Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by P.S.பிரபா

  1. இந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்காக அதிகாலை 5.30/6 மணி தொடக்கம் 7 மணி வரை இணைய வழி மூலமும் tuition வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த  மாணவர்கள் வேளைக்கு எழும்பி பாடசாலைக்கு போக ஆயத்தம் செய்தபின் இணையவழி வகுப்பில் கலந்து கொள்வார்கள்..

    இரவு பாடங்கள் முடித்து நேரம் பிந்தி படுக்கவும் வேண்டும். பிறகு இந்த இணையவழி வகுப்பிற்காக அதிகாலையில் எழும்பவும் வேண்டும்.  ஏன் இந்த போட்டியோ தெரியவில்லை. 

    மேற்குலகில் வாழும் எம்மவர்களும் இதற்குச் சளைத்தவர்களில் இல்லை.. பாடசாலைக்கு 80% கட்டாய வரவு இங்கே இருந்தாலும் கூட இங்கே உள்ள ஆண்டு 6ல் வரும் selective schools பரீட்சை நெருங்கும் சமயத்தில் இல்லாத வருத்தமெல்லாம் வந்து பாடசாலைகளுக்கு போகாமல் வீட்டில் இருந்து படிப்பார்கள்.

    • Like 1
  2. வக்கீல்.. சில விடயங்களை மட்டும் திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறார்? தேவையற்றது..சிலருக்கு இந்த விடயங்களை திரும்பத் திரும்ப கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி(sick mentality) .. 

    அந்த போலி வைத்தியர் தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை முதல் மனைவிக்கு வீடியோ கோலில் காட்டுவது.. ஒரு psycho .. வக்கிர புத்தி..

    இந்த லண்டன் பெண் அந்த போலி வைத்தியர் நம்பரை ஏன் இன்னமும் வைத்திருக்கவேண்டும்..விளங்கவே இல்லை.. 

    உண்மையில் சாட்டை துரைமுருகன் ஈழத் தமிழ்பெண்ணின் அக்கறையில் சொல்கிறாரா தெரியவில்லை.. விசியைப் பற்றி விமர்சிக்க இதுவும் ஒரு சான்ஸ்.

    போலிகள் ஜாக்கிரதை!!

    • Like 1
  3. இந்த திரியில் நான் எழுதிய ஒரு கருத்தைத் தொடர்ந்து, தேவையற்ற விதமாக கருத்துக்கள், எழுதப்படுவதால் இந்த திரியில் அதனை எழுதியதற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்.. 

    நன்னிக்கு அந்தக் கருத்தை நான் எழுதியதன் நோக்கம் வேறு.. ஆனால் தேவையற்ற விதமாக திரிக்கு சம்பந்தம் இல்லாமல் அதனை வைத்தும், அதன் தொடர்ச்சியகவும் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவதைப் பார்க்க ஏன் அதனை எழுதினேன் என்றுதான் நினைக்கிறேன். 

    பார்க்கப்போனால் இந்தப் போரில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் ஹமாஸும் சரி, தனது மக்களை காப்பாற்ற பதிலடி கொடுக்கிறேன் எனக் கூறிக்கொண்டு சாதாரண பாலஸ்தீன மக்களை மனிததன்மையற்று தாக்கும் இஸ்ரேலும் சரி. இரு தரப்பு செய்ததும் பிழை. 

    ஆனால் இதனை தடுக்காமல் ஊக்குவிப்பதில்தான் மற்றைய நாடுகள் செயல்படுகின்றன. இந்த தீவிரமத வாதக்குழுக்களை உருவாக்கும்/ஊக்குவிக்கும் நாடுகளுக்கு அப்பாவி மக்களும் பற்றி அக்கறையில்லை. அதே போல மற்றைய நாடுகளும் தங்களது நாட்டுநலன்களுக்கேற்ப கண்டும்காணாதது போல இருக்கின்றன. 

    என்னைப் பொறுத்த வரை இன்று இந்த  உக்ரோன் போர் தொடங்கி இந்த பாலஸ்தீன போர் வரை உலகில் நடந்த/நடந்துகொண்டிருக்கும் போர்களைப் பார்த்தால் மனித உயிர்கள் இரண்டாம் பட்சம். மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லை. 

    இவையெல்லாம் தெரிந்தும்,  தேவையற்ற விதமாக கருத்துகளை எழுதி மனஸ்தாபப்படவேண்டுமா? 

    • Like 3
  4. 5 hours ago, Eppothum Thamizhan said:

    பிரபா, நானும் நன்னியை எதோ ஒரு உயரத்தில் வைத்திருந்தேன்

     எமது மக்கள் தொடர்பான எண்ணங்களிலும் இந்த ஆவணத் தயாரிப்பிலும் ஈடுபடும் நன்னியின் மீதான எனது அபிப்பிராயம் மாறவில்லை அண்ணா!.

    நாங்கள் எல்லோரும் வேறுபட்ட சூழலில் வளர்ந்தவர்கள்.. எல்லோரும் எல்லாவிடயங்களிலும் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் எனக் கூறமுடியாது தானே. அதே போன்ற ஒன்றுதான் இந்த திரியில் நன்னியின் கேள்விக்கு எனது கருத்து.  

  5. 9 hours ago, Maruthankerny said:

    தயவு செய்து கருத்துக்களை வாசித்து அதற்கு பதில் எழுதுங்கள்

    நான் இந்த தலைப்பில் செய்திகளையும் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டு வருகிறேன். கொல்லப்பட்ட பெண்னைப் பற்றிய செய்திகளை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது திடீரென நீங்கள் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டுவிட்டு அவர் ஒரு இரானுவ வீரர் etc etc என எழுதியதைப் பார்த்துவிட்டுதான் உங்களிடம் கேட்டேன். ஏனெனில் அந்தப் பெண் இராணுவ வீரர் என்பதால் அந்தப் பெண்ணிற்கு நடந்தது சரியாகுமா? இல்லைத்தானே? யாருக்குமே அப்படி நடக்ககூடாது என்றுதான் நாங்கள் நினைப்போம் இல்லையா!. அவ்வளவுதான்.

     

    5 hours ago, goshan_che said:

    @நன்னிச் சோழன்

    சொந்த நிலத்தை மீட்கப்போராடும் யூதருக்கும் எமக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

    இவர்கள் இப்போ பலஸ்தீனம் என்று அழைப்பது….எமது மண்ணில் புத்தளம் மாவட்டம், பதவிக்குளம், கந்தளாய் போல ஒரு காலத்தில் யூதர்களின் பாரம்பரிய பூமியாக இருந்து பறிக்கப்பட்ட நிலங்களையே.

    அதே போல் எதிரிகளையும், நண்பர்களையும் நினைவில் வைத்திருப்பவர்கள் யூதர்கள்.

    உயர் மட்டத்தில் யூத-தமிழ் ஒன்றிணைப்பு ஏற்படுமாயின் நாம் பெரிய அனுகூலங்களை அடையலாம்.

    இதை நீங்கள் செய்வது grassroots மட்டத்தில் ஆரம்பிப்பதாக இருக்கலாம்.

    இந்த வகையில் உங்கள் சிந்தனை, அற்புதமானது. Strategic masterstroke.

    ஆனால் strategy யா? கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில்தான் ஈழத்தமிழர் இருக்கிறோம்.

    இப்படி நீங்கள் செய்வதற்கு பாரிய எதிர்ப்பு எம்மத்தியிலேயே இருக்கும்.

    இப்பவே உங்களை வெள்ளைகார-கைக்கூலி என எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

    உங்கள் யோசனை ஒரு புத்திசாலி இனக்கூட்டத்துக்குரியது.  எமக்கானது அல்ல.

     

     

     

    இந்த திரியில் நன்னியின் பதிவுகள், பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நடப்பது சரியென்ற தோற்றத்தை எனக்குள் உருவாக்கியது. அது சரியான ஒன்றாக எனக்குப்படவில்லை. ஏனெனில் இரண்டு பக்கதாலும் கொல்லப்படுவது சாதாரண அப்பாவி மக்களே. ஆகையால்தான் இரண்டு கொடிகளையும் சேர்த்து எழுதட்டோ எனக் கேட்டதற்கு எனது கருத்தை எழுதினேன்.  இஸ்ரேலினை ஆதரிக்க கூடாது எனக் கூறவுமில்லை, நன்னியில் மதிப்பும் குறையவில்லை. 

    ஆனால் யூதர்கள் இனவழிப்பு கொடுமையை எதிர்கொண்டவர்கள் ஆனால் இன்னொரு இனம் அவர்களைப் போன்ற இனவழிப்பை எதிர்கொண்ட பொழுது மற்றையவர்கள் போல அமைதி காத்தார்கள் எனும் பொழுது அவர்களின் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. 

    அதற்காக இந்த ஹமாஸ், தலீபான் போன்ற இஸ்லாமிய மதவெறிக்குழுக்களையும் ஆதரிக்கவில்லை. 

    இவ்வளவுதான் இந்த விடயத்தில் எனது வட்டம். எல்லா விடயங்களிலும் வட்டத்தைவிட்டு சிந்திக்க முடியவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். 

    • Like 1
  6. 1 hour ago, நன்னிச் சோழன் said:

     

    எங்கட கொடியையும் இஸ்ரேலின்ர கொடியையும் எடிட் பண்ணி கோரா & ரெட்டிட்ல போடட்டோ? 

    என்ன சொல்லுறியள் உறவுகளே?

     

     

    நன்னி!!

    இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா?

    இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். 
     

    போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. 

    இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று

    • Like 8
    • Thanks 2
  7. 21 minutes ago, Maruthankerny said:

    இவரை கொலை செய்தது சரியா ? தவறா ? என்பது எனது வாதம் இல்லை 
    இவர் சமாதான பாடகர் மட்டும் இல்லை இவர் இஸ்திரேலிய இராணுவ வீரர் என்பதைத்தான் சுட்டி காட்டினேன் 

    நீங்கள் எதற்காக இதனை சுட்டிக்காட்டினீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? 

     

    இராணுவ வீரர் என்பதற்காக அந்தப் பெண்ணை இப்படி இழுத்துச் செல்வதும்.. கொன்ற பின் துப்புவது. 

    பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பாவிப்பதை வீரமாக கருதும் யாருமே மனிததன்மையற்றவரகள்.

     

    எங்களுக்கு நடந்த பொழுது யாருமே ஒன்று கூறவில்லை.. நியாயம் கிடைக்க இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காக இந்த மாதிரி மனித தன்மையற்று மிருகங்களை விட கேவலமாக நடக்குமளவிற்கு மதவெறி.. 

    மதங்கள் போதிப்பதை தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்றெதல்லாம் கேலிக்கூத்து. 

    • Like 3
  8. On 2/10/2023 at 07:08, Justin said:

    சில ஆண்டுகளின் பின்னர் தனது பின்வாங்கும் முடிவைப் பற்றிக் கருத்துரைத்த குருசேவ் இப்படிச் சொல்கிறார்: "உலக அழிவு பற்றிய அச்சம் எங்கள் பின்வாங்கும் முடிவிற்கு முக்கியமான காரணம். இன்றைய உலகின் ஒரு குறைபாடு, யாரும் அழிவைப் பற்றி அச்சம் கொள்வதில்லை!".

    இந்தக் கூற்று எத்தனை உண்மை.. யாருக்கும் உலக அழிவு பற்றிய அச்சம் 1%தன்னும் இல்லை.. 

    வரலாற்று தவறுகளிலிருந்து பாடம் படிக்கவேண்டும் என்பதெல்லாம் எழுத்தில் மட்டும்தான் உள்ளது. 

     

  9. “நானும் பெண்தான்.. “

    ரவியின் கொடுமைகளிலிருந்து பிரிந்தாலும் ஊராரின் ஏளனப் பார்வையிலிருந்து தப்பிக்கவும், தாயிடமோ அல்லது சகோதரரிடமோ  மனம் விட்டு பேசி எனது உணர்வுகளை விளங்கப்படுத்த முடியாலும், தயாளனின் கடந்த கால வாழ்க்கையினை அறிந்து ஏற்பட்ட அனுதாபத்தினாலும் எடுத்தது ஒரு முடிவு.. ஏனெனில் நானும் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் உடைய பெண்தான். 

    மகனின் போக்கும்..பின் குற்றவுணர்வாலும் தயாளனிடம் கதைத்து முடிவு எடுக்கத் தெரியாத நிலையும் உரிய ஆலோசனையை பெற முறையான உதவியை நாடாமல் வாழ்க்கையை இழந்தது.. இந்த மாதிரி நிலை ஒரு ஆணுக்கும் வரலாம். 

    உணர்வுகள் என்பது ஆண் பெண் இருவருக்குமே உள்ளது. பெண் என்பதற்காக தவறான முடிவுகளை எடுக்ககூடாது என எதிர்பார்க்க முடியுமா?? இல்லைத்தானே.. 

    “நானும் பெண்தான்” என்ற தலைப்புடன் கதை வந்தால் கட்டாயம் பெண்ணில் அனுதாபத்தை வரவழைக்கும் கதையாக அல்லது பெண் என்பவள் எப்பொழுதும் தவறே செய்யக்கூடாது என்ற எண்ணத்தை தரும் கதையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது எனது எண்ணம்.

    @மெசொபொத்தேமியா சுமேரியர்சுமோ அக்கா!! ஆகையால் நானும் பெண்தான் தலைப்பும் பிரச்சனையாக இல்லை. 

  10. On 6/10/2023 at 08:00, Nathamuni said:

     

    அமெரிக்காவில், கடத்தப்பட்ட சிறுமி, 48 மணி நேரத்தில் மீட்பு.

     

    சொல்கிறேன் என குறை நினைக்கவேண்டாம்.. நீங்கள் இணைக்கும் செய்திகள் அனேகமாக ஆங்கில ஊடகங்களில் வரும் செய்திகளை மொழிபெயர்த்து இங்கே இணைக்கிறீர்கள்.. அதன் original sourceயும் இணைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்..

    இப்படித்தான் நீங்கள் இணைத்த “ இதுதான் கடவுள் செயலா” என்றதும். 

    தேவையற்ற கருத்துகள் வருவதை தவிர்ப்பதற்காக மட்டுமே இதனை கூறுகிறேன்.. 

    நேரம் ஒதுக்கி மொழிபெயர்த்து இணைக்கும் செய்திகளின் உண்மையான linkஐ இணைக்க அதிக நேரம் எடுக்காது என நினைக்கிறேன்.

    நன்றி. 

  11. 10 minutes ago, Justin said:

    அண்மையில் யாழ் அரசாங்க  அதிபர் சொன்ன "சட்டத்தை மதிக்காத சமுதாயம்" என்ற கருத்தோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

    சும்மா இருக்கும் இளையோரின் எண்ணிக்கை கூடி விட்டது. அப்படிச் சும்மா இருக்கும் இளையோருக்கு வேண்டியவை எல்லாம் பெற்றோர்/வெளிநாட்டு உறவுகள் மூலம் கிடைப்பதால், படிப்பு, தொழில் தகைமை தேவையில்லை என்ற நிலை பரவி விட்டது. இதனோடு, படிப்பு இல்லா விட்டாலும் வெளிநாடு இருக்கிறது போக என்ற மனநிலையும் பரவி விட்டது.

    இங்கேயே பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்: படிப்பு/கல்வி என்பது அடிப்படையில் ஒரு மனப்பயிற்சி. அதனோடு சேர்ந்து தொழில் தகைமை, சமூகப் பொறுப்பு என்பன perks ஆக வருகின்றன. ஆனால், படிப்பு என்பது சேர்டிபிகேட், மிச்சமெல்லாம் தேவையில்லாத ஆணி என்ற மனநிலை உருவாகி விட்டது.

    இது எல்லா இளையோரின் நிலையுமா என்றால், இல்லையென்பதே பதில். ஆனால், ஊரைக் கெடுக்க ஒரிரு றௌடிகள் போதும்! பத்து நல்ல இளையோரின் விளைவை  பூச்சியமாக்க இந்த றௌடிகள் ஓரிருவரால் முடியும்! 

    நீங்கள் கூறுவது உண்மைதான்.. 

    நாங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு இதைப்பற்றி கதைக்க முடியாது எனக் கூறுவோரும் உள்ளனர். ஆனால் நாங்கள் கூறுவது அவர்கள் அடிப்படைக் கல்வியையாவது ஒழுங்காக முடிக்கவேண்டும் என்பதுதான். என்னைப் பொறுத்தவரை மிகவும் கஷ்டமான போர் காலத்தில் கூட கல்வியில் ஈடுபாடு குறையவில்லை ஆனால் இன்று அவர்களுக்கு படிக்க வசதியிருந்தும் அதனை ஓழுங்காகப் பயன்படுத்தவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 

     

  12. 34 minutes ago, Nathamuni said:

    ஆக, இந்த குடும்பம், தமது பிள்ளையை யாரும் கண்டிக்க கூடாது என்ற நிலைப்பாடு கொண்டோராயும் இருக்கலாம்.

    அப்படி என்றால் அவர்கள் homeschooling தான் அவர்களது பிள்ளைக்குச் செய்யவேண்டும்..

     

    35 minutes ago, Nathamuni said:

    ஸ்ரேசனில் ரிக்கற் எடுக்கும் லைனில் நின்றவர், வேறு கவுண்டர் போகலாம் என்று திரும்ப பின்னால் நின்ற கறுப்பரின் (கறுவ* எண்டால் கோவிக்க ஆளிருக்கு) மகனின் காலை தவறுதலாக மிதிக்க, சிறுவன் வலியில் துடிக்க, மகனை அங்கேயே விட்டுவிட்டு, சாரி சொல்லி போனவர் பின்னால் போய் தலையில் ஒரு குத்து. கீழே விழுந்து தலை அடிபட்டு ஆள் அவுட். இன்னுமொரு குடும்பத்துக்கு தந்தை இல்லை. இவரது மகனுக்கு தந்தை கொலை செய்து உள்ளே!! 🥹

    விளையாட்டுப் போட்டிகளில் தமது பிள்ளையை முந்தும் சக மாணவனின் பெற்றோரை தாக்குவது பொதுவானது.

    இதெல்லாம் பொதுவானது என்று இலகுவில் கடந்து போகும் விடயங்களாக எனக்குத் தெரியவில்லை. 

    மேலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறும் பொழுது சம்பவங்களில் தொடர்புள்ளோருக்கு தண்டனைகள் கிடைத்துத்தான் இருந்திருக்கும். 

    ஆனால் எங்களது சமூகத்தின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் பொழுது இப்படியான செயல்களை இதெல்லாம் பொதுவானது என ஊக்குவிக்ககூடாது. அவ்வளவுதான். 

  13. On 5/10/2023 at 05:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    அந்த இனத்தவரின் முகத்துக்கு நேரில் அல்லது அவர்கள் காதில் படும்படி நாம் அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. 

     

    On 5/10/2023 at 18:59, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    எம்மவர்கள் வாக்குக்கண், பல் மிதப்பு என்றும் வெள்ளைச்சி என்றும் பயன்படுத்துவதுதானே ??? அச்சொற்களை அந்த நபர்களுக்கு முண் அல்லது அவர்கள் காதுபடக் கூறுவதுதான் தவறு.

    உண்மையில் இந்த இரண்டு பந்திகளிலும் நீங்களே எழுதியிருக்கிறீர்கள் முகத்துக்கு நேரே கூறுவது தவறு என்று பின்பு ஏன் அதனை கதை சுவாரசியமாகப் போக வேண்டும் என்பதற்காக அப்படியான சொற்களை பயன்படுத்தவேண்டும்? 

    அப்படியான சொற்கள் தவறு எனத் தெரிந்தால் முகத்துக்கு நேர கூறினாலும் சரி அவர்களைப் போகவிட்டு பின்னால் கூறினாலும் சரி, கதையில் எழுதினாலும் சரி, அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறுதானே??

    உங்களது மகள்கள் இப்படிக்கூறுவதை ஏற்பார்களா? நான் நினைக்கவில்லை அவர்கள் இப்படியான அடையாளச் சொற்களை சரியான நினைப்பார்கள் என.. 

    காப்பிலி என்றால் தலைமயிரை ஒழுங்காக சீவாமல் அலங்கோலமாக உள்ளவர்களை கூறும் சொல் .. இன்னமும் ஊரில உள்ளவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

    இரண்டாவது காபிரீன்(நம்பிக்கையற்றவன்) விரிவுதான் காப்பிலி என்றால் நேரடியான வசவு சொல் இல்லாவிட்டாலும் விரும்பத்தக்க பண்பைக்கொண்ட சொல் இல்லை. 

    இப்படி அந்த பிரச்சனைக்குரியது என்றால் தவிர்த்திருக்கலாம். 

    இல்லை நீங்கள் தவறாக எதுவும்   செய்யவில்லை என்றால் விமர்சனங்களை கடந்து போகவேண்டியதுதான்..

  14. 4 hours ago, Nathamuni said:

    விளங்க எதுவுமில்லை.

    கல்வியின் அருமை புரிந்த பெற்றோரே பிள்ளைகளுக்கு கடத்துவர்.

    இது அருமை புரியாத, பிள்ளையின் எதிர்காலத்தையே நாசமறுக்கும் குடும்பம். 

     

    எங்களது சமூகத்தில் இந்த மாதிரி விடயங்களை முன்பு கேட்டதில்லை. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கும் ஆசிரியரில் ஒரு வித மரியாதை கலந்த பயம் இருக்கும். 

    ஆனால் இப்பொழுது இந்த மாதிரி சம்பவங்களை அதிகம் கேள்விப்படலாம்.. அதனால்தான் ஏன் இந்தப் பெற்றோர்கள் இப்படி நடக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

    தனியே அக்கறையில்லாத பெற்றோர் என கூறிவிடமுடியாது..கல்விக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்றால் சமூகமாக இதற்கான காரணங்களை கண்டு சரி செய்தல் அவசியம். 

     

     

     

  15. குல்லி மட்டா அழகாகத்தான் உள்ளது.. ஆனால் யார் இந்த Saad என தேடிப் பார்த்தால்  அவர் மேல் பதியப்பட்ட பலாத்கார வழக்குகள்தான் அவரது பாடலைவிட அதிகம் பேசப்படுகிறது.. 

     

  16. Dr ஜெயமோகன் இயக்கதில்  “பொய்மான்” திரைப்படத்தை அடுத்து 3ம் திகதி கார்த்திகை மாதம் திரைக்கு வருகிறது “ யாதும் யாவரும்” 

    அந்தப் படத்தில் வரப் போகும் ஒரு பாடலையும் இணைத்துள்ளேன்.. இனிமையானதும் அர்த்தமுள்ளதுமான பாடல் படத்தைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது எனலாம். 

    ef722264-eb2e-426c-bb24-ae38071d2d2f.jpg
     

     

    • Like 1
  17. On 29/9/2023 at 07:45, குமாரசாமி said:

    உப்படியான   சிந்தனைகளை  எமது தாய் தந்தையர் உட்பட முன்னோர்களும்  கடைப்பிடித்திருந்தால் எம் இனம் உறவுகள் எல்லாமே அழிந்திருக்கும்.

    எமது நாட்டில் கலவரங்கள் இல்லாதிருந்து எம் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை அனுபவிக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ஏனைய அமைதியான நாடுகளில் வாழும் பரம்பரை சொத்துக்களை பாட்டன் பூட்டன் பேரன் என அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். கலவரத்திற்கு முன் எம் இனத்திலும் இருந்தது.

    மனிதன் மூன்னோக்கி சிந்தித்த படியால் தான் நாடுகள் முன்னேறியுள்ளன.

     

    எங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த விதம் வேறு இப்பொழுது வேறு என்றுதான் நான் நினைக்கிறேன். சொத்து சேர்ப்பது தொடங்கி வாழ்க்கை முறை கூட வித்தியாசம். அவர்கள் வரையில் அது சரியாக இருந்து ஆனால் இப்பொழுது அப்படியில்லை. 

    தாராளமாக ஓடி ஓடி உழைக்கலாம் ஆனால் தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் அல்லது பிள்ளைக்கோ,  வாழ்க்கை துணைக்கோ அல்லது உடன்பிறந்தவர்களுக்கோ தேவைப்படும் நேரத்தில் அங்கே இல்லாமல் ஓடி ஓடி உழைத்து சொத்தை சேர்த்தும் ஒரு பயனில்லை. 

    எமது முன்னோர்கள் சேர்த்தை வைத்து நாம் உழைக்காமல் இருக்கவேண்டும் எனக் கூறவில்லை. 

    வாழ்க்கை, வேலை, இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவ்வளவுதான். 

    On 29/9/2023 at 08:27, Nathamuni said:

    நிறைவான வாழ்வு வாழ்ந்தவனை சமூகம் காலாகாலத்துக்கும் போற்றும். 

    நிறைவான வாழ்க்கை என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடும். உங்களுக்கு ஓடி ஓடி சொத்து சேர்ப்பது நிறைவானது என்றால் மற்றையவர்களுக்கு வேறாக இருக்கலாம். 

    மற்றவர்கள் போற்றவேண்டும் என நினைத்தால் மற்றவர்களுக்காகவே வாழவும் வேண்டிய நிலை வரலாம். 

     

    • Like 2
  18. 8 minutes ago, நிழலி said:

    பலருக்கு ஒன்று புரிவதில்லை.

    இன்று நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து திரட்டும் செல்வத்தை இன்னும் 60 ஆண்டுகளில் அனுபவிக்கின்றவர்களுக்கு எம் பெயர் கூட தெரிந்து இருக்காது என்று.

    நான் இன்று மோர்ட்கேஜ் கட்டி சொந்தமாக்கும் வீட்டில் 60 வருடங்களின் பின் அனுபவிக்கும் தலைமுறைக்கு என்னை யார் என்றே நினைவில் இருக்காது.

    வீட்டின் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு பழைய digital storage media வில் வெறும் binary வடிவில் photo வாகவோ video வாகவோ உறைந்து கிடப்போம்.

    உண்மை

    • Sad 1
  19. 17 hours ago, Maruthankerny said:

    காஜல் அகர்வால் கணவர்போல 
     

    IMG-0823.gif

    On 28/9/2023 at 02:52, விசுகு said:

    அண்மையில் விடுமுறையில் சென்றிருந்தபோது என் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டு இருந்தபோது எனது சின்னமகன் ஒரு கேள்வி கேட்டான். 

    ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தால் யார் வாழ்வை தெரிவு செய்வீர்கள் என்று. ?

    உங்கள் பதில் என்ன?

    ஒரு திரி இது சம்பந்தமாக பேசுவதால் இதை இங்கே பதிகிறேன்.

    ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தாலும் அது பயனில்லாத ஒன்று.. ஏனெனில் அடுத்த நாள் பழைய நிலைக்கு வந்துவிடவேண்டும்.. ஆகவே என்னைப் போல இருக்க நினைப்பேன். 

    • Like 1
    • Thanks 1
  20. On 28/9/2023 at 02:46, விசுகு said:

    படிப்பு மற்றும் பணம் இரண்டுக்கும் எல்லை இல்லை. போதும் என்று ஒரு இடத்தில் நிறுத்த முடிந்தவன் மட்டுமே வாழ்க்கையை வாழ்வான். ஏனையோர் ஓடி ஓடி......?

    மரணிக்கப் போகும் அந்த வினாடியில் ஓடி ஓடி நான் எதை சாதித்தேன்/அனுபவித்தேன் ஒன்றுமே இல்லை என ஏங்கியபடி மரணமடைவார்கள். அவ்வளவுதான். 

     

    • Thanks 1
  21. துவராகா, அவரது வரவைப் பற்றி ஒரு பாடலுடன் அவர் ஊருக்குள் போய் மக்களின் குறைகளை கேட்பதாக காட்டும் வீடியோ ஒன்று உலாவுகிறது. அதைப் பார்த்தவுடன் நினைவிற்கு வந்தது இந்த மாதிரி மக்களை ஏமாற்றவும், கேலிக் கூத்து செய்யும் அளவிற்கு தமிழர்கள் தாழ்ந்துவிட்டனரா? 

    இருக்கிறார்கள் அல்லது இல்லை என்பதை விட  அவர்களுக்கான மரியாதையாவது கொடுக்க வேண்டும் என யோசிக்கும் திறன் அற்றவர்களாக மாறிக்கொண்டு போகிறோமா? 

    • Like 1
    • Thanks 1
  22. உண்மையில் டீச்சர் தான் செய்ததை நினைத்துக் கவலைப்படவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் தான் செய்த செயலால் அந்த ஊரில் தனியாக வாழும் மனத் தைரியம் இருந்திருக்காது என்பதையும்தான் இந்தக் கதை கூறுகிறது. 

    பல பொய் சொல்லி நம்பவைப்பதைவிட உண்மையை கூறி (ஊர் ஒதுக்கினாலும்) வாழ்வதும் சிறந்ததுதான். 

     

  23. On 24/9/2023 at 21:40, தமிழ் சிறி said:

    இவ்வாறு ஏற்கனவே நிலம் சிறுத்தை கொண்டுவரும் ஒரு பின்னணியில், சனத்தொகையும் சிறுத்துக்கொண்டே போனால் என்ன நடக்கும்? தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாக தங்களுக்குரிய அரசியல் இலக்குகளை முன்வைத்துப் போராடும் வலிமையை இழந்து விடுவார்கள் அல்லவா? இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அரசியல்வாதிகள்,கட்சிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இப்பொழுதே குரல் கொடுக்க தொடங்க வேண்டும்

    நான் வெளிநாட்டில் இருந்துகொண்டு எனது உறவுகளை வெளிநாட்டிற்கு வராதே என என்னால் கூறமுடியாது. ஆனால் முன்பைப் போல சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு வரமுடியாது என்றதை விளங்கப்படுத்துவேன், இங்கே உள்ள பிரச்சனைகளையும் கூறலாம். அதற்கு மேல் என்னால் அவர்களை தடுக்கமுடியாது. 

    அதே போல அங்கே முதலீடு செய்து, தொழில்வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்றால் அங்கே உள்ளவர்களுடன் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அனுசரித்துப் போகவேண்டும். அது எனது கொள்கைகளுக்கு சரிவராது என்பதை கடந்த சில தடவைப் பயணங்களில் நடந்த எனது தனிப்பட்ட அனுபவங்களை வைத்து உணர்ந்து கொண்டேன். ஆகையால் எல்லாவற்றையும் எல்லோரையும் அனுசரித்துப் போகக்கூடியவர்கள் அங்கே முதலிடலாம். அங்கே உள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தாலும் அதனை வழிநடத்தவோ, மேம்படுத்தவோ ஆர்வமில்லை. அதனைப் பற்றி கதைப்பதையும் விரும்புகிறார்கள் இல்லை. 

    இந்தப் புலப்பெயர்ச்சி தடுக்கவேண்டுமானால் அங்கே உள்ளவர்களின் மனநிலை மாறவேண்டும். ஆனால் அதற்கு ஏற்றவாறு சூழலை அமைத்துத் தரக்கூடியவர்கள் அங்கே இல்லை. 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.