-
Content Count
293 -
Joined
-
Last visited
-
Days Won
1
சுப.சோமசுந்தரம் last won the day on May 5 2018
சுப.சோமசுந்தரம் had the most liked content!
Community Reputation
345 ஒளிAbout சுப.சோமசுந்தரம்
-
Rank
உறுப்பினர்
Profile Information
-
Gender
Male
-
Location
Tirunelveli, Tamilnadu, India
-
Interests
Literature - Classical and Modern, Social and Union Activities
Recent Profile Visitors
3,298 profile views
-
சுப.சோமசுந்தரம் started following கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம், காதுகளும் கதவுகளும்! - தோழி, கிராமத்து வீடு and 7 others
-
'மெல்லத் திறந்தது கதவு' திரைக்கதை போன்ற ஒரு நிறைவுக் காட்சி (climax). மெல்லிய தூறலுடன் இதமாக வருடிச் செல்லும் காற்றாக ஒரு மொழி நடை. வாழ்த்துகள்.
-
தெளிவான நீரோடை போன்ற சொற்சித்திரம். எனக்கும் கிராமத்து வீடு அனுபவம் உண்டு. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைப்பட்ட திருநெல்வேலி வாழ்க்கை என்றாலும், சிறியளவில் இருந்த வயல், தோட்டம் எல்லாம் விற்று முழுமையாக அரசாங்க வேலைகளில் அடிமையான குடும்பம். திருமணமான புதிதில் புதுமணத் தம்பதியினருக்கு உறவினர் ஒருவர் வீட்டில் விருந்து என்ற முறையில் ஒரு கிராமத்திற்குச் செல்ல நேரிட்டது. ஒரு அழகான கிராமத்தில் வீடு கட்டி வார விடுமுறைகளில் பிள்ளைகளுடன் சென்று வரும் என் ஆசையை அப்போது மனைவியிடம் வெளிப்படுத்தினேன். பொதுவாக தேனிலவுக் கனவுகள் (Honey moon dreams) படுமுட்டாள்தனமாகவே இருக
-
(அல்லக்)கைபேசி ! சக மனிதனின் வாய்மொழிக்குக் காது கொடுத்து பச்சாதாபத்தை (empathy) உருவாக்கும் oxytocinஐ பெறுவதைக் காட்டிலும் அந்த 6 அங்குலத் திரை ஏற்றித் தரும் dopamine பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதிக மனநிறைவைத் (போதையையும் மகிழ்வையும் கூட!) தருவது எப்பேர்ப்பட்ட விஷயம்? எந்தச் சமூக வலைதளப் பின்னலிலும் சிக்காத, எந்தத் தொழில்நுட்பச் சாதனங்களின் பிடியிலும் இல்லாத, அந்தப் போதையை ரசிக்கவோ அனுபவிக்கவோ தெரியாத வெகு சில ஞான சூன்யங்களில் (இன்னும் இந்த அரிய வகை உயிரினங்கள் இருக்கவே செய்கிறோம்!) ஒருவராகிப் போனாலும் கூட இவர்களது பண்பு நலன்களைப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்கிறேன்.
- 1 reply
-
- 2
-
-
நேரத்துக்கேற்ற கதை நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது. குற்றத்தின் அளவைக் காட்டிலும் தண்டனை மிகுதியாய்ப் போனது இரக்க உணர்வு மேலிடச் செய்கிறது. சில நேரங்களில் யாருக்கும் இத்தகைய சூழல் ஏற்படுவதுண்டு.
-
அக்னியஷ்த்ரா - இக்கதைசொல்லி ரசிக்கத்தக்க தனியொரு பாணியைக் கையாள்வது சிறப்பு. பெற்றோர் தந்த பெயரோ தாம் இட்ட புனைபெயரோ வடமொழியே தவிர (என் பெயர்கூட அப்படித்தான்), அவர் கையாளும் மொழியில் இயன்றவரை கலப்பில்லாத தமிழ்ச் சொற்களைக் கையாள்வதும் உருவாக்குவதும் கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள்.
-
அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
சுப.சோமசுந்தரம் replied to நிழலி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
என்னே ஒரு அருமையான திறப்புக்களம் ! வடிவான எழுத்து. தொடர வாழ்த்துகள். -
வளமான எழுத்து வளவன் எழுத்து.
-
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
முதலில் உங்கள் வாசிப்புக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி, திரு.ஈழப்பிரியன். நீங்கள் ரசித்து வாசித்தமை இருமுறை நீங்கள் அளித்துள்ள கருத்துக்களிலிருந்து தெளிவு. குறிப்பாக, உங்களிடமிருந்து இரத்தினச் சுருக்கமாக சில தத்துவார்த்த முத்துக்களை உதிர வைத்தது எனக்கான மகிழ்ச்சி. -
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் posted a topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண- 10 replies
-
- 16
-
-
புனிதக் கருமாந்திரம் ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. - ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற
-
அட கல்யாணமேதான் ! - சோம. அழகு அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு – ‘இந்தக் கட்டுப்பட்டி ஆட்
-
நட்பென்ன உறவென்ன ! by சுப.சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in சமூகச் சாளரம்
தோழர்கள் அனைவருக்கும் நன்றி. வாசிப்புக்கு நன்றி. பாராட்டிற்கும் நன்றி.