Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1349
  • Joined

  • Days Won

    2

Posts posted by நியாயம்

  1. இறுதிக்காலம் வரை மற்றவர்களில் தங்காமல் இறப்புவரை எமது சொந்தக்காலில் நாம் நிற்கும் வாய்ப்பு கிடைப்பது ஒரு பேறு. 

    காசை குறிவைத்து இயங்கும் உலகில் அந்திம காலத்தில் தகுந்த சேவை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. 

    6 hours ago, Kavi arunasalam said:

    இத்தாலியில்  இருந்த  முதியோர் இல்லம் ஒன்று 29 யூலையில் பரபரப்பாக இருந்தது.

    இத்தாலியில் மோரி என்ற நகரத்தில் இருந்த  முதியோர் இல்லத்துக்கு வைகாசியில்,புதிதாக வந்த முதியவர் பெப்பின் Bepìn(92) அமைதி இல்லாமல் இருந்தார். அவரது பார்வையிலேயே அவர் அந்த இல்லத்தில் இருக்க விரும்பவில்லை என்பது தெரிந்தது. ஆனாலும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்த்துப் பேசவோ தனது எண்ணத்தைச் சொல்லவோ அவர் விரும்பவில்லை.

    அவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கட்டிலில் போய் அமர்ந்து கொண்டார். முதியோர் இல்லத்தில் அவர் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. தனியாக இருந்து பழையதை அசை போட்டுக் கொண்டிருந்தார். அவரது நடையைப் போலவே நாட்களும் மெதுவாக போய்க் கொண்டிருந்தன.

    ஆடி 29ந் திகதி முதியோர் இல்லம் அமைதியாக இருந்தது. போர்வையால் முழுமையாகத் தன்னை மூடியபடி பெப்பின் கட்டிலில் படுத்திருந்தார். பராமரிப்பாளர்கள் அவரின் அறைக்குள் வந்து பார்த்து, ஆழ்ந்து உறங்கும் பெப்பினை தொந்தரவு செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். இரவு பத்து மணியாகி விட்டது. அன்றாடம் மாலையில் அவருக்குக் கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் இன்னமும் தரப்படவில்லை. இனியும் பொறுப்பதில் பயனில்லை அவரை எழுப்பி விடலாம் என பராமரிப்பாளர் ஒருவர் அவரை கையால் தட்டிய போது அவரது உடல் மெதுமையாக இருப்பதைப் பார்த்து பயந்து போய் போர்வையை விலக்கிப் பார்த்தால் பெப்பின் படுக்கையில் இல்லை. ஒரு உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தலையணைகள்தான் அந்தக் கட்டிலில் அடுக்கப்பட்டிருந்தன.

    பெப்பின் அந்த முதியோர் இல்லத்தில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர் அந்த முதியோர் இல்லத்தில் இருந்து காணாமல் போன முதியவர் ஒருவர் இரண்டு மாதங்களின் பின்னர் ஒரு ஓடையின் கரையில் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டிருந்தார். பெப்பினைக் காணவில்லை அதுவும் இரவு நேரத்தில் என எல்லோருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் உடனடியாகவே தகவல் அனுப்பப்பட்டன.

    பெப்பினைத் தேடத் தொடங்கினார்கள். அதில் ஒரு பொலிஸ் குழு அவர் முன்னர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்த்த போது, தனது வீட்டில் அமைதியாக இருந்தார் பெப்பின்.

    “இந்த வீட்டை நான்தான் கட்டினேன். என் கைகளால் கட்டப்பட்ட இந்த வீட்டை விட்டு நான் வேறு எங்கும் போகப் போவதில்லைஎன பொலிஸாருக்கு உறுதியாகச் சொன்னார் பெப்பின்.

    முதியோர் இல்லத்தில் இருந்து தனது வீட்டிற்கான 10கிலோ மீற்றர் தூரத்தை எப்படி பெப்பின் கடந்து வந்தார் என்பதைப் பற்றி அவர் யாருக்குமே சொல்லவில்லை.

     

     

     

     

    பகிர்வுக்கு நன்றி!

  2. 2 hours ago, nunavilan said:

    மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலையில் போடுகிறார்கள்.(bulletin board)

    பாடசாலையின் அறிவிப்பு பலகையில் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கமும் காண்பிக்கப்படுமா?

  3. 12 hours ago, nedukkalapoovan said:

    கிளிநொச்சியில் விபத்து.. யாழில் விபத்து... விபத்தாலேயே தமிழரின் மிச்ச சனத்தொகையும் அழிஞ்சிடும் போல இருக்கே. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கினமா.. அல்லது தொடர நடவடிக்கை எடுக்கினமா..?????!

     

    ரயில் விபத்து, பஸ் விபத்து, மோட்டார் சைக்கிள் விபத்து, தற்கொலை, கொலை.. ஒவ்வொரு நாளும் இதே செய்திகள். 

    விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு. 

    புகையிரத கடவையில் கடவை மூடப்பட்ட பின்னரும் தடையை சுத்தி மோட்டார் சைக்கிள்கள் புகையிரதம் வரும்போது கடந்து செல்வதை அவதானித்துள்ளேன். 

    வீதிகளில் கண் மூடித்தனமாக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றார்கள். 

    இனி இதற்கும் சிங்களம், இன வாதமே காரணம் என முறைப்பாடு வைக்க வேண்டாம்.  

    எனது சகபாடி ஒருவன் இலங்கை சென்றபோது தான் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதை வட்ஸப் வீடியோவில் காண்பித்தான். அவன் வாகனத்தை வேகக்கட்டுப்பாட்டை மீறி ஓட்டுவதை தெளிவாக அவதானிக்க முடிந்தது. 

    தங்கள் தங்கள் உயிரை, உடமையை பாதுகாக்க வேண்டும், தங்கள் பாதுகாப்பில் தாங்கள் அக்கறை எடுக்கவேண்டும் என்று நாங்களா அறிவுரை கூறமுடியும்?

  4. 4 hours ago, நிழலி said:

    வீரகேசரி ஊடக தர்மம் ஏதும் இல்லாமல் இறந்து கிடப்பவரதும், காயம் அடைந்தவரதும் படங்களை பிரசுரித்து உள்ளது.

     

     

    சோசல் மீடியா: பேஸ்புக், யூரியூப் இத்தியாதிகளுடன் போட்டி போடுவதற்காக இப்படியான வகையில் செய்திகளை பிரசுரம் செய்கின்றார்கள் போலும். 

    இன்று பார்த்தேன் தமிழ்வின் தளத்தில் கிளிநொச்சியில் தற்கொலை செய்து இறந்த மாணவனின்  உயர்தர பரீட்சை பெறுபேற்றை சுட்டிலக்கம், முழுப்பெயர், தேசிய அடையாள இலக்கம் என்பனவற்றுடன் பரீட்சை திணைக்களத்தின் நேரடி தகவலை பிரசுரம் செய்துள்ளார்கள். 

    ஒருவரின் முழுப்பெயர், சுட்டிலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் எவ்வளவு அந்தரங்கமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லையா. 

    ஒருவர் இறந்துவிட்டாலும் இப்படியாக தனிநபர் தகவலை நாற்சந்தியில் வைத்து காண்பிப்பது எவ்வளவு தவறு!

    • Like 1
  5. 19 வயது பெண்ணை காதல் செய்த 54 வயது நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இங்கே 22 வயது முதன்மை மாணவன் தற்கொலை செய்கின்றார். இரண்டும் வேறுபட்ட இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள். ஆனால், எம்மவர்கள் இவை மூலம் எதையாவது கற்றுக்கொள்வார்களா?

    அவன் பிரச்சனை என்னவோ.. ஆனால், முதன்மை மாணவன் தற்கொலை செய்யும் அளவுக்கு அவன் மனம் பலவீனமாக உள்ளது. எங்கள் கல்வித்திட்டம் முறையானது என்றால் முதன்மை மாணவன் தற்கொலைக்கு செல்ல மாட்டான்? அல்லது முதன்மை மாணவனாக வந்திருக்க மாட்டான்?

     

    • Like 1
  6. இரண்டு விடயங்களை குறிப்பிட வேண்டும். 

    1- இப்போது விபத்து, கொலை ஆகிய அவலங்களை நேரடியாக படங்களாக, வீடியோவாக பிரசுரம் செய்கின்றார்கள். இது சரியா/தவறா? முன்பு எல்லாம் இப்படி ஊடகங்களில் பிரசுரம் செய்வதை தவிர்ப்பார்கள்.  காலம் மாறிவிட்டதோ?

    2-வவுனியாவில் வன்முறை அதிகரித்து செல்கின்றது. துணைவேந்தருக்கே அடிக்கின்றார்கள் என்றால்.. ஒரு பிரச்சனை வரும்போது சாதாரண பொதுமகனின் பாதுகாப்பு வவுனியாவில் கேள்விக்குறி ஆகின்றது.  

    சம்மந்தப்பட்டவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் வவுனியாவில் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு உழைப்பார்களா?

  7. இலங்கையில் கொலை குற்றங்களுக்கு நீதி மன்றத்தினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது இல்லை. 

    இலங்கையில் ஒருவரை கொலை செய்வதால் வரக்கூடிய ஆபத்து பற்றிய பயம் இல்லாமல் போய்விட்டது போல. 

    கொலை குற்றத்திற்கு நீதி மன்றினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது ஒருவேளை இப்படியான கொலைகள் எதிர்காலத்தில் நடைபெறுவதை குறைக்குமோ?

    சிங்கப்பூர், மலேசியா வழியை இந்த விடயத்தில் இலங்கை பின்பற்றலாமா?

    • Like 1
  8. 3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    அதே போல உண்மையும் வெளியே வரப்போவதில்லை. ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவரை இனி கதைக்கவிடமாட்டார்கள்.

     

    சமூக அக்கறை உள்ளவர்கள், தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உடல், உள பாதிப்புக்கு உள்ளாகிய பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். 

    கிடைக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்தால் மிகவும் பின் தங்கிய இடம்/குடும்பம் போல் தோன்றுகின்றது.

    இந்த பிள்ளைக்கு இனி தாய், தகப்பன், சகோதரங்களுடன் வாழ்வது சாத்தியப்படாது. ஊருக்குள் வாழ்வது பெரும் வேதனையாகும், போராட்டமாகும். 

    அக்கறை உள்ள பொது நல அமைப்புக்கள் ஏதாவது பிள்ளையை நாடி தேவையான உடனடி உதவிகள், வசதிகள் செய்து கொடுத்தால் பெரும் புண்ணியம். 

    சுவிஸ்/பிரான்ஸ்/கனடா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் இருந்தே விண்ணப்பித்து அகதி விண்ணப்பம் மூலம் செல்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏதாவது தொண்டு நிறுவனம் பிள்ளையின் நிலமை, விருப்பம் அறிந்து பொறுப்பெடுக்க வேண்டும். 

    • Thanks 2
  9. 58 minutes ago, விசுகு said:

    குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்

    எனது நண்பர் ஒருவர் இப்படி செய்திருந்தால் இதைவிட கொடூரமாக அவர் முடிவு இருந்திருக்கும். ஆனால் உங்களுக்கு செய்தி கிடைத்திருக்காது.

    குற்றங்களை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகம் அல்லது முதுகில் குத்துதலை???

     

    நாம் கேள்விப்படுபவை எல்லாம் யாரோ யாரோ கூறியவை. உண்மை, பொய் தெரியாது. 

    கொல்லப்பட்டவர் வசதி படைத்தவர்,  இந்த பிள்ளை வீட்டுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம் என்றும் ஒரு கதை. 

    தகப்பனின் நண்பர் என்றால் எப்படி நண்பர் என தெரியாது. யாராவது காசு உதவி செய்தாலே நண்பர் என்று தானே சொல்வார்கள். 

    நீங்கள் அரிதான ஒரு சம்பவத்தை வைத்து அதை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்து ஒட்டி கற்பனை பண்ணி பார்த்து ஏன் டென்சன் ஆகின்றீர்கள். 

  10. முஸ்லீம் பெண் ஒருவர் தான் சரி என நினைக்கும் சட்டரீதியான அதே சமயம் அவர்கள் கலாச்சாரத்துக்கு முரணான ஒரு காரியத்தில் ஈடுபடும்பட்சத்தில் இஸ்லாமிய கடும்போக்காளர் அல்லது தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகினால் நாங்கள் கொதித்து எழுகின்றோம். மனிதாபிமானம் அற்றவர்கள் என திட்டுகின்றோம். 

    மேலுள்ள செய்தியில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு உரிமை உள்ளது அவருடன் வாழ்வதற்கு என வாக்கு மூலத்தில் கூறியதாக உள்ளது. அப்படி என்றால்..

    எமது பிள்ளையும் சட்டரீதியான முறையில் தனது தெரிவை செய்துள்ளது. எங்கள் கலாச்சாரத்துக்கு இது சரி வராது என   அந்த பிள்ளையின் உறவை கொலை செய்தால் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் கொலை செய்பவர்களுக்கும் (தமிழ் கொலையாளிகள்) வேறுபாடு அதிக அளவில் இல்லை போல. 

     

    • Like 2
  11. 3 hours ago, goshan_che said:

    உங்கள் நண்பரிடம் பின்வரும் வழக்குகளில் குற்றவாளி என சந்தேகிக்கபட்டோருக்கு என்ன ஆனது என கேட்டு சொல்ல முடியுமா?

    1. மன்னம்பேரி

    2. கிரிசாந்தி குமாரசாமி

    3. முருகேசுபிள்ளை கோணேஸ்வரி

    4. கணபதிபிள்ளை சொர்ணம்மா

    5. புங்டுதீவு வித்யா

    6. டினேஷ் ஷாப்டர்

    லிஸ்ட் சாம்பிள்தான் ….இதற்கு விடை தெரிந்தது இன்னும் இப்படி இருக்கும் ஆயிரகணக்கான வழக்குகளை பற்றி பேசுவோம்.

     

    இலங்கையில் அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண சிவிலியன் வழக்குகளில் முடிவு கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வரை செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. கடூழிய சிறைத்தண்டனை ஐந்து வருடங்கள் குறையாமல் அதிக சாத்தியம். 

    இதுவரை உள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு First Degree Murder. 

    தண்டனை இல்லாமல் அல்லது குறைவான தண்டனையுடன் குற்றவாளிகள் தப்பினால் அதிசயமே. பார்போம். 

    1 hour ago, நிழலி said:

    இதில் வித்யாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். மிகுதியில் டினேஷ் ஷாப்டர் தவிர்ந்த மற்றவை போர்க்குற்றங்கள். இவற்றுக்கு எக்காலத்திலும் தீர்ப்பு வராது.

    ஆனால் நியாயத்தைக் கதைப்போம் கூறியதைப் போன்று, இலங்கையில் ஏராளமான கொலை வழக்குகள் பொலிசாரால் விசாரிக்கப்பட்டு, ஈடுபட்டவர்கள் கைதாகி, பொலிசிலும் சிறைச்சாலைகளிலும் சிக்கி சின்னாபின்னமாகி போவர். கொலை வழக்கில் சந்தேகத்தில் கைதானாலேயே அலுப்பு தொடங்கி விடும். நல்ல வசதி இருந்தால் மாத்திரமே பிணை கிடைக்கும். வழக்குகள் நீதமன்றம் வருவதற்கே சில வருடங்கள் எடுக்கும். அது வரைக்கும் சிறை தான். 

    என் சிங்கள நண்பர் ஒருவரது உற்ற நண்பன், வீதியில் என் நண்பருடன் போகும் போது, செருப்பு தடக்கி, பிரடி அடிபட கீழே விழுந்து காயம்பட்டு, சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த பின் இறந்து போனான்.  பொலிசார் என் சிங்கள நண்பர் தான் தள்ளி வீழ்த்தினார் என்று பிடித்துக் கொண்டு போய், பின் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் விடுதலை ஆனார். ஆனால் இடைப்பட்ட 3 வருடம் சிறைச்சாலையில் கழித்து, தொழில் இழந்து, மனைவி பிரிந்து, சின்னாபின்னமாகி போனார். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக் கிழமை அவருக்காக சாப்பாடு வாங்கிக் கொண்டு வெலிகடை சிறைச்சாலைக்கு சென்று நான் அவரை பார்த்து வருவதுண்டு. மிக மோசமான அனுபவம் அது.
     

     

    ஒரு கிழமை வீட்டுக்காரர், நண்பர்கள், உறவினர், அயலவர் தொடர்பு இல்லாமல் பொலிஸ் காவலில் நின்றாலே வாழ்க்கை வெறுக்கும். வெட்டி விட்டு சிறை செல்வேன் என சண்டித்தனம் கதைப்பவர்களில் பலருக்கு சிறை அனுபவமே இல்லை. 

  12. On 9/8/2023 at 16:32, புலவர் said:

     எங்கள் கலாச்சாரத்தின்படி தவறு.

    உங்கள் கலாச்சாரம் எது? கொஞ்சம் விபரியுங்கள் பார்க்கலாம். 

    • Like 2
    • Thanks 1
  13. 7 hours ago, Elugnajiru said:

    கொலை செய்யப்பட்டவர் பெண்ணின் தந்தையின் நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோனவிடத்தில் காதல் மலர்ந்திருக்கிறது. கொலைசெய்யப்பட்டவருக்கு முன்னமேயே குடும்பம் இருக்கு பேரப்பிள்ளைகளும் இருப்பதாகக் கேள்வி இருவரும் வீட்டை விட்டு போனபின்பு பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் அவர்களை வீட்டுக்கு வருப்படியும் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம் என உத்தரவாதமும் கொடுக்கப்பட்டதை நம்பி அவர்கள் பெண்ணின் வீட்டை நோக்கி ஆட்டோவில் வந்திருக்கிறார்கள் சுண்ணாகத்திலேயே ஆட்டோவை மறித்து இருவரையும் கைப்பற்றி கொலையுண்டவரைப் பிறிதாக வேறுபடுத்தி வேறி இடத்துக்குக் கொண்டு போய் அவரது மர்ம உறுப்பில் அடித்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள் அதன்பின்பு பெண்ணின் உறவுமுறையான பெண் ஒருவர் அவரது மர்ம உறுப்பில் கொதிக்கும் சுடுதண்ணியை ஊத்தியிருக்கிறார், அப்போது கொலையுண்டவர் என்னை கொல்லுங்கோ ஆனால் இப்படிச் சித்திரவதை செய்யவேண்டாம் என அலறிய சத்தம் அந்தப் பிரதேசம் எங்கும் கேட்டிருக்கு இது நடக்கும்போது அதை வேடிக்கை பார்க்க எராளமானவர்கள் கூடிவிட்டனர் ஒருசிலர் கைத்தொலைபேசியில் வீடியோவும் எடுத்திருக்கிறார்கள் ஆனால் எவரும் தடுக்க முயலவில்லை.

    அடுத்த பக்கத்தில் அந்தப் பெண்ணை வீட்டுக்குக் இழுத்துக்கொண்டுபோ அவரது மர்ம ஸ்தானத்திலும் மிகக் கொடுமையான சித்திரவை செய்திருக்கிறார்கள் இதின் முதன்மையாக அவரது தாயாரே இருந்திருக்கிறார். தவிர அவரது மார்பகங்கள் சிதைகின்ற அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கு அதைப்பார்த்த அயலவர்கள்தான் பொலீசுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

    பெண்ணின் வாக்குமூலத்தின்படி "நான் அவருடன் விரும்பியே வீட்டைவிட்டு வெளியேறினேன் எனக்கு பத்தொன்பது வயதாகி விட்டது எனது வாழ்க்கைய தீர்மானிக்கும் உரிமை எனக்கு இருக்குது எனச் சொல்லியிருக்கிறார்.

     

    கொலை செய்யப்பட்டவர் தனியாக பிரிந்து வாழ்ந்தார், முன்னைய மனைவிக்கு மற்றைய உறவு பற்றி தெரியும், அத்துடன் கொலை செய்யப்பட்டவரிடம் காசை உருவிவிட்டே இப்படியான நிலைக்குள் தள்ளிவிட்டார்கள் என கேள்விப்பட்டேன். உண்மை, பொய் தெரியாது. 

    நீங்கள் விபரித்துள்ள விபரங்களும் உண்மை, பொய் தெரியாது. 

    பொலிஸ் விசாரணைகளில் அவர்களுக்கு சகல தகவல்களும் கிடைக்கும். ஆனால், அந்த விபரங்கள் வெளியில் வருமோ தெரியாது. 

    4 hours ago, விளங்க நினைப்பவன் said:

    விபரமான தகவல்களுக்கு நன்றி அண்ணா.
    யாழ்பாணத்தில் இந்தியாவை மிஞ்சிவிட்ட மோசமான  கொடுரமானவர்கள் ஆண் பெண்கள் இருக்கின்றனர் என்பதை விளங்கி கொண்டேன்☹️

     

    குடி, போதை, பொய், ஏமாற்று, வாள்வெட்டு, கொலை நிறைந்த சமூகம் நம்முடையது.

    ஆனால் என்னஅவர் மேலே கூறியவை உண்மை என்றால் சித்திரவதையில் இராணுவத்தை மிஞ்சி விட்டார்கள் போலும்.  

    யாரோ வீடியோ எடுத்தார்களாம். அதை சனல்4 இற்கு அனுப்பி வைத்தால் நமது மரியாதை பெருகும். 

    • Like 1
  14. 22 minutes ago, Kandiah57 said:

    எனக்கு தெரிய பல குற்றவாளிகள்  சுதந்திரமாக திரிகிறார்கள்  ..இந்த மனிதன் அடித்து கொல்லப்பட்டதுக்கு முக்கிய காரணம்  சட்டம் எங்களை தண்டிக்கும். என்ற பயமின்மையாகும்.  இலங்கையில் குற்றச்செயல்கள். அதிகரித்து செல்வதற்கு  முக்கிய காரணம். குற்றவாளிகள்   இன மத  வர்க்க. ஏழை பணக்காரர்  என்ற வித்தியாசம் அற்ற முறையில்  தண்டனை வழங்கப்படுவதில்லை   நீங்கள் சொன்னது 60 % சரியாகலம்.   100க்கு 100  இல்லை   அப்படி 100 % குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டல்.   இலங்கையில் பிரச்சனையில்லையே    

     

    சமூக பொறுப்பில் எல்லோருக்கும் பங்கு உண்டு. மக்கள் அமைப்பே நிருவாகம் அல்லவா? 

    இங்கு குறிப்பிட்ட அவல செய்தி வீரகேசரி தளத்தில் எப்படி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது பாருங்கள். 

     

    “யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதான குடும்பஸ்தர் அடித்துக்கொலை“

     

    93 வது அகவையில் வீரகேசரி, நூற்றாண்டை நோக்கிய பயணம் என விளம்பரம் செய்கின்றார்கள். 93 வருடங்கள் முதிர்ச்சி வீரகேசரி குறிப்பிட்ட செய்தியை பிரசுரம் செய்துள்ள விதத்தில் தெரிகின்றதா? 

    ஒரு முன்னணி மூத்த செய்தி இதழே சமூக பொறுப்பை தட்டி கழிக்கின்றது.

    கவர்ச்சி, விளம்பரம், பணம்: இதை குறிக்கோளாக கொண்டு இயங்கும் சமூகம் உருப்படுமா?

    ஊடகங்களே சமூகத்தின் சாபக்கேடு ஆகும் போது?

    • Like 3
    • Thanks 1
  15. 8 hours ago, Kandiah57 said:

    ஊரில் இருத்தல் நாங்களும் இதை தான்  செய்வோம்.  இல்லையா??  சட்டம் பற்றிய அறிவு இல்லை...மற்றும் சட்டம் குற்றவாளிகளை  தண்டிப்பதுமில்லை ..  மேலும் பெண்கள்  50. அல்லது 60 வயது வந்தும்   திருமணம் செய்யாமல் இருக்க சமூகம் அனுமதிக்கும்     ஆனால் குமாரி  கிழவனை  திருமணம் செய்ய விடமாட்டார்கள்   ..கலாசாரம்  என்பார்கள்    என்ன கலாசாரமே தெரியவில்லை.....சீ  சுத்த மோசமான சமூகம்   

     

    நிச்சயமாக இல்லை. சட்டம் குற்றவாளிகளை தண்டிப்பது இல்லை என்பது தவறானது.  

    பலருக்கு உள்ளே சென்ற அனுபவம் இல்லை. இதனால் பொலிஸ் சிக்கலில் மாட்டுவதால் வரும் மன உளைச்சல்கள், ஆபத்துக்கள் தெரிவது இல்லை. குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளே நின்று தவிக்கும் நபர்கள் படும்பாட்டை அங்கு பார்த்தேன்.

    உங்களுக்கு இலங்கை பொலிஸ் அனுபவம் இல்லை என நினைக்கின்றேன். ஒரு சிலர் செல்வாக்கை (பதவி/அரசியல்) பாவித்து தப்பலாம். ஆனால், இப்படியான கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பொலிஸ் கோழிகளை அமுக்கி பிடிப்பது போல் பிடிப்பார்கள்.

    எனது நண்பர் ஒருவர் இலங்கையில் குற்றவியல் மருத்துவ நிபுணர். கொலை, பாலியல் வன்புணர்வு உட்பட பொலிஸ் கேஸ்களுக்கு மருத்துவ/குற்றவியல் அறிக்கை வழங்குவது பணி. பல தகவல்கள் அறிந்தேன்.

    இலங்கை நீங்கள் நினைப்பது போல் இல்லை. இப்படியான கொலை கேஸ்களில் தப்புவது கடினம். கைது செய்யப்பட்டவர்கள் வயது விபரம் செய்தியில் இல்லை தகப்பன், சகோதரம் தவிர.  இறந்தவர், அவர் உறவான பாதிக்கப்பட்ட பெண், அவர் தகப்பன், சகோதரம், மிகுதி ஆறுபேர் என பத்து பேரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    • Like 1
  16. 19 hours ago, பகிடி said:

    என்னவோ தெரியவில்லை இப்ப வர வர குமர்ப் பெட்டைகளுக்கு வயசு போன ஆட்களைத் தான் பிடிக்கிறது 

     

    அப்படி என்றால் குமர் பெட்டைகள் விரும்பும் அந்த வயசு போன ஆட்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ய வேண்டுமா?

    • Like 1
  17. On 7/8/2023 at 01:21, ஏராளன் said:

    ஏனய்யா ஏதும் எழுத்துப் பிழையோ?! இல்லை படத்தைப்பார்க்க உடம்பு கூடியதாக இருக்கோ?

     

    ஊடகம், ஊடகவியலாளார் என்று கூறிக்கொண்டு இப்போது தனிப்பட்டவர்களின் விடயங்களை எல்லாம் சந்திக்கு கொண்டு வந்து நாறடிக்கின்றார்கள். ஆனால் என்னவோ இவர்களுக்கு தமிழ் மட்டும் ஒழுங்காக எழுத தெரியவில்லை. 

    வீரகேசரி இலங்கையின் பழமை வாய்ந்த முன்னணி நாளிதழ். இவர்களே தமிழில் தடக்குப்படுகின்றார்கள் என்றால் மிகுதி ஊடக அவியல்களின் நிலமை எப்படி காணப்படும்?

    FIFA என எழுதலாம் அல்லது சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம்/ காற்பந்து அமைப்புக்களின் கூட்டமைப்பு என விரிவுபடுத்தி தமிழில் விளங்கும்படி எழுதி பிரசு செய்யலாம்.

    FIFA இற்கு பீபா நிகரான தமிழா?

    யார் வீட்டுக்குள் போய் யார் படுக்கின்றார்கள், யார் யாரை காதலிக்கின்றார்கள், யார் வீட்டு கோடிக்குள் யார் வீட்டு நாய் நிற்கின்றது என செய்திகள் பிரசுரம் செய்யும் ஆர்வத்தை சிறிதளவு தமிழை ஒழுங்காக எழுதுவதில் செய்யலாம். 

    • Like 5
    • Thanks 1
  18. On 21/7/2023 at 06:30, ஏராளன் said:

    2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டம் ஆரம்பம்

    Published By: SETHU

    20 JUL, 2023 | 06:30 AM
    image
     

    (ஆர்.சேது­ராமன்)

    2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி இன்று ஆரம்­ப­மா­­கின்­றது. சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம் 9ஆவது தட­வை­யாக நடத்தும் இப்­போட்­டி­களை அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்­து­கின்­றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ஆம் திகதி சிட்னி நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

    இம்­முறை முதல் தட­வை­யாக 32 அணிகள் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. இதற்­கு முன் அதி­க­பட்­ச­மாக 24 அணி­களே பங்­கு­பற்­றின. 

    முத­லா­வது போட்­டியில் நியூ­ஸி­லாந்து, நோர்வே அணிகள் மோத­வுள்­ளன. இலங்கை நேரப்­படி இன்று பிற்­பகல் 12.30 மணிக்கு நியூ­ஸி­லாந்தின் ஆக்­லாந்து நக­ரி­லுள்ள ஈடன் பார்க் அரங்கில் இப்­போட்டி ஆரம்­ப­மாகும். அதற்கு முன் இதே அரங்கில் ஆரம்ப விழா நடை­பெ­ற­வுள்­ளது. இன்று பிற்பகல் 3,30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 2ஆவது போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா, அயர்­லாந்து அணிகள் மோத­வுள்­ளன.

    மகளிர் கால்­பந்­தாட்­டத்­துக்குத் தடை

    முத­லா­வது சர்­வ­தேச மகளிர் கால்­பந்­தாட்டப் போட்டி 1881ஆம் ஆண்டு ஸ்கொட்­லாந்தில் நடை­பெற்­றது. ஸ்கொட்­லாந்து, இங்­கி­லாந்து அணிகள் அப்­போட்­டியில் மோதின.

    எனினும், 1921ஆம் ஆண்டு முதல் 1970 ஜன­வரி வரை இங்­கி­லாந்து கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம், பெண்­க­ளுக்­கான போட்­டி­க­ளுக்கு தடை விதித்­தி­ருந்­தது. ஜேர்­மனி, பிரான்ஸ், பிரேஸில் போன்ற நாடு­க­ளிலும் மகளிர் கால்­பந்­தாட்­டத்­துக்கு பல தசாப்­தங்கள் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.Womens-World-Cup-2.jpg

    1970ஆம் ஆண்டு சுயா­தீன ஐரோப்­ பிய மகளிர் கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம் எனும் அமைப்­பால், இத்­தா­லியில் முத­லா­வது மகளிர் உலக சம்­பி­யன்ஷிப் எனும் பெயரில் சுற்­றுப்­போட்­டி­யொன்று நடத்­தப்­பட்­டது. அதன் இறு­திப்­போட்­டியில் இத்­தா­லியை வென்று டென்மார்க் சம்­பி­ய­னா­கி­யது.

    1971ஆம் ஆண்டு மெக்­ஸி­கோ­விலும் இதே அமைப்­பால் மற்­றொரு உலக சுற்­றுப்­போட்டி நடத்­தப்­பட்­டது. அதன் இறு­திப்­போட்­டியில் மெக்­ஸி­கோவை வென்று டென்மார்க் சம்­பி­ய­னா­கி­யது.  

    பீபா ஏற்­பாட்டில்...

    சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின்(பீபா) ஏற்­பாட்டில் முத­லா­வது மகளிர் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி 1991ஆம் ஆண்டு சீனாவில் நடை­பெற்­றது. 12 அணிகள் அச்­சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்­றின. அமெ­ரிக்கா முத­லா­வது சம்­பி­ய­னா­கி­யது. இது­வரை நடை­பெற்ற 8 போட்­டி­களில் 36 அணிகள் குறைந்­த­பட்சம் ஒரு சுற்­றுப்­போட்­டி­யி­லா­வது பங்­கு­பற்­றி­யுள்­ளன. 

    இவற்றில் அமெ­ரிக்கா 4 தட­வைகள் சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. ஜேர்­மனி 2 தட­வை­களும், நோர்வே, ஜப்பான், ஆகி­ யன தலா ஒரு தட­வையும் சம்­பி­ய­னா­கி­யுள்­ளன. இறுதியாக 2015ஆம் ஆண்­டில் நடை­ பெற்ற 2 சுற்­றுப்­போட்டிக­ளி லும் அமெ­ரிக்­காவே சம்பிய­னா­கி­யது. மகளிர் கால்­பந்­தாட்­ டத்தில் அமெ­ரிக்கா, ஜேர்மனி, நோர்வே, ஜப்பான், சீனா, சுவீ டன், பிரேஸில், நெதர்­லாந்து, இங்­கி­லாந்து, கனடா, அவுஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், டென்மார்க் முத­லான அணிகள் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றன.

    FiFA-2023-worrl-cup-Players.jpg

    முதன்­மு­றை­யாக

    இம்­முறை முதல் தட­வை­யாக இரு நாடு­களில் மகளிர் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி நடை­பெ­று­கி­றது. நியூ­ஸி­லாந்தின் ஆக்­லாந்து, டனடின், ஹமில்டன், வெலிங்டன் ஆகிய 4 நக­ரங்­க­ளிலும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்பேர்ன், பேர்த், சிட்னி ஆகிய 5 நக­ரங்­க­ளிலும் இப்­போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 

    போர்த்­துக்கல், அயர்­லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஹெய்ட்டி, பனாமா, ஸாம்­பியா, மொரோக்கோ ஆகி­யன முதல் தட­வை­யாக இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. 

    பணப் ­ப­ரிசு

    இச்­சுற்­றுப்­ போட்­டியில் சம்­பி­ய­னாகும் நாட்டின் கால்­பந்­தாட்டச் சங்­கத்­துக்கு சம்­பியன் கிண்­ணத்­துடன் 4,290,000 அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் அக்­கு­ழா­மி­லுள்ள ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 270,000  டொலர் வழங்­கப்­படும். அதா­வது முத­லிடம் பெறும் நாட்­டுக்கு மொத்­த­மாக 10,500,000 டொலர் வழங்­கப்­படும். 

    2ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 3,015,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 195,000 டொலர் வழங்­கப்­படும். 3ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 2,610,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 180,000 டொலர் வழங்­கப்­படும். 

    4ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 2,455,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 165,000 டொலர் வழங்­கப்­படும்.  கால் இறு­தி ­வரை முன்­னேறும் நாடு­களின் சங்­கங்­க­ளுக்கு தலா 2,180,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 90,000 டொலர் வழங்­கப்­படும். 

    2023-FIFA-women-world-cup-logo.jpg

    9 முதல் 16ஆவது இடங்­களைப் பெறும் நாடு­களின் சங்­கங்­க­ளுக்கு தலா 1,870,000  டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 60,000 டொலர் வழங்­கப்­படும்.  17 முதல் 32 வரை­யான இடங்­களைப்  பெறும் நாடு­களின்  சங்­கங்­க­ளுக்கு தலா 1,560,000  டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 30,000 டொலர் வழங்­கப்­படும். 

    அணிகள் விபரம்:

    குழு ஏ: நியூஸிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ். சுவிட்ஸர்லாந்து,

    குழு பி:  அவுஸ்திரேலியா, அயர்லாந்து, நைஜீரியா, கனடா. 

    குழு சி: ஸ்பெய்ன், கொஸ்டாரிக்கா, ஸாம்பியா, ஜப்பான், .

    குழு டி: இங்கிலாந்து, ஹெய்ட்டி, டென்மார்க், சீனா. 

    குழு ஈ: அமெரிக்கா, வியட்நாம், நெதர்லாந்து, போர்த்துக்கல்,

    குழு எவ்: பிரான்ஸ், ஜமெய்க்கா, பிரேஸில், பனாமா. 

    குழு ஜி: சுவீடன், தென் ஆபிரிக்கா, இத்தாலி, ஆர்ஜென்டீனா,

    குழு எச்: ஜேர்மனி, மொரோக்கோ, கொலம்பியா, தென் கொரியா.

    https://www.virakesari.lk/article/160440

     

    பீப்பா கிண்ணமா? 

  19. 3 minutes ago, Justin said:

    நியாயம், ஒரு சமூகப் பிரச்சினை பற்றிப் பேசும் போது, ஏதோ ஆசிரியரிடம் அடி வாங்கினீர்களா என்று கேட்கும் "சில்லறைப் புத்தியுடைய" நீங்கள் நாட்டுடன் மட்டுமல்ல, யாரோடு தொடர்பிலிருந்தாலும் அதனால் ஒருவருக்கும் பயனில்லை!😂

    அரை வாசி நேரம் தனியார் கிளினிக்கில் செலவு செய்யும் மருத்துவரால் உயிர், உடல் அவயவ இழப்பு ஏற்படும், அது போல பள்ளிகளில் பாடத்திட்டம் முடிக்காமல் ரியுசனின் உழைக்கும் வாத்தியார் மாரும் உழைக்கலாம், தவறில்லை! ஆனால், அவர்கள் செய்யாத அரைவாசிக் கடமையை வெளி நாட்டில் இருக்கும் தமிழர் காசு கொடுத்துச் செய்ய வைக்க வேண்டுமென்று கேட்பது பிரச்சினைக்குரியது!

    எனவே, "நாட்டோடு தொடர்பில் இருக்கும்" உங்கள் போன்ற ஆட்கள், முதலில் நாட்டில் இருக்கும் பிரச்சினையின் பின்னணியை புரிந்து கொண்டு இங்கே சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். அது இயலா விட்டால் பேசாமல் இருங்கள் - அமைதி நல்லது!😎

     

    அண்ணை உங்களிடம் தரவுகள், புள்ளிவிபரம் கேட்கும்போது அமைதி காக்க சொல்கின்றீர்கள். 😃 

     

    5 minutes ago, nunavilan said:

    இதை தான் வேறு விதமாக கேள்வியாக கேட்டிருந்தேன். எப்படி எழுத வாசிக்க தெரியாதவர் இத்தனை வகுப்புக்களை கடந்து வந்தார்கள். இவர்களை அனுமதித்தது ஆசிரியர்கள் தானே. அசிட்டை தெரியவில்லையோ , அ,ஆ தெரியவில்லையோ அடுத்த வகுப்புக்கு  அனுமதிக்காமல் விட்டாலே பெற்றோர், மாணவர் சமூகம் என (என்ன பிரச்சனை) ஆராய்வார்கள். முடிவெடுப்பார்கள். இதென்ன 9 ம் வகுப்பில் எழுத வாசிக்க தெரியாது எனில் 9ம் வகுப்பு ஆசிரியர் எவ்வளவு அசகாய சூரனாக இருந்தாலும் இம்மாணவர்களை வைத்து என்ன செய்ய முடியும்?
    இவ்வளவு போர்க்காலத்திலும் இல்லாத மாணவரின் தரக்குறைவுக்கு காரணம் என்ன? போர்க்காலத்தில் மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை சுவிசில் மருத்துவருக்கு படிக்கும் சகோதரியை கேட்டால் சொல்வார்.
    எனது நண்பன்/உறவினன் விக்டோரியா கல்லூரிக்கு தொடர்ந்து பணம் சேர்த்து  அனுப்புவர்(கனடா). போதாக்குறைக்கு கட்டடங்கள் கட்ட , இன்னோரென்ன உதவிகளுக்கு பழைய மாணவர்களிடம் சேர்த்து அனுப்புவது மட்டுமில்லாமல் பல முறை சென்று பண பிணக்குகளை தீர்க்க அங்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். அத்தோடு இரவு பகல் பாராமல் தொலைபேசி தொல்லை வேறு. இத்தனை உதவிகள் கிடைத்தாலும் அவர் அங்கு சென்று கவனித்தது அங்குள்ள மாணவர்கள் சொல்வது தான் சட்டம்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயம். நைஜீரியாவில் எம்மவர்கள் ஆசிரியர்களாக வேலை செய்ததை நினைவு படுத்தினார். இன்னும் நிறைய எழுதலாம். 
    இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிந்து நின்று காசை வெளிநாடுகளில் இருந்து பெறுவதை நினைக்கும் போது எத்தகையை சமூக பொறுப்பு எம்மவரிடையே உள்ளது என்பதை அனுமானிக்கலாம். மன்னிக்கவும் விக்டோரியா கல்லூரியை உதாரணமாக எடுத்ததற்கு.
    சாவகச்சேரி இந்து என்ன குறைவோ என நீங்கள் கேட் கலாம். இல்லையே. தற்போதைய அதிபரிடம் இருந்து விஞ்ஞான ஆய்வு கூடம் பெரிதாக்க புலம் பெயர்ந்த மாணவர்களிடம் உதவி கேட்டார். 
    சிங்கன் ( கனடாவின் ஒரு மேயரின் வலது கை ,சா.இந்து , காட்லி மாணவர், எனது நண்பரும் கூட) ஒரு இசை நிகழ்ச்சியை இந்திய, கனடா கலைஞர்களுடன் நிகழ்ச்சியை அரங்கம் நிரம்பிய காட்சியாக (நன் கொடை உட்பட) நடாத்தினார். 
    சில காலம் சென்ற பின் எனது அப்பாவிடம் கேட்டேன் ஆய்வு கூடம் என்ன மாதிரி என. அவர் சொன்னார் 2009 ல் உள்ள ஓடு தான் இப்போதும் உள்ளது என? 
    இங்கும்,அங்கும் திருட்டு ********..

    எல்லாரும் சேர்ந்து கூத்து ஆடிவிட்டு கடைசியில் ஆசிரியர்கள் தலைக்கு மொட்டை அடிக்கின்றீர்கள். பழைய மாணவர் சங்கங்கள் வெளிநாடுகளில் செய்யும் அலப்பறைகள் பற்றி வண்டி வண்டியாக எழுதலாம். ஒரு வட்சப் குழுமத்தில் அட்மின் பதவிக்கே எத்தனை பிணக்குகள். 

  20. On 4/6/2023 at 10:46, Justin said:

    கடமையுணர்வு, சமூகப் பொறுப்பு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று கொண்டிருக்கிறோம்! ஒரு தொழிலை வேண்டிப் பெற்று, அதில் நிலைத்திருந்து, ஓய்வூதியம் வரை செல்ல எதிர்பார்க்கும் தரப்பினரே தங்கள் கடமையை 50% கூட செய்யாமல், வெளியே இருப்பவன் "சமூகக் கடமை" செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது நகைப்பிற்குரியது!

    இது போன்ற கருத்துக்களில் வெளிப்படும் மனப்பாங்கே எங்கள் கல்வி நிலையை யுத்த காலத்தை விடக் கீழே இறக்கி விட்டது என்பது என் கருத்து!

     

    நான் நாட்டுடன் நல்ல தொடர்பில் உள்ளேன். நீங்கள் உங்கள் புள்ளிவிபரங்களை எங்கு எடுக்கின்றீர்கள் என்று சொன்னால் நானும் தரவுகளை அறிகின்றேன். 

    வைத்தியர்கள் அரைவாசி வேலை நேரத்துடன் தமது தனிப்பட்ட கிளினுக்குளை செய்கின்றார்கள். இது போலவே ஆசிரியர்களின் ஒரு பகுதி தனியார் வகுப்புக்கள் மூலம் சிறிது வருமானம் தேடக்கூடும். இது போரின் பின் நடைபெறும் புதிய விடயம் அல்ல. காலங்காலமாக நடைபெறும் விடயம். 

    அண்ணை கேட்பதாய் குறை விளங்க கூடாது நீங்கள் படிச்ச காலத்தில் யாராவது ஆசிரியரிடம் செவிட்டை பொத்தி வாங்கினீர்களோ. மூன்றாம் வகுப்பில் தனக்கு இறுக்கிய ஒரு ஆசிரியரை இப்போதும் கருமிக்கொண்டு எனது நண்பர் ஒருவர் உள்ளார். அதுதான் கேட்டேன். அந்த ஆசிரியர் கடைசியில் அதிபராய் வர இவர் பாருங்கோ கழுவி ஊத்திக்கொண்டு உள்ளார் மனுசனை. 

    • Haha 1
  21. வயதை பார்க்க வேண்டாம். முதலில் பிள்ளையை பெறுங்கள். ஜெனரேசன் கப், நோய்களை பிறகு பார்ப்போம். ஆரோக்கியமான இளம் தம்பதிகளுக்கு குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பது இல்லையா அல்லது பிற்காலத்தில் குழந்தை ஆரோக்கியம் கெடுவது இல்லையா. 

    எமது சமூகத்தின் இனப்பெருக்கம் அதிகரிக்க வேண்டும். 

    • Like 2
  22. On 2/6/2023 at 12:16, MEERA said:

    ஊரில் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் செய்வது போல் நிச்சயம் எமது பிள்ளைகள் செய்யப் போவதில்லை.

    ஊரில் உள்ளவர்கள் மட்டும் அல்ல எல்லாருக்கும் தெரிய வேண்டியது. இன்னும் 10 ஆண்டுகளில் உலகம் எங்கு செல்லும் என்பதே கற்பனை செய்ய கடினமாக உள்ளது. பல விடயங்கள் பழையவர்களுடன் அழிந்துவிடும்/அற்றுப்போயிடும். 

    22 hours ago, Justin said:

    ஆம், அது தான் யாழின் சிறப்பம்சம், ஏதாவதொரு விடயத்தில் ஒத்த கருத்து இருக்கும், சில விடயங்களில் violent disagreement இருக்கும்!😂

    மேலே நீங்கள் விரிவாக எழுதியிருக்கும் கருத்துடனும் நான் 100 வீதம் உடன்படுகிறேன். நான் படித்த பாடசாலையில் இடை நிலைப்பாடசாலையில் விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்த அந்தப் பாடசாலையில் நான் எல்லா மட்டத்திலும் தொடர்பு கொண்டும் ஒன்றும் நகரவில்லை. ஆனால், ஐரோப்பாவிலிருந்து கீரிக்கட்டு விளையாட்டிற்கு பணம் அனுப்புவோரிடம் தினசரித் தொலைபேசித் தொடர்பில் இருப்பார்களாம். இந்த நிலையில், புதிய நிர்வாகம் கடந்த மாதம் பதவிக்கு வந்து சில படங்களை இணையத்தில் போட்டிருக்கிறார்கள். விஞ்ஞான ஆய்வு கூடம் 90 இல் கோட்டை அடிபாட்டுக் காலத்தில் இருந்ததை விட கேவலமான நிலையில் இருக்கிறது. ஆனால், கீரிக்கட்டு விளையாட்டிற்குக் காசு சேர்க்கும் அலுவல் தீவிரமாகத் தொடர்கிறது. இதை எழுதி என்ன பயன்?

     

    பாடசாலை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்பதற்காக உங்கள் சமூகப்பொறுப்பை தட்டிக்கழிக்க முடியுமா?

    • Like 1
    • Sad 1
  23. 2 hours ago, பெருமாள் said:

    May be an image of 1 person and tree

    விகாரை எங்கு இருக்கு? உங்க ஆள் இந்த பத்தை காணிக்குள் என்ன செய்கிராரராம் ?😀

     

    பின்னணியில் விகாரை தெரிகின்றது தானே. கடைசி அவர் அந்த சூழலிலாவது நின்று எதிர்ப்பு தெரிவிக்கின்றார். விமர்சனம் செய்பவர்கள் எங்கே நிற்கின்றார்கள்? 

    தூக்கம், களைப்பு எல்லாம் அனைவருக்கும் உள்ளதுதானே. வெய்யிலை பாருங்கள் எப்படி அடிக்கின்றது என்று. 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.