Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1347
  • Joined

  • Days Won

    2

Posts posted by நியாயம்

  1. 2 hours ago, பகிடி said:

    ரணில் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை,  இந்தியா இனிமேலும் இலங்கை தமிழ் மக்கள் மேல் இந்தியா செல்வாக்கு செலுத்த முடியா தீர்வை வழங்க விரும்புகின்றார். தமிழ் மிதவாதிகளும் சிங்கள மக்களின் மிதவாதிகளும் இணைந்து தீர்வை நோக்கி செல்லும் பொழுது இந்தியாவின் நரித் தனத்தில் இருந்து நாம் சற்றேனும் தள்ளி இருக்கலாம். 

     

    நான் நோக்கும் விடயங்கள்: ராஜபக்ச குடும்பம் ஆட்சியை கைப்பற்றி நாட்டை நாசமாக்காமல் பார்க்க வேண்டும். மைத்திரி போல் அனுபவம் இல்லாதவர்கள் தலைமைக்கு வந்து நாட்டை நோக வைக்க கூடாது. தமிழர் பொது வேட்பாளருக்கு வோட்டு போடுவது பிரச்சனை இல்லை. ஆனால் இது பரிசோதனை களம் இல்லை. தமிழ் வேட்பாளருக்கு வோட்டு பிரிவது ராஜபக்ச அரசியலுக்கு சாதகமாக அமையக்கூடாது. ரணில் மூலம் அதிக எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் நிலமை இன்னும் மோசமாக செல்லாது என நினைக்கின்றேன். 

  2. தமிழ்வின் தளத்தில் ஈ பி டி பி கட்சி தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். எனது அபிப்பிராயமும் தற்போதைய நிலமையில் ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதே நல்லது போல் தோன்றுகின்றது. ரணில் சிறந்த தெரிவு இல்லையாயினும் உள்ளவற்றில் இதுவே நல்லதாக தெரிகின்றது. 

    • Like 1
  3. @nedukkalapoovan தற்போது எந்த நாட்டில் வாசம் செய்கின்றீர்கள்? இலங்கை, இலங்கை போலிஸ் பற்றி சல்லடை போடுவது சரி. உங்கள் தற்போதைய நாட்டை அறிந்தால் நாங்கள் வகுப்பை, ஆராய்ச்சியை உங்கள் நாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்: அதன் போலிஸ், அதன் அரசாங்கம், அதன் வரலாற்று சம்பவங்கள் என ஒவ்வொன்றாக..

    உங்கள் கதையை பார்தால் உங்கள் அமைவிடம் நிச்சயம் தேவலோகம் போல் தெரிகின்றது.

  4. 1 hour ago, nunavilan said:

    அப்படி அவர் தமிழருக்கு எதிராக செயற்பட்டதாக தெரியவில்லை.

    பஞ்சாபிகள்,சீனர் பலர் பல காலமாக  காவல்துறையில் இருந்தும் இவர் தெரிவானது ஆச்சரியமளித்தாலும்  இவரின் திறமையாக இருக்கலாம் என நினைக்கிறேன். 

    இணையத்தில் வாசித்து, யூரியூப் காணொளிகள் பார்த்து பெற்ற தகவல்களின் பிரகாரம் இவர் பொலிஸ் துறையில் அதீத திறமைசாலிகளில் ஒருவர். இவரது பதவி இன்னும் ஐந்து வருடங்களுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டு உள்ளது. வட அமெரிக்காவில் பெரியதொரு பிரதேசத்து காவல்துறைக்கு பொறுப்பாக எங்களில் ஒருவர் உள்ளது எமக்கு பெருமையை அளிக்கும் விடயம் மட்டுமல்ல எமது துறைகளில் நாம் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய ஊக்குவிப்பும் ஆகும். பீல் என அழைக்கப்படும் பிரதேசத்துக்கு மட்டும் அல்ல ஒன்றாரியோ மாகாணத்தின் பொலிஸ் அமைப்புக்களின் தலைவரும் இவர் என கூறப்படுகின்றது. 

    இப்படிப்பட்ட ஒருவருக்கு யாழ் யாழ் கருத்துக்களத்து ஜாம்பவான்கள் பாடம் எடுக்கின்றார்கள் என்றால்.. ஆஹா.. எந்தப்பக்கம் திரும்பி புளகாங்கிதம் அடைவது என தெரியவில்லை.

    • Like 3
  5. 19 hours ago, விசுகு said:

    அழிவை தடுக்க என்று யார் சொன்னார்கள்??

    நாங்கள் சொன்னோமில்ல??

    காசு தாங்க புனருத்தாரணம் செய்ய?

    இந்த கடன்களில் இருந்து மீள வேற வழி??

    இலங்கைக்கு நமது ஆயுள் காலத்தில் மீண்டும் இன்னோர் சுனாமி வரக்கூடாது. 

    19 hours ago, goshan_che said:

    இல்லை என்றே நினைக்கிறேன். 

    நான் முதலில் சுனாமி என்ற சொல்லை கேட்டது ஜனவரி 2003 இல் அன்பே சிவம் படத்தில். அதில் தன் தந்தை இராட்சத அலையில் அள்ளுண்டு போனார் என கூறும் கமல் பாத்திரம், ஜப்பானில் 50 அடிக்கெல்லாம் அலைவரும், சுனாமி என்பார்கள் என சொல்லுவார்.

    அதன்பின் கூகிளை நோண்டி என்னெவென்று அறிந்தேன். அண்ணளவாக இரு வருடத்தில் எல்லார் வாயிலும் சுனாமி, சுனாமி என்பதே பேச்சாக இருந்தது.

    ஆனால் இதுதான் தமிழர் தேசத்தின் முதல் சுனாமி அல்ல. ஐரோப்பிய ஆட்சியில் கூட அடித்ததாம்.

    ஆனால் நூற்றாண்டுக்களுக்கு பின் வருவதால், பொது பிரக்ஞையில் சுனாமி மீதான பயம், அக்கறை இருப்பதில்லை.

    2010 வரை கூட கரையோத்தில் இருந்து குறித அளவு தூரத்தில் கட்டுமானானம் கட்ட யோசித்தார்கள்.

    ஆனால் இப்போ? துறைமுக நகரம்….தெஹிவளை, கல்கிசையில் கடலுக்குள் உணவங்கள் கட்டாத குறை.

     

    பெரிய பிரச்சனை என்ன என்றால் நம்மட சனம் இருக்கும் இடத்தைவிட்டு மசியாது. ஆட்களை குண்டுக்கட்டாக தூக்கித்தான் அப்புறப்படுத்த பேண்டும். எச்சரிக்கை கொடுக்கப்பட்டதும் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்வதற்கு உதுகள் சொல்வழி கேட்கும் சனங்களா. 

    • Like 1
    • Haha 1
  6. வரப்போகுது வரப்போகுது என்று சொல்லி ஒரு நாள் திரும்ப வரப்போகுது என்று வைப்போம். எச்சரிக்கை கொடுப்பது சரி. இன்னோர் சுனாமி அழிவின் பாதிப்புக்களை தடுக்க/குறைக்க எப்படியான முன்னேற்பாடுகள் தற்போது உள்ளன?

    எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் அந்த எச்சரிக்கையை மக்கள் செவிமடுத்து கேட்டு தம்மை பாதுகாக்கும் ஏற்பாடுகளில் இறங்குவார்களா?

    இயற்கை அழிவுகளுக்கான ஆபத்துக்கள் நிறையவே உள்ளன. இதற்கான தயார்ப்படுத்தல் உள்ளதா?

    • Like 3
    • Thanks 1
  7. வாஸ்தவம் தான். இணைய உலகில் புகுந்த ஆரம்பத்தில் நாங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டு அது போய் சேர்ந்துவிட்டது எனும் (செண்ட்) செய்தி காண்பிக்கும்வரை நீண்டநேரம் பொறுமையுடன் பார்ப்போம். 

    டயல் அப் இண்டர்நெட் நிலவியபோது பலவிதமான சத்தங்கள் எல்லாம் நெட்வேர்க் ஊடாக கேட்க ஒரு பக்கத்தை பார்ப்பதற்கும், புரட்டுவதற்கும் இடையில் அது லோட் செய்யும்போது அந்த இடைப்பட்ட நேரத்தில் பலவித காரியங்களை செய்துவிடுவோம்.

    இப்போது எல்லாம் வேகமாகத்தான் உள்ளது. இருபத்து ஐந்து வருடங்கள் முன்புடன் ஒப்பிடும்போது இப்போது அசுரவேகம் என கூறவேண்டும். 

    இருந்தும் என்ன பயன்? எமது வாழ்க்கை தரம் முன்னேறி உள்ளதா? உலகில் அமைதி நிலவுகின்றதா? மனிதன் முன்பை விட மகிழ்ச்சியாக வாழ்கின்றானா? எல்லாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள். 

    இப்போது ஒரு சில நிமிடங்களில் எவ்வளவோ தகவல்களை பரிமாறுகின்றோம், தரவேற்றுகின்றோம், இறக்குகின்றோம். தகவல்கள் அசுர வேகத்தில் பரிமாறப்படுகின்றன.

    இருந்தும் என்ன பயன்? பல வினாக்கள் எழுகின்றன. 

    • Like 1
  8. @venkkayam இந்த பதிவு உங்கள் சொந்த ஆக்கமா?

    ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு கல்வியூட்டல் நிச்சயம் எல்லாரும்கும் தேவை. 

    7 hours ago, venkkayam said:

    வெளி நாடுகளில்   Adrenalin pen (Epi pen) விற்பனையில் இருக்கின்றது. இப்படியான ஒவ்வாமைகள் ஏற்படும்போது பேனாபோல் இருக்கும் இதன் மூடியைக்கழற்றி நாமே நமது காலில்

    முதலுதவி பயிற்சியின்போது இதைப்பற்றி அறிந்தேன். இலங்கையில் Epi pen பாவனை இல்லையா? இதற்கு நிகராக எப்படியான வழி பயன்படுத்தப்படுகின்றது?

    அஸ்மா உள்ளவர்கள், மூச்சு எடுப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் எல்லாம் அவதானம் தேவை. அலர்ஜி இல்லை என்று நினைத்துக்கொண்டு மருந்து தரப்படுவது பற்றி கவனம் வேண்டும். 

  9. On 27/12/2023 at 06:56, ஏராளன் said:

    யாழ் இணையம் இன்னமும் சிலவேளைகளில் குறிப்பாக செய்தி இணைக்க முன்னர் தேடும்போதும் செய்தியை இணைத்து சேமிக்கும்போதும் மெதுவாகத்தான் இயங்குகிறது. மோகன் அண்ணாவும் நிர்வாகிகளும் கவனியுங்கோ.

    தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் தொந்தரவு தந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கோ. smiley-1170058_960_720.jpg

     

    மெதுவாக இயங்குவதும் நல்லதுதான். கருத்தை எழுதும்போது கொஞ்சம் நிதானமாக சீர்தூக்கி சிந்தித்து எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். 

    ரொம்ப வேகமாக இயங்கி என்னதான் எழுதி கிழிக்கப்போகின்றோம். 

    • Haha 1
    • Sad 1
  10. இலங்கையில் வயது வேறுபாடின்றி கில்மிசா பங்குபற்றிய போட்டி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் வாயிலாக பலரும் பார்ப்பதையும் கில்மிசா மீது கொண்ட அபிமானத்தையும் நான் நேரில் பார்த்தேன். சிறிய வயதில் இந்த சிறுமி மூலம் மக்கள் மனதில் மகிழ்ச்சியை கொடுக்க, இடம்பிடிக்க முடிந்தது. இங்கே பெரியவர்களின் நக்கல்கள், நையாண்டிகள் புரியவில்லை. உங்கள் பிரச்சனைதான் என்ன?

    • Like 1
  11. எம்மில் பலருக்கு விஜயகாந்த் அவர்கள் ஒரு தமிழ் திரைப்பட கதாநாயகனாகவே தெரியும். 

    எனது நினைவில் விஜயகாந்த் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படம், இதில் வரும் பாடல்கள், அதில் அவர் நடிப்பு எம்முடன் கலந்தவை. 

    ஆழ்ந்த அனுதாபங்கள்!

  12. On 14/12/2023 at 06:16, nunavilan said:

     

    இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல

    இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல

     

    இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். 

    சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், பெளசி, திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார், தவ்பிக் ஆகியோரும் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு பற்றி ஊடகங்களுடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

    சிங்கள - பெளத்த நாடு என்ற சிந்தனை, இலங்கையில் நிரந்தர அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட தடையாக இருக்கிறது என சந்திப்பில் கலந்துக் கொண்ட தேரர்களை நோக்கி சிங்கள மொழியில் கூறினேன். 

    அதேவேளை இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும் என சந்திப்பில் கலந்துக் கொண்ட உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களை நோக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறினேன்.

    உங்களது இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம். அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை விலத்தி வைத்து விட்டு நேரடியாக நீங்கள் இந்த முயற்சி செய்வதும் இந்த முதற்கட்டத்தில் சரிதான். 

    முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டால், அடுத்த கட்டத்தில் அது அரசியல் கட்சிகளிடம்தான் வரவேண்டும். பாராளுமன்றத்தில்தான்  இன்றைய சட்டங்கள் திருத்தப்பட முடியும். புதிய சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். ஆகவே அது  வரும்போது வரட்டும்.

    ஆனால், இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். 

    இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும். இந்த அடிப்படை  ஆரம்ப புள்ளியாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் இந்த முயற்சிபயனற்றதாகி விடும்.

    “76 விகிதம் சீனர்களை கொண்ட சிங்கப்பூர், அரசியல் சட்டப்படி தம்நாட்டு பன்மைத்துவத்தை கொண்டாட முடியும் என்றால், ஏன் இலங்கையில் எம்மால் அதை கொண்டாட முடியாது?” என்ற கேள்வியை முயற்சியில் ஈடுபடும் தேரர்களை நோக்கி நான் எழுப்பவில்லை. 

    ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். முதலிலேயே அவர்களை தளர்வடையச்செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த முறை இதை நான் கேட்பேன். இத்தகைய கேள்விகளை ஏற்கனவே பாராளுமன்றத்திலும், உள்நாட்டு மேடைகளிலும் நான் பலமுறை எழுப்பியுள்ளேன் என தெரிவித்தார்.  

    https://tamil.adaderana.lk/news.php?nid=181386

     

    இனரீதியாக மக்களிடம் பாகுபாட்டை ஏற்படுத்தி பல்வேறு வசதிகள், வாய்ப்புக்கள் பெருன்பான்மை இனத்திற்கு செல்லும்வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்ததே இலங்கையில் சிறுபான்மை இனத்தினர் தனிநாடு சிந்தனை நோக்கி செல்வதை வலுப்படுத்தியது. 

    எனவே, இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பெருன்பான்மை மக்களின் நலன்களை மையப்படுத்தி சிறுபான்மை மக்களை நலிவுறசெய்யும் சட்டங்கள், நடைமுறைகள் படிப்படியாக இரத்து செய்யப்பட்டால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எனும் கோட்பாடு வெற்றி பெறும். 

    மனோகணேசனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக தென்படுகின்றது. 

    பேச்சுவார்த்தையில் பங்காளிகளான தரப்புக்கள் விட்டுக்கொடுப்புக்கு தயார் இல்லை என்றால் பேச்சுவார்த்தை பயன் தராது. 

    • Like 2
  13. இங்கு என்ன சொல்லப்படுகின்றது என்றால் வெளிநாட்டில் இருந்து நாம் கொண்டு சென்றுபோய் அங்கே அன்பளிப்பாக கொடுக்கும் அன்லொக் செய்யப்பட்ட கைத்தொலைபேசிகள், மற்றும் பொதிகளில் அனுப்புகின்ற கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவது என்றால் அவற்றை முதலில் இலங்கையில் பதிவு செய்யவேண்டும்? இந்த செய்தி விபரம் அறிந்தவர்கள் செய்தியின் பொழிப்புரையை வழங்குங்கள் பார்க்கலாம்.

    கைத்தொலைபேசி விலைகள் 2024 தொடக்கம் அதிகரிக்கவுள்ளதாக முன்னம் செய்தி பார்த்த ஞாபகம். அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு இலங்கையில் பதிவுசெய்யப்படாத கைத்தொலைபேசிகளை தடை செய்ய முஸ்தீபு நடக்கின்றதோ?

    செய்தி புரியவில்லை. 

  14. வரலாற்றை கொஞ்சம் முன்னம் பார்த்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு இந்த விடயத்தில் முன்னம் தவறு செய்தது என்று இப்போதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

    என்னவோ கஜேந்திரகுமார்… ?? 

  15. கீல்மிசா 28ம் திகதி பலாலி விமானநிலையம் வருவதாகவும், பிரமாண்டமான வரவேற்பு கொடுப்பதற்கு ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் ஒரு யூரியூப் காணொளி பார்த்தேன். 

    பலரது மனதை கில்மிசா வெகுவாக கவர்ந்துள்ளார். 

    • Like 1
  16. 2 hours ago, விளங்க நினைப்பவன் said:

    வருகின்ற நல்ல நோக்கம் கொண்ட முயற்சிகளையும்  எதிர்பதை பார்த்தால்  உறங்கு நிலை உறுதி போல் உள்ளது ☹️

     

    ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகின்றது. இன்னும் இதே அளவு காலம் சென்றால் 30 வருடங்கள். 

    இனி வரும் தலைமுறை பிரச்சனைகளை எப்படி கையாளுமோ. 

    • Thanks 1
  17. 8 hours ago, விசுகு said:

    சரியான செயற்பாடு ...

    தேர் இழுக்கும் போது அங்கங்கே குத்தி வைக்கணும். 

     

    இலங்கையில் பல்வேறு தரப்புக்களை சந்தித்தவர்கள் தமிழர் தரப்பில் உள்ளவர்களையும் சந்திக்கலாம். இனி இதை செய்வார்கள் என எதிர்பார்ப்போம். 

    • Thanks 1
  18. இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

    • Like 1
  19. 47 minutes ago, nedukkalapoovan said:

    சொறீலங்கா எயார் லைன்ஸ் பிரித்தானியாவில் வைச்சே இதை தடுத்திருக்கலாமே. காசுக்கு பார்த்தும் பார்க்காமலும் ஏத்திறது.. ஏத்திப் போட்டு கொழும்பில வைச்சு மிச்சம் மீதியை புடுங்கிறது.

    சொறீலங்கா உல்லாசப் பயணத்துறைக்கு உகந்த நிர்வாக முறைமையற்ற நாடாகி விட்டது. 

     

    நீங்கள் இன்னமும் விமான பயணம் செய்யவில்லை போல?

    பிரித்தானியாவில் விமானத்தில் ஏறும் ஒருவரின் பொதிகளை பரிசோதனை செய்வது யார்?

    • Haha 1
  20. 2 hours ago, விசுகு said:

    அப்படியானால் இலங்கையில் ஒரு தீர்வு வேண்டும் என்றால் யாருடனும் பேச வேண்டும்??? 

     

    நல்லதொரு வினா. 

    இலங்கையில் ஓர் தீர்வு வேண்டுமென்றால் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தரப்புக்கள் எவை? அடுத்ததாக, யார் யாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் தீர்வு கிடைக்காது?

    முதலில் தமிழ் தரப்புக்களை மட்டுமாவது ஒரு நேர்கோட்டில் இணைக்க முடியுமா? இது சாத்தியமா?

    இல்லை என்றால் இன்னும் நூறு வருடங்களின் பின்னரும் பிணக்குகள் தொடரும். 

    • Like 1
    • Thanks 1
  21. 8 hours ago, Nathamuni said:

    அமெரிகாக சுப்பிரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போகுமாம்!

    பைடன், டிரம்ப்: கிழடுகள்.

    ஓய்வெடுத்து அமைதியாகாமல், அல்லாடுதுகள்!

    என்னப்பு உலக நடப்பு விளக்கம் போதாது போல. டிரம்ப் ஐயா அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. தேவையானவர்கள் எதற்கும் இப்பவே பிரசர் குளுசையை போட தொடங்குங்கள். 

  22. எவ்பிஐ, மொசாட் தொடங்கி எல்லா நாட்டு உளவுப்பிரிவும் எல்லாத்துக்கையும் நிற்குது போல.

    நூறு டம்மிகளில் நான்கைந்தை கண்டுபிடிப்பது கடினம்தான். 

    எனக்கு இந்த தருணத்தில் வடிவேலுவின் பின்லாடன் பகிடி நினைவுக்கு வருகின்றது.

    • Haha 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.