Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1000
  • Joined

  • Days Won

    2

பாலபத்ர ஓணாண்டி last won the day on January 10 2022

பாலபத்ர ஓணாண்டி had the most liked content!

2 Followers

Recent Profile Visitors

4073 profile views

பாலபத்ர ஓணாண்டி's Achievements

Mentor

Mentor (12/14)

  • Posting Machine Rare
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • First Post

Recent Badges

675

Reputation

  1. எழுத்தறிவித்தவன் இறைவன்.. நான் கதை கவிதை கட்டுரை எழுதிப்பழகியது ஊக்கம்தந்தது இந்த யாழ்தான்.. அது ஒரு பொற்காலம் எனக்கு.. அந்த இனிய நினைவுகளைத்தந்த யாழ் இன்னும் பல்லாண்டுகாலம் நீண்டு நிலைக்கவேண்டும்.. நான் பென்சன் எடுக்கும் காலத்தில் வாழ்வின் அஸ்த்தமகாலத்தில் வரப்போகும் தனிமையையும் மரணம் குறித்த பயத்தையும் போக்க இங்கு எழுதி உறவாடி கிடக்க இந்த யாழ் நீண்டு நிலைக்கவேண்டும் என்று சுயநலத்துடன் வாழ்த்துகிறேன்.. கவிஞர் பொயட் சொன்னதுபோல் சாகிறவரைக்கும் வாழுற வயசாகட்டும் நம் யாழுக்கு..
  2. வெளிநாடெல்லாம் சென்று சம்பாதித்து - பணபலத்தை வைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து - குழந்தைக்கு தகப்பனாகி - சம்பாத்தியம் நோக்கி ஓடி - மனைவி வேறோர் உறவுக்கு செலகிறாள் - விவகாரத்து - ஜீவனாம்சம் - என்கிற பெயரில் கனவனின் சம்பாத்தியம் சுரண்டப்படுகிறது - சரி, தவறு என்பதற்கப்பால் திருமணம் என்கிற தோற்றுப்போன அமைப்பை நோக்கி ஆண் வர்க்கம் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் குறை சொல்வதனால் எந்த பயனும் இல்லை. ஒருவேளை திருமணம் செய்துகொண்டால், வரதட்சணை வாங்காமல் - எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டு - எதிர்காலத்தில் இந்த உறவு சலித்து வேறோர் உறவுக்கு செல்வதென்றால் ஜீவனாம்சம் என்கிற பெயரில் சம்பாத்தியத்தை சுரண்டாமல் நேர்மையாக பிரிய வேண்டுமென கையெழுத்து ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வாழ வேண்டும். எப்படியும் இன்னொருத்தியை/இன்னொருத்தனை வைத்துக்கொள்வார்கள் என அப்பட்டமாக தெரிந்தும் திருமணம் செய்துகொள்வது நல்லதற்கல்ல. சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு, வலுவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் சேமித்துக்கொண்டு ஜாலியாக வாழ்வதுதான் சரி... - Rama Lingam பதிவுத் திருமணம் செய்வது ஆணுக்கு ஆபத்தானது என்பதைத் தவிர ராமலிங்கம் சொல்லும் வேறு கருத்துக்களை ஏற்கிறேன். முதலில் குடும்பநல சட்டம் துவங்கி பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு சட்டம், 498A ஆகியவை ஒழிய வேண்டும் அல்லது பாலின சமத்துவம் கொண்டவையாக மாற வேண்டும். கூடுதலாக, மனைவி கணவனை அடித்தாலோ மனதளவில் துன்புறுத்தினாலோ வழக்குத் தொடுக்க ஒரு சட்டம் வர வேண்டும். வலுவான ஆதாரம் இல்லாமல் வரதட்சிணை தடுப்பு சட்டத்தில் குற்றத்தை பதிவு பண்ணுவதைத் தடுக்கும் சட்டத்திருத்தம் வர வேண்டும். இந்த திருமண சட்டம் வரும் முன்பு நம் உலகம் (ஆண்களின் உலகமே) எவ்வளவோ நியாயமாக அழகாக இருந்தது. இந்த நேரு குடும்பத்தினர் வந்து அதை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டனர்! அதன் பலனையே பய்ஜூ போன்று பலரும் அனுபவித்துள்ளார்கள்! - ஆர். அபிலாஷ்
  3. நானும் இண்டைக்குதான் பாத்தன்.. கடுப்பா இருக்கு.. விமர்சனங்கள பாத்து ஓவரா நம்பி போய் பாத்தன்.. ஒன்னும் இல்லை.. இதைவிட எத்தினையோ நல்ல படங்கள் வந்திருக்கு.,
  4. —————//—— இதுவொரு தற்காலிகமான நிலைமை. இலங்கையின் நிலைமைகள் வழமையான நிலைக்கு திரும்புகின்ற போது, சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உலக வங்கியினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது, ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இந்த பணம் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளது." என அவர் தெரிவிக்கின்றார். இந்த காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் பட்சத்தில், இன்று காணப்படுகின்ற நிலைமையையே தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சாத்தியம்உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர்எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார். ________//_____ சர்வதேச நாணய நிதியம் கடன்வழங்குவதற்கான எல்லா வழிகளும் திறந்துவிட்டன என்று இலங்கை அறிவித்துள்ளது.. சீனாவும் இந்தியாவும் அதற்கு பச்சை கொடிகாட்டிவிட்டன.. இன்னும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி வந்து சேர உள்ளது.. அநேகமாக இந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி நல்லநிலைக்கு வந்து நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்..
  5. அதை விளக்கமாக எழுதவேண்டும்.. ஓரிருவர் செய்வதை எல்லோருக்கும் பொதுமைப்படுத்தக்குடாது.. பத்தாம் வகுப்பு படித்தவன் எல்லாம் என்று பொதுமைப்படுத்தி எல்லோரையும் நக்கலாக எழுதினால் தவறாகத்தான் விளங்கிக்கொள்ளப்படும்.. பாரம்பரிய முறை படிப்பில்கூட குதிரை ஓடுவது கொப்பி அடிப்பது எல்லாமே இருக்கு.. ஏன் எனக்கு கூட இன்றுவரை எனது யாழ்ப்பாண டிகிரியில் நிறைவு இல்லை.. ஏனெனில் அது நான் உண்மையாக படித்து எடுத்தது இல்லை.. பொடியன் கம்பஸ் எண்ட மதிப்பில நாலுபக்கத்தாலும் உதவியும் காசும் மதிப்பும் வர நான் அதை பயன்படுத்தி ரூம் பொடியளோட சேந்து பகல் முழுக்க விளையாட்டு படம் கடைகடையா விதம் விதமா சாப்பாடு குடி எண்டு இருந்திட்டு அசைமெண்டு சோதினை எல்லாம் கடைசி நேரத்துல ஆளை ஆள் பிட் அடிச்சு அதில கொஞ்சம் இதில கொஞ்சம் எண்டு கொப்பி பண்ணி பாசனதுதான்.. அதுக்காக அங்கும் உண்மையாக படிப்பவர்கள் இருக்கிறார்கள்.. இங்கும் அப்படித்தான்.. ஒரு சிலதை வைத்து எல்லாரையும் பொதுமைப்படுத்தகூடாது.. எப்படியாவது படிக்கனும் என்று முயற்சி செய்பவர்களை கூட மனம் உடைய செய்துவிடும் இப்படியான பொதுமைப்படுத்தும் நக்கல் நையாண்டிகள்.. எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களை நாம் எப்பொழுதும் ஊக்கப்படுத்த வேண்டுமே ஒழிய முதல் படியில் ஏறும்போதே காலை இடறி விழுத்தகூடாது..
  6. ஏதோ பத்தாம் வகுப்பு பாஸ்பண்ணி யாழ்ப்பாணத்தில கம்பஸ் போனதுகள் பூரா வெட்டிகிழிச்ச மாதிரி.. அரைவாசி யாழ்ப்பாண கம்பசில பாத்தடிச்சுதான் பாஸ்பண்ணுறது.. நானும் அதைத்தான் செய்தனான்.. எங்கட பச்சில உண்மையா விளங்கி படிச்சது ஒரு மூண்டுபேர்தான்.. பத்தாம் வகுப்பு பெயிலானவன் பூரா தெருவில நிக்கோனும் பள்ளிக்கூடத்தில பத்தாம் வகுப்பு பாசனவன் மட்டும்தான் மேற்கொண்டு படிச்சு முன்னேறோனும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால பத்தாம் வகுப்பு பெயில் ஆனவன் எல்லாம் காலம் முழுக்க கண்ணீர் விடோனும் படிக்கிறவன பாத்து.. இதைத்தானி யாழ்ப்பாணியின் பனங்கொட்டை மெண்டாலிற்றி எண்டு இணையத்தில் நக்கலடிக்கிறார்கள்.. புலம்பெயர்ந்து வெளிநாடு வந்தவர்களுக்கு கூட பாரம்பரிய முறைகளில் கல்வி பயில முடியாதவர்களுக்கு மாற்று வழிகளில் கல்விபயின்று பல்கலைக்கழகம் போய் கலாநிதிகூட வெளிநாடுகளில் ஆகிறார்கள் என்பது புரியவில்லை.. யூகேயில் இதற்கென்றே BTEC edexcel இருக்கிறது.. யாழ்ப்பாணிக்கு தெரிஞ்சதெல்லாம் ஓலெவல் ஏலெவல் யாழ்ப்பாணகம்பஸ்( இலங்கையை விட்டு வெளிய வந்து யாழ்ப்பாணகம்பஸ் எண்டா ஒருத்தனுக்கும் தெரியா.. கம்பஸ் வேல்ட் ரேங்கை இணையத்தில் தேடினால் பக் ஆல சிரிப்பானுக)..என்ர பெற்றோர் மற்றும் நான்கூட வெளிநாடு வரும்வரை இப்படித்தான் இருந்தேன்.. காசுகட்டி கம்பஸ் படிக்கலாம் எண்டெல்லாம் தெரியா… பிரைவேட் கம்பஸ் எண்டா என்னெண்டே தெரியா அப்பிடி ஒண்டு இருக்கெண்டும் தெரியா.. இஞ்ச வந்தா பூரா பிறைவெட்தான் காசுகட்டித்தான் படிக்கோனும்.. அங்க படிச்சவன் எழுதின புத்தகத்தைதான் நாங்கள் ஊர் யூனில படிக்கிறம்.. ஆகையால் இன்னமும் யாழ்ப்பாணி மனநிலையில் இருப்பவர்கள் இப்பிடியே குண்டுசட்டிக்க குதிரை ஓட்டி காலத்தை முடிக்கவேண்டியதுதான்.. இனிவரும் யாழ்ப்பாண தலைமுறை குண்டுசட்டி பனங்கொட்டைகளாக இருக்க மாட்டாது என்று நம்புகிறேன்,.
  7. நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது..
  8. நான் கலியாணம்கட்டிய காலத்தில் அபிலாசை எனக்கு தெரியாது மற்றும் அபிலாஷ் இப்படி எழுதி அது என் கண்ணில் படாமல் போய்விட்டதே என்று கவலைப்படுகிறேன்..
  9. இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.. ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..
  10. நானும் பச்சை போட்டு விட்டு காத்திருக்கிறேன் ஜயா..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.