Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1743
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by P.S.பிரபா

  1. யாதும் யாவரும்.. பல அவுஸ்திரேலிய தமிழர்களை சிந்திக்க வைக்கும் ஒரு திரைப்படம். படத்தைப் பார்க்கும் எம்மவருக்கு சங்கடங்களை தரும் சில விடயங்கள் உள்ளது என்பதால் கட்டாயம் இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் அசெகளியப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். என்னைப் பொறுத்த வரை இயக்குனர் தைரியத்துடன் தனது சிந்தனையை தெளிவாக கூறியுள்ளார். இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று கூறி பிரசங்கம் செய்யவில்லை, ஆனால் எங்களது சமூகத்தில் மறைக்கப்பட்ட/மறைக்க விரும்பும் சில பிரச்சனைகளுக்கு தனது தீர்வு இது என்பதை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். 3 முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் சிந்தனையையும் இன்றைய அவுஸ்ரேலிய தமிழர்களின் வாழ்வியலையும் அருமையாக கூறியுள்ளார். காதல் என்பது எந்த வயதிலும் வரக்கூடியது. 60 வயதில் ஒருவர் தனது தனிமையை போக்க ஒரு துணையை தேடினால் அது நகைப்புக்குரிய விடயமல்ல. அதே போல வீட்டில் மனைவி/தாய் ஹிட்லர் போல இருந்தால் கணவன்/பிள்ளைகள் எத்தனை விடயங்களை மறைத்து இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதையும் கூறுகிறது யாதும் யாவரும்.. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், அவர்களை அவர்களது தனித்துவ பண்புகளுக்கேற்றவாறு மதிக்கவேண்டும் ஆனால் நீங்கள் ஊருக்காகப் போலியாக வாழத்தொடங்கினால் உங்களது மகிழ்ச்சி, உங்களது தனித்துவம், உங்களது நிம்மதியை எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். ராம் என்ற கதாபாத்திரம் மனதை வாட்டியது உண்மை. அதே போல விக்ரமின் தாயாக வரும் பெண்மணியைப் போன்றவர்களை அதிகம் பார்த்திருப்போம். எங்களில் பலர் மீனாட்சி கதாபாத்திரத்தை எத்தனை தூரம் ஆதரிப்பார்கள் எனத் தெரியவில்லை. படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நகர முடியாமல் அப்படியே கட்டிப்போட்ட மாதிரி திரைக்கதை. சில இடங்களில் என்னை மறந்து வாய்விட்டு சிரிக்க வைத்த கதைவசனங்கள்.. படத்தின் பிண்ணனி இசை, காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களின் தெரிவு, அவர்களின் நடிப்பு என அத்தனையும் மிகவும் கவனமெடுத்து படமாக்கப்பட்டுள்ளது இந்த யாரும் யாவரும். இயக்குனர், இளையோரின் திறமையை உணர்த்த விரும்பியது மட்டுமல்ல, அவர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த மாதிரி முயற்சிகளில் ஈடுபடவும் முன்மாதிரியாக இருக்கிறார். படத்தில் நிறைய இளையோர் நடித்திருக்கிறார்கள். அதே போ யதுஷன் என்ற இளைஞர் அருமையான இரு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.. அந்த இசையில் உங்களை மறந்துவிடுவீர்கள் என்பது நிச்சயம். அதுமட்டுமல்ல பருத்தித்துறையை சேர்ந்த நிதர்ஷன் என்பவருக்கும் visual effects சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறார். இப்படி ஊரில் உள்ள இளையோரையும் இங்கே உள்ளோரையும் சேர்த்து ஒரு அழகான படைப்பை தந்திருக்கிறார் இயக்குனர். என்னைப் பொறுத்தவரை ஊரிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் பல திறமையான தமிழ்க் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒழுங்கான தளத்தை உருவாக்க வேண்டுமானால் எங்களது மக்களின் தமிழ்ப் படங்களை வெற்றிப் பெறச்செய்நவேண்டும். அப்பொழுதான் தயாரிப்பாளர்களும் விநியோஸ்தர்களையும் கவரமுடியும். அப்படி செய்தால்தான் எங்களது கலைத்துறையும் வளரும். படத்தில் மைனஸ் இல்லாமலும் இல்லை. இருக்கிறது ஆனால் அதனை நாங்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு அனுகுகிறோம் என்பதில் வேறுபடும்.
  2. Toxic mediaவினால் அதிகம் பாதிக்கப்படப் போவது சிவகார்த்திகேயன்தான். சிவகார்த்திகேயன் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இந்தத் துறையில் முன்னேறிய ஒருவர். இவரது வருகை பல வாரிசு நட்சத்திரங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்திருக்காது. அதன் விளைவாகவே இதனை நான் பார்க்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன் இந்திசினிமாவைச் சேர்ந்த சுஷாந் சிங் ராஜ்புத் கூட தற்கொலை செய்து கொண்டார், அதற்கான காரணம் கூட இந்தி சினிமாவை ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துவதும் அந்த பிரிவினருக்குப் பிடிக்காத கலைஞர்களுக்கு வரும் தடங்களல்கள், தோல்விகளால் பலர் கஷ்டப்படுவதும் பேசுபொருளாக இருந்தது. அதனைப் போலவே இதுவும் இருக்க வாய்ப்புண்டு. இமான் கூட உண்மைதான் கூறுகிறார் என எப்படி நம்ப முடியும்?.
  3. தகவலுக்கு நன்றி. கடவுள்களுக்கும் சுதந்திரம் இல்லைத்தான்.
  4. இந்த முதலியாரின் வாசிகசாலைக்கு அருகில் ஒரு கோயிலையும் கண்டதாக நினைவு.. ஆனால் எந்தக்கடவுளின் கோயில் என பார்க்கவில்லை.. 😄
  5. பூர்வீக குடியை சேர்ந்த பலர் Reconciliation is dead என்றே கருதுகிறார்கள். எனக்கு சில பூர்வீக்குடிகளின் பிரதிநிதிகள் கூட இதற்கு எதிர் என்பது கவலையளித்தது. அதே போல இப்பவந்த குடியேறிகளும் No என வாக்குப்போட்டதையும் சில தேர்தல் தொகுதிகளின் விரிவான முடிவுகளை பார்க்கும் பொழுது விளங்கியது. பூர்வீக குடிகளின் உரிமைகளை, அவர்களது வாழ்க்கையை பாதிக்கும் விடயங்களை கேட்பதற்கோ குறைந்தபட்சம் ஒரு ஆலோசனை சபையைக் கூட முன்மொழிய அவுஸ்ரேலியர்கள் தயாரில்லை என்பது கசப்பான உண்மை.
  6. நேற்று இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா, இமாமிற்கு பந்தை வீச முதல் பந்துக்கு எதோ சொல்வது போல இருந்தது.. மந்திரம் ஏதாவது சொல்வது போல காட்டுகிறாரோ (ரசிகர்களை ஏத்திவிட) என நினைத்தேன்.. இப்பொழுதுதான் விளங்கிறது ஏன் என்று..இமாமிற்கு போதாத காலம், ஹர்திக் பாண்டியாவின் அந்த பந்தில்தான் அவுட்டாக வேண்டும் என்பதும்.. விளையாட்டில் மதமும் அரசியலும் இல்லாது இருக்கவேண்டும்.. இதில் இலங்கை, பாகிஸ்தான் இந்தியா போன்றவை விதிவிலக்கு.
  7. மனிதநேயம் என்பது சுயநலமாக பயன்படுத்தப்படவேண்டும் என்பது அவர்களது மரபணுவில் உள்ளது என்பதால்தான் இன்று காஸாவில் பாலஸ்தீனியர்களைக்கும் நடக்கும் செயலை ஒரே இனத்தைத்/மதத்தை சேர்ந்தவரகள் கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். கடவுள் என இவர்கள் வழிபடுபவர் கூட பக்கச்சார்பாகத்தான் ஜசாக்கையும் இஸ்மாயிலையும் நடத்தியுள்ளார். இன்னமும் எத்தனை காலத்திற்கு இதன் பலனை அனுபவிக்கப்போகிறோமோ தெரியாது😔
  8. The Whispers!!! - பெயருக்கேற்றவாறு அவர்களின் குரல் இன்னமும் மெதுவாகத்தான் உள்ளது. சிட்னி Obera House இருக்கும் இடத்தில் அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் இந்த Whispers உள்ளது. இந்த இடத்தில் முன்பு வாழ்ந்த அவர்களுடைய உணர்வை, நம்பிக்கையை இந்த Whispers குறிக்கிறது..
  9. மிகவும் ஏமாற்றத்தை அளித்த முடிவு இது. பூர்வீகக்குடிகளின் குரல்களை பாராளுமன்றத்தில் நிரந்தரமாக ஒலிக்கவிட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்ததும், சில அபரிஜீன மக்கள் பிரிவுகள் இதனை ஆதரிக்காததும் சேர்ந்து இதனை தோல்வியடையச் செய்துவிட்டது. நாளை பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற இருக்கும் பேரணியில் இவர்களும் அதிகமாக சேர்ந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இதனை இப்பொழுதுள்ள பூர்வீக்குடிகளின் சமூகம் இலகுவில் ஏற்காது என்பதால் closing the gap என்ற நிலையிலும் மாற்றம் வரலாம். ஆனாலும் மிகவும் ஏமாற்றம் அளித்த முடிவு.
  10. கருத்துக்களுக்கு நன்றி. உண்மைதான் பாடல் இனிமையாகவே உள்ளது.. பாடலை எழுதியவர் தாய் அன்பை உணர்ந்துதான் எழுதியிருக்கிறார் என்பதும் உண்மை.. படமும் ஒரு எதிர்பார்ப்பை எங்களவர்களிடையே தந்துதான் உள்ளது.. பார்ப்போம்😊
  11. “யாதும் யாவரும்” official trailer.. படத்தின் கதையை ஓரளவிற்கு ஊகிக்கலாம்.. சில விடயங்கள் பேசாப்பொருளாக இருக்க முடியாதுதானே!!
  12. யாழ்ப்பாணத்தில் மறக்க முடியாத ஒரு இடம்.. ஆனால் பழைய பூபாலசிங்கம் புத்தகசாலை நினைவில் இன்று அங்கே போனால் ஏமாற்றமே கிடைக்கும்.. யாழ்ப்பாண bus standற்குப் பக்கத்தில் இருப்பதும் சரி.. நல்லூர் கோயிலுக்கு அருகில் இருப்பதும் சரி.. புத்தகங்களை அவற்றின் சரியான பிரிவுகளுக்குள் இருக்காது. கொழும்பில் வெள்ளவத்தையில் ஒன்று இருந்தது.. ஆனாலும் எதிர்பார்த்தளவிற்கு புத்தகங்களின் வகைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் ஆசீர்வாதம் புத்தகசாலை கூட அப்படித்தான்.. பெரிய கடை ஆனால் புத்தகங்களைப் அதற்கேற் வகையில் அடுக்கி பாதுகாக்கத் தெரியவில்லை. அங்கே வேலைபார்ப்பவர்களுக்கும் தேடித் தரவோ, இல்லை பகுதிகளை காட்டவோ மனமில்லை(இதற்கு காரணங்கள் இருக்கலாம் - சம்பளம்/வேலையிடத்தின் விதிகள் etc)
  13. இந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்காக அதிகாலை 5.30/6 மணி தொடக்கம் 7 மணி வரை இணைய வழி மூலமும் tuition வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த மாணவர்கள் வேளைக்கு எழும்பி பாடசாலைக்கு போக ஆயத்தம் செய்தபின் இணையவழி வகுப்பில் கலந்து கொள்வார்கள்.. இரவு பாடங்கள் முடித்து நேரம் பிந்தி படுக்கவும் வேண்டும். பிறகு இந்த இணையவழி வகுப்பிற்காக அதிகாலையில் எழும்பவும் வேண்டும். ஏன் இந்த போட்டியோ தெரியவில்லை. மேற்குலகில் வாழும் எம்மவர்களும் இதற்குச் சளைத்தவர்களில் இல்லை.. பாடசாலைக்கு 80% கட்டாய வரவு இங்கே இருந்தாலும் கூட இங்கே உள்ள ஆண்டு 6ல் வரும் selective schools பரீட்சை நெருங்கும் சமயத்தில் இல்லாத வருத்தமெல்லாம் வந்து பாடசாலைகளுக்கு போகாமல் வீட்டில் இருந்து படிப்பார்கள்.
  14. வக்கீல்.. சில விடயங்களை மட்டும் திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறார்? தேவையற்றது..சிலருக்கு இந்த விடயங்களை திரும்பத் திரும்ப கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி(sick mentality) .. அந்த போலி வைத்தியர் தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை முதல் மனைவிக்கு வீடியோ கோலில் காட்டுவது.. ஒரு psycho .. வக்கிர புத்தி.. இந்த லண்டன் பெண் அந்த போலி வைத்தியர் நம்பரை ஏன் இன்னமும் வைத்திருக்கவேண்டும்..விளங்கவே இல்லை.. உண்மையில் சாட்டை துரைமுருகன் ஈழத் தமிழ்பெண்ணின் அக்கறையில் சொல்கிறாரா தெரியவில்லை.. விசியைப் பற்றி விமர்சிக்க இதுவும் ஒரு சான்ஸ். போலிகள் ஜாக்கிரதை!!
  15. இந்த திரியில் நான் எழுதிய ஒரு கருத்தைத் தொடர்ந்து, தேவையற்ற விதமாக கருத்துக்கள், எழுதப்படுவதால் இந்த திரியில் அதனை எழுதியதற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்.. நன்னிக்கு அந்தக் கருத்தை நான் எழுதியதன் நோக்கம் வேறு.. ஆனால் தேவையற்ற விதமாக திரிக்கு சம்பந்தம் இல்லாமல் அதனை வைத்தும், அதன் தொடர்ச்சியகவும் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவதைப் பார்க்க ஏன் அதனை எழுதினேன் என்றுதான் நினைக்கிறேன். பார்க்கப்போனால் இந்தப் போரில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் ஹமாஸும் சரி, தனது மக்களை காப்பாற்ற பதிலடி கொடுக்கிறேன் எனக் கூறிக்கொண்டு சாதாரண பாலஸ்தீன மக்களை மனிததன்மையற்று தாக்கும் இஸ்ரேலும் சரி. இரு தரப்பு செய்ததும் பிழை. ஆனால் இதனை தடுக்காமல் ஊக்குவிப்பதில்தான் மற்றைய நாடுகள் செயல்படுகின்றன. இந்த தீவிரமத வாதக்குழுக்களை உருவாக்கும்/ஊக்குவிக்கும் நாடுகளுக்கு அப்பாவி மக்களும் பற்றி அக்கறையில்லை. அதே போல மற்றைய நாடுகளும் தங்களது நாட்டுநலன்களுக்கேற்ப கண்டும்காணாதது போல இருக்கின்றன. என்னைப் பொறுத்த வரை இன்று இந்த உக்ரோன் போர் தொடங்கி இந்த பாலஸ்தீன போர் வரை உலகில் நடந்த/நடந்துகொண்டிருக்கும் போர்களைப் பார்த்தால் மனித உயிர்கள் இரண்டாம் பட்சம். மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லை. இவையெல்லாம் தெரிந்தும், தேவையற்ற விதமாக கருத்துகளை எழுதி மனஸ்தாபப்படவேண்டுமா?
  16. எமது மக்கள் தொடர்பான எண்ணங்களிலும் இந்த ஆவணத் தயாரிப்பிலும் ஈடுபடும் நன்னியின் மீதான எனது அபிப்பிராயம் மாறவில்லை அண்ணா!. நாங்கள் எல்லோரும் வேறுபட்ட சூழலில் வளர்ந்தவர்கள்.. எல்லோரும் எல்லாவிடயங்களிலும் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் எனக் கூறமுடியாது தானே. அதே போன்ற ஒன்றுதான் இந்த திரியில் நன்னியின் கேள்விக்கு எனது கருத்து.
  17. நான் இந்த தலைப்பில் செய்திகளையும் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டு வருகிறேன். கொல்லப்பட்ட பெண்னைப் பற்றிய செய்திகளை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது திடீரென நீங்கள் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டுவிட்டு அவர் ஒரு இரானுவ வீரர் etc etc என எழுதியதைப் பார்த்துவிட்டுதான் உங்களிடம் கேட்டேன். ஏனெனில் அந்தப் பெண் இராணுவ வீரர் என்பதால் அந்தப் பெண்ணிற்கு நடந்தது சரியாகுமா? இல்லைத்தானே? யாருக்குமே அப்படி நடக்ககூடாது என்றுதான் நாங்கள் நினைப்போம் இல்லையா!. அவ்வளவுதான். இந்த திரியில் நன்னியின் பதிவுகள், பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நடப்பது சரியென்ற தோற்றத்தை எனக்குள் உருவாக்கியது. அது சரியான ஒன்றாக எனக்குப்படவில்லை. ஏனெனில் இரண்டு பக்கதாலும் கொல்லப்படுவது சாதாரண அப்பாவி மக்களே. ஆகையால்தான் இரண்டு கொடிகளையும் சேர்த்து எழுதட்டோ எனக் கேட்டதற்கு எனது கருத்தை எழுதினேன். இஸ்ரேலினை ஆதரிக்க கூடாது எனக் கூறவுமில்லை, நன்னியில் மதிப்பும் குறையவில்லை. ஆனால் யூதர்கள் இனவழிப்பு கொடுமையை எதிர்கொண்டவர்கள் ஆனால் இன்னொரு இனம் அவர்களைப் போன்ற இனவழிப்பை எதிர்கொண்ட பொழுது மற்றையவர்கள் போல அமைதி காத்தார்கள் எனும் பொழுது அவர்களின் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்காக இந்த ஹமாஸ், தலீபான் போன்ற இஸ்லாமிய மதவெறிக்குழுக்களையும் ஆதரிக்கவில்லை. இவ்வளவுதான் இந்த விடயத்தில் எனது வட்டம். எல்லா விடயங்களிலும் வட்டத்தைவிட்டு சிந்திக்க முடியவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.
  18. நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று
  19. நீங்கள் எதற்காக இதனை சுட்டிக்காட்டினீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? இராணுவ வீரர் என்பதற்காக அந்தப் பெண்ணை இப்படி இழுத்துச் செல்வதும்.. கொன்ற பின் துப்புவது. பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பாவிப்பதை வீரமாக கருதும் யாருமே மனிததன்மையற்றவரகள். எங்களுக்கு நடந்த பொழுது யாருமே ஒன்று கூறவில்லை.. நியாயம் கிடைக்க இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காக இந்த மாதிரி மனித தன்மையற்று மிருகங்களை விட கேவலமாக நடக்குமளவிற்கு மதவெறி.. மதங்கள் போதிப்பதை தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்றெதல்லாம் கேலிக்கூத்து.
  20. இந்தக் கூற்று எத்தனை உண்மை.. யாருக்கும் உலக அழிவு பற்றிய அச்சம் 1%தன்னும் இல்லை.. வரலாற்று தவறுகளிலிருந்து பாடம் படிக்கவேண்டும் என்பதெல்லாம் எழுத்தில் மட்டும்தான் உள்ளது.
  21. “நானும் பெண்தான்.. “ ரவியின் கொடுமைகளிலிருந்து பிரிந்தாலும் ஊராரின் ஏளனப் பார்வையிலிருந்து தப்பிக்கவும், தாயிடமோ அல்லது சகோதரரிடமோ மனம் விட்டு பேசி எனது உணர்வுகளை விளங்கப்படுத்த முடியாலும், தயாளனின் கடந்த கால வாழ்க்கையினை அறிந்து ஏற்பட்ட அனுதாபத்தினாலும் எடுத்தது ஒரு முடிவு.. ஏனெனில் நானும் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் உடைய பெண்தான். மகனின் போக்கும்..பின் குற்றவுணர்வாலும் தயாளனிடம் கதைத்து முடிவு எடுக்கத் தெரியாத நிலையும் உரிய ஆலோசனையை பெற முறையான உதவியை நாடாமல் வாழ்க்கையை இழந்தது.. இந்த மாதிரி நிலை ஒரு ஆணுக்கும் வரலாம். உணர்வுகள் என்பது ஆண் பெண் இருவருக்குமே உள்ளது. பெண் என்பதற்காக தவறான முடிவுகளை எடுக்ககூடாது என எதிர்பார்க்க முடியுமா?? இல்லைத்தானே.. “நானும் பெண்தான்” என்ற தலைப்புடன் கதை வந்தால் கட்டாயம் பெண்ணில் அனுதாபத்தை வரவழைக்கும் கதையாக அல்லது பெண் என்பவள் எப்பொழுதும் தவறே செய்யக்கூடாது என்ற எண்ணத்தை தரும் கதையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது எனது எண்ணம். @மெசொபொத்தேமியா சுமேரியர்சுமோ அக்கா!! ஆகையால் நானும் பெண்தான் தலைப்பும் பிரச்சனையாக இல்லை.
  22. சொல்கிறேன் என குறை நினைக்கவேண்டாம்.. நீங்கள் இணைக்கும் செய்திகள் அனேகமாக ஆங்கில ஊடகங்களில் வரும் செய்திகளை மொழிபெயர்த்து இங்கே இணைக்கிறீர்கள்.. அதன் original sourceயும் இணைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.. இப்படித்தான் நீங்கள் இணைத்த “ இதுதான் கடவுள் செயலா” என்றதும். தேவையற்ற கருத்துகள் வருவதை தவிர்ப்பதற்காக மட்டுமே இதனை கூறுகிறேன்.. நேரம் ஒதுக்கி மொழிபெயர்த்து இணைக்கும் செய்திகளின் உண்மையான linkஐ இணைக்க அதிக நேரம் எடுக்காது என நினைக்கிறேன். நன்றி.
  23. நீங்கள் கூறுவது உண்மைதான்.. நாங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு இதைப்பற்றி கதைக்க முடியாது எனக் கூறுவோரும் உள்ளனர். ஆனால் நாங்கள் கூறுவது அவர்கள் அடிப்படைக் கல்வியையாவது ஒழுங்காக முடிக்கவேண்டும் என்பதுதான். என்னைப் பொறுத்தவரை மிகவும் கஷ்டமான போர் காலத்தில் கூட கல்வியில் ஈடுபாடு குறையவில்லை ஆனால் இன்று அவர்களுக்கு படிக்க வசதியிருந்தும் அதனை ஓழுங்காகப் பயன்படுத்தவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
  24. அப்படி என்றால் அவர்கள் homeschooling தான் அவர்களது பிள்ளைக்குச் செய்யவேண்டும்.. இதெல்லாம் பொதுவானது என்று இலகுவில் கடந்து போகும் விடயங்களாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறும் பொழுது சம்பவங்களில் தொடர்புள்ளோருக்கு தண்டனைகள் கிடைத்துத்தான் இருந்திருக்கும். ஆனால் எங்களது சமூகத்தின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் பொழுது இப்படியான செயல்களை இதெல்லாம் பொதுவானது என ஊக்குவிக்ககூடாது. அவ்வளவுதான்.
  25. உண்மையில் இந்த இரண்டு பந்திகளிலும் நீங்களே எழுதியிருக்கிறீர்கள் முகத்துக்கு நேரே கூறுவது தவறு என்று பின்பு ஏன் அதனை கதை சுவாரசியமாகப் போக வேண்டும் என்பதற்காக அப்படியான சொற்களை பயன்படுத்தவேண்டும்? அப்படியான சொற்கள் தவறு எனத் தெரிந்தால் முகத்துக்கு நேர கூறினாலும் சரி அவர்களைப் போகவிட்டு பின்னால் கூறினாலும் சரி, கதையில் எழுதினாலும் சரி, அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறுதானே?? உங்களது மகள்கள் இப்படிக்கூறுவதை ஏற்பார்களா? நான் நினைக்கவில்லை அவர்கள் இப்படியான அடையாளச் சொற்களை சரியான நினைப்பார்கள் என.. காப்பிலி என்றால் தலைமயிரை ஒழுங்காக சீவாமல் அலங்கோலமாக உள்ளவர்களை கூறும் சொல் .. இன்னமும் ஊரில உள்ளவர்கள் பயன்படுத்துகிறார்கள். இரண்டாவது காபிரீன்(நம்பிக்கையற்றவன்) விரிவுதான் காப்பிலி என்றால் நேரடியான வசவு சொல் இல்லாவிட்டாலும் விரும்பத்தக்க பண்பைக்கொண்ட சொல் இல்லை. இப்படி அந்த பிரச்சனைக்குரியது என்றால் தவிர்த்திருக்கலாம். இல்லை நீங்கள் தவறாக எதுவும் செய்யவில்லை என்றால் விமர்சனங்களை கடந்து போகவேண்டியதுதான்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.