் பேச வேறு தளங்கள் உண்டு. அச்சமூகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் அவர் ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம். அப்போதும் ஒரு சில குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தோரால் அவர் வசைபாடப் படலாம். ஒரு எழுத்தாளர் அதனை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போதோ பெரும்பாலும் அறிவுசார் சமூகத்தினரின் தூற்றுதலுக்கு உள்ளாகிறாரே ! இந்த எனது பார்வையோடு ஜெயமோகனின் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பற்றிய கருத்தைப் புறந்தள்ள எண்ணுகிறேன். இனி அப்படம் தொடர்பாக எனது சிந்தனையோட்டம் : 'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத்தை நான் ரசிக்கிறேன்; கொண்டாடுகிறேன். குணா படத்தின் அந்தப் பாடலைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது என் கருத்து. மற்றபடி 'குணா' படம் வந்த போதே அந்தப் பாடல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று; படம் அப்படியல்ல என்பதே என் கருத்தாக இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழ்ச் சமூகம் அப்படத்தையும் அதே பாணியில் தனுஷ் நடித்து வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தையும் பெரிதாகக் கொண்டாடவில்லை என்பது என் போன்றோருக்கான ஆறுதல். ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனின் காதலையும் (!!!), அவனால் கடத்தப்பட்ட நாயகியின் Stockholm syndrome ஐயும் எப்படிக் கொண்டாட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் இயக்குநர், நடிகர்கள் திறமையால் மக்களின் கண்ணைக் கட்டி சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத கதைகளை ஏற்க வைத்து விடுவார்கள் - திருமணத்திற்குப் பின் பழைய காதலை (அவன் சட்டையை முதற்கொண்டு) நுகர்ந்து பார்க்கும் நெறி தவறிய உணர்வைப் புனிதப்படுத்தும் '96' போல.
  3. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதா ? தமிழ்நாட்டையோ ஈழத்தையோ விட்டுச் செல்லும்போது தருமத்தை மட்டும் எடுத்துச் செல்வதுதானே! ஏன் கருமத்தையும் எடுத்துச் செல்கிறார்கள் ? (நல்ல பண்பாடுகளைத் தருமம் என்றும், சடங்குகளைக் கருமம் என்றும் குறித்தேன்; சும்மா ஓசை நயத்திற்காகதான் - rhyming). ஐயரை ஜெர்மனிக்குக் கொண்டு சென்றதே அதிகப்படி. சுவிஸ்ஸில் ஐயர் இல்லாத குறைதீர்க்க ஜெர்மனியிருந்து கொண்டு செல்ல வேண்டுமா ? நம்பிக்கை என்ற பெயரில் பிற்போக்குத்தனங்கள் அவ்விடங்களிலும் இல்லாமல் இல்லை. அனைத்துலகும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர்களால் நீக்கமற நிறைந்ததுதானே! போகிறவர்கள் வேறு தம் பங்கிற்குப் புதிதாகக் கொண்டு சென்றே ஆக வேண்டுமா ? இதில் மத வேறுபாடெல்லாம் கிடையாது. சமீபத்தில் அமெரிக்காவில் சில காலம் வசிக்கும் எனது மகள் ஒரு திருமண நிகழ்வுக்காகத் தேவலாயம் சென்ற கதையைச் சொன்னாள். ஒரு அமெரிக்கத் தோழியைத் தவிர, சென்றிருந்தோர் அனைவரும் தமிழர் - பாதிரியார் உட்பட. இங்கே சில சமயம் தேவாலயங்களில் நடைபெறும் நாடகத்தனத்துடன் மணநிகழ்வைப் பாதிரியார் அங்கேயும் நடத்தியதை வேடிக்கையாகக் குறிப்பிட்டாள் - அதுவும் அரைகுறை ஆங்கிலத்தில். ஒரு பெண் கணவனுக்கு எத்துணைக் கட்டுப்பட்டவள் என்று பைபிளில் ஏதோ இடத்திலிருந்து எடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் பிரசங்கம் செய்தது பிற்போக்குத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்ததை அவளுக்கே உரிய அங்கத நடையில் எழுதியிருந்தாள். பாதிரியார் சொன்ன வாசகங்களைத்தான் பிராமண ஐயரும் சொல்வார். அது வடமொழியில் என்பதால் நமக்குப் புரிவதில்லை. எல்லா மத நூல்களும் ஏதோ ஒரு வகையில் (நாசூக்காகவாவது) பெண்ணடிமைத்தனத்தைப் போதிப்பவைதாமே ! ரசோதரன் அவர்களின் கதை/கட்டுரை ஏதேதோ சிந்தனைகளைத் தூண்டியதில் பகிர்ந்து விட்டேன். மிக விலகிச் சென்று விடுவேனோ என்ற பயம் ஏற்பட்டதும் நிறுத்தி விட்டேன்.
  4. உயிரை உருக்கிப் பேனாவில் ஊற்றி எழுதப்பட்ட கடிதம். வாசிப்பவரின் கண்ணீரில் கரைந்து போகும் கடிதம்.
  5. பின்வரும் இணைப்பின் காணொளியில் உள்ள தகவலின் உண்மைத்தன்மை யானறியேன். இதுபோன்ற செய்திகள் பலவற்றை யாழ் சொந்தங்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆடப்படும் சிறிய, பெரிய அரசியல் முழுவதும் எனக்கு இன்னும் புரியவில்லையோ, என்னவோ ! இந்தியச் சிறைக் கொட்டடியில் தமது வாழ்வின் பெரும்பான்மையைக் கழித்து விடுதலையான சாந்தன் சமீபத்தில் மறைந்த இத்தருணத்தில் முகநூலில் வலம் வந்த காணொளி என் கவனத்தை ஈர்த்தது. யாழில் பதிவேற்றியதன் காரணம், இதுபற்றி யாழ் சொந்தங்களிடம் கூடுதல் தகவல் இருக்கலாம் என்ற எண்ணமே : https://www.facebook.com/share/v/uRFMDyavpfJAd1zH/?mibextid=oFDknk
  6. பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?
  7. யாழ் களச் சொந்தங்களுக்கு வணக்கம். நான் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் என் சுய ஆக்கங்களாய் இருப்பினும், பெரும்பாலும் 'சமூகச் சாளரம்', 'தமிழும் நயமும்' பகுதிகளில் பதிவிடுகிறேன். சமீப காலமாக ஒளிப்படம் இணைந்த சில கட்டுரைகளை முகநூலில் பதிந்து பின்னர் யாழில் அவற்றின் இணைப்பை 'சமூகவலை உலகம்' பகுதியில் பதிகிறேன். ஒன்றிரண்டு கட்டுரைகளை 'யாழ் அகவை - சுய ஆக்கங்கள்' பகுதிக்கு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றித் தந்தார்கள். நேராக 'சுய ஆக்கங்கள்' பகுதியில் பதிய வழி உள்ளதா என்பதை யாழ் உறவுகளில் யாராவது தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி மாற்றித் தரக் கோருதலையும் முறையாக எந்த இடத்தில் எழுதலாம் எனக் கூறவும்.
  8. தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் ஆர்வத்திற்கும் நன்றி, திரு. இணையவன் ! இப்போதைக்கு காவ்யா பதிப்பகம், Commonfolks, Dinamalar books, நெல்லை பாரதி புத்தகாலயம் மற்றும் சில புத்தக நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். Amazon அல்லது Kindle ல் ஏற்றும் எண்ணம் உள்ளது. அந்த அளவு நான் அறியப்பட்டால், உங்களுக்குத் தெரியப்படுத்துவேன். மீண்டும் நன்றி, ஐயா !
  9. போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம் நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்த (21) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹனா ரஹிதி மெய்பி கிளார்க்' என்ற பெண் அந்நாட்டின் தொல்பழங்குடி இனமான 'மவுரி' இனத்தைச் சார்ந்தவர். பழங்குடியினருக்கான சமூகச் செயற்பாட்டாளர். தம் இனத்தின் போர் முழக்கப் பாடலைப் பாடி பாராளுமன்றத்தில் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அவருடன் இணைந்து வேறு சிலரும் முழக்கத்தில் பங்கெடுத்தது சிறப்பு. தலைவிரி கோலத்தில், "இளங்கோவடிகளின் சிலம்பு எடுத்தியம்பும் கொற்றவையோ, தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரிக் கொற்றவையோ, உலகில் தீமையை அழிக்கும் கூற்றமோ !" என்று வியக்க வைக்கிறார் மெய்பி கிளார்க். "இன்னுயிர் ஈந்தும் உங்களது உரிமைகளை மீட்டெடுக்க முயல்வேன்" என்று தமது உரையில் நாட்டின் பூர்வகுடிகளுக்கு மேலும் உறுதி கூறினார். அப்போர் முழக்கமும் அவரது உரையும் இணைய தளங்களில் உலகெங்கும் பரவின. வரலாறு அறிந்த நாள் முதல் நமது தமிழ்க்குடி தொன்மையான நாகரிகத்தில் வகைப்படுத்தப்பட்டதால், பழங்குடிப் பாடல் என்று தமிழுக்கு ஏதும் அமையவில்லை. தமிழ் நிலத்தில் வாழும் காணி, தோடர் போன்ற தொல்குடிகளுக்கு இருக்கலாம். போரில் வெற்றி பெற்றவரைப் பாடுவது பரணி எனும் சிற்றிலக்கியமாய்த் தமிழில் வகைப்படுத்தப்பட்டது. பரணியில் போர் மேற்கொண்டு செல்லுகையில் போர் முழக்கமும் உண்டு. நமக்கான முதல் பரணி இலக்கியமான கலிங்கத்துப்பரணியே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சார்ந்ததுதான். காலத்தால் அவ்வளவு சமீபத்தியது. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தளபதியான கருணாகர தொண்டைமான் தலைமையில் சோழர் படை அனந்தவர்மன் எனும் கலிங்க மன்னனின் படையை வெற்றி கொண்டதை செயங்கொண்டார் எனும் புலவர் பாடுவது கலிங்கத்துப் பரணி. இதில் போர் முழக்கம் உண்டு. நியூசிலாந்தின் மெய்பி கிளார்க் எழுப்பும் போர் முழக்கத்திற்கும் நமது செயங்கொண்டாரின் போர் முழக்கத்திற்கும் வேறுபாடு உண்டு. முன்னது தம் இன உரிமைக்கான முழக்கம்; பின்னது திறை செலுத்தத் தவறிய கலிங்க மன்னன் மீது படை எடுத்துச் சென்ற சோழனின் ஏகாதிபத்திய முழக்கம். முன்னது பெருமையுடன் பாட வல்லது; பின்னது தற்போதைய பண்பட்ட உலகத்தில் சிறுமை உணர்வு கொண்டது. உள்ளத்தை உறுத்தும் இப்பொருள் வேறுபாட்டைச் சற்றே மறந்து, இலக்கியம் என்ற வகையில் கலிங்கத்துப்பரணியின் போருக்கான அறைகூவலை மெய்பி கிளார்க்கின் உணர்வோடும் முகபாவனைகளுடனும் கற்பனை செய்வது ஓர் இலக்கியப் பார்வை. அவ்வளவே ! அப்பார்வை செல்லும் பாதையில் கலிங்கத்துப்பரணி பாடி சிறிது பயணித்துப் பார்ப்போமே ! "எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே" - பாடல் 404. பொருள் : '(படைக் கருவிகளை) எடும் எடும்' என விடுத்த மாறுபட்ட ஒலியானது (இகல் ஒலி) பொங்கியெழும் கடல் எழுப்பும் ஒலியை விட மிகுதியாகக் (இகக்க) கேட்பதாக ! குதிரை (பரி), யானைக் (கரி) கூட்டத்தினைக் (குழாம்) கட்டவிழ்த்து 'விடும் விடும்' என்று மிகுதியாய் ஒலிப்பதாக ! "வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே" - பாடல் 405. பொருள் : நன்கு கட்டமைக்கப்பட்ட வில்லில் (வரிசிலை) அச்சம் கொள்ளும் வகையில் (வெருவர) நாணிலிருந்து தெறித்த (தெறித்த நாண்) அம்பு சென்ற (விசைபடு) திசையே (திசைமுகம்) வெடிக்கட்டும் ! போரிடுவோர் (செருவிடை அவரவர்; செருதல் - போரிடுதல்) அதட்டும் ஒலியினால் (தெழி) உலகம் செவிடாகட்டும் (உலகுகள் செவிடெடுக்கவே) ! "எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே" - பாடல் 406. பொருள் : ஆர்ப்பரிக்கும் கடலோடு (எறி கடலொடு) கடல் மோதியது போல் (கிடைத்த போல்) இருதரப்புப் படைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்வதாக (எதிர் கிடைக்கவே) ! மடங்கி வரும் அலையோடு (மறி திரையொடு) அலை மோதியது போல், வருகின்ற குதிரைப்படையோடு (வரு பரியொடு) இங்கிருக்கும் குதிரைப்படை மோதுவதாக ! "கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே" - பாடல் 407. பொருள் : பருத்த மலையோடு (கன வரையொடு; வரை - மலை) மலை போரிட்டதைப் போல் மதம் பொழியும் யானைகளோடு (கட கரியொடு) யானைகள் போரிடுவதாக ! திரளான மேகங்களோடு (இன முகின்) மேகங்கள் (முகில்) எதிர்ப்பது போல் தேர்ப்படையினைத் தேர்ப்படை (இரதமொடு இரதம்) எதிர்ப்பதாக ! "பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே" - பாடல் 408. பொருள் : போரிடும் புலி (பொரு புலி; பொருதல் - போரிடுதல்) புலியோடு சினம் கொள்வது போல் (சிலைத்த போல்; சிலைத்தல் - இசைச் சொல் - ஓசைப் பொருண்மையுடைய சொல்) போர் வீரரோடு (பொரு படரொடு) போர் வீரர் சினம் கொள்வதாக ! சிங்கத்தோடு சிங்கம் (அரியினொடு அரியினம்) மோதிக் கடுமையாகத் தாக்குவது போல் (அடர்ப்ப போல்) படைத்தளபதிகளோடு தளபதிகள் தாக்குவதாக (அரசரும் அரசரும் அடர்க்கவே) !
  10. மரண பலம் -----சுப.சோமசுந்தரம் சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர். ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட்டிக்காட்டிலா (!!!) பிள்ளையைச் சேர்ப்பாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து என்னை உரிமையுடன் தூக்கி வந்து பாளையில் அந்தக் காலத்திலேயே இருந்த கான்வென்ட்டில் சேர்த்துப் படிக்க வைத்தாள் என் ஆச்சி. நான் நானாக ஆனேன். அதனால் அவளிடம் பாசத்தில் கட்டுண்டே வாழ்ந்திருக்கிறேன். கடைசிக் காலத்தில் அவளைக் கவனிக்க ஆள் அமர்த்தியபோது, செலவுக்கு என்னிடம் அதிகம் வாங்கலாம் என்றும், "அவன் எனக்காக எதுவும் செய்வான்" என்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறாள். பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கு அவளது பிள்ளைகள் கடமைப்பட்டவர்கள். என்னைப் பாசத்துடன் குறிப்பிட்ட காலம் வரை வளர்த்ததற்கும், கடைசிக் காலத்தில் கூட என்மீது நம்பிக்கயை வெளிப்படுத்தியதற்கும் நானும் கடமைப்பட்டவன். எனவே நாங்கள் அவள் வாழுங்காலம் இயன்றவரை அவளைத் தாங்கிப் பிடித்தோம். ஆனால் நிறைய மனிதர்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தாள். மருமகள்களுக்குக் கொடுமையான மாமியாராகவே வாழ்ந்தாள். வேற்று மனிதர்களிடமும் ஓரளவு அப்படியே ! கடைசிக் காலத்தில் தன்னைக் கவனிக்க அமர்த்தப்பட்டவர்களைக் (caretakers) கேவலமாக நடத்தியதில் சுமார் பதினைந்து பேர்களை மாற்ற வேண்டியிருந்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. அவள் வாழுங்காலம் (காரணத்தோடு) அவளைத் தூற்றிய சிலர் அவளது மரணத்தில், "103 வயது ! கொடுத்து வைத்த ஆன்மா. அதிலும் ஏகாதசி அன்று இறந்ததால் வைகுண்ட பிராப்தி !" என்றெல்லாம் அவள் புகழ் பாடினார்கள். மனதுக்குள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டேன். எனக்கு அவள் நல்ல ஆச்சி. அவ்வளவே! அதற்காக அவள் நல்லவள், உத்தமி என்றெல்லாம் நான் பேசித் திரிந்தால் அது சுயநலமாகத்தானே முடியும் ! அல்லல் பட்டவர்களின் துன்பத்தை உணர்ந்து, பிறிதின் நோய் தந்நோயாகக் கொள்ளும் பக்குவம் எனக்கு வேண்டாமா ? மரணத்திற்கு மனிதனைப் புனிதனாக்கும் ஆற்றல் உண்டோ ? நகைச்சுவை நடிகர் முத்துக்காளை ஒரு படத்தில் சொல்வதைப் போல, முடிந்தால் நாமெல்லோரும் செத்துச் செத்து விளையாடலாமோ !
  11. 'மனமும் இடம்பெயரும்' நூலுக்கான 'என்னுரை'யையும் 'அணிந்துரை'யையும் வாசித்தேன். மிக நன்று. இவற்றில் நூலின் சிறப்பு தெள்ளிதின் விளங்கி நிற்பது. இவ்வாசிப்பின் மூலம் ஆசிரியர் சகோதரி நிவேதா உதயராஜனின் சில கதைகளை ஓரளவு வாசித்தேன். மேலும் வாசிக்க எண்ணம். வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்யவும் எண்ணம். ஈழத் தமிழில் தற்கால சிறுகதை இலக்கியம் வாசிக்கும் அனுபவம் புதுமை. குறிப்பாக 'நான் வசந்தன்' எனும் சிறுகதையை ரசிக்கும் போது, முன்னர் என் மகள் இணையத்தில் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. நிவேதா அவர்களின் கதைக்கும் என் மகளின் கட்டுரைக்கும் தொடர்பு இல்லைதான். அவள் அக்கட்டுரை பற்றி என்னிடம் சொல்லவில்லை. தயக்கமாயிருக்கலாம். அத்தயக்கத்தை மதித்து, தற்செயலாக நான் அதனை வாசித்ததைக் காட்டிக் கொள்ளவில்லை. இருப்பினும் பேசாப் பொருள்களைப் பெண்கள் வெளியில் அதிகம் பேச ஆரம்பித்தது குறித்து மகிழ்ச்சி ஏற்பட்டது. நிவேதா அவர்கள் 2020 லேயே யாழில் பதிவு செய்தது அறிந்து கூடுதல் மகிழ்ச்சி. மேலும் அவருக்கு வெகு இயல்பாக வரும் அந்த எழுத்திற்கு வாழ்த்து. 2020ல் யாழில் பதிவான அக்கதை தொடர்பில் அங்கு எழுத இயலாததால் இங்கு எழுதிவிட்டேன். இனி மகள் எழுதிய கட்டுரையின் இணைப்பு கீழே : https://puthu.thinnai.com/2022/01/30/எது-பிறழ்வு/
  12. இன்று (24-12-2023) என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நினைவு நாள். "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எனும் கொள்கை வழி நின்றவர் தொ.ப. எனவேதான் தமிழூரில் என்னைப் போன்ற சாமானியரும் அவர் அருகில் செல்ல முடிந்தது; எங்கள் அறிவுக்கு எட்டிய வரை அவரிடம் திரட்ட முடிந்தது; என் குருநாதர் என்று அவரைச் சொல்லிக் கொள்ளும் அளவு தைரியம் வந்தது; ஏன், எழுத்தாணி பிடிக்கும் அளவு மனத்திடமே வந்தது ! எனது முதல் முயற்சி 'என் வானம் என் பூமி' என முகிழ்த்தது. இரண்டாம் முயற்சி 'அதே வானம் அதே பூமி' என விரிந்து நிற்கிறது; என் மனம் கவர்ந்த அதே காவ்யா பதிப்பகத்தில் - வாசகர் வட்டம் அதே என்றில்லாமல் மேலும் விரிந்து அமையும் எனும் ஆவலுடன். தம் சீடன் ஒருவன் தாம் காட்டிய வழியில் எழுதிய நூலொன்றை வெளிக்கொணர்வதை விட ஒரு ஆசானுக்கான சிறந்த நினைவேந்தல் வேறு என்னவாக இருக்க முடியும் ! https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02mMW5ESc8ubZvGyR1EgjGymKrN67rms1E6k87TmCLZyuD7dV5Mkr6bcXpv9YcK5ctl&id=100083780391980&mibextid=Nif5oz
  13. சங்கிலித் தொடர் ---- சுப.சோமசுந்தரம் எனது குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடம் அவ்வப்போது அளவளாவும் பேறு பெற்றோரில் நானும் ஒருவன். பண்டிதர் முதல் பாமரர் வரை எந்தப் பாகுபாடும் பாராமல் பேசக்கூடியவர்; பழகக்கூடியவர், தொ.ப என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பேரா. தொ.பரமசிவன். அதனாலேயே என்னைப் போன்ற பலரும் அவரிடம் நிறையப் படிப்பது கைகூடியது. "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்" (குறள் 401; அதிகாரம் : கல்லாமை) (பொருள் : நிரம்பிய நூலறிவின்றி ஒருவன் சான்றோர் முன் பேச ஆசைப்படுதல் (கோட்டி கொளல்), சதுரங்கம் ஆடுவதற்கான களமின்றி வட்டினை உருட்டுவதற்குச் சமம்) என்ற குறளுக்கு விதிவிலக்காக, நிரம்பிய நூலறிவு இல்லாதாரும் சான்றோர் ஆன தொ.ப விடம் தமது கருத்தினைக் கூறலாம்; விவாதிக்கலாம். அவரிடம் ஒன்று கேட்டால் ஒன்பது கிடைக்கும். அதிலும் நாம் கேட்டதற்குத் தொடர்பானவையே! அந்த ஒன்பதும் ஒன்றன்பின் ஒன்றாய் சங்கிலித் தொடராக! இது பற்றியும் நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், "இதனை நீங்கள் கவனித்ததற்குக் காரணம் நீங்களும் அவ்வப்போது தொடர் சிந்தனையை வெளிப்படுத்துவதுதான். இதனை உங்களிடம் நான் கவனித்து இருக்கிறேன். நீங்கள் வாசிப்பையும் யோசிப்பையும் பெருக்கியதையே இது உணர்த்துகிறது" என்று என்னைப் பாராட்டினார். கூடவே எச்சரிக்கை மணியும் அடித்தார், "சிலரது சிந்தனையோட்டம் காடு மேடெல்லாம் வரம்பின்றித் திரிய, அப்படியே மேடைப்பேச்சிலும் பதிவு செய்து விடுகின்றனர். அந்நோய் நமக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிய விலகல் அரங்கத்திற்கு மெருகூட்டலாம். கருதுகோளிலிருந்து பெரிய அளவில் விலகிச் செல்லுதல் கேட்போர்க்கு சலிப்புத் தட்டும். தனிப்பட்ட முறையில் கலந்துரையாடலும் மேடைப் பேச்சும் வெவ்வேறானவை என்பதைச் சிலர் புரிந்து கொள்வதில்லை" என்று அருமையாக எடுத்துரைத்தார். சரி, இனி தனிநபர் கலந்துரையாடலின் போது மேலே குறிப்பிட்ட எண்ணவோட்டத் தொடர் பற்றி எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாய் அமையப் பெறுவது. காட்சி 1 : சமீபத்தில் தோழர் பேரா. ந.கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடும்போது, மென்மேலும் கற்கையில் நமது அறியாமையை மென்மேலும் அனுபவபூர்வமாக நம்மால் உணர முடிவது பற்றிய பேச்சு வந்தது. காமத்துப்பாலில் எனக்குக் குறளொன்று நினைவுக்கு வருவதைக் கூறினேன். "எந்தக் குறளைச் சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது" என்று அவரே கூறி முடித்தார். "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு" (குறள் 1110; அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்) பொருள் : அறியுந்தோறும் அறியாமை காண்பதைப் போல, சிறந்த அணிகலன்களை அணிந்த இந்த அழகானவளிடம் (சேயிழை மாட்டு) இன்பம் துய்க்குந்தோறும் (காமம் செறிதொறும்) புதுமையே தோன்றுகிறது. "நமது ஆசான் (வள்ளுவனேதான்) எதைக் கொண்டு எங்கே சேர்க்கிறான், பார்த்தீர்களா? காமத்துப்பாலில் உவமையாக அறிவார்ந்த நிலையொன்றைக் கையாண்டான். அஃதாவது காமத்துப்பாலில் பொருட்பாலைத் தேடினான். அறிவு நிலைக்கு உவமையாகக் காமம் சார்ந்த ஒன்றைக் கையாண்டமையும் நினைவுக்கு வருகிறது" என்றேன். "கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று" (குறள் 402; அதிகாரம் : கல்லாமை) பொருள் : கல்லாதவன் (சான்றோரிடம் தன் கருத்தைச்) சொல்ல ஆசைப்படுவது, முலையிரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பியதைப் போன்றது. (காமுறுதல் - விரும்புதல், ஆசைப்படுதல்; சொற்காமுறுதல் - சொல்ல விரும்புதல்; பெண் காமுற்று - பெண் தன்மையை விரும்புவது; அற்று - போல (உவம உருபு)) இதே அதிகாரத்தில் (அதிகாரம் : கல்லாமை) ஏறத்தாழ இதே கருத்தை வலியுறுத்தும் குறள் இக்கட்டுரையின் தொடக்கத்தில் வேறு ஒரு சூழலுக்கு நாம் எடுத்துக் காட்டியது - "அரங்கின்றி வட்டாடியற்றே ........" (குறள் 401). நுணுக்கமான வேறுபாடு என்னவென்றால் நாம் இப்போது குறித்த குறள் 402 ஏதும் கல்லாதவர்க்கும், முன்பு குறித்த குறள் 401 நிரம்பிய நூலறிவில்லாதவர்க்கும் சொல்லப்பட்டவை. காட்சி 2 : காலை நடைப் பயிற்சியின்போது சில சமயங்களில் மகளும் உடன் வருவதுண்டு - அவள் அன்று காலை ஓரளவு சீக்கிரம் கண் விழித்திருந்தால்! அவள் இலக்கிய (ஆங்கில இலக்கியம்) மாணவி என்பதாலோ என்னவோ, எனக்குத் தெரிந்த தமிழை என்னிடம் கேட்பதில் ஆர்வம் கொண்டவள். ஒரு நாள் புறநானூற்றின் முதற்பாடல் பற்றிய பேச்சு எழுந்தது. 'கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி' எனும் மன்னனால் பாடப்பட்டதைச் சொன்னேன். "பொதுவுடைமைவாதிகளான நாம் யாரை 'பூஷ்வா' என்று குறிப்பிடுகிறோமோ, அத்தகைய பூஷ்வாவான மன்னன் ஒருவனே சொல்கிறான் - இவ்வுலகம் இயங்குவதே பொதுவுடைமைவாதிகளால்தான் என்று" எனச் சொன்னேன். அப்பாடலை முழுமையாகச் சொல்லச் சொல்லி விளக்கமும் கேட்டாள். பொதுவாகவே ஒரு சொல் குறித்து ஒரு பாடலைச் சொன்னால் கூட முழுமையாகப் பாடலைச் சொல்லச் சொல்வாள். மீண்டும் சொல்கிறேன், "இலக்கிய மாணவி என்பதாலோ என்னவோ!". சரி, பாடலுக்கு வருவோம். " உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே" (புறநானூறு; பாடல் 1) பொருள் விளக்கம் : உண்டால் அம்ம இவ்வுலகம் - இவ்வுலகம் உண்டென்றால் (இயங்குகிறது என்றால்) - "யாரால் தெரியுமா?" என்று சேர்த்துப் பொருள் கொள்ளலாம் - 'அம்ம' என்பது வியப்புச்சொல்; இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் - சாகா வரம் தருவதாய் நம்பப்படும் அமிழ்தத்தையே இந்திரர் தருவதாயினும்; இனிது எனத் தமியர் உண்டலும் இலரே - அதனை இனிது என்று தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள்; முனிவிலர் - சினம் கொள்ள மாட்டார்கள்; துஞ்சலுமிலர் - சோம்பல் கொள்ளவும் மாட்டார்கள்; பிறர் அஞ்சுவது அஞ்சி - உலகோர் அஞ்சுகின்ற விடயங்களுக்குத் தாமும் அஞ்சி ('அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்பது வள்ளுவன் வாக்கு); புகழ் எனின் - உலகோரால் ஏற்றப்படும் நற்செயல்கள் எனின்; உயிருங் கொடுக்குவர் - அச்செயல்களை நிறைவேற்ற உயிரையும் கொடுப்பார்கள்; பழியெனின் - பழி ஏற்படும் தீச்செயல்கள் எனின்; உலகுடன் பெறினும் கொள்ளலர் - (அத்தீச்செயல்கள் புரிய) உலகையே பரிசாகத் தந்தாலும் அதனைக் கொள்ள மாட்டார்கள்; அயர்விலர் - சோர்வடைய மாட்டார்கள்; அன்ன மாட்சி அனையர் ஆகி - இத்தகைய மாட்சிமை பொருந்திய குணங்களோடு; தமக்கென முயலா - தமக்காக மட்டும் முயற்சி மேற்கொள்ளாதவர்கள்; நோன் தாள் - (ஆனாலும்) வலிய முயற்சி உடையவர்கள் - அஃதாவது தமக்கென முதலாதவர் என்பதால் முயற்சியற்றவர் என்ற பொருளில்லை; பிறர்க்கென முயலுநர் உண்மையானே - உண்மையில் பிறருக்காக முயற்சி உடையவர்கள். இத்தகையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்கிறான் இளம்பெருவழுதி. 'தன்னால்' என்னும் கர்வமின்றி 'அன்ன மாட்சி அனையரால்' என அறிவிப்பதில் உள்ளது அவனது மாட்சிமை. இப்பாடலைச் சொல்லி விளக்கியதில் அன்று ஒரு சங்கிலித் தொடர் உருவானது. அது முழுமையாக சொல்லாட்சியைக் கண்ணிகளாய்க் கொண்டது. பாடலில் மூன்று சொற்கள் பற்றிக் கேட்டாள் என் மகள். அவை தமியர், நோன், தாள். பொதுவாக, ஒரு சொல்லுக்குப் பொருள் சொல்வதோடு அச்சொல் எங்காவது எடுத்தாளப்பட்டது என் நினைவுக்கு வந்தால் அதனைச் சுட்டத் தவறுவதில்லை. கேட்போர் சிலர் ரசிப்பதும் உண்டு. முதலில் 'தமியர்'க்கு வருவோம். ஒரு செயலில் 'தாம் மட்டுமே' என்னும் சுயநலத்துடன் செயல்படுவோரைக் குறிப்பதாய் அமைவது இச்சொல். எடுத்துக்காட்டாக, "இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்" (குறள் 229; அதிகாரம் : ஈகை) பொருள் விளக்கம் : இரத்தலின் இன்னாது - பிச்சை எடுப்பதை விடக் கொடுமையானது; மன்ற - உறுதியாக (உறுதிப்படுத்தும் இடைச்சொல்; Good என்பதை உறுதிப்படுத்த Very good சொல்வதைப் போல); நிரப்பிய - பொருள் தம்மிடம் குறைவுபடாமல் நிரப்பும் நோக்குடன்; தாமே தமியர் உணல் - தாம் மட்டுமே என்னும் சுயநலத்துடன் செயல்படுபவர் உண்ணுதல். 'தமியரை' விளக்க எடுத்த குறளில் 'மன்ற' அவளுக்கு (மகளுக்கு) இடறியது. மேலே பொருள் விளக்கத்தில் குறிப்பிட்டது போல் அஃது உறுதிப்பாடு பற்றிய இடைச்சொல் என்பதைக் கூறி, உடனே நினைவில் வந்த குறுந்தொகைப் பாடலைச் சொன்னேன். தொடர் சங்கிலியில் அது பக்கவாட்டில் ஒரு கண்ணியானது. அப்பாடலை அவளுக்கு விரிவாகச் சொன்னாலும் இங்கே சுருக்கமாக : "கார்காலத்தில் திரும்பி வருவேன் எனத் தலைவியிடம் கூறிப் போர்க்களம் சென்ற தலைவன் கார் வந்தும் வரவில்லை. கார்காலத்திற்குக் கட்டியங் கூறிக் கொன்றை மலர்கள் எங்கும் பூத்திருந்தன. வருந்திய தலைவியைத் தேற்றும் நோக்கில் அவளது தோழி, "காலமல்லாத காலத்தில் பெய்த மழையைக் கார் என நினைத்து மயங்கிய கொன்றை பூத்தது; எனவே நீ கலக்கமுறாதே!" என்று பொய்யாகத் தேற்றுகிறாள். "மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை -------------------------------------------------- --------------------------------------------------- வம்ப மாரியைக் கார்என மதித்தே" (குறுந்தொகை; பாடல் 66) பொருள் விளக்கம் : தடவுநிலைக் கொன்றை - பரந்த அடியினையுடைய கொன்றை மரம்; மன்ற - உறுதியாக; மடவ - பேதலித்தது; வம்ப மாரி - பருவமல்லாத காலத்தில் பெய்யும் மழை; கார்என மதித்தே - கார் கால மழை என நினைத்து. இனி பக்கவாட்டில் இருந்து மீண்டும் நாம் எடுத்துக்கொண்ட தொடர் சங்கிலிக்கு வருவோம். அடுத்த கண்ணி 'நோன்'. இதன் பொருள் "உண்டால் அம்ம இவ்வுலகம் ........" பாடலின் பொருள் விளக்கத்தில் நாம் கண்ட 'வலிய' என்பதாகும். இச்சொல்லாட்சிக்கு நாம் எடுத்தாளும் மேற்கோள் புறநானூறு தருவது. தன் மகன் களிற்றியானையை வீழ்த்திய பின்பே தான் விழுந்தான் எனும் செய்தி தந்த உவகையும் மகனை இழந்த சோகமும் கலந்து, வீரமும் ஈரமும் பேசும் காவியமாய் வரும் பாடல்: "மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே" (புறநானூறு; பாடல் 277) பொருள் விளக்கம் : மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற; வால்நரைக் கூந்தல் - தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய; முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்; களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் வீழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி; ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே; வெதிரத்து - புதரில்; துயல்வரும் - அசைந்தாடும்; நோன் - வலிய; கழை - மூங்கில் கழியில்; வான் பெய - மழை பெய்யும் போது; தூங்கிய - தங்கிய; சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்). இறுதிக் கண்ணியாக வருவது தாள் எனும் சொல் இது பல பொருள் ஒரு மொழி. எழுதுகின்ற காகிதம், பாதம் எனும் பொருள்கள் தவிர 'முயற்சி' எனும் பொருளையும் கொண்டது. இக்காட்சியில் நாம் முதலில் எடுத்த "உண்டால் அம்ம இவ்வுலகம் ....." எனும் புறநானூற்றுப் பாடலில் தாள் என்பது முயற்சியையே குறிக்கிறது. மேலும் எடுத்துக்காட்ட பின்வரும் குறள் : "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" (குறள் 212; அதிகாரம் : ஒப்புரவறிதல்) பொருள் விளக்கம் : தாளாற்றி - பெருமுயற்சி மேற்கொண்டு - அயராது உழைத்து; தந்த பொருளெல்லாம் - ஈட்டிய செல்வமெல்லாம்; தக்கார்க்கு - தகுதியுடையோர்க்கு; வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவுடன் உதவி செய்வதற்காக. இறுதிக் கண்ணி என்று நாம் அறிவித்தாலும் அது முடிந்த பாடில்லை என்பது போல, மேற்கோள் காட்டிய குறளிலிருந்து 'வேளாண்மை' எனச் சொல் வளர்த்தாள் மகள். என் மகளாயிற்றே! 'வேளாண்மை'யும் பல பொருள் ஒரு மொழி எனச் சொன்னேன். வேளாண்மை என்பது உழவுத் தொழில் குறிப்பது மட்டுமல்ல, ஒப்புரவறிந்து பிறருக்காக ஆற்றி இருத்தலுமாம். அது இரங்குதல், பெருமனம் கொள்ளுதல் (generous, magnanimous etc.) போன்ற நற்பண்புகளை அடிப்படையாய்க் கொண்டது. படித்த பாடம் மீண்டும் புறநானூற்றின் வழி நினைவுக்கு வந்தது. திருப்புறம்பியத்துப் போர்க்களத்தில் சோழன் செங்கணானிடம் தோற்று குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்ட சேரமான் கணைக்கால் இரும்பொறை தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறான். அவனை உதாசீனப்படுத்துவது போல் காவலர் தாமதித்துத் தண்ணீர் கொடுக்கின்றனர். மானமே பெரிது எனும் வழி வந்த சேரமான் தண்ணீரை ஏற்காமல் உயிர் துறக்கிறான். அத்தறுவாயில் அவனே எழுதி வைத்த பாடலே இப்போது 'வேளாண்மை'க்கான நமது மேற்கோள் : "குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளின் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத் தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகத் தானே?" (புறநானூறு-74) பொருள் விளக்கம் : குழவி இறப்பினும் - குழந்தை பிறந்து இறந்தாலும் அல்லது இறந்து பிறந்தாலும் ஊன் தடி பிறப்பினும் - (உருவமற்ற) சதைப் பிண்டமாகப் பிறந்தாலும் ஆள் அன்று என்று - அது ஒரு ஆள் இல்லையென்று வாளின் தப்பார் - வாளினால் கீறுவதிலிருந்து தப்ப விடமாட்டார் (அஃதாவது விழுப்புண் இல்லாது அதனைப் புதைக்கவோ எரிக்கவோ மாட்டார்; வீரம் செறிந்த இறப்பின் மேன்மை குறிக்கப் பெறுகிறது. அத்தகைய மரபில் வந்த தான் போரில் மடியாமல் சிறைப்பட்டு அவமானங்களைத் தாங்க வேண்டியுள்ளதே என்று சேரமான் சுய கழிவிரக்கம் கொள்வதே இப்பாடல்) ஞமலி - நாய் தொடர்ப்படு ஞமலியின் - சங்கிலியால் கட்டப்பட்ட நாய் போல இடர்ப்படுத்து இரீஇய - இடையூறு செய்திருக்க கேளல் கேளிர் - நட்பு உணர்வு இல்லாத உறவு கொண்டோர் (பகைவர்) வேளாண் - பெருமனதுடன் தரும் சிறுபதம் - தண்ணீர் மதுகையின்றி - (அத்தண்ணீர் இன்றி உயிர்விட) மனவலிமை இன்றி வயிற்றுத் தீத்தணிய - வயிற்றில் தீ போன்று உழற்றும் தாகம் தணிய ஈன்மரோ - பெறுவரோ காட்சி 2 ல் மேற்கூறிய சங்கிலித் தொடர் பல்வேறு நாட்களில் நடைபயிற்சியின் போது கண்ணிகளாய்க் கோர்க்கப்பட்டவை. தமிழனாய்ப் பிறந்ததால் தமிழ் மொழி வாய்த்தது எனக்கான பேறு என்றால், என் ஆர்வத்தைத் தூண்டி நான் வாசித்து, கேட்டு அறிந்த தமிழை என்னிடம் கேட்கும் ஆர்வம் பெற்றது என் மகளுக்கான பேறு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.