Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by P.S.பிரபா

  1. நாங்கள் படித்த காலத்தில் எல்லாம் அடி வாங்காத நாளே இல்லை ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி செய்திகள் வரும் பொழுது இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான ஆசிரியர்கள் என்ற கோபமே வருகிறது.. 

    புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள நடைமுறைகளாலால் எங்களது எண்ணங்களிலும் மாற்றம் வருகிறதா? தெரியவில்லை ஆனால் எங்கள் ஊர் ஆசிரியர்கள் கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும் என நினைக்கிறேன். 

    • Like 1
  2. 16 hours ago, நிழலி said:

    என்று கூறி, இந்தக் கட்டுரை சொல்ல வந்ததுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம. தமது வழக்கமான புலி எதிர்ப்பு / தலைவர் மீதான காழ்ப்புணர்வு அரிப்பை சொறிந்து சுய இன்பம் கண்டார் இதை எழுதிய ராகவன்.

     

    சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் இன்று இல்லையே என்பதால் அவர் எனக்கு  (மட்டும்) சொன்னார், காதில் குசுகுசுத்தார்,  என்று  இப்படி இன்னும் எத்தனையும் எழுதலாம்.

    இந்த வருடாந்திர இலக்கிய கூட்டம் என்பதே புலி எதிர்ப்பு காச்சலாம் நன்கு பீடிக்கப்பட்டு புலிகள் இல்லாமல் போய் 15 ஆண்டுகள் போன பின்னும் கூட, இன்னும் அந்த காச்சலின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அதிகம் கொண்ட கூட்டத்தால் நிகழ்த்தப்படும் நிகழ்வு.

    எனக்கும் கூட இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது ஏன் சம்பந்தமில்லாமல் தலைவரை இதற்குள் இழுத்தார் என விளங்கவில்லை. 

    தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் என ஒரு பகுதியினரும்.. இந்த மாதிரி நிரூபிக்க முடியாத கதைகளை கட்டும் ஒரு பகுதியினரும் .. இப்படியே போகவேண்டியதுதான். 

  3. கடவுளை விட.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை விட மனிதர்கள் பயப்பட வேண்டியது அவரவர் மனசாட்சிக்கே.. ஏனெனில் மனசாட்சிதான் எப்பொழுதும் எங்களுடன் வரும்.. 

    மனசாட்சிக்கு விரோதமாக, பிழையாக செயற்படும் மனிதர்கள்.. கடவுளுக்கு தாங்கள் உண்மையாகவும் பக்தியுடனும் இருப்பதாக காட்டுவதெல்லாம் பொய்யான ஒன்று என்றுதான் நான் நினைப்பதுண்டு

  4. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித எதிர்பார்ப்புகளுடன் இலங்கைக்குப் போவதால் அவரவர் அனுபவங்களும் வேறுபடுகிறது.. 

    என்னைப் பொறுத்தவரையில் எனது அனுபவங்களின் படி அங்கே உள்ளவர்களுடன் 2009 முன் 2009 பின் பற்றி கதைப்பதை விரும்புவதில்லை, ஏனென்றால் எனது தந்தை கூறுவது நீ இங்கே வந்து ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவாய் பிறகு ஏதும் என்றால் எங்களுக்குத் தானே கஷ்டம் என்று. அது உண்மை என்பதால் தேவையில்லாமல் கதைப்பது இல்லை. 

    அதேபோல எனது அம்மாவின் மறைவிற்குப் பின் அனேகமாக ஒவ்வொரு வருடமும் போவதால் சில விடயங்கள் /பழக்கவழக்கங்கள்  முன்னரை விட அதிகரித்துள்ளது போலவும்.. சில விடயங்களில் முன்னேற்றம் போல இருந்தாலும் எங்களுடைய அடையாளத்தை இழக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சில நேரங்களில் வளங்கள் இருந்தும் அநியாயமாக வீணக்குகிறார்கள் அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என கவலைப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு ஆடம்பரங்கள், தேவைக்கு அதிகமான திருமண மண்டபங்கள் தேவைதானா  என்றெல்லாம் யோசிப்பதுண்டு..ஆனால் பல விடயங்களில் அவர்களாக உணராமல் ஒன்றும் கதைத்து பயனில்லை என்பதால் பேசாமல் இருப்பதுண்டு. 

    இப்பொழுதெல்லாம் புலம்பெயர்ந்தோர், அங்கே வாழ்வோர் என ஒப்பிட்டுப் பார்ப்பதை கூடியளவு தவிர்ப்பதையே விரும்புகிறேன். ஆனால் ஊருக்கு போய்விட்டு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் எங்களது தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்.  
     

    ஊருக்குப் போகிறேன்.. பார்க்கிறேன்..திரும்ப அவுஸ் வருகிறேன் என்ற ரீதியில்தான் எனது பயணங்கள் உள்ளன. 

    ஒரு மாதிரி 5 பக்கங்களையும் வாசித்து எனது எண்ணத்தையும் பகிர்ந்துள்ளேன்.😅

    பயண அனுபவத்திற்கு நன்றி கோஷான்..

    • Like 3
    • Thanks 2
  5. On 28/3/2024 at 02:18, விசுகு said:

    பயணக் கட்டுரை சுருங்கி விட்டது

    பயணக்கட்டுரை சுருங்கினாலும் 6 பக்கங்களுக்கு திரி வந்துட்டுது விசுகு அண்ணா🤔

    • Haha 1
  6. உளவியலை எம்மவர்கள் தேர்ந்தெடுத்து படிப்பதில்லை என்பதற்கு முதல் காரணம் எமது சமூகத்தில் அவர்களைப்(உளவியல் மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள்) பற்றிய கருத்துக்களே காரணம்.. 

    ஒருவருடைய வெளித்தோற்றத்திற்கும் அவரது குணவியல்புகளுக்கும் சம்பந்தமே இல்லாதவர்களைத் தான் இப்பொழுது அதிகம் காண்பதாக நான் உணர்வதுண்டு.. 

    பச்சை முடிந்துவிட்டது😔

    கதைக்கு மிக்க நன்றி😊

    • Like 1
  7. 12 hours ago, புங்கையூரன் said:

    நன்றி பிரபா...! மூனி மூனி மிகவும் பிடித்த இடம்..! வியட்னாமியர்களும், சீனர்களும் ஒரு சீசனுக்கு சீனத் தொப்பிகளுடன் நின்று றால் பிடிப்பதைக் கண்டுள்ளேன்..! எவ்வளவு இனங்கள் இணக்கமாக வாழும் நாடு என்று அவுஸ்திரேலியா நினைத்துப் பெருமைப்படுவது உண்டு! இந்தத் தீவைப் பற்றி உங்கள் மூலம் தான் அறிந்தேன்! ஒரு முறை போகத்தான் என்னும் ஆவலை, உங்கள் எழுத்துக்களும் படங்களும் ஏற்படுத்தி விட்டன! எனக்கும் தனிமை பிடிக்கும்!

    அங்கே(மூனி மூனி) முத்து எடுக்கும் முறையை காட்டும் இடமும் உண்டு ஆனால் போகவில்லை.. 

    Oyster Shed என்ற உணவகத்தில் சீனர்கள்தான் நிரம்பி இருந்தார்கள்.. Oysterம் wineம் கலந்த வாசனையே அதிகம்.. 

    Wiseman Ferry என்ற இடம் கூட இப்படியான தீவைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி😊

  8. 14 hours ago, Kavi arunasalam said:

    எனக்கும் உங்களுக்கும் பிடிக்கும்.

    போய் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.

     நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இப்படிப் பல இடங்களைப் பார்க்கலாம்..

    ஆனால் இங்கே வரும் எம்மவர்களும் சரி வேற்று இனத்தவரும் சரி அனேகமாக போவது Sydney Opera House, Three sisters(Blue Mountain), Byron Bay etc போன்ற இடங்களுக்குத் தான் ஆனால் NSWற் அழகு நகரங்களில் இல்லை.. Regionalல்தான் உள்ளது. 

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி😊

  9. 19 hours ago, நிலாமதி said:

    நீண்ட நாட்கள் உங்களை காணவில்லை என எண்ணியிருந்தேன். அழகான காடசிப்   படங்களுடன் வந்துள்ளீர்கள் மிக்க நன்றி 

     அடிக்கடி காணாமல் போவதே வாடிக்கையாகிவிட்டது.. இல்லையா😁

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  10. 20 hours ago, nunavilan said:

    எழுத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி பிரபா.  Danger Island  மிக அழகாக உள்ளது.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி😊.

    ஓம் அழகான தீவுதான்.. இப்படியான சிறிய தீவுகள் Hawkesbury ஆற்றில் உள்ளன ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே போக முடியும்

    20 hours ago, suvy said:

    ஒரு சிறிய பயணக் கட்டுரையாகிய போதிலும் அழகழகான படங்களையும் தந்து அசத்தி விட்டீர்கள்......!  👍

    தீவைப் போல கட்டுரையும் சிறியதாகிவிட்டது😊

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுவி அண்ணா. 

    19 hours ago, ஈழப்பிரியன் said:

    படங்களுடன் கூடிய பயணக் கட்டுரை அருமையாக இருந்தது.

    எப்பொழுதும் எனக்கு ஊக்கமளிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி😊

  11. Dangar Island - தனிமை விரும்பிகளுக்கு மட்டும்…

    கொஞ்ச காலமாகவே ஒன்றிலும் நாட்டம் ஏற்படவில்லை. வேலைகளும் அதிகம், எல்லாவற்றிலும் இருந்து சற்று விலகி அமைதியாக இருக்க மனம் விரும்பியது. இந்த தீவு பற்றி கேள்விப்பட்டு அங்கே போவதற்காக ஓரு அதிகாலையில் வெளிக்கிட்டு இந்த தீவிற்கு வந்தோம். 

    இது ஒரு சிறிய தீவு.. சிட்னியின் ஆரவார இயந்திர வாழ்கையிலிருந்து சற்று விலகி இருக்கும் ஒரு தீவு. Hawkesbury ஆற்றில் அமைந்துள்ள இந்த தீவை நீங்கள்  ஆகக் குறைந்தது 1 மணித்தியாலத்திற்குள் சுற்றிப் பார்த்துவிட முடியும். 

     

    IMG-2316.jpg
    Hawkesbury ஆற்றின் அழகு!!

    IMG-2342.jpg
    இந்த தீவிலும், இந்த தீவிற்கு வரும் வழியிலும்  கண்ணில் பட்டதை கருத்தை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

    நான் இருக்கும் இடத்திலிருந்து 1 3/4 மணித்தியால கார் ஓட்டத்தில் Brooklyn என்ற இடத்திற்கு வந்து பின் அங்கிருந்து படகில் இந்த தீவிற்கு போகவேண்டும். 


    Brooklynற்கு போகும் வழியில் Mooney Mooney என்ற இடத்தில் காலை உணவிற்காக நின்ற பொழுது.. 

    IMG-2345.jpg

    அங்கே இருந்த Lawn bowling கிளப்பில் சிறிது நேரம் பொழுதை கழித்தோம். வேலையில் இருந்து ஓய்வு எடுத்தபின் இந்த பௌலிங் விளையாட்டு உதவும் என்பதால் அதனை விளையாடிப் பார்த்த பொழுது..

    IMG-2347.jpg

    பின் மதிய உணவை முடித்துக்கொண்டு Brooklyn படகுதுறைக்கு மதியம் இரண்டு மணியளவில் போய்ச் சேர்ந்தோம்.. 
    படகு வந்ததும் கட்டனத்தை செலுத்திவிட்டுப் படகில் ஏறி, 10 நிமிடங்களில் Danger Island வந்தடைந்தோம்..

    IMG-2346.jpg

    இந்த தீவில் வாகன வசதி இல்லை என்பதால் நடந்தே தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். அதிகளவு பொருள்கள் என்றால் முன்பே பதிவு செய்து community buggy( சிறிய வண்டி) பயன்படுத்தலாம் மற்றப்படி படகுதுறையில் வைத்திருக்கும் சிறிய தள்ளுவண்டியில்( wheelbarrow) பொருள்களை வைத்து இழுத்துக் கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு வரவேண்டும்..

    IMG-2319.jpg

    இந்த தீவி்ல் முன்பு அதிகளவு அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள் இருந்தனர் ஆனால் பிரித்தானியர்களின் வருகையுடன் பூர்வீக குடிகள் இல்லாமல் ஆக்கப்பட்டனர். இப்பொழுது 300லும் குறைவானவர்களே இந்த தீவின் மொத்த சனத்தொகை..

    IMG-2343.jpg

    இங்கே ஒரு bowling club, NSW தீயணைப்பு நிலையம் மற்றும் ஒரு உணவகமும் உள்ளது.. சிறுவர் பூங்கா உள்ளது. அதுமட்டுமல்ல பல அரிய வகை தாவரங்கள், உயிரினங்கள், கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. அவசரமில்லாமல் ஆறுதலாக இந்த தீவைச் சுற்றினால் நிறைய விடயங்களை காணலாம். தூய்மையான காற்றையும் சுவாசிக்கலாம்.

    மேலும் இந்‌த தீவு இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இருந்து எத்தனையோ மடங்கு பின்தள்ளி உள்ளதால் பதின்ம வயதினருக்குப் பிடிக்காது ஏனெனில் அவர்களுக்கு ஏற்றவகையில் ஒன்றும் இல்லை. 

    சிறுவர்கள் விரும்பி வரக்கூடும் ஏனெனில் எந்தவித தடைகள், வாகனங்கள் இன்றி வீதிகளில் ஓடி விளையாட முடியும். 

    இந்த தீவில் ஒரு சிறிய கடற்கரை உள்ளது. விடுமுறையில் வருவோர் தங்க வசதியாக கடற்கரையைப் பார்த்தபடி ஒன்றிரண்டு தங்குமிடங்களும் உண்டு..

    IMG-2326.jpg

    மிகவும் அமைதியான ஒரு தீவு.. தனிமையை விரும்புபவர்கள் இங்கே வந்து அமைதியாக மனிதர்களின் தொந்தரவின்றி நாளை/நேரத்தை கழிக்க முடியும். 

    IMG-2309.jpg

    Berowra Waters 

    வீடு திரும்பும் வழியில் Berowra Waters என்ற இடத்தினூடாக வரும் வழியில் அந்த இடத்தைப் பார்த்து எனக்குள் நினைத்தேன் “ அவுஸ்திரேலிய உண்மையில் அழகான ஒரு தீவு.. இயற்கையாகவே அதிகளவு மலைகளும் அதனால் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும் அதே சமயத்தில் இந்த மலைகளுடாக காரில் பயணிப்பதும் ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். அதுமட்டுமல்ல இயற்கையாகவே அழகிய கடற்கரைகளும் உள்ள ஒரு நாடு.. இதைப் போல மற்ற நாடுகளுக்கும் இருக்குமா என்பது சந்தேகமே” என்று.. 

    IMG-2335.jpg

    வீடு திரும்பும் பொழுது

    IMG-2290.jpg
     

    யாழ் இணையத்தின் 26வது அகவைக்காக

    நன்றி

    - பிரபா

    • Like 9
  12. //அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும். ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும். தலைமை தாங்கும். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை.//

    இந்தப் பகுதியை வாசிக்கையில் எனக்கு 2009 வரை ரிஸ்க் எடுத்து வரலாறு படைத்த சமூகமாகவும் அதற்குப் பின் பிழை பிடிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் ஒழுங்காக செய்யாத, சுயநலமான ஒற்றுமையில்லாத ஒரு சமூகமாகவும் யாருக்கு என்ன நடந்தா என்ன இந்தியா என்ன செய்தால் என்ன ஆனால் நாங்கள் இந்திய சினிமாவை/ நட்சத்திரங்களை வளர்த்துவிடுவதை மட்டும் மாற்றமாட்டோம் எனக் கூறும் சமூகமாக மாறிவருகிறோமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 

    • Like 1
  13. 8 hours ago, ரஞ்சித் said:

    இப்படி இன்னமும் ஆட்கள் இருக்கிறார்களா? ஓ, தமிழரசுக் கட்சியைச் சொல்கிறீர்களா? உண்மைதான். 

    அவர்களை மட்டுமல்ல, அவர்களை நம்பும் வாக்காளர்களையும் தான் கூறுகிறேன். 

    இவர்களை நம்பி ஒருதரம் வாக்குப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள், ஒன்றும் நடக்கவில்லை. இரண்டாம் முறையும் செய்தார்கள் அப்பொழுதும் ஒன்றும் நடக்கவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களாகி தங்களது சந்ததிக்கு செல்வம் சேர்த்ததுதான் நடக்கிறது. இப்படி இவர்கள் தங்களுக்கு நன்மையோ அல்லது எம் இனத்திற்காக நன்மை செய்யவில்லை எனத் தெரிந்தும் வாக்குகளைப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வாக்காளர்களையும் தான் கூறுகிறேன்.

  14. 13 hours ago, satan said:

    சாந்தனின்  மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன

    இந்தியாவை நம்பியிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர்களை நித்திரையில் இருந்து எழும்பச் சொல்கிறது. ஆனால் அவர்கள் கண்களை திறந்துகொண்டு நித்திரை கொள்பவர்கள்.. அதனால் இந்த செய்தியும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுமில்லை. 

    கடந்த காலத்தில் நடந்தவைகளில் ஏதாவது ஒன்றை மீளாய்வு செய்து குறைபிடிப்பதும்,  இந்திய சினிமாவின்(திரைப்படம்/ இசைநிகழச்சி) பின் அலைவதுமாக பெரும்பாலானோர் இருக்கையில் இந்த செய்தி என்ன சொல்ல வருகிறது என்பதை ஏன் நினைத்துப் பார்க்கப் போகிறார்கள். 

    • Like 1
  15. 4 hours ago, வாதவூரான் said:

    இருக்கிற சட்டத்தை ஒழுங்கா அமுல்படுத்தினாலே போதும்

    இருக்கிற சட்டங்கள் கடுமையானவை இல்லை என்பதால்தான் பயமின்றி இந்த மாதிரி செயல்களை திரும்பத் திரும்ப செய்கிறார்கள் என நினைக்கிறேன். சிறையில் அடைத்தால், தண்டனை காலம் முடிய வெளியே வந்து விடுவார்கள், 

    பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் இந்த மாதிரி குற்றச் செயல்கள் குறையவேண்டும் என்றால் தண்டனை பற்றிய பயம்  ஏற்படவேண்டும். 

  16. ஆண்டவனே கவலை கொள்ளும் செயல்களை செய்துவிட்டு, மனசாட்சி என்றதை மறைத்துவிட்டு ஆண்டவனுக்காகத்தான், ஆண்டவனது இருப்புக்காகத்தான் அதனை செய்தோம் என கொஞ்சமும் தயங்காமல் சொல்கிறோம். ஆண்டவனே மனிதர்களைப் பார்த்து பயம் கொள்ளும் அளவுக்கு எங்களது செயல்கள் உள்ளன. 

     

    • Like 2
    • Thanks 1
  17. விழிப்புணர்வு மட்டும் போதாது, இந்த மாதிரி துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இவை குறைவடையும். 

    • Like 1
  18. On 25/2/2024 at 19:40, தமிழ் சிறி said:

    தமிழ் மக்கள் அதற்காகப் போராட வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் பேரபலத்தை அதிகப்படுத்தும் போது வெளிநாடுகள் தமிழ் மக்களை நோக்கி வரும்

    முன்பெல்லாம் நான் நினைப்பதுண்டு,  தமிழர்களாகிய எங்களுக்கு, நாங்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும், எந்தவித பயமுன்றி, எங்களது நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது என்று.. ஆனால் நிலமை/எண்ணம் அப்படி இல்லை என்பதைத்தான் இப்பொழுதுதெல்லாம் உணர்கிறேன். 

    நாங்கள் இலங்கை பெளத்த நாடு என்பதை பிழையென கூறும் நாங்கள் இந்து/கிறிஸ்தவம் என பிரிந்து போகிறோம்.  ஒரே மதம் என்ற காரணத்திற்காக பிழையானவர்களையும் ஆதரிக்கிறோம். ஊரில் ஏற்கனவே கோயில்கள் இருக்க வீதிக்கொரு கோயிலை கட்டுகிறோம். அதே நேரம் கிளிநொச்சியில் உள்ள பின் தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைக் கட்ட நிறைய யோசிக்கிறோம். 

    புலம்பெயர்ந்த தேசங்களில் பல்வேறு சங்கங்கள். தென்னிந்திய நடிகர்களின் நிகழ்ச்சிகளையும், அவர்களது படங்களை விநியோகிக்கும் உரிமையை அனேகமாக செய்வது ஈழத்தமிழர், ஆனால் ஊரில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க quality சரியில்லை, ticket விற்க முடியாது என பல காரணங்களை அடுக்குவோம். 

    ஊரில் சமூக சீர்கேடுகளை(சிறுவர் துஷ்பிரயோகம் தொடக்கம் பல) ஒரு சாதாரன விடயமாக கடந்து போகிறோம். அதற்கு எதிரான நடவடிக்கைகளை கூட சேர்ந்து எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளோம். நாங்கள் ஊரில் வளர்ந்த காலத்தில் இப்படி நடைபெற்றதா? இல்லை. அந்த காலப்பகுதியில் இளமை வயதில் இருந்தவர்களின்(பெரும்பாலானோர்) பிள்ளைகள்தான் இன்றுள்ள இளைய சமூதாயம் என நினைக்கிறேன். அவர்கள்தான் இன்று சோம்பேறிகளாகவும் போதைக்கும் அடிமையாகி வருகிறார்கள். 

    இன்று தமிழர்களாகிய எங்களது எண்ணங்கள் வேறு என்றே தோன்றுகிறது. 

    எங்களிடம் அரசியல் பலமும் இல்லை ஆயுதபலமும் இல்லை, பொருளாதார பலமும்(?) இல்லை, மக்கள் பலமும் இல்லை. நிலமை இப்படி இருக்கையில் நிலாந்தன் தமிழ் மக்கள் தங்களது பேரம் செய்யும் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பேராசைப்படுகிறார்.

     

    • Like 4
    • Thanks 1
  19. On 25/2/2024 at 17:47, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் 

    https://www.youtube.com/watch?v=R8vHo0_vRFw

    இவரது கருத்துகள் பல உண்மையானவை, ஆனால் கேட்பவர்கள்தான் இல்லை. 

    • Thanks 1
  20. எனக்கு இந்த திரியில் எழுதிய கருத்துக்களையும் வேறு திரிகளில் எமது சமூகம் பற்றிய இன்றைய நிலையைப் பற்றி எழுதப்பட்ட, எழுதும் கருத்துகளைப் பார்க்கையில் ஒரு விஷயம் மட்டுமே தோன்றுகிறது. புலிகள், அவர்களது நடவடிக்கைகள், தோல்விகள் யாவற்றையும் Jail free card போல அவரவர் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். இது மட்டுமே எனக்கு விளங்குகிறது. 

     

    • Like 2
    • Thanks 1
  21. இந்த தமிழரசுக் கட்சி எத்தனை பாரம்பரியமிக்க கட்சி என்றாலும் கூட எனக்கு இந்தக் கட்சியைப் பிடிப்பதில்லை.

    பொதுவாக ஒரு புள்ளிவிபரமோ அல்லது ஒரு புதிய செய்திட்டத்தையோ அல்லது அரசியல் சம்பந்தமான முடிவுகளோ எதுவானாலும் ஒன்றில் அதனை ஆதரிக்கவேண்டும் இல்லை நிராகரிக்கவேண்டும், ஆனால் நடுநிலையாக இருக்ககூடாது, ஏனெனில் இந்த நடுநிலைவாதிகள் அனேகமாக அதிகாரம் உள்ளவர் பக்கமே சாய்வார்கள் என நம்புகிறேன். அவர்களை நம்புவதும் எவ்வளவு தூரம் சரியென தெரியவில்லை. அப்படித்தான் இந்த தமிழரசுக் கட்சியை நான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் அவர்கள் எப்படியிருந்தாலும் அது இப்பொழுது உதவவில்லை அதுபோல இன்றுவரை இவர்கள் சந்தர்ப்பங்களை நழுவவிட்டவர்களாகவே நான் பார்க்கிறேன். 

    இன்று மாவையின் சுயநலம் பற்றி மட்டுமே கதைக்கிறார்கள் ஆனால் இந்தக் கட்சியில் சுயநலமற்ற ஒருவர் என யாராவது இருக்கிறாரா? 

    • Like 1
  22. இவர் இந்திய கலைஞர்களை/விருப்பமில்லாதவர்களை மிகவும் கஷ்டப்பட்டு கூட்டி வந்தேன் etc etc என்றுவிட்டு இன்று அதற்கு வேறு விளக்கம் கொடுக்கிறார். முதலில் இவர் பொதுநிகழ்ச்சிகளில், மேடைகளில், மக்களுடன் எப்படி கதைக்கவேண்டும் என்பதை படிக்கவேண்டும்.. இல்லாவிட்டால் மேலும் மேலும் சிக்கலில்தான் மாட்டுவார். 

    மேலும் எனது சகோதரியுடன் நான் நேற்று கதைத்த பொழுது அவர் கூறியது யாழ்ப்பாணத்தில் எத்தனை நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன.. ஏதாவதில் இப்படியொரு பிரச்சனை வந்ததா? இல்லை.. அப்படியிருக்க இவர்களுக்கு  நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த தெரியவில்லை. அதனால்தான் இந்தளவு பிரச்சனைகளும், இவர்கள் ஒன்றில் முற்றிலும் இலவசமாக அறிவித்திருக்கவேண்டும் இல்லை நிகழ்ச்சியை முழுவதும் கட்டணம் செலுத்தி பார்ப்பது போல செய்திருக்கவேண்டும். தரம் பிரித்து கட்டணம் பிரித்து திறந்த வெளியில் வைப்பதாக இருந்தால் அதற்கேற்ப மேடை தொடங்கி சகலதும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படி ஒன்றுமே செய்யாமல், சரியாக திட்டமிடாமல் திறந்த வெளியில் வைத்து நிகழ்ச்சியை செதப்பி, பிழையை யாழ்ப்பாண சமூகத்தின் மேல் போடப்பட்டுள்ளது. இப்படியானவர்களினால்தான் பிரச்சனையே அதிகம் என்றார். மேலும் யாழ்ப்பாணத்தின் இன்றைய இளைஞர்களின் நிலை தெரியாமலா இன்றுவரை இருக்கிறார் எனவும் கேட்டார். அவர் கூறுவதும் சரியென்றே எனக்குத் தோன்றியது. 

    இப்பொழுது சில காலமாக இந்த நடிகநடிகைகளைக் கொண்டாடுவது ஈழத்தமிழர் மத்தியில்( ஊரிலும் வெளிநாடுகளிலும்) அதிகரித்து வருகிறது. பொழுதுபோக்குகள் தேவைதான் ஆனால் இந்த மாதிரி இந்திய நடிகநடிகைகளைக் கொண்டாடுவது, பின் அதனை social mediaகளில் பகிர்வது எல்லாம் ஒரு சாதாரன நடவடிக்கையாக மாறிவருகிறது. இது எத்தனை தூரம் எமது சமூகத்திற்கு நல்லது? இது மாதிரியான நிகழ்வுகள் மாதத்திற்கு ஒன்று அவசியமா? ஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக இந்தமாதிரி நடிகநடிகைகளின் பின் அலைந்து திரிவது சரியா? இந்த புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர்கள்/மாணவ சங்கங்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும்..

    • Like 3
    • Thanks 2
  23. நான் இந்த நிகழ்ச்சியின் சில குறுகிய காணெளிகளை எனது நட்புவட்டத்தில் பகிரப்படும் பொழுது பார்த்திருக்கிறேனே தவிர முழுமையாக பார்த்தது இல்லை. ஆனாலும் பேசப்படும் தலைப்புகள் சமூகத்தில் பேச தயங்கும் தலைப்புகளும், விழிப்புணர்வுகளுமாகவே உள்ளதை அவதானித்திருக்கிறேன். 

    இந்த நிகழ்ச்சியில் வந்த சில தலைப்புகளில் பேசும் இன்றைய இளையதலைமுறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பார்க்கும் பொழுது வியப்பாகவும் சிலருடைய கருத்துகளை கேட்கும் பொழுது சலிப்பு ஏற்படுகிறது.. ஆனாலும் அதனைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இது சரியா பிழையா என தன்னைத் தானே கேட்கமுடியும் என நம்புகிறேன். 

    இப்பொழுதெல்லாம் தொடர் தொலைகாட்சி நாடகங்களைவிட இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பரவாயில்லை என நினைப்பதுண்டு. அது மட்டுமல்ல சில நேரங்களில் சில பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பல நன்மைகள் உள்ளது என நம்புகிறேன். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.