Jump to content

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1339
  • Joined

  • Days Won

    4

Posts posted by பாலபத்ர ஓணாண்டி

  1. 4 minutes ago, goshan_che said:

    5 ஓ….

    8 ஓ….

    10 ஓ…..

    சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை.

    அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்……

    முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.

    அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...

    • Like 1
  2. 1 hour ago, குமாரசாமி said:

    கவலை தெரிவிக்கிறதை விட வேறை என்ன தெரியும் 🤣

    அவ்ளவுதான் லிமிட்டு.. அதுக்கு மேல போனா ஓனர் அடிப்பான்..😂

  3. 51 minutes ago, பையன்26 said:

     

    சீனா இதுக்கை மூக்கை நுழைக்காத்து வெறும‌ன‌ வேடிக்கை தான் பார்க்கும்.........................

    சீனா காரியக்கள்ளர்.. ஒண்டுக்கையும் மூக்கை நுழைக்காது.. அறிக்கை மட்டும் விடும்.. தெமு,விஸ், அலிபாப வியாபாரம் படுத்திடும்..

    53 minutes ago, பையன்26 said:

    ...................இஸ்ரேனின் விமான‌ நிலைய‌ம் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆகி விட்ட‌து ம‌க்க‌ள் ப‌ய‌த்தில் தெறித்து ஓடுகின‌ம்.......................

     

    தெமு டிறோன்ஸ் ஜோர்டான் பார்டர்கூட தாண்டேல்ல..இதென்ன புதுக்கதையா இருக்கு.. எந்த நியூசில் இது வந்தது..? தம்பி லிங்கை தரமுடியுமா..?

  4. 54 minutes ago, கிருபன் said:

    ஏவல்பட்ட 300 ட்ரோன்களிலும், ஏவுகணைகளிலும் 99% க்கு மேல் இஸ்ரேலும், அமெரிக்க நாசகாரிக் கப்பல்களும் சுட்டுவீழ்த்திவிட்டன. இது ஈரானின் தாக்குதல் படுதோல்வி என்றுதான் காட்டுகின்றது. ஒரு சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேலின் அயர்ன் டோம் எதிர்ப்புப் பொறிமுறையை செயலிழக்கவைக்காமல் நடந்த தாக்குதல் வெறும் புஸ்வாணமாகப் போயிருக்கின்றது.

    பதிலுக்கு இதே மாதிரி ட்ரோன்களை இஸ்ரேல் ஏவினால் ஈரானில் பெரிய அழிவு வரலாம்.

    Temu delivery..

    பால்னா பொங்கும் பச்சதண்ணி எப்புடி பொங்கும்..

    • Haha 1
  5. என்ன ஈரான் பயந்திட்டு போல இருக்கு.. இது தனது தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலாக ட்றோன் ஏவி இருக்காம்.. அதுக்கும் இதுக்கும் கணக்கு சரியாம்.. இனி மேற்கொண்டு எந்த தாக்குதலும் ஈரான் செய்யாதாம்..

  6. 11 minutes ago, Kapithan said:

    மூடன் தன் காலில் பட்ட (எதையோ) .......எல்லா இடங்களிலும் பிரட்டுவான் என்பது போல, அமெரிக்கனும் இஸ்ரேலும்  தான் போகும் வழி எல்லாம் அழிவையும் மரணத்தையும் விதைத்துக்கொண்டே போகிறார்கள். 

    ☹️

    மறுபடியும் முதல்ல இருந்து சாமான் எல்லாம் விலை ஏறப்போகுது.. ஆனால் சம்பளம் ஏறாது.. நான் இலங்கையை பற்றி கதைக்கேல்ல.. இந்தியா ஜரோப்பா கனடா அவுஸ் எண்டு தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளையும்தான் சொல்லுறன்.. நடுத்தர மற்றும் ஏழைமக்கள் ஏற்கனவே உக்ரைன் சண்டையில் சாப்பாட்டு சாமானைகூட வாங்கும் திறனை இழந்திருக்க இதுவேற வர பட்டினிசாவு கொலை கொள்ளை எண்டு போகப்போகுது உலகம்.. எதை சாதிக்கபோகிறார்கள் இந்த போர் விரும்பும் மேற்குலக மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் நாடுகள்..??

  7. 14 hours ago, goshan_che said:

    நல்ல வேளையாக டய்பட்டிசுக்கு தமிழ் தெரியாது….

    இல்லாட்டில் உதை வாசிப்போட்டு எனக்கு மேலே எல்லா ஏறி ஆடும்🤣

    நாங்கள் வீரப்பரம்பரை. ஓணாடிகள் போல் வருமோ, வராதோ என்று பயப்படுவதில்லை.

    வந்த ஆளை அமத்தி வச்சு, நம்ம control இல் வச்சிருக்கிறம். ஓவராகினால், ஊசியால வயித்துல ஒரே குத்து. அடங்கீடுவார்🤣.

    அப்பாடா இப்பான் சந்தோசம்.. நிம்மதி..

    • Haha 1
  8. 1 hour ago, goshan_che said:

     

    large.IMG_5971.jpeg.d386ccdaf4d656abffad69c22e86985a.jpeg

    அம்மாச்சியில் சாப்பாடு. அப்பம், கீரை வடை, புட்டு, மதிய நேரச்சோறு, பப்பா ஜூஸ்.

    வெள்ள மா புட்டும் பபாசி யூசும் வெட்டுவதை பார்த்தால் தலைக்கோ தலையின்ர பரம்பரையிலையோ டயபிற்றி இல்லை எண்டது கன்போர்ம்.. குடுத்து வச்ச மனுசன்.. அம்மாவுக்கு அம்மம்மாவுக்கு டயபிற்றிக் இருப்பதால் எச்சரிக்கையாக இதை எல்லாம் விட்டு பலசகாலம் ஆகிவிட்டது.. சோறுகூட வரகு சாமை போன்ற தானியங்களுடன் ஒரு கரண்டி ஆகிவிட்டது வாழ்க்கை.. பென்சன் எடுக்கிற வயசிலும் வெள்ளமா புட்டு தின்னுற உங்களை எல்லாம் பாக்க வயிறு எரியுது.. நல்லா இருக்க மாட்டியல்.. நாசாமாப்போவார்..😡😡😡

    • Haha 1
  9. 32 minutes ago, goshan_che said:

     

    நம்புங்கள்.  நாம் தமிழர் நிறுவன உறுப்பினர் முதல்….ஐயநாதன் வரை சீமானிடம் தோழமையுடன் சுட்டி காட்டி…கட்சியில் இருந்து துரத்தப்பட்டோர் லிஸ்ட் ரொம்ப நீளம்.

    கட்சி நிர்வாகிகைய…போடா ங்….என போனில் வசைபாடிய, பொட்டம்மான் என் ம** என சொல்லிய சீமான் உங்கள் தோழமை சுட்டலை….சும்மா சிரிப்பு காட்ட வேணாம் ஓணாண்டி.

    அது அவர்கள் உள்வீட்டு பிரச்சினை.. அதில் நாங்கள் தலையிடாமல் இருப்பதுதான் நாங்கள் அசிங்கப்படாமல் இருக்க உதவும்.. ஒரு தமிழ்தேசியவாதியாக சீமான் தமிழ்தேசியம் சார்ந்து மட்டும் ஏதாவது தவறு செய்யும்போது அதை தோழமையுடன் சுட்டிக்காட்டுவதனுடன் முடிந்துவிடுகிறது நம் எல்லை.. அதை அவர்கள் எடுத்து திருத்திக்கொண்டால் அவர்களுக்குத்தன் நல்லது.. இல்லை நான் நாசமாப்போவன் எண்டாலும் அது அவர்களுக்குத்தான்.. இங்கு பலரைப்போல் அடுத்தவன் கொல்லைக்குள் உள்ள குதிச்சு ஊளை இட்டுக்கொண்டிருந்தால் இழப்பும் அசிங்கமும் நமக்குத்தான்..

    20 minutes ago, goshan_che said:

     

    பின்னர் ஏன் இதே போல் இடித்துரைக்கும் ஏனையோரை காழ்புணர்சியால் கத்தும் தவளைகள் என்கிறீர்கள்?

    நீங்கள் கண்டித்தால் நற்புணர்ச்சி, ஏனையோர் கண்டித்தால் காழ்புணர்ச்சி ?🤣

    உங்களுக்கு சுட்டுப்போட்டுதாக்கும்..😂 நீங்கள் இடித்துரைத்தால் மூடிட்டு கம்முன்னு இருப்பீர்கள்.. இல்லை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதினால் இப்பிடித்தான் குய்யோ முறையோ எண்டு கூப்பாடு போடுவீர்கள்..😂  தீதும் நன்றும் பிறர் தர வாரா..😂 நான் உங்கள் தலையில் தொப்பியை போடவில்லை.. நீங்களாக போட்டுக்கொண்டு ஒற்றைக்காலில் நிண்டு ஜயோ தவளை தவளை எண்டு கத்துறியள்..😂 உதுக்கு நான் என்ன செய்ய..😂

     

    சட்ட கிளிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிளிஞ்சிருச்சு இத எங்க முறையிடலாம்..😂😂😂

  10. 6 minutes ago, goshan_che said:

    அதே.

    ஈழ அரசியல்வாதி என்றால் இடித்துரைப்பீர்கள்.

    தமிழக அரசியல்வாதி என்றால் முட்டு கொடுப்பீர்களா?

    சீமானின் இந்த கோக்குமாக்கை, அவரின் ஆதரவாளர்கள்தான் முதலில் கண்டித்திருக்க வேண்டும்.

     

     

  11. 12 hours ago, விசுகு said:

    (இலங்கை பதில்) கொக்கென்று நினைத்தாயா? 

    உண்மைதான்.. எனக்கு தெரிந்த இந்த வருடம் இலங்கைக்கு சுற்றிப்பார்க்க வந்த பல வெள்ளைகள் என்னை தொடர்புகொள்ளும்போது ஆச்சரியப்படுகிறார்கள்.. என்ன இலங்கை இவ்வளவு வேகமாக பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என்று.. சிங்களவனின் அதுவும் ரணில் போன்ற படித்த சிங்களவர்களின் அறிவு அபாரமானது.. எல்லாப்பக்கத்தையும் சமாளித்து வெட்டி ஓடி வென்று விடுவார்கள்.. 

     

     

    • Like 1
  12. 1 hour ago, putthan said:

    குடியுரிமை கிடைக்குமாம் ஒருவருடம் பணிபுரிந்தால் ....ஒரு சில சிறிலங்கா இராணுவத்தினர் ரஸ்யாவுக்கும்,இன்னுமொரு பகுதியினர் யுக்கிரைனுக்கும் போராடுகிறார்கள் ...அதாவது பணத்திற்காக ,குடியுரிமைக்காக...

    இந்த இழவு பிச்சைக்கார உக்ரேன் மற்றும் ரஷ்யாராணுவத்தில் சேருர நேரத்துக்கு பேசாமல் french foreign legion(Légion étrangère française) சேர்ந்தால் உலகின் மூண்டாவது பெரிய வல்லரசு நாட்டு ராணுவத்தில் பணிபுரிஞ்ச பெருமையும் சம அந்தஸ்த்தும் சம உரிமையும் மூண்டு வருசத்தில் பிரெஞ்சு குடியுரிமையும் அஞ்சு வருசத்தில் ராணுவத்தை விட்டு வெளியேறி சில பல விசேட சலுகைகளுடன் பிரெஞ்சு குடிமகனாக கெளரவமாக வாழ்ந்துட்டு போகலாம்.. உக்ரேன் ரஸ்ய ராணுவத்தில் இறப்புவீதம் பத்துக்கு ஒன்பது எண்டால் பிரெஞ்சு ராணுவத்தில் இறக்கும் சந்தர்ப்பம் ஆயிரத்தில் ஒன்றுதான்..

    • Like 1
  13. 14 minutes ago, பையன்26 said:

    இதையே தான் நானும் கேட்டுக்கிறேன் மொழி போரை வைச்சு ஆட்சிக்கு வ‌ந்த‌ திமுக்கா த‌மிழை வ‌ள‌த்த‌தா அல்ல‌து அழிச்ச‌தா த‌மிழ் நாட்டு க‌டைக‌ளில் எங்கு த‌மிழ் இருக்கு

    ஸ்டாலின் அவ‌ரின் ம‌க‌ன் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ த‌மிழை அவ‌ர்க‌ளால் ஒழுங்காய் வாசிக்க‌ தெரிய‌ல‌...................த‌மிழ் த‌மிழ் என்று க‌ருணாநிதி க‌த்தாதையா  சீமான் க‌த்தி விட்டார்................உத‌ய‌நிதின்ட‌ ம‌க‌ன் வெளி நாட்டில் ப‌டித்து விட்டு வ‌ந்தார் அவ‌ர்க‌ளை பார்த்து கேள்வி கேட்க்க‌ மாட்டிங்க‌ள் சீமான் சீமான் என்று  அவ‌ரை விர‌ல் நீட்டி கேள்வி கேட்ப்ப‌து அப‌த்த‌ம்.......................

    நான் ஒரு முற்போக்கான தமிழ்தேசியவாதி.. தமிழ்தேசியம் என்பது உலகம் முழுதும் பரந்துவாழும் தமிழர்களையும் உள்ளடக்கியது.. திராவிடம் அப்படி அல்ல.. தமிழ்நாட்டுடன் முடங்கிவிடும்..  நான்  ஈழத்தில் ஒரு தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதி தன் பிள்ளையை ஆங்கில வழி அல்லது சிங்கள வழி கல்வியில் படிக்கவைத்தால் கண்டிப்பாக மிக உக்கிரமாக எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும்.. தமிழ் மொழிதான் தமிழ்தேசியத்தின் அடி அத்திவாரம்.. இருப்பு.. அதேபோல் தமிழ் தேசியம் என்று வரும்போது அதில் ஏதும் தவறு செய்யும்போது நாங்களும் சீமானின் தவறை தோழமையுடன் சுட்டிக்காட்ட உரிமை இருக்கு என்று நம்புகிறேன்.. கம்யூனிஸ்ட்டுக்கள் இன்னொரு நாட்டில் கம்யூனிஸ்ட்டுக்கள் அதன் சித்தாந்தத்தில் இருந்து விலகி நடந்தால் அது தவறு என்று தோழமையுடன் சுட்டிக்காட்ட முடியும்.. ஆனால் அதை சீமானை வீழ்த்த காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டு செயல்படுவது ஈழத்தமிழர் நமக்கு வேண்டாத வேலை.. திராவிடத்திற்கு  தோழமையுடன் கூட சுட்டிக்காட்ட முடியாது.. திராவிட சித்தாந்தத்திற்கும் ஈழத்தமிழருக்கும் கொள்கை அளவில் கூட எந்த சம்மந்தமும் இல்லை..

  14. 1 hour ago, இணையவன் said:

    சமீபத்தில் ஐரோப்பாவில் உடல் எடை குறைவாக உள்ளவர்களைப் பட்டியலிட்டபோது பிரான்ஸ் இரண்டாம் இடத்தில் இருந்தது. உணவில் உப்புக் குறைப்பும் இதற்கான காரணங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் பிரெஞ்சு அரசாங்கம் உணவுகளில் குறிப்பாகப் பாண் வகைகளில் உப்பைக் குறைக்குமாறு வலியுறுத்தியது. சுவையில் பெரிய மாற்றம் இல்லாமல் உப்புக் குறைக்கப்பட்டது.

    நாம் சமைக்கும் கறிவகைகளில் உப்புப் போட்டு அவிய விடுவதால் உணவுகள் அதிக உப்பை உறிஞ்சிக் கொள்கிறது. சிலர் சோறு அவிக்கும்போதும் அதிகளவு உப்புச் சேர்க்கின்றனர். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவுகளை உப்புடன் சேர்த்து அவிக்காமல் தூவிச் சாப்பிட்டால் குறைந்த அளவான உப்பில் அதிக சுவை இருக்கும்.

    பிரான்ஸ் மட்டுமல்ல ஜரோப்பிய நாடுகளே அமெரிகாவுடன் ஒப்பிடும்போது சிறந்த உடல் ஆரோக்கியமும் அளவான வேலை நேரமும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொண்டிருப்பதற்கான பிரதான காரணம் ஜரோப்பிய ஒன்றியத்தின் தரக்கட்டுப்பாடுகளும் வேலை சட்டதிட்டங்களும்.. ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானிய ஆரோக்கியத்தில் அமெரிக்காபோல் ஆவது வெலுதூரத்தில் இல்லை..

  15. 4 minutes ago, இணையவன் said:

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?

    அப்படி ஆரம்பத்தில் பல நாம்தமிழர்கட்சி ஈழ ஆதரவாளர்கள் தமிழக அரசியலில் தேவையற்று மூக்கை நுழைத்து தமிழக மற்றைய கட்சி உறவுகளை ஈழத்தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராக பேசவைத்ததுதான் மிச்சம்.. மிக மிகத்தவறான உதாரணங்கள் அவை.. இப்பொழுது திராவிட கட்சிகளை எதிர்ப்பதில் ஆரம்பத்தில் இருந்த அந்த மூர்க்கம் நாம்தமிழர் ஈழ ஆதர்வாளர்களிடம் இல்லை.. வெகுவாக குறைந்து விட்டது.. பலர் தமிழ்நாட்டு அரசியலால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்ற உண்மையை மெதுமெதுவாக உணர தொடங்கிவிட்டனர்.. ஆனாலும் நான் உட்பட பலரும் நாம் தமிழரை மனதில் ஆதரிப்பதற்கான காரணம் மேலே விசுகண்ணை கோசானுக்கு சொன்னவைதான்.. நம்ம ஆதரவை மற்ற கட்சிகளை பகைக்காமல் நம்மளவில் வைத்துக்கொண்டிருப்பதுதான் ஈழத்தமிழருக்கு நல்லது.. ஒரு வெகு சிலரை தவிர மற்றைய அனேக நாம் தமிழர் ஈழ ஆதர்வாளர்கள் இவற்றை புரிந்து கொண்டுள்ளதை இந்த வருடம் அங்கு நடக்க இருக்கும் தேர்தலில் இணையத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.. ஆனால் மறுவளத்தில் ஈழத்தமிழரில் பலர் நாம் தமிழர் கட்சி ஈழ ஆதர்வாளர்கள் மற்றைய திராவிட கட்சிகளுக்கு எதிராக ஆரம்பத்தில் மூர்க்கமாக களமாடி எமக்கு எதிராக அவர்களை திருப்பியதுபோல் நாம் தமிழர் கட்சி தமிழக உறவுகளுக்கு எதிராக மூர்க்கமாக களமாடி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை அதே மூர்க்கத்துடனும் வெறியுடனும் செய்கிறார்கள்.. அது எப்படி மிக மிகத்தவறோ அதேபோல் இதுவும் மிகமிகத்தவறே.. இவற்றையும் சேர்த்து நீங்கள் சுட்டிக்காட்டினால்தான் உங்கள் கரிசனை நியாயமானதாகவும் முழுமை பெற்றதாகவும் இருக்கும்..

    • Like 3
    • Thanks 1
  16. 6 hours ago, விசுகு said:

    சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி இங்கே பதிந்ததே நான் தான். ஆனால் தமிழகத்தில் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று வகுப்பெடுத்தபடி நாம் தமிழரை வசைபாடி 13 பக்கங்களுக்கு நீட்டி இருக்கும் உங்கள் அரசியல் இங்கே புரிந்து விட்டது. டொட். 

    தவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.. நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இவை எதுவும் தடுக்காது.. மெதுவாக வளரும் கட்சி நிரந்தரமான ஒரு குறிப்பிட்ட இலக்க வாக்காளர்களை ஒரு போதும் இழக்காது.. அதிமுக திமுக விசிக பாமாக போன்றவை அப்படி நிரந்தர வாக்காளர்களை எப்பொழுதும் கொண்டிருக்கும்.. நாம் தமிழர் கட்சி அந்த இடத்திற்கு எப்பவோ வந்துவிட்டது.. இந்த தேர்தலில் நாம் தமிழர் மேலும் வளருமா அல்லது அந்த நிரந்தர வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் நின்றுவிடுமா என்று தெரியும்..

    தவக்கைகள் கத்தி வயிறு வெடித்து செத்துவிடும்.. ஊர் தூக்கத்தை கெடுக்க முடியாது அவற்றால்.. 

    • Like 2
    • Thanks 1
  17. என்ன அதிசயம்.. முத்தவெளி கடக்க வெட்டின பனமரம் இரவோட இரவா முளைச்சு வளந்து நிக்குது.. தமன்னாவின் சக்தியோ சக்திதான்.. ஓம் தமன்னா அடி போற்றி..🙏

    • Haha 1
  18. //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//

     

    அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..

    • Thanks 1
  19. நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன.. 

    உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔

  20. தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..

    • Like 2
    • Thanks 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.