Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1322
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. இவர் முன்னர் இருவர் மீது வாள்வெட்டு நடாத்தியதாக போலீசார் கூறுகின்றார்கள் என வீரகேசரி சொல்கின்றது. மேற்படி தகவல்கள் உண்மை எனில், வாள்வெட்டு நடாத்திய இவரை முன்னமே இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தார்களோ தெரியாது. அப்படி சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த கொலை நடைபெறாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.
  2. இனி கோயில் பக்கம் எவரும் வருவதையோ, பூசை செய்வதையோ கனவிலும் நினைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த காட்சிகள் எல்லாம் அரங்கேறுகின்றதோ என்னவோ. தொல்பொருள் திணைக்களம் தான் நினைப்பதை சாதிக்கின்றது. வேறு என்னதான் கூறுவது.. 😟
  3. மோதி நல்லவரா கெட்டவரா? நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவனா? 😁
  4. பாவம் அந்த மாணவன். ஆழ்ந்த அனுதாபங்கள். மாணவனின் வகுப்பினர், நட்பு வட்டம், பெற்றோர், பாடசாலை சமூகம், ஊரவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஊட்டும் சம்பவம் இது. இப்போது பல்வேறு பாடசாலைகளில் தட, கள/மெய்வல்லுனர் போட்டி நடைபெறும் காலம். அதேசமயம் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்பநிலை/காலநிலை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகின்றது. வெளியில் செல்லும்போது தற்போதைய காலநிலைக்குரிய எடுக்கவேண்டிய பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள்/நடைமுறைகள் பற்றி சுகாதார/மருத்துவ பிரிவினால் விழிப்புணர்வு கொடுக்கப்படுகின்றது. பொதுவாக காலை எட்டு மணிக்கு முன்னதாக மரதன் ஓட்ட போட்டி நிறைவடையும் வகையில் பாடசாலைகள் நிகழ்ச்சியை ஒழுங்கமைக்கின்றன. அத்துடன் மாணவர் ஒருவர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். முதலில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற பாடசாலை மரதன் ஓட்டப்போட்டியை எப்படி ஒழுங்கமைத்தது என அறியப்பட வேண்டும். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்றும் வரக்கூடாது தானே.
  5. சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி @ஏராளன்
  6. தொல்பொருள் திணைக்களம் மண்ணை தோண்டுகின்றோம் என்று பிரச்சனைகளை தோண்டுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இனங்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கத்தை ஓரளவுக்காவது பேணலாமோ? போலிசார் வெளிவிட்ட அறிக்கையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரே கிடுங்குப்பிடியாக நின்று சிவராத்திரி நிகழ்வு குழப்பம் அடைவதற்கு காரணகர்த்தா என தோன்றுகின்றது.
  7. இந்த இடத்தில் ஏற்கனவே விகாரை உள்ளதோ அல்லது விகாரை கட்டப்படுவதற்கான முஸ்தீபு நடக்கின்றதோ. அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போலத்தான் இதுவும் செல்லுமோ? இப்போது தாயகம் பற்றி கருத்துக்கள் கூறவே தயக்கமாக உள்ளது. ஒவ்வொரு செய்திகள், நடவடிக்கைகள் பின்னாலும் பின்னினாற் போல பல சூக்குமங்கள். வேடன் விரித்த வலையில் அகப்படுவது போன்றதுதான் சமூக ஊடகங்களில் எமது அபிப்பிராயங்களை தெரிவிப்பது என்பதுபோலாகிவிட்டது.
  8. என்ன கொடுமை ஐயா. தமிழ்வின்னில் காணொளி பார்த்தேன். இலங்கையின் போலிஸ் மட்டமான வேலைகள் செய்வதை பதிவு செய்து உள்ளார்கள். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என குரல்கள் ஒலிக்கும்போது சமய வழிபாட்டில் ஈடுபடுவர்களை அடாவடியாக வெளியேற்றுகின்றார்கள். இப்படியான செயல்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா? பார்ப்பவர்களுக்கு போலிசாரின் செயல் ஆத்திரத்தையே ஏற்படுத்தும். புத்தபிக்குகள் சமய அனுட்டானங்களில் ஈடுபடும்போது இப்படி யாராவது செய்தால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?
  9. டிரம்ப் நமது நண்பனும் அல்ல. பைடின் நமது எதிரியும் அல்ல. ஆனால், சிங்கத்தின் சிளிர்ப்பை பார்த்துமெய்சிலிர்க்காமல் இருக்க முடியவில்லை. 😁
  10. நிலமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம். சிங்கன் மீண்டும் வந்தால்தான் உள்ளது மிச்சம் கதை எல்லாருக்கும். 😁
  11. மஞ்சள் சிவப்பு வர்ணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் கொடி கட்டவில்லை. இல்லாவிட்டால் கருத்துக்கள் கூறும் சிலருக்கு புகையாது. சிலவேளைளில் தம்மைவிட கற்றவர்கள், முன்னேறியவர்கள் ஏதும் நல்லது செய்து பெயர் எடுக்கின்றார்கள் என்று புகையிதோ தெரியாது. இளனி குடித்து பார்க்கலாமே. மானிப்பாய் வைத்தியசாலை மீது ஒரு காலத்தில் விமான குண்டு வீசப்பட்டது. குண்டு வீசப்பட்ட சில தினங்களில் அழிவை பார்த்தேன். மீண்டும் நல்ல நிலைக்கு வர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!
  12. இந்திய ஊடகங்களின் கருத்துப்படி சாந்தன் விடுதலை புலிகள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர். விடுதலை புலிகளால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நின்று விடுதலை புலிகளுக்காக வேலை பார்த்தார். வெவ்வேறு புலனாய்வு போராளிகள் வெவ்வேறு திட்டங்களில் செயற்பட்டார்கள் என வைத்தால் சாந்தனும் அவ்வாறு செயற்பட்டு உள்ளார். அவர் ராஜீவ் கொலை திட்டத்தில் பங்குபற்றாமல் போய் இருக்கலாம். ஆனால் விடுதலை புலிகள் அமைப்பிற்காக இந்தியாவில் செயற்பட்டு உள்ளார் தானே? அப்படி பார்த்தால் வீரவணக்கம் சொல்வது தவறாக தெரியவில்லை. நாங்கள் நீங்கள் சமூக ஊடகத்தில் எழுதுவதை வைத்து உலகம் விடயங்களை அறியும் என எண்ணுவது நகைப்பானது. ஆளாளுக்கு தமது மன அழுத்தங்களை போக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பொழுது போகவும், பெருமைக்கும், மற்றும் இன்னோரன்ன காரணங்களுக்கு கருத்துக்கள் கூறுகின்றார்கள். இப்போது சாந்தன் பேசுபொருள் ஆகி உள்ளார். சிறிது நாட்களில் தலைப்பு இன்னோரிடம் சென்றுவிடும்.
  13. நிதர்சனமான உண்மை. கூறுபவரை வைத்து கூறப்படும் செய்தியை தவறாக புரியக்கூடாது. நடப்பது நாடகம் தானே?
  14. அரை இறுதி விடயத்தில் இலங்கை, மேற்கிந்திய தீவுகளை விட அவுஸுடன், தென் ஆபிரிக்கா/இங்கிலாந்து செல்வதற்கு வாய்ப்பு அதிகம் தானே? மற்றைய குழுவில் இந்தியாவுடன் பாகிஸ்தான்/நியூசிலாந்து/பங்களாதேஷ் போகும்.
  15. அரசியல் வேறு விளையாட்டு வேறு, அரசியல் வேறு மதம் வேறு எனும் கோட்பாடுகள் எல்லாம் இந்தியாவிலும் சாத்தியம் இல்லை, இலங்கையிலும் சாத்தியம் இல்லை? மேற்கத்தைய நாடுகளில் சிறிதளவு சாத்தியமோ?
  16. நானும் இப்போது பார்த்தேன். இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். கால் இறுதி இல்லை. ஆனால், இரண்டு குழுக்களையும் பார்த்த அளவில் இரண்டும் சமநிலையில் காணப்படுவது போல தென்படவில்லை. இலங்கை அணி உள்ள குழு மிகவும் பலமானது. இங்கே போட்டியிட்டு அரையிறுதிக்கு செல்வது சாத்தியமா தெரியவில்லை. ஆனால் என்ன ஒரு காலத்தில் தேசிய அணிக்காக விளையாடப்போகும் எதிர்கால நட்சத்திரங்களுக்கு நல்ல பயிற்சி, அனுபவம் இங்கு கிடைக்கும்.
  17. நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் 12 அணிகள் அல்லவா வரப்போகின்றது? அடுத்த சுற்று நொக் அவுட் சுற்று தானே? எட்டு அணிகள் தானே?
  18. இல்லை செல்லவில்லை போல. அவர்கள் குழுவில் தென் ஆபிரிக்காவும், இங்கிலாந்தும் முன்னணியில் உள்ளன. சாரசரி ஓட்ட விகிதம் அடிப்படையில் இன்று தென் ஆபிரிக்கா முன்னணிக்கு வந்துள்ளது.
  19. இரவு நேரம் மணிக்கு கடுகதி பாதையில் 160 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தப்பட்டதாம். அமைச்சர் அனுமதி இல்லாமல் சாரதி இப்படி வேகமாக ஓட வாய்ப்பு இல்லை. முன்பும் இப்படி வேகமாக சென்றுள்ளார்கள் என கருதவேண்டி உள்ளது. கண்மண் தெரியாமல் வாகனம் ஓடினால் சாவு வராமல் வேறு என்ன வரும். தவிர, இலங்கை கடுகதி பாதைகள் இவ்வளவு வேகமாக ஓடல்கூடிய வகையில் இல்லை. இதே கடுகதி பாதையில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓடுபவர்கள் உள்ளார்கள். பதவி, அதிகாரம் உள்ளது என்பதற்காக எப்படியும் வாகனத்தை செலுத்தலாம் என நினைப்பவர்கள் உயிரில் ஆசை என்றால் இனியாவது இந்த விபத்தை பார்த்து திருந்தட்டும்.
  20. இலங்கை நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் தமது கருத்துக்கு மாறுபாடான கருத்தை கூறுபவர்களின் தொண்டையை அரசு நசுக்குவதற்கு போதாது என்று மேலதிகமாக இப்படி ஒரு சட்டம் வந்துள்ளதோ. இந்த சட்டம் நடைமுறையில் பிரயோகம் செய்யப்படும் போதே பலருக்கு இதன் தாற்பரியம் புரியக்கூடும். இணைய தகவல் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட இந்த இலங்கை அரசின் சட்டம் பற்றி இங்குள்ள (யாழ்) கருத்தாளர்கள் கருத்து கூற ஆர்வப்படவில்லையோ.
  21. தனது மனைவியின் கொலையை திட்டமிட்ட கணவன் மனைவி கொலை செய்யப்பட்டு ஒரு கிழமையில் தான் குற்றவாளி என காவல்துறை அறிந்துவிட்டதால் தற்கொலை செய்துவிட்டாராம். அவர் மனைவியை கொலை செய்ய வேலைக்கு அமர்த்திய ஏஜண்ட் ஆயுள் தண்டனை பெற்று நோய் வந்து இறந்துவிட்டார். ஏஜெண்ட் இடம் தலா ஆயிரம்டொலர் கூலி பெற்று பெண்ணை கொலை செய்தவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மற்றவர் இவர். மரண தண்டனை கூடாது என கூறும் நாங்கள் எமது உறவுகள் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையாளிகள் மரண தண்டனை பெறுவதை ஆதரிப்போமா அல்லது ஆதரிக்க மாட்டோமா?
  22. இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.