
நியாயத்தை கதைப்போம்
கருத்துக்கள உறவுகள்-
Content Count
211 -
Joined
-
Last visited
Community Reputation
78 GoodAbout நியாயத்தை கதைப்போம்
-
Rank
உறுப்பினர்
Recent Profile Visitors
1,526 profile views
-
யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!
நியாயத்தை கதைப்போம் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் ஆசிரியர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கிராம சேவைஅலுவலர் வரை அனைவருமே இலங்கை அரசாங்கத்திற்கு கூலிக்கு வேலை செய்கிறார்கள். இந்த வகையில் இலங்கை இராணுவம், இலங்கை காவல்துறை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படையில் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் குற்றம் அல்லவே. இராணுவத்தில் தமிழர்கள் ஏற்கனவே உயர் பதவியும் வகித்து உள்ளார்கள். வெளிநாட்டு காசு ஊரில் எல்லாருக்கும் கிடைப்பது இல்லையே. -
யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!
நியாயத்தை கதைப்போம் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே. -
99 சாங்ஸ் - ஏ.ஆர்.ரஹ்மான் கதையாசிரியர் ஆனது எப்படி?
நியாயத்தை கதைப்போம் replied to கிருபன்'s topic in வண்ணத் திரை
அந்தக்காலத்து புலவர்கள் நூறு பாடல்களை ஒரு நாளில் எழுதி முடிப்பார்கள். நம்ம பையன் வருட கணக்காய் முக்கி நூறு பாடல்களை எழுதி முடிக்கவும் பொண்ணு "நன்றி நண்பா!" சொல்லிவிட்டு பசையான மாப்பிள்ளை ஒருத்தனை கைப்பிடித்து லைபில் செட்டில் ஆகவும் கணக்கு சரியாய் போகும். -
99 சாங்ஸ் - ஏ.ஆர்.ரஹ்மான் கதையாசிரியர் ஆனது எப்படி?
நியாயத்தை கதைப்போம் replied to கிருபன்'s topic in வண்ணத் திரை
கதைக்கரு சரியான லூசுத்தனமாய் உள்ளது. ஒரு பெண்ணை அடைவதற்கு அறிவு உள்ள ஒரு பையன் நூறு பாட்டுக்களை எழுதி மினக்கடுவானா? பெத்து வளர்த்த தாய், தகப்பனுக்கு ஒரு பாடலாவது எழுதினால் நன்றிக்கடனாக போகும். எங்கள் இளைய தலைமுறை காதல்பித்து பிடித்து அழிவதற்கு இப்படியான கதைக்கரு உதவலாம். பையன் நூறு பாடல்களை நூறு வெவ்வேறு பெண்களுக்கு எழுதினால் அதில் ஒரு பத்தாவது பையனை நோக்கி பரிதாபத்துடன் திரும்பி பார்க்கும். ரஃமான் சாரிடம் காசு உள்ளது. செலவு பண்ணுறார். -
மாநகர சபை அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக மேயர் செயற்பட்டது நிச்சயமாக தவறுதான். சீருடை வழங்கல் பரிசோதகர் பணி அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம். கொழும்பு மேயரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள நகரஙகளின் மேயர்களோ மாநகர சபையின் அங்கத்தவர்க்களுடன் அபிப்பிராயம் கேட்காது ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஊடகங்களே துரத்தி, துரத்தி உருட்டி எடுக்கும். அரச பணியாற்றும் வளர்ந்து வரும் ஒரு இளைய தலைமுறை சேவையாளருக்கு இப்படியான மனநிலை காணப்படுவது ஆர
-
சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரியை தாக்க முடியுமா?
நியாயத்தை கதைப்போம் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
குறிப்பிட்ட சம்பவத்தில் காண்டாமிருகம் மாதிரி ஒன்று தெருவுக்கு வந்து ஒரு பொதுமகன் மேல் பாய்கின்றது. நல்லகாலம் உயிர் ஆபத்து ஏற்படவில்லை. நீதிமன்றம், மனித உரிமை ஆணைக்குழு எல்லாம் சென்று முறைப்பாடு கொடுக்கலாம். ஆனால் அதற்கு பாதிக்கப்படுபவர் உயிருடன் தப்ப வேண்டுமே? -
சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரியை தாக்க முடியுமா?
நியாயத்தை கதைப்போம் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
அஜித் ரோஹண விளக்கத்தை பார்த்தால் தன்னை யாராவது தாக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகின்றார் போலும். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக ஒரு பொறுப்பான காவல்துறை அதிகாரியின் விளக்கமாக இது தென்படவில்லை. -
இரண்டாயிரத்து ஒன்பதில் போர் நிறைவுக்கு வந்துவிட்டது. பன்னிரண்டு வருடங்களின் பின்னர் உணரப்படும் போரின் அழிவுகளில் இதுவும் ஒன்று. எமது கல்வியில் கைவைத்துவிட்டான், தரப்படுத்தலில் எம்மை புறக்கணிக்கின்றான் என்று தொடங்கிய போராட்டத்தி்ன் முடிவில் பாடசாலைகளுக்கே மூடுவிழா என்பது இன்னோர் அவலச்செய்தி. மூடப்படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ள பாடசாலைகளில் முன்னம் கல்விகற்ற பழைய மாணவர்கள்தான் தமது பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்பட உதவிக்கரம் கொடுக்கவேண்டும். பீ2பீ, உண்ணாவிரதம், வாகன பேரணி என சர்வதேசத்தை நோக்கி எங்களுக்கு சோலிகள் பல. ஆனால், அத்திவாரமே ஆட்டம் காண்கின்றது இங்கு. யாழ் பல்கலைக்கழக
-
விடுதலைபுலிகள் இயக்கத்தின் தூண்களில் ஒன்றாக விளங்கிய மாத்தையாவின் சரித்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால், தலைவருக்கு முன்னம் காரியத்தில் கருணா முந்திவிட்டார். , 80களில் மாற்று இயக்கங்களை ஓரம் கட்டியதில் தொடங்கிய பிரிவினை கடைசியில் விடுதலை புலிகள் அமைப்பையும் சின்னாபின்னம் ஆக்கியது. ஆளையாள் குற்றம்சாட்டியும், தண்டித்தும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கப்போவது இல்லை என்பதே வரலாறு இதுவரை எமக்கு போதித்த பாடம்.
-
புதிய அகவையில் இன்று காலடி பதிக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்!
- 19 replies
-
- யாழ் அகவை
- கள உறுப்பினர்கள்
-
(and 1 more)
Tagged with:
-
வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.
நியாயத்தை கதைப்போம் replied to Nathamuni's topic in வாழும் புலம்
Salesforce வந்தது, marketஐ பிடித்து முன்னணியில் நிற்பது எல்லாம் பல வருடங்கள் பழைய கதை. Facebook, Amazon தொடக்கம் உலகில் பரந்துபட்ட அளவில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் Salesforceஐ பாவிக்கின்றார்கள். SAP மட்டுமே உலகம் இல்லை. IT, HR பற்றி இங்கு கருத்துக்கள் சொல்வதற்கு எனக்கு தகமைகள் நிறையவே உள்ளன. ஏதோ ஒரு ஆர்வகோளாறு மற்றும் சமூக அக்கறையில் தெரியாத்தனமாக இங்கு கருத்துக்கள் வைத்துவிட்டேன்.உங்கள் திரியில் இனிமேல் எனது கருத்துக்கள் வரமட்டாது. வணக்கம்.