கைக்காசுக்கு வேலை செய்வது, களவாக வேலை செய்வது எல்லாம் வெளிநாடுகளில் புதிய விடயங்கள் இல்லை. அவை காலங்காலமாக எல்லா இடங்களிலும், சமூகங்களிலும் உள்ளன.
சைனாக்காரன், இந்தியாக்காரன் என்று முதலாளிகள் செய்யும் அடாவடிகள் எல்லாம் நாம் அறிந்ததே.
இங்கு யதார்த்தம் என்ன என்றால் முறையான வேலை செய்யும் அனுமதி, மற்றும் குடியுரிமை உள்ளவர்களிடமே அடிமாட்டு விலைக்குதான் வேலை வாங்குகிறார்கள். வேலை வழங்கும் ஏஜென்சிகள் இன்னொரு பக்கத்தில் தொழிலாளர் உழைப்பை தின்று ஏப்பம் விடுகின்றன. தகுந்த வேதனம் வழங்காமை தொடக்கம் இவர்கள் செய்யும் சுத்து மாத்துக்க்கள் முடிவில்லாத தொடர்கதை.
தாங்கள், தங்கள் வலைப்பூக்கள், தளங்கள் பிரபலம் அடைவதற்கு சமூக ஊடகப்பரப்பில் சகட்டுமேனிக்கு கண்டதையும் எழுதித்தள்ள பலர் உள்ளார்கள். தமிழ் கடைகளை புறக்கணிக்க போகின்றீர்களா? நல்லது நியாயமாக ஓடுகின்ற இந்தியன், சைனா கடை எது என்று கூறுங்கள், நானும் வருகின்றேன்.