-
Posts
1315 -
Joined
-
Days Won
4
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
யாழ்ப்பாணத்தில் இப்ப யாரு சாதி பாக்கிறார்கள் என்பவர்களுக்கு..
-
100 வீதம் உண்மை.. இதனால் நான் இப்பொழுது எதுவும் எழுதுவதில்லை.. பதில் எழுதுவம் எண்டு திரிய ஓப்பின் பண்ணினா திரி வந்து சேரா விடியுது.. அதுவும் பாதி வருது மீது வெள்ளையா இருக்கு.. அந்த மீதி வர இன்னும் அரைநாள் வெயிட் பண்ண வேண்டி இருக்கு.. இவ்வளவு வெயிட் பண்ணி ஒவ்வொரு திரியா கருத்து எழுதுறது எண்டால் ஒண்டு பென்சன் எடுத்திட்டு சும்மா வீட்டில் இருக்கோணும் இல்லாட்டி பங்குச்சந்தையில முதல போட்டிட்டு காலாட்டிக்கொண்டு இருக்கோணும் இல்லாட்டி இருபத்து நாலு மணி நேரமும் கொம்பியூட்டரில இருக்கிற IT ல வேலை செய்யோணும்.. நிர்வாகம் தயவு கூர்ந்து பழைய வேகத்துக்கு லோட்டாகும் யாழை கொண்டு வர ஏதாவது செய்யுங்கள்..
-
ஏட்டுக்கல்வி…
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
பாலபத்ர ஓணாண்டி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வாத்திய பாத்து நீ வாத்தியா எண்டு கேட்டால் வாத்திக்கு கோபம் வரத்தான் செய்யும்.. டாக்டர பாத்து நீ டாக்டரா எண்டு கேட்டால் டாக்டருக்கு கோபம் வரத்தான் செய்யும்.. காவாலிய பாத்து தமன்னா “ நீ காவாலியா” எண்டு கேட்டால் காவாலிக்கு கோபம் வரும்தான.. வாத்திக்கும் டாகடருக்கும் வந்தா ரத்தம் காவாலிக்கு வந்தா தக்காளி சட்னியா..? 😡😡 -
இது எமக்கு மட்டுமன்றி இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் அத்தனை சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்.. அது மட்டுமின்றி இந்தியா போன்ற பல தனித்துவ இனங்களை நசுக்கி மேற்குலகி விட்டுச்செல்லும்போது நாடாக உருவாக்கப்பட்டிருக்கும் பெரிய நாடுகளில் மொழியை கலாச்சாரத்தை காக்கப்போராடும் சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்.. உடையார் எழுதியது இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் நசுக்கப்பட்டும் அளிக்கப்பட்டும் கொண்டிருக்கும் சிறுபான்மை இனங்களின் வரலாற்று துயரத்தின் விதை/வேர்.. இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் மற்றும் போராடிய இனங்களின் அந்த போராட்ட தேவையின் ஆரம்ப புள்ளியை தேடிப்போனால் உடையார் எழுதியதில்தான் வந்து நிற்கும்.. இன்று உணவும் உடையுளும் தந்து நம்மை வாழவிட்டிருக்கிறார்கள் என்பதற்காக நாம் உட்பட பலநூறு சிறிபான்மை இனக்குழுக்களின் கட்டப்பொம்மன்களாக நாம் மாறி மேற்கை சகட்டுமேனிக்கு போற்ற முடியாது..
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
பாலபத்ர ஓணாண்டி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வள வள சள சள எண்டு அலம்பாமல் பொயின்ற்சை எழுதுங்கோ.. மாட்டை பத்தி எழுதச்சொன்னா மாடுகட்டின கட்டை, கயிறு, மாடு திண்ட புல்லு எல்லாம் எழுதிக்கொண்டு.. முள்ளிவாய்க்காலுக்கும் நடிகர்மார் வாறதுக்கும் என்ன சம்பந்தம்..? நீங்கள் படம்பாக்காததுக்கு நாங்கள் என்ன செய்யிறது.. ஊரில இருக்கிறவன் பாப்பான் விடுவான்.. உங்கட கட்டை வேகோணும் எண்டதுக்காக நாங்கள் எங்கட கவட்டையை வேக வைக்கேலுமோ.. -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
பாலபத்ர ஓணாண்டி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
முள்ளிவாய்க்காலை நினைத்து நினைத்து உருகி உருகி ஜேர்மனியில் நீங்கள் மட்டும் மூடிட்டு வீட்டுக்குள்ள முக்காடு போட்டுட்டா இருக்கிறியள்..? இல்லத்தான.. -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
பாலபத்ர ஓணாண்டி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஆறுதிருமுருகன் போன்ற கலாச்சாரகாவலர்கள் யாரும் கம்பு சுத்தவில்லையா இன்னும்..? -
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
பாலபத்ர ஓணாண்டி replied to alvayan's topic in வாழும் புலம்
இந்த செய்தி உண்மையானால் வாழ்த்துக்கள் வழக்குக்கு எதிராக போராடிய ஆதரவு செய்த அனைவருக்கும்.. கனடா உறவுகள் யாரும் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.. அதிலும் அரசியல் செய்திகள் விடயங்களில் கருத்து எழுதும் கனடா உறவுகள் கூட மூச்… இதுவே தமிழ்தேசியாவாதிகள் ஏதாவது சின்ன பிழை செய்திருந்தாலும் பந்தி பந்தியாக எழுதி விவாதிப்பார்கள்.. அது தப்பில்லை.. ஆனால் அதேபோல் நல்லவிடயங்களையும் எழுதி ஊக்குவித்து பரப்பவேண்டாமா..? -
எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
பாலபத்ர ஓணாண்டி replied to suvy's topic in வாழும் புலம்
என்ன இணையவன் அண்ணா இன்னும் பிரெஞ்சு படிக்கிறியளா..?😮 -
மெக்கானிக்கல் clocks வேகம் கூடும்போது மாறுவது ஒன்றும் விந்தை இல்லை.. அவை விசைகளின் அடிப்படையில் செயல்படுபவை.. ஆனால் வேகம் அதிகரிக்கும்போது உடல் கலங்களின் Biological clock எப்படி மாறுகிறது என்பதை பற்றிய தெளிவான விளக்கங்களுடன் விஞ்ஞானிகள் யாராவது எழுதிய கட்டுரை யாராவது வாசித்திருக்கிறீர்களா..? அப்படி உங்களில் யாராவது வாசித்தால் இங்கு பகிர முடியுமா அல்லது அதை சுருக்கமாக விளக்கி எழுத முடியுமா..? ஏனெனில் உடல் கலங்கள் தமக்கே உரிய ஒரு own காலச்சக்கரத்தின் அடிப்படையில் உருவாகி அழிகின்றன.. வயது குறைகிறது எனில் கலங்கள் அழிய மிக நீண்டகாலம் எடுக்கிறது என அர்த்தம்.. அது எப்படி biological clock இந்த வேகம் போன்ற புற விசைகளின் தாக்கத்தில் மாறுகின்றது என அறிய ஆவல்.. இறப்பை கூட வெல்லும் விந்தை அதில் மறைந்திருக்கலாம்..
-
இது இந்த திரியுடன் சம்பந்தப்படுவதால் இதை இங்கு எழுதுகிறேன்.. அண்மையில் எனது சகோதரம் எனது பல தடைகள் அட்வைஸ்கள் எச்சரிக்கைகளை தாண்டி நிராகரித்துவிட்டு வெளிநாடு வந்துவிட்டான்.. அது சரி அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்லுவார்கள்.. நான் கடவுளை நம்பாதவனாக இருந்தும் என் மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவராக உள்ளார். அவரையே நம்பவைக்கவோ மாற்றவோ முடியவில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. சரி இப்போ விடயத்துக்கு வருவோம்.. தம்பி வெளிநாடு போக தேர்ந்தெடுத்த நாடு ஜேர்மன். ஜேர்மனை தேர்ந்தெடுக்க அவன் சொன்ன காரணம்தான் என்னை தூக்கி வாரிப்போட்டது.. இவ்வளவு காலம் ஜரோப்பாவில் இருந்தும் எனக்கு இந்த விடயம் தெரியாதது வெக்ககேடாக இருந்தது.. அதைவிட பல்கலைக்கழகத்துக்கு வருடம் 7-8 ஆயிரம் பவுன்ஸ் பிளஸ் தங்குமிடம் உணவு போன்ற வாழ்க்கை செலவுகளுக்கு அதே அளவு பணம் என்று கொட்டி ஒரு காலத்தில் நானும் படித்தேன் இன்றும் பலர் கனடா அவுஸ்த்திரேலியா என்று பல மில்லியன் களில் படிக்க போகிறவர்களுக்கு இடையில் இங்கிலீஸ் மீடியத்தில் ஒரு சதம் செலவுகூட இல்லாமல்( பதிவு செய்தல் போன்றவற்றிற்கு ஒரு சில நூறு யூரோக்கள் மட்டும்) தம்பி ஜேர்மன் படிக்கபோய் இருக்கிறான் என்பதை இப்போ வரை என்னால் நம்ப முடியவில்லை.. இத்தனைக்கும் அவன் ஒரு அவரேஜ் ஸ்டுரன்ற். பிறைவேட்டாகதான் தன் முதல் பட்டத்தை இலங்கையில் முடித்தான். எந்த ஸ்கொலர்சிப்பிலும் போகவில்லை.. ஸ்கொலர்சிப்பும் இல்லை அப்ப ஈயூ சிற்றிசனும் இல்லை வெளிநாட்டுக்காரன் ஆன உன்னை எப்பிடியேடா ஜேர்மனில பிறியா படிக்கவிட்டவங்கள் என்டு கேட்டால் எட அண்ணா லூசுப்பயலே யூறோப்பிய சிட்டிசனா இருந்தும் இது தெரியாம இருக்கிறியே ஜேர்மனில கல்வி ஜெர்மன் சிற்றிசன் மற்றும் ஈயூ சிட்டிசன் மட்டுமன்றி அனைவருக்குமே பிறி என்டு ஒரு குண்டைபோட்டான்.. என்னடா நம்ம குசா தாத்தா தமிழ்சிறி அண்னை கந்தையா அண்னை சாந்தி அக்கா கவி அருணாசலம் என்டு எக்கச்சக்கமான ஜேர்மன் காரர் இருந்தும் யாரும் இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லையே.. எத்தனையோ குடி பெயர்வு சம்பந்தம்மான திரிகளில் யாழில் உரையாடி இருப்பம் யாரும் இதைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லையே என்று நினைத்து விட்டு கண்டிப்பாக நான் இதைப்பற்றி யாழில் எழுதவேணும் என்டு நினைத்து உடனும் போனை எடுத்து இதை ரைப்பண்ணுறன்.. இதனால் ஒரு ஏழை மாணவனாவது பயன்பெற்றால் அதைவிட சந்தோசம் எனக்கு வேறு இல்லை.. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே” அடுத்த அடுத்த பதிவுகளில் எப்படி அனுமதி பெற்றான் என்ன செய்யவேணும் போன்ற அனைத்து தகவல்களையும் தொடர்கிறேன்..
-
உங்கள் அம்மா சகோதரங்களாக நீங்கள் வாழ்ந்த வீட்டின் ஞாபகங்கள்.. எல்லோரும் திசைக்கொன்றாக பறந்துவிட முகவரி இழந்து இன்று அது தனிமையில் கிடப்பதை வாசிக்கும்பொழுது மனதில் சட்டென ஒரு வேதனை படர்ந்தாலும் இதுதானே வாழ்க்கை.. இதில் எது நிரந்தரம்..? காலம் யாருக்காகவும் எதற்காகவும் காதிருப்பதில்லைத்தானே.. மாற்றம் ஒன்றுதானே இந்த பூமியில் அது தோன்றியதில் இருந்து மாறாதது.. மற்றவை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.. ராஜராஜனின் மகன் இன்று தஞ்சைக்கு வந்தால் தன் தந்தை எப்படி கட்டி ஆண்ட இடம் இப்படி மாறிப்போய் இருப்பதை பார்த்து வேதனைப்படுவார்.. ஆனால் அதற்காக தஞ்சை மாறாமல் இருக்க முடியுமா.. நன்றி உங்கள் எழுத்துக்கு.. சற்றும் தொய்வில்லாமல் சிக்கென்று எழுதி இருந்தீர்கள்.. ஒவ்வொரு பகுதிக்கும் காத்திருந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..
-
யப்பானியர்களின் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கான காரணங்கள்
பாலபத்ர ஓணாண்டி replied to nunavilan's topic in நலமோடு நாம் வாழ
கிறீன் ரீ… வெள்ளைகளின் கொக்ககோலபோல யப்பானிஸ் ரெஸ்ரொரன்ற்களில் கிரீன் ரீ இருக்கும்.. கொட் or கோல்ட் எந்த வடிவத்திலும் இருக்கும்.. அங்கிருக்கும் அனைத்து சொப்ற் ரிங்க்ஸ்களும் கிரீன் ரீயை based பண்ணியே இருக்கும்.. -
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன்..
-
ஆட்டுபவர்கள் யாரென்று தெரியாமலா அருணா ஆடியவர்.. அருணா ஒன்றும் விரல் சூப்பும் பேபி அல்ல.. அவருக்கு யார் யார் தன்னை தொடர்புகொண்டார்கள் என்னவெல்லாம் சொல்லி தன்னை இப்படி சொல்லவைத்தார்கள் என்று எல்லாம் தெரியும்.. தலைவர் குடும்பத்துக்கு களங்கம் வரவிடக்குடாது என்று உளமார அவர் நினைத்தால் அவர் ஒரு அறிக்கையிலையே அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி இந்த ஆட்டுவிப்பவர்களின் கதையை முடிக்கலாம்.. பத்து நாள் வாயையும் சூ** யும் மூடி பொறுத்திருந்து இப்ப சேரமான் துள்ளுவதன் காரணம் அருணா அக்கா யாரையும் காட்டிகுடுக்க மாட்டா எண்டு கன்பார்ம் பண்ண வெயிட் பண்ணி உறுதியாக தெரிந்தபின் ஆடுது அந்த ஆடு..
-
அவர் எப்படியாவது இருந்திட்டுப்போகட்டும்.. அவர் என்ன தான் தான் பிரபாகரன் அல்லது துவாரக என் பின்னால் வாருங்கள் என்று சொல்லாதவரை அவர் எவராகவாவது இருந்திட்டு போகட்டும்.. அவரிடம் இருந்து எமக்கு தேவை அவர் அப்பாவின் டி.என்.ஏ.. அதை அவர் தர தயார் என்று சொல்லிவிட்டார்.. இப்ப உங்களுக்கு துவாரகா வாற என்று சொன்னவர்கள் மூலம் அவரின் ஒரு தலைமுடியை வாங்கி பொதுவெளியில் கொடுங்கள்.. தமிழ் ஒலிக்கு துவாராக வீடியோ வாங்கி கொடுத்தவர்களால் முடியையும் வாங்கி கொடுக்க முடியும் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல்..
-
எனக்கும் இதுதான் தோன்றியது இந்த நாவல் வெளிவந்த அந்த காலப்பகுதியிலேயே எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இருக்கவில்லை.. பாலியல் வல்லுறவு செய்த யாரையும் புலிகள் மன்னித்ததில்லை.. அது எந்தப்பெரிய *யிர் ஆக இருந்தாலும்.. அப்படி ஒருவேளை திருமணம் நடந்திருந்தாலும் பாலியல் வல்லுறவு பண்ணியவருக்கு வெடிவைக்க ரெடியான நேரத்தில் அந்த வன்புணர்வு செய்யப்பட்ட பெண் காலில் விழுந்து சுடாதையுங்கோ நான் இனி யாரையும் கட்டுவதை விரும்பவில்லை இவன் தான் எனக்கு இதை தந்தவன் அதனால் இவனையே கட்டி வையுங்கள் என்று பெற்றோரும் மன்றாடி இருந்தால் இப்படி நடக்க சான்ஸ் இருக்கு.. மற்றும்படி நெவர்.. அப்படி வெடி விழப்போற நேரத்தில் பெண்ணினதும் பெண் வீட்டாருனதும் வேண்டுதலில் கலியாணத்துக்கு ஓகே சொல்லி அந்த பெண்ணையே திருமணம் செய்து உயிர் தப்பி பிள்ளைகுட்டிகளோடு வாழும் ஒருவரை எனக்கு தெரியும்.. ஆனால் அவர் போராளி அல்ல.. பொது ஆள்.. இயக்கத்தில் லவ்பண்ணியவர்கள் உடல் உறவு வைத்திருக்கிறார்கள்.. அது இருவரும் விரும்பியே.. அதற்கு இருவருக்கும் பல மாதங்கள் பனிஸ்மெண்டும் பங்கரில் செய்திருக்கிறார்கள்..பிற்காலத்தில் இறங்கி வந்து இயக்கமே லவ் பண்ணியவர்களை சேவை மூப்பின் அடிப்படையில் திருமணம் செய்ய அனுமதி கொடுத்தது ஊர் அறிந்ததே.. ஆனால் பாலியல் வல்லுறவு செய்தவனை பெண்ணின் வேண்டுதல் இல்லாமல் இயக்கமே வில்லங்கத்துக்கு திருமணம் செய்து வைத்தது என்பது கொஞ்சம் ஓவர்..