-
Posts
601 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by நியாயத்தை கதைப்போம்
-
மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.
நியாயத்தை கதைப்போம் replied to nedukkalapoovan's topic in உலக நடப்பு
ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இலங்கை தமிழரை இழுத்துபோடுவது உணர்ச்சிபூர்வமானது, ஆனால் விவேகம் அற்றது. ரஷ்யா - உக்ரைன் விடயத்தில் நடுவுநிலமையே இலங்கை தமிழரை பொறுத்த அளவில் தேவையானது என்பது எனது அபிப்பிராயம். -
காவல்துறை ஒருவரை குற்றவாளி என கூறும்போது நம்பியவர்கள், அதை ஏற்றுகொண்டவர்கள் நீதித்துறை அதே நபரை நிரபராதி என அறிவிக்கும்போது அதை நம்பி ஏற்றுகொள்ள முடியவில்லை என்றால்…? யார் குற்றவாளி, யாருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என இறுதி தீர்மானம் எடுக்க உரித்து உள்ளவர்கள் ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களா அல்லது நீதித்துறையா?
-
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நியாயத்தை கதைப்போம் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
மகிழ்ச்சியான செய்தி. 90களில் ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், இதர தமிழ் சஞ்சிகைகளில் எமக்கு அறிமுகமாகிய பேரறிவாளனின் வாழ்க்கையில் இவ்வளவு நீண்ட காலத்தின் பின் ஒளி தோன்றுவது தர்மத்தையும், அன்பையும் போதிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நீதி நிர்வாகம் இன்னும் முழுமையாக செத்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. -
புரூஸ் லீ நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதாக சிறுவயதில் கேள்விப்பட்டேன். இன்று புரூஸ் லீ மரணம் பற்றி இணையத்தில் என்ன சொல்கின்றார்கள் என்று வாசித்து அறிந்தேன். 33 வயதில் இளவயது மரணம். அவர் மகனும் இள வயது விபத்து மரணம். மகளுக்கு சந்ததி காக்க ஒரு குழந்தை. சாவு எங்கள் அனைவருக்கும் உத்தரவாதம். கராட்டி கிங் மீளா துயில் கொள்வதை காணொலியில் பார்க்க வேதனையாக உள்ளது.
-
பிரதமர் ரணில்... சஜித் பிரேமதாசவுக்கு, கடிதம்!
நியாயத்தை கதைப்போம் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
லவ் லெட்டரா? இருவரும் நேரில் சந்தித்து உரையாட முடியாத தூரத்திலா உள்ளார்கள்? -
துரியோதனனும் பீமனும் திரும்பி வந்தனர்.
நியாயத்தை கதைப்போம் replied to nedukkalapoovan's topic in உலக நடப்பு
மீசை தமிழருக்கு மட்டுமா உள்ளது? துரியோதனன், பீமன் ஆகியோர் தமிழரா? -
சுப்பிரமணியம் சுவாமி மகிந்த சகோதரர்களின் குடும்ப நண்பர். அவர்களுடன் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் செய்யக்கூடும். அனுதாபம், ஆவேசம் வராதா பின்ன.. மகிந்த சகோதரர்களின் ஆட்சி ஆட்டம் கண்டால் அதன் பின் சாமியை இலங்கையில் வேறு யார் அழைத்து, மரியாதை செய்து, கெளரவிக்க போகின்றார்கள்? தனது முன்னைய டிவிட்டர் பதிவுகளில் பிரேமதாசாவே இலங்கையில் இந்திய இராணுவத்தின் தோல்விக்கு காரணம் என்றும் கூறி உள்ளார். சாமி சஜித் அதிகாரத்தை பிடிப்பதை விரும்பமாட்டார் என்றே தோன்றுகின்றது. சாமியை டுவிட்டரில் பத்து மில்லியன் கணக்குகள் பின் தொடர்கின்றன. டுவிட்டருக்கு வந்த சோதனை!
-
அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
-
அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம்
நியாயத்தை கதைப்போம் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
கோவிட் வந்தபோது ஊரடங்கு; பொருளாதார சரிவு வந்தபோது அவசரகாலம். வெளியே வராமல் இருக்க ஒன்று. உள்ளே பிடித்து போட இன்னொன்று. -
கைக்காசுக்கு வேலை செய்வது, களவாக வேலை செய்வது எல்லாம் வெளிநாடுகளில் புதிய விடயங்கள் இல்லை. அவை காலங்காலமாக எல்லா இடங்களிலும், சமூகங்களிலும் உள்ளன. சைனாக்காரன், இந்தியாக்காரன் என்று முதலாளிகள் செய்யும் அடாவடிகள் எல்லாம் நாம் அறிந்ததே. இங்கு யதார்த்தம் என்ன என்றால் முறையான வேலை செய்யும் அனுமதி, மற்றும் குடியுரிமை உள்ளவர்களிடமே அடிமாட்டு விலைக்குதான் வேலை வாங்குகிறார்கள். வேலை வழங்கும் ஏஜென்சிகள் இன்னொரு பக்கத்தில் தொழிலாளர் உழைப்பை தின்று ஏப்பம் விடுகின்றன. தகுந்த வேதனம் வழங்காமை தொடக்கம் இவர்கள் செய்யும் சுத்து மாத்துக்க்கள் முடிவில்லாத தொடர்கதை. தாங்கள், தங்கள் வலைப்பூக்கள், தளங்கள் பிரபலம் அடைவதற்கு சமூக ஊடகப்பரப்பில் சகட்டுமேனிக்கு கண்டதையும் எழுதித்தள்ள பலர் உள்ளார்கள். தமிழ் கடைகளை புறக்கணிக்க போகின்றீர்களா? நல்லது நியாயமாக ஓடுகின்ற இந்தியன், சைனா கடை எது என்று கூறுங்கள், நானும் வருகின்றேன்.
-
எதிலும் கூடக்குறைய வரலாம். தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்சிகள், சமூக மாற்றஙகளால் மனித வாழ்க்கை பாரிய மாற்றங்களை கண்டு உள்ளது. வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள், கலைஞர்கள் சேவை குறைத்து மதிப்பிடப்பட முடியாது. நான் கேட்ட, பார்த்த அளவில் சிறப்பாகவே செயற்படுகின்றார்கள். இவர்களை ஊக்குவிப்பது, உற்சாகம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம். வர்த்தக விளம்பரங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. சமூக ஊடக பரப்பில் அனைவருமே தம்மை முன்னிலைப் படுத்துகின்றார்கள். இங்கு வானொலி, தொலைக்காட்சி கலைஞர்கள் ஒதுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் இப்போது 2022ம் ஆண்டில் நிற்கின்றோம்.
-
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
யாழ். மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி காலமானார்
நியாயத்தை கதைப்போம் replied to கிருபன்'s topic in துயர் பகிர்வோம்
ஆழ்ந்த இரங்கல்கள்! -
உங்களுக்கு பறப்பு அசெளகரியத்தை கொடுத்தால் விமான நிறுவனத்திற்கு முறைப்பாடு கொடுக்கலாம். படம்/காணொலியை அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். Refund/Gift voucher ஏதும் கொடுப்பார்கள். விமானத்தின் Tail Numberஐ குறித்தால் அதன் வயது, பின்னணி பற்றி அறியலாம். சிலருக்கு தாம் பயணிக்கும் விமானங்களின் Tail IDஐ சேகரிப்பது பொழுது போக்கு. வெவ்வேறு சமயங்களின் அந்தந்த விமானங்களை இனம் காணலாம்.
-
கொழும்பில் இந்திய இராணுவமா? ஸ்டாலின் எப்படி உதவலாம்?
நியாயத்தை கதைப்போம் replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
ஒருவர் பெல்டி அடிக்கின்றார். சிரிப்பாக உள்ளது. நாளை அவனா நீ என்று குற்ற விசாரணை பிரிவு ஒன்று விசாரணை செய்தால் ஐயையோ அது ஆரோ சார் என்று வடிவேலு பாணியில் அழுது எஸ்கேப் ஆகும் பேர்வழிகள். தமிழ்சிறி யாழ் அகவை சுய ஆக்கத்தில் இணைத்த முட்டாள் தின புனைவு செய்தி இந்திய தூதரகம் மறுப்பு அறிக்கை விடும்வரை சென்றுவிட்டது என்று பரவசம் அடைந்து கருத்துகூறுபவர்கள் நாங்கள் தினமும் வாசிக்கும், பார்க்கும், கேட்கும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதையும் உணர்ந்தால் சரி. குணா கவியழகனின் காணொலிகள் சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகள் சிலவற்றிலும் இவர் பங்கு பெறுவதை கண்டுள்ளேன். சமூக ஊடக பரப்பு வலிமையானது. யூரியூப்பில் இவருக்கு கிட்டத்தட்ட 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட subscribers உள்ளார்கள் என பார்த்தேன். பல பயன் உள்ள விடயங்களை நமது பாவப்பட்ட சமூகத்துக்கு செய்யலாம். -
கொழும்பில் இந்திய இராணுவமா? ஸ்டாலின் எப்படி உதவலாம்?
நியாயத்தை கதைப்போம் replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
இந்த காணொலியை ஏப்ரல் மூன்றாம் திகதி பதிவு செய்துள்ளார். பொதுவான ஒரு பேசுபொருள் பற்றி அலசுகின்றார். இலங்கை பற்றி ஸ்டாலின் மோடியுடன் கலந்துரையாடியது, உதவுதல் பற்றிய கருத்துக்கள் யதார்த்தமானவையே. இங்கு கருத்துக்கள் எழுதிய சிலர் காணொலியை பார்க்காமல் காழ்ப்புணர்வில்? பதிவுகள் இட்டது போல் தோன்றுகின்றது.