-
Posts
383 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by பசுவூர்க்கோபி
-
பேரன்போடு நன்றிகள் தோழர்.
-
டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!
பசுவூர்க்கோபி replied to கிருபன்'s topic in வண்ணத் திரை
மனித நேயமிக்க நல்ல மனிதர். சரஸ்வதித்தாயே அவர்நாக்கில் நின்று நடனமாடும் தமிழ் பேச்சாளர்.ஈழத்துக்கும்,தமிழுக்கும் அவர் பெரும் சொத்து. நல் ஆரோக்கியத்துடன் மீண்டுவந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். -
இருள் மூடிய இலங்கை! ***************** இந்துமா கடலின் முத்து இயற்கையின் அழகின் சொத்து ஆட்சியர் உன்னை வித்து-இப்போ அனைவற்கும் பிடித்தது பித்து. கடல் மீது அழகாய் மிதந்தாய்-இப்போ கடன் மீது மிதக்குகின்றாய். உடல்க்கூறு வெட்டி வித்தார்-உன் உயிருக்கே கொள்ளிவைத்தார். பட்டிணியை சொத்தாய் வாங்கி பாரெல்லாம் நீ கையை ஏந்த நிற்கதியாய் விட்டபின்னும் நிற்கல்லையா? அவர்க்கு கதிரையாசை. -பசுவூர்க்கோபி.
-
தம்பரும், சுப்பரும்! **************** தம்பர்.. மக்கள் விரும்பியே மன்னனைத் தெரிந்தும்-பின் மாபெரும் போருக்கேன் வந்தனர். சுப்பர்.. மக்களை மறந்துமே மந்திரி சபைக்குத்தான் மாபெரும் சலுகைகள் செய்ததால். தம்பர்.. சிங்கள மக்களே சீறும் சிங்கமாய் சினம் கொண்டு வீதிக்கேன் வந்தனர். சுப்பர்.. பங்களா கட்டியே வாழும் தலைவர்கள் வறுமைக்குள் மக்களை விட்டதால். தம்பர்.. போரை வெண்றவர் புதுமைகள் செய்தவர் போற்றிய மக்களேன் வெறுத்தனர். சுப்பர்.. போரை சொல்லியே இனத்தை பிரிக்கின்ற பொய்கள் அவர்கட்கு தெரிந்ததால். தம்பர்.. விமானத்தளம், வீதிகள்,விளக்குகள் விரும்பி தந்தோரை ஏன் வெறுத்தனர். சுப்பர்.. துண்டு துண்டாக்கி நாட்டை விற்றுமே- எம்மை சோறுக்கு அலைய விட்டதால். பிச்சையெடுத்து எம் நாடு வாழ்வதா இது பெரும் துன்பமில்லையா தம்பர். வேலியே பயிரை மேய்வதென்பது இங்கு வேடிக்கையில்லையா சுப்பர். மக்கள் நலனையே தன்னலமாக்கும்-அரச மந்திரி சபை அமைக்கனும் தம்பர். இல்லையேல் இந்துமா கடலில் இலங்கையின் பெயர்மாற்றி எவனோ ஆழுவான் சுப்பர். அன்புடன் -பசுவூர்க்கோபி.
- 1 reply
-
- 2
-
-
-
நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை!
பசுவூர்க்கோபி replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
நன்றிகள் சுவி அண்ண்ணா நன்றி அக்கா -
நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை! *********************************** ஆதிகால மனிதனென காட்டுக்குள் அலைந்தோம் அதன் பின் ஆரம்ப மனிதராய் நாட்டுக்குள் வந்தோம் மற்றைய உயிரினத்திலிருந்து மாறுபட வைத்த -அந்த ஆறாம் அறிவு எம் கல்விக்கென்றே கிடைத்தது. கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில் பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை ஆளுமை கொண்ட ஒரு சமுதாயம் நிமிர-நல்ல ஆரம்பக் கல்வியில் அத்திவாரமிடுவோம். சொல்லில் அடங்காத ஆசிரியத் தொண்டும் சுறுசுறுப்பாய் கற்கின்ற மாணவர்கள் பங்கும் எல்லைகள் கடந்தே நல்லதைச்செய்யும்-இல்லையேல் தொல்லைகள் நிறைந்த சமுதாயமாகும். வேலைக்கு மட்டும் படிக்கின்ற பாடங்கள்-பின்பு வேதனை தந்து வீதிக்கும் வரலாம். வேலை இருக்கென படிக்கின்ற தொழிற்க் கல்வி வீட்டையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்தலாம். காற்றுள்ள போதே தூற்றுவாய் நெல்லை-அதேபோல் காலம் இருக்கையில் கல்வியைத் தேடு பாலை வனம்கூட சோலைவனமாகும்-இல்லையேல் படுக்கின்ற பாய்கூட வெறுப்பாவே பார்க்கும். பட்டங்கள் பெற்று நீ உயர்ந்து போனாலும்-கீழே பார்க்க மறக்காதே? உன்கால்கள் நிற்பதை அப்பா,அம்மா, ஆசிரியர் தோள்களில்.. அவர்களின் மகிழ்வே உன் உயரத்தின் எல்லை. ஆசிரியப் பணியை போற்றுவோம் உலகில் அவர்கள் இல்லையேல் அகிலமே இருளில் காலா காலமும் புது,புது கல்வியைக் கற்று காசினி உயர பல கடமைகள் செய்வோம். -பசுவூர்க்கோபி.
-
அன்று போல் என்தீவு வேண்டும்!
பசுவூர்க்கோபி replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
நன்றி நிலாமதி அக்கா -
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. பல ஆண்டுகள் நான் நாட்டை விட்டு புலம்பெயர்து வாழ்ந்தாலும் இன்றும் என்னுக்குள் அன்றைய எனது ஊரின் நினைவுகள்தான் இனிமை தருகிறது. இதேபோல் உங்கள் ஊர்களையும் நினைத்துப் பார்க்க இந்த சிறு கவிதை உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. அன்றுபோல் என் தீவு வேண்டும் ************************ அம்மாவின் அன்பு வேண்டும் அப்பாவின் கருணை வேண்டும் பனை தென்னை உணவு வேண்டும் பாசத்தின் உறவு வேண்டும் பனம் பாளைக் கள்ளு வேண்டும்-ஓலை பாய்தன்னில் உறங்க வேண்டும் கூள் காச்சிக் குடிக்க வேண்டும் கொண்டாடி மகிழவேண்டும். உரல் இடித்து சம்பல் வேண்டும் ஒடியல் பிட்டு கலந்து வேண்டும் மண்சட்டி சமையல் வேண்டும்-அந்த மகிழ்வான பொழுது வேண்டும். வெடி கொளுத்தும் பொங்கல் வேண்டும் கிறிஸ்மஸ் தாத்தா.. வீட்டுக்கு வரவும் வேண்டும் அயலவர்கள் கூட வேண்டும்-பழய அன்பு மழை பொழிய வேண்டும் வெளிநாட்டில் வாழும் போதும்-ஊர் விட்டு வந்த நினைவே தோன்றும் அழகான என்னூர் போல-இந்த அகிலத்தில் நான் கண்டதில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
நன்றிகள் அக்கா நன்றிகள் சுவி அண்ணா.
-
உனக்குமட்டுமா?உலகம். ********************** எமக்கு கிடைத்தது ஒரு பூமி-இங்கு பிறப்போர் அனைவற்க்கும் சமநீதி பிறப்பும்,இறப்பும் எம்மிடமில்லை-நீ பெரியவன் என்பது யாருக்குத் தெரியும். உலகில் பிறந்தது எத்தனைகோடி-எனி உலகுக்கு வருவது எத்தனை கோடி உலகு எனக்கு கீழென நினைத்தவன் ஒருவன் கூட உயிரோடு இல்லை தெரிந்தும்,தெரிந்தும் செய்யும் பிழைகளை தேசம் ஒருபோதும் வாழ்த்துவதில்லை. வாழும் போது பணக்காரன்,ஏழை வாழ்வு முடிவில் பெட்டிக்குள் சமமே காலையும் மாலையும் சூரிய,சந்திரன் காணாமல் போனால் உன்னிலை என்ன வாழும் வயசோ நூறாண்டு காலம் வையகம் உனதென போர்கள் செய்கிறாய். காலைச் சூரியன் உதிக்காவிட்டால் கறண்டால் வெளிச்சம் கொடுக்கவா முடியும். அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை நெஞ்சக் கறள்களை நீக்கியெறிவோம் நின்மதியான நல் வாழ்வினைப் பெறுவோம். -பசுவூர்க்கோபி.
-
எங்கே போகிறது எம்திருநாடு!
பசுவூர்க்கோபி replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
உண்மைதான். நன்றிகள் சுவி அண்ணா. வினைவிதைத்தவன் வினை அறுப்பான் நீங்கல் சொல்வது உண்மையே. நன்றிகள் புங்கையூரன் அவர்களே. -
ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோட முயல்கின்றனரா?
பசுவூர்க்கோபி replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
வினை விதைத்தவன் வினையறுப்பான்..... -
எங்கே போகிறது எம்திருநாடு!
பசுவூர்க்கோபி replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
மகிழ்வோடு நன்றிகள் தோழர் நடத்தினால் நாஷம்தான் பொறுத்திருந்து பார்ப்போம் மகிழ்வோடு நன்றிகள் alvayan -
எங்கே போகிறது எம்திருநாடு! ************************* அழகிய இலங்கை ஆக்கிரமிப்புகள் இருந்தாலும்-மக்கள் ஒருகாலமும் உணவுக்கு கையேந்தியதாய் வரலாறு இருந்ததில்லை. இடையில்.. உண்னமுடியாத வாழைக்கிழங்கையும் உணவாய்யுண்டு தேங்காயோடு தேனீர் குடித்தோம். பாணுகாக கியூவில் பட்டினி கிடந்தோம்-என சிறிமாவின் காலமும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிப் போச்சு. ஆனால் இன்றோ அதைவிடவும் கொடுமை பார்க்குமிடமெல்லாம் கியூ பாணுக்கும், பல்பொருளுக்கும் பால்குடிகளின் பால்மாவுக்கும் சமையல்எரி வாயுவுக்கும் சாம்பாறு மரக்கறிகட்கும் மண்ணெண்ணை பெற்றோள் மாவு அரிசி யாவுக்குமே! மக்கள் படும் பாடு சொல்லிலடங்காது. விடிவை நினைக்கவே பயமாக இருகிறது எழுந்தவுடன் அம்மா பசிக்குது என அழும் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து அழத்தான் முடிகிறது-என அன்றாடம் உழைக்கின்ற தாய் தந்தைகள். விலைவாசி என்னும் மலையை மக்கள் தலையில் வைத்து தூக்கி நடவென சொல்லுகிறது அரசு. பட்டினியாலும்- மின் வெட்டாலும் சமநிலை படுத்தப்படிருக்கும் ஒரேநாடு ஒரேகொள்கை கோனுயர குடியுயரும்-என வாக்களித்த.. யுத்தம் தெரியாத சகோதர இன மக்களும் கோனையுயர்த்திவிட்டு அவர்கள்போடும் பொருளாதார-பசி பட்டினிகுண்டுகளுக்கு பலியாகும் நிலையில் இன்றோ வீதியில். எனியாவது அரசு போர்வெற்றியை விடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புமா? அல்லது கைமாறிக் கொடுக்குமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். -பசுவூர்க்கோபி.
-
இயற்கையுணவே!எமக்கு வலிமை!
பசுவூர்க்கோபி replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
உலகம் தமக்கானதே என எண்னிக்கொண்டிருக்கும் பண முதளைகள் செய்யும் செயல் என்றுதான் நினக்கின்றேன்.நன்றிகள் கிருபன் அண்னா. நாடு போகும் போக்கில் அதை உணவாக பயன்படுத்த்துவார்களென நினைக்கின்றேன் உளமார்ந்த நன்றிகள் ஈழப்பிரியன் ஐயா -
கொரோனாக்கே சிரிப்பாய் கிடக்கு-பா.உதயன்
பசுவூர்க்கோபி replied to uthayakumar's topic in கவிதைப் பூங்காடு
அருமையான கவி வரிகள்.வாழ்த்துக்கள் பா.உ அவர்களே! நாடுகளில் போர் குறைந்த போது கொரோனாவை விட்டார்கள் கொரோனா குறைய போரைத்துவங்கி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறதது. -
இயற்கையுணவே!எமக்கு வலிமை!
பசுவூர்க்கோபி replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
உளமார்ந்த நன்றிகள் சுவி அண்ணா. -
இயற்கையுணவே! எமக்கு வலிமை! ************************ கோர்லிக்ஸ்,வீவா, நெஸ்ரோமோல்ட் மைலோ.. இனும் பல.. இத்தியாதி,இத்தியாதி ஆரோக்கிய வாழ்வுக்கு அனைத்துச் சத்தும் நிறைந்ததென்று விளம்பரங்கள் செய்து விற்று பணமள்ளும் வெளிநாட்டு கம்பனிகளே! இதுகளை.. வந்தகொரோனாவுக்கு வாங்கிக்குடியென்று எந்த (சுகாதார) அமைப்பும் இதுவரையும் சொன்னதுண்டா! இஞ்சி,மஞ்சல் மிளகு,சீரகம் உள்ளி,கராம்பென்று இயற்கை உணவுகளே-எம் உடலைக்காக்குமென.. சித்தர்கள் சொன்னதுதான் இன்றும் சிறப்பென்று அறிந்தபின்னும். இதுபோன்ற.. போலிகளை புறம் தள்ளி நல் வாழ்வுதனை-நாம் அமைப்போம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
நன்றி சுவி அண்ணா